Thursday, October 04, 2018

கோடி நன்மை கொடுக்க போகும் குருபெயர்ச்சி


நம்மூர்ல ஒன்னு அடிக்குறவனை கண்டா பயந்து கும்பிடுவோம். இல்ல கொடுக்குறவனை கண்டா கூழைக்கும்பிடு போடுவோம். அதன்படி, நவக்கிரகங்களில் சனிபகவானுக்கும், குருபகவானுக்கும் ஸ்பெஷல் இடம்தான் நம் மனசில்... சனிபகவான் என்ன பண்ணுவார்ன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்.  துஷ்டனை கண்டா தூர விலகுன்னு சொல்றமாதிரி சனிபகவான் பேரை சொல்லவே பயம்.  ஆனா, குருபகவான்கிட்ட அப்படி இல்லை. குரு பார்க்க கோடி இன்பம்ன்னு சொல்றதால நேருக்கு நேர் நின்னுதான் கும்பிடுவாங்க. எல்லா தெய்வத்தையும் ஆள் வச்சு கும்பிட்டாலும், குருபகவானை மட்டும் இவங்களேதான் கும்பிடுவாங்க. ஏன்னா, எல்லா பலனும் இவங்களுக்கே வந்துடனுமாம். ஆனா குருபகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் வித்தியாசம் தெரியாம மாத்தி மாத்தி கும்பிடுவாங்க.  
குருபகவான் நவக்கிரகங்களில் ஒருவர். தட்சிணாமூர்த்தி சிவ அம்சம். ஞானத்தின் அதிபதி. குரு பகவானுக்கு குரு. அதனால நம்மாளுங்க என்ன பண்றாங்கன்னா, டைரக்டா தட்சிணாமூர்த்தியை கும்பிடுறாங்க. அது தப்பு. குருபகவான் நவக்கிரக சன்னிதியில் மஞ்சள் ஆடையுடன் வடக்கு நோக்கி இருப்பவர். தட்சிணாமூர்த்தி சிவன்கோவில்களில் தென்புறத்தை நோக்கியவாறு கோவிலின் வலப்புறத்தில் வாசம் செய்பவர் வெண்ணிற ஆடை உடுத்தி முல்லை மலர் சூடி இருப்பவர். தட்சிணாமூர்த்தி யோக நிலையில் இருப்பவர். அதனால் அவரை டிஸ்டர்ப் செய்தல் கூடாது. குருபகவான் யாரு?! தட்சிணாமூர்த்தி யாரு?! ரெண்டு பேருக்கும் இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளை போன வருசம் போட்ட பதிவில் பார்த்துக்கோங்க.

 பிரம்மதேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதா என்பவருக்கும் பிறந்த பிள்ளைகளில் ஒருவர் குரு பகவான். இவர் அறிவில் சிறந்தவர். தேவர்களின் குருவாக திகழ்பவர். அவரது நுண்ணறிவின் காரணமாக ‘பிரகஸ்பதி’ன்னு   அழைக்கப்படுகிறார். பிரகஸ்பதி என்ற சொல்லுக்கு ‘ஞானத் தலைவன்’ ன்னு பொருள். இவருக்கு மந்திரி, அமைச்சர், ஆசான், குரு, வியாழன், பொன்னன்னு பேரு. பிரகஸ்பதி, காசியில் பல காலம் சிவபெருமானை வேண்டி கடுமையான தவத்தை மேற்கொண்டார். இதன்காரணமாகவே அவர், தேவர்களுக்கு குருவாக விளங்கும் பதவியும், கிரக பதத்தில் வீற்றிருக்கும் பேறும் பெற்றார். இவருக்கு எமகண்டன், கசன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. நவக்கிரகங்களில் பிரதானமான இவர் சுபக்கிரகர் ஆவார். சாத்வீக குணத்தைக் கொண்டவர். மஞ்சள் நிறப்பிரியர்.
மேல இருக்கும் படத்தில் உள்ளது 12 ராசிகளும் அதன் அதிபதிகளின் பெயரும்...  அதன்படி,  மீனம் மற்றும் தனுசு ராசிகளுக்கு குரு அதிபதி . படத்தில் இருக்குற ஒவ்வொரு ராசியிலும்(கட்டம்) ஒரு வருசம் இருப்பார். குரு தான் வாசம் செய்யும்  ராசியிலிருந்து  மற்ற ராசிகளை பார்க்கும் பார்வைப்பொருத்தே பலன்கள் எழுதப்படும். இதான்  இது ஒரு கணித சூத்திர கச்சிதத்தோடு எழுதப்படும். குரு பவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வதையே குரு பெயர்ச்சி என்கிறோம். குரு பகவான் அப்படி ஒரு ராசிக்கு இடம் பெயர்ந்து அங்கிருந்து அவர் மற்ற ராசிகளை பார்ப்பதால் ஏற்படும் பலன்களையே குரு பெயர்ச்சி பலன்கள் என சொல்றோம்.


