Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts

Monday, November 23, 2015

பெற்ற தாய் உசத்தியா?! இல்ல வளர்ப்பு தாய் உசத்தியா?! -ஐஞ்சுவை அவியல்

ஏய் புள்ள! என்ன மூஞ்சிய தூக்கி வச்சிருக்கே!! தீபாவளிக்குதான் நீ கேட்ட புடவையும், நகையும் வாங்கி  கொடுத்துட்டேனே! அப்புறம் என்ன?!

அது ஒண்ணுமில்லீங்க மாமா! காலைல பேப்பர் பார்த்தேனா?! அதான் மனசு கஷ்டமா போச்சு.

ஏன்?! என்ன ஆச்சு?! 

இப்போ குறைஞ்ச தங்கம் விலை முன்னமே குறைஞ்சிருந்தா இன்னும் ரெண்டு கிராம் கூட எடுத்திருக்கலாம்ன்னு நினைப்போ!?

அதுலாம் இல்ல மாமா! எப்போ பாரு என்னை தப்பாவே நினைங்க. நம்ம ஊருல இருக்கும் கான்வெண்ட் ஸ்கூல்கிட்டக்க நேத்து சாயங்காலம் 4 மணிக்கு குழந்தையோட அழுகுரல் கேட்டுச்சுன்னு அக்கம் பக்கத்திலிருக்குறவங்க போய் பார்த்திருக்காங்க. அங்க பொறந்து கொஞ்ச நேரமே ஆன ஆம்புள குழந்தை ஒண்ணு மழைல நனைஞ்சுக்கிட்டு ரோட்டோரம் கிடந்துச்சாம். 

ஐயோ! அப்புறம்?!

அதோட காலும் கையும் வளைஞ்சு போய் ஊனமுற்று கிடந்துச்சாம் மாமா! அதான் அதைக் கொண்டாந்து ரோட்டோரம் வீசிட்டு போய்ட்டாங்க போல!!

அடச்சே! குழந்தை ஊனத்தோடு பொறந்தா ரோட்டோரம் வீசி எறியலாமா?! டாக்டர்கிட்ட காட்டி குணப்படுத்த பார்க்கலாம் இல்லன்னா உதவி  செய்யுறவங்கக்கிட்ட கொடுத்திருக்கலாம். பாவம் அந்த குழந்தை!!!

ம்ம்ம் பெத்தவங்களே கவனிக்க தயங்கும்போது வேற யாரு மாமா இப்படிப்பட்ட குழந்தையை பார்த்துக்குவாங்க?!

நல்ல உள்ளங்கள் இன்னமும் இருக்காங்க புள்ள. கோவைல இருக்கும் சுரேஷ்சந்திர பட், விஜயலட்சுமின்ற தம்பதிகள்தான் அதுக்கு உதாரணம். 

அப்படி என்ன பண்ணிட்டாங்க அவங்க ரெண்டு பேரும்?!

அவங்களுக்கு கல்யாணம் ஆகி 15 வருசமாகியும் குழந்தை இல்ல. எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் குழந்தை இல்ல. அதனால எங்கெல்லாமோ தேடி கேரளாவுல இருக்கும் ஒரு ஆசிஓரமத்திலிருந்து ஒரு குழந்தையை எல்லா மெடிக்கல் செக்கப்பும் செஞ்சு நார்மல்ன்னு ரிசல்ட் வந்தப்பின் தத்தெடுத்து அஜய்ன்னு பேர் வச்சி வளர்த்திருக்காங்க. தவழ ஆரம்பிச்ச குழந்தை அப்புறம் நடக்கவே இல்ல. என்ன ஏதுன்னு டாக்டர்கிட்ட கூட்டிப் போனப்பின் “செரிப்ரல் பால்சி”ன்ற நோய் இருக்குறது கண்டுப்பிடிச்சிருக்காங்க.





ஐயோ! அப்புறம் குழந்தைய என்ன செஞ்சாங்க. மீண்டும் ஆசிரமத்துக்கே குடுத்துட்டாங்களா!?

