Showing posts with label பிரம்மா. Show all posts
Showing posts with label பிரம்மா. Show all posts

Wednesday, April 24, 2019

பாவப்பட்ட அகலிகை - வெளிச்சத்தின் பின்னே!

இறைவனின் ஒவ்வொரு படைப்பிற்கும் அர்த்தம் உண்டு. அது நல்லவர்களோ தீயவர்களோ, புல்லோ பூண்டோ, புழுவோ பூச்சியோ ஆக எதுவாய் இருந்தால் அந்த உயிர் படைக்கப்பட்டதற்கும் , அதன் வாழ்வியல் சம்பந்தத்திற்கும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும்.  அசுரர்கள் படைப்பு, மனிதன் எப்படி வாழக்கூடாதென மக்களுக்கு உணர்த்த மகான்களின் படைப்பு மனிதன் எப்படி வாழவேண்டுமென்பதை உணர்த்த, பசு, காளை, குதிரைகள் அடுத்தவருக்கு உதவ, உழைப்பின் எடுத்துக்காட்டாய் இருக்கின்றது. நாய் நன்றியின் அடையாளம், நரி தந்திரத்தின் அடையாளம், காக்கை பகிர்ந்துன்பதின் அடையாளம்...  அதேப்போல் புராண மாந்தர்களின் படைப்பிலும் ஒவ்வொரு அர்த்தமுண்டு.   ஆனால், அகலிகையின் படைப்பிற்கு என்ன அர்த்தம்ன்னுதான் எனக்கு விளங்கவில்லை. 


கற்புக்கரசி யார்ன்னு கேட்டால் சீதா, கண்ணகி, நளாயினி, அகலிகை, அனுசுயான்னு சட்டுன்னு சொல்லிடுவாங்க.  கற்புக்கரசின்ற வார்த்தையை தவிர அகலிகை அனுபவித்தது ஏதுமில்லை. இறைவன் படைப்பினிலே பாவப்பட்ட ஜென்மம்ன்னா அது அகலிகைதான். சுவாரசியமும் சர்ச்சைக்குரிய பாத்திரமும்ன்றதாலயே அவள் பெயர் இன்றும் நிலைத்திருக்கிறது... அகலிகை பத்தி சொல்லும்போதெல்லாம் ராமன் கால் பட்டதால் பெண்ணானவள்ன்னு சொல்லி ராமனின் பெருமையை சொல்ல அகலிகை பயன்பட்டாளே தவிர அவளை மனுஷியாகக்கூட மதிக்க மறந்துவிட்டோம்.  அகலிகையின் கதை பல கேள்விகளை நமக்கு முன் எடுத்து வைக்கின்றது. அகலிகை படைப்பும் அவள் வாழ்வும் வினோதம்! அதனால், அவள் பெற்ற தாழ்வும், இறுதியில் மீள்வும் அந்த மீள்வு கொடுத்த புகழும் மேலும் வினோதம்.
Ahalya, the wife of the seer Gautama, seated on a plinth with a back, on a terrace with a building behind her. A covered doorway is also shown. She wears lavish textiles and jewellery and holds a flower in her right hand. In front of the plinth is a vase with flowers in. Company School, 18th century, Patna.

அமுதம் வேண்டி பாற்கடலை கடையும்போது அமுதம் வெளிப்பட்டது. அதை பங்கிட மோகினி ரூபத்தில் விஷ்ணு பகவான் தோன்றினார். அவளது அழகில் அனைவரும் மயங்கினர். அந்த அழகினை கண்ட பிரம்மனுக்கு, இந்த அழகு அனைத்தும் அசுர வதம் முடிந்ததும் மறைந்துவிடும். அதனால் அழிவில்லாத அழகை உலகுக்கு கொடுக்க வேண்டுமென எண்ணம் உண்டானது. அதனால் மிக அழகான பெண்ணொருத்தியை படைத்து அவளுக்கு அஹல்யா என பெயரிட்டார். அழகு தமிழில் அவளது பெயர் அகல்யா, அகலிகைன்னு பெயர் உண்டானது. அகல்யான்ற வார்த்தைக்கு அழகின்மை இல்லாதவள்ன்னு அர்த்தம். அதாவது சிறு குறைக்கூட அவளது அழகில் சொல்லமுடியாது என்பதே இதன் பொருள்.  அமுதத்தோடு அகலிகை தோன்றியவள்ன்னும் ஒரு  கதை உண்டு. 

மிக அழகாய் இருந்த அந்த அகலிகையை பாதுகாக்க வேண்டி, முற்றும் துறந்த முனிவரான கௌதமரிடம் கொடுத்து வளர்க்க சொன்னார். கௌதமர் சப்தரிஷிகளில் ஒருவர். தவத்தில் மிகப் பெருமை வாய்ந்தவர். அவர் உயரிய பண்புகளை உடையவர். பிரம்மா, இந்த அழகைத்திரட்டிய பெண்ணை காக்க புலன்களை அடக்கிய முனிவரே சிறந்தவர் என்று கருதினான்  அழகுடன், சிறந்த குணவதியாய் அகலிகை வளர்ந்து வந்தாள். திருமணப்பருவம் வந்ததும் அவளை திரும்ப பிரம்மனிடமே ஒப்படைத்தார் கௌதமர். பிரம்மலோகத்த்திலிருந்த  அவளது அழகு ஈரேழு உலகுக்கும் பரவியது, அவள்மீது தேவர்கள் , உட்பட இந்திரன் அவளை மணக்க விரும்பினர்.  ஒப்பற்ற அழகியும், குணவதியான பெண்ணை மணப்பவன் லேசுப்பட்டவனாய் இருக்கக்கூடாதுன்னு எண்ணிய பிரம்மன்,  உங்களில் யார் முன்னும்பின்னும் முகங்கொண்ட பசுவைக் கண்டு, அதை மும்முறை வலம் வந்து வணங்கி, முதலில் என்னிடம் வந்து தக்க ஆதாரத்துடன் கூறுகிறீர்களோ, அவரே இந்த அகலிகைக்கு மாலைசூட்டத் தகுதியானவர்!'' என்றார்.  அவளை அடைவதற்காக இந்திரன் உள்ளிட்ட அனைவரும்  உலகை சுற்றி முன்னும்பின்னுமாய் முகம் கொண்ட பசுவை தேடி கிளம்பினர்.  (இந்திரன் அழகில் அகலிகை மயங்கி அவரை மணக்க ஆசைப்பட்டதாகவும் சில ராமாயணத்தில் சொல்லப்படுகிறது).

எல்லாரும் உலகை வலம் வர ஆரம்பிக்கும்போது கௌதமர் நந்தவனத்தில் இருந்த பசு ஒன்று கன்று ஈன பிரசவ வலியால் துடிக்க ஆரம்பித்தது. அதற்கு பிரசவம் பார்க்க ஆரம்பித்தார் கௌதமர் .   பசு கன்றினை பிரசவிக்க ஆரம்பித்தது. பசுவின் முன்னும் பின்னுமாய் முகம் கொண்ட பசுவினை கௌதமர் கண்டார்.  கன்றினை ஈன்ற பசுவினை மூன்று முறை வலம்வந்து வணங்கினார்.  பிரம்மன் நிபந்தனைப்படி அவர் அறியாமலே கௌதமர் நடந்துக்கொண்டார்.  அதனால், பிரம்மன் சபையில் அறிவித்தபடி அகலிகையை கௌதமருக்கு திருமணம் செய்வித்தார். இந்திரனோ உலகை முழுக்க தேடியும் அப்படிப்பட்ட பசு கிடைக்கததால் சோர்ந்து போய் பிரம்மலோகம் வந்து சேர்ந்து, நடந்ததை அறிந்து அவமானத்தால் முகம் சிவந்தான். (உலகை மும்முறை வலம் வந்தால் பெண்ணை தருவதாய் பிரம்மன் சொல்ல, எல்லாரும் உலகை சுற்றி வர கிளம்ப, கௌதமர் பசுவுக்கு பிரசவம் பார்க்கிறார். கர்ப்பமடைந்த பசு ஈரேழு உலகுக்கும் சமம்ன்னு வேதம் சொல்லுது. அதன்படி மூவுலகை வலம் வந்ததாய் அர்த்தமாகிறது.) இன்னொரு கதையில் கௌதமரும் சுயம்வரத்தில் ஈடுபட்டதாய் சொல்றாங்க.

இன்னொரு கதைப்படி கௌதமர் நல்ல முறையில் அகல்யாவை வளர்த்து, பத்திரமாய் திரும்ப ஒப்படைத்ததால், அதற்குப் பரிசாக பிரம்மன் அகல்யாவை அவருக்கே மணமுடித்து வைத்ததாகன் சொல்லப்படுது. இதனால் இந்திரன் ஏமாந்துப் போகிறான். ஆசைப்பட்ட அகல்யா கிடைக்காத சோகம் ஒரு புறம், போட்டியில் தோற்ற அவமானம் ஒரு புறம் என்று இரு துக்கங்களை சுமந்து இந்திரலோகம் திரும்புகிறான் இந்திரன். இந்த இடத்தில் முக்கியமாய் சொல்லவேண்டிய விசயம் ஒன்று உண்டு. அது என்னன்னா,   கௌதம முனிவர் அகலிகையைவிட அதிக வயது மூத்தவர் என்பதும், கௌதமர் பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொண்டவர் என....  
antique Ravi Varma illustration Hindu mythology Ahalya portrait digital download
பிரம்மச்சரிய விரதத்தை  கடைப்பிடித்ததால் அகலிகையுடன் கௌதமர்  உடல் சேர்க்கையில் ஈடுபடுவதில்லை.  கணவருக்கு பணிவிடை செய்வதிலேயே அகலிகை பொழுதை கழித்தாள்.  கௌதமரின் வியர்வை பட்டு அகலிகை கர்ப்பம் தரிக்கிறாள். அவள் சதானந்தன் என்ற ஆண்பிள்ளையை பெற்றெடுக்கிறாள். கௌதமர் பூஜையில் இருக்க, அகலிகை அவருக்கு பணிவிடையில் மூழ்கி கிடந்தாள். ஆனாலும் அவ்வப்போது காம உணர்ச்சி அகலிகைக்கு எழும். கௌதமரின் விரதத்தினை கண்டு அமைதியாய் இருந்துவிடுவாள்.  இப்படியே நாட்கள் நீண்டது..
Image result for அகல்யா

ஒருநாள் கோழி கூவியது. பிரம்ம முகூர்த்தத்தில் முனிவர்கள் குளிக்கவேண்டுமென்பது விதி.   கௌதமர் நீராட அருகிலிருக்கும் நதிக்கரைக்கு செல்கிறார். சிறிது நேரத்தில் வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டு அகலிகை, கதவை திறந்து, என்ன சுவாமி?! எதாவது மறந்துவிட்டீர்களா?! என விசாரித்தாள். எதையும் மறக்கவில்லை அகலிகா! ஆகாயத்தினை பார். இப்பொழுதுதான் மூன்றாவது ஜாமம் ஆரம்பித்திருக்கின்றது. வா! சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கலாமென கௌதமர் அழைக்க, அகலிகை பக்கம் சென்று அமர்கிறாள்.    பேச்சு திசை மாறி கௌதமர், அகலிகையுடன் உடல்சேர்க்கையில் ஈடுபட்டார். இதென்ன புது வழக்கம்?! அதுவும் அதிகாலையில்!! போகும் வழியில் பறவைகள், மிருகங்களின் புணர்ச்சியில் இருப்பதை கண்ட மனுசன் மூடு ஏறி வந்துட்டாரோ என மனம் சிந்தித்தாலும், கணவன் சொல்லுக்கு மறுபேச்சு பேசுவது அழகல்ல என எண்ணி, கௌதமருக்கு உடன்பட்டாள். அவளது நீண்ட நாள் ஆசை நிறைவேறி உடலும், உள்ளமும் திருப்தியுற்ற மயக்கம் தெளியாமல் கௌதமரின் அணைப்பில் தன்னை மறந்த நிலையில் அகலிகை இருந்தாள். (இந்திரன் என உணர்ந்தே அகலிகை அமைதியாய் இருந்ததாகவும் ஒருசில ராமாயணத்தில் உண்டு)

அகலிகை! கதவை திற ! என்ற குரல் கேட்டு அகலிகை திடுக்கிட்டு வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தாள்.  கதவை திறந்து பார்த்தால் வாசலில் ஒரு கௌதமரும், உள்ளே ஒரு கௌதமரும் இருப்பதைக்கண்டு விக்கித்து நின்றாள்.  இந்திரன் வேண்டுகோளுக்கேற்ப சந்திரன்  சேவலாய் மாறி கூவியதும் நீராட சென்ற கௌதமர் கொஞ்ச தூரம் சென்றதுதான் இன்னும் பொழுது விடியவில்லை என்பதை உணர்ந்து,  ஏதோ தவறு நடக்க இருக்கிறது என எண்ணி, அவசர அவசரமாக தன் இல்லம் வந்தார் கௌதமர். அங்கு அகலிகையுடன், தன் உருவத்தில் இன்னொருவர் இருப்பதையும் கண்டு நடந்ததை ஞானத்தால் உணர்ந்து கடுங்கோபங்கொண்டு, ஆண்மை தினவெடுத்து எந்த யோனிக்கு ஆசைப்பட்டு அகலிகையுடன் கூடினாயோ,  ஆண்மையற்று அலியாக மாறி,உடலெங்கும் யோனியாய் மாறு என இந்திரனையும், இந்திரனுக்கு உதவிய சந்திரன் உடல் தேய்ந்து பொலிவிழக்கவும் சாபமிட்டார்.  

உனக்கு நான் என்ன குறை வைத்தேன்? எத்தனை மந்திரங்கள் கற்றுக்கொடுத்தேன்? கடைசியில் நீ என்ன செய்துவிட்டாய்! பிரம்மனின் புதல்வியான நீயா ஈரேழு உலகங்களும் போற்றும் கற்புக்கரசி? இனிமேல் அப்படிக் கிடையாது. அற்ப உணர்வுகளுக்குப் பலியாகும் சிற்றின்பக்காரியான நீ, எனக்கு மனைவியாக இருக்கத் தகுதியில்லாதவள். என கடுஞ்சொல் வீசினார் கௌதமர். சுவாமி! என்னை தங்களுக்கு தெரியாதா?! தங்கள் உருக்கொண்டு வந்ததால், தாங்கள்தான் என எண்ணி உடன்பட்டுவிட்டேன் என்று கதறினாள் அகலிகை.  பார்க்கும்  பொருளில் எல்லாம் என் உரு காணும் அளவுக்கு என்மீது பிரேமை கொண்டிருந்தால், எனக்கும் மற்றவனுக்கும் வித்தியாசம் தெரியாதா?!  காமப்பிடியில் மனம் இழந்தாய், மதி இழந்தாய்,  அறுதி இட்டு பிரித்து அரிய விழையவில்லை.. உன் மனமும் அதை நாடியது.. இதுவுமொரு குற்றமே.. ஆகையால் கணவன் யார்?! மாற்றான் யார் என உணராத நீ  எதையும் உணராத கல்லாய் மாறக்கடவது என சாபமிட்டார். 

இந்திரன், சந்திரன், அகலிகை பாவ விமோசனம் வேண்டி நிற்க, உடல் முழுக்க யோனிக்கு பதிலாய் கண்களாய் மாறவும், சந்திரன் சிவனை வேண்டி சாப விமோசனம் பெறவும், ஆயிரம் ஆண்டுகாலம் கழித்து மனிதர்குல மாணிக்கமாய் வரும் ராமரின் கால் தூசு பட்டு (கால் இல்லை.. கால் தூசு பட்டு எனத்தான் சாப விமோசனம் தந்தார். பொண்டாட்டியை அடுத்தவர் தீண்டாம பார்த்துக்கிறாராம்) பெண்ணாய் மாறுவாய் என சாப விமோசனம் தந்தார்.   கோபத்தில் சபித்ததால் கௌதமரின் தவ வலிமை குறைந்தது. அவரும் தவம் செய்ய கிளம்பிவிட்டார்.

தெரிந்தே தவறு செய்த இந்திரன் சுசீந்தரத்தில் வந்து சிவனை வழிபட்டு   தனது சாபத்திலிருந்து விமோசனம் பெற்றான். அவ்வாறே சந்திரனும் சாப விமோசனம் பெற்றான். அவர்கள் இருவரும் தேவர்கள். யாகத்தின் பலனை அளிக்கும் இடத்தில் இருப்பவர்கள். அதனால் சாபத்திலிருந்து தப்பித்தனரோ!! ஆனால் அகலிகையோ சாதாரண மானுடப்பெண். ஆதனால் ஆயிரம் ஆண்டுகள் கல்லாய் கிடந்தாள்.  
Image may contain: 4 people, people standing and outdoor

காலம் உருண்டோடியது. ராமன் அந்த பக்கம் வந்தான். அவனது கால் தூசு பட்டது. மீண்டும் உருக்கொண்டாள். பழைய உருவம் மட்டுமல்லாது, பழைய கற்போடு திரும்பினாள். கௌதமரோடு ராமன் அவளை சேர்பித்துவிட்டு அவ்விடம் அகன்றார். அவளும் அவர் பின்னே நடந்தாள்.. ஆனால்  அவள் மனதில் பல கேள்விகள் அலைமோதியது... உலகிலே ஒப்பற்ற அழகியாய் பிறந்தேன்.. குணத்திலும் சிறிதும் பழுதில்லாமல் வளர்ந்தேன். பார்ப்பவர்கள் அனைவரும் மனையாளாய் ஏற்கும்படி இருந்தாலும், வயதில் மூத்தவரும் பிரம்மச்சரிய கணவனுக்கு தன்னை மணமுடித்தது ஏன்?! மணம் முடித்தபின்னும் தன்னோட ஆசாபாசங்களை கௌதமர் உணர்ந்து நடக்காதது ஏன்?! தன் பழி உணர்ச்சியையும், காமத்தையும் தீர்த்துக்கொள்ள  இந்திரன் கௌதமர் உருக்கொண்டு வந்தது ஏன்?! சகல மந்திரமும் கற்றுன் தேர்ந்திருந்தும் வந்தது கணவன் அல்ல என்பதை உணரமுடியாமல் காமம் என்னை ஆட்கொண்டது ஏன்?! காமத்தின் பிடியில் சிக்கியது என் தவறா?!  கூவியது பொய்ச்சேவல் என்பதை முற்றும் உணர்ந்த முனிவரும், சிறந்த தவசியுமான கௌதமரால் உணரமுடியாத போது தன்னால் எப்படி போலி கௌதமரை உணரமுடியும்?! கொடுத்த சாபத்தினை இந்திரனுக்கு தளர்த்த முன்வந்த கௌதமர் தனக்கு இரங்காதது ஏன்?! அப்படியெனில் ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியா?! தேவர்கள் அறிந்தே எது செய்தாலும் தவறில்லையா?! தெரியாமல் தவறு செய்த மானுடப்பெண்மீது மட்டும் தவறு சொல்வது எப்படி?!  

கைதவறி விழுந்தால் உடைப்பட கற்பு ஒன்றும் மண் சட்டியில்லையே! என பலவாறாய் எண்ணியபடி கௌதமரின் பின்னே மீண்டும் தவ வாழ்க்கைக்கு சென்றாள். அவளின் தவ வலிமையின் பொருட்டு, ராமர்-சீதா திருமணத்தை அகலிகையின் மகனான சதானந்தன் நடத்தி வைக்கும் பாக்கியம் பெற்றாள். ஆனாலும் அவளது கேள்விகளுக்கு இன்றுவரை பதில் இல்லை. உங்களுக்கு தெரிஞ்சா அகலிகையின் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்களேன். 

வெளிச்சத்தின் பின்னே தொடரும்...
நன்றியுடன்,
ராஜி

Sunday, December 03, 2017

ஒரு ஆசிரியரையே சமாளிக்க முடியாது.. 24 ஆசிரியர்களிடம் பாடம் கற்ற மாணவன்...


Bala Swaroopa of Shri Adiguru Dattatreya  (via Shree Kshetra Ganagapur):
சிவன், பிரம்மா, விஷ்ணுவின் அம்சத்தோடு ஒரு பிள்ளை வேண்டுமென அத்ரி, அனுசுயா தம்பதிகள் விரும்பி மும்மூர்த்திகளையும் வேண்டி நின்றனர். இச்சா, கிரியா, ஞான சக்தியாகிய மூன்று சக்திகளுக்கும் அப்பாற்பட்ட நிர்க்குணப்பரம்பொருளை குறிக்கும் பெயரே அத்ரி.. அனுசுயா என்பதற்கு பொறாமை, அசூயை, வெறுப்பு போன்ற தீய குணங்கள் இல்லாதவள்ன்னு பொருள்.. தத்த என்றால் வழங்கப்பட்டது என்று பொருள். சுய லாபமில்லாத தியாகத்தை உணர்த்துது. அத்ரி முனிவரின் மகன் என்பதால் ஆத்ரேயர் என்றும் சேர்ந்து தத்தாத்ரேயர் என்று பேர் வந்துச்சு.
Sadguru Dattatreya, the first guru to take a body.  Usually depicted as the Male Trinity:
இவர் மிக இளம் வயதிலேயே பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வீட்டை விட்டு வெளியேறி, பிரம்ம ஞானத்தை அடைய பல இடங்களை சுற்றி கர்நாடகா மாநிலத்தில் உள்ள கங்காபுரத்தில் பிரம்ம ஞானத்தை அடைந்தார். இவரது பத்தினியின் பெயர் அனகா தேவிஆந்திராவில் அனகா தேவி விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுது.இந்த விரதம்  கணவன் மனைவி ஒற்றுமை பலப்பட அனுஷ்டிக்கப்படுது. வட இந்தியாவில் தத்தாத்ரேயர் விரதம் பரவலாக அனுஷ்டிக்கப்படுது.


Lord Dattatreya Trinity Wallpaper-guru datt-guru-giranar-girnari-parikrama:
இனி தத்தாத்ரேயர் அவதாரம் பற்றி பார்ப்போம்...

Birth of Dattatreya:

மும்மூர்த்திகளே பிள்ளையாய் வரவேண்டி பதிவிரதையான அனுசுயா தவமிருந்ததால் அவளின் வேண்டுதலுக்கு செவிசாய்க்க வேண்டிய கட்டாயத்தில் மும்மூர்த்திகளும் இருந்தனர். இதுக்குறித்து தங்கள் பத்தினிகளான பார்வதிதேவி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோரிடம் ஆலோசித்தனர். பெண்களுக்கே உண்டான பொறாமை குணத்தோடு, அனுசுயா சிறந்த பதிவிரதைதான் என்று நிரூபித்தப்பின் அவள் கேட்கும் வரத்தை கொடுங்கள் என்று கூறினர். அனுசுயாவின் பதிவிரதத்தை நிரூபிக்கும் பொருட்டு அனுசுயா இல்லம் நோக்கி சென்றனர். அப்போது அத்ரி முனிவர் வெளியில் சென்றிருந்தார்.
தங்கள் இல்லம் தேடி வந்தவர்கள் மும்மூர்த்திகள்ன்னு அறியாவிட்டாலும், விருந்தோம்புதல் இல்லாளின் முக்கிய கடமையாதாலால் அவர்களை வரவேற்று ஆசனத்தில் அமர்த்தி அறுசுவை சமைக்க சென்றாள். உணவு சமைத்து, உணவு பரிமாற ஆயத்தம் செய்து  மும்மூர்த்திகளையும் அழைத்து மனையில் அமர்த்தி உணவு பரிமாற சென்றாள். அப்போது, மும்மூர்த்திகளும் அம்மா! நாங்கள் உணவு உட்கொள்ள வேண்டுமெனில் ‘நிர்வாண நிலையில்தான் நீ உணவை பரிமாற வேண்டுமென ‘ கூறினர். அனுசுயா ஒருகணமும் யோசியாமல் தன் கணவனின் கமண்டலத்திலிருந்து நீர் எடுத்து மும்மூர்த்திகளின் மேல் தெளித்து அவர்களை குழந்தையாக்கி உணவூட்டினாள். 
Lord Dattatreya Mantra or Datta Mala Mantra  is a very oowerful beej mantra. You can chant it 108 times for prosperity, goodluck and Blessing of Dutt Guru.:
அனுசுயாவின் கற்பை பரிசோதிக்க சென்ற தங்கள் கணவன்மார்கள் வராததை அறிந்து கலக்கமுற்ற முப்பெரும்தேவியர்கள் அனுசுயா இல்லம் நோக்கி வந்தனர். அங்கு உலக உயிர்களை தங்கள் குழந்தையாய் பாவித்து காக்கும் மும்மூர்த்திகளும் குழந்தையாய் இருப்பதை கண்டு திகைத்து அங்கு நடந்ததை உணர்ந்து, தங்கள் கணவன்மார்களை திருப்பி தருமாறு அனுசுயாவை வேண்டி நின்றனர்.   அனுசுயாவும் மும்மூர்த்திகளையும் முன்போலவே மாற்றி தந்தாள். அனுசுயாவின் கற்பு நெறியை மெச்சி மும்மூர்த்திகளும் அனுசுயாவின் மகனாக தத்தாத்ரேயர் அவதரித்தார்.
Lord Dattatreya Trinity Wallpaper-guru datt-guru-giranar-girnari-parikrama:
மூன்று திருமுகங்கள், ஆறு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார் தத்தாத்ரேயர்.  சிவன் அம்சமாக சூலம், சங்கும், பிரம்மா அம்சமாக கமண்டலமும், துளசி மாலையும், விஷ்ணு அம்சமாக சங்கு சக்கரம் தாங்கி காட்சி தருகிறார். நான்கு வேதங்களும் நாய்களாகவும்,  தர்ம நெறிகளும் பசு உருக்கொண்டு இவர் அருகில் இருக்கின்றது.   தத்தாத்ரேயரை வாங்கினால் ஞானம்,மோட்சம்,நற்குணங்களை பெறலாம்.இவர் மந்திரம் ஞாபக  சக்தியை தரும்.குழந்தை இல்லாதவர்கள் இவரை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுக்கு நினைவாற்றல் கூடும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். வீட்டில் இன்பம் பெருகும்.

இவரை வழிப்பட கடுமையான விரத முறைகள் ஏதுமில்லை. ஒரு மிட்டாய்க்கு தாவி வரும் பிள்ளைப்போல இவரை உள்ளன்போடு நினைத்து காயத்ரி மந்திரத்தை ஜபித்தாலே போதும். நினைத்தது நடக்கும்.
Vedic Astrology - Acharya Priti Bhargava | This blog is in praise of Bhagwan Shiv Shankar : http://www.vedic-astrology.co.in:
ஒருநாள் யது என்ற மன்னன் காட்டிற்கு வேட்டையாட சென்றான். அங்கு , தத்தாத்ரேயர் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தார். அதைக்கண்டு ஆச்சர்யமுற்ற மன்னன், ஐயா! ஒரு குடையின் கீழ் உலகை ஆண்டு பொன், பொருள், அந்தஸ்து, அதிகாரம் இருந்தும் மகிழ்ச்சியற்ற நிலையில் இருக்கின்றேன்.ஆனால், தாங்களோ ஏதுமற்ற நிலையிலும் மகிழ்ச்சியோடு இருக்கிறீர்களே எப்படி?! ஏதுமில்லாமலும் மகிழ்ச்சியாய் இருக்க உங்களை பண்படுத்திய குரு யார்?! என வினவினான். அதற்கு, தத்தாத்ரேயர் மன்னா! எனக்கு மொத்தம் இருபத்தி நான்கு குருக்கள். அவர்களிடமிருந்து கற்ற பாடமே என்னை இப்படி மகிழ்ச்சியுள்ளவனாக ஆக்கியுள்ளது என்றார். 
Lord Dattatreya (Vishnu) is worshipped in a very graceful householder's avatar in addition to the famously known ascetic forms. This very form is called as Anagha Swami, where His consort is called Anagha Devi - She who can make all of us cross this ocean of bondages and Karma. http://www.dycuk.org/newsletters/anaghastami2011.html:
ஐயா! எனக்கு விளங்கவில்லை. ஒருவருக்கு ஒரு குருதானே இருக்க முடியும்?! விதிவிலக்காக சிலருக்கு இரண்டு அல்லது மூன்று குருக்கள் இருக்கலாம். ஆனால், தாங்கள் இருபத்தி நாலு குருக்கள் என்று உரைப்பது ஆச்சர்யத்தையும், சந்தேகத்தையும் அளிக்கின்றது என பணிந்து நின்றான்.
மன்னா! பூமிதான் என் முதல் குரு. அதனிடமிருந்து பொறுமையை கற்றேன். 

தண்ணீரிடமிருந்து தூய்மையை கற்றேன்..

பலரோடு பழகினாலும் பட்டும் படாமலும் இருக்க காற்றிடம் கற்றேன்...

எதிலும் பிரகாசிக்க வேண்டுமென தீயிடம் கற்றேன்..

பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டுமென்பதை ஆகாயத்திடம் கற்றேன்....

மாறுபாடுகள் உடலுக்கே அன்றி ஆன்மாவுக்கல்ல என்பதை சந்திரனிடம் கற்றேன்...

மனம் ஒன்றாக இருந்தாலும் சிந்தனைகள் பலவற்றால் நிறைந்தது என்பதை சூரியனிடம் கற்றேன்...

வேடன் ஒருவனின் வலையில் சிக்கிய தன் குஞ்சு புறாக்களை காக்க தாய் புறாவும் வலிய சென்று வலையில் மாட்டியது. இதன்மூலம் பாசமே துன்பத்திற்கு காரணம் என உணர்ந்தேன்..

எங்கும் அலையாமல் தன்னைத்தேடி வரும் உணவை உட்கொள்ளும் மலைப்பாம்பை போல கிடைத்ததை உண்டு உயிர்வாழ கற்றுகொண்டேன். 

கணக்கில்லா நதிகள் வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் கடலிடமிருந்து துன்பத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை கற்றேன்..

பார்வையை சிதறவிடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்த  விட்டில் பூச்சியிடம் கற்றேன்..

தேனீக்கள் பூக்களிடமிருந்து தேனை எடுப்பது போல துறவி யாசகம் பெற்று ஜீவிக்க வேண்டுமெனவும், அதேநேரத்தில் தேனை சேகரிப்பது போல் உணவை சேகரித்து பின் பறிகொடுக்கவும் கூடாதென  தேனீக்களிடம் கற்றேன்...

 குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையின் மேல் மோகம் கொண்டு போன ஆண் யானையும் குழுக்குள் மாட்டிக்கொண்டதை கண்டு பெண்ணாசை கூடாதென கற்றேன்...

 மானின் வேகம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்ல. ஆனால், இசையை கேட்ட மாத்திரத்தில் ஓடுவதை நிறுத்தி இசையை கேட்க ஆரம்பிக்கும். அந்நேரத்தில் கொடிய விலங்குகள் வந்தால் அதன் கதி!? பிரம்மச்சர்ய விரதம் மேற்கொள்வோர்  இசை, நடனங்களில் நாட்டம் கொள்ளாமல் இருக்கவேண்டுமென மானிடம் கற்றேன்..

 நாவை அடக்க முடியாத சபலத்தால் தூண்டிலில் சிக்கி உயிரிழக்கும் மீனிடம் நாவடக்கத்தை கற்றேன்.... 

 பிங்களா என்ற தாசிப்பெண் ஓரிரவில் பலருடன் சேர்ந்து வருமானம் பார்த்தப்பின்னும் இனியும் யாராவது வரமாட்டார்களா என்று காத்திருந்து ஏமாந்து கிடைத்ததே போதுமென உறங்கிவிட்டாள்.  இதிலிருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்திப்படுமென கற்றேன்...

 குரரம் என்ற பறவை தன் இரையை பெரிய பறவைகளிடமிருந்து தப்புவிக்க கீழே போட்டு தன் உயிரை காப்பாற்ற்க்கொள்ளும். அதன்மூலம் வேண்டும் என்ற ஆவலை தவிர்த்தால் துன்பம் நேராது என்று கற்றேன்...

பாராட்டினாலோ, ஏசினாலோ எந்தவித உணர்ச்சிக்கும் சிறு குழந்தைகள் ஆட்படாது. அதுமாதிரியான உணர்ச்சிவசப்படாத மனம் முனிவனுக்கு வேண்டுமென சிறுவனிடம் கற்றேன். 

 ஒரு சிறுமியின் கைவளையல்கள் ஒன்றோடொன்று உரசி சப்தமெழுப்பின.  அவள் ஒரு வளையலை கழட்டியப்பின் சப்தம் நின்றது. இதிலிருந்து இருவர் மட்டுமே இருந்தாலும் தேவையற்ற விவாதம் எழும் எனவும், தனிமையே சிறந்தது எனவும் கற்றேன்..

போர்   ஆயுதங்கள் செய்பவன் பக்கத்திலே போர் நடந்தாலும் தான் செய்த ஆய்தங்களை எடுத்து செல்லாமல்,  ஆய்தங்கள் செய்வதிலேயே அவன் கவனம் இருக்கும். அவனிடமிருந்து எண்ணத்தை சிதற விடாத தன்மையை கற்றேன்.. 
Anaghashtami Dattatreya is one of the incarnation of Mahavishnu and Mahalakshmi will be worshipped with him in the form Anagha devi. According to Bhavishyottara Purana, Anagha devi and Dattatreya should be worshipped on Margashira Krishna paksha Ashtami.:
பாம்பு தனித்து இருந்தாலும் கவனமாய் இருக்கும். தனக்கென வீடோ, கூடோ கட்டிக்கொள்வதில்லை அதுப்போல முனிவருக்கும் வீடு கூடாதென பாம்பிடம் கற்றேன்..

 தன்னிலிருந்து நூலை வெளியேற்றி வலை பின்னி அதனுடன் விளையாடி, உண்டு, உறங்கி பின் அதையே உணவாக உட்கொள்ளும். அதுப்போல பரபிரம்மமும் உலகை உருவாக்கி, காத்து பின் அதை தன்னுள் ஐக்கியமாக்கி கொள்வார் என உணர்ந்தேன்.

ஒரு வகை வண்டு, தன் முட்டையிலிருந்து புழுவை கொண்டு வந்து தன்னருகில் வைத்து ஒருவித ஆசையை எழுப்பிக்கொண்டே இருக்கும். அந்த சத்தத்துக்கு பயந்து அந்த புழுவும் வெளி செல்ல பயந்து அங்கேயே இருந்து  வண்டாய் மாறும். அதுப்போல மனிதன் பயம், பக்தி, காமம், குரோதமென தன் மனதை எதில் செலுத்துகின்றாறோ அதன் உருவை அடைவர் என உணர்ந்தேன்.... எனக்கூறி முடித்தார்..

யது மன்னனும் தத்தாத்ரேயரின் உபதேசத்தின்படி பதவி, நாடு, மனையாள், பிள்ளைகளை துறந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டான்...
தத்தாத்ரேயருக்கு வட நாட்டிலும், ஆந்திராவிலும் ஏராளமான கோவில்கள் உண்டு. ஆந்திராவில் எல்லார் வீட்டுலயும் தத்தாத்ரேயரின் படங்கள் வைத்து வழிப்படுவர். தமிழகத்தில் தத்தாத்ரேயர் பற்றி அறிந்தோர் சொற்பமே. இவருக்கு சேந்தமங்கலம், சுசீந்தரம் தானுமலையான் கோவில் மற்றும் ஆற்காடு அருகில் உள்ள வாலாஜாபாத் தன்வந்திரி பீடத்திலும் இவருக்கு தனிச்சன்னிதி உண்டு.

இன்று தத்தாத்ரேயர் ஜெயந்தி... அவரை வணங்கி அருள்பெறுவோம். தத்தாத்ரேயர் மூலமந்திரம்...


நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே | 
சர்வ பாத ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே
நன்றியுடன்,
ராஜி

Sunday, May 21, 2017

ஒருவருக்கு 24 ஆசிரியர்களா!? - தத்தாரேயர் ஜெயந்தி


Bala Swaroopa of Shri Adiguru Dattatreya  (via Shree Kshetra Ganagapur):
சிவன், பிரம்மா, விஷ்ணுவின் அம்சத்தோடு ஒரு பிள்ளை வேண்டுமென அத்ரி, அனுசுயா தம்பதிகள் விரும்பி மும்மூர்த்திகளையும் வேண்டி நின்றனர். இச்சா, கிரியா, ஞான சக்தியாகிய மூன்று சக்திகளுக்கும் அப்பாற்பட்ட நிர்க்குணப்பரம்பொருளை குறிக்கும் பெயரே அத்ரி.. அனுசுயா என்பதற்கு பொறாமை, அசூயை, வெறுப்பு போன்ற தீய குணங்கள் இல்லாதவள்ன்னு பொருள்.. தத்த என்றால் வழங்கப்பட்டது என்று பொருள். சுய லாபமில்லாத தியாகத்தை உணர்த்துது. அத்ரி முனிவரின் மகன் என்பதால் ஆத்ரேயர் என்றும் சேர்ந்து தத்தாத்ரேயர் என்று பேர் வந்துச்சு.
Sadguru Dattatreya, the first guru to take a body.  Usually depicted as the Male Trinity:
இவர் மிக இளம் வயதிலேயே பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வீட்டை விட்டு வெளியேறி, பிரம்ம ஞானத்தை அடைய பல இடங்களை சுற்றி கர்நாடகா மாநிலத்தில் உள்ள கங்காபுரத்தில் பிரம்ம ஞானத்தை அடைந்தார். இவரது பத்தினியின் பெயர் அனகா தேவி. ஆந்திராவில் அனகா தேவி விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுது.இந்த விரதம்  கணவன் மனைவி ஒற்றுமை பலப்பட அனுஷ்டிக்கப்படுது. வட இந்தியாவில் தத்தாத்ரேயர் விரதம் பரவலாக அனுஷ்டிக்கப்படுது.


Lord Dattatreya Trinity Wallpaper-guru datt-guru-giranar-girnari-parikrama:
இனி தத்தாத்ரேயர் அவதாரம் பற்றி பார்ப்போம்...

Birth of Dattatreya:

மும்மூர்த்திகளே பிள்ளையாய் வரவேண்டி பதிவிரதையான அனுசுயா தவமிருந்ததால் அவளின் வேண்டுதலுக்கு செவிசாய்க்க வேண்டிய கட்டாயத்தில் மும்மூர்த்திகளும் இருந்தனர். இதுக்குறித்து தங்கள் பத்தினிகளான பார்வதிதேவி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோரிடம் ஆலோசித்தனர். பெண்களுக்கே உண்டான பொறாமை குணத்தோடு, அனுசுயா சிறந்த பதிவிரதைதான் என்று நிரூபித்தப்பின் அவள் கேட்கும் வரத்தை கொடுங்கள் என்று கூறினர். அனுசுயாவின் பதிவிரதத்தை நிரூபிக்கும் பொருட்டு அனுசுயா இல்லம் நோக்கி சென்றனர். அப்போது அத்ரி முனிவர் வெளியில் சென்றிருந்தார்.
தங்கள் இல்லம் தேடி வந்தவர்கள் மும்மூர்த்திகள்ன்னு அறியாவிட்டாலும், விருந்தோம்புதல் இல்லாளின் முக்கிய கடமையாதாலால் அவர்களை வரவேற்று ஆசனத்தில் அமர்த்தி அறுசுவை சமைக்க சென்றாள். உணவு சமைத்து, உணவு பரிமாற ஆயத்தம் செய்து  மும்மூர்த்திகளையும் அழைத்து மனையில் அமர்த்தி உணவு பரிமாற சென்றாள். அப்போது, மும்மூர்த்திகளும் அம்மா! நாங்கள் உணவு உட்கொள்ள வேண்டுமெனில் ‘நிர்வாண நிலையில்தான் நீ உணவை பரிமாற வேண்டுமென ‘ கூறினர். அனுசுயா ஒருகணமும் யோசியாமல் தன் கணவனின் கமண்டலத்திலிருந்து நீர் எடுத்து மும்மூர்த்திகளின் மேல் தெளித்து அவர்களை குழந்தையாக்கி உணவூட்டினாள். 
Lord Dattatreya Mantra or Datta Mala Mantra  is a very oowerful beej mantra. You can chant it 108 times for prosperity, goodluck and Blessing of Dutt Guru.:
அனுசுயாவின் கற்பை பரிசோதிக்க சென்ற தங்கள் கணவன்மார்கள் வராததை அறிந்து கலக்கமுற்ற முப்பெரும்தேவியர்கள் அனுசுயா இல்லம் நோக்கி வந்தனர். அங்கு உலக உயிர்களை தங்கள் குழந்தையாய் பாவித்து காக்கும் மும்மூர்த்திகளும் குழந்தையாய் இருப்பதை கண்டு திகைத்து அங்கு நடந்ததை உணர்ந்து, தங்கள் கணவன்மார்களை திருப்பி தருமாறு அனுசுயாவை வேண்டி நின்றனர்.   அனுசுயாவும் மும்மூர்த்திகளையும் முன்போலவே மாற்றி தந்தாள். அனுசுயாவின் கற்பு நெறியை மெச்சி மும்மூர்த்திகளும் அனுசுயாவின் மகனாக தத்தாத்ரேயர் அவதரித்தார்.
Lord Dattatreya Trinity Wallpaper-guru datt-guru-giranar-girnari-parikrama:
மூன்று திருமுகங்கள், ஆறு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார் தத்தாத்ரேயர்.  சிவன் அம்சமாக சூலம், சங்கும், பிரம்மா அம்சமாக கமண்டலமும், துளசி மாலையும், விஷ்ணு அம்சமாக சங்கு சக்கரம் தாங்கி காட்சி தருகிறார். நான்கு வேதங்களும் நாய்களாகவும்,  தர்ம நெறிகளும் பசு உருக்கொண்டு இவர் அருகில் இருக்கின்றது.   தத்தாத்ரேயரை வாங்கினால் ஞானம்,மோட்சம்,நற்குணங்களை பெறலாம்.இவர் மந்திரம் ஞாபக  சக்தியை தரும்.குழந்தை இல்லாதவர்கள் இவரை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுக்கு நினைவாற்றல் கூடும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். வீட்டில் இன்பம் பெருகும்.

இவரை வழிப்பட கடுமையான விரத முறைகள் ஏதுமில்லை. ஒரு மிட்டாய்க்கு தாவி வரும் பிள்ளைப்போல இவரை உள்ளன்போடு நினைத்து காயத்ரி மந்திரத்தை ஜபித்தாலே போதும். நினைத்தது நடக்கும்.
Vedic Astrology - Acharya Priti Bhargava | This blog is in praise of Bhagwan Shiv Shankar : http://www.vedic-astrology.co.in:
ஒருநாள் யது என்ற மன்னன் காட்டிற்கு வேட்டையாட சென்றான். அங்கு , தத்தாத்ரேயர் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தார். அதைக்கண்டு ஆச்சர்யமுற்ற மன்னன், ஐயா! ஒரு குடையின் கீழ் உலகை ஆண்டு பொன், பொருள், அந்தஸ்து, அதிகாரம் இருந்தும் மகிழ்ச்சியற்ற நிலையில் இருக்கின்றேன்.ஆனால், தாங்களோ ஏதுமற்ற நிலையிலும் மகிழ்ச்சியோடு இருக்கிறீர்களே எப்படி?! ஏதுமில்லாமலும் மகிழ்ச்சியாய் இருக்க உங்களை பண்படுத்திய குரு யார்?! என வினவினான். அதற்கு, தத்தாத்ரேயர் மன்னா! எனக்கு மொத்தம் இருபத்தி நான்கு குருக்கள். அவர்களிடமிருந்து கற்ற பாடமே என்னை இப்படி மகிழ்ச்சியுள்ளவனாக ஆக்கியுள்ளது என்றார். 
Lord Dattatreya (Vishnu) is worshipped in a very graceful householder's avatar in addition to the famously known ascetic forms. This very form is called as Anagha Swami, where His consort is called Anagha Devi - She who can make all of us cross this ocean of bondages and Karma. http://www.dycuk.org/newsletters/anaghastami2011.html:
ஐயா! எனக்கு விளங்கவில்லை. ஒருவருக்கு ஒரு குருதானே இருக்க முடியும்?! விதிவிலக்காக சிலருக்கு இரண்டு அல்லது மூன்று குருக்கள் இருக்கலாம். ஆனால், தாங்கள் இருபத்தி நாலு குருக்கள் என்று உரைப்பது ஆச்சர்யத்தையும், சந்தேகத்தையும் அளிக்கின்றது என பணிந்து நின்றான்.
மன்னா! பூமிதான் என் முதல் குரு. அதனிடமிருந்து பொறுமையை கற்றேன். 

தண்ணீரிடமிருந்து தூய்மையை கற்றேன்..

பலரோடு பழகினாலும் பட்டும் படாமலும் இருக்க காற்றிடம் கற்றேன்...

எதிலும் பிரகாசிக்க வேண்டுமென தீயிடம் கற்றேன்..

பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டுமென்பதை ஆகாயத்திடம் கற்றேன்....

மாறுபாடுகள் உடலுக்கே அன்றி ஆன்மாவுக்கல்ல என்பதை சந்திரனிடம் கற்றேன்...

மனம் ஒன்றாக இருந்தாலும் சிந்தனைகள் பலவற்றால் நிறைந்தது என்பதை சூரியனிடம் கற்றேன்...

வேடன் ஒருவனின் வலையில் சிக்கிய தன் குஞ்சு புறாக்களை காக்க தாய் புறாவும் வலிய சென்று வலையில் மாட்டியது. இதன்மூலம் பாசமே துன்பத்திற்கு காரணம் என உணர்ந்தேன்..

எங்கும் அலையாமல் தன்னைத்தேடி வரும் உணவை உட்கொள்ளும் மலைப்பாம்பை போல கிடைத்ததை உண்டு உயிர்வாழ கற்றுகொண்டேன். 

கணக்கில்லா நதிகள் வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் கடலிடமிருந்து துன்பத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை கற்றேன்..

பார்வையை சிதறவிடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்த  விட்டில் பூச்சியிடம் கற்றேன்..

தேனீக்கள் பூக்களிடமிருந்து தேனை எடுப்பது போல துறவி யாசகம் பெற்று ஜீவிக்க வேண்டுமெனவும், அதேநேரத்தில் தேனை சேகரிப்பது போல் உணவை சேகரித்து பின் பறிகொடுக்கவும் கூடாதென  தேனீக்களிடம் கற்றேன்...

 குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையின் மேல் மோகம் கொண்டு போன ஆண் யானையும் குழுக்குள் மாட்டிக்கொண்டதை கண்டு பெண்ணாசை கூடாதென கற்றேன்...

 மானின் வேகம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்ல. ஆனால், இசையை கேட்ட மாத்திரத்தில் ஓடுவதை நிறுத்தி இசையை கேட்க ஆரம்பிக்கும். அந்நேரத்தில் கொடிய விலங்குகள் வந்தால் அதன் கதி!? பிரம்மச்சர்ய விரதம் மேற்கொள்வோர்  இசை, நடனங்களில் நாட்டம் கொள்ளாமல் இருக்கவேண்டுமென மானிடம் கற்றேன்..

 நாவை அடக்க முடியாத சபலத்தால் தூண்டிலில் சிக்கி உயிரிழக்கும் மீனிடம் நாவடக்கத்தை கற்றேன்.... 

 பிங்களா என்ற தாசிப்பெண் ஓரிரவில் பலருடன் சேர்ந்து வருமானம் பார்த்தப்பின்னும் இனியும் யாராவது வரமாட்டார்களா என்று காத்திருந்து ஏமாந்து கிடைத்ததே போதுமென உறங்கிவிட்டாள்.  இதிலிருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்திப்படுமென கற்றேன்...

 குரரம் என்ற பறவை தன் இரையை பெரிய பறவைகளிடமிருந்து தப்புவிக்க கீழே போட்டு தன் உயிரை காப்பாற்ற்க்கொள்ளும். அதன்மூலம் வேண்டும் என்ற ஆவலை தவிர்த்தால் துன்பம் நேராது என்று கற்றேன்...

பாராட்டினாலோ, ஏசினாலோ எந்தவித உணர்ச்சிக்கும் சிறு குழந்தைகள் ஆட்படாது. அதுமாதிரியான உணர்ச்சிவசப்படாத மனம் முனிவனுக்கு வேண்டுமென சிறுவனிடம் கற்றேன். 

 ஒரு சிறுமியின் கைவளையல்கள் ஒன்றோடொன்று உரசி சப்தமெழுப்பின.  அவள் ஒரு வளையலை கழட்டியப்பின் சப்தம் நின்றது. இதிலிருந்து இருவர் மட்டுமே இருந்தாலும் தேவையற்ற விவாதம் எழும் எனவும், தனிமையே சிறந்தது எனவும் கற்றேன்..

போர்   ஆயுதங்கள் செய்பவன் பக்கத்திலே போர் நடந்தாலும் தான் செய்த ஆய்தங்களை எடுத்து செல்லாமல்,  ஆய்தங்கள் செய்வதிலேயே அவன் கவனம் இருக்கும். அவனிடமிருந்து எண்ணத்தை சிதற விடாத தன்மையை கற்றேன்.. 
Anaghashtami Dattatreya is one of the incarnation of Mahavishnu and Mahalakshmi will be worshipped with him in the form Anagha devi. According to Bhavishyottara Purana, Anagha devi and Dattatreya should be worshipped on Margashira Krishna paksha Ashtami.:
பாம்பு தனித்து இருந்தாலும் கவனமாய் இருக்கும். தனக்கென வீடோ, கூடோ கட்டிக்கொள்வதில்லை அதுப்போல முனிவருக்கும் வீடு கூடாதென பாம்பிடம் கற்றேன்..

 தன்னிலிருந்து நூலை வெளியேற்றி வலை பின்னி அதனுடன் விளையாடி, உண்டு, உறங்கி பின் அதையே உணவாக உட்கொள்ளும். அதுப்போல பரபிரம்மமும் உலகை உருவாக்கி, காத்து பின் அதை தன்னுள் ஐக்கியமாக்கி கொள்வார் என உணர்ந்தேன்.

ஒரு வகை வண்டு, தன் முட்டையிலிருந்து புழுவை கொண்டு வந்து தன்னருகில் வைத்து ஒருவித ஆசையை எழுப்பிக்கொண்டே இருக்கும். அந்த சத்தத்துக்கு பயந்து அந்த புழுவும் வெளி செல்ல பயந்து அங்கேயே இருந்து  வண்டாய் மாறும். அதுப்போல மனிதன் பயம், பக்தி, காமம், குரோதமென தன் மனதை எதில் செலுத்துகின்றாறோ அதன் உருவை அடைவர் என உணர்ந்தேன்.... எனக்கூறி முடித்தார்..

யது மன்னனும் தத்தாத்ரேயரின் உபதேசத்தின்படி பதவி, நாடு, மனையாள், பிள்ளைகளை துறந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டான்...
தத்தாத்ரேயருக்கு வட நாட்டிலும், ஆந்திராவிலும் ஏராளமான கோவில்கள் உண்டு. ஆந்திராவில் எல்லார் வீட்டுலயும் தத்தாத்ரேயரின் படங்கள் வைத்து வழிப்படுவர். தமிழகத்தில் தத்தாத்ரேயர் பற்றி அறிந்தோர் சொற்பமே. இவருக்கு சேந்தமங்கலம், சுசீந்தரம் தானுமலையான் கோவில் மற்றும் ஆற்காடு அருகில் உள்ள வாலாஜாபாத் தன்வந்திரி பீடத்திலும் இவருக்கு தனிச்சன்னிதி உண்டு.
நன்றியுடன்,
ராஜி

Saturday, March 11, 2017

சைவமும், வைணவமும் கொண்டாடும் மாசிமகம்


மகத்தில் பிறந்தால் ஜெகத்தினை ஆளலாம்ன்னு ஒரு பழமொழி உண்டு. மகம் நட்சத்திரத்தில் பிறந்தாலே அச்சிறப்புன்னா அந்நன்னாளில் இறை பக்தியோடு தானங்களை செய்தால்  அதன் நன்மைகளை அளவிட முடியுமா?!  எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும்  மகம் நட்சத்திரத்திற்கென்று தனிச் சிறப்புண்டு... மூலோகத்திலும் செய்யும் பாவங்கள் அனைத்தும் காசிக்கு சென்று கங்கையில் சென்று நீராடினால் போகும்.. அவ்வாறு மக்கள் கழுவிய பாவங்களால் பீடிக்கப்பட்ட கங்கை மற்றும் யமுனை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, நர்மதை, சிந்து, காவேரி  உட்பட பனிரெண்டு நதிகள் கும்பகோணத்திற்கு வந்து புனிதமாகும் நாளே இம்மாசி மகம்.  

பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும்.  கோவில்களில் வெகுவான  திருவிழாக்கள் நடப்பது பௌர்ணமி .. பௌர்ணமி எந்த திதியில் வருதோ அத்திதியை கொண்டே தமிழ்மாத பெயர்கள் அமையும்.  மாசி மாத பௌர்ணமி மகம் நட்சத்திரத்தில் வருவதால் ’மாக மாதம்’ என்றும் அழைக்கப்படுது.  உமாதேவி பிறந்தது மாசி மாதத்தில்...
 பராசக்தியே தன் மகளாய் அவதரிக்கவேண்டும் என சிவப்பெருமானை நோக்கி தவமிருந்தார். அந்த தவத்தின் பயனாய்  மாசிமாத மகம் நட்சத்திரத்தில் தட்சனின் மகளாய் தாட்சாயணி அவதரித்தாள்.மக நட்சத்திற்கு அதிபதி கேது பகவான். இவர் செல்வம்  ஞானம், முக்தியை தருபவர்.

வருண பகவானுக்கு அருளல்...
வருணபகவானைப் பீடித்த பிரமஹத்தி அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது.வருணபகவான் சிறைப்பட்டிருந்ததால் கடும் பஞ்சம் ஏற்பட்டது. நீரின்றி உயிர்களனைத்தும் தவித்தன. வருண பகவானை வேண்டி மக்கள் இறைவனை வேண்ட,  சிறையிலிருந்தே தன்னை விடுவிக்கும்படி வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவனைக் காப்பாற்றினார். அவனை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணபகவான் சிவப்பெருமானிடம், அன்றைய  தினத்தில் புண்ணிய தீர்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருளும்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார்.
பித்ரு கடன் செய்ய...
மக நட்சத்திரத்தை ”பித்ருதேவதா நட்சத்திரம்” என்றும் அழைப்பர். உலகத்தை உருவாக்கும்முன் இந்த பித்ருதேவனை படைத்தப்பின்தான் அனைத்து ஜீவராசிகளையும் இறைவன் படைத்தான்.  இந்த பித்ருதேவாதான் எல்லா உயிர்களுக்கும் ஆத்ம சாந்தியை அருள்கிறது. நம் முன்னோர்கள் ஆத்ம சாந்தியுடன் இருந்தால்தான் நம் குலம் தழைக்கும். இந்நாளில் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை வணங்குவதோடு, பித்ரு கடனையும் செய்யலாம். 

