Showing posts with label சோமவார விரதம். Show all posts
Showing posts with label சோமவார விரதம். Show all posts

Monday, November 20, 2017

சிவப்பெருமான் மனசுல இடம் பிடிக்கனுமா?!

சீமந்தினி’ன்ற  ராஜக்குமாரி சிறந்த சிவ பக்தை. அவள் சிவனுக்குண்டான அனைத்து விரதங்களை முறையாக கடைப்பிடித்து வாழ்ந்து வந்தாள். ‘சீமந்தினி’சிவனை நினைத்து அந்நாளில் விரதமிருப்பதை அறிந்த திருடர் இருவர், அவளிடமிருக்கும் செல்வத்தை களவாட,  கணவன் மனைவிப்போல வேடமணிந்து,  அவளிடம் வந்து, அம்மா நாங்கள் இருவரும் தம்பதிகள், சிவ பக்தை கையால் உணவருந்துவோம்ன்னு அவளை நம்ப வச்சு அவள் வீட்டுக்குள் போனாங்க..  அவளும், அவர்களை சிவனடியார்கள் என நம்பி, வீட்டுக்குள் அழைத்து உணவு பரிமாறினாள். என்ன ஆச்சர்யம்!! உணவு உண்ட திருடர் இருவரில் ஒருவன் , பெண்ணாய் மாறி நிஜ கணவன் மனைவியாய் மாறினர். அழுது புலம்பிய அந்த திருடர்களை அழைத்துக்கொண்டு காட்டில் இருக்கும் முனிவரை சந்தித்து நடந்ததை சொன்னாள். அவரும் ஞானதிருஷ்டியில் நடந்ததை உணர்ந்து, அம்மா! நீ இன்று சோமவார விரதம் இருந்தாயா?! என வினவினார். ஆமாம், என உரைத்தாள் சீமந்தினி.  சோமவாரம் விரதம் இருப்பவர்களின் கையால் சாப்பிட்டல் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்சுபிட்சம் ஏற்படும்சோமவாரம் விரதம் இருப்வர்களை எந்த துஷ்ட சக்திளும் அண்டாதுதீயசக்திகளிடம் இருந்து தப்பிப்பார்கள். என உரைத்ததோடு சீமந்தினியின் வேண்டுகோளின்படி அந்த திருடர்களை உருமாற்றி அனுப்பி வைத்தார்.



வசிஷ்ட மகரிஷிசோமவாரம் விரதத்தை தவறாமல் கடைபிடித்ததால், கற்புக்கரசியான  அருந்ததியை திருமணம் செய்தார்வசிஷ்டரை மறந்த இந்த உலகம் அருந்ததியை மறக்கவில்லை.  இன்றும் திருமணம் செய்யும்போது அருந்ததி பார்க்கும் வழக்கம் உள்ளது. அந்த சடங்குக்கு சொந்தக்காரி இந்த அருந்ததிதான்.
விபுன்ற அரசனுக்கு குழந்தை செல்வம் இல்லை. ஆட்சி, அதிகாரம், படைபலம், திரண்ட செல்வம் இருந்தும் தனக்கு பின் தன் நாட்டை கட்டி காத்து ஆள ஒரு வாரிசு இல்லையே என வருந்தி, ஒரு முனிவரிடம் சென்று தன் வேதனையை சொல்லி குழந்தை வரம் வேண்டினான்.  சோமவார விரதத்தின் மகிமையை சொல்லி,  மன்னா! இந்த விரதத்தை கடைப்பிடி. உனக்கு குழந்தை செல்வம் உண்டாகும் என ஆலோசனை கூறினார். பட்ட மரம் தழைக்குமா?! காலம் பல கடந்து, யௌவனம் மாறி முதுமை நெருங்கும் இக்காலத்தில் பிள்ளை உண்டாகுமா என மன்னனின் எதிரிகளின்  பேச்சை கேளாமல் இறை சிந்தனையோடு சோமவார விரதத்தினை கடைப்பிடித்ததால் அரசனுக்கும், அரசிக்கும் பிள்ளைப்பேறு உண்டானது. 

