பதின்ம வயது காதலை முன்னெடுத்து சினிமாவாக்கி கல்லாக்கட்டிய தமிழ் சினிமா உலகம் வயது முதிர்ந்தவனின் காதலை புறந்தள்ளியது. முதல் மரியாதை படம் வந்தபோது பெருத்த விமர்சனம் எழுந்தது. அடப்பாவிகளா! காதல் என்ன நேரம், காலம், சூழல் பார்த்தா வரும்?! சினிமாவுக்கே அப்படின்னா, வாழ்வியலில் சொல்லவே வேண்டாம். 40 வயசாகிட்டுதா?! காதல், காமம், ஊடல், கூடல், கெஞ்சல், கொஞ்சல்லாம் மூட்டை கட்டி வச்சிடனும். என்ன இந்த வயசில் இப்படி சின்ன புள்ள மாதிரி நடந்துக்குதுங்க. இங்கிதம் தெரியாம, கிருஷ்ணா! ராமா!ன்னு இல்லாமன்னு விமர்சனம் வரும்.
ஒரு பெண்ணை எந்த ஆணாலும் தோல்வி அடைய செய்யமுடியாது. ஆனா, அவளை ஈசியா வெற்றிக்கொள்ளமுடியும். இந்த சூட்சுமத்தை புரிஞ்சவன் வாழ்க்கையில் ஜெயித்தவனாகிறான். பெண் ஆணிடம் எதிர்பார்ப்பது பணம், நகை, காமம், சொத்து, மரியாதையை மட்டும் எதிர்பார்ப்பதில்லை. அதையும்தாண்டி அன்பு, அக்கறையை எதிர்பார்க்கிறாள்.
இந்த பாட்டு முழுக்க அந்த அன்பும் அக்கறை காதலாகும் தருணத்தை அழகா சொல்லி இருப்பார். நிமிர்த்தி இருக்கும் அரிவாள்மனையை எல்லா ஆணும்தான் தினத்துக்கு பார்த்திருப்பாங்க. அந்த பக்கமா போகும் எத்தனை ஆண் அதை மனைவி, மகள், அம்மா, சகோதரி காலில் படக்கூடாதுன்னு சாய்ச்சி வச்சிருப்பீங்க! இரவில் அவசர அவசரமா மனைவியின் ஆடை அவிழ்க்கும் எத்தனை ஆண், மறுநாள் காலை துவைச்சி கட்டியிருக்கும் புடவையை தொட்டிருப்பாங்க?! அந்த மூணு நாட்களிலும் எத்தனை ஆண்கள் ஒருவாய் காப்பி தண்ணி வச்சி கொடுத்திருப்பாங்க. ஆனா, இதுலாம்தான் அன்னியோன்யத்தை கூட்டும்ன்னு சொல்லாம சொல்லும் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
மகாநதில கொச்சின் ஹனீபாகூட வந்து கமலை மயக்கி பணத்தை பிடுங்கும் நெகட்டிவ் கேரக்டரில் வந்த துளசிதான் இந்த பாட்டின் நாயகி. பத்து ரூபா கொடுத்தா ஆயிரம் ரூபாய்க்கு நடிக்கும் ஜெயகிருஷ்ணாதான் நாயகன். முதிர்காதலை அழகா சொல்லிச்செல்லும் பாட்டு. கேட்டு பாருங்க. பார்த்துக்கிட்டும் கேக்கலாம். நல்லா இருக்கும். மனசில் காதல் இருந்தால் மட்டுமே ரசிக்க முடியும்.
ஒரு பெண்ணை எந்த ஆணாலும் தோல்வி அடைய செய்யமுடியாது. ஆனா, அவளை ஈசியா வெற்றிக்கொள்ளமுடியும். இந்த சூட்சுமத்தை புரிஞ்சவன் வாழ்க்கையில் ஜெயித்தவனாகிறான். பெண் ஆணிடம் எதிர்பார்ப்பது பணம், நகை, காமம், சொத்து, மரியாதையை மட்டும் எதிர்பார்ப்பதில்லை. அதையும்தாண்டி அன்பு, அக்கறையை எதிர்பார்க்கிறாள்.
இந்த பாட்டு முழுக்க அந்த அன்பும் அக்கறை காதலாகும் தருணத்தை அழகா சொல்லி இருப்பார். நிமிர்த்தி இருக்கும் அரிவாள்மனையை எல்லா ஆணும்தான் தினத்துக்கு பார்த்திருப்பாங்க. அந்த பக்கமா போகும் எத்தனை ஆண் அதை மனைவி, மகள், அம்மா, சகோதரி காலில் படக்கூடாதுன்னு சாய்ச்சி வச்சிருப்பீங்க! இரவில் அவசர அவசரமா மனைவியின் ஆடை அவிழ்க்கும் எத்தனை ஆண், மறுநாள் காலை துவைச்சி கட்டியிருக்கும் புடவையை தொட்டிருப்பாங்க?! அந்த மூணு நாட்களிலும் எத்தனை ஆண்கள் ஒருவாய் காப்பி தண்ணி வச்சி கொடுத்திருப்பாங்க. ஆனா, இதுலாம்தான் அன்னியோன்யத்தை கூட்டும்ன்னு சொல்லாம சொல்லும் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
மகாநதில கொச்சின் ஹனீபாகூட வந்து கமலை மயக்கி பணத்தை பிடுங்கும் நெகட்டிவ் கேரக்டரில் வந்த துளசிதான் இந்த பாட்டின் நாயகி. பத்து ரூபா கொடுத்தா ஆயிரம் ரூபாய்க்கு நடிக்கும் ஜெயகிருஷ்ணாதான் நாயகன். முதிர்காதலை அழகா சொல்லிச்செல்லும் பாட்டு. கேட்டு பாருங்க. பார்த்துக்கிட்டும் கேக்கலாம். நல்லா இருக்கும். மனசில் காதல் இருந்தால் மட்டுமே ரசிக்க முடியும்.
எனக்காக பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி
இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி
எனக்காக பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி
உனக்கு மாலையிட்டு
வருஷங்கள் போனா என்ன ?
போகாது உன்னோட பாசம் !
உனக்கு மாலையிட்டு
வருஷங்கள் போனா என்ன ?
போகாது உன்னோட பாசம் !
எனக்கு என்மேலெல்லாம் ஆச இல்ல
உன் மேல தான் வச்சேன் !
என்ன ஊசியின்றி நூலுமின்றி
உன்னோடதான் தச்சேன் !
உன் மேல தான் வச்சேன் !
என்ன ஊசியின்றி நூலுமின்றி
உன்னோடதான் தச்சேன் !
உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்கு வாக்கப்பட்டு
வருஷங்கள் போனால் என்ன ?
போகாது உன்னோட பாசம் !
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்கு வாக்கப்பட்டு
வருஷங்கள் போனால் என்ன ?
போகாது உன்னோட பாசம் !
எனக்கு என்மேலெல்லாம் ஆச இல்ல
உன் மேல தான் வச்சேன்
என்ன ஊசியின்றி நூலுமின்றி
உன்னோடதான் தச்சேன்
உன் மேல தான் வச்சேன்
என்ன ஊசியின்றி நூலுமின்றி
உன்னோடதான் தச்சேன்
ஒதுங்காதே தொட்டு
உசுப்பேத்தி விட்டு
உனக்கா ஒவ்வொரு மாதிரி
நாக்குல நெஞ்சில
பச்சைய குத்தி வச்சேன்
உனக்கா ஒவ்வொரு மாதிரி
நாக்குல நெஞ்சில
பச்சைய குத்தி வச்சேன்
இதுதாண்டி ரதம்
இதலதான் நிதம்
உன்னத்தான் உட்காரவச்சிநா ராசாத்தி ராசனா
ஊர்வலம் வந்திடுவேன்
இதலதான் நிதம்
உன்னத்தான் உட்காரவச்சிநா ராசாத்தி ராசனா
ஊர்வலம் வந்திடுவேன்
உன்னோடு நான் சேர
மென்மேல வந்து ஒரு
நேந்து தான் சாமிக்கு
வப்பேனே வெள்ளாடு !
மென்மேல வந்து ஒரு
நேந்து தான் சாமிக்கு
வப்பேனே வெள்ளாடு !
ஆத்தோரம்… காத்தாடும்…
காத்தோடு… நாத்தாடும்…
காத்தோடு… நாத்தாடும்…
நான் பாத்தாட்டமா நாத்தாட்டமா
உன்னால அழும் நாளும்
உன்னால அழும் நாளும்
நீ மாலையிடும் வேளையில
கேட்குதா என் தோடு !
உனக்காக புறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
கேட்குதா என் தோடு !
உனக்காக புறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்கு மாலையிட்டு
வருஷங்கள் போனால் என்ன ?
போகாது உன்னோட பாசம்
வருஷங்கள் போனால் என்ன ?
போகாது உன்னோட பாசம்
அருமை
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteகாட்சியும் ரசனை. பாடலும் ரசனை. இவர் பெயர் ஜெயகிருஷ்ணாவா?
ReplyDeleteஜெயக்குமாராம்.. பிள்ளைகள் சொல்லுச்சு
Deleteநல்ல ரசிகை நீங்கள்
ReplyDeleteஅப்படியா?! எப்ப பாரு பாட்டு கேட்டுக்கிட்டு... சின்ன பொண்ணுன்னு மனசுக்குள் நினைப்புன்னு வீட்டில் சொல்லுதுங்களே!
Delete