அதான் இல்ல. முறைப்படி ஆசிரத்துக்கு இந்த தகவலை தெரியப்படுத்தி இருக்காங்க. அவங்க குழந்தையை எங்கக்கிட்ட கொடுத்துடுங்கன்னு சொல்லி இருக்காங்க. அதுக்கு அந்த ஜோடி, இவன் எங்களுக்கு கிடைச்சு, இவனை பார்த்துக்கனும்ன்னுதான் எங்களுக்கு கடவுள் கட்டளைப் போல! அதான் இத்தனை வருசம் கழிச்சு இவன் எங்களுக்கு கிடைச்சிருக்கான். அதனால, நாங்களே இவனை வளர்த்துக்குறோம்ன்னு சொல்லி அவனை ஒரு இளவரசன் போல வளர்த்து வர்றங்களாம். அவள் விகடன் அவங்களைப் பத்தி ஒரு கட்டுரை வந்திருக்கு. 

அப்படியா! நிஜமாவே நல்ல மனுசங்கதான் மாமா! அப்புறம் நாம தினமும் போடுற பெட்ரோல்ல எப்படி கொள்ளை அடிக்குறங்கன்னு மூஞ்சிபுக்குல படிச்சேன். நீங்க படிச்சீங்களா?!

ம்ம் படிச்சேன் புள்ள. நாம 100ரூபாக்கு பெட்ரோல் போடச் சொன்னா, அவங்களும் மானிட்டர்ல 100ரூபான்னு அழுத்தி விட்டுடுவாங்க. ஆனா, 90 ரூபா வந்ததும், பெட்ரோல் போடுறவர் தன் கையில் இருக்கும் பம்ப்ல இருக்கும் ப்ரேக்கை ஒரு அழுத்து அழுத்தி ரிலீஸ் பண்ணுவார். அப்படி பண்ணா பெட்ரோல் மெதுவா இறங்கி நமக்கு 100ரூபாய்க்கு பெட்ரோல் போட்டதா காட்டும். ஆனா, அப்படி பண்ணும்போது மீட்டர்  recalibration  ஆகி நமக்கு குறைவான அளவு பெட்ரோல்தான் கிடைக்கும். இதுனால, 5 முதல் 10 ரூபா நமக்கு நஷ்டமாகுமாம். 

இனிமே பெட்ரோல் போடும்போது நீங்களும் கவனமா இருங்க மாமா!

சரி புள்ள. மூஞ்சி புத்தகத்துல இந்த படத்தை பார்த்ததும் என்னை வெட்கப்பட வைச்சுது. ஆஃபீஸ் உஎதிர்பார்த்துக்கிட்டு இருக்கோம். ஆனா, கால் இல்லாத பெரியவர் ஒருத்தர் விவசாயம் செய்யுறார். அவர் வணக்கத்துரியவர் இல்லியா?!


ம்ம்ம் நிஜம்தான் மாமா. நம்ம உறவுகள் எப்படி இருக்குன்னு மூஞ்சி புக்குல ஒருத்தர் போட்டிருக்கார். அதையும் பாருங்க...,  கார்த்திகை பண்டிகை வருது. எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் போறேன்.....,



Saturday, September 07, 2013

மனதின் குமுறல்





உன் கடுஞ்சொற்களால் நான் 
வீழ்ந்து போனாலும் கூட,
உன் நினைவுகள்
என்னை விட்டு விலகவில்லை!!

நாம் இருந்த இடங்கள் யாவும் 
மறைந்து போனாலும் கூட,
 நீ விட்டு சென்ற 
தடயங்கள் இன்னும் மறையவில்லை!! 

நம் எதிர் வாதங்கள் எல்லாம் 
எதிர் மறையானதால்,  
என் எதிரில்
எதிரியாக கூட நீ இல்லை!! 

நிஜங்களெல்லாம் ரணமாகி போனதால், 
உன் நினைவுகளால்  கூட அதை 
குணபடுத்த முடியவில்லை!!

புன்னகை சூழ்ந்த உன் 
இதழ்கள் ரெண்டும் 
மௌனமாகி போனதால்,  என்னை
திட்ட கூட அவை திறக்கவில்லை!!

பிரிவுகள் நம்மை பிரித்து வைத்தாலும், 
தொலைவுகளால் கூட நம்மை 
தொலைத்து விட முடியவில்லை!!

மறுப்புகள் எல்லாம்
 மலை போல் இருந்தாலும் ,
மீண்டு வருவதும், மாண்டு போவதும் ,
நம் கைகளில்தான் அன்பே!










Wednesday, July 24, 2013

இது பொம்பளைங்க சமாச்சாரம். ஆனா, ஆண்களுக்கு!!

  
 நம்ம ஊரு ஆண்களை மன்மோகன் சிங்க் குர்தாவுல எத்தனை  பட்டன் இருக்குனு கேட்டு பாருங்க, படக்கென வந்து விழும் பதில்!! கணக்கு புதிரா?! சட்டென விடை வரும்.., உலக நடப்பு அத்தனையும் விரல் நுனில இருக்கும். ஆனா,    என்ன செய்தா வூட்டுக்காரம்மாவை  நம்ம வழிக்கு கொண்டுவரலாம் ன்ற விஷயத்துல தான் ஆண்களுக்கு பயங்கர குழப்பம்.

சில பொண்ணுங்களுக்கு சாக்லேட் பிடிக்கும், சிலருக்கு ஐஸ்கிரீம் ன்னா கொள்ளை பிரியம்.  சிலருக்கு அம்மா வீடு, சிலருக்கு புடவை.., சிலருக்கு டெட்டி பேர் பொம்மை பிடிக்கும். ஆனா சில பொண்ணுங்க இருக்காங்க பாருங்க. அவங்களை, என்ன வாங்கி குடுத்தாலும் என்ன செய்தாலும் வழிக்கு வரமாட்டாங்க.

செலவே இல்லாத அன்பான கவனிப்பு, அக்கறையான பேச்சு, அப்பப்போ ஆறுதலாய் சில முத்தம் என கொடுத்தால் சொக்கிப்போகும் பெண்களும் இருக்கத்தான் செய்றாங்க. உள்ளன்போடு புரிதலும் இருக்கும் துணைதான் என்றைக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வை தருதாம். இதை நான் சொல்லலீங்கோ!! ஒரு ஆய்வோட முடிவு இதெல்லாம்...., உங்க (நல்லா நோட் பண்ணிக்கோங்க சகோ’ஸ் ”உங்க”) காதலியையோ, மனைவியையோ எப்பவும் மகிழ்ச்சியா வச்சுக்கிட்டு, நீங்களும் மகிழ்ச்சியா வாழ, அந்த ஆய்வுல வந்த டிப்ஸ்கள உங்களுக்கு சொல்றேன். கேட்டுக்கோங்க சகோ’ஸ...,

                                         
 பூ கொடுங்கள்:
மல்லியோ, முல்லையோ, கனகாம்பரமோ இல்ல ரோஜாவோ எதாவது ஒரு பூவுக்கு மயங்காத பொண்ணுங்க  யாரும் இருக்கமாட்டாங்க. அதனால,  பிறந்தநாள், திருமணநாள், முதல் முதலில் பார்த்த நாள், காதலை உணர்த்திய நாள், லொட்டு, லொசுக்குன்னு எதாவது காரணம் சொல்லி அடிக்கடி பூக்கள் கொடுங்கள். மிகவும் எளிதான, மலிவான பரிசுதான். ஆனா மனதைத் தொடும் பரிசு இது (மனசை இல்லை, கூந்தலை தொடும் பரிசுன்னும், உன் அண்ணிக்கு காலிஃப்ளவர் வாங்கி கொடுத்தேன். பூரிக்கட்டையால மொத்துனா”ன்னு அமெரிக்காவுல இருந்து யாரும் வந்து கமெண்ட் போடக்கூடாது. )

கண் பேசும் வார்த்தைகள்:
கணவனோ, காதலனோ தன்னை மட்டும்தான் பார்க்கனும், கவனிக்கனும்ன்னு 90 வயசு பாட்டி கூட ஆசைப்படும்.  பக்கத்தில் இருக்கும் போது தப்பித்தவறி கூட அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பார்த்துடாதீங்க .  பக்கத்துல இருக்கும்போது வார்த்தைகளால பேசுறதை விட கண்களால் பேசுறதைதான் பொண்ணுங்க ரொம்ப விரும்புறாங்களாம்(90 வயசு பாட்டிக்கு காதலன் இருப்பானா?! அப்படியே இருந்தாலும் அதுங்களுக்கு கண்ணு தெரியுமான்னும் கமெண்ட கூடாது).

