Tuesday, May 22, 2012

பேராசை பெரு நஷ்டம்...,


   
ஒரு ஊருல  பெரிய பண்ணையார் ஒருத்தர் இருந்தாராம். அந்த ஊருல  இருக்குற பெரும்பாலான நிலங்கள் அவருக்குத் தான் சொந்தம். அவர் கல்நெஞ்சக்காரராம்.  யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார், பணம், பணம்ன்னு பேராசையில் இருக்குறவராம்.


அவர்கிட்ட  நல்லதம்பின்ற உழவர் வேலை பார்த்துக்கிட்டு இருந்தார். அவருக்குக் குடிசை ஒன்னும், கொஞ்சூண்டு  நிலமும் இருந்தன.

பண்ணையாரிடம் வந்த அவர், " ஐயா! எல்லாரும் அவங்கவங்க  நிலத்தில உழுது விதை நட்டுட்டாங்க.  என் நிலம் மட்டும் தான்  இன்னும் தரிசாவே இருக்கு. நீங்க  கொஞ்சம்  விதை குடுத்தாஎன் நிலத்திலும் விதைச்சுடுவேன்.  அது வளர்ந்து அறுவடை செய்ததும், விதைக்குண்டான  பணத்தை குடுத்து டுறேன், மீதி என் புள்ளைக படிப்புக்கு உதவியாக இருக்கும் "ன்னு சொன்னார்.

" என் நிலத்திலேயே உழுது  விவசாயம் பார்.  சொந்தமாலாம் பயிரிட வேணாம். பண்ணையாராகும் ஆசையை விட்டுட்டு. கூலியாளாவே இரு, உன் புள்ளைங்களாம் ஒன்னும் படிக்க வேணாம், அவங்களும் இங்கேயே வேலைக்கு வரச் சொல்லு. அரை வயித்துக் கஞ்சியாவது கிடைக்கும்" ன்னு கோபத்துடன் சொல்லிட்டாரு பண்ணையார்.

சோகத்தோட  வீட்டுக்கு வந்தார் நல்ல தம்பி. தன் பொண்டாட்டிக்கிட்ட " நாம நல்லபடியா உழைச்சு முன்னுக்கு வர்றது பண்ணையாருக்குப் பிடிக்கலை. விதைகள் கொடுக்கமாட்டேன்னுட்டார். நீயும் நம் புள்ளைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான், நம் புள்ளைக படிக்க கூட முடியாது போலிருக்குது. இதுதான் நம்ம தலைவிதி" என்று சோகத்தோட  சொன்னார்.

அவங்க குடிசல குருவி ஒன்னு ஏற்கனவே கூடு கட்டி இருந்தது, அந்த குருவிக்கு தினமும் கொஞ்சம் சாப்பாட்டை  நல்லதம்பியும், அவர் பொண்டாட்டியும், குழந்தைகளும் கொடுப்பாங்க.

தங்களோட சின்னஞ்சிறு குடிசைல குருவிக்கும் தங்கறதுக்கு இடம் கொடுத்து சந்தோசப்பட்டாங்க, அந்த கூட்டுல  அந்தக் குருவி நான்கு முட்டைகள் போட்டது. நான்கும் குஞ்சுகளாயின.

அந்த குஞ்சுகளின் சப்தம் இனிமையாக இருந்துச்சு, தினமும் குருவி வெளியே போய்  பூச்சிகளை பிடிச்சுக்கிட்டு வந்து தன்னோட குஞ்சுகளுக்கு கொடுக்கும், ஒரு நாள் சரியான புயல், மழை பெய்தது, வெளியே சென்ற குருவி வீட்டுக்கு வரவே இல்லை.

பாவம் குஞ்சுகள் பசியால் கத்துச்சு, அதைக் கண்ட நல்லதம்பியும், குழந்தைகளும் தங்களோட சாப்பாட்டுல  கொஞ்சம் கொடுத்து, குஞ்சுகளின் பசியைப் போக்கினாங்க.
                                               
திடீர்ன்னு  அந்தக் குருவிக் கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைஞ்சுது.. குருவிக் குஞ்சுகளைப் பிடித்துச் சாப்பிட போச்சு, உடனே அங்கு வந்த நல்லதம்பி  பாம்பை அடித்துக் கொன்ன்னுட்டார். கொஞ்ச நேரத்தில் அம்மா  குருவி வீட்டுக்கு வந்துச்சு, குஞ்சுகள் சொன்னதைக் கேட்டது, அம்மாக்குருவி ஆனந்தக் கண்ணீர் விட்டது.

அடுத்த சில நாட்களில் நல்லதம்பியும், அவர் குடும்பத்தினரும் வறுமையில் வாடினாங்க. குஞ்சுகள் வளர்ந்ததும், தாய் குருவியும், குஞ்சுகளும் நல்லதம்பிக்கிட்டயும் அவர்  குடும்பத்தினர்கிட்டயும் நன்றி கூறி வானில் பறந்து போயின.

சில நாட்களில் நல்லதம்பி  வீட்டில சாப்பிட எதுவுமே இல்லை என்ற நிலமை, "இப்படியே அரை வயிறு சாப்பிட்டு எவ்வளவு காலம் வாழ்வது? நமக்கு விடிவே கிடையாதா?" ன்னு சொன்னா நல்லதம்பி பொண்டாட்டி.

அப்போ அவங்க வீட்டுக் கதவை யாரோ தட்டுற சத்தம்  கேட்டுச்சு. கதவை திறந்து பார்த்தார் நல்லதம்பி. அங்கே அவங்க  வீட்டில கூடு கட்டி இருந்த அம்மாக்குருவி இருந்துச்சு. அதோட  வாயில ஒரு விதை இருந்துச்சு. அதை அவர் கையில் வெச்சுச்சு. " இதை உங்க வீட்டுத் தோட்டத்தில நடுங்க. கொஞ்ச நேரத்துல  வறேன்" ன்னு சொல்லிட்டுப் பறந்து போச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு
மீண்டும் வந்துச்சு அம்மாக்குருவி. இன்னொரு விதையைத் தந்துச்சு. " இதை உங்க வீட்டின் முன்புறத்துல நடு" ன்னு சொல்லிட்டுப் பறந்து போச்சு.

மூணாம் முறையா வந்த அது இன்னொரு விதையைத் தந்தது " இதை சன்னல் ஓரமா  நடுங்க. எங்க மேல காட்டிய அன்புக்கு நன்றி" ன்னு சொல்லிட்டுப் பறந்து போய்டுச்சு.

குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நல்லதம்பி நட்டார் .
மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசனிக் காய்கள் காய்த்து இருந்துச்சு. இதைப் பார்த்து ஆச்சர்யப் பட்டாங்க.
தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டிற்குள் கொண்டு வந்தார். அதை இரண்டு துண்டாக வெட்டினார் நல்லதம்பி.

