Showing posts with label பூமி. Show all posts
Showing posts with label பூமி. Show all posts

Monday, June 15, 2020

கவலைகளை மறக்க இந்த பாப்பாவோட சிரிப்பை பாருங்க -ஐஞ்சுவை அவியல்

போர்க்கால அவசரத்துக்கு உதவும்ன்னு கோவில்,  அரண்மனைகளிலிருந்து கோட்டைக்கு வெளியில் அல்லது காடு, மலைகளுக்கோ போற மாதிரி சுரங்கப்பாதை  அமைச்சிருப்பாங்களே! அதுமாதிரி, ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் சுரங்கப்பாதை அமைக்கலாமில்ல!!

Monday, April 08, 2019

இப்படிப்பட்ட ஒரு ஆசிரியர்கள்தான் இப்போதைக்கு தேவை - ஐஞ்சுவை அவியல்

மாமா!  விஷ்ணு கையிலிருக்கும் சுதர்ஷ்ண சக்கரத்துக்கும், பூமிக்கும் ஒற்றுமை இருக்குன்னு டிவில ஒருத்தர் சொல்றார். நிஜமா மாமா?!

நிஜம்தான் புள்ள! விஷ்ணு கையிலிருக்கும் சக்கரத்தை சிவபெருமான் விஷ்ணுவுக்கு கொடுத்ததாய் புராணங்கள் சொல்லுது.

இதென்ன புதுக்கதை மாமா?! விஷ்ணுவுக்கு சிவபெருமான் ஏன் சுதர்ஷ்ண சக்கரம் கொடுக்கனும்?! ஒருவேளை விஷ்ணுவின் தங்கை பார்வதியை கல்யாணம் கட்டி கொடுத்ததாலா?!
ம்ஹூம். இந்த கிண்டல்தானே வேணாங்குறது. தினந்தோறும் சிவனை நோக்கி ஆயிரம் பூக்களை கொண்டு பூஜிப்பது விஷ்ணு பகவானின் வழக்கம். அப்படி பூஜித்து வந்த ஒருநாள், ஆயிரத்துக்கு ஒரு பூ குறையவே, தன்னோட இரண்டில் ஒரு கண்ணை பெயர்த்தெடுத்து சிவன் திருவடியில் சமர்பிக்க, விஷ்ணுவின் பக்தியை மெச்சி தன் கையில் வைத்திருந்த சுதர்ஷ்ண சக்கரத்தை விஷ்ணுவிற்கு கொடுத்தார் என்கிறது புராணங்கள்.  சிவனுக்கு எப்படி சக்கரம் வந்தத்துன்னு பார்த்தா, இந்திரன் ஒருமுறை சிவனை தரிசிக்க, கயிலாயத்துக்கு போய்க்கிட்டிருந்தார். அவரை சோதிக்க எண்ணிய சிவன், மகா ருத்ர சொரூபமெடுத்து, இந்திரன் முன் நின்றார். வந்தது சிவன் என்பதை உணராத இந்திரன் ருத்ரன்மீது தனது வஜ்ராயுதத்தை ஏவினார். சிவன்மீது வஜ்ராயுதம் மோதியதில் சிவன் உடல் சிலிர்த்து கோபாக்னி உண்டாகியதன்மூலம் ருத்ரனுக்கு வேர்த்து கொட்டியது. அதன்பின்னரே வந்தது சிவன் என உணர்ந்த இந்திரன் அவரிடம் மன்னிப்பு கேட்டார்.  ருத்ரனின் வியர்வை துளிகள் கடலில் சிந்தியது.   


கடலில் விழுந்த ருத்ரனின் வியர்வைத் துளிகள் ஒன்று சேர்ந்து அரக்கனாக உருவானது. பிரம்மதேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு, சமுத்திரராஜனால் வளர்க்கப்பட்ட அந்த அசுரன், ஜலந்தரன் என அழைக்கப்பட்டான். ருத்ரனின் வியர்வையால் தோன்றியதாலும், பிரம்மாவால் ஆசீர்வாதிக்கப்பட்டவன் என்பதாலும் ஜலந்தரனுக்கு  தலைக்கணம்  ஏறியது. எல்லார்மீதும் போர் தொடுத்து எல்லாரையும் வெற்றிக்கொண்டான். தன்னை மிஞ்ச ஆள் இல்லை என ஆணவத்தில் அகில உலகத்தையும் ஆட்டி படைத்தான். முடிவில் சிவனையும் வெற்றிக்கொள்ள கிளம்பி, சிவனை போருக்கு இழுக்க கயிலாயம் நோக்கி போனான். அப்படி போகும்போது வழியில் ஒரு வயசான ஆள் ஒருத்தர், ஜலந்தரனை பார்த்து, யார் நீ?! எங்க போறேன்னு விசாரிச்சார். நான் ஜலந்தரன்!! கயிலாயத்தை வெல்ல வந்தேன் என்றான் ஆணவத்துடன். கயிலாயத்தை வெல்லும் வலிமை உனக்கு இருக்கா என நான் சோதித்து பார்க்கவேண்டுமென சொல்லி தரையில் ஒரு சக்கரத்தை வரைந்தார். இதை முழுசாய் எந்த விள்ளலும் இல்லாம பெயர்த்தெடுத்தால் உனக்கு வலிமை இருக்குன்னு நான் ஏத்துக்குறேன்னு கிழவர் சொன்னார்.

கேவலம் மண்ணை பிளந்து எடுப்பதுலாம் ஒரு பரிட்சையா என எண்ணி, சக்கர வடிவத்தை நகத்தால் கீறி, சக்கர வடிவத்தின் நகத்தால் கீறி அடியில் விரல்களை நுழைத்து தூக்க முயற்சித்தான். அப்படி எடுத்ததும்தான் தாமதம் சக்கரம் தரையிலிருந்து விடுபட்ட உடனேயே அதி வேகமாக சக்கரம் சுழல துவங்கியது. அது சுழன்று ஜலந்தரனை வீழ்த்தி, சிவன் கையில் தஞ்சமடைந்தது சுதர்ஷ்ண சக்கரம்.


இந்த சுதர்ஷ்ண சக்கரத்தினை வேண்டிதான் விஷ்ணு சிவனை நோக்கி தவமிருந்தார். அப்படி தவமிருக்கவும் ஒரு காரணம் இருந்தது. அது என்னன்னா, . திருமாலின் சேவையே பெரிதெனக் கருதி வாழ்ந்தவள் துளசிதேவி. அவள் ஒரு சாபத்தால், பூவுலகில் 'பிருந்ததை’ என்பவளாக, மிக்க அழகுடன், காலநேமி என்கிற அரக்கனுக்கு மகளாகப் பிறந்தாள். அவளே ஜலந்தரனின் மனைவியானாள். அவளது பதிவிரதா சக்தியால்தான், அழியா வரம் பெற்றிருந்தான் ஜலந்தரன். முடிவில், சிவபெருமானால் அவன் அழிந்ததும், பிருந்ததை தீக்குளித்தாள். எப்போதும் திருமாலுடன் வாசம் செய்யும் வரம் பெற்று, மீண்டும் துளசியாகி, சேவையாற்றி வந்தாள். ஜலந்தரனுடன் வாழ்ந்தவள் துளசி. எனவே, அவன் உறைந்திருக்கும் மகா சுதர்சனச் சக்கரத்தையும் தன் திருக்கரத்தில் வைத்து, பிருந்தா- ஜலந்தர சங்கமத்தைத் தன்னுள் நிகழ்த்த விரும்பினார் திருமால். மேலும் பூவுலகில், தர்மத்தினை நிலைநாட்ட  சுதர்சனத்தின் பங்கு இருப்பதை அறிந்து சிவனை நோக்கி தவமிருந்து விஷ்ணு பெற்றார் என்கிறது புராணங்கள். 

புராணக்கதைகள் போதும் மாமா! நான் கேட்டதுக்கு பதில் இல்லியே! பூமிக்கும் சக்கரத்துக்கும் என்ன சம்பந்தம்?!

இரு அடுத்து அதுக்குதான் வரேன். 

மணலிலிருந்து சக்கரத்தினை பெயர்த்தெடுத்ததும் சக்கரம் சுழன்றதா சொன்னேன்ல! இயக்கத்தில் இருக்கும் ஒரு பொருள், அதிலிருந்து பிரியும் பொருளும் மூலப்பொருளின் இயக்கத்திலேயே இயங்கும் என்பது இயற்பியல் விதி. இதுக்கு எடுத்துக்காட்டா பலது சொல்லலாம், பஸ்சிலிருந்து இறங்கும்போது கூடவே கொஞ்ச தூரம் ஓடுறதும், மிக்சில அரைக்கும்போது மூடி கழண்டுட்டா அதிலிருக்கும் பொருட்கள் சுழன்றுக்கிட்டே சிந்துறதும் தினத்துக்கும் பார்க்கிறோம். அதுமாதிரிதான், அதுவரை இருந்த மண்சக்கரம் சலந்தரனால் பூமியிலிருந்து விடுபட்டதும்  பூமியின் வேகத்தில் சுழன்றது. அப்படி அந்த மண்சக்கரம் வினாடிக்கு 30கிமீ வேகத்துல சுத்துனதா சொல்றாங்க. பூமி சுத்துற வேகமும் அதுதான்ன்னு ஆராய்ச்சிகள் சொல்லுது. இதுதான் சுதர்ஷ்ண சக்கரத்திற்கும், பூமிக்குமான ஒற்றுமை.

ஓ! புரிஞ்சுக்கிட்டேன் மாமா. நல்லது, கெட்டது என உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர்ன்னு எல்லாரும் சேர்ந்து சாப்பிடுறதை பந்தின்னு சொல்றோமே ஏன்னு தெரியுமா?!

தெரியாதே! நீதான் சொல்லேன்...

சமஸ்கிருதத்தில் பங்க்தின்ற வார்த்தைதான் தமிழ்ல பந்தின்னு ஆனது. பங்க்தின்னா சேர்ந்து சாப்பிடுறதுன்னு பொருள். மனத்தூய்மையான ஒருத்தர் பந்தியில் சாப்பிட்டா, அந்த சாப்பாடுலாம் சுத்தமாகவும், புனிதமாகவும் மாறிடும் என்பது ஐதீகம். அதனால் அப்படிப்பட்ட மனத்தூய்மையானவரை பங்க்தி பாவனர் என சொல்வாங்க. நம்மோடு சேர்ந்து சாப்பிடுறவங்க குணம் பக்கத்திலிருக்கவுங்களுக்கும் பரவி எல்லோருமே நல்ல மனசுக்காரங்களாகிடனும்ன்னு உருவானதுதான் சமபந்தியின் நோக்கம்.
சாப்பாட்டை சாப்பிடுறதில்கூட நல்ல விசயத்தை புகுத்த பார்த்த நம்ம முன்னோர்கள் வாழ்ந்த நாட்டில்தான் சக உயிர்கள் வாழ இயலாததா ஆக்கி வச்சிருக்கோம்.
இந்த பூமி நமக்கானது மட்டும்தான்னு நினைச்சு எல்லாத்தையும் பாழ்படுத்தி வச்சிருக்கோம். இந்த படத்தை பார்த்ததும் மனசு நொந்துட்டுது மாமா. 

நல்லது, கெட்டதை எடுத்து சொல்ல சரியான ஆட்கள் நம்மிடையே இல்ல. இதோ இந்த ஆசிரியை மாதிரி சொல்லிக்கொடுத்து வளர்த்திருந்தா நாம ஏன் இப்படி பூமியை பாழ்ப்படுத்தி வச்சிருக்கோம்?!

மாற்றத்துக்கான நேரம் வந்திட்டுது மாமா!

மாற்றம் எல்லோரிடத்திலும் வரனும். அப்பதான் எல்லாருமே நலமோடு வாழ்வோம். 

நன்றியுடன்,
ராஜி

Monday, December 10, 2018

புடலைங்காய்க்கும், கத்தரிக்காய்க்கும் குழந்தை பிறந்தா எப்படி இருக்கும்?! - ஐஞ்சுவை அவியல்

அடியேய்! உன்னோடு மல்லுக்கட்டி கட்டியே என் ஆயுசு முடிஞ்சிடும்போல! எதாவது சொன்னா காதுல வாங்குறியா?! உன்போக்குல போறியே! உன்னைலாம்  திட்டக்கூடாது.  உன்னை படைச்ச பிரம்மன்மட்டும் கைக்கு கிடைச்சா.. உண்டு இல்லன்னு பண்ணிடுவேன்
என்னாது என்னை பிரம்மன் படைச்சானா?! லூசா மாமா நீ?!

இல்லியா பின்ன?! இந்த உலகத்தை படைச்சது பிரம்மன். அவர்தான் ஆக்கல் தொழிலின் முதலாளிடி. உயிர்களை படைக்குறதுதான் அவர் வேலை...

இப்படிதான் சொல்லி பலகாலமா ஏமாத்திக்கிட்டிருக்காங்க. 13.8 பில்லியன் வருசத்துக்கு முந்தி பிரபஞ்சம் உருவாகியது.    13.6 பில்லியன் வருசத்துல பால்வெளி அண்டம் உண்டானது. 4.6 பில்லியன் வருசத்துல பூமி உண்டானது. 4.5பில்லியன் வருசத்துல நிலா உண்டானது. 4.28 பில்லியன் வருசத்துல தண்ணீர் திரவ வடிவத்துக்கு வந்துச்சு.  3.9 பில்லியன் வருசத்துல பச்சையம் உருவானது. 
3.5 பில்லியன் வருசத்துல ஒரு செல் உயிர்களான அமீபா, பாரமீசியம், பாக்டீரியாலாம் தோன்ற ஆரம்பிச்சுது. 2.9 வருசத்துல பகோலா பனிப்பாறைகள் உண்டானது. 2.5ல கடல்லயும், வளிமண்டலத்துலயும் ஆக்சிஜன் கிடைக்க ஆரம்பிச்சது. 1.6ல உயிர்கருக்கள் உண்டாக உண்டானது. 510 மில்லியன் வருசத்துல முதுகெலும்புள்ள உயிரினம் கடல்ல உருவானது.
420 மில்லியன் வருசத்துல செடிகளும், பவளப்பாறைகளும் உண்டானது. 400 மில்லியன் வருசத்துல காடுகள் உருவானது. 360வது மில்லியன் வருசத்துல முதுகெலும்புள்ள கடல்வாழ் உயிரினத்துக்கு கால் முளைக்க ஆரம்பிக்குது. 350மில்லியன் வருசத்துல அந்த உயிரினம் வளர்சிதை மாற்றமடைஞ்சு தரையில் நடக்க ஆரம்பிச்சது. 230 மில்லியன் வருசத்துல டைனோசர் காலம் ஆரம்பிச்சது. 199 மில்லியன் வருசத்துல பறப்பன, ஊர்வன தோன்றியது. 65 மில்லியன் வருசத்துக்கு முந்தி விண்கல் பூமில விழுந்து, எரிமலை வெடிச்சு டைனோசர்லாம் அழிஞ்சுது. 63வது மில்லியன்ல நஞ்சுக்கொடி(தொப்புள்கொடி) பாலூட்டிகள் பிறக்குது.  45மில்லியன் நவீன பாலூட்டிகள்ன்னு சொல்லப்படும் குரங்குகள் மாதிரியான உயிரினம் உருவாகுது.
7மில்லியன் வருசத்துல நம்ம முன்னோர்களான சிம்பான்சி உருவாச்சு. அதுக்குப்பின் படிப்படியா முன்னேறி Homosapiensன்ற ஆதிமனிதன் 2,00,000 வருசம் முன்ன உருவானான். 70,000 வருசத்துக்கு முன்ன பூமி குளிராகவும், அழுக்காகவும் மாறி Ice ageக்கு மாறுச்சு. 60,000 வருசத்துல அதிலிருந்து ஆதிமனிதனில் கொஞ்ச பேரு ஆப்பிரிக்கா கண்டத்துக்கு போனாங்க.

