Tuesday, November 23, 2010

இரவல் தா

என் கருத்துக்களை உன்னோடு
பகிர்ந்துக்கொள்ள அனுமதி கொடு...

உன்னோடு எனைச் சேர்த்த
வாழ்வொன்றை நினைத்துப்பார்..??!!!
ஒரு நொடியில், ஒரு கணமாவது...,

களவுப் போகாமல்
பத்திரப்படுத்திவைத்திருக்கிறேன்.,
என்னைப் பைத்தியமாக்கிய
உன் கண்களின் நட்சத்திரத்தை..,

புது அர்த்தங்கள் தேடி கொடு
பழமை மாறாத இன்பங்களுக்கு..,

எந்நேரமும் பிரிந்திருந்து
என்ன செய்யப் போகிறது
இணைத்து வைக்க உதவி செய்
நம் இரு கரங்களுக்கு..,

கோடி துன்பங்களும் கால்தூசிதான்
உன் மூச்சுக்காற்று
என்னை முத்தமிடும்போது..,

அழவை, அசிங்கப்படுத்து, ஆத்திரப்படுத்து,
இன்னும் செய்துக்கொள்
என்னை என்னவெல்லாமோ..,

என்னை நீ என்ன செய்தாலும்
மற(று)க் காமல் நினைவில்
மட்டும் வைத்திரு..,



என் வாழ்வின் கடைசி
மரண நொடிகளில்
உன் மடியினை
கடன் கேட்க வருவேன்...,



(சில வரிகள்
வலையில் சிக்கியவை)

11 comments:

  1. நானும் கவிதை எழுதுகிறேன் என்று கிறுக்குபவர்கள் மத்தியில் அருமையான கவிதை, வரிகள்

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

    ReplyDelete
  3. நல்ல கவிதை...!!

    உங்களுக்கு அடுத்த வாரம்
    ஒரு Surprise காத்துட்டு இருக்கு..
    ரெடியா இருங்க..!!

    Follower ஆயிட்டேன்..
    இனி தொடந்து வருவோம்ல..!!

    ReplyDelete
  4. காத்திருக்கிறேன். தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

    ReplyDelete
  5. மிகவும் நன்றாயிருந்தது ராஜி

    ReplyDelete
  6. ஆதிரை கூறியது

    மிகவும் நன்றாயிருந்தது இருந்து ராஜிஃஃஃ
    நேரம் ஒதுக்கி வருகை தந்து ரசித்து பின்னூட்டமிட்டதற்கும் கோடானு கோடி நன்றிகள்

    ReplyDelete
  7. ரொம்ப அருமையாக இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  8. டீசென்டான வரிகள்...
    தொடர்ந்து எழுதுங்கள்..I am follower number 12!! :-)

    ReplyDelete
  9. நாகராஜசோழன்.M.A. கூறியது
    ரொம்ப அருமையா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்ஃஃஃஃ

    தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

    ReplyDelete
  10. பிரபு.எம் கூறியது

    டீசண்டான வரிகள். தொடர்ந்து எழுதுங்கள் ஃஃஃஃ

    தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

    ReplyDelete
  11. மிகவும் நன்றாக இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி. ... நல்ல வரிகள் கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete