அவசரமா எதையாவது ஒண்ணை தேடிக்கிட்டு இருப்போம். அப்போ, எதாவது ஒரு பழைய போட்டோ ஒண்ணு, பையன் காது குத்து, மகளோட திருமணம், தன்னோட காலேஜ் போட்டோ இப்படி எதாவது ஒண்ணு கிடைத்தால், தேடும் வேலையை சில நிமிடம் ஒத்தி வைத்துவிட்டு அந்த ஃபோட்டோவை ரசித்து விட்டுதான் மற்ற வேலையை பார்ப்போம்.
புகைப்படம் என்பது நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அடையாளம். ஒவ்வொரு புகைப்படமும் காதல், ஹாஸ்யம், சோகம், வெறுப்பு, காதல்ன்னு ஒவ்வொரு படமும் பலகதை சொல்லும். சாதாரண ஒரு மனிதன் வாழ்விலேயே புகைப்படம் பெரும்பங்கு வகிக்கும்போது ஒரு நாட்டோட புகைப்படம் எவ்வளவு கதைகள் சொல்லும்.
நூறாண்டுகளுக்கு முன் எடுத்த இந்தியாவின் புகைப்படம் சிலது கிடைத்தது. அவை ஒவ்வொன்றும் இந்தியர்களின் கலாச்சாரம், கலை,பழக்க வழக்கங்களை பறைசாற்றுவதாய் இருந்தது.

நன்றி: படங்களை மெயில் அனுப்பிய தோழிக்கு












