Monday, December 24, 2012

மார்கழி திங்கள் - ஐஞ்சுவை அவியல்




மார்கழி மாசம் பொறக்குறதுக்கு முதல் நாளே (எந்த ஆஸ்பத்திரி, டேட் என்ன, பெத்தவங்க யாருன்னு கும்முனீங்க அப்புறம் நடக்குறதே வேற...,) ஸ்கூல் விட்டு வரும்போதே முள், புதர்ன்னு பார்க்காம பூசணிப்பூ கிள்ளி வந்து, 8 மணிக்கு எந்திரிச்சு பழக்கமில்லாதவ 5 மணிக்குலாம் எழுந்து.., வாசல அடைச்சு கோலம் போட்டு,  பசு சாணத்துலாம் பிள்ளையார் பிடிச்சு வெச்சி, பூசணிப்பூ, விளக்குலாம் வெச்சு பூஜை பண்ணுவோம்.

                                     

மார்கழி மாச முப்பது நாளும், பெருசாவும்,  ஒரு நாளைக்கு போட்ட கோலத்தை மறுபடியும் போடக் கூடாதுன்னும், அதிகமா யாரு பிள்ளையார் பிடிச்சு வெச்சு பூசணி பூ வெக்குறாங்கன்னும்.., எங்களுக்குள் போட்டியே நடக்கும். இதுக்காகவே, என்ன கோலம்? பூசணி பூ எங்க கிடைக்கும், கலர் என்ன குடுக்கலாம்ன்னு ஸ்கூல்ல கூட டிஸ்கஷன்லாம் நடக்கும். இப்போ, என் மகள்களை காலைல எழுப்பினா போம்மா!ன்னு அலுத்துக்குறாங்க.
                                      
ஆன்மீக காரணம்லாம் எனக்கு தெரியாது. ஆனா, 30நாட்களுக்கு தொடர்ந்து அதிகாலையில் எழுந்துக்க பழகினா அதுவே நமக்கு பழகிடும், ரெண்டாவது குனிஞ்சு நிமிர்ந்து கோலம் போடுறதால உடலுக்கு நல்ல உடற்பயிற்சி ஆச்சு, பிள்ளையார் பிடிச்சு சாமி கும்பிடுறதால மனசை ஒரு நிலைப்படுத்த தியானம் பண்ண மாதிரியும் ஆச்சு.இதுப்போன்ற விசயங்களில் இந்த காலத்து பிள்ளைகளுக்கு ஏன் ஆர்வம் இல்லைன்னு தெரியலை.     

                                    
 புது வருசம் பொறக்க இன்னும் சில நாட்களே இருக்கு.., எப்பவும் போல புது வருசத்துல செஞ்சே ஆகனும்ன்னு நினைச்சு சபதம் எடுக்குறதுக்குன்னு ஒரு லிஸ்டே இருக்கு. வழக்கம்போல புது வருசத்தன்னிக்கு சாமி படத்து முன்னாடி நின்னு சபதம் எடுத்துட்டு.., ரெண்டு நாளைக்கு தீவிரமா செஞ்சுட்டு மூணாவது நாளே சோம்பேறித் தனத்தால காத்துல பறக்க விட்டுட்டு.., எல்லா வருசத்தையும் போலவே 2013யும் ஓட்ட போறோம். இந்த லட்சணத்துல புது வருசத்தை கொண்டாட என்னென்ன பிளான் போடுறாங்கப்பா!?

 

 அந்தா!  இந்தான்னு ஒரு வழியா 21.12.2012 வந்தும் உலகம் அழியாம அப்படியே இருக்கு. பல வருசமா சொல்லியும் அசராம இருந்தும்.., நாட்கள் நெருங்க நெருங்க, வேலூர்ல ஒரு ஆட்டுக்கு மனுச தலையும், ஆட்டு உடலும் சேர்ந்த மாதிரி குட்டி போட்டிருக்கு.., சேலத்துல ஒரு பொண்ணு பிரசவிச்ச பெண் குழந்தை அம்மன் அருள் வந்து பேசி உலகம் அழியப் போகுதுன்னு கன்ஃபார்ம் பண்ணிடுச்சுன்னும்.., திருச்சில ஐஸ்கட்டி மழை பெஞ்சுது.., ஒவ்வொரு ஐஸ்கட்டியும் 2 கிலோ தேறும்ன்னு வந்த வதந்தியை கேட்டும் நம்பாத மனசு.., பிள்ளைகளை பார்த்ததும் கொஞ்சம் அரண்டுதான் போச்சு. எந்த பாவிப்பயலோ கரெக்டா அதே நேரத்துக்கா பட்டாசு வெடிச்சு பயமுறுத்தனும். அவன் தலையில இடி விழ...