 மனம் கவரும் மாலைப்பொழுது:
 எப்பவும் தன்னோட ஆண், தன் பக்கத்துலயே இருக்கனும்ன்னு ஆசைப்பட்டாலும்!! அது அவ்வளவா சாத்தியமில்லியே! அதனால, முடிந்தவரை மாலை நேரத்துல தன் ஆண் தன்னோட இருக்கனும்ன்னு ஆசைப்படுவாங்க பெண்கள். கூடவே, மழைக்காலமும், சூடான டீயும், கூடவே நீங்களும் இருந்தாதுட்டா அந்த பொண்ணுக்கு ரொம்ப சந்தோசமாம்!! (ம்க்கும், லேசா தூறல் போட்டாலே, நாங்க பாட்டில் ஓப்பன் பண்ணிடுவோமே!ன்னு சொல்லுற ஆண்களும் இனி தொடர வேணாம்னுங்க)
                            

ஒரு நாள் சமைக்கலாம்:
 தினமும் பொண்டாட்டி கையல் சாப்பிட்டு பழகிய ஆண்கள் ஞாயிறு ஒருநாளாவது தன்னோட  கையால சமைச்சு மனைவிக்கு பரிமாறலாம். நீங்க நல்லா சமைச்சிருந்தா அதோட ரிசல்ட் அன்னிக்கு நைட்டே தெரியும் :-). (டெய்லி நாங்கதான் சமைக்குறோம். இதுல ஞாயிறு வேறயா?!ன்னு பொய் சொல்லி யாராவது கமெண்ட் போட்டா!! அந்த கமெண்ட் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அவங்க ஹவுஸ் பாசுக்கு அனுப்ப படும்!!)

 பரிசு கொடுப்பது:
என்னதான் கிரடிட் கார்டை தேச்சு ஸ்டார் ஹோட்டல்களுக்கு கூட்டி போனாலும், கண்ணை  பறிக்குற நெக்லஸை வாங்கித் தந்தாலும் அங்கலாம் நீங்க எப்படி அவங்களை கவனிச்சுக்கிறீங்கன்றதை பொறுத்துதான்  அவங்க திருப்தி அமையும். (இல்லாட்டி வீட்டுக்கு வந்ததும், அது நல்லா இல்ல, அந்த டிசைன் வாங்கித் தந்திருக்கலாம், உங்க அம்மாக்கு மட்டும் கேட்டு கேடு செய்வீங்களே!!ன்னு பாட்டுதான் கிடைக்கும்.)

பாதுகாப்பு உணர்வு:
எல்லா பெண்களும்  எப்பவுமே ஆண்களிடம்  எதிர்பார்ப்பது பாதுகாப்பு உணர்வைதானாம். பொது இடத்திலோ, தனிமையிலோ, அல்லது சோகத்துலோ இருக்கும்போது யாரை பற்றியும் கவலைப்படாமல் லேசாய் அணைத்து ஆறுதலாய் தோள் கொடுங்க(அதுக்காக, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்துல கம்ல் பண்ணுற மாதிரி கட்டிப்ப்ப்ப்ப்ப்ப்ப்பிடி வைத்தியம்லாம் வேணாம். மிக லேசான அணைப்புன்னுதான் சொல்லி இருக்கேன்.)

சின்னதாய் ஒரு கவிதை:
எப்ப பார்த்தாலும் உர்ர்ருன்னு இல்லாம அப்பப்போ  கவிதையா பேசனுமாம். ஒரே வீட்டில் இருந்தாலும்  மெயில் இல்லாட்டி செல்போன்ல மெசேஜ் பண்ணுங்க. சொந்தமா கவிதை எழுத வரலைன்னாலும்  காப்பியடிச்சாவது கவிதை அனுப்பலாம் தப்பில்லையாம். அதுலயும்  ஊடல் கொண்டாடும் நேரத்துல இந்த மாதிரியான கவிதை விடும் தூது நல்ல பலன் கொடுக்குமாம்( அதுக்காக, கண்மணி, மானே! தேனே!ன்னு ஓவரா வழியவும் வேணாம். அப்புறம் உண்மை என்னன்னு கண்டுபிடிச்சு பூரிக்கட்டையால வாங்க வாய்ப்புண்டு.)

அடிக்கடி பேசுங்க:
மனைவியை விட்டு வெளியூர் போய் இருக்கும்போது  செல்போனில் அடிக்கடி பேசுங்க.  அப்படி முடியாத நேரத்துல  ஐ லவ் யூ , ஐ மிஸ் யூ”  ஐ ம் பிசி.  கால் யூ லேட்டர்”ன்னு மெசேஜ் அனுப்புங்க. வேலை நேரத்துல கூட நம்ம நினைப்பு அவருக்கு வருது!!னு சந்தோசப்பட்டுக்குவாங்க. (மெனக்கெட்டு டெமேஜர்கிட்ட ஃபீல்டு வொர்க் வாங்கி வெளியூர் போறதே அவங்க நினைப்பு இல்லாம இருக்கத்தான். இது பொறுக்காம பேசனும், மெசேஜ் அனுப்பனும்”ன்னு மெசேஜ் சொல்றீங்களே ராஜி அக்கா! இது நியாயமா?!ன்னு  பிரகாஷ் முணு முணுக்குறது இங்க கேக்குது!!)