குரு பகவான் தெய்வீக அறிவு,  வேதாந்த ஞானம், செல்வ வளம், பொருள் சேமிப்பு, அன்பு, பண்பு, சகல சௌபாக்கிய புத்திர பாக்கியம், மேதைகளையும், ஞானிகளையும் உருவாக்குபவராகவும் தலைவணங்காத தலைமைப் பதவியைத் தருபவராகவும் குருபகவான் திகழ்கிறார். சுருக்கமா சொல்லனும்ன்னா மழைக்கும் குருபகவான் அருள் வேணும், மழலைக்கும் குருபகவான் அருள் வேணும்ன்னு சொல்வாங்க. இந்த குருபகவான், நவக்கிரகங்களில் வடக்கு நோக்கி இருப்பவர். பொன் நிற ஆடை அணிபவர், யானை வாகனம், கொண்டைக்கடலை, மஞ்சள் நிற பூக்கள் பிரியர். உலோகத்தில் தங்கத்துக்கும், நவரத்தினங்களில் புஷ்பராகத்துக்கும் அதிபதி.  நவகிரகங்களில் ஒருவராய் இருந்தாலும் குருபகவான்ன் தனித்தன்மையோடு திகழும் கோவில்கள் 21 இருக்கு. பரிகாரத்துல நம்பிக்கை இருக்கவுங்க பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு போய் வரலாம்.

அயப்பாக்கம்
சென்னையிலிருக்கு அயப்பாக்கம், வட குருஸ்தலம்ன்னே இந்த தலம் அழைக்கப்படுது. இங்க, அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி 16 அடி உயர பிரம்மாண்ட மூர்த்தி. குருபகவானின் இயல்புபடியே இவர் கல்விச்செல்வம் வழங்குவதில் தன்னிகரற்றவராம். 
அகரம் கோவிந்தவாடி
காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் கம்மவார்பாளையம் நிறுத்தத்தில் இறங்கி, கிளைப்பாதையில் பயணித்தால் அகரம் கோவிந்தவாடி கோயிலுக்குச் செல்லலாம். இத்தலத்திலும் தட்சிணாமூர்த்தியே குருவாக வீற்றிருக்கிறார். 6 அடி உயரத்தில் வித்தியாசமான அமைப்புடையது கருவறை மூர்த்தம்.  மூலவரது விழிகள் ஒரு கோணத்தில் யாரையும் காணாதது போலவும், இன்னொரு கோணத்தில்  எல்லோரையும் பார்ப்பது போலவும் இருக்கும். இதுக்கு காரணம், குரு பார்வை கோடி நன்மை தரும். ஒருவரை குரு பார்த்துக்கிட்டே இருந்தா நல்ல பலன் மட்டுமே கிடைக்கும். அப்படி நல்ல பலன் மட்டுமே கிடைச்சா மனுசனுக்கு தலைக்கனம் வந்திரும். குருபார்வை இல்லன்னா கெட்டது மட்டுமே நடக்கும். கெட்டதே நடந்திட்டு இருந்தால் பைத்தியம் பிடிச்சிடும். அதனால்தான் இந்த உருவ அமைப்பாம். சிறந்த குரு பரிகாரத் தலம். இவர், வியாக்யான தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

காஞ்சிபுரம்
பெரிய காஞ்சிபுரம் ரயில்வே காலனியில் இருக்கு யோக தட்சிணாமூர்த்தி ஆலயம். குருவின் பல அம்சங்களில் ஒன்று யோகநிலை. சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்த பின்னர், அவர்கள் யோகநிலையை அடைந்து செயலாற்ற அருள்புரிந்து விடை கொடுத்து அனுப்பும் அற்புத வடிவே யோகநிலை. அத்தகைய அமைப்பில் விளங்கும் தட்சிணாமூர்த்தியை இங்கு தரிசிக்கலாம்.

குச்சனூர்
தேனி மாவட்டம் குச்சனூரில் குரு பகவான் வடக்கு திசை நோக்கி யானை வாகனத்துடன் ராஜதோரணையில் அருள்கிறார். இந்த ராஜயோக தட்சிணா மூர்த்தி சின்முத்திரையோடு காட்சியளிக்கிறார். சாந்தம் பொங்கும் திருமுகம் கொண்டவர். இவரை வழிபட்டால், பித்ரு தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.

 பட்டமங்கலம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு பக்கத்திலிருக்கு பட்டமங்கலம். இக்கோயிலில் 2,000 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்னு இருக்கு. அதுக்கு பக்கத்திலிருக்கும் அட்டமாசித்தி தீர்த்தத்தில் நீராடி ஆலமரத்தை வலம் வந்து தட்சிணாமூர்த்தியை வணங்கினால் திருமணத்தடை, புத்திரபாக்கியத் தடை நீங்கும்.


சுருட்டப்பள்ளி
ஆந்திர மாநில எல்லையில் இருக்கு சுருட்டப்பள்ளி நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் குரு பகவான், தாம்பத்ய தட்சிணாமூர்த்தியாக அருள்கிறார். இவர் இல்லறத்தில் ஏற்படக்கூடிய பிணக்குகளை விலக்கி, இணக்கத்தை ஏற்படுத்துவார். 
 தக்கோலம்
வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். வலதுகை சின்முத்திரை காட்ட, வலது பின்கை ருத்ராட்ச மாலையை ஏந்தியுள்ளது. இடது முன்கையில் சுவடி, இடது பின்கையில் ஞான தீபம். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் ‘உத்கடி’ ஆசனத்தில் அமர்ந்த கோலத்தில் குருபகவானை தரிசிக்கலாம்.
இன்று காலை ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் விசேஷ ஆரத்தி

தாராசுரம்
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் குரு தட்சிணாமூர்த்தி என்ற பெயரில் தென்முகக் கடவுள் அருள்கிறார்.

வேதபுரி
தேனி - மதுரை வழியில் 1 கி.மீ. தொலைவிலிருக்கும் அரண்மனைப்புதூரில் இறங்கி, அங்கிருந்து வயல்பட்டி செல்லும் கிளைப்பாதையில் 2 கி.மீ. பயணித்தால் வேதபுரியை அடையலாம். இங்கு பிரக்ஞா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங்களை பீடத்தில் அமைத்து முறைப்படி எழுப்பப்பட்ட ஆலயம் இது.

தென்குடித்திட்டை

தஞ்சாவூர் - திருக்கருகாவூர் வழியிலிருக்கு தென்குடித்திட்டை இருக்கு. நின்ற நிலையில் தட்சிணாமூர்த்தி, ராஜகுருவாக அருள்பாலிக்கும் தலம். சிவனுக்கும் அம்பாளுக்கும் இடையில் தனிச்சன்னதியில் கொலுவீற்றிருக்கிறார். அரனின் அருளும், அம்பிகை அருளும் ஒருங்கே இணைத்து அளிக்கும் ஈடில்லா மூர்த்தியாகத் திகழ்கிறார்.

தேப்பெருமாநல்லூர்
கும்பகோணத்திலிருந்து 1 கி.மீ. தொலைவிலிருக்கு தேப்பெருமாநல்லூர். இங்கு அன்னதான தட்சிணாமூர்த்தி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

 திருஇலம்பையங்கோட்டூர்
பூந்தமல்லியிலிருந்து தக்கோலம் செல்லும் வழியில் 40 கி.மீ. தொலைவில் உள்ளது இலம்பையங்கோட்டூர். ரம்பை முதலான தேவகன்னிகைகள் ஈசனை பூஜித்த தலம். இத்தலத்தில் கால்களை சம்மணமிட்டு அமர்ந்து மார்புக்கு அருகே சின்முத்திரையைக் காட்டும் வித்தியாச வடிவில் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

 திருவொற்றியூர்
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு முன்பு தட்சிணாமூர்த்திக்கென தனிக்கோயில் இருக்கு. சுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகுடன் அருள் ததும்பும் திருமுகத்தோடு வீற்றிருக்கிறார். ஆலமரம் இவருக்கு குடை பிடிப்பதுபோல இருப்பது கொள்ளை அழகு.

