Showing posts with label ராஜா. Show all posts
Showing posts with label ராஜா. Show all posts

Saturday, August 03, 2013

பழையச்சோறும், சின்ன வெங்காயமும் - பாட்டி சொன்ன கதை



சீனு சாப்பிட்டியா?! ப்ரீத்தி நீ சாப்பிட்டியா?!!

ம்ம் நான் சாப்பித்தேன் பாத்தி. நம்ம சீனுதான் சாப்பிதலை!!

அப்படியா!! ஏன் சீனு சாப்பிடலை?!

நேத்து நைட் அப்பா வெளில சாப்பிட்டு வந்ததால சாதம் மீந்துட்டுது. நைட் அதுல தண்ணி ஊத்தி வச்சுட்டா அம்மா.  இட்லி சாப்பிடுறதுக்கு முன்னாடி என்னை ஒரு டம்ப்ளர்  சாப்பிட சொன்னா. நான் மாட்டேன்னு சொன்னதால, பழைய சாதம் கொஞ்சமாவது சாப்பிட்டாதான் இட்லி போடுவேன்னு சொல்லிட்டா. அதான் வேணாம்ன்னு சொல்லி சாப்பிடாம இருக்கேன்.

சீனு இது தப்பில்லையா?! சாதம் வேஸ்டாகிடக்கூடாதுன்னு உன் அம்மா நினைக்குறதுல என்ன தப்பு?!

போ பாட்டி, நீயும் அம்மா கூட சேர்ந்துக்கிட்டே. அதெல்லாம் புவர் பீப்பிள்ஸ்தான் சாப்பிடுவாங்க. அதில்லாம அது ஒரு மாதிரி புளிச்ச வாடை வீசுது!!

அபடிலாம் சொல்ல கூடாது சீனு. முதல் நாள் செஞ்ச சாதத்துல தண்ணி ஊத்தி வெச்சுட்டு மறுநாள் நாம சாப்பிடும் இந்த பழைய சாதத்தில்  வைட்டமின்பி6 பி12 இருக்குன்னு அமெரிக்க டாக்டர்கள் ஆராய்ச்சிலாம் பண்ணி சொல்லி இருக்காங்க. குறிப்பா நம்ம உடம்புல இருக்குற  சிறுகுடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ் அதிகமாகி நம்மளோட  உணவுப் பாதையை ஆரோக்கியமா வெச்சிருக்க உதவுதாம்

ம் ம் ம்  அப்புறம் பாட்டி!!

பொதுவா கிராமத்துல பழைய  கஞ்சி சாப்பிடும்போது கஞ்சியுடன் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவது தான் பழக்கம். சிறிய வெங்காயத்தை சேர்த்து சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதால் வைரஸ் காய்ச்சல் ன்னு எந்த காய்ச்சலும் நம்மை அண்டாதாம். அதுமட்டுமில்லாம ராத்திரி நேரத்துல சாதத்துல தண்ணி ஊத்தி வைக்குறதால அதிகமா நல்லது செய்ய்ற பேக்டீரியா உருவாகுதாம். இதை காலைல சாப்பிட்டா உடம்பு சூட்டை தணிச்சு, குடல் புண், வயிற்று வலிலாம் இல்லாம உடம்பை சுறுசுறுப்பா வச்சிருக்குதாம். இதுல இருக்குற  நார்ச்சத்து, மலச்சிக்கல், பிரச்சனைகளை தீர்த்து உடலை வேலை செய்ய வைக்குதாம்.

சாதம் சூடா இருக்கும்போது தண்ணி ஊத்திட்டா காலைல பழைய சாதம் சொதசொதன்னு இருக்கும். அதனால, சாதம் ஆறி இருக்கனும். சாதம் வடிச்ச தண்ணி ஒரு பாகம், பச்சை தண்ணி 3 பாகம்ன்னு உப்பு போட்டு கலந்து ஆறின சாதத்துல ஊத்தி வெச்சுட்டு காலைல கொஞ்சம் தயிர்  கலந்து சின்ன வெங்காயம் இல்லாட்டி ஊறுகாய் தொட்டுக்கிட்டு சாப்பிட்டா உடலுக்கும் நல்லது சுவையும் அலாதிதான். இனி நீயும் சாப்பிட பழகிக்க சீனு.