ஒரே ஆச்சர்யம்! அதுக்குள்ள இருந்து விதவிதமான சாப்பாட்டுப் பொருள்கள் வந்துச்சு. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக சாப்பிட்டாங்க. மீண்டும் அந்தப் பூசனிக் காயை ஒண்ணு சேர்த்தாங்க. பழையபடி அது முழுப் பூசனிக் காயாச்சு.எல்லாரும்சந்தோசப்பட்டாங்க , " இது மந்திரப் பூசனிக் காய். நமக்கு சாப்பாடு தேவைப்படும் போது பிளந்தால் சாப்பாடு கிடைக்கும். மறுபடியும் சேர்த்துட்டா பழையபடி ஆகி விடும். இனி நமக்கு உணவுப் பஞ்சமே இல்லை, நாம் குருவிகளுக்கு செய்த உதவிக்கு இத்தனை பெரிய உதவியாக செய்திருக்கிறது, அவற்றை நாம் மறக்கக்கூடாதுன்னு சொன்னார் நல்லதம்பி.
                                
"வீட்டின் முன் புறத்தில் ஒரு பூசனிக் காய் உள்ளது. அதைக் கொண்டு வாங்க. அதுக்குள்ள  என்ன இருக்குன்னு பார்த்துடலாம்" ன்னு சொன்னாங்க நல்லதம்பி மனைவி.

அந்தப் பெரிய பூசனிக் காயை உருட்டிக்கிட்டு வந்தார் நல்லதம்பி. கத்தியால் அதை வெட்டினார். உள்ளிருந்து அழகான டிரெஸ், விலை உயர்ந்த மணிகள், நவரத்தினங்கள்லாம் கொட்டுச்சு. அதற்குள் அவரது குழந்தைகள் சன்னலோரம் இருந்த மூன்றாவது பூசனிக் காயையும் கொண்டு வந்து கொடுக்க, நல்லதம்பி அதை வெட்டினார். அதுக்குள்ள இருந்து பொற்காசுகள்லாம்  கொட்டுச்சு.

அதன் பிறகு, அவரும் மனைவியும் குழந்தைகளும் நல்ல சாப்பிட்டாங்க. நல்ல ட்ரெஸ் போட்டுக்கிட்டாங்க.  பெரிய வீடு ஒண்ணை  கட்ட ஆரம்பிச்சாங்க.. பெரிய ஸ்கூல்ல அவங்க பிள்ளைகளை  படிக்க வச்சாங்க. . நல்லதம்பி தன்னைப் போல் ஊருல கஷ்டப்படுறவங்களுக்கெல்லாம்  உதவி செய்யத் தொடங்கினார்.

நல்லதம்பி கொஞ்ச நாளுல  பெரிய பணக்காரனாயிட்டார். தன்னை விட நல்லதம்பி பெரிய ஆளாகிட்ட்தை கேள்விப்பட்ட  பண்ணையார்,நல்லதம்பி வீட்டுக்கு  வந்து, " டேய்! நல்லதம்பி! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்துச்சு? உண்மையைச் சொல்லுடா" ன்னு அதட்டி கேட்டார். நல்லதம்பியும்  நடந்ததைலாம் அப்படியே சொன்னார்.

பண்ணையார் தன் மாளிகைக்கு வந்தார் . தன்னை விட நல்லதம்பி பெரிய பணக்காரன் ஆனதை அவரால் ஜீரணிக்கவே  முடியலை, பொறாமை குணம் படைத்த அவர் எப்படியாவது இன்னும் நிறைய  செல்வம் சேர்க்க ன்னு நினைச்சார். வீட்டின் மேற் கூரையில்  குருவிக் கூடு ஒண்ணாஇ  அவரே கட்டினார். குருவிகள் வந்து அதுல அதில் தங்கும் ன்னு அவர் எதிர்பார்த்தார்.

அவர் நினைச்ச மாதிரியே. ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கியது. நான்கு முட்டைகள் போட்டுச்சு. அதிலிருந்து குஞ்சுகள் வெளியே வந்தன.

ஆனா,'பாம்பு வரவே இல்லை. பொறுமை இழந்த அவர் ஊருல  இருந்த பாம்பாட்டியிடம் சொல்லி, பெரிய கருநாகப்பாம்பை வீட்டில் கொண்டு வந்து குருவி கூட்டுக்கு  பக்கத்துல விட்டார், அந்த பாம்போ பசியில் இருந்ததால் ஓடி போய் 3 குஞ்சுகளை சாப்பிட்டு, ஏப்பம் விட்டது.

அய்யோ, நான் நினைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணாகிட்டதே ன்னு ஒரு பெரிய கம்புடன் குருவிக் கூட்டை நெருங்கினார், பாம்பை அடித்து நொறுக்கி வெளியே போட்டார், மீதி இருந்த ஒரு குஞ்சை காப்பாற்றியது போல் நடித்தார். . வேளை தவறாமல் உணவு அளித்தார்.
கொஞ்ச  நாளுல தாய் குருவியும், ஒரு குஞ்சும் கூட்டை விட்டு வெளியேறியது.

"மூன்று விதைகளுடன் குருவி மீண்டும் வரும். அரசனைவிட பெரிய பணக்காரனாகப்போறேன்னு  கர்வத்துல  காத்திருந்தார் அவர்.

அவர் எதிர்பார்த்தபடியே கதவைத் தட்டிச்சு குருவி. பண்ணையார்கிட்ட மூன்று விதைகளைத் தந்து. " ஒண்ணை வீட்டின் பின்புறம் நடு. ரெண்டாவதை வீட்டின் முன்புறம் நடு. மூணாவதைக் கிணற்றோரம் நடு" ன்னு சொல்லிட்டுப் பறந்து போய்டுச்சு குருவி. தான் நினைக்குறதெல்லாம் நடக்குதுன்னு சந்தோசப்பட்டாரு பண்ணையார்.  மூணு விதைகளையும் நட்டார். மறுநாளே மூணு பெரிய பூசனிக் காய்கள் காய்ச்சுச்சு

தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டுக்குள் கொண்டு வந்து வெட்டினார்.அதுக்குள்ள  இருந்து நிறைய பூச்சிகள் வெளிவந்தன. மக்களை ஏமாற்றி சேர்த்து வெச்சிருந்த  வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் திண்ணுட்டு மறைஞ்சு போச்சு.

வாயிலும் வயித்திலும் அடிச்சுக்கிட்டு . முன்புறத்தில் இருந்த இரண்டாவது பூசனிக்காயை வெட்டினார். அதுக்குள்ள இருந்து  இருந்து நெருப்பு வந்துச்சு. அது அந்த மாளிகையை ஒருநொடிக்குள் சாம்பல் ஆக்கியது. இத்தனை நடந்தும் அந்த பண்ணயார் திருந்தலை.

அய்யோ எல்லாமே போச்சேன்னு, மூணாவது பூசணியிலாவது செல்வங்கள் இருக்கும் ன்னு பேராசைப்பட்ட  பண்ணையார், அதை வெட்ட, அதிலிருந்து கிளம்பிய பெரிய பூதம் அவரை தூக்கிக் கொண்டு பறந்து போய்டுச்சு. அதை கேள்விப்பட்ட அந்த ஊரு மக்கள் எல்லோரும் கொடிய பண்ணையார் ஒழிந்தார் ன்னு சந்தோஒசப்பட்டு, பண்ணையார் ஏமாத்தி புடுங்கிகிட்ட தங்களோட வயல்ல கடுமையா உழைச்சு எல்லாரும் சந்தோசமா இருந்தாங்க.

