Saturday, November 28, 2015

புத்தி சொன்னா இளைஞர்கள் ஏத்துக்குவாங்களா?! - கேபிள் கலாட்டா



சன்லைஃப் சேனல்ல தினமும் மதியம் 3 மணில இருந்து 5 மணி வரை வானவில், உங்கள் சாய்ஸ், நெஞ்சை தொட்ட பாடல், கிளாசிக் பாடல்கள்ன்னு திகட்ட திகட்ட70, 80, 90களில் வந்த பாடல்களை ஒளி(லி) பரப்புறாங்க. வூட்டுக்காரர், பசங்க, நியூஸ், ஸ்போர்ட்ஸ் சேனல்ன்னு எந்த இம்சையும் இல்லாம ரசிச்சு கேக்கலாம்.

----------------------------------------------

வேந்தர் டிவில தினமும் இரவு “மூண்றாவது கண்”ன்னு ஒரு நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை 9.30க்கு ஒளிப்பரப்பாகுது.  அதிகம் அறியப்படாத ஊர்களில் சித்தர்கள் நடமாடிய இடங்கள் , வித்தியசமாய் குறி சொல்லும் இடங்கள், அமானுஷ்யமான விசயங்கள் பத்திலாம் ஒளிபரப்புறாங்க. வித்தியாசமாவும், ரசிக்கும்படியாவும் இருக்கு.  போன வாரம் முழுக்க கோவை பக்கத்துல இருக்கும் வெள்ளியங்கிரி பத்தியும், சதுரகிரி சித்தர்கள் காடு பத்தியும் போட்டாங்க. ஒருவேளை நைட்ல பார்க்க முடியாதவங்களுக்காக பகல் வேளைல 12.30வரை மறுஒளிபரப்பு பண்ணுறாங்க.

----------------------------------------------------------

மக்கள் தொலைக்காட்சியில் ”4+2” ன்னு ஞாயிறு மதியம் 11.30க்கு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்புறாங்க. இதுல இரு சக்கர, நாலு சக்கர வண்டி பத்தி எல்லாத்தையும் அலசி காய  வைக்குறாங்க. மைலேஜ், இஞ்சின், சீட், எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க், டெக்னிக்கல் விஷயங்கள்ன்னு எல்லா விசயங்கள் பத்தியும் அழகு தமிழ்ல சொல்றாங்க. வண்டி வாங்க நினைப்பவங்க அவசியம் பாருங்க

--------------------------------------------------------------

கேப்டன் டிவில திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.55க்கு “புத்துணர்ச்சி தரும் யோகா”ன்னு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. இதை செல்வி.லட்சுமி ஆண்டியப்பன் நடத்துறங்க. உடலை ஆரோக்கியமா வச்சுக்க தேவையான பயிற்சிகளை செஞ்சு காட்டுறாங்க, சின்னவங்க, பெரியவங்க, கர்ப்பிணிகளுக்கான யோகா பயிற்சிகளை காரண காரியங்களோடு விளக்கி பயிற்சிகளை செஞ்சும் காட்டுறாங்க. 

-----------------------------------------------------------------------

பொதிகை சேனல்ல “கல்லூரி காலங்கள்”ன்ற நிகழ்ச்சியை இறையன்பு. I.A.S அவர்கள் தொகுத்து வழங்குறார். ஒவ்வொரு மனுசனோட வாழ்க்கையில் 15 முதல் 25வரையிலான காலகட்டம் மிக முக்கியமானது. தான் பிற்காலத்துல என்னவாகனும், மேற்படிப்பு, வேலை வாய்ப்பு, இண்டர்வியூன்னு இது நீளும். இந்த காலகட்டத்தை எப்படி மேம்படுத்திக்கனும்ன்னு மாணவர்களுக்கு தனக்கே உண்டான பாணியில் எளிய நடையில் எடுத்து சொல்றார். நினைவாற்றல், தேசபக்தி, வரலாறு, பக்தி, ஆன்மீகம், கம்யூனிசம் எதை பத்தியும் பொறுமையா எடுத்து சொன்னால் இன்றைய இளைஞர்கள் புரிஞ்சுப்பாங்க. கண்டிப்பா நல்லதை ஏத்துக்குவாங்கன்னு நம்பிக்கையாய் சொல்றார். இந்த நிகழ்ச்சி வார நாட்கள்ல இரவு 10.30 முதல் 11 மணி வரை ஒளிப்பரப்பாகுது.

--------------------------------------------------------
விஜய் டிவில தினமும் காலைல 7 மணிக்கு ”பாட்டி வைத்தியம்”ன்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. பேருதான் பாட்டி வைத்தியமே தவிர ”ரேவதி சந்திரன்”ன்ற ஆன்டிதான் நிகழ்ச்சியை நடத்துறாங்க. இன்றைய காலகட்டத்துல சின்ன சின்ன உடல் உபாதைக்குலாம் டாக்டரை தேடிப்போய் ஆயிரக்கணக்குல செலவு பண்ணுறொம். கூட்டு குடும்பமாய் இருந்த காலத்துல வீட்டுல இருந்த பொருட்களைக் கொண்டே சின்ன சின்ன உடல் உபாதைகளை தீர்த்துக்கிட்டாங்க. ம்ம்ம்ம் எல்லாத்துக்கும் விலை கொடுக்க வேண்டி இருக்குல்ல. இனி, இந்த நிகழ்ச்சிய பார்த்து குறிப்பெடுத்து வச்சுக்கிட்டா நமக்கும் யூஸ் ஆகுமில்ல.!!

