Friday, November 18, 2011

பம்பாநதிக்கரையில் ஒரு ஜீவ நதி

இது கார்த்திகை மாதமென்பதால், எங்கு பார்த்தாலும், சபரிமலைக்கு மாலை அணிவித்து, விரதமிருக்கும் சாமிகளே கண்ணுக்கு தென்படுகிறார்கள். எங்க வீட்டுலயும் என் அம்மா போய் இருக்காங்க. எனவே, எனக்கு தெரிஞ்ச ஐய்யப்பன் வரலாற்றை இன்னிக்கு பதிவிடலாம்ன்னு இருக்கேன். இதில் எதாவது வரலாற்று பிழைகள் இருப்பின் பின்னூட்டத்தில் சொல்லவும்.  

பந்தளராஜன்:
மலைவளம் மிக்க கேரள தேசத்தில், பண்டைய திருவிதாங்கூரில் பந்தள நாடு என்னும் வளமான நாடு இருந்த்து. அந்த பந்தள நாட்டை இராஜசேகர பாண்டியன் என்னும் பாண்டிய தேசத்து மன்னன் ஆண்டு வந்தான். வீரதீர பராக்கிரம்த்தில சிறந்து விளங்கியதுடன், மனுதர்மப்படி மிக நேர்மையாக ஆட்சி செய்து வந்தான்.
மக்களுக்கு சிறு குறையுமின்றி ஆட்சி செய்து வந்த அவனுக்கு ஒரு மிகப்பெரிய குறை ஒன்று இருந்தது. அது, தனக்கு பின் நாட்டை ஆள ஒரு ஆண் வாரிசு இல்லையே என்னும் மிகப்பெரிய குறைதான்.மன்னன் ராஜசேகரன் சிறந்த சிவபக்தன்.எனவே, அவனும் அவன் மனைவியும், அவன் நாட்டு மக்களும் சிவனை வழிப்பட்டு தம் மனக்குறையை தீர்த்தருள வேண்டி வந்தனர்.
ஒரு காலத்தில் அரம்பன் என்னும் கொடிய அரக்கன் இருந்தான். அவனுடைய மகன் மகிஷாசுரன் எனப்பட்டவன். அவன்பிரம்மனை தியானித்து, நீண்ட காலமாக தவம் புரிந்து, “இந்த பூமியில் பிறந்த எவராலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் வாங்கினான்.
மகிஷன் தான் பெற்ற வரத்தை தவறான முறையில் பிரயோகம் செய்து, மனிதர்கள துன்புறுத்தினான். பூலோகத்தை ஆட்டுவித்த்தோடு, தேவலோகத்திலும் அவன் அட்டகாசம் செய்தான். மகிஷனின் கொடுமை தாளாமல், எல்லோரும் சிவன், விஷ்னு, பிரம்மனிடம் காத்தருளும்படி முறையிட்டனர்.அவர்களும், தம் சக்தியெல்லாம் ஒன்று சேர்த்து சண்டிகாதேவி என்ற மகாசக்தியை படைத்து, மகிஷன்மேல் ஏவினர். சண்டிகாதேவியும், மகிஷனுடன் போரிட்டு அவனை அழித்தாள். தேவர்களும் மானிடரும் துன்பம் நீங்கி மகிழ்ச்சி பெற்றனர்.
மகிஷனின் மரணத்தை பழித்தீர்க்க அவன் சகோதரி மகிஷி, பிரம்மனை நோக்கி கடுந்தவம் செய்து, ஆணுக்கும், ஆணுக்கும் குழந்தை பிறக்கும் வாய்ப்பே இல்லையென்று புத்திசாலித்தனமாக யோசித்து, “சிவன், விஷ்ணு இருவரும் இணைந்து, பிறக்கும் புத்திரனை தவிர வேறு எவராலும் மரணம் சம்பவிக்ககூடாது என்று வரம் வாங்கினாள். சாகாவரம் பெற்ற மகிஷி கர்வத்துடன் தேவலோகம் சென்று, தேவர்களை கொடுமைப்படுத்தினாள்.
துர்வாச முனிவர் சாபத்தால், தேவர்களுக்கு ஆயுள் குறைந்து நரை ஏற்பட தொடங்கியது. அதனால், கலக்கமுற்ற தேவர்கள், அசுரர்கள் துணையுடன் பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்தனர். அபோது அசுர்ர்கள் பாய்ந்து அமுத கலசத்தை எடுத்து சென்றனர். அதை திரும்ப பெற விஷ்ணுவிடம் முறையிட, அவர் மோகினி வடிவம் பெற்று, அசுரர்களிடமிருந்து அமுதம் பெற்று தேவர்களிடம் கொடுத்தார்.
                     