 ஆலங்குடி
கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் 17 கி.மீ. தொலைவிலிருக்குஆலங்குடி. தட்சிணாமூர்த்தியின் மூலவர் மட்டுமே பெரும்பாலும் அனைத்து ஆலயங்களிலும் இருக்கும். ஆலங்குடியில் தட்சிணாமூர்த்தியின் உற்சவர் திருமேனியை சிறந்த வேலைப்பாடுகளுடன் தரிசிக்கலாம். திருத்தேரில் பவனி வரும் மூர்த்தி இவர். ஆறு கால அபிஷேகம் கண்டருளும் தெய்வம்.

 குருவித்துறை
குருபகவான் தன் மகன் கசனுக்காக தவம் புரிந்த தலமே குருவித்துறை. மதுரை பேருந்து நிலையத்திலிருந்து குருவித்துறைக்கு செல்ல பேருந்துகள் உண்டு. குருவின் தவம் கண்டு மகிழ்ந்த திருமால், சித்திர வேலைப்பாடுகள் அமைந்த தேரில் காட்சியளித்ததால் சித்திர ரத வல்லப பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

திருவையாறு
தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருவையாறு பஞ்சநதீஸ்வரர் கோயிலில் அருள்புரியும் தட்சிணாமூர்த்தி வலது மேல் கையில் கபாலமும், கீழ் கையில் சின்முத்திரையும், இடதுகரத்தில் சூலமும், கீழ் இடக்கையில் சிவஞான போதத் துடனும் திருவடியின் கீழ் ஆமையுடன் காட்சியளிக்கிறார். சுரகுரு சிவயோக தட்சிணாமூர்த்தியாக விளங்குகிறார்.

திருவலிதாயம் (பாடி)

சென்னை பாடியில் உள்ளது திருவலிதாயம் திருக்கோயில். மிகவும் தொன்மையான இத்தலத்தில் வீராசன கோலத்தில் (வ்யாக்யான)தட்சிணாமூர்த்தி அருள்கிறார். உடல் எந்தவித வளைவுகளும் இல்லாது சமபங்க நிலையில் உள்ளது. புலித்தோல் தரித்து, பூணூல் அணிந்திருப்பார்.

 ஏரையூர்
தட்சிணாமூர்த்தி என்றாலே கல்ஆல மரமும், அதனடியில் ஸனத் சகோதரர்கள் அமர்ந்திருக்க ஈசன் தட்சிணாமூர்த்தியாக அவர்களுக்கு மவுன உபதேசம் செய்யும் காட்சிதான் நினைவுக்கு வரும். ஏரையூர் திருத்தலத்தில் ஸ்தித தட்சிணாமூர்த்தி என்ற பெயரில் தரிசனம் தருகிறார். இக்கோயிலில் தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கும் கல்ஆலமரம் வித்தியாசமான வடிவில் காட்சியளிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் - பெரும்புதூரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலிருக்கு இன்க்கோவில்.

 திருநெடுங்களம்
திருச்சி மாவட்டம் துவாக்குடியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருநெடுங்களம். இத்தலத்தில் அருளும் தட்சிணாமூர்த்தி வியாழக்கிழமைகளில் விசேஷமாக வழிபடப்படுகிறார். இவருக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபட தடைகள் தவிடு பொடியாகும்.

திருப்புனவாசல்

இடது கரத்தில் நாகப்பாம்புடன்,   தன் வெற்றியை பறை சாற்றிபடி கம்பீரமான தோற்றத்துடன்,  அவநம்பிக்கை, பொறாமை, கோபம் போன்ற துர்குணங்களை நசுக்குவதுபோல, கால்களால் அசுரனை மிதித்த வண்ணம் காட்சி தருகிறார் இந்த தட்சிணாமூர்த்தி. இத்தலம் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டத்திலிருக்கு.