 
 நீயா? நானா?வுல எங்க பிளாக்கர் மோகன்குமார் அண்ணா பேச போறார்ன்னு தெரியாம என் சின்ன பொண்ணுக்கிட்ட சொல்லிட்டேன். 8 மணிக்கே சாப்பிட்டு டிவி முன்னாடி உக்காந்துட்டா!! நிகழ்ச்சி ஆரம்பிச்சது எங்கேம்மா அங்கிள்ன்னு கேட்டு தொல்லை பண்ணா.., அது முதல் வரிசையில கோட் போட்ட பொண்ணு பக்கத்துல கத்தரிப்பூ சட்டை போட்டு, ஷூ போட்டிருக்காரே அவர்தான்ன்னுகாட்டினேன். கொஞ்சம் நேரம் உத்து பார்த்தவ..,

ம் ம் ம் உங்க சகோதரரும் உங்களை போலத்தானா?!ன்னு கேட்டா.. ஏன்ம்மா! அப்படி கேக்குறேன்னு கேட்டதுக்கு...., போட்டோ, விடியோல நிக்கும்போது செயின், நெக்லஸ்லாம் தெரியுற மாதிரிதானே போஸ் கொடுப்பே! அதேப்போல மோகன் அங்கிளும் தன் ஷூ நல்லா டிவில நல்லா தெரியனும்ன்னு காலை நீட்டிக்கிட்டு உக்காந்துக்கிட்டு இருக்காரு பாரு. ஆக மொத்தம் ரெண்டு பேரும் “ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்”தான் போலன்னு சொல்லிட்டு.., கடைசி வரை என்னோடு இருந்து நிகழ்ச்சியை பார்த்துட்டு தான் தூங்கினா.

11 comments:

  1. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தகவல தருகிறீங்க ,அதுக்காக மோகன் நபரையும் சேர்த்தா காலை வாருனும் இதை நீங்க சொன்நீகளா இல்லை உங்க பொண்ணுகிட்டே சொல்ல சொன்னீங்கலா

    ReplyDelete
  2. எங்கள் பதிவுலக பவர் ஸ்டாரை சாரி சுப்ரீம் ஸ்டாரை கேலி செய்து பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேளச்சேரி தலைப்பாகட்டி பிரியாணி கடை முன்பு ஆர்பாட்டம் நடைபெறும் என்பதை பசியுடன் தெரிவிக்கிறேன்

    ReplyDelete
  3. ஒவ்வொரு ஐஸ்கட்டியும் 2 கிலோ தேறும்ன்னு
    //////////
    தகவலை லேட்டா தெரிஞ்சுக்கிட்டேனே... முன்னாடி தெரிஞ்சிருந்தா ஒரு ஐஸ் மோல் ஸ்டார்ட் பண்ணியிருக்கலாம் :P

    இனிய நத்தார் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ப்ளாக் உலகில் உங்களுக்கும் எனக்கும் ஏதோ இனைபிரியாத தொடர்பு ஏற்படப் போகுதே தெரியவில்லை... :P
    விசயம் இருக்குது

    ReplyDelete
  5. நல்ல அருமையான கருத்துக்கள்! நாங்களும் ஒரு காலத்துல மார்கழி கோலம் போட தங்கைகளுக்கு ஹெல்ப் பண்ணியிருக்கோம்!

    ReplyDelete
  6. அவியல் அருமைங்கோவ்..

    ReplyDelete
  7. அருமையான தகவல்கள் சிலது இப்போதுதான் கேட்பது போல் இருக்கிறது, காலபோக்கில் எல்லாம் மறந்துவிடும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  8. கலக்குறிங்க சகோ ....

    ReplyDelete
  9. போட்டோ, விடியோல நிக்கும்போது செயின், நெக்லஸ்லாம் தெரியுற மாதிரிதானே போஸ் கொடுப்பே
    ///

    ஆஹா .. உண்மையை எப்படி போட்டு உடைத்துவிட்டதே பாப்பா

    ReplyDelete
  10. அவியல் சுவை.நாளை மறு நாள் ஏழு கறிக் கூட்டா?
    த.ம.7

    ReplyDelete
  11. 30நாட்களுக்கு தொடர்ந்து அதிகாலையில் எழுந்துக்க பழகினா அதுவே நமக்கு பழகிடும்,

    துளிர்த்திருக்கும் இனிய புத்தாண்டுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete