Showing posts with label காந்தாரி. Show all posts
Showing posts with label காந்தாரி. Show all posts

Wednesday, July 03, 2019

கொண்டவன் சரியில்லாத பெண்ணின் கதி என்ன?! - வெளிச்சத்தின் பின்னே...

மிருக இனத்திலிருந்து, மனித இனம் தனியாய் பிரிந்து வந்தபோது ஆணும், பெண்ணும் சரிசமமாய் இருந்தனர்.  கிடைத்த உணவை உண்டு, மரக்கிளையில் தங்கி ஒருவரை ஒருவர் சார்ந்திராமல் வாழ்ந்து வந்தனர்.  ஆணையும், பெண்ணையும் இணைக்கும் ஒரே புள்ளி செக்ஸ் மட்டுமே! பல்கி பெருகி வந்த பல்லாயிரக்கணக்கான உயிர்களுடன் போராடி மனித இனம் வெற்றியடைய, இன்னும் மனித உயிர்கள் தேவைப்பட்டது. மனித உயிர்கள் உண்டாக மனித உடலில் செக்ஸ் சுகத்தை இயற்கை மனித உடலில் உண்டாக்கியது. சுகத்தினை அனுபவித்த மனிதன் மீண்டும் மீண்டும் செக்ஸ்சில் ஈடுபட்டான். மனித சந்ததி அதிகரித்தது. நாகரீகம் வளர வளர ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என குடும்ப அமைப்பு உருவானது. 

குடும்ப அமைப்பு உருவானது முதல் ஆணை சார்ந்தே பெண்ணின் வாழ்க்கை அமைந்தது. பெண் வெறும் போகப்பொருளாகவும், குல விருத்திக்கும் என சமூகம் பார்க்கப்பட்டது. ஒருசில இடங்கள் விதிவிலக்கு. இன்று அந்த நிலையில் மாற்றம் வர ஆரம்பித்துள்ளது. பெண் ரத்தமும் சதையுமான மனுஷி, அவளுக்கும் மனசு, வலி, வேதனை, ஆசை, மரியாதை உண்டு என சமூகம் உணர ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி. ஆனால், இன்றும் சுய கௌரவத்துக்காகவும், சமூகத்துக்கு பயந்தும் தன்னுடைய ஈகோவிற்காகவும் பல பெண்கள் பாதிக்கின்றனர். அறிவியல், நாகரீக வளர்ச்சியும் அடைந்த இந்த காலக்கட்டத்துலயே இப்படி என்றால்!? அந்த காலத்தில்?!... அப்படி சுய கௌரவம்,  வாரிசு போட்டி, பழி உணர்ச்சி.. இவற்றால்  பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை பற்றிதான் இன்றைய வெளிச்சத்தின் பின்னே பார்க்கப்போகின்றோம்...

கொண்டவன் சரி இருந்தால் கூரை மேலேறி சண்டைப்போடலாம்..ன்னு எங்க ஊரில் சொல்வாங்க. அது எத்தனை சரி என்பதற்கு மகாபாரதத்தில் வரும் காந்தாரி சிறந்த உதாரணம். குணநலம் சரியில்லாத கணவன்,சொல்பேச்சு கேட்காத  பிள்ளைகள் , அவர்கள் இரு தரப்புக்கும், பதவி சண்டையை ஊதி பெரிதாக்கி தனது பழி உணர்ச்சியை தீர்க்க காத்திருக்கும் சகோதரன் என முத்தரப்பு ஆட்களிடம் சிக்கிய ஒரு பெண், எத்தனை பேரழகியாய், குணநலனில் சிறந்தவளாய் இருந்தாலும், அவளின் அத்தனை நல்ல விசயமும் அதல பாதாளத்தில் தள்ளப்பட்டுவிடும்.  ஒரு பெண்ணின் நடத்தை போற்றப்படுவதும், தூற்றப்படுவதும் கட்டிய கணவனால் மட்டுமே! இதற்கு சிறந்த உதாரணம் காந்தாரி
.

காந்தாரி காந்தார நாட்டின் இளவரசியாகும். காந்தார நாட்டு மன்னனான சுலபனின் மகள்தான் இந்த காந்தாரி. காந்தாரி தாய் தந்தையரால் மட்டுமல்ல தனது சகோதரர்களாலும் பாராட்டி சீராட்டி வளர்க்கப்பட்டாள்.    காந்தார நாட்டில் பிறந்ததால் காந்தாரின்னு பேர் வந்ததா இல்ல  காந்தம் மாதிரியான கண்களைக் கொண்டதால் அந்தப்பேர் உண்டாச்சான்னு தெரில. காந்தாரிக்கு அத்தனை அழகான கண்கள்.  அழகும் இளமையும் நற்பண்புகளோடு காந்தாரி வளர்ந்து வரும் வேளையில், அரசப்பரம்பரையில் பிறந்ததால் ஆயுதக் கலையிலும் பயிற்சி பெற்றாள் காந்தாரி. எல்லாவிதமான ஆயுதங்களையும் சுலபமாகக் கையாளும் திறனை பெற்றாள். 


காந்தாரிக்கு திருமணப்பருவம் வந்தது. தனது திருமணத்தை பற்றியும், தனக்கு வரப்போகும் கணவனை பற்றியும் பல்வேறு கனவுகளை காண ஆரம்பித்தாள்.  தனக்கு திருமணத்திற்குப்பின் நூறு குழந்தைகள் பிறக்கவேண்டுமென  சிவப்பெருமானிடம் வரம் வாங்கினாள். ஆனால், அவள் ஜாதகரீதியாக அவளது முதல் கணவன் இறந்துவிடுவான் என்று இருந்ததை அறிந்த சுலபன், தனது மகளுக்கு திருமணம் நடக்குமா என பரிதவித்து வந்தான்.

Image result for காந்தாரி


அதேசமயத்தில்  பீஷ்மர் தன் குலம் தழைக்க, குரு குலத்தின் வாரிசுகளான திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் பெண் தேடிக்கொண்டிருந்தார். இதில் காந்தார நாட்டு இளவரசி காந்தாரியை திருதராஷ்டிரனுக்கும், யாதவ குல மன்னனான சூரசேனனின் மகளும், குந்தி போஜனின் வளர்ப்பு மகளுமான குந்தி மற்றும் மத்ர இளவரசி மாத்ரியை பாண்டுவுக்கும் மணம் முடிக்க விரும்பினார்.  பீஷ்மரின்  பெண் கேட்டு வந்த தூதினை சுலபன்   உடனே ஏற்கவில்லை. அறிவும் அழகும் ஆற்றலும் நிரம்பிய தன் மகளை ஒரு குருடனுக்கு மனைவியாக்குவதா என்ற எண்ணம் அவனை வாட்டியது. அதன்பின் குரு குலத்தின் அருமை பெருமைகளை மனதில் கொண்டு பார்வையற்ற திருதராஷ்டிரனுக்கு தன் பெண்ணை திருமணம் செய்துவைக்க சம்மதிக்கிறான். ஆனாலும், மகளுக்கு இருந்த தோஷம் அவனை கவலை அடையச் செய்தது. அதனால் தோஷம் நீக்குவதற்கு பரிகாரமாக, ஒருவரும் அறியாமல் ரகசியமாக ஒரு ஆட்டுக்கடாயை அவளுக்கு மணம் செய்து வைத்தபின் அதை வெட்டி பலி கொடுத்து விடுகின்றனர். அதன்படி காந்தாரி ஆட்டுக்கடாவான தன் முதல் கணவனை இழந்த விதவையாகிறாள்.  அதன்பின்னர் திருதராஷ்டிரன் இரண்டாம் கணவனாகிவிடுவதால் அவன் ஆயுளுக்கு பங்கம் இல்லை என்ற ஜோதிடக்கணக்கு சரியாகிவிடுகிறது. (ஆனால் இதுவே காந்தார நாட்டு வாரிசுகளுக்கும், அதன்பின் குருகுல வம்சம் நாசமாவதற்கும் காரணமாகிவிடுவது தனிக்கதை).
Image result for காந்தாரி

பீஷ்மர் பெண் கேட்டு வந்து, காந்தாரியின் திருமணத்திற்காக சுலபன்  யோசிக்கும்போது , திருதிராஷ்டிரனை மணக்க காந்தாரி தனது  சம்மதத்தை தெரிவித்தாள்.  குருடனானாலும் தன் கணவன் மூத்தவன், அரசக்குமாரன், குலத்தில் சிறந்தவன்,  என பல்வேறு காரணங்களால் மனம் தேற்றிக்கொண்டாள். சகல சீர் வரிசைகளுடனும், பரிசுகளுடனும் தன் தமக்கையை காந்தார நாட்டிலிருந்து பாரதத்திற்கு அழைத்துச் செல்கிறான் சகுனிஅங்கு காந்தாரியையும் சகுனியையும் சகல மரியாதைகளோடு  வரவேற்க பீஷ்மர் ஏற்பாடு செய்கின்றார்.  திருமண ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெறுகிறது. தன் கணவன் பார்வையற்றவனாக இந்த உலகை காண முடியாதவனாக இருந்த காரணத்தால்,  தானும் இனி இவ்வுலகை காண மாட்டேன் என்று தன் கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொள்கிறாள் காந்தாரி.
எல்லா பெண்களுக்கும் மாமியார் வீடென்பது  சகல வசதிகளும் இருக்கும்போதே,  கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரிதான், இதில் முன்பின் தெரியாத இடத்தில், மனிதர்கள் குணநலன் புரிபடாதபோதும் தன் கண்ணையே கட்டிக்கொள்ள காந்தாரிக்கு எத்தனை மனோதைரியம் வேண்டும்?!   இத்தனை காலம், இயற்கை அழகையும், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், சிற்பம், சித்திரம், அழகுக்கலை.. என அத்தனையையும் ராஜக்குமாரியாய் பட்டாம்பூச்சியாய் சுற்றித்திரிந்து பறந்து ரசித்து வந்தவள் தன் கணவனுக்காய அதும் பிறவியிலேயே பார்வை இல்லாதவனுக்காக உலகை இனி காண மாட்டேன் என் முடிவெடுக்க எத்தனை பெண்கள் துணிவாங்க?!