கீசகன் என்ற அந்தணர், பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். இறைவனே உலகம். அவனின்றி ஓர் அணுவும் அசையாது.   எது நமக்கு கொடுக்க வேண்டுமோ அதை நிச்சயம் கொடுப்பான் என்ற நம்பிக்கை கொண்டு சோமவார விரதம் இருந்தார். அதன்பலனாக, அவருக்கு பிச்சை அளித்தவர்கள் அவரிடமே உதவி கேட்கும் பெரும் செல்வந்தரானார். அதுமட்டுமின்றி, தான் அடைந்த வறுமையின் கொடுமையை வேறு யாரும் படக்கூடாதுன்னு எல்லா செல்வத்தையும் வாரி வாரி வழங்கினார். 


குசேலன் முன் ஜென்மத்தில் யாருக்கும் கொடுக்காத கருமியாய் இருந்து இறைவன் கொடுத்த எல்லா செல்வத்தையும் தானே  அனுபவித்து இறந்தான், அதனால், மறுபிறவியில் குசேலனாய் பிறந்து வறுமையில் அல்லல் பட்டான். அதேநேரம் கீசகன் குசேலனாய் பிறந்து இன்றளவும் செல்வத்துக்கு அதிபதியாய் உள்ளான். சோமவார விரதத்தை முறையாய் கடைப்பிடித்ததால் மூதேவியையும், எமனையும் தன்னிடம் நெருங்கா வண்ணம் இருக்கின்றான். 

தர்ம வீரியன் என்ற ராஜவம்சத்து இளைஞன் தங்குவதற்கு சிறுகுடிசைக்கூட இல்லாமல் அவதிப்பட்டு வந்தான் . அவன் சோம வார விரதம் இருந்ததன் பலன் மிகப்பெரிய சாம்ராஜ்யத்துக்கு அதிபதியானான்.  விரடன் என்ற திருடன் அரண்மனை களஞ்சியத்தில் களவாட, அவனை சிரச்சேதம் செய்ய மன்னன் உத்தரவிட்டான். தண்டனைக்கு பயந்து அவன், காட்டில் சென்று மறைந்துக்கொண்டான். அவனை, வீரர்கள் தேட, மரத்தில் ஏறி அமர்ந்துக்கொண்டான். மழையில் உடல் தூய்மையாகி,   பசிக்கு உணவில்லாமல் பகலெல்லாம் தவித்து, இரவில் காட்டில் கிடைத்த பழத்தை உண்டு ஜீவித்திருந்தான். அவ்வழியே வழித்தவறி வந்த பெண்ணை கண்டு அவளுக்கு வழிக்காட்டி நகரின் எல்லையில் விட்டு வந்தான். அவள் அந்நாட்டு இளவரசி, அரண்மனை சென்று தன் தந்தையிடம் நடந்ததை சொல்லி, தான் அந்த மனிதனை மணக்க வேண்டுமென கூற, தந்தையும் தீர விசாரித்து, அவனை திருத்தி அவனுக்கே மணமுடிக்க சம்மதித்தான். திருடனுக்கு தெரியாது, அந்த பெண், இளவரசியென்றும், அன்றைய தினம் சோமவார தினமென்றும்... அவன் அறியாமல் பசியோடு இருந்ததன் பலன், அந்த இளவரசியே அவனுக்கு மனைவியாகி, எந்த களஞ்சியத்தில் களவாடினானோ அந்த களஞ்சியமே அவனுக்கு சொந்தமானது. 


இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்,...  இத்தனை பலனை அளிக்கவல்ல சோமவிரதம் எப்படி உண்டாகிச்சுன்னு இனி பார்ப்போம்...  சந்திரன் தோன்றியது கார்த்திகை மாத சுக்லபட்ச அஷ்டமி திதியில். அவன் பெரியவன் ஆனதும் ராஜசூய யாகம் நடத்தி பெரும் புகழை அடைந்தான். அவனது புகழை கண்ட தட்சன், தன்னுடையை 27 பெண்களை கொடுத்தான், 27 பேரை மணந்தாலும், 27 பேரில் ஒருவளான, ரோகினி மீது மட்டும் மிகுந்த அன்பு கொண்டான். இதனால், மற்ற பெண்களை ஏறெடுத்தும் பாராமல் இருந்தான். தந்தை தட்சனிடம் சென்று எல்லா பெண்களும் முறையிட்டனர். தட்சன் சந்திரனை எச்சரித்தும் சந்திரனின் போக்கில் மாற்றமில்லை.  அதனால், அழகன் என்ற கர்வத்தால் என் பெண்களை அலட்சியப்படுத்தியதால், நாளுக்கு நாள் தேய்ந்து போகக்கடவது என சாபமிட்டான். 


தட்சனின் சாபத்தால் உடல் நாளுக்கு நாள் தேய்வதைக்கண்ட சந்திரன், சிவனை தஞ்சமடைந்தான். சந்திரன் மீது இரக்கம் கொண்ட ஈசன், அவனைத் தனது சடைமுடியில் வைத்துக் கொண்டார். சந்திரன் அன்று முதல் வளர்ந்தான். ஆனால் அதன் பிறகு தட்சனது சாபத்தால் தேய்ந்தான். இப்படியாக தேய்வதைக் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) என்றும், வளர்வதை சுக்லபட்சம் (வளர்பிறை) என்றும் சொல்வr. சந்திரன், சிவபெருமானுடைய சடைமுடியில் போய் அமர்ந்து கொண்டது, ஒரு கார்த்திகை மாத முதல் சோமவாரம் ஆகும். அப்படி அமர்ந்த சந்திரன், சிவபெருமானிடம் ‘ஐயனே! சோமவாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருக்கும் மக்களுக்கு, நற்கதியைக் கொடுத்து அருள வேண்டும்’ என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அப்படியே அருளினார்.


ஒருமுறை கயிலை மலையில் சிவபெருமான், தேவர்கள், முனிவர்கள் புடைசூழ வீற்றிருந்தனர். அத்தருணம் பார்வதிதேவி அங்கு வந்து சிவபிரானைப் பணிந்து வணங்க, பதிலுக்கு எம்பிரானும் தமது தலைமுடியை அசைத்தருளினார். அதிலிருந்த சந்திரனைக் கண்ட , பார்வதிதேவி இறைவனிடம், சந்திரன் தங்கள் ஜடாமுடியில் அமர்ந்த மர்மமென்ன வினவ, அவன் சோமவார விரதம் கடைப்பிடித்ததன் பலன் என சிவன் சொல்ல, தனக்கும் அந்த விரதம் பற்றி சொல்லக்கேட்டு, பார்வதிதேவியும் சோமவார விரதத்தை அனுஷ்டித்தாள் என்கிறது புராணங்கள். 



பார்வதி தேவிக்கு சிவப்பெருமான் சொன்ன  சோமவார விரதம் கடைப்பிடிக்கும் முறை....

கார்த்திகை மாத முதல் கார்த்திகை மாதத்து திங்கட்கிழமை அதி காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகுசிவனை முதலில் வணங்கி . ஆலயத்திற்கு சென்று சிவனுக்கு வில்வ இலையிலும்,  அம்மனுக்கு குங்குமத்தாலும் அர்ச்சனை  செய்யவேண்டும். அன்னதானம் செய்வது அவசியம். வயது முதிர்ந்த தம்பதியை சிவன் பார்வதிதேவியாய் நினைத்து பாத பூஜை செய்து, உணவிட்டு அவர்களின் ஆசியை பெறவேண்டும்., அன்று முழுவதும் உபவாசம் இருப்பது நலம். மறுநாள் குளித்து முடித்து இறைவனை வணங்கி உணவு உட்கொள்ளலாம். இயலாதவர்கள் இரவு மட்டும் பால் பழம் அருந்தி விரதமிருக்கலாம்.  இவ்வாறு முறையாய், 6, 12 வருடங்களென சங்கல்பமிருந்து ஆண்டுமுழுவதும் வரும் அனைத்து திங்கட்கிழமைகளில் இவ்விரதத்தை கடைப்பிடித்து வந்தல், ஈசனுக்கு பிரியமானவராகி அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழலாம்...  ..


ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்

சோமவார விரதமிருப்போம்.. 
இறை அருள் பெறுவோம்...

தமிழ்மணம் ஓட்டுப்போட வரிசை..

நட்புடன்,
ராஜி.

Friday, November 18, 2016

ஈசனின் அருளைப்பெற "சோமவார விரதம்

கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் இருந்தாலும், அவற்றில் சிறப்பான விரதமாக கடைப்பிடிக்கப்படுவது "கார்த்திகை சோமவார விரதமாகும்".  சிவப்பெருமானை நினைத்து செய்யப்படும் இந்த விரதம், ஈசனின் அருளைப் பெற சிறந்த வழியை ஏற்படுத்தித் தரும் விரத முறையாகும். 
திங்கட்கிழமை என்பது "சோமவாரம்" என்றழைக்கப்படுகிறது. சிவப்பெருமானை நினைத்து திங்கட்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் என்பதால் சோமவார விரதம் என்று பெயர் பெற்றது.இந்த விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கள்கிழமையிலிருந்து ஆரம்பித்து கார்த்திகை மாதம் வரும் திங்கள்கிழமை அனைத்தும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விரதத்தை ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிப்பது சிறப்புக்குரியதாகும்.நினைத்த வரம் கிடைக்க 1, 2, 3, 12, 14 ஆண்டுகள் விரதம் அனுஷ்டிப்பேன் என்று சங்கல்பம் செய்து விரதத்தை தொடங்கலாம்.
சந்திரன் தோன்றியது கார்த்திகை மாத சுக்லபட்ச அஷ்டமி திதியில். அவன் வளர்ந்து பருவமெய்தியதும், ராஜசூய வேள்வி ஒன்றை நடத்தி பெரும் புகழை அடைந்தான். சந்திரனுக்கு இருக்கும் புகழை அறிந்த தட்சன், தனது 27 நட்சத்திர பெண்களையும் சந்திரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான். ஆனால் சந்திரன், 27 பேரில் ரோகிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டி வந்தான். இதனால் மற்ற மனைவியர் அனைவரும் பெரும் கவலையடைந்தனர். தங்களின் வருத்தத்தை தந்தையான தட்சனிடமும் கூறினார்கள்.
பெண்களின் வருத்தத்தை அறிந்த தட்சன், சந்திரனை வரவழைத்து, ‘அனைத்து பெண்களிடமும் அன்பாக இருஎன்று கூறினான். ஆனால் அதன்பிறகும்கூட சந்திரனிடம் மாற்றம் இல்லை. ரோகிணியிடம் மட்டும் அதீத அன்பு காட்டினான். இதனால் கோபம் கொண்ட தட்சன், ‘அழகின் மீது கொண்ட கர்வத்தால் தான் நீ இப்படி நடந்து கொள்கிறாய். எனவே இனி நீ நாளுக்கு நாள் தேய்ந்துக்கொண்டே போவாய்என்று சாபம் கொடுத்தான்.
தட்சனின் சாபத்தால், நாளுக்கு நாள் தான் தேய்ந்து வருவதைக் கண்ட சந்திரன், பிரம்மாவிடம் சென்று முறையிட்டான். அவரோ சிவபெருமானைத் தஞ்சம் அடையும் படி அறிவுறுத்தினார். இதையடுத்து சந்திரன், சிவனிடம் போய் தஞ்சமடைந்தான். சந்திரன் மீது இரக்கம் கொண்ட ஈசன், அவனைத் தனது சடைமுடியில் வைத்துக் கொண்டார். சந்திரன் அன்று முதல் வளர்ந்தான். ஆனால் அதன் பிறகு தட்சனது சாபத்தால் தேய்ந்தான். இப்படியாக தேய்வதைக் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) என்றும், வளர்வதை சுக்லபட்சம் (வளர்பிறை) என்றும் வழங்கலாயினர்.
 சந்திரன், சிவப்பெருமானுடைய சடைமுடியில் போய் அமர்ந்து கொண்டது, ஒரு கார்த்திகை மாத முதல் சோமவாரம் ஆகும். அப்படி அமர்ந்த சந்திரன், சிவபெருமானிடம் ஐயனே! சோமவாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருக்கும் மக்களுக்கு, நற்கதியைக் கொடுத்து அருள வேண்டும்என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அப்படியே அருளினார்.
இனி, விரதம் இருக்கும் முறையை பார்க்கலாம்...

