Showing posts with label தாய்ப்பால். Show all posts
Showing posts with label தாய்ப்பால். Show all posts

Thursday, August 02, 2018

தாய்ப்பால் வாரம்




ஆகஸ்ட் 1 முதல் 7 வரை தாய்ப்பால் வாரம்...


ஒரு குழந்தைக்கு தாய் எத்தனை அவசியமோ அந்தளவுக்கு தாய்ப்பால் முக்கியம். குழந்தைக்கு தாய்ப்பால் எந்தளவுக்கு நல்லதோ அந்தளவுக்கு குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது தாய்க்கும் அந்தளவுக்கு நல்லது. ஏன்னா தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய் வராமலிருக்க வாய்ப்புகள் அதிகம். பாலூட்டுதல் பொருட்டு மாற்றியமைக்கப்பட்ட வியர்வை நாளங்கள் தான் நமது மார்பகங்கள். கர்ப்பம் தரித்த நாள் முதலே பாலூட்ட தயாராகிறது மார்பகங்கள். குழந்தை பிறந்தபின் பாலூட்டலைன்னா தூண்டப்பட்ட ஹார்மோன்கள் உடலிலேயே தங்கி மார்பக புற்றுநோயை உண்டாக்கும். அதுமட்டுமில்லாம பிரசவக்காலத்தில் உண்டாகும் அதிகப்படியான ரத்தப்போக்கினை இது கட்டுப்படுத்தி, ரத்த சோகை உண்டாகாமல் தடுக்குது. தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் உடலில் இருக்கும் கலோரிகள் எரிக்கப்பட்டு படிப்படியா தாயின் உடல் எடை குறையும்.

சராசரியான  உடல்வாகு உள்ள  ஒரு தாய்க்கு ஒரு நாளைக்கு அரை லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் வரை பால் சுரக்கும்.  குழந்தை பாலை உறிஞ்சும்போது பிட்யூட்டரி சுரப்பி, `ஆக்சிடோசின்’, `புரோலாக்டின்’ ஆகியவற்றை உற்பத்தி செய்து, பால் உற்பத்தியைத் தூண்டுது.  ரத்தத்தில் இருந்து குளுக்கோஸை கிரகிப்பதற்கு பால் சுரபிகளை `புரோலாக்டின்’ தூண்டுது. அந்த குளுக்கோஸானது லாக்டோஸாகவும் மற்ற சர்க்கரையாகவும் மாற்றபடுது. கால்சியம், அமினோ அமிலங்கள், புரதங்கள், கொழுப்பு ஆகியவையும் பெறப்படுது.  பால் சுரப்பிகள் சுருங்கி, பால் நாளங்களுக்குள் பாலை செலுத்த `ஆக்சிடோசின்’ உதவுது. 

முதன்முதலில் சுரக்கும் பால் oremilk அதிகப்படியான நீர்சத்தினை கொண்டிருக்கும். இது குழந்தையின் தாகத்தை தணிக்கும். பிரசவிச்ச பல நிமிடங்கள் கழித்து சுரக்கும் Hind milkன்னு அழைக்கப்படும் Colostrum ன்ற சீம்பால் முதல் 4 நாட்களுக்கு மட்டும் சுரக்கும் பாலாகும். இதில் கொழுப்பு சத்து அதிகம். இது குழந்தையின் பசியை போக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படியாக குழந்தைக்கு தரும். Transitional milk என்பது 4-10 நாட்களில் சுரப்பது. Mature milk எனப்படுவது, பத்து நாட்களுக்கு பிறகு சுரப்பது. ஒவ்வொரு முறையும் 20 நிமிடங்கள் வரை பாலூட்டனும். குழந்தை பிறந்த ஒரு மணிநேரத்திற்குள் பாலூட்ட வேண்டியது அவசியம். அப்படி ஒரு மணி நேரத்திற்குள் பாலூட்டாமல் ஒரு மில்லியன் குழந்தைகள் உயிரிழக்கின்றனர். 47% சதவீத பெண்களே ஆறுமாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கின்றனர். மத்தவங்களாம் புட்டி பால் கொடுக்க ஆரம்பிச்சுடுறாங்க. வேலைக்கு போகும் பெண்கள், தாய்ப்பாலெடுத்து புட்டிகளில் சேகரித்து பால் எடுத்த நேரத்தினை குறிச்சு வச்சுட்டு போகலாம். தாய்ப்பால் வெளில வச்சாலே 8 மணி நேரம் தாங்கும். ஃப்ரிட்ஜ்ல வச்சா 24 மணி நேரம் தாங்கும். சினிமாவிலோ சீரியலிலோ புட்டிப்பால் கொடுப்பது மாதிரியான காட்சிகள் வைப்பது சட்டப்படி குற்றம்ன்னு எத்தனை பேருக்கு தெரியும்?!


இன்னிக்கு கவர்ச்சி பொருளாய் மாறிவிட்ட மார்பகம் சிறுவர், சிறுமியர் இருவருக்குமே மார்புக் காம்புக்கு பின் பால் நாளங்கள் இருக்கும். சிறுமிகள் வயதுக்கு வரும்போது `ஈஸ்ட்ரோஜென்’னும் மற்ற ஹார்மோன்களும் பால் நாளங்களை வளரச் செய்யும். கொழுப்பையும், இணைப்புத் திசுக்களையும் அதிகரிக்கச் செய்யும். சிறுவர்களிடம் `டெஸ்ட்டோஸ்டிரான்’ சுரந்து மார்பக வளர்ச்சியைத் தடுக்கும். பெண்ணுக்கு இரு மார்புகளும் ஒரே அளவில் இருக்காது.  இடது மார்பகம், வலது மார்பகத்தை விடச் சற்று பெரிதாய் இருக்கும்.  தாய்ப்பால் தூய்மையானது, கலப்படமில்லாததுன்னு சொன்னாலும் சிகரெட்டிலுள்ள நிகோட்டின், ஆல்கஹால் மற்றும் பல மருந்துகள் தாய்பால் வழியாகக் குழந்தைக்குச் செல்லும் வாய்ப்புண்டு. அதனால் மது, புகை பழக்கத்தை தவிர்ப்பதோடு டாக்டரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கனும். தாய்ப்பாலானது பசுவின் பாலை விட இனிமையானது. அதேநேரத்தில்  அடர்த்தி குறைந்தது.

பெண் கடவுள் ஹேராவின் மார்பகத்தில் இருந்து உதிர்ந்த பால் துளிகளால் `பால் வீதி மண்டலம்’ உருவானதாக பண்டைய கிரேக்கர்கள் நம்பியதால்  அப்பெயரைச் சூட்டினர். 

35 வயதை கடந்த அனைத்து பெண்களும் வருசத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வது அவசியம். வாரம் ஒருநாளோ அல்லது மாதம் ஒருநாளோ கண்ணாடி முன்நின்று மார்பகத்தை அழுத்தி பார்த்து கட்டிகள் எதாவது இருக்கான்னு பார்க்கனும். சில கட்டிகள் வலிக்காது. அதுக்காக அதை அலட்சியப்படுத்தவும் கூடாது. மார்பகத்தை அறுவைச் சிகிச்சையின் மூலம் நீக்குறதுக்கு பேரு `மாஸ்டெக்டோமி’.   மார்பகத்தில் உருவாகும் நீர் நிறைந்த கட்டிகள் இருந்தா அதன் பெயர் சிஸ்ட்பைரோடினோமா இழையும், உருளையுமான திசுக்களால் உருவான உறுதியான கட்டிகள், காலக்டோரியா அளவுக்கு அதிகமான ய்பால் உற்பத்தி, கைனகோமேஸ்டியா ஆண்களுக்கு மார்பகம் பெரிதாவது, ”மஸ்டிடிஸ்” பால் நாளங்களில் அடைப்பு ஏற்படுவது. மாஸ்டால்ஜியா  மாதவிலக்குக்கு முன்  மார்பகத்தில் வலி அல்லது தொளதொள தன்மை காணப்படுவது. மார்புக் காம்பு பேசட்ஸ் வியாதி மார்புக் காம்பில் ஒருவித சுரப்புடன் தெரியும் புற்றுநோய் அறிகுறி. மார்பக புற்றுநோய்  பால் நாளங்கள், சுரபிகள் உள்ளிட்ட மார்பகத் திசுக்களில் உருவாகும் புற்றுநோய். இப்படி விதம்விதமா ரகம் ரகமா மார்பகத்தில் வியாதி வருது. 

ஒரு பெண் கர்ப்பமுற்ற உடன்  தனது மார்பகத்தையும்  பரிசோதனை செய்துக்கனும். மார்புக் காம்புகளில் வெடிப்புகள்  இருக்கா?!  மார்புக் காம்புகள் உள் அழுந்தி இருக்கான்னு அவசியம் செக்கப் செய்துக்கனும்.  குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க  ஆர்வத்தோடும் தன்னம்பிக்கையும் வேணும். மார்பக அளவிற்கும் தாய்ப்பால் சுரப்பதற்கும்  எந்தவித சம்பந்தமும் இல்லை. தாய்ப்பால் சுரப்பதற்கு முக்கிய தூண்டுதலே குழந்தை முட்டி முட்டிப் பால் குடிப்பதுதான்.   குழந்தை எவ்வளவுக்கு எவ்வளவு பால் விரும்புகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பால் சுரக்கும்.  கடைசிச் சொட்டு வரையும் குழந்தையே வாய் எடுக்கும்வரை பால்  கொடுக்கனும்.  இது மீண்டும் பால் ஊறுவதற்கு மிக முக்கிய தூண்டுதலாய் இருக்கும். ஒவ்வொரு முறையும் இரு மார்பகத்திலும் பாலூட்டனும்.   பால் ஊறுவதற்கும், பாலை வெளியேற்றுவதற்கும் பெண்கள் உடலில் உற்பத்தியாகும் ஹார்மோன்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றது. அதனால்  மனதை தைரியமாகவும் ரிலாக்ஸாகவும் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைக்கு பாலூட்டும்போது வெளிக்காரணிகளான கோபம், பழி, டென்சனில்லாம கொடுக்கனும்.  மனதளவில் குழந்தையை நினைக்கும் போதே பால் ஊறுமளவுக்கு  தாய் தன்னை மாத்திக்கனும்.

பாலூட்டும் பெண்கள் ள் ஒரு நாளைக்கு 3 லிருந்து 4 லிட்டர் தண்ணீர் குடிக்கணூம். சத்துள்ள, ஆரோக்கியமான சரிவிகித உணவுகளை உட்கொள்ளணூம். எந்த விதமான உணவுக் கட்டுப்பாடும் தேவையில்லை. பால் ஊறுவதற்கென்று விசேஷமான இயற்கை உணவு அல்லது செயற்கை உணவு என இதுவரை எதுமில்லை. பால் ஊறுதல் என்பது குழந்தைக்கும் தாயுக்குமான உறவினை பொறுத்துதானே தவிர உணவினால் அல்ல.  பாட்டில் பாலை தவிர்ப்பது நலம். அதிலும் ஆறு மாதத்திற்குள் பால் சுரக்கலைன்னு பாட்டில் பாலை கொடுக்க ஆரம்பித்தால் குழந்தை பாட்டில் பாலைதான் விரும்புமே தவிர தாய்ப்பாலை விரும்பாது.  ஏன்னா  தாயின் மார்பிலிருந்து தன் சக்தியை பிரயோகிச்சு உறிஞ்சனும்.   ஆனா, பாட்டிலில் அப்படி உறிஞ்சத் தேவையில்லை. அத்தோடு பாட்டில் பாலோடு காற்றும் குழந்தையின் வயிற்றுக்குள் செல்லும்.  பாட்டில் பாலை அருந்தும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, காது சம்பந்தமான நோய்கள், மூச்சு சம்பந்தமான நோய்கள் போன்றவை ஏற்படும்.  தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.   குழந்தை தேவையான அளவு எடை கூடுவதோடு, தினமும்  குறைஞ்சது 6 முதல் 8 தடவைக்கு  சிறுநீர் கழித்தலும் 4 தடவை மலம் கழித்தலுமிருந்தால் தாய்ப்பால் சரிவர அக்குழந்தைக்கு கிடைப்பதுன்னு அர்த்தம். அதேப்போல் ஒரு பக்கத்தில் பாலூட்டும்போது இன்னொரு மார்பிலிருந்து பால் சொட்டுவதும்  குழந்தைக்கு தேவையான அளவுக்கு பால்  சுரக்குதுன்னு அர்த்தம். அதேநேரத்தில் குழந்தை இரவில் அழுதால் பால் போதவில்லைன்னு அர்த்தம்.  குழந்தைக்கு இத்தனை முறைதான் பால் கொடுக்கனும்ன்னு அவசியமில்லை. குழந்தைக்கு தேவைப்படும்போதெல்லாம் பாலூட்டலாம். ஆறு மாதத்திற்கு பின் இட்லி, பழக்கூழ், கஞ்சி மாதிரியான உணவை கொடுக்கலாம். பந்தாவுக்காக பாட்டிலில் அடைக்கப்பட்ட பவுடர்களை கொடுக்காதீங்க. 

பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் மார்பகத்தை சுத்தமா வச்சுக்கனும். பாலூட்டும் முன்னும் பின்னும் வெதுவெதுப்பான நீரில் கழுவி, உலர்ந்த துணியால் மார்பகத்தை துடைச்ச பின்னே பாலூட்டனும். குழந்தைக்கு உடல் முடியாதபோது பால் சரிவர குடிக்காம பால் கட்டிக்கிச்சுன்னா  சூடான ஒத்தடம் கொடுத்து, அடிக்கடி பாலை பீச்சிடனும். இல்லன்னா, அந்த பால் குழந்தையின் செரிமான பிரச்சனைக்கு கொண்டு செல்லும். சில குழந்தைங்க பாலை அடிக்கடி வாயிலெடுக்கும். இது இயல்புதான். குழந்தையின் எடையில், ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லாதவரை கவலைப்படவேணாம். குழந்தைக்கு பாலூட்டியதும், ஈரத்துணியைக்கொண்டு உதட்டை துடைத்து, மார்பு, முதுகை தடவி விட்டு தோளில் சாய்ச்சுக்கனும். அதனால், வயிற்றிலிருக்கும் வாயு வெளியேறும்.  குழந்தைக்கு படுத்துக்கிட்டு பாலூட்டுதலும் தப்பு. 

  
பேஷன்ற பேர்ல சின்ன குழந்தையை வச்சிக்கிட்டிருக்கும் பெண்கள் வெளில வரும்போது சுடிதார் மாதிரியான மாடர்ன் உடைகளை அணியாம புடவை அணியலாம். புடவையைப்போல் குழந்தைக்கு பாலூட்ட வசதியான உடை ஏதுமில்ல. மற்ற உடைகளில் இந்த சௌகரியம் வராது. அதனால் வெளியிடங்களில் பால் கொடுக்க கூச்சப்பட்டுக்கிட்டு புட்டிப்பாலை கொடுக்க கூடாது. வெளியில் செல்லும்போது தாய்ப்பாலை பீச்சி புட்டியில் கொடுப்பதும் தப்பு. வெளியில் போகும்போது தாய்ப்பால் ஊட்ட வசதியா பிரத்யேகமா வடிவமைக்கப்பட்ட பிரா, நைட்டி, சுடிதார்லாம் விக்குது. தாய்ப்பாலின் மகத்துவத்தை இந்த கால பெண்கள் அறியும்பொருட்டுதான் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை தாய்ப்பால் வாரமா உலக சுகாதார அமைப்பு அமைச்சிருக்கு, தாய்ப்பால் பெறுவது குழந்தையின் உரிமை. அதைத் தருவது தாயின் கடமை.

