Showing posts with label ஐஞ்சுவை அவியல். Show all posts
Showing posts with label ஐஞ்சுவை அவியல். Show all posts

Monday, August 01, 2016

பொண்டாட்டி மனசு கோணாம நடந்துக்க பத்து டிப்ஸ் - ஐஞ்சுவை அவியல்.


ஏய் ராஜி! வா! வா! பார்த்து எத்தனை நாள் ஆச்சு?! எப்பிடி இருக்கே?!

நல்லா இருக்கேன்பா! கொஞ்ச நாளா மூஞ்சி புக்கை படிச்சுட்டு இருந்ததால இந்த பக்கம் வரல.  ஆனாலும், என் சுக,துக்கங்களில் பங்கெடுத்துக்கும்  என் உயிர் தோழி நீதானே!! அதான் உன்னை பார்க்க வந்துட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேன். 

சரி எப்படியோ! வந்ததுட்டே! இனி அடிக்கடி வரனும்..

எனக்கும் உன்னை விட்டா ஏது போக்கிடம்?! இனி கண்டிப்பா அடிக்கடி வருவேன்.

சரி, நாம வம்பு பேசி ரொம்ப நாளாச்சு ராஜி! புதுசா எதாவது சொல்லேன் .  

அப்துல் கலாம் ஐயா எவ்வளவு சாஃப்டான ஆளுன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்ல?! ஆனாலும் அவரும் ஒருத்தர்க்கிட்ட கோவப்பட்டிருக்கார். கோவப்பட்டதுமில்லாம இப்படி செஞ்சே ஆகனும்ன்னு தன்னோட வேலைக்காக மிரட்டியும் இருக்கார்.

இதென்ன புதுக்கதை?! கலாம் ஐயாவோட முதலாமாண்டு நினைவு நாள்ல எதையாவது உளறிட்டு வம்புல மாட்டிக்காத ராஜி!

எரும! எரும! நான் சொல்றது முழுக்க முழுக்க உண்மை... ஈரோடுல ஒரு நிகழ்ச்சில கலாம் ஐயாக்கு, மேடைல வெச்சு கிரைண்டர்     கம்பெனிக்காரங்க ஒரு கிரைண்டரை பரிசா கொடுத்திருக்காங்க. எதையும் கிஃப்டா வாங்குறதில்லைன்ற எப்பவுமே உறுதியா இருப்பார் கலாம் ஐயா. ஆனா, அந்த நேரத்துல அவருக்கொரு கிரைண்டரும் தேவைப்பட்டிருக்கு. அதனால, அந்த கிரைண்டருக்குண்டான விலையை வாங்கிக்கிட்டா தானும் அந்த கிரைண்டரை வாங்கிக்குறதா சொல்லி இருக்கார்.

கொஞ்சம் ஏமாற்றமடைஞ்சாலும் தங்கள் பொருள் கலாம் ஐயா வீட்டில் எந்தவிதத்திலியாவது இருந்தா சந்தோசம்தான்னு பைசா வாங்கிக்க சம்மதிச்சிருக்காங்க. கலாம் ஐயா கிரைண்டர் விலையான நாலாயிரத்து எண்ணூத்தி ஐம்பது ரூபாய்க்குண்டான செக்கை கொடுத்துட்டு டெல்லிக்கு போய்ட்டார். செக் வாங்குன கிரைண்டர் கம்பெனிக்காரங்க அதை, பேங்குல போடாம கலாம் ஐயாவோட நினைவா அந்த செக்கை பத்திரமா வச்சிக்கிட்டாங்களாம்.

இது ரெண்டு  மாசம் கழிச்சு கலாம் ஐயா கவனத்துக்கு வந்திருக்கு. உடனே, கிரைண்டர் கம்பெனிக்கு போன் பண்ணி, செக்கை பேங்க்ல போட்டு காசு எடுத்துக்கனும்... இல்லன்னா உங்க கிரைண்டர் உங்களுக்கு திருப்பி அனுப்பிடுவேன்னு மிரட்டி இருக்கார். கிரைண்டர் கம்பெனிக்காரங்க இதை எதிர்ப்பார்க்கல. உடனே, செக்கை பேங்க்ல போட்டு காசு எடுத்துக்கிட்டாங்க.

அப்படியா ராஜி!! எப்பேர்ப்பட்ட மனுசன்?! ஒரு கவுன்சிலர் கூட எத்தனையோ லட்சங்களை சுருட்டுறான். 



வாம்மா ராஜி! எப்படிம்மா இருக்கே?! ரொம்ப நாளாச்சே இந்த பக்கம் வந்து...  தோழிகள் ரெண்டு பேரும் அரட்டையடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா?! 

நல்லா இருக்கேன்ண்ணே!  நீங்க எப்பிடிண்ணே இருக்கீங்க?! உன் ஃப்ரெண்டை கட்டிக்கிட்ட நான் எப்பிடி நல்லா இருப்பேன்?! எப்ப பாரு சண்டை போட்டுக்கிட்டு இருக்கா. நீதான் புத்தி சொல்லிட்டு போகனும். 

அதெல்லாம் பெரிய விசயமில்லண்ணே! மொத்தமே பத்து விசயங்களை நீங்க கடைப்பிடிச்சா அவ ஏன் சண்டை போடுறா?!

என்னம்மா அந்த பத்து விசயம்?!

1. பொண்டாட்டி செய்யுற சின்ன சின்ன தப்புகளை சொல்லி திட்டாதீங்க. நிதானமா பக்குவமா எடுத்து சொல்லுங்க.
2.  பொண்டாட்டியை பார்க்கும்போது உர்ர்ருன்னு இல்லாம லேசா சிரிச்சு வைங்க. நீங்க சிரிக்குறதை பார்த்து அவளும் தன்னோட கோவத்தை மறந்திடுவா. 
3. முக்கியமான வேலைல இருக்கும்ப்ஓது தொணதொணன்னு பேசாம வேலை முடிஞ்சதுக்கு பின்னாடி அது பத்தி பேசுங்க.
4. வேலைக்கு போற பொண்ணா இருந்தா அங்க என்ன நடந்துச்சுன்னு கேட்டு தெரிஞ்சுக்கோங்க. நீங்களும் உங்க வேலை இடத்துல நடந்ததை பத்தி சொல்லுங்க.
5. பொண்டாட்டி செய்யுற சின்ன சின்ன விசயத்துக்கு கூட நன்றி சொல்லுங்க. அதே மாதிரி தப்பு செஞ்சீங்கன்னா, உடனே மன்னிப்பு கேளுங்க. தப்பில்ல.
6. பொண்டாட்டி செஞ்ச தப்புக்களை சொல்லி காட்டிக்கிட்டே இருக்காதீங்க. அதேமாதிரி அவங்க பொறந்த வீட்டை பத்தி விளையாட்டுக்கூட குத்தம் சொல்லாதீங்க.
7. பொண்டாட்டியை அடிக்கடி இல்லன்னாலும் எப்பவாச்சும் கூட்டி போங்க. 
8.எதை பத்தியாவது பேசும்போது பிடிவாதமா இல்லாம பொண்டாட்டி சொல்லுறதை காது கொடுத்து கேளுங்க. 
9. பொண்டாட்டி எதாவது கேட்டா முடிஞ்சா உடனே வாங்கி கொடுங்க. இல்லன்னா உண்மையான காரணம் சொல்லி இதமா மறுப்பு சொல்லுங்க.
10. மத்தவங்க எதிர்க்க குறை சொல்லாதீங்க. தனியா அழைச்சுட்டு போயி எடுத்து சொல்லுங்க.

அம்மா தாயி! இம்புட்டு செய்யனுமா?! பொண்டாட்டியை வழிக்கு கொண்டு வர!!??

ஆமாண்ணே! அட்வைஸ்  செஞ்சு போரடிச்சுட்டேனோ?! சரி, உங்க ரிலாக்சுக்கு வாட்ஸ் அப்புல வந்த ஒரு படம் காட்டுறென் பாருங்க.