பணம், பணம் ன்னு  பேராசையால ஏழை மக்களுக்கு துன்பம் உண்டாக்கிய பண்ணையார் இறந்து போனப்பின்பு, நல்லதம்பி ஊர் மக்களுக்கு நிறைய உதவிகள் செய்தார், பள்ளிக்கூடம், ஹாஸ்பிட்டல்ன்னு கட்டிக் கொடுத்தார். அவரும் அவரது குடும்பத்தாரும் எல்லாருக்கும் நன்மைகள் செஞ்சு தானும் நல்லா இருந்தாங்க.



Monday, May 21, 2012

சின்ன புள்ளைல   நான் ரொம்ப அழகும்.., சரி சரி கல்லை எடுக்காதீங்க..., புத்திசாலியும் கூட. அட, இதையாவது நம்புங்கப்பா. நம்ப மாட்டீங்களா? சரி  நான் ரொம்ம்ம்ப புத்திசாலின்னு நிரூபிக்குற மாதிரி நிறைய விஷயங்கள் நடந்துச்சு. அதுல மூணு சம்பவம் சொல்றேன். அப்பவாவது நம்புங்க.., ஓக்கே ஸ்டார்ட் மீஜிக். நாம பிளாஷ்பேக்குக்கு போகலாம்....,

சம்பவம் 1:

சனீஸ்வரன் கருப்பாக மாறியது எப்படி? ஐஞ்சுவை அவியல்

                              
ஸ்ஸ்ஸ்ஸ் அபா..., ஏனுங்க மாமோய் அந்த ஐச் பொட்டில இருந்து கொஞ்சம் ஜில்ல்லுன்னு தண்ணி கொண்டு வாங்களேன்.

கோவிலுக்குதானே போய் வரே, அதுக்கு ஏன்  இப்படி அலுத்துக்குற புள்ள?!

ஏன் கேட்க மாட்டீங்க?  சனிபெயர்ச்சி நடந்துதனால  உங்களுக்கு இப்போ டைம் சரியில்லையாம். அதனால, நம்ம ஜோசியர் இன்னிக்கு சனீஸ்வரனை 108 சுற்று சுற்றி, கருப்பு துணி அவருக்கு சார்த்தி, எள்லாம் படைச்சுட்டு வரேன்.

ம்ம்ம் சரி, எல்லா சாமியும் சூப்பரா சிகப்பு கலர்ல இருக்கும்போது சனீஸ்வரன் மட்டுமே ஏன் கருப்பா இருக்கார்ன்னு உனக்கு தெரியுமா?

ம்ஹூம் தெரியாதுங்க மாமா.

ம்க்கும், ஜோசியம் சொன்னா மட்டும் கேட்டுக்கோ. ஆனா, இந்த மாதிரி புராண கதைலாம் கேட்காத.

சரி கிண்டலடிச்சது போதும். கதை சொல்லுங்க மாமா...,

தேவர்களில் ஒருத்தரான சனீஸரன், கால் ஊனமுற்றிருந்தாலும், அழகா, திடகாத்திரமாதான் இருந்தார். 

மனுசங்க ஊணமா பொறக்குறது சாமி செயல்ன்னு நாம சொல்றோம். அந்த கடவுளே ஊணமா பொறாந்தாரா? ஏன்? 

அது ஒரு பெரிய கதை அதை அப்புறமா சொல்றேன். இப்போ அவர் கருப்பாக மாறிய  கதைய மட்டும் சொல்றேன்.

ஏன் புள்ள, நளன் தமயந்தி கதை உனக்கு தெரியுமா?!

ம்ம் தெரியும்ங்க மாமா..,

சரி, தன் கூட  காட்டுக்கு வந்த, தன் பொண்டாட்டி தமயந்தி,  கஷ்டப் படுவதைப் பார்த்து, நளன் மனசுக்குள்ள வேதனை பட்டான்.  அவளை எப்படியாவது அவளொட அம்மா வீட்டுக்கு அனுப்பி வைக்க ஆசை  பட்டார்.  இப்ப இருக்குற பொண்ணுங்கலாம் சின்ன சின்ன மேட்டருக்கெல்லாம் சண்டை போட்டுக்கிட்டு அம்மா வீட்டுக்கு போய்டுறாங்க. ஆனா, தமயந்தியோ, புருசனை விட்டு போகமாட்டேன், கஷ்ட நஷ்டத்துலயும் உங்க கூடத்தான் இருப்பேன்னு  என பதிபக்தியுடன் இருந்தா. 

ஒருநாள் ரத்திரி, அவளை ஒரு மண்டபத்தில் தனியே விட்டுட்டு நளன் போய்ட்டான். கண் முழிச்ச தமயந்தி அழுதபடியே பக்கத்து நாட்டுக்குச் போய் சேர்ந்தா. அவ அங்கிருப்பதை தெரிஞ்சுக்கிட்ட  அவ அப்பா,  தன் நாட்டுக்கு கூட்டிக்கிட்டு போய்ட்டார்.

 நளனின் திட்டம் பலிச்சு போச்சுது. ஆனா, நளன் அதுக்கப்புறமும் படத பாடுபட்டான்.  காட்டு வழியா போகும்போது, ஒரு இடத்துல  நெருப்பு பிடிச்சு எரிஞ்சுக்கிட்டு இருந்துச்சு. . அதுக்குள்ள  சிக்கிக்கிட்டு இருந்த ஒரு  பாம்பு ஐயோ! காப்பாத்துங்க! காப்பாத்துங்கன்னு  கதறிக்கிட்டிருந்துச்சு. இரக்கப்பட்ட நளன் பாம்பைப் பிடிச்சு  வெளியே விட்டான்,  அப்போ அந்த பாம்பு அவனைக் கடிச்சிடுச்சி. நளனோட உடம்புலாம்  கருப்பாகிட்டது. உன்னைக் காப்பாத்துன  என்னை கடிச்சுட்டயே!ன்னு  நளன் வருந்தினான். 

எல்லாம் நன்மைக்கேன்னு சொல்லிய பாம்பு, இனி நடக்க போகும் நிகழ்ச்சிகளை எடுத்துச்சொல்லி மறைஞ்சுட்டது. விஷம் நளனோட  உடம்புக்குள்ள  புகும்போது, அவனைப் பிடிச்சுக்கிட்டிருந்த சனீஸ்வரனும் அவஸ்தை பட்டார். ஒரு நல்லவனைப் பிடித்ததால் சனீஸ்வரனுக்கே சோதனை வந்து விட்டது. அவரும் கருப்பாகிட்டார்ன்னு ஒரு கதை. அதனால்தான், சனீஸ்வரனுக்கு கருப்பு வஸ்திரம், கருப்பு எள், நீலக்கல்ன்னு எல்லாமே கருப்பா  படைக்கிறோம்.

அப்பிடிங்களா மாமா? உங்களுக்கெப்படி தெரியும் மாமா?