-----------------------------------------------------------------

அடுத்த வாரம் கேபிள் கலாட்டா வரும். அதுக்கு முன்ன ஒரு விசயத்தை சொல்லிக்க விரும்புறேனுங்க சகோ’ஸ். எனக்கு டிவி பார்க்க பிடிக்காது. வர்ட்ட்ட்டா!!
 

Friday, November 27, 2015

பச்சையம்மன் சமேத மன்னார்சாமி திருக்கோவில் - புண்ணியம் தேடி பயணம்

நேத்து ராத்திரி கே.ஆர்.விஜயா சாரி  அம்மன் என் கனவுல வந்து உள்ளூர் ஆட்டக்காரனுக்கு மரியாதை குறைவு”ன்னு சொல்வாங்க!. அதுப்போல எங்கயோ இருக்குற கோவில் பத்திலாம் எழுதுற! . ஆனா, வீட்டுல இருந்து 12 கிமீ தூரத்துல இருக்குற என்னை  பத்தி எழுதலையேன்னு சூலத்தால கண்ணை குத்த வந்துச்சு.

ஆத்தா! பச்சையம்மா! நான் ஒரு பிரபல பதிவர். அதனால, பதிவு எழுத, போட்டோ அட்டாச் பண்ண, மத்த பிளாக்குல போய் கமெண்ட் போடன்னு ஆயிரம் வேலை இருக்கு. அதுக்கு கண்ணு ரொம்ப அவசியம் வேணும். நாளைக்கு எழுந்ததும் முதல் வேலையா உன்னை பத்தியே பதிவா போட்டுடுறேன்ன்னு சொன்னதுக்கு அப்புறம்தான் சூலத்தை கீழ போட்டாங்க கே.ஆர்.விஜயா சாரி அம்மன் சாமி.

இனி, பதிவுக்குள் போகலாம்...,

                                                    
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணில இருந்து சரியா 12 கிமீ தூரத்துல இருக்கு வாழைப்பந்தல்”. ஆரணில இருந்து அரை மணிக்கு ஒருதரம் பஸ் இருக்கு. ஆட்டோவுலயும் போகலாம். ஆனா, உங்க ஒரு நாள் சம்பளத்தை முழுசா கொடுக்க வேண்டி வரும். ஏன்னா, ரோடு அத்தனை மோசம்.

வேலூர், காஞ்சிபுரம், செய்யாறு ல இருந்து வாழைப்பந்தலுக்கு பஸ் இருக்கு. அது இல்லாம, செய்யாறு டூ ஆரணி ரோடுல மாம்பாக்கத்துல இறங்கி, அங்கிருந்து வாழைப்பந்தல் பஸ் ஏறி வரனும். வாழைப்பந்தல் ஊருல இருந்து 2 கிமீ தூரத்துல இருக்கு. “பச்சையம்மன்” கோவில். வாழைப்பந்தல்ன்னு புராணத்துல இருந்தாலும் முனுகப்பட்டு ஊராட்சிக்குள் இக்கோவில் இருக்குறதால முனுகப்பட்டு பச்சையம்மன் கோவில்ன்னும் சொல்வாங்க.


அம்மான்னா அன்பு, அறிவு, ஆனந்தம், அமுதம், ஆற்றல். அச்சமின்மைன்னு பல அர்த்தம் வருது. அம்மாக்கு அம்மா யார்? பாட்டி. பாட்டியோட அம்மா? அந்த அம்மாக்கு அம்மா?! அந்த ஆதி யார்? அது தான் இயற்கை. இயற்கை வனப்பின் நிறம் பச்சை. பசுமை நிறம் கண்ணுக்கு குளிர்ச்சி, மனதிற்கு வலிமைன்னு இன்றைய ஆராய்ச்சியாளர்களே ஒத்துக்கிட்டு இருக்காங்க. அப்படி பெருமை வாய்ந்த பச்சை நிறத்தில் அருள் பாலிக்கும் அன்னையின் பெயர்தான் “பச்சையம்மன்”.


இனி, ஏதோ எனக்கு தெரிஞ்ச தல வரலாறு பார்க்கலாம்....

பிருங்கி என்னும் மாமுனிவர் தீவிர சிவன் பக்தர்.  தேவர்கள், முனிவர்கள், பார்வதி சகிதமாய் கைலாயத்தில் இருக்கும்போது பிருங்கி முனிவர், சிவனை மட்டும் வலம் வந்து வழிப்பட்டு சென்றார். இதைக்கண்ட சிவசக்தியான பார்வதி தேவி, ஐயனே! இதென்ன நியாயம்?! எல்லாம் அறிந்த மாமுனிவரே நம்மை பிரித்து வணங்கலாமா?! அவர் மீண்டும் இத்தவறை செய்யாமல் இருக்க தங்கள் உடலில் சரிபாதி எனக்கு வேண்டும் என சிவப்பெருமானிடம் அன்னை வேண்டினார். 