ஏய் எரும! அண்ணனுக்கு ஒரு படம் காட்டுன மாதிரி உனக்கு ஒரு விடுகதை கேக்குறேன் சொல்லு...

சில இடங்களில் சுவற்றில் இருக்கும்
இதை, 
உரக்க வாசித்தாலே உடைஞ்சி போயிடும்.  
அது என்ன?!

ஏய் ராஜி?! எங்களுக்குலாம் ஒரு வேலை கொடுத்தியே! இப்ப உனக்கொரு வேலை நான் கொடுக்குறேன். நீ சொல்லு பார்க்கலாம்!!


நூறு பூஜ்ஜியங்களைகொண்ட எண்களை என்னன்னு சொல்லுவாங்க?!

இது தெரியாதா?! ஆனா, இரு என் சகோ’ஸ் யாராவது சொல்றாங்களான்னு பார்க்கலாம்!!

Monday, November 23, 2015

பெற்ற தாய் உசத்தியா?! இல்ல வளர்ப்பு தாய் உசத்தியா?! -ஐஞ்சுவை அவியல்

ஏய் புள்ள! என்ன மூஞ்சிய தூக்கி வச்சிருக்கே!! தீபாவளிக்குதான் நீ கேட்ட புடவையும், நகையும் வாங்கி  கொடுத்துட்டேனே! அப்புறம் என்ன?!

அது ஒண்ணுமில்லீங்க மாமா! காலைல பேப்பர் பார்த்தேனா?! அதான் மனசு கஷ்டமா போச்சு.

ஏன்?! என்ன ஆச்சு?! 

இப்போ குறைஞ்ச தங்கம் விலை முன்னமே குறைஞ்சிருந்தா இன்னும் ரெண்டு கிராம் கூட எடுத்திருக்கலாம்ன்னு நினைப்போ!?

அதுலாம் இல்ல மாமா! எப்போ பாரு என்னை தப்பாவே நினைங்க. நம்ம ஊருல இருக்கும் கான்வெண்ட் ஸ்கூல்கிட்டக்க நேத்து சாயங்காலம் 4 மணிக்கு குழந்தையோட அழுகுரல் கேட்டுச்சுன்னு அக்கம் பக்கத்திலிருக்குறவங்க போய் பார்த்திருக்காங்க. அங்க பொறந்து கொஞ்ச நேரமே ஆன ஆம்புள குழந்தை ஒண்ணு மழைல நனைஞ்சுக்கிட்டு ரோட்டோரம் கிடந்துச்சாம். 

ஐயோ! அப்புறம்?!

அதோட காலும் கையும் வளைஞ்சு போய் ஊனமுற்று கிடந்துச்சாம் மாமா! அதான் அதைக் கொண்டாந்து ரோட்டோரம் வீசிட்டு போய்ட்டாங்க போல!!

அடச்சே! குழந்தை ஊனத்தோடு பொறந்தா ரோட்டோரம் வீசி எறியலாமா?! டாக்டர்கிட்ட காட்டி குணப்படுத்த பார்க்கலாம் இல்லன்னா உதவி  செய்யுறவங்கக்கிட்ட கொடுத்திருக்கலாம். பாவம் அந்த குழந்தை!!!

ம்ம்ம் பெத்தவங்களே கவனிக்க தயங்கும்போது வேற யாரு மாமா இப்படிப்பட்ட குழந்தையை பார்த்துக்குவாங்க?!

நல்ல உள்ளங்கள் இன்னமும் இருக்காங்க புள்ள. கோவைல இருக்கும் சுரேஷ்சந்திர பட், விஜயலட்சுமின்ற தம்பதிகள்தான் அதுக்கு உதாரணம். 

அப்படி என்ன பண்ணிட்டாங்க அவங்க ரெண்டு பேரும்?!