மோகினியின் அழகில் மயங்கிய சிவன் மோகினியுடன் ஐயக்கியமானார். அதன் பயனாய் ஒரு அழகிய ஆண்குழந்தை தோன்றியது. குழந்தையின் கழுத்தில் சிவன் ஒரு மணி மாலையை அணிவித்து, அக்குழந்தையை தன் பக்தனாகிய ராஜசேகரனிடம் சேர்ப்பிப்பதென முடிவு செய்து, வழக்கமாக பந்தள மன்னன் வேட்டையாட செல்லும் பம்பா நதிக்கரையோரம் உள்ள வனத்தில் கிடத்தினார்.
     
                       
ஐயன் பந்தளத்து இளவரசனாகுதல்:
அந்த வழியே வந்த மன்னன் வனத்தில் தெய்வாம்சம் பொருந்திய அழகான குழந்தை கிடப்பதை கண்ட மன்னன் அள்ளியெடுத்து யாருடையது, எப்படி வந்த்து என்று திகைத்து நின்றபோது, முனிவர் வேட்த்தில், அங்கு வந்த சிவப்பெருமான், இது உன் மகவில்லாத உன் குறாஇயை தீர்க்க ஈசன் அனுப்பிய தெய்வாம்சம் குழந்தை. இவனை எடுத்து சென்று வளர்த்து வா. இவன் கழுத்தில் சிவன் அணுவித்த மணிமாலை இருப்பதால் இவனுக்கு, மணிக்கண்டன் என பெரிட்டு வளர்த்து வா. இவன் 12வது வதில் இவனால் பல அதிசயங்கள் நிகழ்த்தப்போகிறான். பூலோக மானிடர்களுக்கெல்லம் இவன் தெய்வமாக திகழப்போகிறான் எனக் கூறி மறைந்தார்.

பம்பை நதி: 
                         
மனமகிழ்ந்த மன்னன் குழந்தையை அரண்மனைக்கு கொண்டு சென்று, அரசியிடம் சேர்ப்பித்தான். அரசியும் மகிழ்ச்சியுடன் அக்குழந்தையிஅ மகனாக ஏற்றுக் கொண்டாள். பந்தள நாட்டு மக்களுக்கும் இச்செய்தி எட்டி, அவர்களும் மன்னனுக்கு வாரிசு கிடைத்ததை ஆன்ந்த கூத்தாடினர். அதே சமயம் ஒருவனுக்கு மட்டும் இச்செய்தி மகிழ்ச்சியை தரவில்ல்லை. மன்னருக்கு வாரிசில்லை. அவருக்குப்பின் தான் அரசாளலாம் என்று எண்ணிய அந்நாட்டின் திவான். 
                
மணிகண்டனின் குழந்தைப் பருவம்:
மணிகண்டன் சல கலைகளும் நன்கு கற்று தேர்ச்சி பெற்றான். குறிப்பாக அவனது வில்வித்தையை கண்ட அவனது குரு பெரிதும் அகமகிழ்ந்தார். அவன் சாதாரண பிறவியில்லை என்று குருவு உணர்ந்து கொண்டர்.
மணிகண்டனி குருகுலம் பூர்த்தியடையும் நேரம் வண்ட்து. குருதட்சனை செலுத்தும்விதமாக, குருவிடம் சென்று, குருவே, குருதட்சனையாக என்ன வேண்டும் என வினவி நின்றான். அப்போது, அவர், மணிகண்டா! என் மகன் பிறவியிலேயே ஊமையும், குருடுமாவான். அவனுக்கு நீ பார்வையும், பேச்சும் தர வேண்டும். இதுவே நான் விரும்பும் குருதட்சனை என்றார்.
அப்படியே ஆகட்டும் என கூறி , குருவின் மகனுக்கு பேச்சையும், பார்வைய்யும் அளித்துவிட்ட், எனது இந்த ஆற்றலை எவரிடமும் சொல்லக்கூடாது. காலம் அதை வெளிப்படுத்தும் எனக்கூறி குருவிடம் விடைப் பெற்று அரண்மனை சென்றான்.
திவானின் சூழ்ச்சியும், அரசியின் மனமாற்றமும்:
சில காலத்தில் அரசிக்கு அழகிய ஆண்குழந்தை பிறந்தது.  மணிகண்டன் அரண்மனைக்கு திரும்பிய உடன் அவனுக்கு இளவரசு பட்டம் கட்ட தீர்மானித்திருந்தான் மன்னன். மன்னனின் இத்திட்டத்தை அறிந்த திவான் நஞ்சை கொடுத்து, மண்கண்டனை கொல்ல திட்டம் தீட்டினான். அவன் வைத்த நஞ்சு மணிகண்டனை ஒன்றும் செய்யாமல் போகவே, அரசியின் மனதில் நஞ்சை விதைக்க ஆரம்பித்தான்.  
அரசியாரே! உங்கள் வயிற்றில் பிறந்த மகனிருக்க, காட்டில் கிடைத்த அனாதை பயலுக்கா நுடிசூட்டுவதென கூறி, பல விதமாக பேசி அரசியின் மனதை மாற்றி, மணிகண்டனை கொல்ல தான் வகுத்துவைத்திருந்த திட்ட்த்திற்கு அரசியை சம்மதிக்க வைத்தான்.
திவானின் திட்டப்படியே கடும் தலைவலியால் ஆட்பட்டதை போல் அரசி நடிக்க ஆரம்பித்தாள். மன்னனும் அரசியின் நோய் கண்டு வருந்தி அரண்மனை வைத்தியரை அழைத்துவர திவானை பணித்தான். தன் நம்பிக்கைக்கு பாத்திரமான அம்மருத்துவனும், அரசியாருக்கு வந்துள்ள இத்தலைவலி மிக்கொடுமையானது. இதை தீர்க்க புலிப்பால் வேண்டும். புலிப்பாலை பருகிய மறுவினாடி தலைவலி தீர்ந்திவிடும் என்று திவான் சொல்லி தந்த படி கூறினான்.
இதை கேள்வியுற்ற மன்னன் இது சாடாரண மனிதனால் செய்யக்கூடிய காரியமில்லையே! என்ன செய்வது என புலம்பினான். புலிப்பல் கொண்டு வருபவர்களுக்கு தன் நாட்டில் பதியை தருவதாக அறிவித்தான். இதை கேள்வியுற்று காட்டுக்கு சென்றவரெல்லாம் தோல்வியடைந்து திரும்பினர்.அரசியின் நோய் தீர வழியில்லையே என மன்ன்ன் கலங்கி நின்றான். தந்தையின் கவலையை கண்ட மணிகண்டன், தான் காட்டிற்கு சென்று புலிப்பால் கொண்டு வருவதாக  வேண்டி நின்றான். மணிகண்டன் மேல் உள்ள பாசத்தால் மன்ன்ன் எவ்வளவோ மறுத்தும், என் தாயின் இன்னலை தீர்க்கும் கடமை மகனாகிய எனக்குண்டு. எனவே அருள்கூர்ந்து எனக்கு ஆசியும், அனுமதியும் தாருங்கள் என்று வேண்டி நன்றான். வேண்டா வெறுப்பாக மகனை காட்டுக்கு அனுப்ப மன்னன் ஒப்புதல் அளித்தான்.              
                 
மணிகண்டனின் காட்டு பிரவேசம்:
மணிகண்டன் புலிபால் கொணர காட்டுக்குள் நுழைந்தான். அவனுக்கு சிவனின் பூத கணங்கள் துணையாக வந்தன. தேவர்கள் அமுதம் உண்டு, ஆயுளை அதிகரித்துக் கொண்ட்தால், ஆத்திரம் கொண்ட மகிஷி சொர்க்கலோகம் சென்று தேவர்களை கொடுமப்படுத்தினாள். இதனை, தன் உள்ளுணர்வால் உணர்ந்த மணிக்ண்டன் தன் பிறப்பின் ரகசியம் அறிந்து கொண்டு.., தேவலோகம் சென்று, அங்கு அட்டகாசம் புரிந்து கொண்டிருந்த மகிஷியை தூக்கி பூமியில் வீசினான். அவள், அழுதையாற்றின் கரையில் வந்து வீழ்ந்தாள். அங்கு, அவளுடன் கடும்போரிட்டு,மகிஷியை கொன்று வெற்றி கண்டான். தன் அவதார நோக்கத்தை நிறைவேற்றி, புலிப்பால் கொணர காட்டுக்குள் செல்கிறான்.
புலிகளை தேடி காடுக்குள் அலையும் மணிகண்டனுக்கு உதவ இந்திரன் முதலான தேவர்கள் மகிசியை கொன்ற நன்றிக்கடனுக்காக உதவ முன்வருகிறார்கள். சிவ மணிகண்டன் முந்தோன்றி, “இந்திரன் ஆண்புலியாகவும் மற்ற தேவர்கள் பெண்புலியாகவும் வடிவெடுப்பார்கள். நீ புலி மீதேறி அரண்மனை செல்எனக்கூறி மறைந்தார். சிவனின் கூற்றுப்படியே புலிகளின் புடைச்சூழ மணிகண்டன் நாட்டிற்கு செல்கிறான்.
இதனை கண்ட மக்கள் திகைப்பும், பயமும் அடைந்தனர். புலி மீதேறி வரும் பாலன் மணிகண்டன் தெய்வமே அன்றி வேறில்லை என மக்கள் உணர்ந்த மக்கள், மகிழ்ச்சி கோஷம் எழுப்புகின்றனர். இதை கண்ணுற்ற மன்னன், “பணிரெண்டு வயதில் இவனால் அற்புதம் நிகழும்என முனிவர் கூறியது மன்னன் மனதில் நிழலாடியது.
அரண்மனையை அடைந்த மணிகண்டன், தந்தையே! புலிகளை கொண்டு வந்துள்ளேஏன். வைத்தியரை அழைத்து எம் தாயின் நோய் தீருங்கள்அனக்கூற மன்ன்ன் மணிகண்டனின் காலில் சாஸ்டாங்கமாய் விழுந்தான். “பக்வானே!தங்களை காட்டுக்கு அனுப்பச் செய்த நான் கண்டுபிடித்துவிட்டேன். நான் தவறு செய்திருந்தால், மன்னித்தருளுங்கள். புலிகளை காட்டிற்கு அனுப்பிவிடுங்கள் இனியும் என்னை சோதிக்க வேண்டாம் என்று மன்றாடினான்.
தந்தையின் சொற்களை கேட்ட மனிகண்டனோ புன்னகை தவழ, “ எல்லாம் என் இச்சைப்படியே நடந்துள்ளது. இந்த பூமியில் நான் பிறந்த கடமை முடிந்துவிட்டது. இனி நான் தேவலோகம் செல்கிறேன் எனக் கூறினான்.
அதைக்கேட்டு அழுது புலம்பிய மன்னன், ,பகவானே! தங்கள் நினைவாக ஒரு கோவில் கட்ட அனுமதி தரவேண்டும. அதை எங்கு கட்ட வேண்டும் என தாங்களே கூற வ்ஏண்டும் என வேண்டி தொழுது நின்றான்.
உடனே மணிகண்டன், ஒரு அம்பை வில்லில் தொடுத்து, “இந்த அம்பு போய் விழும் இடத்தில் எனக்கு கோவில் எழுப்புஎனக் கூறி அம்பை விட்டான்.
அம்பு வானைப் பிளந்தபடி சீறிப்பாய்ந்து, சபரிமலை பிரதேசத்தில் விழுந்தது. எனக்கு பதினெட்டு படிகளுடன் கிழக்கு நோக்கியும் ,பக்கத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் கோவில் கட்டுஎனக்கூறினான்.  மன்னன் அகமகிழ்ந்து தானே முன்னின்று, பதினெட்டு படிகளுடன் கோவிலை உருவாக்கினான்.
பின்னர் ராஜாவிடம் சபரிமலையிலுள்ள தர்மசாஸ்தாவின் கோவிலை புதுப்பிக்க வேண்டினார் மணிகண்டன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சென்றவர்கள், வனவிலங்குகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள ஆயுதங்களுடனும், முகத்தில் வர்ணம் பூசிக்கொண்டும், கறுப்பு அல்லது நீல ஆடை அணிந்து கொண்டும் மலையேறினர். கோவிலுக்குள் ஆயுதங்களைக் கொண்டு செல்லக்கூடாது என்பதால், ஓரிடத்தில் குவித்து விட்டனர். அந்த இடம் சரங்குத்தி என்று பெயர் பெற்றது. கோவிலை நெருங்கும் நேரத்தில் பெரும் சூறாவளி ஏற்பட்டது. அப்போது மணிகண்டன் சாஸ்தாவின் சிலையில் ஐக்கியமாகி விட்டார். அவர் சன்னிதி முன் கடுத்தசுவாமியும், கருப்பசுவாமியும் காவல் நிற்க அனுமதியளித்தார். தன் முடிசூட்டுக்காக செய்யப்பட்ட நகைகளை பந்தளராஜா ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று மலைக்கு கொண்டு வரும்படி அறிவித்தார்.

மாளிகைப்புறத்தம்மன் வரலாறு:
மணிகண்டன் பந்தளத்தில் தங்கியிருந்த காலத்தில் குருகுலத்தில் பாடம் கற்றார். அப்போது குருவின் மகள் மணிகண்டனைக் காதலித்தாள். மணிகண்டன் அந்தக் காதலை ஏற்கவில்லை. தன்னைப் பார்க்க சபரிமலைக்கு எப்போது கன்னிசுவாமிகள் வரவில்லையோ அந்நாளில் அவளைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார். அதனால், அவளுக்கு தன் இருப்பிடத்தின் ஒரு பகுதியைக் கொடுத்து தங்கச் செய்தார். அவளை மாளிகைபுறத்தமன் என்றும், மஞ்சள்மாதா என்றும் அழைக்கின்றனர். ஆனால், இன்றுவரை, கன்னிச்சாமிகளின் வரவு கூடிக் கொண்டே செல்கிறதே ஒழிய, நின்றபாடில்லை. ஆகையால் மாளிகைப்புறத்தம்மனும் கன்னியாகவே ஐயனுக்காக காத்திருக்கிறாள்.
                       
பதினெட்டு திருப்படிகளுக்கும் காவலாக உள்ள சக்தி தேவதைகளின் பெயர்களும், அவர்கள்,  சபரிமலை சரகத்தில் உள்ள ஆதிக்கம் செலுத்தும் 18 மலைகளின் பெயர்களும்:
1.மஹிஷமர்தினி- கரிமலை,  2.காளி-சௌந்தரயமலை,  
3.கருங்காளி- நாகமலை,   4.பைரவி-மதங்கமலை,  
5.சுப்பிரமணியன்- கல்கிமலை, 6.கறுப்பன்-பாதமலை, 
7. கார்த்தவீரியன்- ஸூந்தமலை, 8.ஹிடும்பன்-தேவமலை, 
9.வேதாள-நிலக்கல்மலை 10.நாகங்கள்-தலைப்பாறைமலை, 11.கர்ணபிசாசினி- மயிலாடும் குன்று  12.புளிந்தினி-சிற்றம்பல மேடு, 
13.ரேணுகா-பொன்னம்பல மேடு, 14.ஸ்வப்னவராஹி- நீலிமலை,  15.ப்ரத்யங்கரா-புதுச்சேரிமலை  16.அகோரா-இஞ்சிப்பாறை மலை,  
17. பூமாதேவி-காளைகட்டி மலை  18. அன்னபூரணி-சபரி மலை
                      
.
இருமுடியில் உள்ள பொருட்கள்: பூஜைக்கு நெய் நிரப்பிய தேங்காய், பூஜைப் புட்கள் அடங்கிய ஒரு முடியிம், நடக்கும் வழியில் தேவைப்படும் உணவுப்பொருட்கள் ஒருமுடியும் சேர்ந்து  இருமுடி என வழங்கப்படுகிறது. 
                       