இதற்கு சிவன் மறுக்க, எப்படியும் சிவனின் உடலில் சரி பாதி பிடிக்க வேண்டும் என வைராக்கியம் கொண்டு, அன்னை சிவனைப் பிரிந்து தவம் செய்ய பூலோகத்துக்கு வந்து தவம் செய்ய சரியான இடத்தை தேடி அலைந்த போது.....,

பசுமையான வாழை, அதன் கன்றுகளோடு வனப்பாகவும், வளமாகவும் தன் இனத்தோடு சேர்ந்து கூட்டுக்குடும்பமாய் இருக்கும் தோட்டத்தில் மண்ணால் ஆன சிவலிங்கத்தை கண்டதும் இதுவே சரியான இடம் என அன்னை உணர்ந்து, வாழை இலைகளால் பந்தலிட்டு, பூஜையை தொடங்க நீரைத் தேடினார்...,


ஆனால், சிவப்பெருமானோ தன் திருவிளையாடலை இந்த இடத்தில் தொடங்கினார். பசுமையான வாழைத்தோட்டத்தில் உள்ள  நீர் நிலைகள், நீர் ஊற்றுகளையும் மறைத்து வைத்து விளையாடினார். மன உளைச்சலில் இருந்த அன்னை, சிவப்பெருமானின் விளையாட்டை உணராமல், தன் புதல்வர்களான விவேகமே உருவான விநாயகரையும், வீரத்தின் பிறப்பிடமான முருகனையும் அழைத்து பூஜைக்கு நீர் கொண்டு வரச் சொன்னார்.

                 
தந்தையின் விளையாட்டை உணராத புதல்வர்களும் அன்னையின் கட்டளைப்ப்படி நீரை தேடி, மூத்தவர் கிழக்குத் தொடர்ச்சி மலையின் தெற்கு பாகத்துக்கு வந்தார், அங்கே ஒரு முனிவர் தன் கமண்டல் நீர் சிவனின் பூஜைக்கு மட்டுமே என்று நீண்ட நாட்களாக தவம் செய்வதை உணர்ந்து தன் வாகனமான மூஞ்சூரை அனுப்பி கமண்டலத்தில் உள்ள நீரை கவிழ்க்க செய்தார், அந்த நீர் கமண்டல  நதியாக பெருக்கெடுத்து அன்னையை நோக்கி ஓடியது. 

 இளையவரோ! எங்கு தேடியும் நீர் கிடைக்காததால் தன் வீர வேலை வீசி மலையை குடைந்து ஒரு ஆற்றை உருவாக்கினார். குழந்தை வடிவில் இருந்து முருகன் உருவாக்கிய நதி “சேய் ஆறாக மாறி அன்னையை நோக்கி ஓடியது.


நீண்ட நேரமாகியும் நீர் கொண்டு வர சென்ற புதல்வர்களை காணாமல் அன்னையுடன் இருந்த நாகம்மா கிழக்கு தொடர்ச்சி மலையிலிருந்து நீரூற்றைக் கொண்டு வர, ”நாக நதி”யாக மாறி அன்னையை தேடி அதுவும் ஓடியது.

நீர் கொண்டு வரச் சென்றவர்களை காணவில்லையே என கவலைக்கொண்டு குறித்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டுமே என்று பூமாதேவியை வேண்டி சிறு குச்சியால் பூமியை தோண்ட ஊற்று பீறிட்டு வரவும், கணபதியின் கமண்டல நதியும், முருகனின் “சேய் ஆறும், நாகம்மாவின் “நாக நதியும், அன்னையின் பாதத்தை தழுவியது. எங்கே குறித்த நேரத்தில் பூஜை செய்ய முடியாமல் போகுமோ என்ற எண்ணத்தில் இருந்த அன்னையின் திருமேனி திரிவேணி சங்கமத்தால் உடலும், உள்ளமும் குளிர்ந்து சிவந்த நிற மேனி மாறி பச்சை நிறமானது. அன்னையும் குறித்த நேரத்தில் பூஜையை முடித்தார். தேவர்களும், முனிவர்களும் அன்னையின் நிலைக்கண்டு பூமாரி பொழிந்து  வாழ்த்தினர்.

    

வானவர் மனம் மகிழ்ந்ததால் பெரு மழை பெய்தது. மழை நீரால் எங்கே மண்ணால் செய்த லிங்கத்துக்கு ஆபத்து நேருமோ என்று அஞ்சிய அன்னை, சிவலிங்கத்தை கட்டி அணைத்து மழைநீரை தன்மீது தாங்கினாள். அன்னையின் பிடியை தாளாத சிவப்பெருமான் “மண்ணாதீஸ்வரா”க காட்சி அளித்ததாக சொல்லப்படுகிறது.


இதனை அறிந்த அசுரர்கள் அன்னையின் தவத்தை குலைக்க பல வழிகளில் முயற்சி செய்தனர். அதனால், தேவர்களும், முனிவர்களும் சிவன், விஷ்னுவிடம் சென்று முறையிட்டனர். சிவன் “வாமுனியாகவும்.., விஷ்னு “செம்முனியாகவும் அவதாரம் எடுத்து காத்ததாக சொல்லப்படுகிறது.