தினமலர் ஆன்மீக மலர்ல படிச்சேன் புள்ள.
                                     

ஓ ஓ , அப்புறம் நான் கோவிலுக்கு போகும்போது, நம்ம தெரு முனை ரோட்டுல ஒரு நாய் அடிப்பட்டு செத்து போய் இருந்துச்சு.   நான் அருவருப்போட முகத்தை திருப்பிக்கிட்டு போயிட்டேன். செத்து போன  நாய் மேல ரோட்டுல போற வர வண்டி ஏறி பார்க்கவே குமட்டிக்கிட்டு இருந்துச்சு. 
திரும்பி வரும்போது. வண்டில இருந்து ஒருத்தர் இறங்கி அந்த நாய்கிட்ட போய் பார்த்துட்டு என்கிட்ட மண்வெட்டி கேட்டார். நானும் நம்ம பார்வதி அக்காக்கிட்ட வாங்கி குடுத்தேன்.

அவர், ரோட்டோரத்துல குழி தோண்டி, செத்த்டு போன நாயை கொஞ்சம் கூட அருவறுப்பு இல்லாம எடுத்து போய் புதைச்சிட்டாரு. சார் நீங்க ப்ளூ கிராஸோ என்னமோ சொல்றாங்களே அதுல மெம்பரா இருக்கீங்களான்னு கேட்டேன்.

இல்லம்மா, ஆனாலும் இதுப்போல நாய், காக்கா, குரங்குலாம் அடிபட்டு செத்து போய்ட்டா. அதை நாம அப்படியே கண்டுக்காம விட்டுடுறோ. இது எவ்வளவு சுகாதார கேடு  தெரியுங்களா?  துர்நாற்றம் வீசும். அந்த பிராணிகளோட உடம்புல இருக்குற கிருமிகள் காத்துல கலந்து நம்ம உடம்பு பாதிக்கும். அதனால, என் கண் முன் இதுப்போல பிராணிகள் எதாவது செத்திருந்தால்  நான் இப்படி செய்யுறேன்ன்னு சொன்னார். இத்தனைக்கும் அவர் நம்ம ஸ்டேட் கூட கிடையாது, கேரளாங்க மாமோய். 

அப்பிடியா புள்ள, எங்கிருந்தோ வந்தவருக்கு இருக்கும் அக்கறை நமக்கு நம்ம தெருவை பத்தி இல்லாம போச்சே. இனி நாமும் இதுப்போல செய்ய முயற்சிக்கனும்.
                                                       

சரி சரி சீரியசா பேசிட்டோம். ஒரு ஜோக் சொல்றேன். நேத்து டிவி பொட்டில கேட்டேன்.
முதலாளி: நாளைல இருந்து வேலைக்கு வந்துடு. சம்பளாத்தை எப்படி வாங்கிக்குறே? நாள்கணக்குலயா? இல்ல வாரக்கணக்குலயா? இல்ல மாசக்கணக்குலயா?
தொழிலாளி:  மாசக்கணக்கு சம்பளத்தை மாசக்கடைசிலயும். வாரக்கணக்கு சம்பளத்தை வாரக்கடைசிலயும், நாள் கணக்கு சம்பளத்தை டெய்லி வீட்டுக்கு போகும்போதும் வாங்கிக்குறேனுங்க.
முதலாளி: ????!!!!!!
                           

ஹா ஹா நல்லா இருக்குங்க மாமா. அப்புறம் நம்ம ராஜியோட அப்பா, தன் பேரன்கிட்ட அவன் எல்.கே.ஜி படிக்கும்போது , பெரியவங்க பேச்சை கேளு,  பெரியவங்க நில்லுன்னா நிக்கனும், உக்காருன்னா உக்காரனும், கிணத்துல குதிடான்னு சொன்னா குதிக்கனும்ன்னு அடிக்கடி  சொல்லி வளர்த்திருக்கார். 

ஒரு நாளைக்கு ஒன்பது தரம், பெரியவங்க நிக்க சொன்னா நிக்கனும், உக்கார சொன்ன உக்காரனும், கிணத்துல குதிடான்னு சொன்னா....,ன்னு கேட்டு கேப் விட்டா, கிணத்துல குதிக்கனும் தாத்தான்னு அழகா அப்பு பதில் சொல்வான்.  ஒரு நாள் அப்பு என்ன டென்சன்ல இருந்தானோ தெரியலை! ராஜி அப்பா எதோ  சொல்ல, அப்பு முரண்டு பிடிக்க, அப்பு, பெரியவங்க நில்லுன்னா நிக்கனும், உக்காருன்னா உக்காரனும், கிணத்துல குதினான்னு சொன்னா...., ந்னு கோவமா கேட்டு கேப் விட, 
                                 
அப்பு கோவமா, ம்ம்ம்ம் பக்கத்துல நின்னு சொல்றவங்களை பிடிச்சு கிணத்துல தள்ளி விட்டுடனும்ன்னு சொன்னதை கேட்டு ராஜி அப்பா கோவம் மறைஞ்சு சிரிச்சுட்டாராம். இதை அடிக்கடி என்கிட்ட ராஜி சொல்லி சிரிப்பா.

ம்ம்ம் என்ன மாமா, சிரிக்காம டல்லா இருக்கீங்க? எதாவது பிரச்சனையா?

அதெல்லாம் ஒண்ணுமில்ல புள்ள. நீ உன் ஃப்ரெண்ட் குழந்தை பண்ற சுட்டித்தனத்தை சொல்லி சிரிக்குறே. ஆனா, என் ஃப்ரெண்டுக்கு இன்னும் குழந்தையே பொறக்கலை அதுக்கு என்ன பண்றதுன்னு  தெரியாம தவிக்குறான். 
                             

குழைந்தை எதிர்பார்த்து இருக்கும் ஆம்பிளைங்க பாவக்காய், எலுமிச்சை சாப்பிட  கூடாது... இவை சாப்பிடால் விந்து சத்து இருக்காது... அதனால கரு நிக்காது. ஆண்கள் மாதுளைஜீஸ், பழம் அதிகம் சேர்த்துக் கொண்டால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.பெண்களுக்கும் கருப்பை வலிமையாக இருக்கும். வைட்-டமின்-ஏ, இதற்கு ரொம்ப முக்கியம். இது உடலிலுள்ள எப்பிதீலியல் திசுக்களின் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தருகிறது. லிவர், முட்டை, சீஸ், பட்டர், கேரட்...லாம் டாக்டர் அட்வைஸ் கேட்டு சேர்த்துக்கலாம். தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் முட்டைகோஸ் தவிர்க்கனும்ன்னு அறுசுவைன்னு ஒரு பிளாக் இருக்கு அதுல படிச்சேனுங்க மாமா.

சாமியை மனசுல வேண்டிக்கிட்டு நல்ல டாக்டரா போய் பார்க்க சொல்லுங்க மாமா. பத்தாவது மாசமே அழகும், அறிவும் நிறைஞ்ச குழந்த பொறக்கும்.

அறிவை பத்தி நீ பேசுறியா?! சரி என் விடுகதைக்கு விடை சொல்லு பார்க்கலாம்..,

கேளுங்க மாமா,

அண்ணனின் தயவால்
ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?

 ஹா ஹா அவனா? இரு இருஉன்னைவிட புத்திசாலிலாம் பிளாகுல இருக்காங்க. அவங்க சொல்லட்டும். சொல்லலைன்னா நீ சொல்லு.

ம்ம் சரிங்க மாமா.

சரி புள்ள, நான் கிளம்புறேன். இன்னிக்கு கிராம சபா மீட்டிங் இருக்கு, அதுல கல்ந்துக்கனும் வரேன் புள்ள.

