Wednesday, March 07, 2012

பரிட்சைக்கு நேரமாச்சு...,


தேர்வுக்கு செல்லும்  மாணவர்கள் கவனத்திற்கு:

தேர்வு நடைப்பெறும் இடத்திற்கு தேர்வு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே சென்றுவிடுவது நல்லது. இதனால் தேர்வு மையத்திற்கு தாமதம் ஏற்பட்டு பதட்டம் ஏற்படுவதைத் தடுக்க முடியும். தேர்வுக்கு முதல் நாளிலேயே தேர்வுக்கு கொண்டு செல்ல வேண்டிய பேனா, பென்சில், ரப்பர், ஜியாமிண்ட்ரி பாக்ஸ் , ஹால் டிக்கட் போன்றவற்றை தயாராக எடுத்து வ்வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் தேர்வுக்கால அட்டவணையை அனைவருக்கும் தெரிகிற மாதிரியான இடத்தில் ஒட்டி வைக்க வேண்டும். அப்போதுதான் எந்த தேதியில் எந்த தேர்வு என்பது குறித்து சந்தேகம் ஏற்படாது. 

தேர்வு மையத்திற்கு முன்னதாகச் சென்றுவிட்டாலும் தேர்வு மையத்தில் யாருடனும் தேவையில்லாமல் அரட்டை அடித்துக் கொண்டு இருக்காதீர்கள். இந்த பாடத்தில் இந்த கேள்விகள் கேட்கப்படலாம் என்று சக மாணவர்கள் கூறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. இதனால், உங்களது கவனம் திசை திரும்பும். தேர்வு மையத்திற்கு வந்த பிறகு, சிறிது நேரம் முக்கிய குறிப்புகளை ஒரு முறை திருப்பி பார்த்தப் பிறகு, தேர்வை எதிர்கொள்ள அமைதியாக இருக்க வேண்டும். தேர்வுக் கூடத்தில் உங்களிடம் எழுதப்பட்ட காகிதங்களோ இல்லை புத்தகங்களோ  இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டால் நீங்கள் அந்த தேர்வை தொடர்ந்து எழுத அனுமதிக்கபடமாட்டீர்கள் என்பதுடன் ஐந்து வருடங்களுக்கு தேர்வெழுத அனுமதியில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

தேர்வு அறைக்குள் நுழைந்து மாணவர்கள் தங்களுக்குரிய இடத்தை கண்டுபிடித்து அமர வேண்டும். அங்கு சிறிது நேரம் மூச்சு பயிற்சி செய்தால் நல்லது. இதனால், மன அழுத்தம் குறையும்.

தேர்வு அறையில் கேள்வித்தாள் கொடுக்கப்பட்டதும் பதட்டப்படாமல் படித்துப் பார்க்க வேண்டும். கடினமான, தெரியாத கேள்விகள் வந்திருந்தாலும் அதை பார்த்து பதட்டப்படக்கூடாது. தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதில் எழுதவும். இப்படிச் செய்தால் தன்னம்பிக்கை பிறக்கும். மற்ற கேள்விக்களுக்கான பதில்களும் எளிதில் ஞாபகத்தில் வரும். தேர்வு எழுதும்போது கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும். அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.

தேர்வு அறையில் அருகில் இருக்கும் மாணவர்களிடமிருந்து பேனா, பென்சில் போன்ற பொருட்களை வாங்கக்கூடாது. தேர்வின் போது தேவையில்லாமல் திரும்பி பார்த்தல், சைகை மொழியில் பேசுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தேர்வு அறையில் ரிலாக்சாக அமருங்கள். தேர்வு நேரத்தில் நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை  பார்க்காமல், தேர்வு எழுதுவதிலேயே முழுக்கவனம் செலுத்துங்கள். 

தேர்வு நேரமான மூன்று மணிநேரத்திற்கு முன்னதாக எக்காரணத்தை முன்னிட்டும் தேர்வு அறையை விட்டு வெளியே வர வேண்டாம். தேர்வு நேரம் முடிவதற்கு 15 நிமிடங்கள் முன்னதாக விடைகளை எழுதி முடித்துவிட்டு, மிச்ச நேரத்தை எழுதிய விடைகள் சரியாக இருக்கிறதா, விடைத்தாளில் தேர்வு எண் சரியாக இருக்கிறதா? விடைத்தாளில் கேள்விக்கான  எண் சரியாக இருக்கிறதா என்பதையும் சரி பார்க்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். விடைத்தாளை உங்களது மேஜையிலேயே வைக்காமல் கண்கணிப்பாளர் வசம் ஒப்படைத்துவிட்டு செல்லுங்கள்.



தேர்வு எழுதப்போகும் பிள்ளையை பெற்றவர் கவனத்திற்கு:
உங்கள் குழந்தைக்கு தேர்வு பயம் வந்தால்.., நீங்கள்  கவலை கொள்ளாமல் ள் குழந்தைக்கு தைரிய மூட்டுங்கள். தேர்வில் வெற்றி பெற பக்கபலமாக இருங்கள்.....

பெரும்பாலும் நன்றாக படிக்கும் குழந்தைகள் கூட தேர்வு என்றாலே காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுவது சகஜம். ஏதோ ஒருவித படப்படப்பு வயிற்றில் பட்டாம்பூச்சி ஓடுவது போல தோன்றும். அந்த சமயத்தில் பெற்றோர்களான நீங்கள் தான் உதவ வேண்டும்.

பொதுவாக இந்த பிரச்சனை எல்லா மாணவர்களுக்கும் வருவது தான். சில மாணவர்கள் தேர்வு எழுதுவதை பற்றியே எந்நேரமும் சிந்தித்து கொண்டு இருப்பார்கள். சரியாக சாப்பிடாமல், இரவில் சரியாக உறங்காமல் ஒருவித பயத்துடனே காணப்படுவார்கள் அது மிகவும் தவறான விஷயமாகும். தேர்வுக்கு செல்லும் முன் சில விஷயங்களை கடைப்பிடிப்பது நல்லது.


தேர்வுக்கு செல்லும் முன் முதலில் என்ன தேர்வு எழுத போகிறோம் என்று தெளிவாக இருக்க வேண்டும். மனதில் எந்தவித குழப்பமும் இல்லாமல் தெளிவாக தேர்வுக்கு தயாராக வேண்டும். தேர்வு நேரத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் கவனமாக பார்த்து கொள்வது நல்லது. சத்தான உணவு, காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் மூளைக்கு சுறு சுறுப்பு ஏற்படும்.

சரியாக படிக்காத குழந்தையாக இருந்தாலும், முக்கியக் கேள்விகள், மிகவும் எளிதான கேள்விகளை நன்கு படித்துக் கொண்டால் போதுமான கேள்விகளுக்கு பதிலளித்து தேர்வில் தேர்ச்சி பெறலாம் எளிதாக.


தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு எந்த வித மன குழப்பமும் ஏற்படாதவாறு பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் ஏற்படும் எந்த பிரச்சனையும் பிள்ளைகள் மனதை பாதிக்காத வகையில் பார்த்து கொள்வது பெற்றோர்கள் கடமையாகும்.

தேர்வு எழுதி வந்தவுடன், எந்தெந்த கேள்விகளுக்கு பதில் எழுதினே, இந்த கேள்வியை ஏன் விட்டு வந்தே, நூறு மார்க்குக்கு மட்டும்தானா எழுதினேன்னு கேள்விகளை கேட்டு டார்ச்சர் செய்யாதீர்கள். அது அவர்களை பதட்டப்படுத்தி அடுத்து வரும் தேர்வுகளை எதிர்கொள்ளும்போது பதட்ட பட வைக்கும்.

தேர்வெழுதி வந்தவுடன் சிறிது நேரம் தூங்கவோ, இல்லை மெல்லிய இசையையோ ரசிக்க விட்டு பிறகு படிக்க விடுங்கள். அது புத்துணர்ச்சியுடன் அவர்களை படிக்க வைக்கும்.


