Thursday, February 10, 2011

பிறிதொரு பிறவியில்...,


ஔவ்வை மொழிக்கேற்ப அறிய மானிடப் பிறவி வேண்டும்...,
கூன், குருடு, செவிடு இல்லாமல் பிறத்தல் வேண்டும்...,
பூரண ஆரோக்கியத்துடன், நீள் ஆயுளும் வேண்டும்..,
புதுவரவான என்னை வரவேற்கும் உறவுகள் வேண்டும்..,
துள்ளி திரிந்து களிக்கும் பால்யப் பருவம் வேண்டும்...,

அன்னை பிதா கடவுளெனப் போற்ற வேண்டும்..
ஆலயங்கள் தொழும் கடமை வேண்டும்....,
பருவத்தே ஞானத்தை பெறுகின்ற கல்வி வேண்டும்..,
எம்மொழியாகிலும் தாய்மொழியில் தனியன்பு வேண்டும்...,
என்னாட்டில் வசிப்பினும் தாய்நாட்டின்மீது தனிப் பற்று வேண்டும்..,

லட்சியம் என்றொன்று இருக்க வேண்டும்...,
அலட்சியம் இல்லாமல் அதை வெல்ல வேண்டும்..,
கவர்ச்சியில் தொலைந்து போகா கவனம் வேண்டும்...,
கள்ளமில்லா குழந்தை உள்ளம் வேண்டும்..,

விதிமேல் பழிப்போடாமல் மதியோடு வாழ்ந்திடல் வேண்டும்..,
மதம் ஒண்று, இனம் ஒன்று என்று எண்ணிடல் வேண்டும்...,
ஒற்றுமையே மனதில் ஒங்க வேண்டும்..,
பேதங்கள் அற்ற வாழ்க்கை வேண்டும்..,
வேதங்களை நம்புகின்ற‌ பக்தி வேண்டும்..,

துன்பத்தில் துணைவரும் நல்ல நட்பு வேண்டும்..,
உயிரினம் எதாகிலும் இரங்க வேண்டும்..,
பிறர் துன்பத்தில் பங்கேற்கும் மனது வேண்டும்..,
எவன் அழுதாலும் இறங்கித் துடைக்கும் விரல் வேண்டும்..,
மன்னிக்கும் மனம் வேண்டும்..,

இளமையில் காதல் வேண்டும்..,
காதலும் திருமணத்தில் கைகூட வேண்டும்..,
தயங்காமல் கூடி, தமிழ் பாடி ஆட வேண்டும்...,
ஆசைக்கு ஒன்று, ஆஸ்திக்கு ஒன்றாய் வேண்டும்..,

வீடு, மனை, பசு என பதினாறு பேறுகள் வேண்டும்..,
ஒருத்திக்கு ஒருவனாய் வாழ்ந்திடல் வேண்டும்..,
பண்பாடு காக்கும் பக்குவம் வேண்டும்..,
கலாச்சாரமும் கைவர வேண்டும்..,
மோகத்தை வெல்லுகின்ற மனம் வேண்டும்...,

தேவையற்ற தெருபெச்சு பேசாத நா வேண்டும்..,
தேவையற்ற தெருப் பார்வை பாராத பார்வை வேண்டும்..,
தமிழை வதம் செய்து வெல்ல வேண்டும்..,
ஏமாற்றத்தை ஏற்கும் இதயம் வேண்டும்..,

முதுமையிலும் விளையாடும் இளமை வேண்டும்..,
இருக்கும்வரை பாவங்கள் செய்யாத வாழ்க்கை வேண்டும்..,
இறக்கும்போது பிரிவுத் துயரை கண்ணில் ஏந்தும் இணை வேண்டும்...,
தூக்கத்திலேயே வலியில்லா மரணம் வேண்டும்...,
இறந்தாலும் இருக்கின்ற புகழ் வேண்டும்..,

அட, இவற்றைஎல்லாம் நான் சுகிக்க..??!!
பிறிதொரு பிறவியில்...,
இணையாய், தோழனாய், எல்லாமுமாய்
நீ வேண்டும்..,
கண்டிப்பாய் நீ வேண்டும்..,
கண்டிப்பாய் என்னருகில் நீ வேண்டும்...,
கண்டிப்பாய் என்னருகில் நீ மட்டுமே வேண்டும்...,

6 comments:

  1. சண்டே புது பட டிக்கெட் கிடைக்க வேண்டும்

    கூட படத்துக்கு வர கேர்ள் பிரண்டு கிடைக்க வேண்டும்

    தினமும் ஓசி சோறு கிடைக்க வேண்டும்

    ReplyDelete
  2. @ ரமேஷ்.,

    // சண்டே புது பட டிக்கெட் கிடைக்க வேண்டும்

    கூட படத்துக்கு வர கேர்ள் பிரண்டு கிடைக்க
    வேண்டும் //

    எங்க பக்கத்து பாட்டி..

    " தம்பி.. வர்ற ஞாயித்துகிழமை
    என்னை புது படத்துக்கு கூட்டிட்டு போறீயா..? "

    " உங்களுக்கு கண்ணே தெரியல.. இதுல
    எப்படி பாட்டி சினிமா பாப்பீங்க..? "

    " நீ கூட்டிட்டு போலைன்னா போ.. நான்
    எப்பவும் போல ரமேஷ் கூடவே இந்த வாரமும்
    சினிமா போயிக்கிறேன்..!! "

    என்ன ரமேஷூ.. இதுதானா உங்க
    கேர்ள் பிரண்ட்..???

    ReplyDelete
  3. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

    சண்டே புது பட டிக்கெட் கிடைக்க வேண்டும்

    கூட படத்துக்கு வர கேர்ள் பிரண்டு கிடைக்க வேண்டும்

    தினமும் ஓசி சோறு கிடைக்க வேண்டும்


    எனக்கு வேணுங்கறதை நான் கேட்டேன். ரமேசுக்கு வேணுங்கறதை அவர் கேட்டார் (கேர்ள் ஃப்ரெண்ட், ஓசி சாப்பாடுனு புத்தி போகுது பார்).

    ReplyDelete
  4. வெங்கட் கூறியது...

    @ ரமேஷ்.,

    // சண்டே புது பட டிக்கெட் கிடைக்க வேண்டும்

    கூட படத்துக்கு வர கேர்ள் பிரண்டு கிடைக்க
    வேண்டும் //

    எங்க பக்கத்து பாட்டி..

    " தம்பி.. வர்ற ஞாயித்துகிழமை
    என்னை புது படத்துக்கு கூட்டிட்டு போறீயா..? "

    " உங்களுக்கு கண்ணே தெரியல.. இதுல
    எப்படி பாட்டி சினிமா பாப்பீங்க..? "

    " நீ கூட்டிட்டு போலைன்னா போ.. நான்
    எப்பவும் போல ரமேஷ் கூடவே இந்த வாரமும்
    சினிமா போயிக்கிறேன்..!! "

    என்ன ரமேஷூ.. இதுதானா உங்க
    கேர்ள் பிரண்ட்..???
    ////////////////////////
    மத்தவங்களையும் ஏன் விட்டுடுட்டீங்க வெங்கட். மத்தவங்களெல்லாம் உங்ககுக்கு தெரியாதா? நான் சொல்லவா?
    ///////////////////

    ReplyDelete
  5. அடேங்கப்பா.. எம்மாம்பெரிய கவிதை..

    ReplyDelete