சரி பாட்டி!! இவ்வளவு விசயம் இருக்கா!! இத்தனை நாள் தெரியாம போச்சே!! இனி நான் சமர்த்தா சாப்பிட்டுடுவேன். சரி சரி,  நீ கதையை சொல்லு. கேட்டுட்டு போய் பழைய சாதம் சாப்பிடுறேன்.


ஒரு ஊருல ஒரு பெரிய ஆலமரம் இருந்துச்சு. அதுல ஒரு ஆண் காகமும், அதோட பெண் காமும், அதன் குட்டிகளும் ரொம்ப மகிழ்ச்சியா வாழ்ந்து வந்துச்சு.

அந்த ஆலமரத்தடியில ஒரு மரப்பொந்து இருந்துச்சு. அதுல ஒரு கருநாக பாம்பும் வந்து சேர்ந்துச்சு. பெண்காகம் தன் கூட்டில் முட்டையிட்டு அடைக்காக்கும். ஆண் காகம்  இரை தேடி வர எங்காவது பறந்து போய் வரும். கூட்டுக்கு தேவையான குச்சிகளை பொறுக்க பெண்காகம் எங்காவது போய் வரும்போது அந்த கருநாகம் மரத்து மேலேறி காக்கா குஞ்சுகளை தின்னுடும்.

ஐயையோ!! பாவம் பாட்டி, அந்த அப்பா, அம்மா குரோஸ் வந்து பாப்பா குரோஸ் இல்லாம வருத்தப்படுமே!!

ஆமா சீனு, கூட்டுக்கு திரும்பி வந்து பார்க்கும்போது தன் குழந்தைகளை காணாம ரொம்ப வருத்தப்படும். இதுமாதிரி ஒருமுறை, இருமுறை இல்லாம பலமுறை நடந்துச்சு.  ஆனாலும் யார் காரணம்ன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்துச்சு. அந்த பக்கமா வந்த நரியண்ணாதான் அந்த காகங்கள்கிட்ட இதுக்கு காரணம் அந்த பாம்புதான்ன்னு சொல்லி புரிய வச்சுது.

தன் குழந்தைகளை தொடர்ந்து அந்த பாம்புக்கு இரை கொடுக்க மனசில்லாத அந்த பெண் காகம், நரியண்ணா! நாம போய் அந்த பாம்புக்கிட்ட போய்  பேசி பார்க்கலாமா?!ன்னு கேட்டது.

ஏம்மா! உனக்கு அறிவிருக்கா?! அது கொடிய ஜந்து அதுக்கிட்ட போய் பேசி பார்க்கலாம்ன்னு சொல்றியே!!  அது நம்மையும் சாவடிச்சு சாப்பிட்டா என்ன பண்ணுவே!! கொஞ்சம் பொறு. எதாவது ஐடியா தோணும். அதுப்படி செய்யலாம்ன்னு  சொல்லுச்சு நரியண்ணா!

அப்போ,  எதோ மனுசங்க கூட்டமா வரும் சத்தம் கேட்டுச்சு. என்னன்னு பார்த்து வர சொல்லி ஆண் காகத்தை அனுப்பிச்சுது நரி,  பார்த்துட்டு வந்த காகம், நரியண்ணே! பக்கத்து நாட்டை ஆளும் ராஜா தன் ராணியோடு ரெஸ்ட் எடுக்க நம்ம காட்டுக்கு வந்திட்டிருக்கார் அதான் சத்தம்ன்னு சொல்லிச்சு.

என்னது?! ராஜா ரெஸ்ட் எடுக்க காட்டுக்கு போறாரா?! ஏன் பாட்டி?!

இப்போ நம்ம  நாட்டு பிரதமர், கவர்னர், மந்திரிங்கலாம் பொருளாதாரம், போர், உள்நாட்டு விவகாரம், வெள்நாட்டு விவகாரம்லாம் கவனிச்சு மண்டை காய்ஞ்சு போய் வெளிநாட்டுக்கு சுத்து பயணம் போறாங்கல. அதுப்போல ராஜா காட்டுக்கு போறார்.

ஓ புரிஞ்சுது பாட்டி!!

நரியண்ணாவுக்கு ஒரு ஐடியா தோணுச்சு. அதை ஆண்காகத்துக்கிட்ட சொல்லிச்சு.

ஒரு நாள்,

ராணி வழக்கமா குளிக்குற ஆத்தங்கரையோரம்  இருக்குற மரத்துல போய் உக்காந்துக்கிட்டு அரசி வர்றதுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்துச்சு காகம்...,

கொஞ்ச நேரத்துல குளிக்க தன் தோழிகளோடு வந்தாங்க ராணி, தான் போட்டுக்கிட்டு இருந்த காஸ்ட்லி ஜுவல்ஸ்லாம் கழட்டி கரையில வச்சுட்டு குளிக்குறதுக்காக ஆத்துல இறங்குனாங்க.

இதுதான் சமயம்ன்னு காகம் ஒரு முத்து மாலையை தூக்கிட்டு மெதுவா பறக்க ஆரம்பிச்சது.

ம்க்கும் போ பாட்டி!! காகத்துக்கு எதுக்கு முத்து மாலை. அப்படியே எடுத்தாலும் வேகமா பறந்தாதானே  சோல்ஜர்கிட்ட பிடிபடாம தப்பிக்க முடியும்!!??

தேய் சீனு,   அந்த நரி பண்ணுன பிளான் இதெல்லாம்!! என்ன நடக்க போகுதுன்னு பாத்தி சொல்லத்தும். நீ குறுக்க புகுராதே!! பாத்தி நீ சொல்லு...,

ப்ரீத்தி தான் குட், சமர்த்தா கதை கேக்குறா. நீ அவசரக்குடுக்கடா சீனு!! இதை பார்த்த ராணி தன் முத்து மாலையை காகம் தூக்கிட்டு போய்டுச்சுன்னு கத்துறா. அதை கேட்டு  காவல் காக்குறவங்கலாம் அந்த காகத்தை துரத்திக்கிட்டு ஓடுறாங்க.

காகம் பறந்து போய் தன் கூடு இருக்கும் ஆலமரத்து பொந்துல அதான் அந்த பாம்பு இருக்குற பொந்துல அந்த முத்து மாலையை போட்டுட்டுது.

ம்ம் இப்போ புரிஞ்சு போச்சு பாட்டி ஐடியா!! அந்த முத்துமாலையை எடுக்குறதுக்காக அந்த பொந்துல செர்ச் பண்ணுவாங்க, அப்போ அந்த பாம்பு மாட்டிக்கிட்டு சாகும் அதானே நரியோட பிளான்.

ஆமா சீனு, முத்துமாலையை எடுக்க மரப்பொந்துக்குள்ள கையை விடும்போது கருநாகம் சீறிக்கிட்டு வந்துச்சு. அதை பார்த்த வீரர்கள் அந்த பாம்பை அடிச்சு கொண்ணுட்டு  அந்த முத்து மாலையை கொண்டு போய் ராணிக்கிட்ட கொடுத்தாங்க,

அதுக்கப்புறம், பெண் காகம் முட்டையிட்டு அடைக்காத்து 4 அழகான  காகக்குஞ்சுகள் வெளிவந்துச்சு. அதை பார்க்க வந்த நரியண்ணாவுக்கு நன்றி சொல்லி  ஆண் காகமும், பெண் காகமும் ரொம்ப சந்தோசமா தன் குழந்தைகளோடு வாழ்ந்துச்சு. இதுல இருந்து என்ன தெரிஞ்சது சீனு?!