ஒருவேளை தேர்வில் தோல்வி அடைந்தாலும் அதை ஏற்று கொள்ளும் பக்குவம் உங்களுக்கிருப்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். அது, அவர்களை தவறான முடிவுகளை எடுக்க வைக்காதிருக்கும்.

தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கபடுத்துங்கள் தேர்வில் வெற்றி பெற துணையாய் இருங்கள்.  

தோல்வியை மனதைரியத்துடன் எதிர்கொள்ள தம்பி கருண் பதிவை பாருங்க.

21 comments:

  1. நல்லதொரு பதிவு....

    நேரமின்னை மற்றும் அதிக நேர மின்தடை காரணமாகவே இது போன்ற பதிவிடுவதில் கொஞ்சம் தாமதம்...

    அந்த குறை அக்கா நீங்க தீர்த்து வச்சிடிங்க...


    அப்படியே தங்களுடைய மகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்...


    எல்லாம் நல்லதுக்கே...

    ReplyDelete
  2. மன்னிக்கவும் என்னை இது போல போடா சொன்னிங்க , நேரம் இன்மையால் போடா இயலவில்லை .. நல்ல பதிவு

    ReplyDelete
  3. கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

    நல்லதொரு பதிவு....

    நேரமின்னை மற்றும் அதிக நேர மின்தடை காரணமாகவே இது போன்ற பதிவிடுவதில் கொஞ்சம் தாமதம்...

    அந்த குறை அக்கா நீங்க தீர்த்து வச்சிடிங்க...


    அப்படியே தங்களுடைய மகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்...


    எல்லாம் நல்லதுக்கே...
    >>>>
    மின் தடை காரணமாகத்தான் என்னாலும் மேலும் இப்பதிவை சிறப்பிக்க முடியலை.
    தங்கள் வாழ்த்துக்களை மகளுக்கு சேர்த்துவிடுகிறேன்.

    ReplyDelete
  4. மிக நல்ல பதிவு... அக்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நான் படிக்கும் போது இதை நீங்கள் ஏன் எனக்கு சொல்லவில்லை. நீங்கள்மட்டும் இந்த அறிவுரையை அப்போது சொல்லி இருந்தால் நான் மன்மோகன் சிங்கைவிட நன்றாக ப்டித்து பாரத பிரதமர் ஆகோ இருப்பேனே.... போங்க சகோதரி இப்ப வடை போச்சுல்லா

    ReplyDelete
  5. தேர்வு எழுதப்போகும் மாணவ மணிகளுக்கு
    நல்ல அறிவுரைக் கட்டுரை சகோதரி....
    வெற்றி பெறட்டும் மாணவக் கண்மணிகள்.....

    ReplyDelete
  6. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    மன்னிக்கவும் என்னை இது போல போடா சொன்னிங்க , நேரம் இன்மையால் போடா இயலவில்லை .. நல்ல பதிவு
    >>>
    பரவாயில்லை தம்பி. ஆசிரியரான நீங்க இதுப்போன்ற பதிவு போட்டிருந்தால் மேலும் அதிக தகவல்கள் மாணவ செல்வங்களுக்கு சென்று அடைந்திருக்கும்.

    ReplyDelete
  7. Avargal Unmaigal கூறியது...

    மிக நல்ல பதிவு... அக்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நான் படிக்கும் போது இதை நீங்கள் ஏன் எனக்கு சொல்லவில்லை. நீங்கள்மட்டும் இந்த அறிவுரையை அப்போது சொல்லி இருந்தால் நான் மன்மோகன் சிங்கைவிட நன்றாக ப்டித்து பாரத பிரதமர் ஆகோ இருப்பேனே.... போங்க சகோதரி இப்ப வடை போச்சுல்லா
    >>>
    நல்ல வேளை இந்தியா தப்பிச்சிடுச்சுடா சாமி

    ReplyDelete
  8. வாவ்...