அவங்களுக்கு கல்யாணம் ஆகி 15 வருசமாகியும் குழந்தை இல்ல. எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் குழந்தை இல்ல. அதனால எங்கெல்லாமோ தேடி கேரளாவுல இருக்கும் ஒரு ஆசிஓரமத்திலிருந்து ஒரு குழந்தையை எல்லா மெடிக்கல் செக்கப்பும் செஞ்சு நார்மல்ன்னு ரிசல்ட் வந்தப்பின் தத்தெடுத்து அஜய்ன்னு பேர் வச்சி வளர்த்திருக்காங்க. தவழ ஆரம்பிச்ச குழந்தை அப்புறம் நடக்கவே இல்ல. என்ன ஏதுன்னு டாக்டர்கிட்ட கூட்டிப் போனப்பின் “செரிப்ரல் பால்சி”ன்ற நோய் இருக்குறது கண்டுப்பிடிச்சிருக்காங்க.





ஐயோ! அப்புறம் குழந்தைய என்ன செஞ்சாங்க. மீண்டும் ஆசிரமத்துக்கே குடுத்துட்டாங்களா!?

அதான் இல்ல. முறைப்படி ஆசிரத்துக்கு இந்த தகவலை தெரியப்படுத்தி இருக்காங்க. அவங்க குழந்தையை எங்கக்கிட்ட கொடுத்துடுங்கன்னு சொல்லி இருக்காங்க. அதுக்கு அந்த ஜோடி, இவன் எங்களுக்கு கிடைச்சு, இவனை பார்த்துக்கனும்ன்னுதான் எங்களுக்கு கடவுள் கட்டளைப் போல! அதான் இத்தனை வருசம் கழிச்சு இவன் எங்களுக்கு கிடைச்சிருக்கான். அதனால, நாங்களே இவனை வளர்த்துக்குறோம்ன்னு சொல்லி அவனை ஒரு இளவரசன் போல வளர்த்து வர்றங்களாம். அவள் விகடன் அவங்களைப் பத்தி ஒரு கட்டுரை வந்திருக்கு. 

அப்படியா! நிஜமாவே நல்ல மனுசங்கதான் மாமா! அப்புறம் நாம தினமும் போடுற பெட்ரோல்ல எப்படி கொள்ளை அடிக்குறங்கன்னு மூஞ்சிபுக்குல படிச்சேன். நீங்க படிச்சீங்களா?!

ம்ம் படிச்சேன் புள்ள. நாம 100ரூபாக்கு பெட்ரோல் போடச் சொன்னா, அவங்களும் மானிட்டர்ல 100ரூபான்னு அழுத்தி விட்டுடுவாங்க. ஆனா, 90 ரூபா வந்ததும், பெட்ரோல் போடுறவர் தன் கையில் இருக்கும் பம்ப்ல இருக்கும் ப்ரேக்கை ஒரு அழுத்து அழுத்தி ரிலீஸ் பண்ணுவார். அப்படி பண்ணா பெட்ரோல் மெதுவா இறங்கி நமக்கு 100ரூபாய்க்கு பெட்ரோல் போட்டதா காட்டும். ஆனா, அப்படி பண்ணும்போது மீட்டர்  recalibration  ஆகி நமக்கு குறைவான அளவு பெட்ரோல்தான் கிடைக்கும். இதுனால, 5 முதல் 10 ரூபா நமக்கு நஷ்டமாகுமாம். 

இனிமே பெட்ரோல் போடும்போது நீங்களும் கவனமா இருங்க மாமா!

சரி புள்ள. மூஞ்சி புத்தகத்துல இந்த படத்தை பார்த்ததும் என்னை வெட்கப்பட வைச்சுது. ஆஃபீஸ் உஎதிர்பார்த்துக்கிட்டு இருக்கோம். ஆனா, கால் இல்லாத பெரியவர் ஒருத்தர் விவசாயம் செய்யுறார். அவர் வணக்கத்துரியவர் இல்லியா?!


ம்ம்ம் நிஜம்தான் மாமா. நம்ம உறவுகள் எப்படி இருக்குன்னு மூஞ்சி புக்குல ஒருத்தர் போட்டிருக்கார். அதையும் பாருங்க...,  கார்த்திகை பண்டிகை வருது. எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் போறேன்.....,



Monday, May 12, 2014

இந்தப் பதிவர்களே இப்படித்தானா!? - ஐஞ்சுவை அவியல்

                         
என்னடி புள்ள!  காலங்காலத்தாலே  புலம்பிக்கிட்டு இருக்கே?!