Saturday, May 19, 2012

ப்ளீஸ் ஹெல்ப் மீ











கார் வாங்கலாம்ன்னு இருக்கேன். உங்க வீட்டுலதான் கார் இருக்கே. எப்படி பராமரிக்கனும், கார் வாங்கும்போது என்னென்ன ஃபிக்ஸ் பண்ணனும்ன்னு சொல்லுடின்னு  ஃப்ரெண்டை கேட்டேன்.  அந்த நாயி சாரி அவ கார் பின் கண்ணாடில வரைய டிசைன் செலக்ட் பண்ணுன்னு மெயில் அனுப்பி இருக்கா.

முதல்ல கோவம் வந்துச்சு, இருந்தாலும் எப்படியும் கண்ணாடில எதாவது வரையத்தானே போறோம்ன்னு செலக்ட் பண்ணிட்டேன். அந்த படத்தை பார்க்கனுமா?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
கார் வாங்குனா எப்படியும் நான் கார் ஓட்டுவேன். அப்போ இந்த படத்தை போட்டாத்தானே சரியா இருக்கும். மாற்று கருத்து இருந்தா சொல்லுங்க. நல்ல படத்தை செலக்ட் பண்ணி குடுங்க ப்ளீஸ்....
டிஸ்கி: என் மக தூயா யாருக்காகவோ காத்திருக்கிறாளாம். உருகி, உருகி கவிதை எழுதியிருக்கா. அது என்னன்னு இங்க போய் பாருங்களேன். 
  

Friday, May 18, 2012

கோலம் போடுங்க... கோலாகலமாக வாழுங்க!

                                         
ஏண்டி புள்ள, காலங்காத்தால எம்புட்டு வேலை இருக்கு. வாசல் தெளிச்சோமா, கூட்டினோமா, நாலு புள்ளில ஒரு கோலம் போட்டோமான்னு வராம வாசலடைச்சு தினமும் கோலம் போடுறியே உனக்கு இடுப்பு வலிக்கலை?!

என்னங்க மாமா இப்பிடி கேட்டுட்டீங்க? கோலம் போடுறதுல எம்புட்டு விசயம் இருக்கு தெரியும்ங்களா?

ம்க்கும் என் காசுலாம் கோலமாவாவும், கலர் பொடியாவும்  மாறி வேஸ்ட் ஆகுறதுதான் மிச்சம்.

ஐயோ மாமா, உக்காருங்க இப்பிடி, அழகா இருக்குற ஒரு விசயத்தை இன்னும் கொஞ்சம் அழகு பண்றது நம்ம பழக்கம்.

என்ன புள்ள சொல்றே?! கோலம் போட்டு அழகு பண்றியா? வெளங்கலியே!

மாமோய்!  ஒவ்வொரு விசயத்துக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கு மாமா.  காரணம் தெரியாம அந்த  காரியத்தை செய்யுறது அறியாமை. அந்த காரணத்துக்காகக் காரியம் செய்வது அறிவுடைமைன்னு பெரியவங்கலாம் சொல்லியிருக்காங்க.

சுத்தத்துக்காகவும், ஆரோக்கியத்துக்காகவும்  நாம வீட்டைச் சுத்தம் செய்றோம். காத்து  மூலமா  வர்ற  தூசு, தும்மை  தடுக்க ஜன்னல்,  கதவுகள் வெச்சு வீட்டை கட்டுறோம். ஜன்னலுக்கு ஸ்கிரீன் கட்டுறோம். சுவத்துல  சுண்ணாம்பு பூசுறோம். சுவத்துல  பூசுற சுண்ணாம்பு சுவத்துல நமக்கு தெரியாம  புகுந்திருக்குற நுண்ணிய நோய்க் கிருமிகளை அழிக்குது.

அதுப்போல அலங்காரங்களினால், வீட்டுக்குள் இருப்பவர்களின் நலன்கள் பாதிக்காமல், பாதுகாக்கப்படுறது  பழந்தமிழர் நாகரிகத்தின் பழக்க வழக்கங்கள்ல ஒண்ணு.  வூட்டுல இருக்குறவங்க  நலனைப் பாதுகாக்கும் முறைகள்ல  ஒண்ணுதான்   கோலம் போடுறது.

பொம்பளைங்க நாங்க,  அதிகாலையில் எழுந்து வீட்டு வாசல்ல    பசுஞ்சாணத்தைத் தண்ணீரில் கரைத்துத் தெளிச்சு,
வாசலைப் பெருக்குறது.  இது, சுத்தத்துக்காக மட்டும் செய்யப்படுவதல்ல! வீட்டின் முன்னாடியும் பின் வாசல்லலியும்  தெளிக்குற பசுஞ்சாண தண்ணி, அந்த வூட்டுக்குள்ள காத்துலயும், தூசியிலயும், வீட்டுக்குள் வர்றாவங்களால தொத்திக்கிட்டு வர்ற நோய்க்கிருமியை தடுக்குது. அதனால, பசுஞ்சாண தண்ணி  ஒரு கிருமிநாசினியாகப் பயன்படுதுங்க மாமா. அம்மை நோய், காலரா, வைசூரி போன்ற நோய்லாம்  பரவுறதைப் பசுஞ்சாண தண்ணி தடுக்குதுன்னு ஆராய்ச்சிலயே சொல்லியிருக்காங்க மாமோய்.

அப்படியா புள்ள!

வீட்டுமுன் வாசலில் கோலம் போடுவாங்க. இந்தக் கோலம்கூட  கண்டமேனிக்கு கண்டவாறு போடுறதில்லை. ஒவ்வொரு கிழமைக்கு ஏத்த மாதிரி  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலம் போடுவாங்க. அந்தக்கோலம், முக்கோண வடிவிலயும், நாற்கோண வடிவிலயும், வட்ட வடிவிலயும், பதினாறு கோண வடிவிலயும் இருக்கும் பொம்பளைங்க போடுறது  கோலமா இருந்தாலும்...,  அதுலாம்,  வூட்ல இருக்குறவங்களை காக்கும் யந்திர சக்ரமாகும்.

வூட்டு முன்னாடி போடுற கோலம், “ யந்திர சக்கரங்கள்”. அது  அந்த வூட்டுல இருக்குறவங்க, வூட்டில இருந்து வெளியே போகும் போதும், வூட்டுக்குள்ள  நுழையும் போதும் அவங்களுக்கு எந்த கெடுதலும்  நடந்துடாம பாதுகாக்குமாம்.
வூட்டிலிருக்கும் குழந்தைகள் தெரிந்தோ தெரியாமலோ கண்ட  இடத்துக்கு போவாங்க . கண்ட கண்ட  பொருள்களைத் தொடுவாங்க. . அந்த இடங்களிலிருக்கும் தீய சக்திகள் குழந்தைகள் நலனைக் கெடுத்துடாம பாதுகாக்குதாம்.  

கோலத்தின் நடுவே பசுஞ்சாணம் வைத்து அதில் பூசணிப் பூவை வைக்கிறோமே!  அந்த பூசணிப்பூ மற்றவர்களால் கண் திருஷ்டி  படாம பாதுகாக்குது. பூசணிப்பூவின் மஞசள் கலருக்கு அந்த  சக்தி இருக்காம்.
இந்தப்பழக்கம் காலங்காலமாக நடந்துக்கிட்டு வர்ற பண்பாட்டு முறையாம்.
ஆனா, இன்ன்னிக்கு  நாகரிக வளர்ச்சியில எல்லாமே  போலித் தனங்கள். கோலமிடும் பொம்பளைங்க குறைஞ்சு போயிட்டாங்க.  தினமும் கோலத்தை தானே போடாம.  ஏதோ ஒரு கோலத்தை கலர் கலரா பிளாஸ்டிக் பேப்பர்ல அச்சடிச்சதை வாங்கி  வாசல் முன்னே ஒட்டிக்குறாங்க.

ஆமா புள்ள, முன்னலாம் நானும் வயலுக்கு போகும் போது  அழகழகான பொண்ணுங்கள்லாம் வாசல்ல கோலம் போடும்ங்க. நானும் அதெல்லாம் பார்த்துக்கிட்டே...,

என்ன பார்த்துக்கிட்டே?!

அது வந்து, அது வந்து கோலத்தையெல்லாம் பார்த்துக்கிட்டேன்னு சொல்ல வந்தேன் புள்ள.

ம்க்கும் உங்களை பத்தி எனக்கு தெரியாதா? நான் கோலம் போடும்போது எதிர்க்க டீகடைல உக்காந்து சைட்டடிச்ச ஆளுதானே நீங்க?!  உஙக புத்தி எனக்கு தெரியும். அதை விடுங்க. கோலத்தை பேசலாம்..

வார நாட்கள் ஏழும் ஏழு கோள்களின் ஆதிக்கத்தைக் குறிப்பதாகும். ஒரு நாளில் இருக்கும் ஆதிக்கம் மறுநாள் மாறிவிடும். அந்த மாற்றத்துக்கு ஏற்றவாறு கோலங்களை மாற்றி மாற்றிப் போடுவதனால், தீமைகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். இதை மறந்துவிட்டு, பிளாஸ்டிக் கோலங்களை ஒட்டி வைத்தால் என்ன பாதுகாப்பு கிடைக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
மார்கழி மாதம் வந்து விட்டால் போதும்: வாசல் தோறும் வண்ணக் கோலங்கள் புத்துப்புது மலர்கள்போல் நாளும் ஓர் அழகுடன் மலரும். கோலம்போடும்போது கோடுகள் கோணல் மாணலாக இருந்தாலும் போட்டு முடித்தபின் எப்படிக்கோலாகலமான அழகுடன் இருக்கிறதோ அப்படியே கோலம் போடும் வீட்டினையும் மகாலட்சுமி தன் அருட்பார்வையால் நிறைப்பாள் என்பது ஜதிகம்.


அது மட்டுமில்லாம என்ன கோலம் போட்டால் என்ன பலன் கிடைக்கும்னு கூட இருக்கு மாமோய்.  கோலங்களில் தெய்வீக யந்திரங்களுக்கு சமமான கோலங்களை பூஜை அறையில் மட்டுமே போட வேண்டும் ஹ்ருதய கமலம், நவகிரக கோலங்கள், ஐஸ்வர்யக் கோலம், ஸ்ரீசக்ரக் கோலம் போன்றவை யந்திரம் போன்றவை இவற்றை மஞ்சள் பொடியினாலும், அரிசிமாவினாலும் மட்டுமே போடுவது நல்லது.

அழகுக்காக வண்ணப்பொடிகளைப் பயன்படுத்தினால் கோலத்திற்கு உரிய தெய்வம் அல்லது கிரகத்திற்கு உரிய வண்ணத்தில் போடலாம். இத்தகைய கோலங்களால் தெய்வீக அருள் நிரம்பும் கிரக தோஷங்கள் விலகும். சுப காரியங்களுக்காகப் போடப்படும் கோலங்கள் கண்டிப்பாக இரட்டை இழைக்கோலங்களாகத்தான் இருக்க வேண்டும்.

 ஒற்றை இழை ஒருபோதும் கூடாது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் சமயத்தில் போடும் கோலங்களுக்கு காவியால் அழகூட்டுவது சிறப்பானது இப்படிப் போடுவதால் மங்கலம் சிறக்கம் மனை விளங்கும்.வீட்டு வாசலில் போடும் கோலங்களில் தெய்வீக வடிவங்கள் இடம்பெறக் கூடாது.புனிதமான பொருட்களின் வடிவங்களை வரைவதைத் தவிர்ப்பதும் நல்லது. அவற்றை பூஜை அறையிலோ வீட்டின் உள்ளே போடலாம். 

படிக்கோலத்தின் நான்கு மூலைகளிலும் போடும் தாமரை, திசை தெய்வங்களின் ஆசியைப் பெற்றுத்தரும். வாசல் படிகளில் குறுக்குக் கோடுகள் போடுவதைத் தவிர்ப்பதும் நல்லது. கோலத்தின் தொடக்கமும் முடிவும் கோலத்தின் மேற்புறமாக அமையும்படி போடுவது அவசியம். ஏறு முகமான பலனை இது தரும்.கோலத்தில் இடப்படும் காவி சிவ சக்தி ஜக்கியத்தை உணர்த்துகிறது. இப்படிக் கோலமிடுவது. சகல நன்மையும் தருமாம்  மாமா. அதேப்போல முன்னலாம் அரிசி மாவுல கோலம் போடுவாங்க. அது, எறும்பு, பூச்சி, குருவிக்குலாம் பசியாற உதவி பண்ணுச்சு. ஆனா, இப்பலாம் கோலப்பொடி கல்லு உடைச்சு அதை பவுடராக்கி அதுல கோலம் போடுறோம்.அதனால ஒரு யூஸும் இல்ல மாமா.

கரெக்ட்தான் புள்ள, இனி  வாசல்ல கோலம் போடு.  ஆனா, என்கிட்ட கோலம் வராத. புரிஞ்சுதா?!

என்னாது, உங்களை..., ஓடாதீங்க மாமா! எப்படியும் கொட்டிக்க வூட்டுக்கு வந்துதானே ஆகனும் அப்ப இருக்கு உங்களுக்கு.

Wednesday, May 16, 2012

ஐ மிஸ் யூ டா செல்லம்......





I MISS YOU என்பதின் தமிழாக்கம் என்ன ????

நான் உன்னை தொலைத்து விட்டேன் என்பதா ???

கைக்குள் இருந்த ஒன்று
இல்லாத வெறுமை உணர்வை
சொல்லுவதா  "I MISS YOU"?!

தேடி தேடி அலைந்தும்
கிடைக்காதோ என்ற பய உணர்வை
பறைசாற்றுவதா "I MISS YOU"?!

எண்ணமெல்லாம் தனக்கே என்று
குத்தகை எடுத்து கொண்ட ஆக்கிரமிப்பை
வெளிபடுத்துவதா "I MISS YOU"?!

பிரிவின் துயரத்தை
துயரத்தின் வலியை அழகாக
கூறுவதா "I MISS YOU"?!

பல உணர்வின் கலவையான
"I MISS YOU" எனற சொற்றொடருக்கு இணையான
தமிழ் வாக்கியம் என்ன ??????????????