காந்தாரி இப்படி ஒரு முடிவெடுக்க அவளை எது தூண்டி இருக்கும்?! கணவன் மீதிருந்த அன்பா?! அல்லது பதிவிரதாத்தனமா?! மனதிடமா?! அல்லது பட்டத்து ராணியாகும் அவளது ஆசை பொய்த்து போனதா?!  இருந்தும் மணிமுடி மறுக்கப்பட்டவனாய் இருக்கும் கணவனுக்கு வாக்கப்பட்டவள்தானே தனக்கு  எதற்கு பார்வை என்ற விரக்தியா?! எது அவளை தூண்டியது என்பதை காந்தாரியின் மனது மட்டுமே அறியும். எது எப்படியானாலும் அத்தனை அறிஞர்களும், மதியூக மந்திரிகளும் பெரியோர்களும் நிறைந்த சபையில் அவள் கண்ணைக் கட்டிக் கொண்டபோது 'ஏன் இப்படிச் செய்கிறாய் காந்தாரி? உனது அன்பை அபிமானத்தை காதலை கற்பைக் காட்ட இது சரியான வழி இல்லை. இயற்கையிலேயே பார்வை இழந்தவனும் நீயும் ஒன்றல்ல. உன் துணையால் அவனை வழி நடத்தவும், உன் பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்திடவும் உன் பார்வையும் கவனிப்பும் அவசியம் என்று அவளுக்கு எடுத்து சொல்ல ஒரு நாதியும் அந்நாட்டில் இல்லாதது கொடுமையே! 

மற்றவர்கள் எப்படியோ போகட்டும். கட்டிய புண்ணியவானும்கூட, காந்தாரி, இது தியாகமல்ல! உன்னை நீயே வருத்திக்கொள்ளும் செயல். இனி வாழ்நாள் முழுமைக்கான கொடுமை இது., பார்வை இல்லாமல் நான் படும் துயர் போதும், கண் இருந்தும் நீ ஏன் குருடாய் அலைய வேண்டும் என திருதிராஷ்டரனும் அவளை தடுக்காதது அவள் செய்த பாவமே!  இது பதிவிரதாத்தனம், கற்பு என எல்லாரும் சிலாகித்தனரே தவிர எக்காரணமும் இன்றி அவள் தனக்குத் தானே கொடுத்துக்கொண்ட தண்டனை என அவளை மறுத்துக்கூற எவரும் முன்வரவைல்லை. 
Related image
கணவன்தான் தகுதி இருந்தும் பார்வையற்றவன் காரணத்தால் அரசப்பதவி மறுக்கப்பட்டதால்,  தனக்குப் பிறக்கும் குழந்தைகளாவது நாடாளும் ஆசியைப் பெறட்டும் என்று ஏங்கி இருந்தவளுக்கு விதியும் சேர்ந்தே சதி செய்தது. பத்து மாத கருக்காலம் தாண்டியும் அவளுக்கு பிள்ளை ஈன்றெடுக்கும் நேரம் வரவில்லை. குந்திக்கு முதலில் குழந்தை பிறந்து குரு வம்சத்தின் வாரிசை பெற்றுவிட்டாள் என்ற செய்தி அவளுக்கு அளவில்லாத துக்கத்தையும் ஏமாற்றத்தையும் தந்தது. விதி இந்த விஷயத்திலுமா தன்னை வஞ்சிக்க  வேண்டும் என மனம் நொந்தாள். நூறு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் வரம் வாங்கியும், கடவுளும் தன்னை வஞ்சிக்கப்பட்டவளாக உணர்ந்தாள். 
Related image
அக்கோபத்தில் ஏமாற்றத்தில் தன் வயிற்றை தடியால் அடித்துக்கொள்ள, மாமிசப்பிண்டம் தசையும் ரத்தமுமாக வெளியேறியது. அப்போது அங்கு வந்த வியாசர் அப்பிண்டங்களை சுத்தப்படுத்தி சம பாகங்களாகப் பிரித்தார். 100 பாகங்களும் மிச்சமாக ஒரு சிறிய பாகமும் தேறியது. அவற்றை நூற்றி ஒரு கிண்ணங்களில், பசு நெய்யை நிரப்பி அதில் போட்டு வைத்தார். உரிய காலம் ஆனதும் முதல் கிண்ணத்திலிருந்த பாகம் துரியோதனானகவும், அடுத்த கிண்ணத்தில் இருந்தது துச்சாதனாகவும் மற்றும் ஏனைய எல்லாம் அவனது சகோதரர்களாகவும் பிறப்பெடுத்தனர். கடைசி கிண்ணத்தில் இருந்த பிண்டம் துச்சலை என்ற பெண் குழந்தையாக உருவெடுத்தது. 
Image result for துரியோதனன்
துரியோதனன் பிறந்த நேரம் சரியில்லை என அரண்மனை ஜோசியர்கள் கூறினர். குல அழிவு துரியோதனனால் ஏற்படும் என்றும்,  அவனை மட்டும் குழந்தையாய் இருக்கும்போதே அழித்து  விடும்படியும் கூறினர். இதுவரை குழந்தை பிறக்கவில்லையே என்ற வேதனை. இப்போதோ,  பிறந்த குழந்தையை அழிக்க வேண்டும் என்ற சோதனை. பாவம் ஒரு பெண் எத்தனை இன்னல்களை மன உளைச்சல்களைத்தான் தாங்குவாள்?! 
Image result for காந்தாரி

கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே வளர்ந்து வந்த பகையை போக்க எத்தனையோ அறிவுரைகள் சொல்லியும் அதை கௌரவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு காரணம், திருதிராஷ்டிரனும், சகுனியும்...  இருவரின் பங்காளி சண்டை பாரதப்போரில் கொண்டு வந்து நிறுத்தியது. பாரதப்போர் நெருங்கியது... பாரதப் போருக்குமுன் துரியோதனும் அவனது சகோதரர்களும் ஆசிப்பெற காந்தாரியின் கால்களின் விழுந்தபோது, 'அறம் இருக்கும் இடத்தில் வெற்றி் உண்டு’ என்றுக்கூறி மறைமுகமாய் புத்தி சொன்னாள். வியாசர் அளித்த வரத்தினால்,  போரை அவள் கண்மூடி இருந்த போதும் நேரில் பார்ப்பது போலவே பார்த்தாள். தனது ஒவ்வொரு மகன்களும் பாண்டவர்களால் அழிக்கப்படும்போது அவளது உள்ளம் பட்ட பாட்டை விளக்க வார்த்தைகள் இல்லை. அறநெறிக்கு புறம்பாக இருந்தாலும் தாய்க்கு தன் பிள்ளைகள் பிள்ளைகள்தானே?!


Image result for gandhari'
தர்மமே ஜெயிக்கும் என்று தெரிந்திருந்தபோதும், தன் மகன் போரில் வெற்றிப்பெற, எந்த ஆயுதத்தாலும் தன் மகன் பாதிக்கப்படாமல் இருக்க, துரியோதனன் உடல் வஜ்ரம் போல மாறவேண்டும் என ஜோதிட சிகாமணியான சகாதேவனிடம் காந்தாரி யோசனை கேட்டாள்.  உலகம் போற்றுதலுக்குரிய அரிய குணநலன்கள் கொண்ட அன்னையே! கணவன் காணாத உலகத்தை நான் காண்பதில்லை என சபதமேற்று நீ கண்ணை மூடிக்கொண்டாய். இயற்கை அதிசயங்களை காணாதது மட்டுமில்லாமல் தீயவற்றையும் காணாததால், உனது கண்களுக்கென ஒரு அபூர்வ சக்தி உள்ளது. அவற்றினால் உனது மகனை பிறந்த மேனியுடன் கண்டால் அந்த சக்தி உனது மகனின் உடலை வஜ்ரம் போலதாக்கிவிடும்.எந்த ஆயுதத்தாலும் அவனை வீழ்த்தமுடியாது என ஆலோசனை தந்தான். 
Image result for காந்தாரி

வளர்ந்த பிள்ளையை உடையில்லாமல் காண்பதா?! என யோசித்தாலும், துரியோதனின் நலன் கருதி அப்படியே செயல்படுத்த காந்தாரி முடிவெடுத்து துரியோதனனை பிறந்த மேனியாய் வரச்சொல்லி ஆள் அனுப்பினாள்.   துரியோதனும் பிறந்த மேனியாய் அன்னையின் அரண்மனை நோக்கி வந்தான். இந்த விசயம் கேள்விப்பட்ட கிருஷ்ணர், துரியோதனன் வரும் வழியில் ஒரு தோட்டக்காரன் வேடம் கொண்டு, மன்னா! என்ன இது கோலம் என துரியோதனனை இடைமறித்து நின்றான். சகாதேவனின் ஆலோசனையையும், அன்னையின் ஆணையையும் துரியோதனன் சொன்னான். மன்னா! வளர்ந்த பிள்ளையை உடை இல்லாமல் தாய் காண்பது அறமாகாது. அப்படி கண்டால் தாயின் கோவத்துக்கு ஆளாகி, தாங்கள் எரிக்கப்படுவீர்கள். அதனால், நீங்கள் பிறப்பு உறுப்பு மறைக்கும்படும்படி இடையில் மட்டுமாவது எதாவது ஒரு சிறு துணியை கட்டிக்கொண்டு செல்லுங்கள் எனக்கூறினார். துரியோதனனும் மனம் குழம்பியவனாய் சிறு துண்டு கட்டிக்கொண்டு அன்னையின்முன் சென்றான்.

Image result for காந்தாரி துரியோதனன்
இதையறியாத காந்தாரி, கண்களை திறந்து துரியோதனனை பார்க்க, துணி மூடி இருந்த இடை மட்டும் பலவீனமாகவும், துணியினால் மூடப்படாத மற்ற பாகங்கள் வஜ்ரம் மாதிரி உறுதியாகவும் ஆனது. திரௌபதியை எந்த தொடையில் வந்து அமரச்சொன்னாயோ! அந்த தொடையை பிளந்து ரத்தமெடுத்து திரௌபதி கூந்தலில் தடவி உன்னைக்கொல்வேன் என எடுத்த சபதம் அவளது நினைவுக்கு வந்தது.  ஏன் இப்படி வந்தாய் என துரியோதனனிடம் விசாரிக்க, தோட்டக்காரனுடன் நடந்த உரையாடலை சொன்னான். இது கிருஷ்ணனின் சதி என்பதை காந்தாரி உணர்ந்து விதியின் விளையாட்டை எண்ணி மனம் வருந்தினாள்.
Image result for காந்தாரி துரியோதனன்
குருஷேத்திரப்போரில் துரியோதனன்  வீழ்ந்தான். அவனை மடியில் கிடத்தி அழுததோடு, குருஷேத்திர போருக்கு காரணமான கிருஷ்ணருக்கு, அவரது  யதுகுல வம்சம், 36 ஆண்டுகளுக்குப்பின்னர் அழிவினை சந்திக்க வேண்டுமெனவும், என்னைப்போலவே தனது வாரிசுகளின் மடிவதை கண்டபின்னர் கிருஷ்ணரும் இறக்க வேண்டுமென சாபமிட்டாள். 
Image result for குந்தி காந்தாரி

திருமணத்திற்குமுன் தனக்கிருந்த தோஷத்தால், ஆட்டுக்கடாயை திருமணம் செய்து கொண்டு, அதை பலி கொடுத்த சடங்கின்மூலம், தனது  முதல் கணவன் நிலைக்க மாட்டான் என்ற தோஷம் நிவர்த்தி செய்யப்பட்ட விவரம், பீஷ்மருக்கு தாமதமாக தெரிய வந்தது. தன் குலத்திற்கு ஒரு விதவை மருமகளாக வருவதா? இந்த விஷயம் மற்றவர் அறிந்தால் இகழ்ச்சிக்கு ஆளாக நேரிடுமே என்று எண்ணி, அந்த ரகசியம் தெரிந்த சுலபன் குடும்பத்தினர் ஒருவரையும் விடாது அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். அதன் காரணமாக அவர்களை குடும்பத்துடன் சிறை வைத்து ஒரு பிடி உணவு மட்டுமே கொடுத்து அழிக்க   முயன்று, எல்லாரும் ஒரு பிடி உணவு உண்டு உயிர் வாழமுடியாது என்பதை உணர்ந்த சுலபனும், அவரது மகன்களும் தங்களுடைய உணவினை சகுனிக்கு தந்து அவனை உயிர்பிழைக்க வைத்து தாங்கள் உயிர் விட்டதாகவும், தந்தை, சகோதரர்களின் மரணத்திற்கு பழி வாங்கவே  குருகுலத்தை பழிவாங்கி சகுனி அழித்தான். ஆக, சகோதரனாலும் காந்தாரி வஞ்சிக்கப்பட்டாள். 
Image result for குந்தி காந்தாரி
கடவுள், தந்தை, குலகுரு, கணவன், சகோதரன் என அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட காந்தாரியின் வாழ்க்கை  மன அமைதியின்றி, தவிப்பு, சோகம் பதட்டம் நிறைந்ததாகவே அவள் வாழ்க்கை இருந்தது.  தன் கணவன் பார்க்காத உலகை நானும் பார்க்கமாட்டேன் எனக்கூறி தன் கண்ணை கட்டிக் கொண்டதிலாகட்டும், தனது வாரிசுகள் அரியணையில் ஏறவேண்டுமென்ற ஆசைக்கு குந்தி புத்திரர்கள் தடையாய் இருந்தாலும், குந்தியையும், பாண்டவர்களையும், மருமகள் திரௌபதியை அரவணைத்து சென்றதிலாகட்டும், திரௌபதியை துகிலுரித்ததை கண்டித்தலாகட்டும்,  பாண்டவர்கள் போருக்கு போகும்முன் ஆசிப்பெற வந்தபோதிலும், அறம் உள்ள பக்கம் ஜெயிக்கட்டும் என கூறியதில் ஆகட்டும்,போரில் தனது நூறு மகன்களையும் இழந்து சோகத்தில் இருக்கும்போதும்,  போரில் வெற்றிப்பெற்று தன்னைச் சந்திக்க வந்த பாண்டவர்களை எதிரிகளே ஆனாலும் தன் வருத்தத்தையும் கோபத்தையும் அளவோடு வெளிப்படுத்தி அவர்களை அரவணைத்துச் சென்றதிலாகட்டும் காந்தாரி கற்புக்கரசி மாத்திரம் அல்லாமல் திட சித்தமும், மன உறுதியும் கொண்ட வெற்றிகரமான பெண்மணி ஆகிறாள். 
எத்தனை திறமைகள், நல்ல குணநலன்கள் இருந்தாலும் துரியோதனின் தாய் என்ற ஒரே காரணத்திற்காக, அவளும் வில்லியாகவே இந்த உலகம் பார்க்க வைக்கப்பட்டிருக்கு. தியாகம், அன்பு, அழகு, குணநலன், அறிவு என அத்தனை திறமைகள் இருந்தபோதும், அனைத்து தரப்பினாலும் வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கை வெளிச்சத்தின் பின்னே இருளில் கிடக்கின்றது....

வெளிச்சத்தின் பின்னே தொடரும்...

நன்றியுடன்,
ராஜி

Wednesday, May 17, 2017

மாயக்கண்ணனின் குலமான யதுகுலத்தின் முடிவு - தெரிந்த கதை தெரியாத உண்மை .

பொதுவாக மகாபாரத கதைகள் எல்லாமே இடியாப்ப சிக்கல்களாகத்தான் இருக்கும்.  நமக்குலாம் பொதுவான சில முக்கியமான பாத்திரங்கள் மட்டுமே தெரியும். ஆனால் கிளைக்கதைகள் மற்றும் அவர்களின் பெயர்கள் எல்லாம் பற்றி  அறிந்துகொள்ளவேண்டும் என்றால் நமக்கு இந்த ஆயுள் போதாது. போன பதிவில் யதுகுலத்தை முடிவுக்கு கொண்டுவர காரணமான க்ருஷ்ணனரின் மகன் சாம்பாவின் விளையாட்டுத்தனத்தையும் அதனால் முனிவர்கள் விட்ட சாபத்தையும் பார்த்தோம். பாக்காதவங்க இங்கே போய் பார்த்துட்டு வாங்க.

துவாரகையில் நடந்த துயர சம்பவத்தை அறிந்த கிருஷ்ணருக்கு வேண்டப்பட்டவர்களெல்லாம் வந்து என்ன நடந்தது என விசாரிக்க தொடங்கினர். அப்பொழுது உக்கிரசேனர் அங்கே வந்தார். யார் இந்த உக்கிரசேனர்?! மதுரா நாட்டின் யதுகுல மன்னரும், கம்சனின் தந்தையும், கிருஷ்ணரின் தாய்வழி பாட்டனும் ஆவார். உக்கிரசேனர் யதுகுலத்தின் குக்குர கிளையினர் ஆவார். புராணங்களின்படி, உக்கிரசேனர் ஆஹூகனின் மகன் ஆவார். மன்னர் உக்கிரசேனர் இவரது மகனான கம்சனால் சிறையில் அடைக்கப்பட்டார்.  பின்னர் கம்சனை கொன்று கிருஷ்ணர் உக்கிரசேனரை சிறை மீட்டு மீண்டும் அரியணையில் அமர்த்தினார். அதன் பிறகு சூரசேனரின் மகனும், கிருஷ்ணரின் தந்தையும், மன்னர் உக்கிரசேனரின் மருமகனுமான வாசுதேவருக்கு பட்டத்து இளவரசு பட்டம் வழங்கப்பட்டது. அந்தக்கதை எழுத ஆரம்பித்தால்  அதுவே ஒரு தனிப்பதிவாக வரும். நாம நம்ம கதைக்கு வருவோம்...
இங்கே என்ன நடந்தது என கிருஷ்ணரை பார்த்து உக்கிரசேனன் கேட்க , அதை நான் சொல்லுகிறேன் என்றது ஒரு குரல்.  குரல் வந்த திசையை நோக்கி திரும்பி பார்த்தார் உக்கிரசேனர். அங்கு ருக்மணி நின்று கொண்டிருந்தாள். முப்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ணர், அழிவின் கடவுள் ருத்திரனை போல் ஒருமகன் வேண்டுமென தவம் இருந்தார். .சாம்பசிவன் அருளால் பிறந்த அவனுக்கு சாம்பா என பெயரிட்டார் (தமிழில் சாம்பன் எனவும் அழைக்கப்படுவான்). அவன் பிறந்தது எதற்காக என கிருஷ்ணருக்கு தெரியும். காந்தாரியின் சாபத்தை நிறைவேற்றவே அவன் பிறந்தான் என மெல்லிய குரலில் கூறினாள். ( கிருஷ்ணா நீ கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்டு ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டு இருந்த போது சலனமின்றி இருந்தாய். ஓ கோவிந்தா! அதனால் நீயே உன் பங்காளிகள் அனைவரின் அழிவிற்கும் காரணமாவாய். இன்றிலிருந்து முப்பத்தாறாவது வருடம், உன்னுடைய குலத்தைச் சார்ந்தவர்கள், உன் நண்பர்கள் மற்றும் குழந்தைகள் அனைவரின்  அழிவிற்குக் காரணமாகி, பிறகு வனாந்திரந்தில் தனிமையில் மரணமடைவாய். உன் குலப் பெண்கள், தங்கள் குழந்தைகள், பங்காளிகள் மற்றும் நண்பர்களை இழந்து இந்த பாரத போரில் மாண்டவர்களின் பெண்களைப் போலவே அழுது அரற்றுவார்கள் என சாபமிட்டாள் காந்தாரி)  போன பதிவில் தெளிவாக பார்த்தோம்.

 இந்த சாம்பா , கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்தவன் என்றும் அவன் அர்ஜுனனிடமிருந்து போர்க்கலையைப் பயின்றவன்.  துரியோதனனின் ஒரே மகளான இலெட்சுமணாவை, சுயம்வரத்தின்போது சாம்பன் கடத்திச் சென்று திருமணம் செய்ய இருக்கையில், பலராமனின் முயற்சியால் இருவீட்டாரும் இணங்க சாம்பன் – இலெட்சுமணாவின் திருமணம் நடந்தேறியது எனவும் சொல்லப்படுகிறது. சாம்பா முனிவர்களை கிண்டல் செய்தது முனிவர்களின் சாபம் நடக்கும் என்பதும், முக்காலமும் தெரிந்த கிருஷ்ணருக்கு தெரியும் என சொல்லவும் உக்கிரசேனர் என்ன சொல்வது என தெரியாமல் மெதுவாக அவ்விடத்தைவிட்டு சென்றார் .

இந்த ருக்மணி யாருன்னு பார்த்தோம்னா, விதர்ப்பநாட்டு இளவரசி. கிருஷ்ணரின்மேல் தீராத காதல் கொண்டவள். அது அவளது சகோதரன் ருக்மிக்கு பிடிக்காததால் சேதி நாட்டு அரசன் சிசுபாலனுக்கு தன் சகோதரியை மணம் முடிக்க முடிவுசெயதான். உடனே ருக்மணி இந்த கணமே தன்னை வந்து காப்பாற்றாவிடில் தன்னுயிரை மாய்த்துக்கொள்வதாக  கிருஷ்ணருக்கு அவசரமான தூது அனுப்பினாள். உடனே கிருஷ்ணர் விதர்ப்ப நாட்டிற்கு சென்று அங்கே அம்பிகை பார்வதிதேவியின் திருக்கோவிலில் கிருஷ்ணரை கணவனாக அடைய பிரார்த்தனை செய்துக்கொண்டிருந்த ருக்மணியைத் தேரில் ஏற்றிக்கொண்டு,   எதிர்த்த மன்னர்களையும் ருக்மியையும் வெற்றிக்கொண்டு மகாலட்சுமியின் அம்சமான ருக்மணியை திருமணம் செய்து கொண்டார். ருக்மணியே கிருஷ்ணரின் மனைவியரில் முதன்மையானவர் .
ருக்மிணிக்கு ஐந்து சகோதரர்கள். அவர்களின் பெயர்கள் ருக்மி, கருக்மன், ருக்மபாஹூ, ருக்மகேசன், ருக்மமாலி ஆகும். ருக்மணிக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்த குழந்தை பிரத்யும்னன். இவருக்கும் ருக்மியின் பெண்ணான ருக்மவதிக்கும் திருமணமானது. பிரத்யும்னன் - ருக்மவதிக்கு பிறந்தவர் அனிருத்தன் ஆவார். இவர் கிருஷ்ணனின் பேரனாவார். எல்லா கதைகளும் ஒரு கிளைக்கிதைகளை கொண்டு இருக்கிறது. அவற்றை தனியாக வேறு ஒரு பதிவினில் பார்க்கலாம் .
Sage Narada visits the homes of Lord Krishna.:
இறுதியாக அக்ரூரரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து, அவர்கள் அந்த இரும்பு துண்டை தூளாக அரைத்தனர். அப்பொழுதுகூட  மிகவும் கடினமான முக்கோண வடிவில் கூர்மையான ஒரு துண்டு மட்டும் தூளாகவில்லை. அதோடு சேர்த்து அந்த துகள்களை கடலில் எறிந்துவிட்டு நிம்மதியாக திரும்பினார்.  அவர்களால் கடலில் எறியப்பட்ட அந்த முக்கோண வடிவினால ஒரு மீனினால் விழுங்கப்பட்டது. மிச்ச மீதி துகள்க சில காலம் கழித்து கடல் அலைகளால் பிரபாசபட்டினக் கடற்கரையில் ஒதுங்கி மிக உறுதியான நீண்ட கோரைப் புற்களாக வளர்ந்தன. இரும்புதுண்டை விழுங்கிய மீனானது ஒரு மீனவனால் பிடிக்கப்பட்டு, மீன் பல கை மாறி வெட்டுப்படும்போது வெளிவந்த அந்த இரும்பு துண்டு ஒரு கூறிய அம்பாக வடிவமைக்கப்பட்டது. கடற்கரையில் ஏரக்கா கோரை புற்கள் இரும்பினைப்போல  உறுதியாக  வளர்ந்து நின்றன. எல்லாம் ஒரு இறுதியான அழிவிற்கு என்னவெல்லாம் வேண்டுமோ அனைத்தும் தயார் நிலையில் அமைக்கப்பட்டது போல எல்லாம் தத்ரூபமாக அமைந்தன.
Vaivasvata Manu Worships Lord Matsya (the "Noah's Ark" description of the Vedas):

நாளடைவில் எல்லாம் சகஜநிலைமைக்கு திரும்பிவிட்டது. யதுகுலத்தவர் தங்களுக்கு ஏற்பட்ட சாபத்தை மறந்துவிட்டனர். ஒட்டுமொத்த துவாரகை அரசாட்சியில் மதுதடை செய்யப்பட்டது. பாரதப்போர் நடக்கும்போது கிருஷ்ணரின் வயது 90. எனினும் மகாபாரத போர் நடந்த 36 வருடங்களுக்குள் துவாரகையில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன. கிருஷ்ணரின் சங்கு, சக்கரம், அவரின் அழகிய ரதம் எல்லாம் மறைந்தன. பலராமனின் மழு என்னும் கலப்பையும்  மறைந்துவிட்டது. யாதவர் குலம் அழியும்நேரம் சமீபித்தபோது, கடற்கரையோரத்திலிருக்கும் பிரபாஸா என்ற இடத்திற்குச் செல்லும்படி கிருஷ்ணர் கூறினார். யாதவர்கள் கடற்கரையில் கூடினார்கள். அவள்களில் சில யாதவ இளைஞர்கள் மதியை மயக்கும் போதையைத் தரும் மைரேயம் என்ற மதுவை அளவுக்கு மீறி குடித்து விட்டு சண்டைபோட்டனர். அவர்கள் குடித்துக்கொண்டிருக்கும் மதுபானம் அவர்களது உணர்வுகளை முற்றிலும் இழக்கச் செய்தது.
BHAGAVAD GITA {2, 55 } According to mother Sarda, desires for knowledge, devotion, and salvation cannot be classed as desires because they are higher desires. One should first replace the lower desires with higher desires and then renounce the highest desire also and be­come absolutely free. It is said that the highest freedom is the freedom from becoming free:
பாரதப்போரில் எதிர் எதிரணிகளில் இருந்த கிரிதவர்மா மற்றும் சத்யாகி ஆகிய இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. அவர்கள்தான் இந்த அழிவை தொடங்கிவைத்தனர். சத்யாகி குருக்ஷேத்திர யுத்த களத்தில் பாண்டவர்கள் பக்கமும், கிரிதவர்மா கௌரவர்கள் பக்கமும் நின்று சண்டையிட்டனர். போரின் கொடூர நினைவுகள் மீண்டும் வர ஒருவருக்கொருவர் வாக்குவாதம் முற்றி, ஆத்திரமடைந்த சத்யாகி துள்ளிக்குதித்து கிரிதவர்மாவின் தலையை கொய்துவிட்டான். உடனே கிரிதவர்மாவின் நண்பர்கள், சத்யாகி மேல்பாய்ந்து அவனை கொன்றனர். பின்னர் இருவரின் நண்பர்களும் கடுமையாக சண்டை இட்டனர். வெகுவிரைவில் இந்த சண்டையில் அனைவரும் கலந்து கொண்டனர். அவர்கள் கடற்கரைக்கு வந்ததினால் ஆயுதம் எதுவும் எடுத்துவரவில்லை அதனால் கடற்கரைகளில் வளர்ந்து இருந்த ஏரக்கா  புல்லை பிடுங்கி ஒருவரையொருவர் அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். சாம்பா  வயிற்றில் இருந்துவந்த இரும்பு உலக்கையின் துகள்களே அந்த புற்கள்.  அந்த புல் இரும்பு கம்பிகளைப் போலிருந்ததால் அனைவரும் இறந்தனர்.
கிருஷ்ணர் தன்னுடைய ரதசாரதி தருகாவிடம் துவாரகையை விட்டு எல்லோரும் இடம்பெயர வேண்டும். ஏனென்றால் கடல் நீர்மட்டம் அதிகரிப்பதினால் துவாரகை மூழ்கிவிடும் என அவசரப்படுத்தி, எல்லோரையும் அப்புறப்படுத்தியப்பின், கிருஷ்ணர்,  பாலராமன் மற்றும் தருகா இவர்கள் மட்டுமே மீதமிருந்தனர். நடந்தவைகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பலராமன் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தன்னுடைய குண்டலினி சக்தியை எழுப்பி தன்நிலை மறந்த நிலையில் அந்த பரம்பொருளிடம் தியானம் செய்து பூலகத்தில் தன் வாழ்வை முடித்து தன்னுள் எடுத்துக்கொள்ளவேண்டும் என பிரார்த்தனை செய்து மிகப்பெரிய வெள்ளை நாகமாகமாறி கடலுக்குள் வீழ்ந்து இவ்வுலகம் நீத்தார்.
இந்த கூட்டத்தில் ருக்மிணிக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்த மற்றொரு மகனான பிரத்யும்னா (இவன்  சிவனால் எரித்து சாம்பலாக்கப்பட்ட மன்மதனே ருக்மிணியின் கருவில் உருவானான் என்றும் சொல்லப்படுகிறது) ஒருமுறை சாம்பரா என்னும் அசுரன், பிரத்யும்னாவினால்தான் கொல்லப்படுவான் என்று தெரிந்துகொண்டு பிரத்யும்னா குழந்தையாக இருக்கும் போது பெண் உருவமெடுத்து அவனை கடத்தி சென்று கடலில் எறிந்துவிட்டான். அப்பொழுது ஒரு பெரிய மீன் அவனை விழுங்கி விட்டது. அதை ஒரு மீனவன் பிடித்து சாம்பராவின் அரண்மனைக்கே விற்றுவிடுகிறான். அந்த அசுரனின் சமையற்காரியாக இருந்தவள் மாயாவதி.  இவள் ரதியினுடைய அம்சம் எனவும் சொல்லப்படுகிறது. அவள் அந்த மீனை வெட்டும்போது வயிற்றுப்பகுதியில் இருந்து ஒரு அழகான குழந்தை இருப்பதை கண்டவுடன் ஆச்சர்யமடைந்து குழப்பத்தில் இருந்தாள்.
மீன் வயிற்றில் இருந்த குழந்தையை கண்ட  குழப்பத்தில் இருந்த மாயாவதியின் முன்பு தோன்றினார் நாரதமுனிவர். அவர் பிரத்யும்னாவின் பிறப்பு பற்றியும் அவன் யார் எனவும் விரிவாக எடுத்து கூறினார்.  இவனே மன்மதன் என்றும், அவன் வந்த வேலை முடிவடைந்ததும் நீங்கள் இருவரும் தேவலோகம் செல்வீர்கள் எனவும் இவனுக்ககத்தான் நீயும் காத்து இருக்கிறாய் என விளக்கினார். அதிசயமாக மிகவும் குறுகிய காலத்திற்குள் அந்த குழந்தை வளர்ந்தது. எல்லாவற்றையும் தெரிந்துகொண்ட  குழந்தை பிரத்யும்னா, சாம்பாராவை போருக்கு அழைத்தான். ஒரு சிறுவன் தீடிரென போருக்கு அழைத்து அவமானப்படுத்துகிறானே என கலக்கமடைந்து பிரத்யும்னாவுடன் போருக்கு  சென்றான் சாம்பரா.  அப்படி போர் புரியும்போது சாம்பரா தன்னுடைய மழை பெய்யும் ஆயுதத்தினால் பிரத்யும்னாவை தடுமாற செய்தான். பல மாயவித்தைகளை செய்து போரிட்டான் சாம்பரா.  அதையெல்லாம் மஹாமாயாவின் துணைக்கொண்டு சாம்பாராவின் தலையை வெட்டி அவனை கொன்றான் பிரத்யும்னா. வானில் இருந்து தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். முடிவில் பிரத்யும்னா,ரதியுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் தன்னுடைய இருப்பிடமான துவாரகைக்கு கிளம்பினான் .
சத்யாகி ஆரம்பத்தில் கிரிதவர்மாவிடம் பாண்டவர்களின் படையை நடு இரவில் தாக்கியது பற்றி சண்டை எழ அவர்களுக்குள் சண்டை நடந்து சத்யாகி கொல்லப்பட்ட்டதும் அவனுக்கு ஆதரவாக கிரிதவர்மாவிடம் சண்டையிட்டான் பிரத்யும்னா. அந்த யுத்தத்தில் அவன் கிருஷ்ணரின் முன்பு நடந்த அந்த சண்டையில் படுகொலை செய்யப்பட்டான். பிரத்யும்னாவின் மகன் அனிருதா இவனது மனைவி உஷா (இவள் பானதைத்யவின்  மகளும், மகாபலியினுடைய பேத்தியும் ஆவாள்அனிருதா தன்னுடைய பாட்டனார் கிருஷ்ணன்மீது மிகுந்தமரியாதை கொண்டவன். இவனது மகனும் கிருஷ்ணரின் கொள்ளுபேரனுமாகிய வஜ்ஜிர, ஜெய்சால்மர் குடும்பம் வழியாக அறியப்படுகிறார். யாதவ வம்ங்களில் தப்பி பிழைத்த சிலரில் வஜ்ராவும் ஒருவன்(வஜ்ஜிர மற்றும் கிருஷ்ணருடன் சேர்த்து 16 பேரின் சிலைகள் மதுராவில் உள்ள கோவில்களில் காணப்படுகின்றன).
Mahabharatham - The Great Indian Epic...:
எல்லோருடைய முடிவும் விதித்தபடி நடந்தேறியதால் மனம் உடைந்த கிருஷ்ணர் ஒரு மரத்திற்கு அடியில் அமர்ந்திருந்தார். அவருக்கு பழைய நினைவுகள் நிழலாடியது. பாரத போர்  முடிந்த சமயம், போரில் 100 மகன்களையும் இழந்த பெரியன்னையைச் சந்திக்க பாண்டவர்கள் தயங்கினர். காந்தாரி தங்களைச் சபித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் அவர்களுக்கு.  பிறகு, ஸ்ரீகிருஷ்ணர் எல்லோரையும் சமாதானப்படுத்தி அவளைச் சந்திக்க சென்றனர்.  திருதராஷ்டிரரின் அனுமதியுடன் காந்தாரியைச் சந்தித்தனர். அவர்கள் பயந்தது போலவே, அவளும் ஆத்திரத்துடன் சபிக்க முற்பட்டாள். உடனே வியாசர் குறுக்கிட்டு  அவளைச் சமாதானப்படுத்தி, அறம் இருக்கும் இடத்தில் வெற்றி உண்டு என வாழ்த்தினாய். அதன்படி, அறம் வென்றது எனவே சினம் வேண்டாம்  சமாதானப்படுத்தினார். உடனே அடுக்கடுக்கான கேள்விக்கணைகளை தொடுத்தாள் காந்தாரி. யுத்தத்தில்,  அறத்துக்குப் புறம்பாக பீமன் தொப்புளுக்குக் கீழே கதையைப் பயன்படுத்தினானே அது அறம்தவறிய செயல் இல்லையா?அதை எப்படிப் பொறுப்பது? என்று காந்தாரி கேட்க  பீமன் மன்னிப்புக் கேட்டான்.  அத்துடன், சூது விளையாட்டு மற்றும் திரௌபதியின் வஸ்திராஹரணம் ஆகியவை அறத்துக்குப் புறம்பானவைதானே அதையும் நீங்கள் பார்த்துக்கொண்டுதானே இருந்தீர்கள் என வாதிட்டான் .
Bhima kills Dusshasana in the battle of Kurukshetra, tears open his chest and drinks his blood and collects it to wash Draupadi's hair to keep his promise:

இதில் கோபமுற்ற காந்தாரி, துச்சாதனனின் ரத்தத்தைக் குடித்தாய். உன்னை எப்படி மன்னிப்பது என ஆவேசப்பட்டாள். உடனே அவன், தாயே!அவனது ரத்தம் என் பற்களைக் கடந்து உள்ளே செல்லவில்லை. கைகள் ரத்தத்தில் தோய்ந்திருந்தன. அந்தக் கைகளால், அவிழ்ந்த திரௌபதியின் கூந்தலை அள்ளிமுடிப்பேன் என்ற வாக்குறுதிப்படி, திரௌபதியின் தலையில் ரத்தத்தைப் படியச்செய்தேன் என்றான். இதன் பின்னர் தருமா! என காந்தாரி அழைக்க தர்மர் அவளது காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து மன்னிப்பு கோரினார். தருமர் காந்தாரியின் கால்விரல்களை தொட்டதும், தருமரின் நகங்கள் எல்லாம் கருத்து போயின. காந்தாரியும் சிறிது சாந்தமானாள் .



வேதவியாசர், காந்தாரிக்கு  திவ்ய திருஷ்டியை அளித்தார். போரில் தோற்றவர்களையும், இறந்தவர்களையும் கண்டு கவலையானாள். சிதையில் எரியும் கணவன்மார்களின் உடல்களை வலம்வந்த பெண்களை பார்த்ததும் காந்தாரி ஆவேசம் கொண்டு க்ருஷ்ணரை பார்த்தாள்.  இத்தனை துன்பத்துக்கும் நீயே காரணம். நீ நினைத்திருந்தால் இந்த யுத்தத்தை தடுத்திருக்க முடியும். நான் பதிவிரதை என்பது உண்மையானால் எனது வம்சத்து சகோதரர்கள் ஒவ்வொருவரும் சண்டையிட்டு மாண்டதுப்போல, நீ தோன்றிய யதுகுல வம்சத்தின் சகோதரர்கள் சண்டையிட்டு மடிய வேண்டும். நீயும் காட்டில் தனிமையில் மரணத்தை சந்திக்க வேண்டுமென சபித்தாள். குரு வம்சம் அழிவதை நீ பார்த்துக்கொண்டிருந்தாயே என க்ருஷ்ணரை நிந்தித்தாள். ஆனால், ஸ்ரீக்ருஷ்ணர் பொறுமையுடன் தாங்கள் சொல்வது உண்மைதான், ஆனால் இவையனைத்தும் முன்பே நிச்சயக்கட்ட விசயங்கள். அதனால் நடந்தே தீரும் என்றார்.  பதிவிரதையின் சாபம் யாதவர்களையும் கண்ணனையும் பாதித்தது. அதை சற்றே நினைவுகூர்ந்தபடி மரத்தின் அருகில் சாய்ந்து இருந்தார். தன் முன்னே தன குலத்தவர் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு மாய்ந்ததை எண்ணி வேதனைப்பட்டு கிருஷ்ணர் ஒரு அசுவமரத்தின்  கீழ் அமர்ந்து இருந்தார். தன்னுடைய இறுதிக்காலம் நெருங்குவதை உணர ஆரம்பித்தார்.
Aum Sai Ram.   What Happened After The Mahabharata War Is Something You Weren't Taught In School.   Mahabharata is a nearly perfect example ...:

அவர் ஹிரண்ய நதிக்கரையில்  அடர்ந்த புதர்கள் அடங்கிய குரா  மரத்தடியில்  கால்களை நீட்டி ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது "ஜரா' என்ற வேடன் ஒரு காட்டு முயலைத் துரத்திக் கொண்டு வந்தான்.  அது புதர்ப்பகுதியில் ஓடி மறைந்தது. அந்த வேளையில் கிருஷ்ணரின் கால்களில் ஒன்று வேடன் கண்களுக்கு முயல்போல் தெரிய, மறைந்திருந்து அம்பு எய்தான். அந்த அம்பு பகவானின் வலது குதிக்காலில் பலமாகத் தைத்ததும், அந்த அம்பு கிருஷ்ணரின் ஆன்மாவில் நுழைந்து அவரது   உயிரை எடுத்துக்கொண்டிருந்தது.  அப்பொழுது "ஆ' என்ற அலறல் சத்தம் கேட்டு பதறினான் வேடன்; ஓடோடி வந்தான். அங்கே பகவான் கிருஷ்ணர்  காலில் அம்பு தைக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்ட வேடன், ""பகவானே! உங்கள் பாதம் எனக்கு முயல்போல் தெரிந்ததால் மறைந்திருந்து அம்பு எய்தேன். என்னை மன்னித்து விடுங்கள்'' என்று கதறினான். அப்பொழுது கிருஷ்ணர் அவனை தேற்றினார். ""வேடனே, வருந்தாதே. நாம் செய்த பாவங்கள் நம்மைப் பின்தொடர்ந்து வரும். தெரியாமல் செய்த பாவங்களை இப்பிறவியிலேயே பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்திடலாம். ஆனால் தெரிந்து செய்த பாவங்களை எந்த வழிபாடுகளாலும் நிவர்த்தி செய்ய முடியாது. அதற்கு நானே உதாரணம் எனக்கூறினார் .

திரேதாயுகத்தில் நான் ராமனாக அவதரித்தபோது, வாலியை மறைந்திருந்து அம்பு எய்தி கொன்றேன். அப்போது வாலி, "ராமா, எனக்கும் உனக்கும் என்ன பகை? எங்கள் விலங்கினத்தில் ஒரு பெண்ணை கடத்திச் செல்வது சகஜம். ஆனால், நீ என்னைத் தவறாகப் புரிந்துகொண்டாய். என்னிடம் நேருக்கு நேர் போர்புரிய முடியாது என்பதை அறிந்து, மறைந்திருந்து என்னை வீழ்த்தினாய். இதே நிலைமை உனக்கு என்னால் ஏற்படும். தர்மம் என்று ஒன்றிருந்தால், எத்தனை காலமானாலும் உன்னை மறைந்திருந்து வீழ்த்துவேன்' என்று வேதனையுடன் சாபமிட்டான். அந்த சாபம்தான் இன்று பலித்தது.
தெய்வமாக இருந்தாலும் சிறிதளவு நெறி தவறினால் துன்பத்தை அனுபவித்தே தீரவேண்டும் என்பது பொது விதியாகும். இதற்கு எந்தவிதமான பரிகாரங்களும், யாகங் களும், தான- தர்மங்களும், வழிபாடுகளும் கைகொடுக் காது. அதைத்தான் நான் இப்போது அனுபவிக்கிறேன். வேடனேநீதான் அந்த வாலி. உன் சாபத்தினை நிறைவேற்றிவிட்டாய். முன்ஜென்ம நிகழ்வுகள் எதுவும் பூலோகத்தில் பிறந்தவர்களுக்கு நினைவுக்கு வராது. அதனால் உனக்கு இது தெரியவில்லை. என் அவதாரம் இன்றுடன் முடிந்தது. நீ நீடூழி வாழ்வாயாக'' என்று வாழ்த்தினார் கிருஷ்ணரின் வார்த்தைகளால் ஆறுதல் அடைந்த ஜரை அவரை மூன்று முறை வலம் வந்து, பிறகு அவரை நமஸ்கரித்து விட்டு வீடு திரும்பினார்.
gallery_1_42_1244183.jpg (1991×2487):
ஸ்ரீகிருஷ்ணர் இறக்கும் தருவாயிலிருக்கிறார் என்பதை அறிந்த உத்தவர் நிலைகுலைந்து போகிறான். ஸ்ரீகிருஷ்ணரிடம் தன்னை வழி நடத்துமாறு கேட்கிறான். அப்போது அவன் உத்தவ கீதையை கேட்கிறான். ஸ்ரீ கிருஷ்ணர் இந்த உடலின் அழியும் தன்மையைப் பற்றி மறுபடியுமாக எடுத்துரைத்து இவ்வுடல் விலையேறப்பெற்றது. ஐம்புலன் கொண்ட இந்த சரீரத்திலிருந்துதான் ஒரு மனிதன் ஜீவன் முக்தியை அடைய முயற்சி செய்யலாம். பத்ரி வனத்திற்குச் சென்று நான் கூறிய சத்தியத்தை தியானம் செய். நான் பாகவதம் மூலமாக என்னை வழிபடுபவர்களுக்கு வழிகாட்டுவேன் என்றார். இவ்வாறு கூறிவிட்டு பரம்பொருளை தியானம் செய்து விண்ணுலகம் சென்றார் .
கிருஷ்ணரின் சாரதியான தாருகன் கிருஷ்ணரைத் தேடிக் கொண்டிருந்தான். கிருஷ்ணர் அணிந்திருந்த துளசி மாலையின் மணம் அவனை அவர் இருக்கும் இடத்துக்கு இழுத்தது. தன் எஜமானர் தரையில் கிடப்பதைப் பார்த்து, அவர் பக்கம் ஓடினார். அவனைப் பார்த்த கிருஷ்ணர், "தாருகா! எதையும் பேசுவதற்கு இப்பொழுது நேரம் இல்லை. யாதவர்கள் தங்களிடையே சண்டை போட்டுக் கொண்டு அழிந்து விட்டார்கள் என்றும், பலராமரும் மறைந்து விட்டார் என்றும், உறவினர்களிடம் சொல். நானும் சீக்கிரமே இந்த உடலை விட்டு போகப் போகிறேன். இனி நீங்களோ அல்லது என் உறவினர்களோ துவாரகையில் தங்கக்கூடாது. ஏனெனில், யாதவர்கள் இருந்த இந்த நகரம் கடலால் கொள்ளப்படும். நீங்கள் எல்லோரும் இந்திரப்பிரஸ்தம் சென்று அர்ஜுனன் ஆதரவில் இருங்கள்" என்று கூறினார். என்ன செய்வது என்று தெரியாமல் தாருகன் விம்மி விம்மி அழுதான். கிருஷ்ணரை மூன்று தடவை வலம் வந்து அவரை வணங்கினான். பிறகு அவன் வருத்தத்தோடு நகர் திரும்பினான்.
After killing Vali, Lord Rama promised that Vali would have his revenge in his next birth. Vali was reborn as Jara, a hunter who was the cause of death of Krishna.:
அச்சமயம் பிரம்மா அங்கு தோன்றி, அவருடன் ருத்திரனும் , இந்திரன் முதலான தேவர்களும் தோன்றினார்கள். அவர்கள் பகவானின் பூவுலக அவதார முடிவை காண ஆவலுடன் அங்கு கூடினார்கள். அனைவரும் கிருஷ்ணர் மீது பூமழை தூவி, அவரைப் போற்றி பாடல்கள் பல பாடினர். கிருஷ்ணர் கண்களை மூடி, யோகத்தில்,அமர்ந்து பரம்பொருளிடம் பிரார்த்தனை செய்து ,பரம்பொருளே இந்த வாழ்வைலிருந்து விடுதலை தாருங்கள் என் பிரார்த்தித்து  தம் ஆன்மாவில் ஒன்றினார். உலகையே மயக்கிய தம்முடைய கிருஷ்ண ரூபத்துடன் பகவான் வைகுண்டத்திற்கு திரும்பினார். இன்றும் பக்தர்கள் தியானத்தில் ஆழ்ந்து அவருடைய என்றும் அழியாத ரூபத்தைக் காணும் பேறுபெறுகிறார்கள்.
அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளை பாண்டவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது கிருஷ்ணரின் ஆசை என்பதால், துவாரகைக்கு வந்தான் அர்ஜுனன். கிருஷ்ணரின் தந்தையான வாசுதேவனின் உயிரும் தன் உடலை விட்டு பிரிந்தார்.
குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஹஸ்தினாபுரத்திற்கு சென்ற அர்ஜுனன் அனைத்து பெண்களையும் குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு ஹஸ்தினாபுரத்திற்கு புறப்பட்டான் அர்ஜுனன். அவர்கள் சென்றவுடன் துவாரகை கடல் விழுங்கியது. போகும் வழியில் ஒரே ஒரு ஆண் துணையுடன் பல பெண்கள் வருவதை கவனித்த கொள்ளையர்கள் அவர்களை தாக்கி, பெண்களையும் செல்வங்களையும் எடுத்துச் சென்றனர். அர்ஜுனனின் அனைத்து வில் வித்தைகளும் அஸ்திர அறிவுகளும் தோற்று போயின. வெறுத்துப் போன அர்ஜுனன் யுதிஷ்டரிடம் சென்று நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினான். வருத்தத்தில் மூழ்கிய பாண்டவர்கள்  வருத்தத்தில் மூழ்கினர். திருதிராஷ்டிரன், காந்தாரி, குந்தி மற்றிம் விதுரர் ஆகியோர் காட்டிற்குள் சென்று வாழ்ந்து தவம் புரிய புறப்பட்டனர். தன்னிலை மறந்த நிலையில் புரிந்த தவத்தால் விதுரர் தன் உடலை துறந்தான். மற்ற அனைவரும் வனத்தில் மூண்ட காட்டுத்தீயில் உயிரை விட்டனர்.

இவ்வாறாக யதுகுலம் முடிவுக்கு வந்தது.

நாளைக்கு நான் செஞ்ச கம்மல், செயின், எம்ப்ராய்டரி வேலைலாம் கைவண்ணத்துல பார்க்கலாம்..

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை தெரியாதவங்களுக்காய்...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1460248

நன்றியுடன் ..
ராஜி. 

Wednesday, May 03, 2017

யதுகுல சந்ததிகளின் முடிவின் விதை விதைக்கப்பட்ட நிகழ்வு - தெரிந்த கதை தெரியாத உண்மை .

The Lost Continent of Kumari Kandam (Lemuria):

கிருஷ்ணன் துவாரகையில் தன் மனைவியர்களான பாமா, ருக்மணி ஆகியோரோடு வாழ்ந்து யதுகுலத்தின் தலைவனாக சிறப்பாக ஆட்சி செய்துவந்தார். அந்த யதுகுலத்தினரது அழிவு அவர்களுடைய வம்சத்து இளைஞ்ர்களாலேயே தொடங்கிற்று.  கிருஷ்ணர் யாதவ குலத்தில் தோன்றியபோதும், யாதவர்கள் ஒருபோதும் அவதாரமான கிருஷ்ணன் தங்களுடன் வாழ்கிறார் என்பதை உணர்ந்திருக்கவில்லை. கிருஷ்ணனின் பெருமைகளை உணர்ந்து சில முனிவர்களும், ரிஷிகளும், தேவர்களும், பாண்டவர்களும் மற்றும் சிலரும் அவ்வப்போது துவாரகைக்கு வந்து ஆசிகளை பெற்று செல்வார்கள். 

அதுப்போல ஒருமுறை சில ரிஷிகள் துவாரகைக்கு வந்தபோது, யாதவ குலத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் கிருஷ்ணரின் மகனான சாம்பா என்பவனை கர்ப்பிணியாக வேடமிட்டு இவளுக்கு பெண் குழந்தை பிறக்குமா?! ஆண் குழந்தை பிறக்குமா?! என்று ரிஷிகளிடம் கேட்டனர். கோபமுற்ற ரிஷிகள் ஒரு உலக்கையை அவள் பெற்றெடுப்பாள். அது உங்கள் குலத்தை அழிக்கும் என்று கூறினார். சாம்பா தன் உடையை அவிழ்த்தபோது ஒரு இரும்பு உலக்கை அவன் உடையில் இருந்தது. 
அங்கிருந்தோர் உடனே  நடந்த சம்பவத்தை பலராமனிடமும், கிருஷ்ணரிடமும் தெரிவித்தனர். அவர்களின் பொறுப்பற்ற நடத்தையைக் குறித்து பலராமன் கோபமடைந்தார். ரிஷிகளின் சாபத்தை கேட்டதினால் கவலையுற்ற பலராமன் அந்த இரும்பு உலக்கையை தூளாக அரைக்கும்படி செய்தார். ஒரு துண்டு மிகவும் கடினமாக இருந்தது, அதை தூளுடன் சமுத்திரத்தில் வீசச் சொன்னார். 

அக்ரூரர் என்பவர் யாதவ குலத்தின் ஒரு பிரிவான விருஷ்ணி கிளைக்குலத்தவர் இவர் கிருஷ்ணரின் சித்தப்பா முறையாவார் கம்சனின் அரசவையில் அமைச்சராகவும் .பிருந்தாவனத்திலிருந்த கிருஷ்ணரையும், பலராமரையும், மதுரா கம்சனின் அரண்மனைக்கு கூட்டிச் சென்றவரூம் இவரே ஆவார் ..பின்னர் கிருஷ்ணரின் ஆலோசகராக இருந்தவர்.அவர்தான் இதை உடனே பொடியாக்கி அதை கடலில் வீச சொன்னவர் என்றும்  வட இந்திய செவிவழி கதைகளில் சொல்லப்படுவதுண்டு. 
அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை .என்ன செய்வது என புரியாமல் ஆயிரம் கேள்விகளுடன் அக்ரூரர், கிருஷ்ணனை பார்த்தார்.கிருஷ்ணரிடம் வெறும் புன்னகை மட்டுமே பரிசாக இருந்தது. காலசக்கரங்கள் நமக்கெதிராக சுழல ஆரம்பித்துவிட்டது. நாம் இறுதிகாலக்கட்டத்திற்கு வந்துவிட்டோம் சித்தப்பா! நீங்களும் உங்களது பணியினை சிறப்பாக செய்து முடித்தீர்கள் என சொல்லவும் அக்ரூரர் பேச வார்த்தை இல்லாமல் திகைத்து நின்றார். சாபத்தினால் வந்த விளைவினை எண்ணித்தான் கிருஷ்னர் அப்படி சொன்னார். 
குருஷேத்திர யுத்தத்தில் தன்னுடைய குலம் முழுவதும் அழிந்துவிட்டதை எண்ணி தீராக்கவலையுடன் இருந்தாள்காந்தாரி. ஒருமுறை, கிருஷ்ணரும் காந்தாரியும் சந்திக்கும்போது,  கிருஷ்ணா! நீ  உடன் இருந்தும் அந்த யுத்தத்தை ஏன் தடை செய்யவில்லை என்று கிருஷ்ணனிடம் கேள்வியை எழுப்பினாள்.  அதற்கு கிருஷ்ணர்  கட்டுப்படுத்தாத துவேஷமும், பொறாமையும்  தான் குரு குடும்பத்தை அழித்தது என்று கிருஷ்ணர் விளக்கிக் கூறினார். இந்த பதிலால் சமாதானமைடையாத காந்தாரி கடுமையாக கோபமடைந்தாள். அந்த கோபத்தின் விளைவாக,  கிருஷ்ணா! .உன்னுடைய குலமும் ஒருவர்கூட மீதமில்லாமல் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வார்கள் என்று காந்தாரி சாபமிட்டாள். கிருஷ்ணர் அந்த சாபத்தை ஆசீர்வாதம்போல இருகரம் கூப்பி தலைகுனிந்து வாங்கிக் கொண்டார்.
mahabharatham - the great indian epic:
யாதவர் குலம் என்று சொல்லும் பொழுது கிருஷ்ணருடைய வம்சா வழியினரையும் குறிக்கும். உண்மையில் கிருஷ்ணருக்கு எத்தனை மனைவிமார்கள் என்றால்  16,008 என்பர். ஆனால்அவர்பூ அதிகாரபூர்வமாக 8 மனைவியரை மட்டுமே மணம் புரிந்திருந்தார் என சொல்லப்படுகிறது. இந்த எட்டு மனைவிகளின் பெயர்கள் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி வேறுபட்டு காணப்படுகிறது. ஆனால் உண்மை எதுவென்று கிருஷ்ணருக்குத்தான் தெரியும்.  பகவத் புராணப்படி ருக்மிணி, சத்யாபாமா, ஜம்பாவதி, கலிந்தி, மித்ரவிந்தா, நக்ஜஜிதி, பதறா மற்றும் லட்சுமணா என்ற எட்டுப்பேரே க்ருஷ்ணரின் மனைவியர்.

Mysore Painting depicting Krishna with his eight principal wives.:
பழைய புராணங்களில் கிருஷ்ணனுக்கு 80 மகன்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.  கிருஷ்ணர் மற்றும் ருக்மினிக்கு பிறந்தவர்கள் 10 பேர். அவர்கள்  பிரதியூனா, சாரு தேஷ்னா, சுதீஷ்னா, சருதஹ,  சூசார், சர்குபுதா, பாதரச்சர், சாருசந்திர, விச்சாரு, சரு ஆகியோர்.


கிருஷ்ணர் மற்றும் சத்யபாமாவின் 10 மகன்களின் பெயர்  பானு, சுபாஷ், ஸ்வாபவன், பிரபுன்,  பானுமண்,  சந்திரபவன்,  பிரகத்பனவு,  ஆபிபூவ்,  ஷிபஹானு, பிரபீபுன்.



கிருஷ்ணர் மற்றும் ஜம்பாவதி மகன்களின் பெயர்  சம்பா, சுமித்ரா, புருஜித்ஷ, தாஜித், சாகஸ்ராட், விஜய்,  சித்ரகாட்டு,  வாசுமுன்,  டிராவின், க்ருடு. 



கிருஷ்ணர் மற்றும் நாகஜிகிட்டியின் மகன்கள் வீர், சந்திர, அஷ்வசென், சித்ரகு,  வேகாவான், வ்ஷ்ஷ், ஆடம் ,ஷாங்க்,  வாசு,  குந்தி. 


கிருஷ்ணர் மற்றும் கலிந்தியின் மகன்கள் ஷ்ரூட், கவி,  வெருஷ், வீர்,  சுபாஹு , பத்ரா, சாந்தி, தர்ஷ், பூராமாஸ், சோமாக்.


கிருஷ்ணர் மற்றும் லட்சுமணாவின் மகன்கள்  பிரபா,  கத்ராவான், சிம்ஹா,  பால்,  பிரபுல் ,  உர்தவாக்கம் ,  மகாஷ்தி ,  சஹா,  ஓஜா,  அபராஜித்.


கிருஷ்ணர் மற்றும் மித்ரவிந்தாவின் மகன்கள்  வுக்,  ஹர்ஷ், அனில், குதுரா,  வர்தான்,  அன்னட் , மகாஷ்,  பவன் ,  வனி ,  குஷு. 


கிருஷ்ணர் மற்றும் பதறாவின் மகன்கள்  சக்ராம்ஜித்,  ப்ருத்சன்,  ஷூர், பிரஹரன்,  அரிஜிட்,  ஜெய்,  சுபாத்ரா,  வாம் , ஆயு மற்றும்  சத்தியக். 


இவரிகளின் வரிசை அவர்களது தாயாரின் அடிப்படையை கொண்டது வயதை கொண்டு அல்ல. இந்த என்பது பேர் மட்டுமே புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது .
பூலோக மக்களுக்கும், முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் நன்றாக அறியப்பட்ட கிருஷ்ணன போல் அவரது மகன்கள் அறியப்படவில்லை. இதில் ஜாம்பவதி பெற்றெடுத்த சாம்பா மட்டும் விதிவிலக்கு. ஏனெனில், அவன் மகாபாரதத்தில் சிறிய பங்கினையும், யதுகுல அழிவிற்கு பெரும்பங்கையும் ஆற்றியவன். சாம்பா கிருஷ்ணரின் மகன் என்றாலும், சிவன் என்று பூலோகத்தில் சொல்லப்படுகிற ருத்திரனின் அம்சமாகவே அவன் இருந்ததாக அநேகர் குறிப்பிடப்படுவதுண்டு. 

இங்கே சிவன் என்றால் யாருக்கும் ஏன் பெரும்பாலான சிவனடியார்களுக்கு கூட தெரியாது. சித்தர்களுக்கும், மகான்களுக்கும், சத்குருக்களுக்கும் மட்டுமே தெரிந்த சதாசிவம் என்பது மும்மூர்திகள் என அறியப்படுகின்ற ருத்திரன், நாராயணன், பிரம்மா இவர்களுக்கு மேலான பரப்பிரம்மம். அதன் வழிபாடு காலப்போக்கில் சில இடைச்செருகல்களால் பெரும்பாலனவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. அந்த ருத்திரனுடைய அழிக்கும் சக்திகளை கொண்ட ஒரு மகன் வேண்டும் எனபரப்பிரம்மம் சதாசிவனை நோக்கி பலகாலம் தவம் இருந்தார் கிருஷ்ணர், அந்த சதாசிவமும் அப்படியே ஆகுக என வரமளித்தார். ஆனால் அப்பொழுது கிருஷ்ணர் உணர்ந்திருக்கவில்லை யாதவ குலத்தின் அழிவு இவன் மூலம்தான் உருவாகும் என்று.....
 ..ravi varma painting:
கிருஷ்ணரின் மகன் சாம்பா செய்த எண்ணற்ற தீய செயல்களால், கிருஷ்ணர் மிகவும் வருத்தமாக இருந்தார் என்றும், அவன் யதுகுலத்தை அழிக்க வந்தவன்.  யதுகுலத்தின் பெயரை களங்கப்படுத்த வந்தவன் என்றும், அவனுடைய செய்கையினால் கிருஷ்ணர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி கோபப்பட்டு அவனை தொழுநோய் தாக்கட்டும் என்று சபிக்குமளவு அவனை வெறுத்திருந்தார். எனவும் சில வடமொழி புராணங்களில் சொல்லப்படுகின்றது. சாபத்தால் பீடிக்கப்பட்ட சாம்பா உடனடியாக தொழுநோயால் பாதிக்கப்பட்டான். அவனது உடல் ஒரே இரவில் சிதைந்து போனது.  இந்த தொழுநோயால் மிகுந்த வலியும் வேதனையும் அனுபவித்தான். உடனே,  சாம்பாவின் தாயாரும் கிருஷ்ணனின் மனைவியுமான ஜாம்பவதி அவளது மகன் சித்திரவதை அனுபவிப்பதை காணசகிக்காது கண்ணீருடன் கிருஷ்ணனை அணுகி, பிரபோ! என்ன காரியம் செய்தீர்கள் .என்ன இருந்தாலும் அவன் உங்களுடைய மகன் அல்லவா?! அவனை இந்த கஷ்டத்தில் இருந்து விடுவிக்குமாறு மன்றாடினாள்.
ஜாம்பவதியின் கண்ணீரால், கலக்கமுற்ற  கிருஷ்ணர், தன் மகன்மீது இரக்கப்பட்டார். மகனே! நீ அறியாது தவறு செய்தாலும் பொறுத்துக்கொள்வது என்கடனே. அதனால், இதிலிருந்து நீ விடுபட, நீ சூரியனை பிராத்தனை செய்து, சந்திரபாஹா நதியில் நீராடி எழும்போது உன் நோய் குணமாகிவிடும் என ஆசிகள் கூறினார். தந்தையே! என்னால் எழக்கூட முடியவில்லை. பின் எப்படி நான் ஆற்றங்கரைக்கு செல்வேன் என வேதனையுடன் கேட்டான். அதற்க்கு கிருஷ்ணர், கடுமையான குரலில் எப்படியாவது நீ சென்றுதான் ஆகவேண்டும் என கண்டிப்புடன் கூறினார். ஆனால், சாம்பா, கிருஷ்ணனிடம் மனமுருகி வேண்டினான். தந்தையே! என்னால் நகரக்கூடமுடியவில்லை. ஆனால், இருந்த இடத்திலிருந்தே உங்களால் என் நோயை குணப்படுத்த முடியும் வல்லமை உங்களுக்கு உண்டு.  தயவுசெய்து கருணை காட்டுங்கள் என கெஞ்சினான்.ஆனால் கிருஷ்ணர், நீ நதிக்கரைக்கு சென்றே ஆகவேண்டும் என கண்டிப்புடன் இருந்தார். இதைக்கேட்ட ஜாம்பவதி, அவனுடைய இந்த நிலைக்கு நீங்கள்தான் காரணம். ஆகையால் ஒரு தகப்பனின் கடமையாக நீங்களே அவனை நதிக்கரைக்கு கூட்டிச்செல்லுங்கள் எனக் கோபத்துடன் கூறினாள்.
Mirzapur, India: A hindu devotee offers prayers to the sun god after taking holy dips in the river Ganges during the Anant Chaturdashi festivalPhotograph: Anshul Mishra/AP:
முடிவில் என்னதான் ஒரு கடவுளாக இருந்தாலும், ஒரு தந்தையாக கிருஷ்ணர் சாம்பாவை ஆற்றங்கரைக்கு அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டார். அவனால் வெகுதூரம் நடக்கமுடியவில்லை. உடனே அவனை கிருஷ்ணர் தூக்கிசென்றார். ஆற்றங்கரையை அடைந்தவுடன், சாம்பாவை கிருஷ்ணரே தண்ணீரில் இறக்கிவிட்டு சூரியனை பிராத்தனை செய்யச்சொல்லி, அவனை தண்ணீரில் முக்கி குளிப்பாட்டி விட்டார். ஆற்றில் மூழ்கி எழுந்த சாம்பா தன் சாபத்தில் இருந்து விடுபட்டு புதுப்பொலிவுடன் திகழ்ந்தான். இந்த சம்பவந்தான் பிற்காலத்தில் யாதவக்குலமே அழிவதற்கு காரணம் எனவும் சொல்லப்படுகிறது .
Dandavats | The Perils Of Being Over-intelligent:
ஒருமுறை மூன்று முனிவர்கள்  கிருஷ்ணனை காண அவரது அரண்மனைக்கு வருகை தந்தனர். அப்பொழுது கிருஷ்ணர் உடனே அவர்களுக்கு தக்க மரியாதை கொடுங்கள்.  உடனே, நான் சபைக்கு வருகிறேன் என அறிவித்தார். அவர்கள் சிறப்பான மரியாதையுடன் அழைக்கப்பட வேண்டும் எனவும் கூறினார். கிருஷ்ணரின் சில நெருக்கமான உறவுகள், தெய்வீகத்தன்மையை குறித்து சிந்திக்காதவர்களாகவே இருந்தனர். காரணம், அவர்கள் கிருஷ்ணனுக்கு மிகவும் நெருங்கிய உறவினர்களாதலால், அவர்களுக்கு தேவையான எல்லாமே கிடைத்தது. துன்பம் என்னவென்று அறியாதவர்களாதலால் அவர்களுக்கு தெய்வத்தின் அவசியம் என்னவென்று தெரியாமல் போய்விட்டது. அவர்கள் எப்பொழுதும் குடியும், கும்மாளம் மற்றும் சோம்பேறிகளாகவே வாழ்ந்துவந்தனர். பிறரை கேலி செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டுவந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கிருஷ்ணனின் மிக நெருங்கிய உறவினர்களாக இருந்தனர். அவர்கள் வந்திருந்த முனிவர்களுக்கு மரியாதை செலுத்தாமல் அவர்களை அவமரியாதை செய்தனர். ஏனெனில், அவர்களுடைய சொகுசு வாழ்க்கை ஆன்மீகத்தில் இருப்பவர்கள் எல்லாம் வாழ்க்கையை அனுபவிக்க தெரியாதவர்கள் என்றும் பயனற்றவர்கள் என்றும் எண்ணினர். இந்த அவமரியாதை கிருஷ்ணரை காணவந்த முனிவர்களுக்கு கோபத்தையும் மிகுந்த மனவருத்தத்தையும் ஏற்படுத்தியது.
The Curse of the Rishis:
அதிலும் குறிப்பாக கிருஷ்ணரின் மகன் சாம்பா  இதுமாதிரியான கோமாளித்தனத்திற்கு மிகவும் பெயர்போனவன். அவனும் சில இளைஞர்களும் சேர்ந்து முனிவர்களை சோதிக்க எண்ணினார். சாம்பாவின் நண்பர்கள் அவனது வயிற்றில் ஒரு மண்பாண்டம் வைத்து, பின்னர் அவனுக்கு புடவை கட்டி முனிவர்களுக்கு முன் கூட்டிவந்தனர். கூட்டத்திலுள்ள ஒரு இளைஞன் விளையாட்டாக, முனிவர்களே! இந்த பெண் என்ன குழந்தை பெறுவாள்?! ஆண் குழந்தையா இல்லை பெண் குழந்தையா?! தயவுச்செய்து கிருஷ்ணர் வருவதற்குள் எங்களிடம் சொல்லமுடியுமா என கேலியாக கேட்டனர். அவர்களுடைய விளையாட்டுதான் யாதவகுல அழிவுக்கு சாபமாக அங்கே விளைந்தது
அந்த இளைஞர்கள் தங்களை கேலி செய்வதை வந்திருந்த முனிவர்கள் உடனே தெரிந்து கொண்டனர். இச்செயல் அவர்களை மிகவும் கோபங்கொள்ள வைத்தது.  நீங்களெல்லாம் கிருஷ்ணரின் உறவினர்களோ!? சாம்பா நீ கிருஷ்ணரின் சொந்த மகன். நீயும் இவர்களோடு சேர்ந்து எங்களை கேலி செய்கிறாய்.  முனிவர்கள் என்ற மரியாதைக்கூட இல்லாமல் இப்படி செய்கிறாயே என்று வருத்தப்பட்டு... இந்த பெண் ஒரு குழந்தையை பெற்றெடுப்பாள்.  ஆனால்,  அது மனிதகுழந்தை இல்லை. ஒரு இரும்பு உலக்கையாக  இருக்கும். அந்த இரும்புத்துண்டின் மூலம்தான் உங்களின் முழுக்குலமும் அழியும் என சாபம் கொடுத்தனர். நாங்கள் பல வருடம் தவம் இருந்த தவச்சீலர்கள். எங்களையே நீங்கள் பரிகாசம் செய்கிறீர்கள். கடவுளிடம் பக்தி செலுத்துபவர்களை நீங்கள் மதிப்பதில்லை. ஆகையால் நீங்கள் எல்லாம் அழிக்கப்படவேண்டியவர்களே என சாபம் கொடுத்தார்கள்.
"My dear Lord Śiva, I accept your statements, and your desire for Bāṇāsura is also accepted by Me. I know that this Bāṇāsura is the son of Bali Mahārāja, and as such I cannot kill him because that is My promise. I gave a benediction to King Prahlāda that all the demons who would appear in his family would never be killed by Me. Therefore, without killing this Bāṇāsura, I have simply cut off his arms to deprive him of his false prestige.:
அந்த சமயத்தில்தான் கிருஷ்ணர்  அம்மண்டபத்தினுள் நுழைகிறார். அப்பொழுது  முனிவர்களின் சாபத்தை கேட்டதும் மிகவும் கவலையடைந்தார். அவரும் புரிந்துக்கொண்டார். அவரது உறவினர்கள் எந்தளவு முனிவர்களை புண்படுத்தி இருப்பார்கள் என்று கிருஷ்ணரை கண்ட முனிவர்கள், தாங்கள் கொடுத்த கடுமையான சாபத்துக்காக வருந்தினார்கள். ஒருகணம் கோபத்தால் வந்த வினை எனக்கூறி,  அந்த சாபத்தை திரும்ப எடுக்க நினைக்கும்போது அவர்காளால் அது முடியவில்லை.  இவ்வளவு துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்திருந்தாலும், அவர்களை கிருஷ்ணர் உபசரித்து நீண்டநேரம் உரையாடினார்.  மேலும்,  கடைசியாக விடைப்பெறும்போது கிருஷ்ணருடைய ஆசீர்வாதங்களையும் முனிவர்கள் பெற்றனர். வருத்தப்பட்ட முனிவர்களை தேற்றினார் கிருஷ்ணர். எல்லாம் நடக்கவேண்டிய சமயத்தில் சரியாக  நடக்கிறது. நீங்கள் ஒரு கருவி மாத்திரமே என ஆறுதல் சொல்லி அனுப்பினார்.

காலங்கள் வேகமாய் ஓடியது. சாம்பா வயிற்றிலிருந்து இரும்புத்துண்டு வெளியானது. சாம்பா,  அவன் சகோதரர்கள் மற்றும்  அவர்களுடன் இருந்த கிருஷ்ணரின் மற்ற மனைவியருக்கு பிறந்த சகோதர்கள்  தங்கள் அழிவு தவிர்க்க முடியாதது என்றும் அதிவிரைவில் இது நடக்கும் என உணரத் தொடங்கினர். அக்ரூரரும் அந்த இரும்புத்துண்டை பொடியாக்கி கடலில் எறிய சொன்னதை அவர்கள் யாரும் செய்ய முன்வரவில்லை. .பின்னர் அவரே அந்த வேலையை செய்து முடித்தார்.

ஆனாலும், யாதவ குலத்தின் அழிவு தொடங்கியது.... 

மீண்டும் வேறொரு பதிவில் யதுகுலத்தின் முடிவை பார்க்கலாம்...