அது ஒண்ணுமில்லைங்க மாமா, நம்ம பக்கத்து வீட்டு கதிர் இருக்கானே, அவன் எம்புட்டு பெரிய படிப்பு படிச்சு இருக்கான். காலேஜுக்குலாம் போய் இருக்கான். ஆனா, அவனுக்கு ஊர் பெரியவங்க முன்னாடி எப்படி நடந்துக்கனும்ன்னு தெரியலியே, அதான், அவன்லாம் படிச்சு என்ன புண்ணியம்? யாருக்கு என்ன லாபம்ன்னு சொல்லுங்க பார்க்கலாம். அதான் புலம்பிக்கிட்டு இருக்கேன். 

எல்லாருமே பிரகலாதனாகிட முடியுமா புள்ள?!

பிரகலாதனா?யாருங்க மாமா அது? எனக்கு தெரியாம இந்த ஊருல? அவன் வெளியூரா?!

இல்ல புள்ள, இரண்ய கசிபுன்ற ராட்சனோட பையன். அம்மாவோட வயத்துல இருக்கும்போதே நாரதரின் போதனையால தன் அப்பாவுக்கு பிடிக்கவே பிடிக்காத விஷ்ணு பகவானின் பக்தனா பிறந்தார்.  பிரகலனாதன், விஷ்ணுவை மறக்க, கொடிய  வழிகளைலாம்  கையாண்டு தோற்று போன  இரண்யகசிபு, எங்கே உன் ஹரின்னு அந்த பச்ச புள்ளையை பார்த்து கோவமா கேட்டானாம்.

ஐயையோ, அப்புறம் மாமா...,

என் ஹரி தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான்னு மகன் சொன்னதை கேட்டு, பக்கத்தில இருந்த தூணை தன் கையிலிருந்த கதாயுதத்தால உடைச்சானாம். அப்போ, தூணிலிருந்து விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வந்தாரு. நரசிம்மம்னா...,

எனக்கு தெரியும் மாமா, மனிதன் உடம்பும், சிங்கத்தின் தலையும் சேர்ந்த ஒரு அவதாரம்தான் நரசிம்மம்.

கரெக்டா சொல்லிட்டே புள்ள. நரசிம்மர் போரிட்டு இரண்ய கசிபுவை கொண்ணுட்டார். நரசிம்மரோட உருவத்தை பார்த்து, தேவர்கள் உட்பட எல்லாரும் பயந்தாங்க. அவரோட கோவத்தை போக்க விஷ்ணுவின் பொண்டாட்டியான மகா லட்சுமிதேவிக்கிட்ட கேட்டுக்கிட்டாங்க. அந்தம்மாவும் புருசன் பக்கத்துல போக பயந்தாங்க.

ம்ம்ம்ம், அப்புறம் எப்படிதான் விஷ்ணு பகவானின் கோவம் போச்சு?

பிரகலாதன்தான் பாட்டுலாம் பாடி விஷ்ணுவோட கோவத்தை போக்குனாரு. அதனால, கோவம் குறைஞ்ச விஷ்ணு, பிரகலாதன்கிட்ட மன்னிப்பு கேட்டாரு.

என்னாது கடவுள் மன்னிப்பு கேட்டாரா? ஏன் மாமா?

தன் மேல பிரகலாதன் வெச்ச பக்தி உண்மைதானான்னு, சின்ன பையன்கூட பார்க்காம ரொம்ப சோதிச்சுட்டேன். அதனால, என்னை மன்னிச்சு, எதாவது வரம் கேள்ன்னு விஷ்ணு பகவான் பிரகலாதன்கிட்ட கேட்டாராம்.

ஐயனே! ஆசைகள் என் மனசுல  தோணவே கூடாது,  பணம் இருக்குது, படிப்பு இருக்குது. ஆனா, ஆசை வேணாம்ன்னு சொன்னான் பிரகலாதன். குருகுலத்துல  அவன் படிச்சதுது சம்பாதிக்கவும், நாடாளவும் மட்டும் இல்ல! இறை சிந்தனையையும் வளர்த்துக்குறாதுக்கு.