இக்கோவிலில் அமைந்துள்ள அம்மனின் திருவுருவம் வைரம் பாய்ந்த மரத்தால் ஆனது.  அன்னையின் தியான ஜோதியாய் விளங்கும் விக்ரகம் மனித பிறவியில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும். 

அன்னைக்கு தவத்தின் போது உதவிய சப்தரிஷிகள் 7 பேர் சிலைகளும்....,
 

காவல் புரிந்த அஷ்ட திக்கு பாலகர்களின் சிலைகளும் வண்ண மயத்துடன் கண்கொள்ளாக் காட்சியாய் விளங்குகிறது. 

 
ஐராவதம் என அழைக்கப்படும் யானையின் சிலையும், 

 தேவேந்திரனின் தவக்கோல சிலையும் இங்கே அமைந்திருக்கு. 


கோவிலின் வெளியில் காவல் தெய்வமாக விளங்கும் வாமுனி(சிவன்) செமுனி(விஷ்னு) சிலைகள் கோபுர கவசத்தில் இருப்பது இதன் சிறப்பு. 

புது வாகனத்துக்கு பூஜை, திருஷ்டி கழிப்பு, உயிர் பலி  இதெல்லாம் இங்கதான் நடக்கும். திருஷ்டி கழிப்புக்காக உடைக்கும் தேங்காயை தரையில் உடைக்காம கோபுர சுவற்றில்தான் உடைக்கனும்.

ஆலயம் இப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது, கோவில சுற்றி சிமெண்ட் தரை, மேலே கூரை என புத்தம் புது பொலிவுடன் அழகுற மிளிர போகின்றது.


சுத்து வட்டார ஊர் மக்களுக்கு பெரும்பாலும் இதுதான் குல தெய்வம். குழந்தைக்கும் முதல் முடி காணிக்கை, காது குத்துலாம் இங்கதான் நடத்துவாங்க. நாங்க போய் இருக்கும்போது ஒரு குடும்பத்து குழந்தைகளுக்கு காது குத்து விழா. 
 

பொங்கல் வைக்க கோவில் நிர்வாகம் தனியா இடம் ஒதுக்கி மேடை கட்டி வெச்சிருந்தாலும் எப்பவும் போல நம்ம ஆளுங்க அங்கங்கே பொங்கல் வைக்குறாங்க. 

 

பெரும்பாலும் திங்கள், வெள்ளிக்கிழமைல கூட்டம் அலைமோதும். சில ஞாயிறு அன்னிக்கும் எதாவது காது குத்து போன்ற நிகழ்ச்சிகள் இருக்கும். அவங்கவங்க வசதிக்கு ஏத்த மாதிரி மண்டபம்லாம் இருக்கு. ஆனாலும், மரத்தடிகளில் அடுப்பை மூட்டி பிரியாணி, சுக்கா வறுவல், கொழம்புன்னு செஞ்சு பரிமாறுவாங்க. சுத்திலும் சுமாரான ஹோட்டல் இருக்கு. எதுவுமே சாப்பிட  கொண்டு போகலைன்னாலும், இதுப்போல சமைக்குற கோஷ்டி சாப்பிடுறீங்களா?!ன்னு கேட்டு கேட்டு பரிமாறுவாங்க. 

நான் போனது புதன் கிழமை என்பதால, கடைத்தெருலாம் ”ராஜி மண்டைக்குள்ள காலியா இருக்குற மாதிரி” ஜில்லோன்னு இருக்கு. திங்கள், வெள்ளின்னு வந்தால் கூட்டம் அலைமோதும். அசைவம் அகப்படும் இடம் என்பதால் முக்கியமான ஆண்கள் கடை இருக்கு. ஆனா, என்னாலதான் படம் எடுக்க முடியலை.



வேண்டுதலுக்காக உடலில் வேப்பிலை சேலை உடுத்துறது, தீச்சட்டி எடுப்பது, எலுமிச்சை பழம் உடம்பில் குத்தி நேர்த்திக்கடனை செலுத்துவாங்க.  நான் போகும்போது அப்படி இரு சிறுவர்கள் எலுமிச்சை குத்தி பூந்தேர் இழுத்தாங்க. 


விரதமிருக்க திங்கள் கிழமை சிவனுக்கும்,  அம்மனுக்கு வெள்ளிக்கிழமை உகந்த நாள்ன்னு சொல்வாங்க. ஆனா, சிவன் வேறில்லை, சக்தி வேறில்லைன்னு சொல்லுற மாதிரி இந்த கோவில் மட்டும் திங்கள் கிழமை அம்மனுக்கு உகந்த நாள். அன்னிக்கு கோவிலில் கூட்டம் அலைமோதும். அதுலயும் ஆடி மாத 5திங்களும், ஆவணி மாத 4 திங்களும் சேர்ந்து 9 திங்கள் பூஜைக்கு வெளிநாட்டில் இருந்துலாம் கூட வருவாங்க. 

மேலும் அதிக தகவலுக்கு: T.குமார் குருக்கள், 
தொடர்புக்கு: 04182- 244373
9444896937

அடுத்த வாரம் மீண்டும் வேற கோவிலுக்கு போகலாம். இப்போ வர்ர்ர்ர்ர்ர்ர்ட்டா?! 

