என் கவலை தீர்ந்தது.....
இன்று என் மணாளனோடு நான் வாழ
அவரை சேரும் அந்த தருணம்
அதற்காகவே இன்னும் தொடருது என் பயணம்......
வந்தது அந்த இனிய நிமிடம்.....
அவர் அருகில் நான் இருக்க
பக்கத்தில் இருக்கும் சபை எனக்கு தெரியவில்லை....
அவர் அருகாமையில் நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறந்தேன்......
சபையில் சலசலப்பு.....
சிலருக்கு சந்தேகம்.
எனக்குள் ஒரு தவிப்பு,
ஆனாலும் நான் திடமாய்
என் ராமன், என்னை சந்தேகிப்பாரா.....
அவருக்கு தெரியும், சீதையை பற்றி....
என் முகம் அவர் முகத்தை ஏறிட,
என்ன உள்ளது அவரது எண்ணத்தில்
!?என்று தேட..
!?என்று தேட..
காத்திருந்தேன் அவர் வார்த்தைகளுக்காக....
என் சீதை, களங்கமற்றவள்....
அவளை நான் அறிவேன்....
இப்படி சொல்வார் என்று நினைத்தேன் .
உங்கள் திருப்திக்காக என்று சொல்லி
என்னை தீக்குளிக்க வைத்துவிட்டார்.
ஒடிந்து போனேன்...
நான் மனம் நொறுங்கி போனேன்....
அன்று ராவணனிடம்
சண்டை போட இருந்த பலம்
இன்று என் மனதில் ஏன் இல்லை!?
சந்தேக தீ உன்னையும் சுட்டதா, ஏ ராமா!
என்று கத்தவென்றும் போல் ஓர் எண்ணம்
உடனே மாற்றிக் கொண்டேன்
கத்தி என்ன பிரயோஜனம்....
சந்தேகம் என்ற தீ வந்த பின்னே,
அதை அணைக்காமல் விட்டால்
அஃது என் காதலையும் சேர்த்து அல்லவா எரித்து விடும்....
காதல் இல்லாமல் வாடும் பூவாய் வாழ
மனமில்லால்
அந்த மனதை கொன்று கொண்டேன்....
அவன் சந்தேகத்தை தீர்த்துக் கொடுத்தேன்....
நான் தீயினில் இறங்கினேன்.....
ஒரு நொடி, ஒரே ஒரு நொடி,,,
ஏ ராமா, நான் காட்டினில் இருந்தேன்
நீ நாட்டினில் இருந்தாய்...
ஏன் நான் களங்க பட்ட மாதிரி
நீயும் களங்க படலாம் அல்லவா.....
உன்னால் நிரூபிக்க முடியுமா?
என்று கேட்டிருந்தால்......
எப்படி தீர்த்து வைத்திருப்பாராம்..
எப்படி தீர்த்து வைத்திருப்பாராம்..
என் சந்தேகத்தை????
டிஸ்கி: சீதையின் உள்ளம் பேசி கொண்ட மாதிரி எனக்கு நேற்று ஒரு கனவு.... அந்த கனவை தான் இங்கே சொல்ல நினைத்தேன்.... இதில் எந்த மதத்தையும் நான் அவமதிக்க விரும்பவில்லை .

