Saturday, September 29, 2018

பெண்களுக்கு இதய நோய் வருவது குறைவாம்!! - உலக இருதய தினம்


உடலுக்குள் மறைவா கைப்பிடி அளவில் இருக்கும் ஒரு உறுப்புதான் இதயம்.  மனிதன் உயிர்வாழ மிக முக்கியமான உறுப்பு இதயம். இதை மறுப்பதற்கில்லை. ஆனா இந்த இதயம் காதலர்கள்கிட்டயும், சினிமாக்காரங்கக்கிட்டயும் மாட்டிக்கிட்டு படும் பாடு இருக்கே! அடடா! சொல்லி மாளாது. சதா சர்வகாலமும் இயங்கிட்டிருக்கும் இகைப்பிடி அளவிலான இந்த  இதயம் நின்னுட்டா அம்புட்டுதான் சொந்தக்காரவுகளுக்குலாம் சொல்லி அனுப்பிட வேண்டியதுதான்!  இதயம், சிறுநீரகம், மூளை மாதிரி உடல் சம்பந்தப்பட்ட வேலைகளை மட்டும் பார்த்துக்கிட்டு இருந்தா ஒரு பிரச்சனையுமில்ல. ஆனா, இந்த இதயமிருக்கே மனம், காதல், உணர்ச்சிகளோடு சம்பந்தப்பட்டு அதும் துடிச்சு நம்மையும் துடிக்க வைக்குது :-( . இப்படி படாத படுத்தும் இதயத்தை பத்திரமா  பாதுக்காக்கும் பொருட்டு  உலக இருதய நாள்ன்னு ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 29ம் நாள் கொண்டாடப்படுது.  இதயத்தை பாதுக்காக்கனும்ன்னா பந்தம், பாசம், காதல்ல வீழாம இருந்தாலே போதும்ன்னு கூட்டத்துல சவுண்ட் விடுறது யாருப்பா?! நீ சொல்றதுலாம் சரிதான். உணர்ச்சி வசப்படுதலே இதயம் பாழாக முக்கிய காரணி. அதோடு சேர்த்து இன்னமும் காரணங்கள் இருக்கு. அதுலாம் என்னன்னு பார்க்கலாம். 
இதயத்தின் அழகிய துடிப்புகளே நாம் உயிர்ப்போடு இருப்பதன் அடையாளம். துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் அறிகுறி. துடிப்புகளின் மவுனம் அதுவே மரணத்தின் அறிகுறி. இறைவனின் படைப்புகளில்  ஓர் அற்புதத் தொழிற்சாலைன்னா அது இதயம்தான்.   நம்  மூடிய கையின் அளவில்,  மார்பின் இடப்புறத்தில் இருக்கும் இந்த இதயம், நாம் பிறக்கும்முன்பே கருவிலேயே துடிக்க ஆரம்பிக்குது. நாலு அறைகளையும்,  நான்கு வால்வுகளையும் கொண்டது.  இதயம் Myocardium என்னும் தசைகளால் ஆனது. உடலில் உள்ள அனைத்து அசுத்த ரத்தமும் இதயத்தின் வலது மேல்அறைக்கு வரும். மூச்சுக்குழாய் வழியாக வெளியிடப்படும் காற்றின்மூலம் ரத்தத்தில் உள்ள அசுத்தம் வெளியேறும். அதேமாதிரி உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றின்மூலம் ரத்தம் சுத்தம் செய்யப்படும். இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட ரத்தமானது ஒவ்வொரு முறை இதயம் சுருங்கி விரியும்போதும் உடல் முழுவதும் பரவும். உடலுக்குத் தேவையான சுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெரும்பணியை இதயத்தின் பெருந்தமனி செய்யுது.

இதயம் துடிக்குறது நின்னுடுச்சுன்னா  கெட்ட ரத்தம் சுத்தமாகாது. உடலிலுள்ள திசுக்களுக்கு எனர்ஜி தரும் குளுக்கோஸ் மற்றும் தாது உப்புகள்லாம் சரியாக கிடைக்காது. தேவையான எனர்ஜி கிடைக்கலைன்னா திசுக்கள் பாதிக்கப்படும்.  திசுக்கள் புதுப்பிக்க  முடியாம போயி, முடிவில் உடல் செயலிழந்து இறப்பு நேரிட வாய்ப்புண்டு. இதயத்துக்கு செல்லுது. ரத்தக் குழாய்கள் மூலம் ஆக்சிஜன் கலந்த ரத்தம் இதயத்துக்கு செலுத்தப்படுது. இவ்வாறு செலுத்தப்படும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தாலோ இல்ல ஆக்சிஜன் இல்லாம போனாலோ மாரடைப்பு ஏற்படும். இதற்கு முக்கியக் காரணம் ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்புகளே! ரொம்பவே உணர்ச்சிவசப்படும்போது,  மன உளைச்சலில் இருக்கும்போது, இதய ரத்தக்குழாய்கள் சில நொடிகள் முழுமையாகச் சுருங்கும். இதனாலும் மாரடைப்பு ஏற்படும். மன அழுத்தம், புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்களின்  கல்லீரலில் எல்.டி.எல்ன்ற கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா உருவாகும். இது ரத்தத்தில் கலந்து இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு உண்டாகி அதன் காரணமாகவும் மாரடைப்பு ஏற்படும்.