எங்க இருந்துடி அவங்கலாம் ஆப்பிரிக்காவுக்கு போனாங்க?!
ஹோமோசேப்பியன்ஸ்ல எங்கிருந்தும் ஆப்பிரிக்காவுக்கு போகல. அந்த சுற்றுவட்டாரத்திலதான் இருந்தாங்க. பூமி பாகப்பிரிவினை நடந்திருக்கும் இந்த நேரத்தில் இப்படி சொன்னால்தான் விளங்கும். அதும் உன்னைமாதிரி தத்திகளுக்கு இப்படிதான் சொல்லனும். ஹோமோசேப்பியன்ஸ்லிருந்து Homininன்ற உயர்நிலை விலங்கினம் உருவானது. இவங்க கோரைப்பற்கள் குரங்கைவிட சின்னதா இருந்துச்சு. Homininn பத்திய முதல் தடயம் ஆப்பிரிக்காவில்தான் கிடைச்சது. சரியா இதேக்காலக்கட்டத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு உயிரினம் தோணுச்சு. அந்த உயிரினத்தின் தொடை எலும்புகள், குனிஞ்சு நாலுகாலால் நடக்க ஆரம்பிச்சுது.
50,000வருசத்துல கொஞ்சபேரு ஆஸ்திரேலியா போனாங்க. அதேக்காலக்கட்டத்துல கொஞ்சபேரு ரெட் சீ பக்கம் போனாங்க. 35,000 வருசத்துல ஆசியாவின் நடுப்பகுதியில் மக்கள்தொகை பெருக்கம் உண்டானது. நாப்பது வருசத்துக்கு முந்தி மனுசன் தென்கிழக்கு வழியா ஆப்பிரிக்காவுக்குள் நுழைஞ்சு Neanderthalsன்ற ஆதிமனிதனை காலி பண்ணாங்க.

ஆசியாவின் ரஷ்யாவுக்கும், வடஅமெரிக்காவின் அலாஸ்காவுக்கும் இடையிலிருக்கும் நீரிணையான பெரிங் நீரிணையை கடந்து அமெரிக்காவுக்குள் மனுசன் போனான்.  அடுத்து Ardipithecus Ramidus உருவாகியது. இதோட பாத எலும்புகள் ரெண்டு கால்ல நடக்க ஆரம்பிச்சு வச்சுது
நாளாக.. ஆக Homininல் மாற்றம் உண்டானது. இதனால் நல்லா நடக்கவும் , மரமேறவும் முடிஞ்சது. அதுக்கு தகுந்தமாதிரி 4மில்லியன் வருசத்துக்கு முந்திவரை இதனோட கால்விரல்களுக்கிடையே அதிகப்படியான இடைவெளி இருந்துச்சு. அதனால் அது ஈசியா மரமேற முடிஞ்சது. 4மில்லியன் வருசத்துக்கப்புறம் அந்த கால்விரல் இடைவெளி காணாம போனது. Homininsல புது இனம் வர ஆரம்பிச்சிச்சு . அதோட பேரு Kenyanthropus 3 மில்லியன் வருசத்துக்கு முந்திவரை இவங்க ஆப்பிரிக்காவில்தான் அதிகப்படியா இருந்தாங்க. அடுத்தது அதோட பாத எலும்பான Bipedalism மனுசன மாதிரி ரெண்டு கால்ல நடக்க வச்சுது . அடுத்து கற்களாலான உபகரணங்களை பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. எத்தியோப்பியாவில்தான் முதல் கல்லாலான உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதுன்னு சான்றுகள் சொல்லுது.
நம்ம வம்சாவழியினர்.
மனுசனுக்கு பெருத்த சவாலா இருந்த நெருப்ப Homo Heidelbergensisதான் கையாள கத்துக்கிட்டாங்க. homo neanderthalensis இதுக்கிடையில் ஒருபுறம் ஓரிடத்தில் தங்கி 12,000வருசத்துல விவசாயம் செய்ய ஆரம்பிச்சாங்க.அதுக்கப்புறம் சக்கரத்தை கண்டுப்பிடிக்க வாழ்க்கை எளிமையா மாற ஆரம்பிச்சது. பூமிப்பகுதி முழுக்க இவங்க பரவ ஆரம்பிச்சாங்க. இந்த காலக்கட்டத்துல ஹோமோசேப்பியன்ஸ் இனம் அழிய ஆரம்பிச்சது. இதுக்கு காரணம் இயற்கையோடு போட்டி போட்டதால்ன்னு சொல்றாங்க. 4,500ல எகிப்துல பிரமிட் கட்ட ஆரம்பிச்சாங்க.
1543ல அறிவியல் யுகம் உருவானது. 1760ல தொழிர்புரட்சி உண்டானது. 1903ல முதன்முதலா விமானத்தை கண்டுபிடிச்சாங்க. 1914ல முதல் உலகப்போர் உண்டானது. 1939ல இரண்டாவது உலகப்போர் வந்துச்சு. 1969ல நிலாவுக்கு போனான். டிவி, ஃப்ரிட்ஜ், கார், செல்லுலர்ன்னு எத்தனையோ கண்டுபிடிப்புகளை மனுசன் கண்டுப்பிடிச்சான். இப்படிதான் இன்றைய உலகம் உருவானது. அதைவிட்டு பிரம்மன் உலகை படைச்சான். ஏவாள் கேட்டதால ஆதாம் ஆப்பிளை பறிச்சு கடிச்சதால உயிரினம் உண்டானதுன்னு கதை விடுவாங்க அதுலாம் நம்பாத மாமா.