 திருப்புலிவனம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இருந்து 5 கி.மீ. தொலைவிலிருக்கு திருப்புலிவனம். இங்கு சிம்ம குரு தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். ஒரு காலை வழக்கம்போல முயலகன் மீதும், மற்றொரு காலை சிங்க வாகனத்தின் மீதும் வைத்துள்ளார். ‘அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தி’ என்றும் இவர் அழைக்கப்படுகிறார். இவர் தம்பதியர் இடையே உள்ள பிணக்குகளை தீர்த்துவைத்து குடும்பத்தில் சுபிட்சத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்கெல்லாம் போகமுடியாதவங்க  அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் போட்டு வரலாம்.  பசுவுக்கு கேரட், முள்ளங்கி, அகத்திக்கீரை தரலாம். கோவில்களை சுத்தம் செய்வதில் கலந்துக்கலாம். பள்ளிக்கூடங்களுக்கு கரும்பலகை, மேஜை, நாற்காலி வாங்கித் தருவது, ஆலமரக்கன்றை நட்டு பராமரிக்கலாம். எல்லாத்தையும்விட  தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றை தானமாக வழங்கலாம்.  குருவின் நற்பலன்களை அப்படியே பெற அன்னதானம் மிகச் சிறந்தது. குருபகவான் கோவில்களில் பெரும்பாலும் லட்டுதான் பிரசாதம் அதனால், அதுமாதிரியே  இனிய வார்த்தைகளை தானம்  செய்யலாம். அதாவது கண்ணே, மணியேன்னு கொஞ்சனும்ன்னு அவசியமில்ல. நஞ்சு தோய்த்த கத்தியாய் வார்த்தைகளை வீசாம இருந்தாலே போதும். மலர்ந்த புன்னகையோடு இனிய வார்த்தைகள் போதும். எனக்கு நாக்குலதான் சனியேன்னு என்னை மாதிரியான ஆட்கள்  மௌனம் காத்தலே சிறப்பு. மனமும் வாயும் தன் வசம் இல்லாதவர்கள் நிறைய தண்ணீர் குடிக்கலாம் . கோபமும் உடல் எடையும் குறையும்.  
மௌனமாய் குருபகவான் காயத்ரி மந்திரத்தை சொல்லலாம்...
ஓம் வ்ருஷ பத்வஜாய வித்மஹே
க்ருணி அஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை குரு ஓரையில் தினமும் 21 முறை பாராயணம் செய்தால் குருவருள்  கிட்டும்

நம்புவோம்! நல்லதே நடக்கும்!

நன்றியுடன்,
ராஜி

18 comments:

  1. எவ்ளோ விசயம்.
    ஸ்சப்பா

    ReplyDelete
    Replies
    1. ஆல் இன்ஃபர்மேஷன் கெட் ஃப்ரம் கூகுள். கரிக்டா பீட்டர் விட்டேனா சேக்ஸ் அண்ணா!?

      Delete
  2. குரு இந்த சிஷ்யனை ஒரு பார்வை பார்த்தால் நல்லது...

    ReplyDelete
    Replies
    1. குருப்பார்வை இருக்கவேதான் உங்க விருப்பப்படி விவேக்-ரூபலா திருமணம் நடந்துச்சு.

      Delete
    2. அடடே ஆமா சகோ உண்மைதானோ...

      Delete
    3. உண்மைதான்ண்ணே! எத்தனை வருச கனவது!! எத்தனை வருசமானாலும் உங்க விருப்பமும், அதை நிறைவேறினதும் என்னால மறக்க முடியாது. விவேக்- ரூபலா தம்பதி நல்லா இருக்கனும்ண்ணே.

      Delete
    4. மனம் நிறைந்த நன்றி

      Delete
  3. பொதுவாக நான் இவற்றைப் படிப்பதில்லை. நன்றாகச் சொல்லவில்லை என்றால் மூடவுட் ஆகிவிடும். எனினும்,

    புனர்பூசக் கடகனான எனக்கு இந்த குருப்பெயர்ச்சி நல்ல வார்த்தை நிறைய சொல்லி இருக்கிறியாது!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இதில் நம்பிக்கை இல்லை சகோ. நல்லது சொன்னாலும், கெட்டதாய் சொன்னாலும் ஒரே மனோபாவம்தான். என்னுடையது மிதுனம் ராசி. நல்லா இல்லன்னுதான் சொல்லி இருக்காங்க. ஒரே நேரத்தில் பிறந்த இருவர் ஒருவர் நல்லவராயும், இன்னொருத்தர் கெட்டவராகவும் உண்டு. கேட்டா கர்மா, அது இதுன்னு கண்டிஷன் அப்ளைன்னு சொல்வாங்க. நம்பிக்கை இருக்கவுங்க படிச்சுக்கட்டும்தான் இந்த பதிவு.