அதிகப்படியான கொழுப்புள்ள உணவுகள், உடலில் சேரும் கலோரிகளை எரிக்குமளவுக்கு உடல் உழைப்பு இல்லாமை, உடல் பருமன், மனஅழுத்தம், புகைபிடித்தல், குடிப்பழக்கம், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்தல், மன உளைச்சல்லாம் இதயத்தின் சீர்க்கேட்டுக்கு வழிவகுக்கும்.   கொழுப்பு சேராம இருக்க உணவுக்கட்டுப்பாட்டோடு உடற்பயிற்சி செய்து ஓரளவு இதயத்தை பாதுக்காக்கலாம். ஆனா, மன உளைச்சல், பணிச்சுமை, கவலை, பதற்றம், ஆவேசம், வீட்டுச்சூழல், வெளிப்புறச்சூழல் காரணிகள்தான் இதயத்துக்கெதிரான பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். இப்படியான எதிர்மறையான எண்ணங்களால் கார்டிசால், அட்ரீனல் ஹார்மோன்கள் ரத்தத்தில் கலந்து உடலின் எந்தப் பகுதியிலும் ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். அதனால், தியானம், யோகா செய்து மனசை கட்டுக்குள் வைக்கலாம். 
சாப்பாட்டுக்கு பின்னும், வேகமா நடக்கும்போதோ இல்ல உணர்ச்சி வசப்படும்போதோ மார்பின் நடுப்பகுதியில் வலி ஏற்பட்டு, அந்த வலி தோள்பட்டை, கழுத்து இல்லன்னா வயிற்றுப் பகுதிக்குப் பரவி, மூச்சுவிடுவதில் சிரமமும், வியர்த்து கொட்டுதல் மற்றும் திடீர்ன்னு  உடல் கணத்தல்லாம் மாரடைப்பின் அறிகுறி.  குடி, மதுப்பழக்கம், பணிச்சுமை, மன அழுத்தம்லாம் சட்டுன்னு ஆண்களை தாக்கிடும். அதனால், ஆண்களுக்கே பெருமளவில் மாரடைப்பு ஏற்படும். பெண்களுக்கு இதய நோய் வருவது காரணம்(பெண்களுக்கு இதயம்ன்னு ஒன்னு இருந்தால்தானேன்னு கப்பித்தனமா கமெண்டக்கூடாது) இயற்கையாகவே பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் என்ற  ஹார்மோன் சுரப்பதால் பெண்களுக்கு  இதய நோய் வருவது அபூர்வம்.  எதிர்மறையான எண்ணங்கள், ஒழுங்கற்ற மாதவிடாய், இன்சுலின் மாதிரியான மருந்துகளினால் இந்த ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பில் மாறுபாடு ஏற்பட்டு இப்பலாம் பெண்களுக்கும் இதயம் சம்பந்தமான நோய்கள் வருது.