அப்ப கடவுள்லாம் பொய்யா?!

அதுக்கும் என்னால பதில் சொல்லமுடியும். அதுலாம் இன்னொரு பதிவில் பார்க்கலாம். உலகம் உருவான கதையை மட்டும்தான் இங்க சொன்னது. உலகம் எப்படி உருவாச்சுன்னு நான் சொன்னது துளியூண்டுதான். முழுசா தெரிஞ்சுக்கனும்ன்னா Jared diamond எழுதுன Guns, germs and steel ஐ படிக்கலாம். இல்ல என்னைய மாதிரி இங்கிலீஷ் தெரியாதவங்க இந்த புத்தகத்தை படிக்கலாம். அதைவிட்டு பிரம்மா, ஜீசஸ்தான் உலகை படைச்சாங்கன்னு ப்ரூடா விடுறவங்களை நம்பாத மாமா.

இப்படி பல பில்லியன் வருசமா நல்லபடியா இருந்த இந்த உலகத்தை, ஒரு 15,000 வருசத்துக்கு முந்தி வந்த மனுசன் பாழ்படுத்த ஆரம்பிச்சு, இன்னிக்கு மனுசனை தவிர மத்த உயிரினம் வாழவே லாயக்கில்லாம ஆக்கிட்டான். இந்த பிரபஞ்சம் எப்படி நம்மக்கிட்ட மாட்டிக்கிட்டு லோல்படுதுன்னு ஒரு உதாரணம் மேலிருக்கும் இந்த படம்...
தலையெழுத்தென்றே தெருவில் மூன்று பத்து ரூபாய்கென விற்கும் அவள் கைகளில் தொங்குகிறது அவள் தலையெழுத்தினை சரியாக எழுதாத கடவுள்கள்.....!

புடலைங்காயும், கத்திரிக்காயும் கலப்பு மணம் பண்ணி பிறந்த பிள்ளைங்க போல இருக்குது மாமா இந்த கத்திரிக்கா...

எப்பயுமே என்னைதான் திட்டுவே . இன்னிக்கு உன்கிட்ட  மாட்டிக்கிட்டது  கடவுளா ?! ரைட்டு....

நன்றியுடன் 
ராஜி 

Thursday, November 08, 2012

நான் சின்ன புள்ளையா இருக்கும்போது!!...

                                      

1. சத்துணவு சோறெல்லாம் நல்லா ருசியா இருக்கும்ன்னு நினைச்சுப்பேன்!!...,

2. நான் இருக்குற ஊருல மட்டும்தான் நிலா இருக்குன்னும்.., நான் எங்க போனாலும் கூடவே வருதுன்னும் நினைச்சுப்பேன்!!...,

3. டீச்சர்லாம் குடை வெச்சுக்கிட்டும்.., கண்ணாடி போட்டுக்கிட்டும் உர்ர்ர்ர்ருன்னு இருப்பாங்கன்னு நினைச்சுப்பேன்!!...,

4. அண்ணன், தங்கச்சிலாம் “பாசமலர்” படத்துல வர்றா மாதிரி அன்பா, இருப்பாங்கன்னும நினைச்சுப்பேன்!!..,

5. சினிமா பார்க்கும்போது. பெரிய பெரிய பூதம்லாம் தியேட்டரை தலையில தூக்கிகிட்டு போய் காட்டுதுங்க, படம் முடிஞ்சதும் மறுபதியும் இங்கயே கொண்டு வந்து விட்டுடுதுங்கன்னு நினைச்சுப்பேன்!!...,

