Showing posts with label பணம். Show all posts
Showing posts with label பணம். Show all posts

Tuesday, November 06, 2012

தியாகிகள்- கடல் கடந்து வாழும் என் சகோதரர்களுக்கு சமர்ப்பணம்




வளமையான
வாழ்விற்காக...,
இளமைகளை
தொலைத்த
துர்பாக்கியசாலிகள்!!

வறுமை என்ற
சுனாமியால்!?
அரபிக்கடலோரம்
கரை ஒதுங்கிய
அடையாளம் தெரிந்த
நடைபிணங்கள்!!

சுதந்திரமாக
சுற்றி திரிந்தபோது
வறுமை எனும்..,
சூறாவளியில் சிக்கிய
திசைமாறிய பறவைகள்1!

நிஜத்தை தொலைத்துவிட்டு..,
நிழற்படத்திற்கு
முத்தம்கொடுக்கும்
அபாக்கியசாலிகள் !!

தொலைதூரத்தில்
இருந்துகொண்டே?!
தொலைபேசியிலே...,
குடும்பம் நடத்தும்
தொடர்கதைகள் !

கடிதத்தை பிரித்தவுடன்
கண்ணீர் துளிகளால்
கானல் நீராகிப் போகும்
மனைவி எழுதிய
எழுத்துக்கள்!

ஈமெயிலிலும்
இண்டர்நெட்டிலும்
இல்லறம் நடத்தும்
கம்ப்யூட்டர்வாதிகள் !

நலம் நலமறிய
ஆவல்..., என்றால்
பணம் பணமறிய
ஆவல்..., என கேட்கும்
. டி . எம் . மெஷின்கள்??!!


பகட்டான
வாழ்க்கை வாழ
பணத்திற்காக
வாழக்கையை
பறிகொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள்!!
.சி .காற்றில்
இருந்துக்கொண்டே...,
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும் துறந்தவர்கள் !

வளரும் பருவத்திலே
வாரிசுகளை...,
வாரியணைத்து...,
கொஞ்சமுடியாத
கல்நெஞ்சக்காரர்கள் !

தனிமையிலே
உறங்கும்முன்
தன்னையறியாமலே
தாரைதாரையாக
வழிந்தோடும்
கண்ணீர்துளிகளுக்கு சொந்தக்காரர்கள்

”அபஷி” என்ற அரபி
வார்த்தைக்கு
அனுபவத்தின் மூலம்
அர்த்தமானவர்கள் !


உழைப்பு என்ற
உள்ளார்ந்தஅர்த்தத்தை
உணர்வு பூர்வமாக
உணர்ந்தவர்கள்!
”முடியும்” வரை
உழைத்துவிட்டு...,
”முடிந்தவுடன்
ஊர்செல்லும்
”நோயாளிகள்”!
கொளுத்தும் வெயிலிலும்
குத்தும் குளிரிலும்
பறக்கும் தூசிகளுக்கும்
இடையில் பழகிப்போன
ஜந்துகள்!


பெற்ற தாய்க்கும்...,
வளர்த்ததந்தைக்கும்..,
கட்டிய மனைவிக்கும்...,
பெற்றெடுத்தகுழந்தைக்கும்...,
உற்ற குடும்பத்திற்கும்...,
இடைவிடாது உழைக்கும்
”தியாகிகள்” 
 

டிஸ்கி: சிங்கப்பூர்ல இருக்கும் என் அண்ணாக்கிட்ட விளையாட்டா உனக்கென்ன அண்ணா?! வெளிநாடுல இருக்கே! வாழ்க்கை சொர்க்கம்ன்னு கலாய்ப்பது வழக்கம். ”எங்க” வாழ்க்கை எப்படி இருக்குன்னு இந்த கவிதை பார்த்து தெரிஞ்சுக்கோம்மான்னு அனுப்பினார். ரொம்ப நாளா இது மெயில்ல இருந்துச்சு. நேத்து மனோ அண்ணா பிளாக்குல “வெளிநாட்டில் வாழும் ஏழைகள்”ன்னு போஸ்ட் போட்டிருந்தார். அதை படிச்சதும் இந்த கவிதையை போஸ்ட் போடனும்ன்னு தோணுச்சு. இந்த கவிதை சுட்டதுங்கோ. என்னுதில்லை. 

Wednesday, August 01, 2012

ஊடலுக்குப் பின் கூடல்


                                                 
'அம்மா'வின் இல்லத்திலிருந்தும் உள்ளத்திலிருந்தும்  உ.பி.ச விலகிய போது ஓர் அதிமுக தொண்டனின்  மனநிலையை இப்படி வடித்திருந்ததாக  நன்பரொருவர் மெயில் அனுப்பியிருந்தாங்க.  இப்போது திரை விலகி, நாடகம் முடிந்துவிட்ட நிலையில் அப்படியே பின்னவரைப் பார்த்து முன்னவர் பாடுவதாக  பாடலாசிரியர் நாஞ்சில் வேணு அவர்கள் எழுதியுள்ள பாடலொன்று.  "வாராயோ தோழி வாராயோ!" மெட்டில்...


வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!
அதிகாரம் கையில் இருக்கிறவரைக்கும்
ஆதாயம் தேட வாராயோ?
வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!


வழக்குண்டு இங்கு நூறு!- அதில்
வாய்தாவை வாங்கப் பாரு!
எதிர்க்கின்ற பேர்கள் யாரு?-இது
எதற்கும் தேறாத ஊரு!

தமிழ்நாட்டில் ஏது தகராறு!
தலையாட்டும் பொம்மை வரலாறு!


வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!

அவர் செய்த ஊழல் பெரிதா-இல்லை
இவர் சேர்த்த செல்வம் பெரிதா

வழக்காடு மன்றம் புதிதா-அவர்
வாய்பூட்டும் வழிகள் அரிதா
மகத்தான கொள்கை பணம்தானே?
மடசாம்பிராணி ஜனம்தானே?

வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!



பொதிமாடு போல தினமும்-சுமை
புலம்பாமல் தூக்கும் ஜனமும்
அரைக்கில்லை முண்டுத்துணியும்-என்றும்
அடிமாடு போலப் பணியும்
அவலங்கள் தீர எதுவுண்டு?
அரசாங்கம் தந்த மதுவுண்டு!


வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!
டிஸ்கி: எனக்கு அரசியல் புரியாது அதனால பிடிக்காது. ஆனா, வலையில படிச்சதும் இந்த பாடல் பிடிச்சுட்டுது. அதனால இந்த பதிவு.

Monday, December 12, 2011

பணமென்னும் சுழலில்......


பணம் சம்பாதிக்க
கற்றுக்கொள்ளுங்கள்
மௌனமான நேரங்களில் கூட ..
பணம் பேசும் ……

கடவுளே உனக்கு ஒரு
அன்பு கட்டளையிடுகிறேன் ..
ஆயிரம் கஷ்டங்களை கொடு ..
பல்லாயிரம் சோதனைகளை கொடு ..

ஆண் பிள்ளையாய் பிறந்த என்னை
அழவைத்து விடாதே ..!
ஏனென்றால், கல்லை விட
கடினமான என் மனது ..

ஒரு பூவை விட மென்மையாகிவிட்டது..
சிறு கஷ்டங்களை கூட ..
தாங்க முடியவில்லை ..
ஏனோ கண்கள் கலங்கி கொண்டே ..
இருக்கிறது ..

பணம் ஒரு பொருட்டல்ல
என்பதை என்னை சுற்றி
இருப்பவர்கள் உணரும் வரை ..
நான் உயர்வாய் வரவேண்டும் ..

ஒன்று மட்டும் உண்மை ..!
வாழ்க்கை பாதையில் ,
கஷ்டங்களால் வரும் கண்ணீரை விட,
காதலால் வரும் கண்ணீரே அதிகம்!?

கண்ணீர் என தெரிந்தும் , ஏனோ
அதை சுகமாய் ஏற்றுக்கொள்கிறேன் …