30 வயசுக்கப்புறம் வருடத்துக்கு ஒருமுறை எல்லாருமே ரத்தத்தத்தில்  சர்க்கரையின்,  கொழுப்பின் அளவு,  ரத்த அழுத்தம்  போன்றவறை பரிசோதிச்சுக்கனும். ரத்தத்தில்,  சி.பி.கே – எம்.பி (CPK-MB) என சொல்லப்படும் ‘கிரியாட்டின் ஃபாஸ்போகைனேஸ்’ன்ற என்ஸைம் அளவைப் பரிசோதித்துச்சுக்கனும். ஒருவேளை,  ஆரம்பக்கட்ட பரிசோதனைகளில் எதாவது பிரச்சனை இருந்தால், எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை, டிரெட்மில் பரிசோதனை, ஆஞ்சியோகிராம் மற்றும் நியூக்ளியர் ஸ்கேன் போன்ற பிரத்யேகப் பரிசோதனைகள்லாம் இதயத்துக்காக செய்யப்படுது.
வெங்காயம், பூண்டு, கீரை வகைகள், தக்காளி, வெள்ளரிக்காய், வாழைத் தண்டு, வாழைப்பூ, பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய், காளிஃபிளவர், முருங்கைக்காய், புடலங்காய், கேரட், முள்ளங்கியைலாம் தினமும் சாப்பாட்டுல சேர்த்துக்கனும். ஆடை நீக்கிய பால், தயிர், சத்து பானங்களை அளவான இனிப்போடு குடிக்கனும்.  வெள்ளை சர்க்கரைக்காக நாட்டுச் சர்க்கரையைக் குறைந்த அளவு பயன்படுத்தலாம். முட்டையின் வெள்ளைக் கரு, மீன், மட்டன் சூப் அல்லது நாட்டுக்கோழி சூப்லாம். சாப்பிடலாம். நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்,  சேர்த்துக்கலாம். அதுலாம்கூட சுத்திகரிக்கப்பட்டதா இல்லாம செக்கு எண்ணெயா இருந்தா நல்லது.
நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி, தேங்காய் எண்ணெய், உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, ஐஸ்க்ரீம், சாக்லேட், ஊறுகாய், காபி, முட்டையின் மஞ்சள் கரு, கோழியின் இறைச்சியைலாம் அதிகப்படியா உண்பதை தவிர்க்கனும்.  சர்க்கரைநோய் இருக்கவுங்க, மாம்பழம் மற்றும் பலாப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது. நடைப்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் ,ரோபிக்ஸ் பயிற்சிகளை அவரவர் வசதிக்கேற்ப  செய்யலாம்.  யோகா , தியானம், பிராணாயாமம் மாதிரியானமூச்சுப் பயிற்சிகள்  செய்யலாம். இது மன அழுத்தத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்துக்கு உதவும்.  எப்பயும்  மகிழ்ச்சியா, மனநிறைவுடன் வாழ முயற்சி செய்யனும்.  தொடர்ச்சியா பலமணி நேரம் வேலை செய்யுறவங்க இடையிடையே கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்துக்கனும். நேர்மறை எண்ணத்தை உருவாக்கிக்கனும் இதுலாம் மாரடைப்பை முதல் நிலையிலேயே சரிசெய்யும். மறுமுறை மாரடைப்பு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தவும் செய்யும்.
யாருக்காவது மாரடைப்பு வந்தால் பாதிக்கப்பட்டவரின் உடைகளைத் தளர்த்தி, காற்றோட்டமான சூழ்நிலையில் உட்கார அல்லது படுக்க வைக்கனும். மூஞ்சில தண்ணீர் தெளிக்கக்கூடாது. பாதிக்கப்பட்டவரின் இடப்புறமாக நின்று, கைகளை இடப்புற மார்புப்பகுதியில் வைத்துத் தொடர்ந்து அழுத்தனும். அதுக்காக ரொம்ப அழுத்தமா அழுத்தக்கூடாது. அது மார்பு எலும்பை எலும்பை உடைக்கக்கூடும்.  பாதிக்கப்பட்டவரின் மூக்கைப் பிடித்துக்கொண்டு, வாயோடு வாய் வைத்து வேகமா ஊதனும். பின்னர் மீண்டும் இட மார்புப்பகுதியில் அழுத்தம் கொடுக்கனும். உடனடியாக ஹாஸ்பிட்டலுக்கு கொண்டுபோகனும். அதிகப்பட்சம் 4 மணி நேரத்துக்குள் சிகிச்சை கிடைச்சா  உயிரிழப்பிலிருந்து காப்பாற்றலாம்.
மாரடைப்புக்கு ஆளானவங்களுக்கு பைபாஸ் சர்ஜரி,  பேஸ்மேக்கர், ஹார்ட்  அசிஸ்ட் டிவைஸ், செயற்கை எந்திரம்ன்னு சொல்லப்படும் எக்மோ மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவங்களை உயிர் வாழ வைக்க முடியும். ஆனா, அதுலாம் தற்காலிகாமானதுதான்.  70  வயதைத் தாண்டியவர்களுக்கு, அதிலும் புகை, மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும்  சைலன்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். காலை 5 மணி முதல் 8 மணி வரைதான் பெரும்பாலும் சைலன்ட் அட்டாக் ஏற்படும். இரவு அதிக நேரம் விழித்திருப்பது, காலை எழுந்தவுடன் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிய மனஅழுத்தம் போன்றவைலாம் பல சைலன்ட் அட்டாக் ஏற்பட காரணம்.
இதய நோய், சர்க்கரை நோயின் பாதிப்பு  இந்தியாவில்தான் அதிகம். காரணம், இந்தியாவில் ஒவ்வொரு  வருசமும் 24 லட்சம் பேர் இதய நோய்களால் உயிரிழக்குறாங்க. கடந்த சில வருடங்களாக  20 வயதிலேயே இதய நோயால் பாதிக்கப்படுறவங்களின் எண்ணிக்கை அதிகரிக்குது.  30 முதல் 45 வயதினரின் எண்ணிக்கையும் சமீபமாக அதிகரித்து வருகிறது. நம்ம இதயம்  சராசரியா 300கிராம் எடை கொண்டது. இது ஒரு நாளைக்கு சராசரியா 1,00,000  முறைகளும் வருசத்துக்கு 30மில்லியன் முறையும், ஆயுள் முழுவதும் 2.5 பில்லியன் தடவையும்  துடிக்குது. ஒரு வருசத்துல 31 லட்சத்து 59 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பம்ப் செய்யுது. தன் ஆயுளில் 1மில்லியன் பேரல் ரத்தத்தை சுத்தம் செய்து, உடல் முழுக்க பம்ப் செய்யுது. (ஒரு பேரல் 117.34 லிட்டர் அளவு).  ஆண்களைவிட பெண்களுக்கு இதயத்துடிப்பின் எண்ணிக்கை அதிகம். அதேமாதிரி பெரிய உயிரனங்களின் இதயத்துடிப்பு குறைவாகவும், சிறிய உயிரினங்களின் இதயத்துடிப்பின் எண்ணிக்கை அதிகமாவும் இருக்கும் (யானைக்கு நிமிசத்துக்கு 20 -30, எலிக்கு 500 -600). மோதிர விரல் நீளமாய் இருக்குறவங்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு குறைவாம்
பல், ஈறுகளில் பிரச்சனை இருக்கவுங்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். மார்பின் இடப்பாகம் இதயம் இருக்குன்னு சொன்னாலும் நெஞ்சின் நடுவில் இரண்டு நுரையீரலுக்கும் நடுவில்தான் இதயம் இருக்கு. இதயத்தின் அடிப்பாகம் இடப்பக்கம் சாய்ந்து இருக்குறதால, நமக்கு இதயம் இடப்பக்கமா இருக்குற மாதிரியும், அங்கதான் துடிக்குற மாதிரியும் நாம உணர்றோம். லப்டப்ன்னு உண்டாகும் சத்தம் இதயத்தின் நான்கு அறைகளும் திறந்து மூடுவதால் உண்டாவது. நாம தூங்கினாலும், விழித்திருந்தாலும், எந்த வேலை செய்தாலும் செய்யலைன்னாலும் இடைவிடாது துடிப்பது இதயம் மட்டுமே! அதனால நமக்காக துடிக்கும் உறவுகளை கண்டுக்காம இருக்க மாதிரி இல்லாம இதயத்தை பேணி காப்போம்!
நன்றியுடன்,
ராஜி