6. பெரியவளானதும், நம்பியார், அசோகன், கிட்டியை எல்லாம் கொன்னுடனும் நினைச்சுப்பேன்!!...,

7.  ஆம்பிள்ளை போலீசெல்லாம் கெட்டவங்கன்னும், பொம்பளை போலீசெல்லாம் நல்லவங்கன்னும் நினைச்சுப்பேன்!!...,

8.  பெரியவளானதும் வைஜெயந்தி ஐபிஎஸ் போல பெரிய கான்ஸ்டபிள் ஆகி கெட்டவங்களைலாம் பறாந்து பறந்து அடிக்கனும்ன்னு  நினைச்சுப்பேன்..., (முக்கியமா எங்க ஸ்கூல் பியூனை.., அவந்தான் எங்க வூட்டு பக்கத்துல குடியிருந்துக்கிட்டு அங்க நடக்குறதை இங்கும்.., இங்க நடக்குறதை அங்கும் போட்டு குடுக்குறது!!...,

9. கொசுவை ஒழிக்க, தினமும் பத்து கொசு அடிச்சு கொண்டு வந்து காட்டனும்ன்னு அரசங்கமே சட்டம் போட்டு ஊருக்கு ஒரு ஆஃபீஸ் வெச்சு குறிச்சுக்கனும்ன்னு நினைச்சுப்பேன்!!...,

10. காலேஜ் படிச்சு ஒரு டிகிரி வாங்கிட்டாலே வேலை கிடைச்சு ஒரே ப்ப்ப்ப்ப்ப்பணக்காரங்களாயிடலாம்ன்னு நினைச்சுப்பேன்!!..,

11. சாமிலாம் பெரிய சைஸ் ஜல்லடைல ஊத்துற தண்ணிதான் “மழை”ன்னு நினைச்சுப்பேன்!!...,

 12. பெரியவளாகி கல்யாணம் கட்டிக்கிட்டு வூட்டுக்காரரையும்.., புகுந்த வூட்டினரையும் பத்திரமா பார்த்துக்கிட்டு நல்ல பொண்ணுன்னு பேரெடுக்கனும்ன்னு நினைச்சுப்பேன்!!...,

13.  எங்க ஊரு மணியக்காரருக்குதான் எல்லா ”பவரும்” இருக்கும்ன்னு நினைச்சுப்பேன்!!....,

14. எங்க ஊரு பூசாரிக்கிட்ட போய் மந்திரிச்சாலே எல்லா வியாதியும்.., சரியாகிடும்ன்னு நினைச்சுப்பேன்!!...,

15. எங்க பக்கத்து வீட்டு கார்த்தியண்ணாக்குதான் எல்லாமே தெரியும்ன்னு நினைச்சுப்பேன்!!...,

16. ஃபிளைட்  ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல போய் நின்னுக்கும்.., பூமி சுத்திக்கிட்டு வரும்போது எந்த நாட்டுல இறங்கனுமோ அப்போ இறங்கி கீழ வந்துடும்ன்னு நினைச்சுப்பேன்!!...,

17. கல்யாணம் கட்டிக்கிட்டா “அப்பா”வைத்தான் கட்டிக்கனும்ன்னு நினைச்சுப்பேன்!!...,

18. அடுப்புல குண்டானை வெச்சு, பருப்பு, காய், மிளகாய்த்தூள் போட்டு கொதிக்க வெச்சா அதான் சாம்பார்ன்னு நினைச்சுப்பேன்!!...,

19. உலகத்துலேயே ருசியான பலகாரம் “தேன் மிட்டாயும், கலர் அப்பளமும்”தான் நினைச்சுப்பேன்!!....,

20.மெட்ராஸ், பெங்களூர், கல்கத்தாலாம் வெளிநாட்டுல இருக்குன்னு நினைச்சுப்பேன்!!..,

                                                                                                                        (தொடரும்...., )

              

இந்த தீபாவளியை மகிழ்ச்சியா கொண்டாட.., புது விதமான ”பதிவர்கள் பெயர் தாங்கிய வெடிகள்” அறிமுகம்  நமது தளத்தில் திங்களன்று....,