இந்து மத திருமணங்களில் " அருந்ததி பார்ப்பது" என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி ஆகும். கற்புக்கரசியாகிய அருந்ததியை வசிஷ்டர் தன் மனைவியாக அடைந்தது இந்த சோமவார விரதத்தை கடைபிடித்ததால்தான். பொதுவாக இந்த விரதத்தை பெண்களே கடைபிடிக்கின்றனர். இருந்தாலும் ஆண்களும் இந்த விரதத்தை கடைபிடித்து நல்ல வாழ்க்கை துணைவியை அடையலாம். சோம வாரத்தில் குற்றாலத்தில் நீராடி குற்றாலநாதர், குழல் வாய்மொழி அம்மையை தரிசிப்பது நல்லது. இதே போல சுசீந்திரம், தாணுமாலய சுவாமியை வணங்கி வருவதும் உத்தமம்.
சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் கணபதியை வழிப்பட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு தேங்காய் உடைத்து கற்பூரதீபம் காட்டவேண்டும். பின்னர் கும்பம் தயார் செய்ய வேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி போன்றவற்றை போட்டு, கலசத்துக்கு மேல் பகுதியில் மாவிலையை வைக்க வேண்டும். கலசத்தின் மையப் பகுதியில் மஞ்சள் தடவி, தேங்காய் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். அதன்பிறகே பூஜையைத் தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். வழிபாட்டின்போது சிவநாமத்தை உச்சரிப்பது சிறப்பான வாழ்வை அருளும். வழிபாட்டின் முடிவில் இறைவனுக்கு தீபாராதனை காட்ட வேண்டும்.
பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு புதுவேட்டி, ரவிக்கைத்துணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம் இவற்றுடன் தட்சனை ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னமிட்டு அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசிப்பெறவேண்டும்.இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும்.
சோமவார விரதம் தோன்றிய கதை....