டிஸ்கி: தெரிஞ்சவங்க அர்த்தம் சொல்லிடுங்கப்பா.  ?!இல்லைன்னா பார்ட் டூ ரிலீஸ் பண்ணிடுவேனாக்கும்

Tuesday, May 15, 2012

முதல்ல முட்டைதான் வந்துச்சு..., நான் கண்டுபிடிச்சுட்டேன்

கோழி வந்ததா? இல்ல முட்டை வந்துச்சான்னு ரொம்ப நாளா கேள்வி, உலகம் ஃபுல்லா சுத்திக்கிட்டு இருக்கு. எனக்கும் அந்த டவுட் ரொம்ப நாளா இருந்துச்சு. அதை என் ஃப்ரெண்ட்கிட்டயும் கேட்டு உயிரை வாங்கியிருக்கேன். அவதான் இந்த புகைப்படங்களை அனுப்பி முட்டையிலிருந்துதான் கோழி வந்துச்சுன்னு நம்புறியான்னு கேட்டா.

நான் நம்பிட்டேன் நீங்க?!








                            
                            
                            
                                       
டிஸ்கி:  என்னதான் முட்டையிலிருந்து  கோழி வந்துச்சா? கோழியிலிருந்து முட்டை வந்துச்சான்னு   கிண்டலடிச்சாலும் 50கிராம் முட்டைக்குள் இருக்கும் வெள்ளைக்கருவும், மஞ்சக்கருவும் பல உயிரியல் மாற்றங்கள் ஏற்பட்டு ஒரு கோழி குஞ்சாய் வெளிவருவதென்பது தெய்வச்செயல்தானே. இந்த படங்களை பார்க்கும்போது ஆச்சர்யத்துடன் இயற்கைக்கு நன்றியும் சொல்லனும்ன்னு தோணுச்சு. படங்களை அனுப்பிய தோழிக்கு நன்றி

Monday, May 14, 2012

படித்தால் மட்டும் போதுமா?! - ஐஞ்சுவை அவியல்

                           
என்னடி புள்ள!  காலங்காலத்தாலே  புலம்பிக்கிட்டு இருக்கே?!

அது ஒண்ணுமில்லைங்க மாமா, நம்ம பக்கத்து வீட்டு கதிர் இருக்கானே, அவன் எம்புட்டு பெரிய படிப்பு படிச்சு இருக்கான். காலேஜுக்குலாம் போய் இருக்கான். ஆனா, அவனுக்கு ஊர் பெரியவங்க முன்னாடி எப்படி நடந்துக்கனும்ன்னு தெரியலியே, அதான், அவன்லாம் படிச்சு என்ன புண்ணியம்? யாருக்கு என்ன லாபம்ன்னு சொல்லுங்க பார்க்கலாம். அதான் புலம்பிக்கிட்டு இருக்கேன். 

எல்லாருமே பிரகலாதனாகிட முடியுமா புள்ள?!

பிரகலாதனா?யாருங்க மாமா அது? எனக்கு தெரியாம இந்த ஊருல? அவன் வெளியூரா?!

இல்ல புள்ள, இரண்ய கசிபுன்ற ராட்சனோட பையன். அம்மாவோட வயத்துல இருக்கும்போதே நாரதரின் போதனையால தன் அப்பாவுக்கு பிடிக்கவே பிடிக்காத விஷ்ணு பகவானின் பக்தனா பிறந்தார்.  பிரகலனாதன், விஷ்ணுவை மறக்க, கொடிய  வழிகளைலாம்  கையாண்டு தோற்று போன  இரண்யகசிபு, எங்கே உன் ஹரின்னு அந்த பச்ச புள்ளையை பார்த்து கோவமா கேட்டானாம்.

ஐயையோ, அப்புறம் மாமா...,

என் ஹரி தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான்னு மகன் சொன்னதை கேட்டு, பக்கத்தில இருந்த தூணை தன் கையிலிருந்த கதாயுதத்தால உடைச்சானாம். அப்போ, தூணிலிருந்து விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வந்தாரு. நரசிம்மம்னா...,

எனக்கு தெரியும் மாமா, மனிதன் உடம்பும், சிங்கத்தின் தலையும் சேர்ந்த ஒரு அவதாரம்தான் நரசிம்மம்.

கரெக்டா சொல்லிட்டே புள்ள. நரசிம்மர் போரிட்டு இரண்ய கசிபுவை கொண்ணுட்டார். நரசிம்மரோட உருவத்தை பார்த்து, தேவர்கள் உட்பட எல்லாரும் பயந்தாங்க. அவரோட கோவத்தை போக்க விஷ்ணுவின் பொண்டாட்டியான மகா லட்சுமிதேவிக்கிட்ட கேட்டுக்கிட்டாங்க. அந்தம்மாவும் புருசன் பக்கத்துல போக பயந்தாங்க.

ம்ம்ம்ம், அப்புறம் எப்படிதான் விஷ்ணு பகவானின் கோவம் போச்சு?

பிரகலாதன்தான் பாட்டுலாம் பாடி விஷ்ணுவோட கோவத்தை போக்குனாரு. அதனால, கோவம் குறைஞ்ச விஷ்ணு, பிரகலாதன்கிட்ட மன்னிப்பு கேட்டாரு.

என்னாது கடவுள் மன்னிப்பு கேட்டாரா? ஏன் மாமா?

தன் மேல பிரகலாதன் வெச்ச பக்தி உண்மைதானான்னு, சின்ன பையன்கூட பார்க்காம ரொம்ப சோதிச்சுட்டேன். அதனால, என்னை மன்னிச்சு, எதாவது வரம் கேள்ன்னு விஷ்ணு பகவான் பிரகலாதன்கிட்ட கேட்டாராம்.

ஐயனே! ஆசைகள் என் மனசுல  தோணவே கூடாது,  பணம் இருக்குது, படிப்பு இருக்குது. ஆனா, ஆசை வேணாம்ன்னு சொன்னான் பிரகலாதன். குருகுலத்துல  அவன் படிச்சதுது சம்பாதிக்கவும், நாடாளவும் மட்டும் இல்ல! இறை சிந்தனையையும் வளர்த்துக்குறாதுக்கு.

படிச்சா மட்டும் போதாது. பண்பையும் வளர்த்துகணும்ங்குற மாதிரி  இருந்த பிரகலாதனின் இந்தப் பேச்சு,  நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது. சாமியை பார்த்து பக்தன் தான் உருகுவான். ஆனா, இங்கயோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த சாமி பக்தனை பார்த்து  உருகிப் போனான். இந்த சின்னவயசுல,  எவ்வளவு நல்ல மனசு! ஆசை வேணாம்ங்குறானே! ஆனாலும், அவர் விடலை.

 நீ ஏதாவது கேட்டுத்தான் ஆகணும்ன்னு, நரசிம்மர் கெஞ்சுனதால , எங்க அப்பாவை தண்டிக்காம அவருக்கு வைகுண்ட  பதவி கொடுக்கனும்ன்னு கேட்டுக்கிட்டானாம்.   அதுக்கு, விஷ்ணு, பிரகலாதா! உன் அப்பா  மட்டுமில்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெத்த அப்பாக்கள்  தப்பே செய்திருந்தாலும், அவங்க என் இடத்துக்கு வந்துடுவாங்க. அவங்க  21 தலைமுறையினரும் புனிதமடைவாங்கன்னு  வரம் தந்தாராம் விஷ்ணு.  தந்தை கொடுமை செஞ்சாரேங்குறாதுக்காக  அவரை பழிவாங்கனும்ன்ற எண்ணம்  பிரகலாதனிடம் இல்லை. படிச்சவங்க  கத்துக்கொள்ள வேண்டிய பண்பு இதுதான் புள்ள.