Wednesday, November 25, 2015

கார்த்திகை தீபம் - நினைவுமீட்டல்

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளைக்கு முன்னாடி நம்ம பதிவில் தீப தரிசனம் பற்றி விரிவாக நமது புண்ணியம் தேடி போற பயணத்தில் பார்த்தோம். அப்ப, கார்த்திகை தீபம் பார்க்க, மலைக்கு செல்லுமுன் அண்ணாமலையாரை தரிசித்து விட்டு மலைமேல் தீப தரிசனம் செஞ்சோம். அப்ப மேக மூட்டமாக இருந்துச்சு. இந்தமுறை பகல் பொழுதிலேயே நாம் தீபம் ஏற்றும்முன் மலை மேல் போய் பார்க்கனும்ன்னு முதல்லியே முடிவு பண்ணி கிளம்பிட்டோம். 
ஆனா, வீட்டில் இருந்து புறப்படும் போதே சூரியன் மறைஞ்சு சந்திரனும் உதயமாகி விட்டான். நாம எப்ப நேரத்திற்கு புறப்பட்டு இருக்கோம்?ன்னு வீட்டில் ஒரே திட்டு. நான் என்னங்க பண்ணட்டும்?! கார்த்திகைக்கு சாமிக்கு படையல் போட்டு கிளம்ப வேணாமா?!! ஒரு வழியா எல்லா வேலையையும் முடிச்சுட்டு கிளம்பினா,  திருவண்ணாமலைக்கு 15கி. மீ முன்னயே ட்ராப்ப்ப்ப்ப்பிக்.  தீபம் பார்த்துட்டு அண்ணாமலையாரை தரிசிக்க சென்ற போது நள்ளிரவு நேரம் ஆகிட்டு. சரி, அருணாசலேஸ்வரா! நீயே துணைன்னு அவரை  கும்பிட்டு பயணத்தை தொடர்ந்தோம்....,
சாமி தரிசனம் முடிச்சுட்டு மலையேற ஆரம்ப்ச்சோம். மூணாவது வருசம் போன போது பாதை தெளிவா இருந்துச்சு. இந்தமுறை சரியான வழிகாட்டி இல்லாததால எங்களுக்கு முன்னாடி போனவங்களை பார்த்து பின்தொடர்ந்து போனோம். பாதை சிறிது கரடு முரடாகவே இருந்தது .
ஒருவழியா பாதி மலை ஏறிட்டோம். மலைமேல் இருந்து பார்க்கும் போது கோவில் சின்னதா தெரிஞ்சுது. மேல போக போக கோயில்லாம்  மேக மூட்டத்துக்கிடையில் தெளிவின்றி இருந்துச்சு.
வேண்டுதலுக்காகவும், தீபம் ஏற்றும் கைங்கரியத்தில் நம்ம பங்கும் இருக்கட்டும்ன்னு நாம நெய் எடுத்துக்கிட்டு மலை மேல கொண்டு போய் கொடுக்கலாம்.  பாரம் சுமக்க முடியாதவங்களுக்காகவே மலைமேல் சிலர் சின்ன சின்ன பாட்டில்களில் நெய் விக்குறாங்க. அதேசமயம், அங்க குளிருக்கு இதமாக சுக்கு காபியும் கிடைக்கும். நாங்கள் போன போது அங்க இருந்தவங்க கூட தூங்கிட்டாங்க.
அதோ தூரத்தில் தெரியறதுதான் ”மகாதீபம்” . அங்கேயும் நெய்லாம் விக்குறாய்ங்க. மேலும் அங்க கவனமாக நிக்கனும்.செல்ஃபி எடுக்குறேன்னு பாறைகளில் அசால்ட்டா நிக்கப்படாது. ஏன்னா,  பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யும், தீபத்துக்காக நெ நெய்யும் சிந்தி எல்லா இடமும் வழுக்கும். நாங்க போனபோது கூட சிலர் வழுக்கி விழுந்துட்டாங்க.ஒரு பெரியவர் கீழ விழுந்து கால்களில் அடிபட்டு தூக்கிட்டு போனாங்க. மேலும் காத்தும் அளவுக்கு அதிகமாக வீசும்.  அதனால, கவனமா நிக்கனும்.  