படிச்சா மட்டும் போதாது. பண்பையும் வளர்த்துகணும்ங்குற மாதிரி  இருந்த பிரகலாதனின் இந்தப் பேச்சு,  நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது. சாமியை பார்த்து பக்தன் தான் உருகுவான். ஆனா, இங்கயோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த சாமி பக்தனை பார்த்து  உருகிப் போனான். இந்த சின்னவயசுல,  எவ்வளவு நல்ல மனசு! ஆசை வேணாம்ங்குறானே! ஆனாலும், அவர் விடலை.

 நீ ஏதாவது கேட்டுத்தான் ஆகணும்ன்னு, நரசிம்மர் கெஞ்சுனதால , எங்க அப்பாவை தண்டிக்காம அவருக்கு வைகுண்ட  பதவி கொடுக்கனும்ன்னு கேட்டுக்கிட்டானாம்.   அதுக்கு, விஷ்ணு, பிரகலாதா! உன் அப்பா  மட்டுமில்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெத்த அப்பாக்கள்  தப்பே செய்திருந்தாலும், அவங்க என் இடத்துக்கு வந்துடுவாங்க. அவங்க  21 தலைமுறையினரும் புனிதமடைவாங்கன்னு  வரம் தந்தாராம் விஷ்ணு.  தந்தை கொடுமை செஞ்சாரேங்குறாதுக்காக  அவரை பழிவாங்கனும்ன்ற எண்ணம்  பிரகலாதனிடம் இல்லை. படிச்சவங்க  கத்துக்கொள்ள வேண்டிய பண்பு இதுதான் புள்ள.

கரெக்டுதானுங்க மாமா.  படிச்ச படிப்பை பயனுள்ள வகையில யூஸ் பண்ணாதானே அந்த படிப்புக்கும் லாபம். மத்தவங்களுக்கும் லாபம்.
        
அப்புறம்,  நம்ம கம்ப்யூட்டர் பொட்டில  பொட்டில ஒரு ஜோக்கு படிச்சேனுங்க  மாமா. சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாகிட்டுது.

எனக்கும் சொல்லுடி. நானும் சிரிக்குறேன்.

மனைவி: ஏங்க காரக்குழம்பு செய்யவா? இல்லை கூட்டு செய்யவா?
கணவன்: நீ முதல்ல சமையல் செய்.  நாம அப்புறமா அதுக்கு காரக்குழம்பா? கூட்டான்னு பேர் வச்சுக்கலாம். 

ராஜியோட பையன் அப்புக்கு ரொம்ப கோவம் வரும்.  ஒரு முறை தமிழ்வாசி பிரகாஷ் தன் பதிவுல கோவம் எவ்வளவு தப்புன்னு பதிவு போட்டிருந்தார். அதாவது, ஒரு அப்பா தன் பையன்கிட்ட உனக்கு கோவம் வரும்போதுலாம் ஒரு ஆணியை மரத்துல அடின்னு சொல்றார். அந்த பையனும் செய்றான். கோவம் தனிஞ்சதும் அந்த ஆணியை புடுங்கச் சொல்றார். பையனும் அதேப்போல செய்றான். கொஞ்ச நாள் கழிச்சு அந்த மரத்தை பார்க்கச் சொல்றார். ஆணி அடிச்ச தழும்பு அப்படியே மரத்துல இருக்கு. அதனால, கோவம் மறைஞ்சாலும் அதோட பாதிப்பு மறையாதுன்னு போட்டிருந்தார்.