    நல்லதொரு முயற்சி ராஜி

    ஒவ்வொரு டிப்ஸும் ரொம்ப அருமை!

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. தேர்வு ஹால வாசல்ல நின்னு புத்தகங்களைப் புரட்டற ஒரு விஷயத்துல மட்டும் எனக்கு என்னிக்கும் உடன்பாடு இருந்ததில்லை. அப்ப படிக்கிற எதுவும் சுத்தமா மனசுல தங்காதுங்கறது என்னோட அனுபவப் பாடம். இதைத் தவிர எல்லாக் கருத்துக்களும் மாணவர்களுக்குப் பயன்படற மாதிரி அருமையா சொல்லியிருக்கம்மா. பரீட்சை எழுதற எல்லா மாணவர்களுக்கும்... குறிப்பா தூயாவுக்கு... என்னோட ஆல் த பெஸ்ட் விஷ்ஷஸ்!

    ReplyDelete
  10. கணேஷ் கூறியது...

    தேர்வு ஹால வாசல்ல நின்னு புத்தகங்களைப் புரட்டற ஒரு விஷயத்துல மட்டும் எனக்கு என்னிக்கும் உடன்பாடு இருந்ததில்லை. அப்ப படிக்கிற எதுவும் சுத்தமா மனசுல தங்காதுங்கறது என்னோட அனுபவப் பாடம். இதைத் தவிர எல்லாக் கருத்துக்களும் மாணவர்களுக்குப் பயன்படற மாதிரி அருமையா சொல்லியிருக்கம்மா. பரீட்சை எழுதற எல்லா மாணவர்களுக்கும்... குறிப்பா தூயாவுக்கு... என்னோட ஆல் த பெஸ்ட் விஷ்ஷஸ்!
    >>>
    உங்க வாழ்த்துக்களாஇ தூயாக்கிட்ட சொல்லிடுறேன். வகுப்பறை வாசலில் படிப்பதில் எனக்கும் உடன்பாடில்லை. ஏற்கனவே படித்து மனனம் செய்த முக்கிய குறிப்புகளை வீண் அரடயடிக்காமல் புரட்டலாமே என்ற நோக்கத்தில்தான்

    ReplyDelete
  11. தேர்வை நன் முறையில் எழுதி வெற்றி பெறுங்கள்.
    மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் பதிவு.

    ReplyDelete
  12. நல்ல அறிவுரைக் கட்டுரை சகோதரி....

    மகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. ///நல்ல வேளை இந்தியா தப்பிச்சிடுச்சுடா சாமி ///
    சான்ஸே இல்லை எங்கள் அண்ணன் மன்மோகன் இருக்கிறவறை தப்பிக்க சான்ஸ் இல்லை

    ReplyDelete
  14. வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. தக்க சமயத்தில் நல்லதொரு பதிவு ராஜி. உங்கள் மகளுக்கு என் வாழ்த்துக்கள்.

    தேர்வு எழுதவிருக்கும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் என் வாழ்த்தும் ஆசியும்.

    தேர்வு குறித்து பிள்ளைகள் பயந்தாலும் பெற்றோர் தெளிவாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம். மதிப்பெண்கள் அடிப்படையிலான வெற்றி தோல்விகளில் மட்டுமே வாழ்க்கை முடிவாவதில்லை என்று நம் பிள்ளைகளுக்கு வாழ்க்கையைப் பற்றிய நிதர்சனத்தைப் புரியவைக்கவேண்டும். அதற்கு மிகவும் உதவும் வகையில் அருமையான பதிவு. பாராட்டுகள் ராஜி.

    ReplyDelete
  16. மிக்க நன்றிம்மா தங்கச்சி, உபயோகமான பதிவு....!!!

    ReplyDelete
  17. மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தேவையான நல்ல கருத்துக்கள். நன்றி.

    ReplyDelete
  18. நல்ல பதிவு..வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  19. அக்கா , மகளுக்கு என்னுடைய வாழ்த்தையும் சொல்லிடுங்க...

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் சகோதரி !

    ReplyDelete