கார்த்திகை மாசம் ஓடும் மேகங்களைப் பார்த்து..., மழை மேகம்லாம் கார்த்திகை தீபம் பார்க்கப் போகுதுன்னு எங்க ஊர் பக்கம் சொல்லுவாங்க. கார்த்திகை தீபம் அன்னிக்கு கண்டிப்பா மழை பெய்யும். அட்லீஸ்ட் சிறுதூறலாவது இருக்கும். அதனால கவனமா மலை மேல் ஏறனும், நிக்கனும், தீபத்தை தரிசிக்கனும்.
தூரத்தில் தீபத்தை கண்டதும் மனதிலும், உடலிலும் இனம்புரியாத ஒரு சிலிர்ப்பு. அண்ணாமலையானுக்கு அரோகரா! ன்னு  சொல்லி.., கைக்கூப்பி, இறைவனை தொழுது.., எல்லோருக்கும் நன்மைவர பிரார்த்தித்து கொண்டு கொண்டுபோன நெய்யினை தீபத்தில் ஊத்தினோம். அப்படியே தீபத்தின் முன்னே ஒரு செல்பியும் எடுத்துக்கிடோம்.
மலைஉச்சியில் நல்ல குளிராக இருந்ததால, அங்க உதவிக்கு நின்ற பக்தர்கள் சிலர் தீபத்துக்கு அருகில் நெருப்பு பற்ற வைத்து குளிர் காய்ஞ்சுக்கிட்டு இருந்தாங்க. அதே மாதிரி, அங்க சேவைக்காக இருப்பவர்கள் பக்தர்கள் கொடுக்கும் உணவுப்பொருள் மற்றும் தண்ணீரையும் மனமகிழ்வுடன் வாங்கிக்கிறாங்க.
மலைமேல  பக்தர்கள் கூட்டம் சுமாரா இருக்கு. எல்லோரும் தீபத்தை காணும் ஆவலில் கஷ்டப்பட்டு மலை ஏறி வந்திருந்தாங்க. திருமணமானவர்கள், நண்பர்கள், காதலர்கள், வயதானவர்கள், குடும்பத்துடன்  என  தினுசு தினுசா மலைமீது ஏறி கார்த்திகை தீபத்தை தரிசிக்க வந்திருக்காங்க .
நானும் பரவசத்துடன் தீபத்தை கண்குளிர பார்த்து, வணங்கி, வேண்டி அண்ணாமலையாருக்கு அரோகரா! ன்னு தீபத்தை தரிசிச்சுட்டு இருந்தோம். அப்போ, ஒரு குரல்.  தீபதரிசனம் செஞ்சவங்கலாம், கவனமா பாறையில் இறங்கி போங்க.  காத்து பலமா வீசுது. பாதை ஓரமா போவாதீங்க. பாறைலாம்  நெய் கொட்டி வழுக்குது, கவனமாபோங்க. எதிர்க்க வர்றவங்களுக்கு, பின்னாடி வர்றவங்களுக்கும் அடுத்தவர்களுக்கு வழி விடுங்கன்னு. ஒருத்தரை ஒருத்தர் போட்டி போட்டுக்கிட்டு முந்தாதீங்க. அண்ணாமலையாருக்கு காணிக்கை செலுத்துங்கன்னு அந்த குளிரிலும் சிவனடியாரது குரல் கணீர்ன்னு கேட்டுச்சு.


