Monday, August 01, 2016

பொண்டாட்டி மனசு கோணாம நடந்துக்க பத்து டிப்ஸ் - ஐஞ்சுவை அவியல்.


ஏய் ராஜி! வா! வா! பார்த்து எத்தனை நாள் ஆச்சு?! எப்பிடி இருக்கே?!

நல்லா இருக்கேன்பா! கொஞ்ச நாளா மூஞ்சி புக்கை படிச்சுட்டு இருந்ததால இந்த பக்கம் வரல.  ஆனாலும், என் சுக,துக்கங்களில் பங்கெடுத்துக்கும்  என் உயிர் தோழி நீதானே!! அதான் உன்னை பார்க்க வந்துட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேன். 

சரி எப்படியோ! வந்ததுட்டே! இனி அடிக்கடி வரனும்..

எனக்கும் உன்னை விட்டா ஏது போக்கிடம்?! இனி கண்டிப்பா அடிக்கடி வருவேன்.

சரி, நாம வம்பு பேசி ரொம்ப நாளாச்சு ராஜி! புதுசா எதாவது சொல்லேன் .  

அப்துல் கலாம் ஐயா எவ்வளவு சாஃப்டான ஆளுன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்ல?! ஆனாலும் அவரும் ஒருத்தர்க்கிட்ட கோவப்பட்டிருக்கார். கோவப்பட்டதுமில்லாம இப்படி செஞ்சே ஆகனும்ன்னு தன்னோட வேலைக்காக மிரட்டியும் இருக்கார்.

இதென்ன புதுக்கதை?! கலாம் ஐயாவோட முதலாமாண்டு நினைவு நாள்ல எதையாவது உளறிட்டு வம்புல மாட்டிக்காத ராஜி!

எரும! எரும! நான் சொல்றது முழுக்க முழுக்க உண்மை... ஈரோடுல ஒரு நிகழ்ச்சில கலாம் ஐயாக்கு, மேடைல வெச்சு கிரைண்டர்     கம்பெனிக்காரங்க ஒரு கிரைண்டரை பரிசா கொடுத்திருக்காங்க. எதையும் கிஃப்டா வாங்குறதில்லைன்ற எப்பவுமே உறுதியா இருப்பார் கலாம் ஐயா. ஆனா, அந்த நேரத்துல அவருக்கொரு கிரைண்டரும் தேவைப்பட்டிருக்கு. அதனால, அந்த கிரைண்டருக்குண்டான விலையை வாங்கிக்கிட்டா தானும் அந்த கிரைண்டரை வாங்கிக்குறதா சொல்லி இருக்கார்.

கொஞ்சம் ஏமாற்றமடைஞ்சாலும் தங்கள் பொருள் கலாம் ஐயா வீட்டில் எந்தவிதத்திலியாவது இருந்தா சந்தோசம்தான்னு பைசா வாங்கிக்க சம்மதிச்சிருக்காங்க. கலாம் ஐயா கிரைண்டர் விலையான நாலாயிரத்து எண்ணூத்தி ஐம்பது ரூபாய்க்குண்டான செக்கை கொடுத்துட்டு டெல்லிக்கு போய்ட்டார். செக் வாங்குன கிரைண்டர் கம்பெனிக்காரங்க அதை, பேங்குல போடாம கலாம் ஐயாவோட நினைவா அந்த செக்கை பத்திரமா வச்சிக்கிட்டாங்களாம்.

இது ரெண்டு  மாசம் கழிச்சு கலாம் ஐயா கவனத்துக்கு வந்திருக்கு. உடனே, கிரைண்டர் கம்பெனிக்கு போன் பண்ணி, செக்கை பேங்க்ல போட்டு காசு எடுத்துக்கனும்... இல்லன்னா உங்க கிரைண்டர் உங்களுக்கு திருப்பி அனுப்பிடுவேன்னு மிரட்டி இருக்கார். கிரைண்டர் கம்பெனிக்காரங்க இதை எதிர்ப்பார்க்கல. உடனே, செக்கை பேங்க்ல போட்டு காசு எடுத்துக்கிட்டாங்க.

அப்படியா ராஜி!! எப்பேர்ப்பட்ட மனுசன்?! ஒரு கவுன்சிலர் கூட எத்தனையோ லட்சங்களை சுருட்டுறான். 