 ஒரு சமயம் திருக்கயிலாய மலையில் சிவபெருமான் தனியாக அமர்ந்திருக்கச் சுற்றிலும் தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், கின்னரர், கிம்புருஷர்கள் அமர்ந்திருந்தனர். அந்த நேரத்தில் பார்வதி தேவி அங்கே வந்து பரமனை வணங்கி நின்றார். அப்போது பரமன் யாரும் அறியாதபடி தனது ஜடாமுடியை அசைத்துப் பார்த்தார். அதில் சந்திரன் அமர்ந்திருப்பதைக் கண்டு அனைவரும் வியப்படைந்தனர். பார்வதி தேவியார் இறை வனிடம், “சுவாமி என்ன இது? சந்திரனைத் தங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறீர்?” என்று கேட்டார். அதற்கு ஈசன், “தேவியே, எனக்கு மிகவும் பிடித்த சோமவார விரதத்தை இந்தச் சந்திரன் முறையாகக் கடைப்பிடித்துச் செய்து இந்தப் பேறினைப் பெற்றுள்ளான்என்றார். உடனே தேவி, “சுவாமி அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த விரதத்தை எனக்கும் உபதேசித்து அருள வேண்டும்என்று கேட்டுக்கொண்டார். பார்வதி தேவியும், மற்றவரும் பயன்பெறும் பொருட்டு சோமவார விரதத்தை இறைவன் கூறி அருளினார்.
 வசிஷ்டர், சோமசர்மன், தன்மவீரியன், கற்கர் ஆகியோர் இதைக் கடைபிடித்து முறையே அருந்ததி, செல்வம், நற்கதி, குழந்தைப் பேறு ஆகியவற்றைப் பெற்று மகிழ்ந்தனர்.
சீமந்தினி பெற்ற மறுவாழ்வு...

சித்திரவர்மன் என்ற மன்னனின் மகள் சீமந்தினி. அவள் தனது 14 வயது முதல் சோமவார விரதத்தைச் செய்து வந்தாள். சந்திராங்கதன் என்ற இளவரசனை மணந்தாள். அவன் நண்பர்களுடன் படகில் யமுனை நதியில் பயணித்தபோது படகு கவிழ்ந்து அனைவரும் உயிர் நீத்தனர். நண்பர்களோடு நாகர் உலகம் சென்று அங்குள்ள நாக மன்னனால் ஆதரிக்கப்பட்டு வந்தான். இதற்கிடையில் சந்திராங்கதன் இறந்துவிட்ட செய்தி கேட்டு அவனுக்கு ஈமக்கிரியைகள் செய்தனர். சீமந்தினி விதவைக் கோலத்தில் இருந்தவாறே யமுனை நதிக்கரையில் சோமவார விரதத்தைச் செய்தாள்
கணவன் சந்திராங்கதன் நாக மன்னனிடம் முறையாக நடந்து நல்லபெயர் பரிசுப் பொருட்களை பெற்றுத் திரும்பும்போது மனைவியைக் கண்டு அதிர்ந்துவிட நடந்ததைக் கூறி அவளை மீண்டும் திருமணம் செய்து கொண்டு இறைப்பணியில் ஈடுபட்டான். காசி மாநகர் அருகே ஆட்சி புரிந்து வந்த மன்னன் ஒருவன் சீமந்தினியின் மனதிடத்தைச் சோதித்து அறிய விரும்பி, இரண்டு பிரம்மச்சாரிகளை அனுப்பி ஒருவனை பெண்வடிவாகச் சென்று போகச் செய்தான். அவள் இருவரையும் பார்வதி பரமேஸ்வர வடிவங்களாகத் தியானித்தாள். அப்போது பெண் உருவம் ஏற்றவன் உண்மையான பெண் வடிவமாகவே மாறிவிட்டான் என்பது புராணக் கருத்து.
சோமவார நாளில் இறைவனின் ஆயிரம் திருநாமங்களை கூறி வில்வத்தால் அர்ச்சித்தால் எல்லா பாவங்களும் அகலும், மணப்பேறு, மகப்பேறு, வாக்கு, கல்வி, செல்வம் யாவும் கிட்டும், நோய் நீக்கம், அகால மரண பயமின்மை என எல்லா நற்பலன்களையும் கார்த்திகை சோமவார விரதம் தரும்.
வரும்  21.11.2016 அன்று இந்த வருடத்திய கார்த்திகை மாத முதல் திங்கள்கிழமை வருது. நான் சோமவார விரதமிருக்க ஆரம்பிக்கப்போறேன்.... நீங்க?!
சிவார்ப்பணம்.