Thursday, November 18, 2010

கண்ணாமூச்சி கொடுமை


வயதைத் தொலைத்தேன்..,
அதில் சலனமில்லை ?!!

வாழ்க்கையை தொலைத்தேன்...,
அதிலும் வருத்தமுமில்லை ??!!!

என்னையும் தொலைத்தேன்....,!!!
ஏனோத் தேடிடவில்லை??!!!

உன்னையும் தொலைத்தேன்...,
உடலில் உயிருமில்லை??

ஒரு சொந்தம் போனால்..,
ஒரு சொந்தம் கிடைக்கும்
என்றே நினைத்திருந்தேன் ...,

கிடைத்ததும் இன்று
தொலைந்ததும் ஏனோ?
தனிமையில் தேம்புகிறேன்..,

மின்மினி சிரிப்பும்
காதில் வந்து போகுதே..,

கடலலை எல்லாம்
உந்தன் அழகைப் பார்க்குறேன்..,
காலடிஎல்லாம் உந்தன்
அளவைப் பார்க்குறேன்...,

இறைவா நீயும் உன் துணைப்
பிரிந்தால் என் நிலைப் புரியுமையா!!

கண்ணாமூச்சி ஆடிடும்
உன் கொடுமை புரியுமையா !!

உள்ளுக்குள்ளே ஊசி ஒண்ணு குத்துதையா
காற்றோடு உன் குரலே கேட்குதையா...,

3 comments:

  1. இரண்டு இரண்டு வரிகளாக எழுது இருந்தால் அழகாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. THOPPITHOPPI கூறியது

    இரண்டு இரண்டு வரிகளாக எழுதியிருந்தால்
    இன்னும் அழகாக இருந்திருக்குமோ//

    தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

    ReplyDelete