அதை தன் பையனைக்கிட்ட அதைப் படிக்க சொன்னா ராஜி. அதுக்கு ராஜியோட பையன் அப்பு, ஏன்மா! கோவப்படாதடா! கோவப்பட்டா உடம்புக்கு ஆகாது, அடுத்தவங்க மனசு கஷ்டப்படும்ன்னு சொல்ல வேண்டியதுதானே! அதைவிட்டு இப்படி சுத்தி வளைச்சு ஏன் சொல்லனும்!? நீங்க மட்டுமில்ல உங்க பதிவர்களுக்கே நறுக் சுறுக்குன்னு சொல்லத் தெரியாதா!? வளவளன்னு சுத்தி வளைச்சுதான் சொல்வீங்களோ!? புத்தி சொல்றேன்னு நல்லா இருக்கும் மரத்துல வேற ஆணி அடிக்கச் சொல்றிங்க. மரமும் ஒரு உயிர்தானே! அதுக்கு வலிக்காது!?ன்னு கேட்டு ராஜியை படுத்தி எடுக்குறான் மாமா!

பின்னே குழந்தைகளுக்கு புத்திச் சொன்னாலே இப்பலாம் பிடிக்குறதில்ல. அதுலயும் சுத்தி வளைச்சு சொன்னா இப்படித்தான் நடக்கும். ஒரு விடுகதை கேக்குறேன் பதில் சொல்லுப் பார்ப்போம்!!

கேளுங்க மாமா!


நொடியில் ஒருமுறை வருவேன்.
வாரத்தில் இரண்டு முறைவருவேன்
மாதத்தில் வராமலே இருப்பேன்
நான் யார்?
இதான் புள்ள விடுகதை. நல்லா யோசிச்சு பதில் சொல்லு. பதில் சொல்லச் சொன்னா ஏன் இப்படி மூஞ்சை அஷ்டக்கோணலாக்குறே!? சும்மாவே உன் மூஞ்சி பார்க்க சகிக்காது. இதுல இப்படி ஒரு சேஷ்டை தேவையா!?
                           
                                           


நான் ஒண்ணும் பதில் தெரியாம முழிக்கல மாமா, பல் வலிக்குது. கடைவாய் பல் சொத்தையா இருக்கு. அது ரெண்டு நாளா ரொம்ப வலிக்குதுங்க மாமா. நைட்லாம் தூக்கமே இல்ல.

இதுக்குதான் இனிப்புலாம் சாப்பிட்டபின் வாய் கொப்பளிக்கனும், சாக்லேட், கற்கண்டுலாம் கடிச்சு சாப்பிட கூடாது. அதிக குளிர்ச்சி, சூடானதை சாப்பிட கூடாது. சாப்பிட்டபின் வாய் கொப்பளிக்கனும். காலையில எழுந்ததும் பல் துலக்கனும்.  ராத்திரி படுக்க போறதுக்கு முன்னாடி பல் துலக்கனும். வருசத்துக்கு ஒரு முறையாவது பல் டாக்டர்கிட்ட போய் ஆலோசனை கேட்கனும்.

சரிங்க மாமா, அதெல்லாம் இனி கரெக்டா செய்றேன். இப்ப வலிக்குதே அதுக்கு ஒரு வழி சொல்லுங்க . மிளகுத்தூளுல  கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்குற பல்லுல  தடவி வந்தா வலி குறையும். முந்திரி மரத்தின் தளிர் இலைகளை பறிச்சு  நல்லா  கடிச்சு  சாப்பிட்டு வந்தாலும் பல் வலி குறையும். இஞ்சி சாறுடன் தேன் கலந்து வாய் கொப்பளித்து குடித்து வந்தாலும் சொத்தைப்பல் குறையும்.

ஆனா, இதெல்லாம் சும்மா தற்காலிகமாதான் செஞ்சுக்கனும். உடனே மறக்காம பல் டாக்டகிட்ட போய் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கனும். நான் போய் கழனில மடை திருப்பிவிட்டு வரேன். சாயந்தரமா டவுனுக்கு போய் உன் பல்லை புடுங்கலாம்.

என்னங்க மாமா, இப்படி கிண்டல் பண்றிங்களே!?

சும்மா தமாஷ் பண்ணே புள்ள. சொத்தை பல்லை எடுத்துட்டு வந்துடலாம்.

சரிங்க மாமோய்.நானும் சீக்கிரம் வீடு வேலைலாம் முடிச்சு வைக்குறேன்.