வல்லாள மகாராஜா....
திருவண்ணாமலையை வல்லாளன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் சிறந்த சிவ பக்தன். அவனுக்கு குழந்தையில்லாததால் தனது இறுதிச் சடங்கினை நடத்த சிவனை வேண்டினான். சிவனும் ஒப்புக் கொண்டார். வல்லாளன் மாசி மகத்தன்று இயற்கை எய்தினான். சிவனும் சிறுவனாக வந்து மன்னனின் இறுதிச் சடங்கினைச் செய்து மோட்சத்தை அருளினார். மேலும் மாசி மகத்தன்று நீர்நிலைகளில் புனித நீராடுவோருக்கு மோட்சம் அளிப்பதாகவும் அருளினார்.

சிவப்பெருமானின் திருவிளையாடல்...
பராசக்தி ஒருமுறை  திருவேட்டக்குடி என்ற இடத்தில் மீனவக்குலத்தில் மீனவர் தலைவன் மகளாய் பிறக்க,  திருமணப்பருவம் வந்ததும், அவளை மணக்கவேண்டி, மீனவன் வேடத்தில் சிவப்பெருமான் தோன்றி, கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்கு தொல்லை தந்த  தன்னால் உருவாக்கப்பட்ட ராட்சத திமிங்கலத்தை அடக்கி பார்வதிதேவியை மணந்தார். அப்போது மீனவர் தலைவன் தங்கள் தரிசனம் அடிக்கடி கிடைக்கவேண்டுமென வேண்ட, ஒவ்வொரு மாசிமகத்தன்று நீராட வருவேன் என வாக்கு கொடுத்தார்.  மாசிமகத்தில் திருவேட்டக்குடியில் அம்பிகை மீனவபெண் வடிவத்திலும், ஐயன் வேடமூர்த்தி அலங்காரத்தில் தீர்த்தவாரியில் கலந்து கொள்வர்.

சமுத்திரராஜனுக்கு கொடுத்த வரம்...
தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலை கடைய முற்பட்டபோது மகாலட்சுமி தோன்றினாள். அவளை மகாவிஷ்ணு மணந்து சமுத்திர ராஜனுக்கு மருமகனானார்.  மகா விஷ்ணுவை மருமகனாய் அடைந்த மகிழ்ச்சியைவிட மகளும், மருமகனும் வைகுந்தம் சென்றுவிட்டால் பார்க்க இயலாதே என வருத்தம் கொண்டார் சமுத்திரராஜன்.  தந்தையின் வருத்தத்தினை கணவரிடம் மகாலட்சுமி சொல்ல..... வருடத்திற்கொரு முறை தானே கடற்கரைக்கு வந்து காட்சி தருவதாக சமுத்திரராஜனுக்கு வாக்களித்தார். அவ்வாறு வாக்களித்த தினம் மாசிமகம்.
  
கும்பக்கோணம் மாசிமகம்;
மாசிமகம் பற்றிய பதிவில் கும்பக்கோணத்தை தவிர்க்க முடியுமா?! ஒருசமயம் யுகமொன்று  வெள்ளத்தால் அழிய இருந்தது.  மீண்டும் உயிர்களை படைக்கும்’‘பீஜம்” தாங்கிய அமுத கும்பத்தை வெள்ளத்தில் மிதக்கவிட்டார் பிரம்மா.  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கரை ஒதுங்கிய இடம் கும்பக்கோணம்.  வேடுவன் ரூபத்தில் வந்த சிவப்பெருமானால் அம்பினால் துளைக்கப்பட்டு  கும்பம் உடைந்து உயிர்கள் உருவான  நாள் மாசி மகம். இங்கு எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் கும்பேஸ்வரர் கோவிலே முதன்மையானது. இதன் தீர்த்தமே மகாமக தீர்த்தக்குளம்.

ஒருமுறை அனைத்து புண்ணிய நதிகளும் சிவப்பெருமானிடம் சென்று, மக்கள்  தங்கள் பாவங்கள் தீர எங்களில் மூழ்குவதால் அவர்களின் பாவச்சுமை தங்களை அழுத்தி பாரம் தாங்க இயலவில்லை என முறையிட மாசிமகத்தன்று, கும்பக்கோணத்தில் உள்ள மகா மக குளத்தில் நீராடினால் உங்கள் மீதுள்ள பாவங்கள் போகுமென அருளினார். 
குந்திதேவி பாவம் போக்கிய மாசி மகம்:
கர்ணனை ஆற்றில் விட்ட பாவம் போக குந்திதேவி கண்ணனை வேண்டி நின்றாள். ஒரே நாளில் ஏழு கடலில் நீராடவேண்டும் என சொன்னான். ஒரே நாளில் ஏழு கடலிலா என மலைத்து நின்ற குந்திதேவிக்கு திருநல்லூர் கோவிலின் பின் உள்ள கிணற்றில் உனக்காக ஏழு கடலையும் வரவைக்கிறேன், மாசி மகத்தன்று நீராடு உன் பாவம் போகும்  என அருளினான். அத்தீர்த்தம தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், திருநல்லூர் பஞ்சவர்ணேஷ்வரர் ஆலயத்தில் உள்ள சப்த சாகர தீர்த்தம் ஆகும்.



முருகனுக்கும் உகந்த மாசிமகம்;
ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை முருகன் சிவபெருமானுக்கு சுவாமி மலையில் உபதேசித்ததும் மாசி மகம் நாளில்தான். எனவே, சுவாமிமலை, திருத்தணி , திருச்செந்தூர் முருகன் கோவில்களில் மாசிமகம் திருவிழா பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுது.


இனி விரதமிருக்கும் முறை;
அதிகாலையில்  எழுந்து அருகில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடவேண்டும். அவ்வாறு நீராடும்போது ஒரே ஒரு ஆடையை உடுத்தாமல், மற்றொரு ஆடைய அணிந்து நீராட வேண்டும். புண்ணிய தீர்த்தங்களுக்கு செல்ல இயலாதவர்கள்  குளிக்கும் நீரில் கங்கை உள்ளிட்ட  புண்ணிய தீர்த்தளை ஆவகப்படுத்தி நீராடுதல் நலம். பின்பு உலர்ந்த ஆடைகளை உடுத்தி அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று இறை சிந்தனையுடன் வணங்கி தான தர்மங்கள் செய்ய வேண்டும்.  மதியம் ஒருவேளை மட்டும் உணவுண்டு, இரவு பால் பழம் அருந்தி விரதமிருக்கலாம். தேவாரம், திருவாசத்தையும் படித்தல் வேண்டும்.    வீட்டிலேயே குளிப்பவர்கள் கீழ்க்காணும் பாடலை பாராயாணம் செய்து குளித்தால் புண்ணிய நதிகளில் குளித்த பலன் கிடைக்கும்.
ஏவி, இடர்க்கடல் இடைப் பட்டு இளைக்கின்றேனை

            இப் பிறவி அறுத்து ஏற வாங்கி, ஆங்கே 

கூவி, அமருலகு அனைத்தும் உருவிப் போக,

   குறியில் அறுகுணத்து ஆண்டு கொண்டார் போலும் 

தாவி முதல் காவிரி, நல் யமுனை, கங்கை, சரசுவதி,

                பொற்றாமரைப் புட்கரணி, தெண்நீர்க் 
கோவியொடு, குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தைக்
                   கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.


மாசிமகத்தன்று அதிகாலையில் நீராடி துளசியால் அர்ச்சித்தால் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.  குங்குமத்தால் அம்பிகையை அர்ச்சித்தால் இன்பமும், வெற்றியும் கிட்டும். சரஸ்வதி தேவியை நறுமண மலர்களால் அர்ச்சித்தி வழிப்பட கல்வியில் சிறப்புற்று விளங்கலாம்.

இப்படி சைவமும், வைணவமும்.. வடநாடும், தென்னாடும் கொண்டாடும் சிறப்புவாந்த மாசிமகம் இன்று... இறைவனை வழிப்படுவதோடு தன்னால் இயன்ற தர்மங்களை செய்து இறைவன் அருள் பெறுவோம்.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும்வரை...
நன்றியுடன்,
ராஜி.