Showing posts with label கன்னியாகுமரி. Show all posts
Showing posts with label கன்னியாகுமரி. Show all posts

Friday, May 31, 2019

நீலக்கடலின் ஓரத்தில் வீற்றிருக்கும் பகவதி அம்மை - புண்ணியம் தேடி..

கடந்த சிலவரங்களுக்கு முன் கன்னியாகுமரியில் உள்ள குகநாதீஸ்வரர் கோவில் பற்றி பார்த்தோம். கோடை விடுமுறையில் ஊர் சுற்ற போயிட்டதால் சரிவர வரமுடியல.  அதன் தொடர்ச்சியாய் இந்தவாரம் பதிவில் கன்னியாகுமரி பகவதி அம்மையை தரிசனம் செய்யப்போறோம். இந்தக்கோவிலின் வரலாற்று காலம் என்பது நாம் நினைப்பது மாதிரி 2000 வருசமோ இல்ல 3000  வருசமோ இல்லை. இது பல யுகங்கள் தாண்டியது. இதில் பலவாறானவை திரிபு கதைகளாகவே இருக்கு. ஆதிசக்தி அசுரனை வதம் செய்ய கன்னியாக நின்ற இடம் என்பதுவரை உண்மை. அதேசமயம் ஆதிபரம்பொருள் அன்னையை மானிடப்பிறவியாக பிறக்க வைத்து தர்மத்தை அழிக்கவைத்ததாக சில வரலாறுகளில் சொல்லப்பட்டாலும்,  செவிவழிக்கதைகளில் வேறுவிதமாக சொல்லப்படுகின்றது, அதனால் உண்மையான வரலாறு அந்த அம்மைக்குத்தான் தெரியும். எந்த அசுரர்களாலானும் அவர்களை நினைத்த மாத்திரத்திலேயே அழிக்கும் வல்லமை அந்த ஆதிசக்திக்கு உண்டு. யாரோ சொல்லிய கதைகளை சொல்வதைவிட அன்னையின் கோவிலுக்கு செல்லுவது எப்படி என்று மட்டும் நாமப் பார்க்கலாம்
இதுபற்றிய விரிவான உண்மையான கதைகள் திருவிளையாடல் புராணத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதியில் குமரி முனைக்கு அப்பால் பனியால் உறைந்த பெரு நிலமொன்று இருந்தது என்றும், வேட்டையாடுதலே அங்கு வாழ்ந்தவர்களின் தொழிலாக இருந்தது என்றும், அந்த பனிநிலமே அவர்களது வாழ்வாதாராமாக இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்பு மக்கள் பெருவாரியாக அந்த பனி நிலத்தில் குடியேற தொடங்கினர்.  பல நூறாண்டுகள் இப்படியே குடியேற்றம் தொடர்ந்தன. ஒருக்காலத்தில் கதிரவனின் வெப்பம் அதிகரித்தது பனி உருக ஆரம்பித்தது. புதுப்புது நதிகள் உருவாயின. நதிக்கரைகளில் மக்கள் ஆங்காங்கே நிரந்தமாய் குடியமர்ந்தனர். வெப்பத்தினால் பனி பெருநிலம் மெல்லமெல்ல உருகி கடலில் கரைந்தது. பல காலமாய் தாங்கள் கண்டு வந்ததும், தங்கள் மூதாதையர் வாழ்ந்த தென் பெருநிலம் கடலாய் கரைவதை கண்டு திகைத்து நின்றனர் இளைய தலைமுறையினர்.
A hypothetical map (believed to originate with Ernst Haeckel) depicting Lemuria as the cradle of humankind, from the lost continent. Circa 1876.

பனிபெருநிலம் அழிந்தபின் எஞ்சிய நிலத்தின் முனையில் எருது என்ற ஒரு மலை மட்டும் மிஞ்சியது. அந்த  மலையின் அடிவாரத்தில் இருந்த மக்கள்,  மீன் பிடித்து தங்கள் வாழ்வாதாரத்தை தொடங்கினர். அவ்வூர் மூன்று புறமும் கடலால் சூழ்ந்து, வடக்கில் கடம்பவனம் எல்லையாக நின்றது. கடம்பவனத்தில் வாழ்ந்தது நாகர் இனம். கடம்பவனத்திற்கப்பால் இருந்தது மகேந்திரமலை, நாகராஜா கோவில் ஸ்தலவரலாற்றிலேகூட இந்த மகேந்திரகிரிமலையில் சுமார் 20000 வருடங்களுக்கு முன்னமே நாகர்கள் வசித்து வந்தனர் என்றும் அவர்கள் நகராஜாவை வழிபட்டுவந்தனர் என்றும் சொல்லப்பட்டிருக்கு.   அம்மலையில் வாழ்ந்தது மிகவும் மூத்தக்குடியான சூரர் இனம், அம்மலையின் கிழேக்கே இருந்தது மிக உயர்ந்த மலை பெருமலை என்றும் மேருமலை என்றும் அழைக்கப்படும் மலை, தெய்வங்கள் வாழ்வதாய் நம்பபடும் மலை. மகேந்திரமலையில் உருவாகி ஓடியது பஃறுளி ஆறு, கடம்பவனத்தில் உருவாகி மீனவர் நிலம் வழியாக கடலில் கலந்தது குமரியாறு. இப்படித்தான் குமாரியின் வரலாறு ஆரம்பிக்கிறது.
A hypothetical rendering of Lemuria from 1893.Edouard Riou/New York Public Library