வாம்மா ராஜி! எப்படிம்மா இருக்கே?! ரொம்ப நாளாச்சே இந்த பக்கம் வந்து...  தோழிகள் ரெண்டு பேரும் அரட்டையடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா?! 

நல்லா இருக்கேன்ண்ணே!  நீங்க எப்பிடிண்ணே இருக்கீங்க?! உன் ஃப்ரெண்டை கட்டிக்கிட்ட நான் எப்பிடி நல்லா இருப்பேன்?! எப்ப பாரு சண்டை போட்டுக்கிட்டு இருக்கா. நீதான் புத்தி சொல்லிட்டு போகனும். 

அதெல்லாம் பெரிய விசயமில்லண்ணே! மொத்தமே பத்து விசயங்களை நீங்க கடைப்பிடிச்சா அவ ஏன் சண்டை போடுறா?!

என்னம்மா அந்த பத்து விசயம்?!

1. பொண்டாட்டி செய்யுற சின்ன சின்ன தப்புகளை சொல்லி திட்டாதீங்க. நிதானமா பக்குவமா எடுத்து சொல்லுங்க.
2.  பொண்டாட்டியை பார்க்கும்போது உர்ர்ருன்னு இல்லாம லேசா சிரிச்சு வைங்க. நீங்க சிரிக்குறதை பார்த்து அவளும் தன்னோட கோவத்தை மறந்திடுவா. 
3. முக்கியமான வேலைல இருக்கும்ப்ஓது தொணதொணன்னு பேசாம வேலை முடிஞ்சதுக்கு பின்னாடி அது பத்தி பேசுங்க.
4. வேலைக்கு போற பொண்ணா இருந்தா அங்க என்ன நடந்துச்சுன்னு கேட்டு தெரிஞ்சுக்கோங்க. நீங்களும் உங்க வேலை இடத்துல நடந்ததை பத்தி சொல்லுங்க.
5. பொண்டாட்டி செய்யுற சின்ன சின்ன விசயத்துக்கு கூட நன்றி சொல்லுங்க. அதே மாதிரி தப்பு செஞ்சீங்கன்னா, உடனே மன்னிப்பு கேளுங்க. தப்பில்ல.
6. பொண்டாட்டி செஞ்ச தப்புக்களை சொல்லி காட்டிக்கிட்டே இருக்காதீங்க. அதேமாதிரி அவங்க பொறந்த வீட்டை பத்தி விளையாட்டுக்கூட குத்தம் சொல்லாதீங்க.
7. பொண்டாட்டியை அடிக்கடி இல்லன்னாலும் எப்பவாச்சும் கூட்டி போங்க. 
8.எதை பத்தியாவது பேசும்போது பிடிவாதமா இல்லாம பொண்டாட்டி சொல்லுறதை காது கொடுத்து கேளுங்க. 
9. பொண்டாட்டி எதாவது கேட்டா முடிஞ்சா உடனே வாங்கி கொடுங்க. இல்லன்னா உண்மையான காரணம் சொல்லி இதமா மறுப்பு சொல்லுங்க.
10. மத்தவங்க எதிர்க்க குறை சொல்லாதீங்க. தனியா அழைச்சுட்டு போயி எடுத்து சொல்லுங்க.

அம்மா தாயி! இம்புட்டு செய்யனுமா?! பொண்டாட்டியை வழிக்கு கொண்டு வர!!??

ஆமாண்ணே! அட்வைஸ்  செஞ்சு போரடிச்சுட்டேனோ?! சரி, உங்க ரிலாக்சுக்கு வாட்ஸ் அப்புல வந்த ஒரு படம் காட்டுறென் பாருங்க.

ஏய் எரும! அண்ணனுக்கு ஒரு படம் காட்டுன மாதிரி உனக்கு ஒரு விடுகதை கேக்குறேன் சொல்லு...

சில இடங்களில் சுவற்றில் இருக்கும்
இதை, 
உரக்க வாசித்தாலே உடைஞ்சி போயிடும்.  
அது என்ன?!

ஏய் ராஜி?! எங்களுக்குலாம் ஒரு வேலை கொடுத்தியே! இப்ப உனக்கொரு வேலை நான் கொடுக்குறேன். நீ சொல்லு பார்க்கலாம்!!


நூறு பூஜ்ஜியங்களைகொண்ட எண்களை என்னன்னு சொல்லுவாங்க?!

இது தெரியாதா?! ஆனா, இரு என் சகோ’ஸ் யாராவது சொல்றாங்களான்னு பார்க்கலாம்!!