அடுத்தவங்களுக்கு தீமை செஞ்சா நமக்கு தீமைதான் விளையும்ன்னு புரிஞ்சுது பாட்டி.

ம்ம்ம் குட் சீனு. கதையோட அர்த்தத்தை நல்லா புரிஞ்சுக்கிட்டே சீனு.

சரி பாட்டி நான் போய் பழைய கஞ்சி குடிச்சுட்டு ஹோம் வொர்க் செய்யுறேன். பை பாட்டி.

பை சீனு!! பை பிரீத்தி!!

Saturday, July 06, 2013

நட்பிற்கு ஏது எல்லைக்கோடு??!! - பாட்டி சொன்ன கதை


பாத்த்த்த்த்தீ!

வாடி தங்கம். ஹோம் வொர்க்லாம் முடிச்சுட்டியா?

ம்ம்ம் முதித்தேன் பாத்தி. 

சீனு எங்கே?!

அம்மா! கிச்சன்ல வச்சிருந்த ஹனியை சாப்பித்து, தலையில் ததவிக்கித்தானாம். அவன் முதிலாம் வெள்ளையாக போகுதுன்னு அழுறான் பாத்தி.

அச்சச்சோ! அப்படிலாம் ஒண்ணும் கிடையாது. அது யாரோ சும்மா லுல்லாயிக்கு சொன்னது. அதை உண்மைன்னு நம்பிட்டானா?! சீனு! சீனு! இங்க வா! அழாத. நீ நினைக்குற மாதிரிலாம் எதும் நடக்காது. ஹனி  உடம்புக்கு நல்லதுடா.

அப்படியா! எனக்கு முடி நரைக்காதே!?

ம்ஹ்ஹூம், ஹனிக்கு தமிழ்ல ”தேன்”ன்னு பேரு. அது, எவ்வளாவு சாப்பிட்டாலும், எப்போ சாப்பிட்டாலும் ஈசியா டைஜஸ்ட் ஆகிடும். அதனாலதான் அந்த காலத்துல மருந்தை தேன்ல கலந்து குடுத்தாங்க.

"Honey Bee"க்கு தமிழ்ல ”தேனீ”ன்னு பேரு. இந்த தேனீதான், பறந்து போய் ப்வுல இருந்து தேனை எடுத்து வரும். எந்த செடியோட பூவில இருந்து தேன் எடுக்குதோ?! அந்த செடியில இருக்குற சத்துலாம் அந்த தேன் ல இருக்கும்ன்னு சொல்றங்க.

கொம்பு தேன்,  மலைத்தேன்,  மரப்பொந்து தேன்,. மலைத்தேன், . புற்றுத்தேன்,  புதிய தேன்,  பழைய தேன்”ன்னு பல வகைல கிடைக்குது. தேன் எவ்வளவு வருசமானாலும் கெடாது. அதனாலதான் அதை, பூஜைக்கும், மருந்தைக் கரைக்கவும் யூஸ் பண்றாங்க.நீங்க பொறந்ததும், பேரு வைக்குர ஃபங்க்‌ஷன் போது உங்க நாக்குல தேன் தடவுனாங்க. அதனால, நாக்குல இருக்குற ஒரு நரம்பு தூண்டி சீக்கிரமே உங்களுக்கு பேச்சு வந்துடுச்சு.

ஓ! இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா பாட்டி. இது தெரியாம அழுதிட்டேனே! சரி நீ கதை சொல்லு பாட்டி...  

                               

ம்ம்ம்ம்ம்..., ஒரு ஊருல ஒரு ராஜாவாம். அந்த ராஜாவோட பேலஸ்ல ஒரு பட்டத்து யானை இருந்துச்சாம். 

