தாய்மை
வலியின் உச்சத்தில்
உன்னைப் பெற்றெடுத்த
உன் தாய், உயிர் கொடுத்து,
வலி மறந்து புன்னகைக்கச் செய்கிறாய்
உன் விரல்களால் தீண்டியதுமே
அம்மா என்பது ஒவ்வருவருக்கும் நடமாடும்
தெய்வமாகும் ,ஒரு நல்ல தாயால்தான் நல்ல குழந்தைகளை ஈன்றெடுக்க முடியும். அவர்கள்
நனறாக வளர அந்த தாய் ,தாய்ப்பாலுடன் அன்பையும் ,பிற உயிர்கள் மேல்கருணை
காட்டும்ப்பழக்கமும் ,.ஒழுக்கத்தையும் அதனூடே சேர்த்து ஊட்டுவதன் மூலம் தான் ஒரு நல்ல
குழந்தையாக அவர்கள் வளரமுடியும். அதற்க்கு மாற்றாக கடையில் விற்கும் கண்ட கண்ட
பாக்கெட் ,டின் பால் பவுடர்களை வாங்கி கொடுப்பது.
இந்த சமுதாய சீர்கேட்டிற்கு என்ன
காரணம் .பிள்ளைகளுக்கு சரிவர ஒரு தாய் அன்பெனும் அமுதமாகிய தாய் பால் ஊட்டாமை தான்
காரணம். அவர்கள் மேலும் குறை சொல்வதைக்கு ஒன்றும் இல்லை இன்றைய ,அவசரகால வாழ்க்கை ,அதனால் வாரங்களுக்கு முன் பேக்கிங்
செய்யப்பட்டு ,தன்னுடைய சத்துக்களை எல்லாம் இழந்து
வெறும் சக்கையான உணவுகளை உண்பது தான் கரணம் .இவற்றை எல்லாம் தவிர்த்து ,நம்முடைய குழந்தைகளுக்கு ,நாம்
நல்லமுறையில் தாய்ப்பால் எனும் அமுதம் .ஊட்ட இந்த எளிய மருத்துவ முறை உதவும் ,இதை நமது தாய்மார்கள் தெரிந்து கொண்டு .தமது குழந்தைகளுக்கு .நல்ல
தாய்களாக இருக்கட்டும் .
கர்ப்பகாலம் முதல் பாலூட்டும் காலம்
வரை பெண்களுக்கான சத்துணவு சமையல்கள் பற்றிச் சொல்லிவரும் ஒரு உயர்ந்த நிலையில்
இருக்கும் மக்கள் பயனடையவேண்டும் என நினைக்கும் ஒரு உயர்ந்த உள்ளத்திடம் இருந்து மறைந்துவிட்ட இந்த பாலூட்டும் பெண்களுக்கான பிரத்யேக சமையல்கள்!
பற்றிய குறிப்புகளை தொகுத்து அளிக்கிறேன். இங்கே சொல்லப்பட்டிருக்கும் பொருட்கள்
எல்லாம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
தேவையானவை:
பூண்டு - 4
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை 1:
பூண்டை உரித்துக்கொள்ளவும். அடுப்பில்
வாணலியை வைத்து சிறிது நெய் ஊற்றி, உரித்த பூண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில்
நன்றாக வேகும்வரை வதக்கிப் பரிமாறவும். பூண்டு நன்கு வெந்துவிட்டால் லேசான
இனிப்புச் சுவையுடன் இருக்கும்.
செய்முறை 2:
அடுப்பில் வாணலியை வைத்து நெய்
ஊற்றாமல், உரிக்காத பூண்டுகளைச் சேர்த்து மிதமான
தீயில் நன்கு வேகும் வரை வறுத்து எடுத்து, பின்னர்
உரித்துச் சாப்பிடவும். பூண்டின் தோல் அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும்.
குறிப்பு:
பூண்டு நன்றாக வெந்திருந்தால்
மிருதுவாகவும் சுவையுடனும் இருக்கும். வேகாத பூண்டு காரமாக இருக்கும். வெந்த
பூண்டுகளை தினமும் சாப்பிட்டு வர... பால் சுரப்பு நன்றாக இருக்கும்.
தாய்ப்பால் பெருக்கும் உணவுகள்
வரிசையில் அடுத்தது
தேவையானவை:
பூண்டு - 5 பல்
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
வெல்லம் - அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மசாலா அரைக்க:
தேங்காய் - 2 சிறிய துண்டுகள்
பூண்டு - 5 பல்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
செய்முறை:
புளியைக் கால் கப் தண்ணீரில்
ஊறவைக்கவும். தேங்காயைச் சிறு துண்டுகளாக வெட்டி, அதனுடன் மசாலா அரைக்கக் கொடுத்துள்ள
பிற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக
அரைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்
சேர்த்துச் சூடானதும் வெந்தயம் தாளித்து, உரித்த பூண்டு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்து சிறிது தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள்
சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் புளிக் கரைசலைச் சேர்த்து பச்சை
வாடை நீங்கும்வரை அடுப்பில் வைத்து,
இடித்த வெல்லம் சேர்த்து சில நொடிகள் வைத்து
பின்னர் இறக்கவும். விரும்பினால்,
கறிவேப்பிலையை சிறிது எண்ணெயில் தாளித்து
இப்போது குழம்பில் சேர்த்துக்கொள்ளலாம்.
குறிப்பு:
தேங்காய்க்கு பதிலாக ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பை சேர்த்தும் பத்தியக் குழம்பு செய்யலாம். இதில், பூண்டுடன்
சுண்டைக்காய் வற்றலையும் சேர்த்து வதக்கியும் செய்யலாம்.
மீண்டும் ஒரு மருத்துவ குறிப்பினூடே
சந்திக்கலாம் நன்றி வணக்கம்
தாய்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தேவையான பதிவு. நன்றி.
ReplyDeleteநன்றி ஐயா ..இதுமட்டும் அல்ல ..தாய்மார்களுக்கான மருத்துவ பதிவு இனியும் இருக்கிறது .அதை அடுத்தடுத்த பதிவுகளில் பதிவு செய்கிறேன்
Deleteசிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
ReplyDeletehttps://plus.google.com/u/0/communities/110989462720435185590