எருது மலை அடிவாரத்திலிருந்த மீனவபழங்குடியின் ஊர் முழுதும் மணல் பரவி இருந்ததால் அவ்வூர் மணலூர் என்று அழைக்கப்பட்டது. மழை என்பதை அவ்வூர்மக்கள் கண்டு ஆண்டு நான்காகியது. கடலே ஆவியாவிடும் என்ற நிலை ஏற்பட்டது. மரங்கள் மெல்ல தன் அடையாளங்களை இழந்தது. இலைகளில்லாமல் வெறும் தண்டு மட்டுமே நின்றது. மீனவர்கள் ,தங்கள் தெய்வத்திற்கு மீன்களையும், முத்துக்களையும் காணிக்கையாய் தந்து மழைக்கு வேண்டிக்கொண்டனர். இதிலிருந்தே வழிபாடுகள் தொடங்குகிறது. லெமூரிய கண்டம் கடல் கோளால் அழிந்தபோது கன்னியாகுமரி கடற்கரையின் எல்லையானது என்பது மட்டும் சங்க இலக்கியங்களின்மூலம் அறியமுடிகிறது. இப்ப இருக்கிற இந்த கோவில் பரசுராமரால் நிர்மாணிக்கப்பட்டது என்பது மட்டும் தெளிவான வரலாறாக இருக்கிறது .
நாம கன்னியாகுமரி போகும்போது இந்த அம்மையை மட்டும் தரிசிக்காம அங்குள்ள தியாக சௌந்தரி, பால சௌந்தரி, காலபைரவர் போன்ற சந்நிதிகளிலும்,பரசுராமர் பிரதிஷ்டை செய்த விநாயகர் கோவில்லயும் வழிபட்டு, பின் இந்த அம்மையை தரிசித்தல் உத்தமம். கன்னியாகுமரியிலே பாலசௌந்தரி, தியாக சௌந்தரி என இரு தோழியர் சூழ வாலைகுமாரி அன்னை மட்டுமே கோவில் கொண்டுள்ளாள். இதுவே கன்னியாகுமரியின் சிறப்பு. காமாட்சியும் மீனாட்சியும் விசாலாட்சியும் அபிராமியும் கன்னியாகுமரியும் காந்திமதியும், கற்பகாம்பாளும் ஒன்றுதான்!! கன்னியாகவே, குழந்தையாகவே கோவில் கொண்டிருக்கிறாள் கன்னியாகுமரியிலே.  மற்ற எங்கும் சிவமும் சக்தியுமாகதானே காட்சி தருவது வழக்கம். கன்னியாகுமரியிலோ முழுக்க சக்திமயம். ஆதி சக்தியே! அகிலலோக அன்னை மட்டுமே கோவில் கொண்டுள்ளாள். அதுதான் இந்த கோவிலின் தனித்தன்மை.
       கன்னியாகுமரி கடல் 1915ம் வருடத்திய புகைப்படம்

இந்தக்கோவிலை பற்றி நிறைய பார்த்துவிட்டோம். இருந்தாலும், இந்த கோவிலின் வரலாறு செவிவழிக்கதைகள்மூலம் நிறைய இடங்களில் இந்த அம்மனை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வேதகாலம் துவங்கியது முதல் இந்த ஸ்தலத்து பகவதி அம்மனை வழிபட்டதாக வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. மகாபாரதம், சங்க நூலான மணிமேகலை, புறநானூறு, நாராயண உபநிடதம், கிருஷ்ண யஜூர் வேதம், சம்ஹித வைஷ்ணவ வேதங்களிலும் இந்த அம்மனை பற்றியம் வழிபாடுபற்றியும்  கூறப்பட்டுள்ளது
                               The Kanyakumari's View with Kumari Amman Temple in 1925.

1892ல் சுவாமி விவேகானந்தரின் குரு இராமகிருஷ்ண பரஹம்சருக்கு பகவதி அம்மைதேவி ஆசி வழங்கியுள்ளார். இதனால் அவர்கள் ஒரு குழு அமைத்து இந்த ஸ்தலத்து தேவியை வழிபாடு செய்ய ஏற்பாடு செய்தார்கள். இதில் சுவாமி பிரமானந்தா (1863-1922) (Brahmananda), நிர்மலானந்தா (1963-1938) (Nirmalananda) ஆகியோர் இக்காலகட்டங்களில் இங்கு வந்து தேவிக்கு பணிவிடை செய்துள்ளனர். பின்னர் 1935-35ம் ஆண்டுகளில் கேரள மாநிலத்திலிருந்து பல பெண்களை வரவழைத்து தேவிக்கு பூசை செய்துவந்தனர்.
The Kanyakumari Temple and the twin Vivekananda Rock situated to its south-east, at the confluence of three seas.
அப்படி வந்த பெண்களில் ஏழுபெண்கள் குழு மூலம் 1948ல் இங்கு 
சாரதா மடம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் கேரளாவில் பாலக்காடு, ஒட்டப்பாளையம் போன்ற  இடங்களிலும் ஆரம்பிக்கப்பட்டது. பெரிபிளசு இவரது காலம்  (கி.பி. 60-80) (Periplus) இவர் தனது பயண குறிப்புகளில் தேவி கன்னியாகுமரி அம்மன் பற்றியும், பிரம்மச்சர்யம் பற்றியும், அன்னையின் வழிபாடு பற்றியும் எழுதி இருக்கிறார். இந்த இடம்  பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பின் பரவ வம்ச அரசர்களின் ஆட்சியில், திருவிதாங்கூர் அரசரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1947 இந்தியாவின் சுதந்திரத்திற்குப்பின் இந்திய சமஸ்தானத்துடன் இணைந்தது.
இதுதான் வடக்குபக்க வாயில். இந்த வாசலே இப்பொழுது பிரதான நுழைவாயிலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த திருக்கோவிலுக்கு மூன்று பக்க வழிகளிலிருந்தும் செல்லலாம். ஆனால் எல்லாவழிகளும் இந்த வடக்கு  வாசலில் வந்துதான் சேருகின்றன. இதுதான் பிரதான நுழைவாயில். இதன் பக்கத்திலதான் செருப்பு பாதுகாப்பு இடமும், சில கடைகளும் இருக்கு.  ஊசி, மணி, பாசி வியாபாரிகள் நம்மை விடமாட்டார்கள். இதைவிட பெரிய கொடுமை என்னன்னா நரிக்குறவர்கள் ஒரு புலிநகம்ன்னும், நரிப்பல்லுன்னும் ஒன்னை வச்சுக்கிட்டு வச்சி அதுக்கு யானைவிலை சொல்லுவாங்க. வன அதிகாரிகளுக்கு தெரியாம வச்சிருக்கிறம்பாங்க. வெளியே தெரிஞ்ச பிரச்சனைன்னு நம்ம அவசரப்படுத்துவாங்க. நம்ம மூஞ்சியில்தான் ஏமாளினு நெத்தியிலையே எழுதி ஒட்டிருக்கே! ஆனா நாம அறிவாளிப்பிள்ளைன்னு அவங்களுக்கு தெரியல! அது பிளாஸ்டிக்கானல் ஆனது. விரல்,ரோமங்கள் கூட பைபர் மூலம் தத்ரூபமாக இணைச்சு இருக்கிறாங்க ,யாரும் இவங்ககிட்ட ஏமாறவேண்டாம் .
எங்க ஊர்லையே நரிக்கொம்புன்னு ஒண்ணை காட்டி இதை பர்ஸ்ல வச்சா பணம் வருன்னு தலையில கட்டிட்டாங்க. நாமளும் பர்ஸில் பணம் சேர்ந்தா சரின்னு வாங்கிவச்சுட்டேன். .அதன் பிறகுதான் ஒருநாள் யோசிச்சேன் நரிக்கு ஏது கொம்புன்னு இதை ஏன் சொல்லுறேன்னா இது ஒரு ஏமாத்து வேலை. எந்த மிருகத்தின் உடல்பாகங்களையும் பர்சில் வைக்கக்கூடாது. அந்த மிருகத்தை வேட்டையடித்தான் அதை எடுத்திருப்பாங். அப்ப அது கொல்லப்படும்போது அதன் வலியும், வேதனையும் அந்த உறுப்புகளின் பதிவுகள் இருக்கும். நாம் அதை உபயோக படுத்தினா எதிர்மறையான எண்ணங்களை நமக்குள்ளே நாமே ஏற்படுத்திக்கொள்ள வழிவகுத்துவிடும் . அதுமட்டுமில்லாம கிருமித்தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.
இது கோவிலின் வடக்கு வாசல். இதுவழியாகத்தான் நாம அம்மையை தரிசிக்க செல்லவேண்டும். இங்க சாதாரணநாட்களில் கூட்டமில்லாமல் தரிசனம் செய்யலாம் . மத்தபடி கட்டண தரிசனமாக 20 ரூபாய் வசூலிக்கிறாங்க. நம்மளுடைய ஈரத்துணிகள், உடைமைகள் போன்றவைகளை ,கோவிலினுள்ளே 5 ரூபாய் கட்டணத்தில் பாதுகாத்துவைப்பார்கள். மொபைல் கேமரா கட்டாயம் உபயோகப்படுத்தக்கூடாது .
இந்த கோவிலில் நம்மூர்காரர்களை விட, வடஇந்திய மக்களும், மலையாள தேசத்து மக்களும்தான் நிறைய தரிசனம் பண்றாங்க. கோவில் முழுக்க முழுக்க மலையாள தேசத்துமுறையிலையே ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஆண்கள் மேல்ச்சட்டை அணியத்தடை. ஏன்னா திருவிதாங்கூர் மகாராஜாக்கள் வந்து இந்த அம்மையை வணங்கும்போது இடுப்பில் மட்டும்  முண்டு உடுத்து எளிமையாக வழிபடுவார்களாம்.  அதையே மக்களும் பின்பற்றி இந்த மேல்ச்சட்டை அனுமதியின்மை பழக்கம் கேரளா கோவில்களில் வந்தது என்று சொல்லப்படுகிறது.
கோவிலினுள் கூட்டம் அதிகமா இருந்தா சுற்றி போகும் வழியாக செல்ல விடுவார்கள். இல்லையெனில் நேரடியாக சென்றுவிடலாம். 20  ரூபாய் டிக்கெட்டும் தர்மதரிசன வரிசையும் கொடிமரத்திற்கு முன்னர் வந்து இணைகிறது. எப்படி இருந்தாலும் தள்ளுமுள்ளு தரிசனம்தான் பக்தர்கள் செய்கின்றனர். இதில் ஐயப்ப மலை சீசனில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும்.
சரி,  கோவிலை நன்றாக சுற்றிப்பார்க்கலாம் என தரிசன கூட்டத்தில் சென்றோம். நேரடியாக அம்மையை போய் பார்ப்பதற்கு பதிலாக,கால்கடுக்க நின்று கோவிலின் அழகை ரசித்து செல்வதே நல்லது. குறுக்கு வழியில் செல்வோருக்கு அம்மன் உடனியாக அருள்புரிவான் என்பதெல்லாம் இல்லை. பக்தரின் மனக்குறைகள் அம்மனுக்கு தெரிந்தே அருள் புரிபவள் இந்த பகவதி அம்மை. இந்த வழியானது கட்டண தரிசனம் செல்லும் வழி. நாங்கள் சென்ற நேரம் கட்டண தரிசனத்தில் கூட்டம் குறைவாகவே இருந்தது,
ஒருவழியாக சுற்றிவந்து கொடிமரத்திற்கருகே வந்துவிட்டோம். அதுவரை நேராக வந்துகொண்டிருந்த கும்பல் சில வடஇந்தியர்களால் தள்ளுமுள்ளு வரிசையாகிவிட்டது. அவர்களை சொல்லியும் குற்றமில்லை ஏன்னா பல ஊர்களுக்கும் போகவேண்டியது இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில தரிசனத்தை முடித்துவிடவேண்டும் என்ற அவசரம். இங்க கோவிலில் பணிபுரியும் அனைவரும் பல மொழிகளை சரளமாக பேசி கூட்டத்தை ஒழுங்கு படித்திக்கொண்டிருப்பதை பார்க்கமுடிந்தது.
கொடிமரத்தை தாண்டி பிரகாரத்தினுள் நுழையும்போது அங்கே அணையா விளக்கு இருக்கிறது. அதற்கு நல்ல எண்ணெய் வாங்கிவிடுவதற்கு பக்தர்கள் ஆர்வம் காட்டினர். அர்ச்சனை சீட்டுகள் , குங்கும பிரசாதங்கள் எல்லாம் இங்க விற்பனை செய்கின்றனர். அதையும் தாண்டி ஒரு நிலை வாசலை கடந்து அம்மையை தரிசனம் செய்யவேண்டும். இதோ அம்மையை கண்டுவிட்டோம். ஒரு குமரிப்பெண் எப்படி தாவணி அணிந்து இருப்பாளோ!(இப்பத்திய குமரிகள்லாம் லெக்கிங்க்ஸ், ஜீன்ஸ் மிடி போடுதுங்க) அதேப்போல் சந்தன காப்பு அலங்காரத்தில் மூக்குத்தி மின்ன அழகு சொரூபிணியாக காட்சி கொடுக்கிறாள். அங்கே நம்பூதிரிகள் பிரசாதத்தை நம் கையில் படாமல் கொடுக்கின்றனர் .தட்டில் காசு போட்டவருக்கும் போடாதவருக்கும் இலைபிரசாதம் கொடுக்கப்படுகிறது. ஒருவழியாக பிரசாதத்தை வாங்கிக்கொண்டு பிரகாரம் சுற்ற ஆரம்பித்தோம். மூலையில் கன்னிமூல கணபதி அருள்புரிகிறார்
உள்பிரகாரத்தை விட்டு வெளியே வரும்போது பாலசௌந்தரி சந்நிதி இருக்கிறது. அங்கு பக்தர்கள் நெய்விளக்கு போடுகின்றனர். முன்பெல்லாம் கோவிலை சுற்றி உள்பிரகாரத்திலையே வலம் வரலாம் இப்பொழுது அப்படியே வெளியே செல்லும் வழி வரைதான் செல்லமுடிகிறது. ஒருவழியாக பகவதி அம்மையை தரிசனம் செய்துவிட்டு வெளிப்பிரகாரத்தில் வந்தோம். அங்கதான் நவகிரக சன்னதியும் இருக்கிறது. இங்கே பிரசாத ஸ்டால் மற்றும் பகவதி அம்மனின் படங்கள் விற்பனைக்கு வைத்துள்ளனர். இங்கே விற்கப்படும் தாழம்பூ குங்குமம் நல்லவாசனையாக இருக்கிறது.எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு கோவிலின் வெளிவாசலுக்கு வந்தோம்.
கோவிலின் வெளியே  மாடன் சுவாமி சிலை இருக்கிறது. அங்கு தினமும் பூஜைகள் நடைபெறுகின்றன.மேலும் இங்கே ஒரே இடத்தில சூரிய உதயமும், அஸ்தமனமும் பார்க்கலாம்.இதற்காகவே தினம் காலை மாலை பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். 
மேலும்  முக்கடல் சங்கமிக்கும்  இடம் என்பதும் நம் நாட்டின் தெற்கு எல்லையாக இந்த கன்னியாகுமரி பகவதி அம்மை கோவில் இருக்கிறது என்பதும் ,சுனாமி நேரத்தில்கூட கோவிலை சுற்றி உள்ள இடங்களில் எல்லாம் ஆழிப்பேரலைகள் நாசமாக்கி சென்றுவிட்டபோதும் ,கோவிலை சுற்றி ஒரு பாதிப்புகூட இல்லாமல் இந்த பகவதி அம்மை காத்து அருளினாள். எது வந்தாலும் நான் இருக்கிறேன் என்று பக்தர்களை பார்த்து மெல்லிய சிரிப்புடன் கன்னியாகுமரி கடற்கரை ஓரம் கொலுவீற்றிருக்கும் இந்த பகவதி அம்மையை வணங்கி நாமும் விடைப்பெற்று மீண்டும் வேறு ஒரு கோவிலில் இருந்து உங்களை சந்திக்கும்வரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.

நன்றியுடன்
ராஜி 

Friday, November 13, 2015

அருள்மிகு சடைநாதர் திருக்கோவில், புதேரி - புண்ணியம் தேடி ஒரு பயணம் .

இந்த வாரம் புண்ணியம் தேடி போறப் பயணத்துல நாம பார்க்கப்போறது கன்னியாக்குமரி மாவட்டத்தில் இருக்கும் நாகர்கோயிலில் இருந்து சுமார் 3 கி.மீ   தொலைவில் இருக்கும் ”புதேரி”,யில் அமைந்திருக்கும் ”அருள்மிகு சடைநாதர் திருக்கோவில்”. 

பச்சைப் பசேலென பச்சைப் போர்வை போர்த்திய மாதிரி இருக்கும் வயல்களின் இடையே, இயற்கை எழில் சூழ்ந்த  ஒரு கோவில் தூரத்தில் தெரிவதை அந்த வழியே போகும்போது  பார்த்தோம். அந்த சூழல் மனசுக்கு பிடிச்சதால கிட்டக்கப் போய் பார்க்க போனோம்.  ஆள், அரவம் இல்லாம அமைதியாக இருந்தது ”அருள்மிகு சடைநாதர் திருக்கோவில்”.


சரி, கிட்டக்க போய்   தரிசிக்கலாம்ன்னு பார்த்தா,  அங்க கோயில் கிட்டக்க யாரும் இல்ல எங்களைத் தவிர.  ஒண்ணு ரெண்டு காக்கா, குருவியும் தான் இருந்துச்சு.  எங்க கட்டுச்சோறு மூட்டையை பகிர்ந்துக்க சில பைரவர்களும்கூட அங்க இருந்தாங்க. சரி, அடிக்கிற வெயிலுக்கு அங்க இருக்கிற திண்ணையில் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போலாம்ன்னு கோவில் உட்கார்ந்தோம்.  அந்த தூய்மையான காத்தும், இயற்கை சூழலும், மனதுக்கும் உடலுக்கும் ,கண்களுக்கும் இதமாக இருந்துச்சு.


அந்தி சாயும் நேரம் ஆச்சு. அந்தக் கோவில் பத்தி தெரிஞ்சுக்கவும், ஒரு பதிவு தேத்தவும் யாராவது அந்தப்பக்கம் வருவாங்களான்னு காத்திருந்தோம். கொஞ்ச நேரத்துல சில பெரியவர்களும், கோவிலைச் சுத்தம் செய்பவர்களும் வந்தாங்க. அங்க வந்தவங்கக்கிட்ட இந்தக் கோவில் பத்தி விவரங்களை கேட்டோம். யாருக்கும் தெரியலை. வயசானவங்ககிட்டேயும் கேட்டுப் பார்த்தோம். எங்க முன்னோர்கள் கும்பிட்டாங்க. நாங்களும் கும்பிடுறோம்ன்னு சொன்னாங்க. ஒருவேளை, கோவில் பூசாரியை கேட்டுப் பாருங்கன்னு சொல்லி எஸ்ஸ்ஸ்ஸ்கேப்பிட்டாங்க .
.

கொஞ்ச நேரத்துல கோவில் பூசாரியும் வந்தார். அவர்கிட்ட அந்த திருக்கோவிலின் வரலாற்றைப் பற்றி கேட்டோம். அவர் ரொம்ப அழகா பதில் சொன்னார். நாங்க அப்படியே அசந்து நின்னுட்டோம். நான், இந்த கோவிலில் பூஜை செய்ய வந்து ஏழு வருஷங்கள் தான் ஆச்சு. இதைத்தவிர எனக்கு வேறு எந்த வரலாறும் தெரியாதுன்னு சொன்னாரே பார்க்கலாம். 

சரி,  சடைநாதா!  உன் கோவில் பத்தி வெளி உலகத்துக்கு தெரிய வைப்பது உன் பொறுப்புன்னு, அவர்கிட்டயே பொறுப்பை ஒப்படைச்சுட்டு சுற்றிவர ஆரம்பித்தோம் .


கோவிலோட அருமை, பெருமை, வரலாறு தெரியலைன்னாலும் கோவிலை ரொம்ப சுத்தமாக வச்சிருக்காங்க. கோவில் சுவர்களெல்லாம் சுண்ணாம்பு அடிக்கப்பட்டு அழகாகக் காட்சியளிச்சது.

மேல இருக்கும் படம் திருக்கோவிலின் பின்புறம். எல்லா இடமும் சுத்தமா வெச்சிருக்காங்க.  கோவிலைச் சுற்றி பயபக்தியுடன் வலம் வந்தோம். பாரதி ஆசைப்பட்ட தென்னை மரமும் சிலது இருந்துச்சு.


திருக்கோவிலை முழுமையாக சுற்றி வந்துட்டோம். உள்ளூர்வாசிகள் சிலர் கோவிலுக்கு வந்தனர். ஆனா, யாருக்குமே வரலாறு தெரில. 


இது நுழைவு வாயிலின் உள்புற தோற்றம்.  மண்டபங்கள் எல்லாம் அழகாக கட்டப்பட்டுள்ளன .

நாங்கள் சென்றிருந்த அன்னிக்கு பிரதோஷ தினம். பக்தர்களும், சிவனடியார்களும் திருக்கோவில் வந்தாங்க.  பிரதோஷக்கால பூஜைகள் செய்து பாடல்கள் பாடிக்கொண்டு இருந்தாங்க. 


அங்கே சுவரில் அனுமன் சித்திரம் ஒன்று கல்லால் செதுக்கப்பட்டு இருந்தது. சிவன் கோவிலில்  அனுமன் எப்படி வந்தார்ன்னு தெரில. தெரிஞ்சுக்க ஆர்வம் எழுந்தாலும் அங்க பதில் சொல்ல யாருக்கும் தெரில.  இனி, இந்த ஊர்க்காரங்களை நம்பி பிரயோஜனம் இல்ல. நம்ம கூகுளாண்டவர்கிட்ட கேட்டுக்கலாம்ன்னு வந்துட்டேன்.

ஆனா, நூத்தியெட்டு தேங்காய் உடைக்குறேன், மதுரைதமிழனுக்கு மொட்டையடிக்குறேன்னு வேண்டியும் கூகுளாண்டவர் கைகொடுக்கல. நம்ம சகோஸ் யாருக்காவதுக்க்ல. இனி, தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு சொல்லுவாங்க. ஆனா, எனக்கோ அண்ணன், தம்பி, தங்கச்சின்னு ஒரு பாசக்கூட்டமே இங்க இருக்கு. இனி இக்கோவில் பத்தி  தெரிஞ்சுப்பேன்னு பதிவு போட்டுட்டேன்.

நான் நினைச்சது சரிதானே?!

 நீங்க சொல்வீர்களா?! சொல்வீர்களா?!