நன்றியுடன்,
ராஜி

Monday, November 21, 2016

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் - மருத்துவம்

தாய்மை

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் வரிசையில் இன்று...
நமது முந்தைய தலைமுறையினர் ,நல்ல குணமுள்ளவர்களாகவும் ஒழுக்கத்திலும் ,சிறந்து விளங்கினர் .காரணம் அவர்கள் .காசுக்கவோ உடல் சார்ந்த இன்பங்களுக்கவோ .ஆசைப்படாமல் . அடுத்தவர்களை தும்புருத்தாது நல்ல மனங்களோடு ,மானத்திற்கு அஞ்சி நடந்ததினால் தான் தங்களுடைய குழந்தைகளுக்கும்  ,அந்த நல்ல பழக்கவழக்கங்களை தாய்ப்பால் என்னும் அமிர்தத்துடன் ,ஊட்டிவளர்த்தனர் அப்பொழுது .நல்ல சமுதாயம் உருவாகி இருந்தது .மனச்சாட்சிக்கு அஞ்சினர் பொய் ,களவு ,சூது மற்றும் மது போன்ற தீய பழக்கங்களை ஒதுக்கி வைத்து இருந்தனர் ஆனால் ,அதெல்லாம் இன்றைய தலைமுறையினருக்கு இல்லாமல் போய் ஒழுக்கம் என்பது கடுகு அளவு கூட இல்லாமல் போனதற்கு காரணம் தாய்மார்கள் நல்ல பண்புகளை தாய்ப்பாலுடன் ஊட்டாமல் ,வியாபார நோக்கோடு வரும் பவுடர்ப்பால்களை கொடுப்பதினால் தான் நல்ல சமுதாயம் இல்லாமல் போனது ,இந்த பதிவின் நோக்கமே ,பண்டைய காலத்து மருத்துவ முறைகளை மீண்டும் வெளியே கொண்டுவந்து ,நல்ல சமுதாயத்தை உருவாக்க முயற்சிப்பதுதான் .அந்த தாய்மை வரிசையில் இன்று
பச்சை மருந்துப்பொடி

தேவையானவை:

சுக்கு - 100 கிராம்
மிளகு - 25 கிராம்
திப்பிலி - 10 கிராம்
நறுக்கு மூலம் - 25 கிராம்
ஓமம் - 50 கிராம்
கருஞ்சீரகம் - 25 கிராம்
பெருங்காயம் - ஒரு புளியங்கொட்டை அளவு
கடுகு - 50 கிராம்
சீரகம் - 25 கிராம்
அக்கரா - ஒரு சிறிய துண்டு
சித்தரத்தை - ஒரு சிறிய துண்டு
சன்னயிரு - 25 கிராம்
சாலியல் - 50 கிராம்
சதகுப்பை - 50 கிராம்
செய்முறை:

சுக்கு, மிளகு, திப்பிலி, நறுக்கு மூலம், ஓமம், பெருங்காயம், அக்கரா, சித்தரத்தை, சன்னயிரு, சாலியல் மற்றும் சதகுப்பையை அம்மியில் நன்கு தட்டி பிறகு மிக்ஸியில் சேர்த்து அரைத்து பொடியாக்கி சலித்து வைத்துக் கொள்ளவும். இவையெல்லாம் சற்று கடினமாக இருக்கும் என்பதால் நன்கு தட்டிவிட்டு பிறகு மிக்ஸியில் அரைத்தால் மட்டுமே உடைந்து பொடியாகும். இல்லையென்றால், மிக்ஸியின் பிளேடு உடைந்துவிடும். இத்துடன் தேவையானவற்றில் மீதமிருப்பவைகளை சேர்த்து அரைக்கவும். இப்படி அரைத்து சலித்தெடுத்து வைப்பதுதான் பச்சை மருந்துப்பொடி. பிறகு, காற்றுப்புகாத ஒரு பாட்டிலில் போட்டு வைத்து, அவ்வப்போது கஷாயம் செய்து, பாலூட்டும் தாய்மார்களுக்குக் கொடுக்கவும்.
கஷாயம் செய்யும் விதம்:
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டீஸ்பூன் பச்சை மருந்துப் பொடி, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு, தட்டிய கருப்பட்டி சிறிது சேர்த்துக் கரைந்ததும் எடுத்து வடிகட்டி பிறகு பரிமாறவும்.
குறிப்பு:

பாலூட்டும் தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த முதல் மாதம் இதைக் குடிக்கக் கொடுக்கும்போது, கர்ப்பப்பை விரைவில் குணமடைய உதவும். மேலும், தாய்ப்பாலின் மூலமாக இந்த மருந்தின் பலன் குழந்தையைச் சென்றடையும்; குழந்தைக்கு வயிற்று வலி, ஒவ்வாமை போன்றவை ஏற்படாமல் தவிர்க்கும்

Saturday, November 19, 2016

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் - மருத்துவம்

தாய்மை
வலியின் உச்சத்தில் 
உன்னைப் பெற்றெடுத்த  
உன் தாய், உயிர் கொடுத்து,
வலி மறந்து புன்னகைக்கச் செய்கிறாய் 
உன் விரல்களால் தீண்டியதுமே
அம்மா என்பது ஒவ்வருவருக்கும் நடமாடும் தெய்வமாகும் ,ஒரு நல்ல தாயால்தான் நல்ல குழந்தைகளை ஈன்றெடுக்க முடியும். அவர்கள் நனறாக வளர அந்த தாய் ,தாய்ப்பாலுடன் அன்பையும் ,பிற உயிர்கள் மேல்கருணை காட்டும்ப்பழக்கமும் ,.ஒழுக்கத்தையும் அதனூடே சேர்த்து ஊட்டுவதன் மூலம் தான் ஒரு நல்ல குழந்தையாக அவர்கள் வளரமுடியும். அதற்க்கு மாற்றாக கடையில் விற்கும் கண்ட கண்ட பாக்கெட் ,டின் பால் பவுடர்களை வாங்கி கொடுப்பது.  
அதை செய்யும் போதே அந்த வியாபாரிகள் வியாபார நோக்கோடு செய்வதால் செய்பவர்களின் வியாபார எண்ணமும் ,அடுத்தவர்களை ஏமாற்றியாவது நம்முடைய பொருளை விற்கவேண்டும் என்ற சுயநலமும் நிறைந்து இருப்பதால் ,அதையே குடித்து வளரும் குழைந்தைகள் ,அதுபோலவே வளரும் அதன் காரணமாக  அடுத்தவர்களை ஏமாற்றுதலும் ,திருட்டுத்தனமும் ,ஒழுக்கமின்மையும் கொண்டு வளர்ந்து ,கடைசியில் வியாபார நோக்கோடு ,பெற்றவர்களையே கூடேவே வைத்து இருந்தால் ,காசு செலவாகிவிடும் என வயதான காலத்தில் தனித்து விட்டு போய் விடுகின்ற்னர்.அது கொடிய பாவம்.
இந்த சமுதாய சீர்கேட்டிற்கு என்ன காரணம் .பிள்ளைகளுக்கு சரிவர ஒரு தாய் அன்பெனும் அமுதமாகிய தாய் பால் ஊட்டாமை தான் காரணம். அவர்கள் மேலும் குறை சொல்வதைக்கு ஒன்றும் இல்லை இன்றைய ,அவசரகால வாழ்க்கை ,அதனால் வாரங்களுக்கு முன் பேக்கிங் செய்யப்பட்டு ,தன்னுடைய சத்துக்களை எல்லாம் இழந்து வெறும் சக்கையான உணவுகளை உண்பது தான் கரணம் .இவற்றை எல்லாம் தவிர்த்து ,நம்முடைய குழந்தைகளுக்கு ,நாம் நல்லமுறையில் தாய்ப்பால் எனும் அமுதம் .ஊட்ட இந்த எளிய மருத்துவ முறை உதவும் ,இதை நமது தாய்மார்கள் தெரிந்து கொண்டு .தமது குழந்தைகளுக்கு .நல்ல தாய்களாக இருக்கட்டும் .
கர்ப்பகாலம் முதல் பாலூட்டும் காலம் வரை பெண்களுக்கான சத்துணவு சமையல்கள் பற்றிச் சொல்லிவரும் ஒரு உயர்ந்த நிலையில் இருக்கும் மக்கள் பயனடையவேண்டும் என நினைக்கும் ஒரு உயர்ந்த உள்ளத்திடம்  இருந்து மறைந்துவிட்ட இந்த  பாலூட்டும் பெண்களுக்கான பிரத்யேக சமையல்கள்! பற்றிய குறிப்புகளை தொகுத்து அளிக்கிறேன். இங்கே சொல்லப்பட்டிருக்கும் பொருட்கள் எல்லாம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
ரோஸ்டட் கார்லிக்
தேவையானவை:
பூண்டு - 4
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை 1:
பூண்டை உரித்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிது நெய் ஊற்றி, உரித்த பூண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் நன்றாக வேகும்வரை வதக்கிப் பரிமாறவும். பூண்டு நன்கு வெந்துவிட்டால் லேசான இனிப்புச் சுவையுடன் இருக்கும்.