நாங்களும் பயபக்தியோடு அங்க இருந்த தற்காலிக உண்டியலில் காசு போட்டுட்டு, விளக்கில் இருந்து வழிந்த நெய்யை அவர்கள் ஒரு சிறிய பாட்டிலில் பிடித்து தர, அந்த புனிதமான நெய்யை வீட்டுக்காக கொண்டு வாங்கிக்கிட்டோம். வீட்டில்  இருந்து லைவ் டெலிகாஸ்ட்ல பார்த்துக்கிட்டு இருந்த என்னை. மலைமீது வரை வர உடல் வலுவும், மனதைரியத்தையும் தந்த இறைவனுக்கு  நன்றி சொல்லி தீபத்தை வணங்கினோம் .  
குளிரிலயும், பனித்துளிகளுக்கிடையிலும் எந்த பாதிப்பும் இல்லாம ஆரவாரத்தோடும் கம்பீரமா, அடிமுடி காண முடியாத ஜோதிமயமானவனே தீபம் ரூபம் கொண்டு “மகாதீப”மாய்  பிரகாசித்து, அங்கு வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.
நாங்களும் மனமுருக தீபத்தை கும்பிட்டு, கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக்கிட்டு அடுத்து வரும் பக்தர்கள் கூட்டத்திற்கு இடம் விட்டு கீழ இறங்க ஆரம்பித்தோம்.
நாங்க இறங்க ஆரம்பிக்கும்போதே லேசா விடிய ஆரம்பிச்சிடுச்சு. இளங்காலை வெளிச்சத்துல மின் விளக்கு அலங்காரத்தில் கோவில் ஜொலிச்சுது. மலை இறங்க ஆரம்பிச்சோம்.
விடிந்தும் விடியாத அந்த் அதிகாலை பொழுதிலும் பக்தர்கள் உற்சாகமா மலை ஏறியும், இறங்கிட்டயும் இருந்தாந்தாங்க.  மலைப்பாதையில் இருக்கும் சின்ன சின்ன கல்லுலாம் காலை பதம் பார்த்துச்சு. மலை மேல ஏறும்போது இந்த அவஸ்தை தெரில. 
நாங்க முழுசா மலை இறங்கும் முன்னமயே அண்ணாமலையார் கோவிலில் இருந்த மின்விளக்குகள்லாம் அணைச்சுட்டாங்க. நீங்க விளக்கையெல்லாம் அணைச்சு இருட்டாக்கிட்டாலும் நான் இருக்கேன் இறைவன் இருக்கும் இடம் காட்ட வெளிச்சம் நான் தருகிறேன் என ஆதவன் நல்லா ஒளிவீச ஆரம்பிச்சுட்டான். ஜோதிரூபமான இறைவனும், அவன் அம்சமான மலையும் ஆதவனின் வெம்மையை தாங்க முடியும். நம்மால முடியுமா?! எப்படா மலையை விட்டு இறங்குவோம்ன்னு ஆயிடுச்சு. அடிக்கடி மரநிழல் தேடி ஒதுங்க வேண்டியதாகிடுச்சு.
நின்ற இடத்துல இருந்து திரும்பி பார்த்தோம். ஐயோ! இவ்வளவு பெரிய மலையிலா நாம் ஏறி இறங்கினோம்”ன்னு நினைக்கும்போது, அதற்கு சக்தியும், அவனை தரிசிக்கும் புண்ணியத்தையும் கொடுத்த இறைவனுக்கு நன்றி கூறி அங்க இருந்தே திருக்கோவிலின் முழு கோபுர தரிசனத்தையும் கண்டுகளித்தோம். 
இங்க இருந்து பார்க்க நகரத்தின் அழகும், முழுகோவிலும், எல்லா கோபுரங்களும், ஒரே நேர்கோட்டில் தரிசனம் செய்ய முடிந்தது .
வெயில் நல்ல சுட்டெரிக்க ஆரம்பிச்சுடுச்சு. ஆனாலும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் அண்ணாமலையாரை தரிசிக்க தீப வடிவில் தரிசிக்க எதையும் பொருட்படுத்தாது மலை ஏறிக்கிட்டிருந்தாங்க.
ஒருவழியா, மலையடிவாரத்துக்கு வந்துட்டோம். அங்க, மலையடிவாரத்தில் முலைப்பால் தீர்த்தத்தில் முகம் கைகால் நனைத்து, நாங்க போன வழியில் இருக்கும்  பீம தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், பாத தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும். அல்லிச்சுனை, அரளிச்சுனை, வழுக்குப்பாறைச் சுனை, அரசன் சுனை, மயிலாடும்பாறைச் சுனை, ஊத்துக்குட்டைச் சுனை, பவழக்குன்றுச் சுனை,  கழுதைக்குறத்திச் சுனை, சாரங்கன் சுனை, கரடிச் சுனை, தனக்கமரத்துச் சுனை, புங்கமரத்துச் சுனை, நெல்லிமரத்துச் சுனை, ஆலமரத்துச் சுனை, குமார சுனை, கல்சுத்தி மரத்துச் சுனை. இதுமட்டுமில்லாம ஆள் இறங்கிக் குளித்திடும் அளவுக்கான தொல்லாங்கன் சுனை, இடுக்குச்சுனை, வலக்கையால் பாறையைப் பிடித்து இடக்கையால் மட்டுமே நீர் அருந்தும் ஒறட்டுக்கை சுனைலாம் இரவில் தரிசிக்க முடியாமல் போனது.
மலையடிவாரத்துல ”குகை நமசிவாயம்  கோவிலி”ன் அருகே உள்ள ஆஸ்ரமங்களில் காலையில் அன்னதானம் சிறப்பாக செய்து இருந்தனர். சாம்பார் சாதம், தயிர் சாதம், பிரிஞ்சு சாதம் என ஃபுல் கட்டு கட்டிட்டு அங்கிருந்து கிளம்பினோம். அடுத்து எங்களுக்கு தரிசனம் தர சீக்கிரம் கூப்பிடுப்பான்னு வீட்டுக்கு வர வண்டி பிடிச்சோம்.

போன கார்த்திகை தீபத்தின்போது எடுத்த படங்கள் இப்போதான் பதிவிட முடிஞ்சது.

Monday, November 23, 2015

பெற்ற தாய் உசத்தியா?! இல்ல வளர்ப்பு தாய் உசத்தியா?! -ஐஞ்சுவை அவியல்

ஏய் புள்ள! என்ன மூஞ்சிய தூக்கி வச்சிருக்கே!! தீபாவளிக்குதான் நீ கேட்ட புடவையும், நகையும் வாங்கி  கொடுத்துட்டேனே! அப்புறம் என்ன?!

அது ஒண்ணுமில்லீங்க மாமா! காலைல பேப்பர் பார்த்தேனா?! அதான் மனசு கஷ்டமா போச்சு.

ஏன்?! என்ன ஆச்சு?! 

இப்போ குறைஞ்ச தங்கம் விலை முன்னமே குறைஞ்சிருந்தா இன்னும் ரெண்டு கிராம் கூட எடுத்திருக்கலாம்ன்னு நினைப்போ!?

அதுலாம் இல்ல மாமா! எப்போ பாரு என்னை தப்பாவே நினைங்க. நம்ம ஊருல இருக்கும் கான்வெண்ட் ஸ்கூல்கிட்டக்க நேத்து சாயங்காலம் 4 மணிக்கு குழந்தையோட அழுகுரல் கேட்டுச்சுன்னு அக்கம் பக்கத்திலிருக்குறவங்க போய் பார்த்திருக்காங்க. அங்க பொறந்து கொஞ்ச நேரமே ஆன ஆம்புள குழந்தை ஒண்ணு மழைல நனைஞ்சுக்கிட்டு ரோட்டோரம் கிடந்துச்சாம். 

ஐயோ! அப்புறம்?!

அதோட காலும் கையும் வளைஞ்சு போய் ஊனமுற்று கிடந்துச்சாம் மாமா! அதான் அதைக் கொண்டாந்து ரோட்டோரம் வீசிட்டு போய்ட்டாங்க போல!!

