Saturday, October 27, 2012

உன்னை அறிந்தால்.....,


                                                      
கண்ணில் காண்பதெல்லாம்!!
கனவென்று நம்பாதே...,
காணாத கனவுகளும்!!
நனவாகிப் போகலாம்...,



நிகழ்கால நிழலில்,
 மட்டும் ஓய்வெடுக்க எண்ணாதே...,
எதிர்கால மர நிழலில்,
 மட்டும் ஓய்வெடுக்க எண்ணாதே...,
இறந்தக் கால தென்றல் காற்றின்...,
இதமான அரவணைப்பில் ஓய்வெடு....,



கண்களை மூடித் திறக்குமுன்..,
உன் கற்பனைகளை திறந்து விடு...,
பூக்களின் வாசனையை நுகர்வது தப்பில்லை..., 
அதிலுள்ள முட்களின் வேதனையை புரிந்துக் கொள்...,


புன்னைகையே மட்டுமே 
வாழ்க்கையல்ல...,
பூகம்பமும் வரும்..,
 எதிர் கொள்ள தயராகு!!


நீ விதைத்ததை...,
 நீயே அறுவடை செய்துக் கொள்ள்ள வேண்டும்...,
அன்று கொல்லாவிடினும்..., 
நின்றாவது கொல்லும்..., 
மாற்றான் துயரம் மட்டுமல்ல!!??
மதுவும், மாதுவும் கூடத்தான்.....,


மற்றவர் கண்களில் தெரிவது,
 கண்ணீரென்று மட்டும் எண்ணாதே...,
விஷமாவும், கேலியாகவும், 
விஷமமாகவும்..., ஏன்? உனக்கென
தோண்டப்பட்ட புதை குழியாவும் கூட இருக்கலாம்...,

உனக்கென ஒரு பாதை.....,
 உனக்கென ஒரு பயணம் .....,
உன்னோடு சில பயணிகள்....,
தேர்வு உன் கையில்!!??


இது நீ ”பிறந்த நாள்” அல்ல..,
உன்னை நீ நன்கு உணர்ந்த நாள்”,  ஆயின்...,
உன்னை எண்ணி பூரிப்பதில் 
தோழி நானும் ஒருத்தி உண்டு...,
  
பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்களுடன்...,  


13 comments:

  1. தோழியின் பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை தன்னம்பிக்கையும் எச்சரிக்கையும் எடுத்துச் சொல்கிறது.முகநூல் டிவிட்டர் தோழி யாய் இருந்தால் இன்னும் எச்சரிக்கையாய் இருக்கணும்

    ReplyDelete
  2. தன்னம்பிக்கை நிறைந்த கவிதை வரிகள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பயன் மிக்க நற்கருத்துக்கள் பிறந்த நாள் வாழ்த்து வடிவில். அருமை.

    ReplyDelete
  4. அருமையான தன்னம்பிக்கை வரிகள் சகோதரி... சந்தோசம்... வாழ்த்துக்கள்...

    நன்றி...
    tm4

    ReplyDelete
  5. உனக்கென ஒரு பாதை
    உனக்கென ஒரு பயணம்
    உன்னோடு சில பயணிகள்
    தேர்வு உன் கையில்

    அருமை வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. புன்னைகையே மட்டுமே
    வாழ்க்கையல்ல...,
    பூகம்பமும் வரும்..,
     எதிர் கொள்ள தயராகு!! /// இதை நாம் புரிந்து கொண்டு எப்பவுமே அலர்ட்டா இருந்தா வாழ்க்கைய நல்லாவே எதிர்கொள்ள முடியும்!

    tm6

    ReplyDelete
  7. புன்னகை மட்டும் வாழ்க்கையல்ல.. ஆமாங்க இப்போ சுனாமியெல்லாம் கூட வருது. கவிதை வரிகள் உணர்ச்சிகரமாகவும் உள்ளது.

    ReplyDelete
  8. தன்னம்பிக்கை வரிகள்.

    ReplyDelete
  9. // புன்னைகையே மட்டுமே
    வாழ்க்கையல்ல...,
    பூகம்பமும் வரும்..,
    எதிர் கொள்ள தயராகு!!//

    - உண்மை. அருமை.

    ReplyDelete
  10. அருமையான தன்னம்பிக்கை கவிதை வரிகள். வாழ்த்துக்கள் ராஜி..

    ReplyDelete
  11. உனக்கு வந்தா ரத்தம்
    எனக்கு வந்தா தக்காளி சட்னியா..:)

    அழகான வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete