Sunday, June 09, 2019

திருமணம் ஆனப்பெண் காதலிக்கக்கூடாதா?! - பாட்டு புத்தகம்

வேற ஒருத்தங்களுக்கு வித்துட்டா  மறந்துடனுமா என்ன?! இந்த ஒருவரி போதும் கதையின் கருவை சொல்ல...  பதின்ம காதல், பள்ளி காதல், ஒருதலை காதல், கல்யாணத்துக்குப்பின் காதல்ன்னு காதலை பலவிதமாய் சொன்ன தமிழ் சினிமா திருமணமான பெண்ணின் கணவனில்லாத இன்னொருவனின் மீதான காதலை

 கண்ணியமாய் சொன்ன படம்.. கொஞ்சம் பிசகினாலும் வேற மாதிரியான படமாய் ஆகி இருக்கக்கூடும்.  ஆனா, அப்படில்லாம் இல்லாம வெற்றிப்படமா, அதேசமயம் முகம் சுளிக்க வைக்காம வெளியான படம் பூ...

ஸ்ரீகாந்த், பார்வதி மேனன்னு நடிச்ச படம்.  மேக்கப், சண்டை, ஐட்டம் சாங்க்ன்னு கமர்சியல் படமா இல்லாம யதார்த்தமான கிராமத்து ஆட்களை கண்முன் கொண்டு வந்த படமே பூ...

தாய்மாமன் மகனை, சின்ன பிள்ளையிலிருந்தே காதலிக்கும் ஒரு கிராமத்து வெகுளிப்பெண். ஒரு தவம் மாதிரி தங்கராசுக்கு பெண்டாட்டி ஆகனும்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் ஒரு பொண்ணு,  ஆனா அவனோ ரொம்ப பிராக்டிக்கல் மைண்ட் கொண்ட ஆளுன்னு ஆரம்பத்திலேயே இயக்குனர் ஒரு காட்சியில் புரிய  வச்சிடுவார் இயக்குநர்.

வகுப்பில் ஆசிரியர் என்னவா ஆகப்போறேன்னு கேட்கும் கேள்விக்கு தங்கராசு பொண்டாட்டி ஆவேன்னு சொல்ல, ஆனா தங்கராசுவோ ஆசிரியரின் கோவத்துக்கு பயந்து அழுக, இப்படிதான் நாளைக்கும் சொல்வார் பேச்சை கேட்கும் ஆள்ன்னு சொல்லாமல் சொல்வார். அதுக்கு தகுந்தவாறு பணக்கார பொண்ணா கிடைச்சதும் கிராமத்து அத்தை பொண்ணை  விட்டுட்டுவான்.

படத்தின் கண்ணியத்துக்காக ஹீரோ ஹீரோயின் பேசுற சீனோ இல்ல, லவ் பரிமாறிக்கிட்ட சீனோ இல்ல. கிராமத்து பெண்ணின் காதலை ஊரே அறியும். அது ஹீரோவுக்கும் தெரியும். ஆனா எதிர்கால நலன், பணம், அப்பாவின் வற்புறுத்தல்ன்னு பணக்கார பொண்ணை கட்டிப்பார். கிராமத்து பொண்ணும் வேற ஒருத்தங்களை கட்டிக்கும். புருசனோடு வாழ்ந்தாலும் மாமனை மறக்காது. அவனை பார்க்க திருவிழாவிற்கு வரும்.

த்த்தூ இதுலாம் ஒரு படமா?! கல்யாணம்தான் ஆகிட்டுதே அதெப்படி இன்னொரு ஆளை நினைக்கலாம்ன்னு கலாச்சார காபாளர்களாம் பொங்கி எழாதவாறு  படத்தை கொண்டு போன இயக்குனரை பாராட்டனும்.

மாரியாய் பார்வதி மேனனும், தங்கராசுவாய் ஸ்ரீகாந்த்தும் வாழ்ந்திருப்பாங்க...

எனக்கு பிடிச்ச பாட்டு எப்படி இருக்குன்னு பார்த்து சொல்லுங்க!!

நன்றியுடன்,
ராஜி

8 comments:

  1. தலைப்பில் 'ப்' வரக்கூடாது!!!

    //கலாச்சார காபாளர்களாம்//

    அந்த 'ப்' இங்கே வரவேண்டும்!

    இந்தப் பாட்டு இப்போதான் கேட்கிறேன். இந்தப் படம் பற்றியே இப்போதுதான் அறிகிறேன்.

    ReplyDelete
  2. பூ படத்தில் வேறு ஒரு பாடல் தான் பிரபலமானது! இந்தப் பாடலும் கேட்டதுண்டு.

    ReplyDelete
  3. அழகான படமும் ...சிறப்பான பாடலும் ...ராஜி க்கா

    ReplyDelete
  4. அருமையான பாடல்

    ReplyDelete
  5. பூ என்றொரு படமா? கேள்விப்படவே இல்லையே. இப்படியான படங்கள் எங்கள் ஊரில் வருவதும் அபூர்வம்தான்.

    துளசிதரன்

    ReplyDelete
  6. பூ படம் பற்றி தெரியும் கேள்விப்பட்டிருக்கிறேன் ராஜி ஆனால் பார்க்கலை. இயக்குநர் சசி என்று நினைக்கிறேன். என் வீட்டில் பார்த்தவர்கள் எல்லோரும் பேசிக் கொண்டனர். நல்ல படம் என்று மிகவும் டீசண்டான படம் என்றும்.

    பாட்டு கேட்டேன். ஓகே.

    பார்வதி மேனனா இது? ஆச்சரியமாக இருக்கிறது. சத்தியமாக நம்ப முடியவில்லை.

    கீதா

    ReplyDelete