Friday, August 14, 2015

ஆடி அமாவாசை - பிதுர்தர்ப்பணம் என்னும் ஆண்டு பலிகர்ம பூஜை

இன்று ஆடி அமாவாசை நமது முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்ய மிகவும் உகந்த நாள்,அதேபோல நமது பதிவும் நீண்ட நாள்களுக்கு பிறகு வரும் ஒரு விசேஷமான நாள்.சரி,இந்த ஆடி அமாவாசையை பற்றிய உண்மைகளையும், வழிபாடுகளையும், சம்பிரதாயங்களையும் இந்த பதிவில் நாம் விரிவாக பார்க்கலாம்.புண்ணியம் தேடி கோவில்களுக்கு பயணம் செல்லும் போது ஒரு முறை கன்னியாகுமரி சென்றிருந்த நேரம் காலை நான்குமணி, சூரியன் கூட உதிக்காத அந்த காலை பொழுதில் கடல் அலைகளைவிட திரளான கூட்டம் கரையினில்,என்ன விஷேசம் என்று பார்க்கும் பொழுது,பொதுவாக தென் மாவட்டங்களில் மிகவும் விசேஷமாக செய்யப்படும்,குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் விசேஷமாக தலைமுறை தலைமுறையாக செய்துவரும் வழிபாடான ஆடி அமாவசை பிதுர்தர்ப்பணம் என்னும் ஆண்டு பலிகர்ம பூஜை,பொதுவாக இந்த மாவட்டத்தில் பூஜை முறைகள் பலவும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முறைகளிலேயே பின்பற்றப்பட்டு வருகிறது.மேலும்,இங்கே முன்னோர்களுக்கு செய்யப்பட்டுவரும் பலிகர்ம பூஜையானது,கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலும்,திருவனந்தபுரம் அருகே உள்ள திருவல்லத்தில் உள்ள பரசுராமர் ஷேத்திரத்திலும் மிகவும் விசேஷமாக செய்யபடுகிறது
சரி அமாவாசை என்றால் என்ன?, இந்து கலாச்சாரத்தில் தாய் மற்றும் தாய் வழி மாதுர்காரனாகிய சந்திரனும் ,தந்தை மற்றும் தந்தை வழி பிதுர்காரனகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை எனப்படும் .இந்த தினத்தில் நமது தாய் மற்றும் தந்தைவழி மறைந்த நம் முன்னோர்கள், அவர்களது சந்ததிகள் முன்னேற இந்த அமாவாசை தினத்தில் வந்து  அருள்புரிவார்கள் எனபது ஐதீகம்.மேலும், நமது முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் ஆடி அமாவசை அன்று முறையான பித்ரு பூஜை மூலம் விலகும் என்பதும் ஒரு நம்பிக்கை,இந்த பித்ருகர்ம பூஜையினை கன்னியாகுமரி,ராமேஸ்வரம் , பவானி ,பாபநாசம் ,திருச்செந்தூர் திருவையாறு இந்த இடங்களில் உள்ள நீர் நிலைக்கு சென்று பித்ருதர்ப்பணம் செய்யபடுகிறது , இந்த இடங்களில் சென்று   பலிகர்ம பூஜை  செய்ய முடியாதவர்களும் இருக்கலாம். அவர்கள், அன்றைய தினம் ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவிட்டு வஸ்திரதானம் செய்து  ஏதேனும் காணிக்கை தந்து அவர்களை மனம் குளிர செய்தாலும் நமது முன்னோர்கள் நம்மை ஆசிர்வதிப்பார்கள்
இங்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக்கட்டம், திருவையாறு தீர்த்தக்கட்டம், பவானி முக்கூடல், பாபநாசம், சொரிமுத்து அய்யனார் கோவில், ஏரல் சேர்மன் சுவாமிகள் கோவில் ஆறு மற்றும் நீர்நிலைகள் உள்ள இடங்கள் ,கோவில்களின் தெப்பகுளம் இங்கெல்லாம் கூட அதிக அளவில் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வார்கள்.நதிக்கரை,எரிகரைகளில் மட்டுமில்லாது,கடற்கரை ஸ்தலங்களான ராமேஸ்வரம், தனுஷ்கோடி,பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய கடற்கரை பகுதிகளிலும் பிதுர்க்களுக்கு பலிகர்மபூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.அதேபோல் தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் பாதையில் இருக்கும் கண்டியூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருப்பூந்துருத்தி என்னும் திருத்தலம் இங்கேயும் ஆடி அமாவாசை விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது.மேலும் ஆடி அமாவாசை நடக்கும் காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தரவல்லது.என்ற நம்பிக்கையும் இந்துகள் மத்தியில் கடைபிடிக்கபட்டுவரும் ஒரு சடங்கு ஆகும்
ஆடி அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சகல  சௌபாக்கியங்களுடனும்,சுமங்கலிகளாகவும்,நீண்ட ஆயுளுடனும், மாங்கல்ய பாக்கியத்துடனும்  வாழ்வார்கள் என்பதும் ஒரு ஐதீகம் அதற்கு ஒரு கதையும் உண்டு.அழகேசன் என்னும் பராகிரமம் மிக்க அரசன் அழகாபுரி என்னும் நாட்டை சீரும் சிறப்புமாக ஆண்டுவந்தான்,நட்டுமக்களிடமும் கடவுளிடமும் மிகவும் அன்பும்,பற்றுதலும் கொண்ட அரசன் தனக்குப்பின் நாட்டை ஆள ஒரு வாரிசு இல்லையே என வருத்தம் கொண்டிருந்தான், அதனால் புத்திர பாக்கியம் வேண்டி தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை சென்றான் அதன் பலனாக அவனுக்கு அழகிய ஒரு மகன் பிறந்தான்.மன்னனும் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தான்,அபொழுது ஒரு அசரீரி,கூறியது ஹே..மன்னா,உன் மகன் வாலிப வயதை அடையும் போது இறந்துவிடுவான் என கூறியது,உடனே மன்னன் புத்திர சோகத்தில் ஆழ்ந்தான் மன குழப்பத்தில் இருந்த அவன்,மன அமைதி வேண்டி பல கோவில்களுக்கு சென்றான்.ஒருநாள் மன்னன் ஒரு காளி கோவிலில் வழிபட்டு கொண்டு இருக்கும் போது,உன் மகன் இறப்பது என்பது விதிபயன் ,நீ அவன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை ,அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது.  
இளமைப் பருவம் வந்த இளவரசன் அசரீரி சொன்னது போல ஒருநாள் இறந்துபோனான். மன்னனும் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி,இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர். இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்தப் பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள்.விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் கதறி அழுதாள்.அரற்றினாள். தவித்தாள்.தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள்.உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர்பெற்று எழச்செய்தாள்.
இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாள்.உடனே அந்த பெண்,தேவியிடம் தாயே .இதேநாளில் உன்னைவழிபடும் பெண்கள் அனைவருக்கும் அருள் புரியவேண்டும் என வேண்டினாளாம்  இதைகேட்டு மகிழ்ந்த அம்பிகை, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் வழிபட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.
ஆடி அமாவாசையன்று பித்ருக்களுக்கு செய்யும் பூஜை மூலமாக அவர்கள் குடிநீர் பெறுவதாக நம்பப்படுகிறது. பண்டைக்காலம் முதலே பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதாகவும். அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர் கொடுக்கப்படுவதாகவும் நம்பப்பட்டு வருகிறது.இந்த அம்மாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததிகள் முன்னேற ,தடைகள் அகல, பல வித தோஷங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள் அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம்.அதனால் தான் அன்று காகம் போன்றவற்றிக்கு உணவிட்டு பின்பு நாம் உணவு அருந்த வேண்டும் என்ற சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது..
இங்கே  கன்னியாகுமரியில்,கரையில் அமர்ந்து இருக்கும் பிராமணர்கள் அதற்கான பூஜைமுறைகளை செய்கின்றனர்.முன்னோர்களை நினைத்து எள்ளும்,சோறும் கலந்து தங்கள் முன்னோர்களின் 5 தலைமுறைகளின் பெயர்களுக்கு சொல்லி அவர்களுக்கு சாந்தி செய்யபடுகிறது,பின்னர் அதை தலைமேல் சுமந்து முக்கூடல் சங்கமத்தில் சூரியனை பார்த்து கடலில் மூழ்கி அந்த பிண்டத்தை பின்பக்கமாக தூக்கி போட்டு கடலில் நீராடி ஐயருக்கு தட்ஷணை கொடுத்து  திருநீறு வைத்து,கொள்வார்கள்,இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்,பெண்கள் தங்கள் கணவன் உயிருடன் இருக்கும் போதுதன்னுடைய தந்தைக்கு இந்த பலிகர்ம பூஜை செய்ய கூடாது அதே சமயம் தன்னைவிட வயது குறைந்த ஆன்மாக்களுக்கு தனியாக இந்த பூஜை செய்யகூடாது,தங்களுடைய முன்னோர்களுடன் சேர்ந்தே செய்யவேண்டும்
பலிகர்ம பூஜை முடிந்த பின்னர் சூரிய உதயத்தை கும்பிட்டு நம்முடைய முன்னோர்களுக்கு தெய்வங்களின் ஆசிகள் கிடைத்திட பிரார்த்தனை செய்கிறார்கள் .பின்னர் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று பகவதி அம்மனை தரிசித்துவிட்டு,தங்கள் வீட்டிற்கு சென்று முன்னோர்களுக்கு படையல் இட்டு காகங்களுக்கு படைத்தது,பின்னர் யாருக்காவது  வஸ்திரதானம்,செய்து அவர்களுக்கு சாப்பாடு கொடுத்து தாங்களும் உண்பார்கள்.இதில் சிலர் தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து பின்னர் எள்ளும் நீரும் கொடுத்து தர்ப்பணம் செய்கிறார்கள்.ஆனால் சிலர் காரை இலை, உளுந்து, முப்பழம், காய், கிழங்கு, செந்நெல், வெல்லம், கோதுமை, நவதானியம், எள், பசும்பால், பாகற்காய், பலாக்காய், மாங்காய், மாதுளம் பழம், கறிவேப்பிலை, எலுமிச்சை, வாழைக்காய், இலந்தை, நெல்லி, திராட்சை, மிளகு, தேன், நெய், கண்டங்கத்திரி, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சீரகம், ஏலம், அவரை, பிரண்டை, தூதுவளை, இஞ்சி, வாழைத்தண்டு, பசுந்தயிர், வள்ளிக்கிழங்கு போன்றவற்றை முன்னோர்களுக்கு படைத்தது வழிபடுவார்கள்
பிதுர் சிரார்த்தம் எனபது,ஒருவர் இறக்கும் போது தூலசரீரம் அழிந்துபோகும். ஆனால் சூக்கும சரீரம் அழிவதில்லை. அவை சர்வசங்கார காலத்திலே அல்லது முக்தி நிலையிலாவது அழியும். ஓர் உயிர் தூலசரீரத்தை விட்டு நீங்கும்போது சூக்கும சரீரத்தோடு செல்லும்.அப்படி சென்ற உயிர்,பூமியில் தான் புரிந்த வினைகளுக்கேற்ப இன்ப துன்பங்களைச் சுவர்க்க, நரகத்தில் அனுபவிக்கும். சுவர்க்கத்திலே இன்பங்களை அனுபவிக்கும்போது அச்சூக்கும சரீரம் அதற்கென்ற ஒரு சரீரத்தைப் பெற்றுக் கொள்ளுகின்றது. உயிர் பிதுர் பூஜை என்னும் கிரியையினாலே சிவலோகத்தை அடையும்.அங்கு பிதாவினுடைய உயிர் ஸ்கந்த சொரூபமாக இருக்கும்.பாட்டனுடைய உயிர், சண்டபதத்திலே சண்ட சொரூபமாக இருக்கும். முப்பாட்டனுடைய உயிர் கணாதீச பதத்திலே கணாத சொரூபமாக இருக்கும். இவர்களுக்குத் தலைவர்களாக ஸ்கந்த, சண்ட, காணாதீசர் என்னும் மூவர் அதிதெய்வங்களாக விளங்குவர்.இவர்கள்தான் பிதிர் தேவதைகள் என அழைக்கப்படுவர். இவர்களைப் பிரீத்தி செய்து வழிபடுவதுதான் சிராத்தம் எனப்படும்.