கை பிடித்துச் செல்லுங்களேன்:
  எங்காவது வெளியூர்களுக்கு போகும்போதுலாம் , கல்யாணம் ஆன புதுசுல எப்படி அவஙக் கையை பிடிச்சுட்டு ஊரை சுத்துனீங்களோ?! அதுப்போல உங்க வூட்டம்மா  கையை பிடித்துச் போங்க. அது மாதிரி கூட்டி போகும் போது  பாதுகாப்பு உணர்வை உணர்வதோடு, எத்தனை பெண்கள் இந்த உலகத்துல இருந்தாலும் அவர் என்னை மட்டுமே விரும்புறார்ன்னு பெண்களுக்கு தோணுமாம் (வெளியூருக்கு கூட்டி போறதே கூட்டத்துல தொலைச்சுட்டு வரத் தான். இதுல கையை வேற பிடிச்சுக்கனுமா?!ன்னு ரூபக் குமார் சண்டைக்கு வரப்போறார்.)

கட்டிப்பிடி வைத்தியம்:
காலையில  எழுந்ததும் காஃபி எங்கே?! என் சாக்ஸ் துவைச்சியா?! லேப்டாப் சார்ஜ் போட்டியா?! செல்போன்ல பேலன்ஸ் பார்க்க கூடாதா?! என் பிரஷை காணோம்ன்னு ஆம்புலன்ஸ் சைரன் மாதிரி கத்திக்கிட்டே படுக்கையை விட்டு எழுந்துக்காம, மனைவியை அன்பான அணைப்பு, சின்னதாய் ஒரு முத்தம், லைட்டா ஒரு புன்னகையோட குட் மார்னிங் சொல்லி பாருங்க. அப்புறம் அந்த நாள் முழுக்க இனிய நாள்தான்(அதுக்காக, ராஜி அக்கா! சொல்லிட்டாங்கன்னு காலைல அரிபுரின்னு வேலையா இருக்கும்போதோ இல்ல குட்டீஸ் இருக்கும்போதோ கட்டிப்பிடிச்சு உங்க மேல விழ வேண்டிய பூரிக்கட்டை என்மேல ரீடைரக்ட் பண்ணி விட்டுடுடாதீங்க சகோ’ஸ்.)

டிஸ்கி: முன்னலாம், மனசுக்கு தோணுறதை டைப் பண்ணி பதிவா போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பேன். ஆனா, இப்போ பாருங்க, எனக்கு, சகோன்ற பேருல எதிரிங்கலாம் அதிகமாயிட்டதால அவங்க என்ன கமெண்ட் போடுவாங்கன்னும் ஒரு மாதிரி ஜிந்திச்சு பதிவு போட வேண்டியதா இருக்கு :-(

Tuesday, June 11, 2013

இதுதான் காதலென்பதா?!

   
என் தனிமையின்
போதெல்லாம்-நம்
இதழ் வருடிய வார்த்தைகளையே
அசைப்போடுகிறதே இதுதான் காதலா?

மற்றவர்கள் கேலியில் நீ
அகப்பட்டுக் கொண்டால்-என்
அகம் வதைப்படுகிறதே அதுதான் காதலா?

இமைகளின் இயக்கம்
நிறுத்தி-நீ
உலவும் இடங்களில்
உனையே தேடல்
கொள்கிறதே விழிகள்
இதுதான் காதலா?

அருகினில் நீ இல்லாதபோதும்
உன்னுடன் உறவாடி மகிழ்கின்றேனே
இதுதான் காதலா?

எனக்காக நீ தந்தவைத் தவிர்த்து
சுவாசக் காற்று உட்பட-நீ
வருடிய அனைத்தையும் சேகரிக்கின்றேனே
இதுதான் காதலா?

யார் கேட்டும் இல்லை என்ற  ஒன்றை
நீ கேட்க நினைக்கும்போதே
 கொடுக்கத் தோன்றுகிறதே
அதுதான் காதலா?

பிரிவுகள் நேரும்போது
ஏதோவோர் உணர்வு- நம்
விழிகளில் நீர் நிரப்பிச்  செல்கிறதே
அதுதான் காதலா?