14 comments:

  1. படங்களை கண்டால் பமாக இருக்குது

    //இதயத்தை பேணி காப்போம்//
    சரிதான் ஆனால் இதயமே இல்லாமல்தானே நிறைய பேரு திறியிறாங்கே....

    ReplyDelete
    Replies
    1. அழகுலாம் வெளிப்புறத்து மேனிக்கு மட்டுமே! உள்ளே ரத்த சகதி, நரம்பு , நாளம்லாம் பார்க்க சகியாது

      Delete
  2. எதையும் தாங்கும் இதயம் - துணையைப் பொறுத்து...!

    துணை = இரு பாலரும்...!

    ReplyDelete
  3. எத்தனை தகவல்கள்!

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே படித்தவை, கேட்டவைகளே

      Delete
  4. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  5. இதயம் பற்றிய தகவல்கள் அருமை..

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாள் கழித்து வருகை தந்தமைக்கு நன்றி கிரேஸ்

      Delete
  6. அருமையான தகவல்கள்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  7. இதயத்தைக் குறித்து நிறைய தகவல்கள் கொடுத்து எங்க இதயத்தை லப் டப்புனு வேகமா அடிக்க வைச்சுட்டீங்க ராஜி!!! ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எப்படியோ எனக்காக யாராவது ஒருத்தங்க துடிச்சா சரிதான்

      Delete