செய்முறை 2:
அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றாமல், உரிக்காத பூண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகும் வரை வறுத்து எடுத்து, பின்னர் உரித்துச் சாப்பிடவும். பூண்டின் தோல் அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும்.

குறிப்பு:
பூண்டு நன்றாக வெந்திருந்தால் மிருதுவாகவும் சுவையுடனும் இருக்கும். வேகாத பூண்டு காரமாக இருக்கும். வெந்த பூண்டுகளை தினமும் சாப்பிட்டு வர... பால் சுரப்பு நன்றாக இருக்கும்.

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் வரிசையில் அடுத்தது
 பத்தியக் குழம்பு
தேவையானவை:
பூண்டு - 5 பல்
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
வெல்லம் - அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மசாலா அரைக்க:
தேங்காய் - 2 சிறிய துண்டுகள்
பூண்டு - 5 பல்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
செய்முறை:
புளியைக் கால் கப் தண்ணீரில் ஊறவைக்கவும். தேங்காயைச் சிறு துண்டுகளாக வெட்டி, அதனுடன் மசாலா அரைக்கக் கொடுத்துள்ள பிற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெந்தயம் தாளித்து, உரித்த பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்து சிறிது தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் புளிக் கரைசலைச் சேர்த்து பச்சை வாடை நீங்கும்வரை அடுப்பில் வைத்து, இடித்த வெல்லம் சேர்த்து சில நொடிகள் வைத்து பின்னர் இறக்கவும். விரும்பினால், கறிவேப்பிலையை சிறிது எண்ணெயில் தாளித்து இப்போது குழம்பில் சேர்த்துக்கொள்ளலாம்.

குறிப்பு:
தேங்காய்க்கு பதிலாக ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பை சேர்த்தும் பத்தியக் குழம்பு செய்யலாம். இதில், பூண்டுடன் சுண்டைக்காய் வற்றலையும் சேர்த்து வதக்கியும் செய்யலாம்.
மீண்டும் ஒரு மருத்துவ குறிப்பினூடே சந்திக்கலாம் நன்றி வணக்கம்