Friday, August 27, 2010
நிழல் கவிதைகள்
கனாக்கால நாட்கள்
குடைக்கு வெளியே குளிர் மழை..,
சத்தியத்தைத் தொலைத்துவிட்டு
மழைக்கு ஒதுங்கிய
அந்த சில நிமிடங்கள்...,
உள்ளே ,சில பார்வைகள்,
சில பரிமாறல்கள்,
சில கூட்டல்கள்,
சில கழித்தல்கள்...,
மழை நின்றது.....,
குடைக்கு இனி அவசியமில்லை.
நிமிடங்கள், மணிகளாயின......,
மணிகள், நாட்களாயின.....,
நாட்கள், வாரங்களாயின....,
வாரங்கள், மாதமாயின..,
மாதங்கள், வருடங்களாயின...,
ஆனாலும்,
மீண்டும் திரும்ப வரவேயில்லை
"அந்த சில நிமிடங்கள்"
ஆனாலும்,
அவ்வப்போது வந்து
நுரையீரல்களில் ஆக்சிஜன் நிரப்பிவிட்டு செல்லும்.
"அந்த சில நிமிடங்கள்"
போகட்டும்,
மீண்டும் வாழ்வில்
ஒருபோதும் திரும்ப வரவே வராத,
"அந்த கனாக் கால நாட்கள்"
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம் நண்பரே தங்களது வலைப் பதிவினை வலைசரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன் .நன்றி
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2012/03/blog-post_02.html
உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html
ReplyDelete