ஆனால் ,இறந்து போன உயிர்கள் தாம் செய்த புண்ணிய பாவத்திற்கேற்ப சுவர்க்க நரகங்களையடையவனவும்,முத்தியடைவனவுமன்றி சில உயிர்கள் உடனே ஒரு தூல தேகத்தை எடுப்பனவுமாகவும் இருக்கும்.இவைகள் அல்லாது ஒரு உயிர் இறக்கின்ற கால நேரங்களைப் பொறுத்தாக, உயிர்களை நற்பதவியடையச் செய்தலுக்கு சிரார்த்தம் இன்றியமையாததாகும்.இதற்கும் ஒரு ஜோதிடம் உண்டு ,சாதரணமாக நாம் பார்க்கும் ஜோதிடம் ஜாதகம் எல்லாம்  ஜோதிடம் படித்த எவரும் சொல்லிவிட முடியும் ,ஆனால் இறப்புக்கு பின் வரும் சூக்கும தேகத்தின் ஆயுள் கணக்கிடுவதர்க்கு ஒரு ஜோதிடம் உண்டு ,அது அவர்கள் இறந்த காலத்தை வைத்து கணக்கிட படுகிறது .இந்த ஜோதிடம் சித்திரகுப்தன் ,மற்றும் யமதர்மராஜாவுக்கு மட்டும் தான் தெரியுமாம்
சென்னையில் கோயம்பேடு ஸ்ரீகுறுங்காலீஸ்வரர கோவிலில் பித்ரு கர்ம பூஜை செய்வது சிறப்பு,ஏனெனில்,லவனும் குசனும் சிவ வழிபாடு செய்துவந்தபோது, தினமும் தாங்கள் நீராடவும், லிங்கத்தை அபிஷேகிக்கவும் குளம் ஒன்றை உருவாக்கினர். என்றும் அதில் இருந்து நீர் எடுத்து இங்கிருக்கும் சிவனை  அபிஷேகம் செய்து வழிபட்டனர். எனவும் , இதில் மகிழ்ந்த ஈசன், அவர்களுக்கு காட்சி தந்தார். ஈசனின் திருவருளால் லவ-குசரின் பாவம் தொலைந்து தந்தையுடன் இணைந்து வாழ்ந்தனர் என்கிறது. திருக்கோவில் ஸ்தலபுராணம்.ஸ்ரீராமரின் மைந்தர்களான லவனும் குசனும் ஏற்படுத்திய இந்த திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி சமேத ஸ்ரீகுறுங்காலீஸ்வரரை வணங்கினால், அனைத்து தோஷங்களும் விலகும்; மனச்சஞ்சலம் நீங்கும்,பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். ஆடி அமாவாசை நாளில், குச-லவ தீர்த்தக்குளத்தில் நீராடி, பிதுர் காரியங்களை குளக்கரையில் செய்துவிட்டு, இறைவனை வணங்கினால் முன்னோர்களின் அருளும் ஆசீர்வாதமும் கிடைக்கும்..பூஜை பொருட்களை,எள்ளும்,நீரும் சோறும் ,நீர்நிலைகளில் தான் சமர்பிக்கவேண்டும் ,எனபது விதி ஆனால் இபொழுது அங்கே பிதுர் கர்ம பூஜை பொருட்களை பூஜை முடிந்தவுடன் குப்பை தொட்டியில் போடுகிறார்கள் ,அது நமக்கும் நம் முன்னோர் களுக்கும் பாவத்தை கொண்டு செல்லும்
பொதுவாகவே வடமாவட்டங்களில் மற்றும் சென்னையை சார்ந்த இடங்களைல்லும் இத்தகைய வழிபாடு ஒவ்வொரு அமாவாசையன்றும் மேற்கொள்ளப்படுகிறது. என்றாலும் அப்போது எந்த காரணத்திலாவது அந்த வழிபாடுகளை செய்யமுடியவில்லை என்றால் ஆடி அமாவாசையன்று தவறாமல் நிறைவேற்றிவிடுவது மிகவும் நல்லது.அதே போல பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காகச் திருவல்லம் பரசுராமர் ஷேத்ரத்திலும் மிகவும் விஷேசமாக பலிகர்ம பூஜைகளும் செய்யப்படும்.அதிலும்  நாராயண பலி எனும் பூஜையும் ஒன்று. அகால மரணம் மற்றும் துர்மரணம் அடைந்தவர்களுக்கு இந்தப் பரிகாரத்தைச் செய்வார்கள்.இதே மாதிரி, இராமேஸ்வரம் ஸ்லத்தில் 21 பிண்டர்கள் (ஒரு தலைமுறைக்கு ஒன்று வீதம்) வைத்து வழிபாடுவார்கள். பவானி கூடுதுறை தலத்தில் 77 தலைமுறையினருக்காக 7 பிண்டங்கள் வைத்து பித்ருகாரியம் செய்யபடுவதும் சிறப்பு.
அதே போல இறந்தவர்கள் ஆன்மா மோட்சத்திற்கு செல்ல ,கோபுரங்களின் உச்சியில் மோட்ச தீபம் கூட ஏற்றலாம் ,ஆனால் அந்த மோட்ச தீபம் ராஜகோபுரத்தின் அளவைவிட கொஞ்சம் உயரம் குறைந்ததாகவே இருக்கவேண்டும் சுத்தமான பசுநெய் கொண்டுதான் மோட்சதீபம் ஏற்ற வேண்டும். இல்லைஎனில் நம் வீட்டில் செய்த நெய் உத்தமம்.மூலவருக்கு நேரே கிழக்கு நோக்கி இருக்கும் கோபுரத்தில் ஏற்றுவது நலம்
வாயகன்ற ஒரு மண் சட்டி,இல்லை ,பெரிய மண் விளக்கு எடுத்து ,அதில் நவதானியங்களை,வெள்ளை துணியில் முடியவேண்டும் ,நவதானியங்கள் கிடைக்காதவர்கள் எள்ளு கூட எடுத்துக்கொள்ள்ளலாம்.அதை வெள்ளை துணியில் முடிந்து அந்த முடிப்பை சுத்தமான் நெய் சட்டியில் வைத்து ,கோபுரத்தின் மேல் நம்முடைய முனோர்கள் மற்றும் நம்மைவிட்டு நீங்கியவர்களை நினைத்து தீபம் ஏற்றி அவர்கள் ஆன்ம சாந்தியடைய பிரார்த்தனை செய்து ,சுவாமிக்கு அர்ச்சனை செய்தல் நலம்.
ஆடி அமாவாசை எனபது நம்மை விட்டு நீங்கியவர்கல்ளுக்காக பலிகர்மம் செய்யும் ஒரு நல்லநாள் அறிந்தோ அறியாமலோ அவர்களுக்கு நாம் தொல்லைகொடுந்து இருந்தாலோ இல்லை , அவர்கள் செய்த தவறுகளுக்காக அவர்களை நாம் கோபத்தில் பேசி இருந்தாலும் தவறு என தெரிந்தும் நாம் ,அவர்களுக்கு செய்த தவறுகளுக்கு, மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் ஒரு நல்ல வாய்பான  இந்த ஆடி அம்மாவசை தினத்தில்  நாம் முன்னோருக்கு வழிபாடு செய்து அவர்களுக்கு விருப்பமானவற்றை படைத்தது அவர்களின் ஆசிகளை பெறுவோம் ..

நன்றி.