 
 சபரி மலைக்கு செல்ல நிறைய விரத முறைகள் இருந்தாலும், மிக மிக முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

1. பக்தர்கள் கார்த்திகை முதல் நாள் மாலையணிவது சாலச்சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டுயது இல்லை. குறைந்த பட்சம் ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் மேற்கொண்டுதான் சபரிமலை யாத்திரையைத் துவங்க வேண்டும்
2.. நீலம், கருப்பு காவி இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும்
3.காலை, மாலை இருவேளைகளிலும் (சூரிய உதயத்திற்கு முன்பும் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும்) குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும்
4.களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு, வேடிக்கைகள், உல்லாசப் பயணங்கள், போதையூட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவைகளைத் தவிர்க்க வேண்டும். படுக்கை தலையணைகளை நீக்கி தன் சிறுதுண்டை மட்டும் தரையில் விரித்து துயில வேண்டும். காலணிகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

5. பிரம்மச்சாரிய விரதத்தை ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிப்பது தலையாய விரதமாகும். மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் காம இச்சையைத் தவிர்க்க வேண்டும். மது, மாமிசம், லாகிரி வஸ்துக்கள் ஆகியவற்றை அறவே ஒழிக்க வேண்டும்.

6. விரத காலத்தில் அசைவ உணவு உண்ணுவது மாபெரும் தவறாகும். எனவே இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாகத் தயாரித்த சைவ உணவையே உண்ண வேண்டும். மாலை தரித்த வீட்டைத்தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தை கொண்டும் உணவு உண்ணக்கூடாது.

 
7. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ருது காலம் அடையாத சிறுமிகள், ருது காலம் நின்ற வயதான பெண்களும் சபரிமலை யாத்திரையை மேற்கொள்ளலாம்.
                          
                  
ஸ்ரீஐய்யப்பனின் திரு உருவ விளக்கம்: 
ஸ்ரீஐய்யப்பன் அமர்ந்திருக்கும் கோலம் யோக நிலை வலக்கையில் சின்முத்திரை, இட்துகை முட்டுக்கால் மீது மடிந்து நளினமாக ஒரு தாயின் கருணையுடன் தன் திருப்பாதங்களை சுட்டிக் காட்டுகின்ற கோலம்.

மணிகண்டனை ஐயப்பன் என்றே பெரும்பாலானவர்கள் அழைக்கின்றனர். இதற்கு, “தலைவன் உயர்ந்தவன்என்று பொருள். உயர்ந்த மலையிலுள்ள ஐயப்பனின் வரலாறைத் தெரிந்து கொண்டவர்கள், முறைப்படி விரதமிருந்து, கெட்ட பழக்கங்களையெல்லாம் நிரந்தரமாக கைவிட உறுதியெடுத்து, சபரிமலைக்குச் சென்று வாருங்கள்.



டிஸ்கி: அறுபடை வீடுகள் வரிசையில் மூன்றாம் படைவீட்டை அடுத்த வாரம் பதிவிடுகிறேன். 


9 comments:

  1. இரண்டாம் நதி குளியல் நானே ஹி ஹி...

    ReplyDelete
  2. ஸ்தலம் கூறும் புராணம் அருமை...!!!

    ReplyDelete
  3. >பம்பாநதிக்கரையில் ஒரு ஜீவ நதி

    பம்பைநதிக்கரையில் ஒரு ஜீவ நதி

    ReplyDelete
  4. >டிஸ்கி: அறுபடை வீடுகள் வரிசையில் மூன்றாம் படைவீட்டை அடுத்த வாரம் பதிவிடுகிறேன்.

    ஹா ஹா அபாய அறிவிப்பா?

    ReplyDelete
  5. நல்ல பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு.. நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கீங்க....

    ReplyDelete
  7. ஐயப்பன் புராணம் எப்போ படிச்சாலும் எங்க படிச்சாலும் சுகமான அனுபவம்தான்.

    ReplyDelete
  8. பம்பாநதியில் நீராடி ஐயப்பனை தர்சித்தோம்.

    ReplyDelete