ஊரே நம்முறவை
காதலென்றபோது
நீ மட்டும் மறுக்கிறாயே
நாங்கள் நண்பர்களென்று.....,

எது காதல் தெரியவில்லை
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியமென்பதால்...,

Wednesday, October 10, 2012

அன்பும் நஞ்சுதானடி.....,


ஊற்ற, ஊற்ற...,
உளவாங்கியபடியே
நிரம்ப விரும்பாத...,
மது கோப்பை!

எனை மீட்டும் உன் அன்பும்..,
அது மீட்கும் உன் நினைவும்...,
மதுவை விடவும்??!!
 மயக்கமாய்...,

எப்போது தொடங்கினாய்..,
என்னென்ன பேசினாய்..,
என்ன சொல்லி முடித்தாய்!!??
எந்த பிரக்ஞையுமின்றி நான்.....

மூச்சுத் திணறுகிறது...,
மூச்சு விட முடியவில்லை..., 
மூழ்கி கொண்டிருக்கிறேன்...,
 உன் அன்பிற்குள்??!!

நீந்தி கரசேரும் நிலையில் நானில்லை..,
நினைவும் எனதாயில்லை..,
கரம் நீட்டி கேட்கிறேன்..,
கரையேற்றி விடும்படி....,

”நீயாய் நீந்தி .., கரை சேர்”!
எனச்சொல்லி ...,
தேய்ந்து புள்ளியாய்..., 
போய் கொண்டேயிருக்கிறாய்!!??

”அன்பும் நஞ்சுதானடி”
அசரீரி காதில் விழ...,
 அண்ணாந்து...,
வானத்தை  பார்க்கிறேன்...,

விடியும் வானில்..,
சிரித்தபடி..,
மேக மூட்டத்திலிருந்து விலகி..,
கண் சிமிட்டுகிறது “விடிவெள்ளி”

Thursday, September 06, 2012

பிரியமான தோழி...,


பிரியமான தோழிக்கு...,

எப்படி இருக்கிறாய்?
எங்கே இருக்கிறாய்?
எப்போது வருவாய்?
என் இதயம் துடிக்கும் போதெல்லாம்
உன்னைப்பற்றி எழும் கேள்விகள் இவை...

உன் விரலோடு விரல் கோர்த்து
விளையாடிய வீதிகள்....,
இன்று, வெற்றிடமாய் தெரிகின்றன!!

உன் எச்சில் மருந்தால்
ஆறிப்போன காயங்களின் தழும்புகள்...,
இன்று,  வலியால் துடிக்கின்றன!!

உன்னோடு தோள் சேர்ந்த
என் சுக துக்கங்கள் அனைத்தும்
இன்று தனிமையில் தவிக்கின்றன...

புன்னகை பூ பூத்து
நட்போடு நடைபோட்டோம்
புத்திகெட்ட சமுதாயம் நம்மை
பிரிக்குமென்றா எதிர்பார்த்தோம்?

அண்ணன் தங்கை வந்தாலே
அருவருப்பாக பார்க்கும் சமுதாயம்
நண்பர்களாய் நடைபோடும் நம்மைமட்டும்
ஆசையோடவா பார்க்கப்போகிறது...

வீணர்களின் சொல்லுக்கு வெட்கப்பட்டு
விட்டில் பூச்சிபோல் துடிக்கவேண்டாமென
வெவ்வேறு திசை பிரிந்தோம்
வேரறுத்த நம் நட்போடு...

விவேகத்தோடு எடுத்த நம் முடிவு
நட்பிற்கு நல்லது என்றாலும்
வெவ்வேறு வேளைகளில்
என்னை ரணமாய் கொள்கிறது...

நீ எத்திசையில் இருந்தாலும்
நம் நட்பெனும் சுவாசக்காற்று
எப்போதும் எங்கோ ஓரிடத்தில்
சந்தித்துகொண்டு தான் இருக்கிறது...

கண்ணீர் வருமோ என்ற தயக்கத்தில்தான்
இதை எழுத துடங்கினேன்
துடைக்க உன் விரல் இல்லாதபோது நான் மட்டும் எப்படி?
என்று கண்ணீரும் வரமறுக்கிறது....

உன் நினைவில் நான் எழுதும்
இந்த இனிய வேளையில்
என் நினைவில் நீயும் இருப்பாய்
என்ற நம்பிக்கையோடு....