அடச்சே! குழந்தை ஊனத்தோடு பொறந்தா ரோட்டோரம் வீசி எறியலாமா?! டாக்டர்கிட்ட காட்டி குணப்படுத்த பார்க்கலாம் இல்லன்னா உதவி  செய்யுறவங்கக்கிட்ட கொடுத்திருக்கலாம். பாவம் அந்த குழந்தை!!!

ம்ம்ம் பெத்தவங்களே கவனிக்க தயங்கும்போது வேற யாரு மாமா இப்படிப்பட்ட குழந்தையை பார்த்துக்குவாங்க?!

நல்ல உள்ளங்கள் இன்னமும் இருக்காங்க புள்ள. கோவைல இருக்கும் சுரேஷ்சந்திர பட், விஜயலட்சுமின்ற தம்பதிகள்தான் அதுக்கு உதாரணம். 

அப்படி என்ன பண்ணிட்டாங்க அவங்க ரெண்டு பேரும்?!

அவங்களுக்கு கல்யாணம் ஆகி 15 வருசமாகியும் குழந்தை இல்ல. எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் குழந்தை இல்ல. அதனால எங்கெல்லாமோ தேடி கேரளாவுல இருக்கும் ஒரு ஆசிஓரமத்திலிருந்து ஒரு குழந்தையை எல்லா மெடிக்கல் செக்கப்பும் செஞ்சு நார்மல்ன்னு ரிசல்ட் வந்தப்பின் தத்தெடுத்து அஜய்ன்னு பேர் வச்சி வளர்த்திருக்காங்க. தவழ ஆரம்பிச்ச குழந்தை அப்புறம் நடக்கவே இல்ல. என்ன ஏதுன்னு டாக்டர்கிட்ட கூட்டிப் போனப்பின் “செரிப்ரல் பால்சி”ன்ற நோய் இருக்குறது கண்டுப்பிடிச்சிருக்காங்க.





ஐயோ! அப்புறம் குழந்தைய என்ன செஞ்சாங்க. மீண்டும் ஆசிரமத்துக்கே குடுத்துட்டாங்களா!?

அதான் இல்ல. முறைப்படி ஆசிரத்துக்கு இந்த தகவலை தெரியப்படுத்தி இருக்காங்க. அவங்க குழந்தையை எங்கக்கிட்ட கொடுத்துடுங்கன்னு சொல்லி இருக்காங்க. அதுக்கு அந்த ஜோடி, இவன் எங்களுக்கு கிடைச்சு, இவனை பார்த்துக்கனும்ன்னுதான் எங்களுக்கு கடவுள் கட்டளைப் போல! அதான் இத்தனை வருசம் கழிச்சு இவன் எங்களுக்கு கிடைச்சிருக்கான். அதனால, நாங்களே இவனை வளர்த்துக்குறோம்ன்னு சொல்லி அவனை ஒரு இளவரசன் போல வளர்த்து வர்றங்களாம். அவள் விகடன் அவங்களைப் பத்தி ஒரு கட்டுரை வந்திருக்கு. 

அப்படியா! நிஜமாவே நல்ல மனுசங்கதான் மாமா! அப்புறம் நாம தினமும் போடுற பெட்ரோல்ல எப்படி கொள்ளை அடிக்குறங்கன்னு மூஞ்சிபுக்குல படிச்சேன். நீங்க படிச்சீங்களா?!

ம்ம் படிச்சேன் புள்ள. நாம 100ரூபாக்கு பெட்ரோல் போடச் சொன்னா, அவங்களும் மானிட்டர்ல 100ரூபான்னு அழுத்தி விட்டுடுவாங்க. ஆனா, 90 ரூபா வந்ததும், பெட்ரோல் போடுறவர் தன் கையில் இருக்கும் பம்ப்ல இருக்கும் ப்ரேக்கை ஒரு அழுத்து அழுத்தி ரிலீஸ் பண்ணுவார். அப்படி பண்ணா பெட்ரோல் மெதுவா இறங்கி நமக்கு 100ரூபாய்க்கு பெட்ரோல் போட்டதா காட்டும். ஆனா, அப்படி பண்ணும்போது மீட்டர்  recalibration  ஆகி நமக்கு குறைவான அளவு பெட்ரோல்தான் கிடைக்கும். இதுனால, 5 முதல் 10 ரூபா நமக்கு நஷ்டமாகுமாம். 

இனிமே பெட்ரோல் போடும்போது நீங்களும் கவனமா இருங்க மாமா!

சரி புள்ள. மூஞ்சி புத்தகத்துல இந்த படத்தை பார்த்ததும் என்னை வெட்கப்பட வைச்சுது. ஆஃபீஸ் உஎதிர்பார்த்துக்கிட்டு இருக்கோம். ஆனா, கால் இல்லாத பெரியவர் ஒருத்தர் விவசாயம் செய்யுறார். அவர் வணக்கத்துரியவர் இல்லியா?!


ம்ம்ம் நிஜம்தான் மாமா. நம்ம உறவுகள் எப்படி இருக்குன்னு மூஞ்சி புக்குல ஒருத்தர் போட்டிருக்கார். அதையும் பாருங்க...,  கார்த்திகை பண்டிகை வருது. எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் போறேன்.....,