கரெக்டுதானுங்க மாமா.  படிச்ச படிப்பை பயனுள்ள வகையில யூஸ் பண்ணாதானே அந்த படிப்புக்கும் லாபம். மத்தவங்களுக்கும் லாபம்.
                              
அப்புறம்,  நம்ம கம்ப்யூட்டர் பொட்டில  பொட்டில ஒரு ஜோக்கு படிச்சேனுங்க  மாமா. சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாகிட்டுது.

எனக்கும் சொல்லுடி. நானும் சிரிக்குறேன்.

மனைவி: ஏங்க காரக்குழம்பு செய்யவா? இல்லை கூட்டு செய்யவா?
கணவன்: நீ முதல்ல சமையல் செய்.  நாம அப்புறமா அதுக்கு காரக்குழம்பா? கூட்டான்னு பேர் வச்சுக்கலாம். 

ஹாஹா நல்லாதான் சிரிக்குற மாதிரி இருக்கு. good joke. Very funny,  ஹா ஹா

என்னங்க மாமா திடீர்ன்னு இங்கிலிபீஷ்ல பேசுறீங்க?

நான் கரஸ்ல படிக்குறேன் புள்ள. அதான் இங்க்லீஷ்ல பட்டம் வாங்க போறேஏன். நீதான் படிக்காத தற்குறி. என்னையும் அப்படியே இருக்க சொல்றியா?

யாரு நானா தற்குறி?

இங்க்லீஷ்ல நான் ஒண்ணு கேட்குறேன் பதில் சொல்லு பார்க்கலாம்.

அடியே என்கிட்டயே சவாலா? கேளுடி டான்னு பதில் சொல்றேன்.

அப்படிங்களா மாமோய்?! அதையும் பார்க்கலாம் 7 லெட்டர்ஸ்  உள்ள  ஒரு இங்கிலீஷ் வார்த்தை. அதுல எந்த ஒரு லெட்டரை எடுத்தாலும் அர்த்தம் மாறாது. அது என்ன வார்த்தைன்னு சொல்லுங்க பார்க்கலாம்.

அதுவா? அது வந்து..., எனக்கு தெரியலை நீயே சொல்லுடி. அப்படி வா வழிக்கு. நான் சொல்றதுக்குள்ள பிளாக்கர்ஸ் யாருக்காவது தெரிஞ்சா சொல்லட்டும்.  ராத்திரி சாப்பாட்டுக்கு ஓட்ஸ்ல எதாவது செய்யட்டுமா?

                            
ஓட்ஸா? ஓட்ஸ்ன்னதும் உன் ஃபிரண்ட் ராஜி ஞாபகம்தான் வருது.

ஏன்? அவளுக்கென்ன?

அவளுக்கொண்ணுமில்லை. நான் ஒருதரம் அவ வீட்டுக்கு போயிருந்தேன். அப்போ அவ, சின்ன பொண்ணு இனியாக்கு 5 இல்ல 6 வயசிருக்கும். அப்போதான் இந்த ஓட்ஸ்லாம் நமக்கு அறிமுகமான டைம். ஓட்ஸ்லாம் சர்க்கரை நோயாளிக மட்டும்தான் சாப்பிடனும்ன்னு பரவலா ஒரு பேச்சு. அதை ராஜி தன் பொண்ணுக்கிட்ட சொல்லி இருப்பா போல.

நான் போயிருக்கும்போது ராஜி தன் பாட்டிக்கு ஓட்ஸ் பொங்கள் செஞ்சு கொடுத்தா. அப்போ அந்த பாட்டி, இன்யாக்கிட்ட கொஞ்சம் பொங்கள் கொடுத்து காக்காவுக்கு வெச்சுட்டு வான்னு சொன்னாங்க. இனியாவும் அப்படியே செஞ்சா. ஆனா, அப்புறம் பாட்டியை பார்த்து ஒரு கேள்வியை கேட்டா பாரு எல்லாரும் சிரிச்சுட்டோம்.

அப்படி என்னதான் கேட்டா மாமா?!

ஏன் பாட்டி உனக்குதான் சுகர் அதனால ஓட்ஸ் சாப்புடுறே. காக்காக்கும் சுகரா? அதனால அதுக்கும் ஓட்ஸ் பொங்கல் வைக்குறியான்னு கேட்டா.

ஹா ஹா இனியா ரொம்ப சுட்டி. இப்படிதான் எதாவது கேட்டு ராஜியை வம்புக்கு இழுக்கும் ஹா ஹா. ஆ ஐயோ.., அம்மா...,
                                      
                                           
ஏன் என்னாச்சு புள்ள?!

ஒண்ணுமில்லைங்க மாமா, பல் வலிக்குது. கடைவாய் பல் சொத்திஅயா இருக்கு. அது ரெண்டு நாளா ரொம்ப வலிக்குதுங்க மாமா. நைட்லாம் தூக்கமே இல்ல.

இதுக்குதான் இனிப்புலாம் சாப்பிட்டபின் வாய் கொப்பளிக்கனும், சாக்லேட், கற்கண்டுலாம் கடிச்சு சாப்பிட கூடாது. அதிக குளிர்ச்சி, சூடானதை சாப்பிட கூடாது. சாப்பிட்டபின் வாய் கொப்பளிக்கனும். காலையில எழுந்ததும் பல் துலக்கனும்.  ராத்திரி படுக்க போறதுக்கு முன்னாடி பல் துலக்கனும். வருசத்துக்கு ஒரு முறையாவது பல் டாக்டர்கிட்ட போய் ஆலோசனை கேட்கனும்.

சரிங்க மாமா, அதெல்லாம் இனி கரெக்டா செய்றேன். இப்ப வலிக்குதே அதுக்கு ஒரு வழி சொல்லுங்க மாமா. மிளகுத்தூளுல  கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்குறா பல்லுல  தடவி வந்தா வலி குறையும். முந்திரி மரத்தின் தளிர் இலைகளை பறிச்சு  நல்லா  கடிச்சு  சாப்பிட்டு வந்தாலும் பல் வலி குறையும். இஞ்சி சாறுடன் தேன் கலந்து வாய் கொப்பளித்து குடித்து வந்தாலும் சொத்தைப்பல் குறையும்.

ஆனா, இதெல்லாம் சும்மா தற்காலிகமாதான் செஞ்சுக்கனும். உடனே மறக்காம பல் டாக்டகிட்ட போய் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கனும். நான் போய் கழனில மடை திருப்பிவிட்டு வரேன். சாயந்தரமா டவுனுக்கு போய் உன் பல்லை புடுங்கலாம்.

என்னங்க மாமா, இப்படி கிண்டல் பண்றிங்களே!?

சும்மா தமாஷ் பண்ணே புள்ள. சொத்தை பல்லை எடுத்துட்டு வந்துடலாம்.

சரிங்க மாமோய்.நானும் சீக்கிரம் வீடு வேலைலாம் முடிச்சு வைக்குறேன்.