
பாலு : பழம் நழுவி பாலில் விழுந்து டம்பளர் உடைஞ்சு போச்சு.
வேலு : எப்படிடா ?
பாலு : விழுந்தது பலா பழமாச்சே!
========================================================
பாலு: மரியாதை இல்லாத பூ எது?
வேலு: "வாடா"மல்லி
=========================================================
ஆசிரியர்: கி.பி 5000 ல உலகம் எப்படி இருக்கும்?
மாணவர்: உருண்டையாதான்.
==========================================================
விஜய்: நான் 50 படங்கள் ல நடிச்சு இருக்கேன்.
பத்திரிக்கையாளர்: நடிச்சதா நீங்களே முடிவு பண்ணிட்டா எப்படி.
=========================================================
பாலு: குடி, குடிய கெடுக்குமாடா?
வேலு: நீ வாங்கி குடுத்தா உன் குடி கெடும் , நான் வாங்கி குடுத்தா என் குடி கெடும்.
==================================================
பாலு: பொண்டாட்டி போட்டோவை பக்கத்துல வச்சுக்கிட்டு என்ன எழுதுரே?
வேலு: பத்திரிகைக்கு பேய்க் கதை..,
==========================================================
பாலு: சிங்கத்தை பார்த்து பயப்படாத மிருகம் எது?
வேலு: தெரியலியே?
பாலு: சிங்கத்தோட பொண்டாட்டி சிங்கம்.
============================================================
பாலு : உங்களுக்கு இருந்த தோஷமெல்லாம் உங்க கல்யாணத்திற்கு அப்புறம் நீங்கிடுச்சாமே? அப்படியா?!!
வேலு: ஆமாம், கடைசியா இருந்தது "சந்தோஷம்". இப்ப அதுவும் போய்டுச்சு..,
============================================================
முதலாளி: அந்த டேபிள்ள என்னய்யா தகராறு?
சர்வர்: பேமிலி ரோஸ்ட் சாப்பிடுறதுல பாகப்பிரிவினை தகராறாம்
==============================================================
பாலு: நடிகை ராதிகாவிற்கு இஷ்ட தெய்வம் எது?
வேலு: "சித்தி"விநாயகர் .
===============================================================
பாலு:எலிக்கும் , மௌசுக்கும் என்னடா வித்தியாசம்?
வேலு: எலிக்கு வாலு பின்னாடி இருக்கும்
மௌசுக்கு வாலு முன்னாடி இருக்கும்.
================================================================