      Delete
    2. ஸ்ரீராம் நான் சொல்ல வந்ததை அப்படியே சொல்லிட்டீங்க!!!! நானும் படிப்பதில்லை. அதே அதே பொதுவாகவே மனித மனம் நெகட்டிவை டக்கென்று பற்றிக் கொள்ளும். எனவே நன்றாக இல்லை என்றால் மனம் மிகவும் மோசமாகிவிடும்.

      அதனால் நான் அந்த சார்ட்டைப் படிக்கவில்லை ராஜி. நான் எப்போதும் பிரார்த்தனை மட்டுமே.

      பலன் சொல்கிறவர்கள் அந்த நெகட்டிவோ பாசிட்டிவோ அதைச் சொல்லாமல் இந்தக் கடவுளை வணங்கு,,,இதைச் செய் அதைச் செய் என்று (பரிகாரம் தானே அது??!!) சொன்னால் போதும் என்றே தோன்றும். இந்தப் பரிகாரம் எல்லாம் நம் மனதில் ஒரு திடமும் எதிர்நோக்கும் சக்தியையும், மனம் அமைதியாக இருக்கவும் தருவதற்குத்தானே ஒழிய நடப்பது நடந்தே தீரும். எனவே மீ ஒன்லி பிரார்த்தனை...

      தகவல்கள் அறிந்து கொண்டேன்.

      கீதா

      Delete
    3. அட..எல்லாருமே அப்படிதானா

      Delete
    4. அட, நம்மையும் நம்பி பலனை சொல்றாங்க. அதை பேப்பர்ல, டிவிலலாம் வெளிப்படுத்துறாங்க. அதை பார்க்குறதுல, கேக்குறதுல என்ன குறைஞ்சிடப்போறோம்.

      விளக்கெண்ணெய் தொட்டுக்கிட்டு உருண்டாலும் நடக்குறதுதான் நடக்கும்.

      Delete
  4. Replies
    1. பேஷ் பேஷ்.. நன்னா இருக்கு

      Delete
  5. இதுவரை இந்த குரு பெயர்ச்சி எல்லாம் தெரியாது க்கா..அப்பா அது எல்லாம் பார்க்க மாட்டங்க சோ நானும் பார்க்க மாட்டேன்.

    இந்த வருஷம் தான் அப்ப்டின்னா என்ன ன்னு பார்த்தேன்..

    ReplyDelete
    Replies
    1. நான்லாம் சின்ன வயசுல பொழுது அடையுற வரைக்கும் எந்த வீட்டில் இருக்கேன்னு தெரியாது. நான் மட்டுமல்ல கிராமத்துல வளர்ந்த அனைவருக்கும் பொருந்தும், சண்டைக்காரர் வீட்டிலும் குழந்தைகளுக்கு சாப்பாடு போடுவாங்க. தூங்க விடுவாங்க. அதுமாதிரி பத்து வருசத்துக்கு முந்தி வரை குரு, சனிலாம் எங்க இருக்காங்கன்னு யாருக்குமே தெரியாது. கல்யாணம், காட்சின்னு வரும்போதுதான் ஜாதக்கட்டை எடுப்பாங்க. ஆனா, இப்ப ஜோதிடம் மிகப்பெரிய வியாபார சந்தையாகிட்டுது

      Delete
    2. பதிவு நல்லா விளக்கமா இருக்கு. அதைவிட, உங்களின் இந்தக் கருத்து (பத்து வருஷத்துக்கு முந்தி வரை....) அதைவிடச் சிறப்பா இருக்கு.

      Delete
  6. முன்பெல்லாம் வருடத்துக்கு ஒரு புதிய கோவில் செல்ல வேண்டும் என்று மனைவி சொல்வாள் அதன்படி திரு கரந்தைஜெயகுமாரையும் திரு ஹரணி ஐய்யாவையும் பார்த்தப்ன் கரந்தையிலிருந்து திட்டக் குடி கோவிலுக்குப்போயிருக்கிறோம்

    ReplyDelete