”பட்டத்து யானை”ன்னா என்ன பாட்டி?!

அதாவது,  ராஜாவும், ராணியும் ஏறி சுத்தி பார்க்க போறதுக்குன்னு தனியா ஒரு யானையை பேலஸ்ல வளார்ப்பாங்க. ராஜாவுக்கு தர்ற அதே மரியாதையை அந்த யானைக்கும் குடுப்பாங்க. அரண்மனைல இருந்ததால நல்ல கவனிச்சுப்பாங்க அந்த யானையை, சத்தான சாப்பாடு, உடம்புக்கு முடியலைன்னா டாக்டர்ன்னு இருக்கு. அப்படி இருந்ததால, அந்த பட்டத்து யானை நல்லா பெரிய தந்தத்தோட, நல்லா கொழுத்து அழகா, கம்பீரமா இருந்துச்சு. அதுமேல போறதை பெருமையா நினைச்சுப்பான் அந்த ராஜா. 

அந்த யானையை கட்டிப்போடுற லாயத்துல ஒரு நாய் ஒண்ணு வந்திட்டுது. சரியா சாப்பாடு கிடைக்காம அது எலும்பும் தோலுமா இருந்துச்சு. யானை சாப்பிடும்போது, சிந்துனது சிதறுனதுலாம் சாப்பிட்டு பசியாறுச்சு.அதை பார்த்து இரக்கப்பட்ட யானை, நிறைய சாப்பாட்டை கீழ சிந்த ஆரம்பிச்சுது. அந்த நாயும் அதைலாம் சாப்பிட்டு நல்லா கொழுகொழுன்னு வர ஆரம்பிச்சுட்டுது.  

ரெண்டும் திக் ஃப்ரெண்ட்ஸ் ஆனாங்க. அரண்மனை சாப்பாடு சாப்பிட்டதால நல்லா கொழுக் மொழுக்ன்னு அழகா மாறிடுச்சு அந்த நாய். அரண்மனைக்கு ஏதோ வேலையா வந்த பெரிய பணக்காரன் ஒருத்தன் இந்த நாயை பார்த்து ஆசைப்பட்டு பாகன்கிட்ட, என் பசங்க வளர்க்க நாய் வேணும்ன்னு ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த  நாய் நல்லா இருக்கு. அதனால, அதை எனக்கு குடு. உனக்கு பணம் தரேன். ப்ளீஸ்ன்னு கேட்டான். பணத்துக்கு ஆசைப்பட்ட பாகன் அந்த நாயை குடுத்துட்டான். 

தன் ஃப்ரெண்டை மிஸ் பண்ணிட்ட யானை, அன்னில இருந்து சாப்பிடல, சரியா தூங்கலை. எப்பவும் அழுதுக்கிட்டே இருந்துச்சு. இப்படியே நாட்கள் போச்சு. மெல்ல மெல்ல யானை இளைச்சு, படுத்த படுக்கையா போச்சு.

ஐயோ பாவம் அந்த யானை பாத்தி.

ஆமாண்டி செல்லம். இதை கேள்விப்பட்ட ராஜா அரண்மனைல இருக்குற டாக்டர்களை வரச்சொல்லி யானைக்கு ட்ரீட்மெண்ட் பார்த்தார். ராஜா! யானைக்கு எந்த நோயும் இல்ல. ஏன் இப்படி இருக்குன்னு தெரியலை. எப்பவும், கூடவே இருக்குற பாகன்கிட்ட கேளுங்க. அவனுக்குதான் என்னன்னு தெரியும்ன்னு சொல்லிட்டாங்க..

ராஜா யானைப்பாகனை வரவச்சு, என்ன நடந்ததுன்னு உண்மையை சொல்லுன்னு மிரட்டுனாரு. வேற வழியில்லாம அவன், ராஜா1 இங்க ஒரு நாய் சுத்திக்கிட்டு இருந்துச்சு. அதோடதான் நம்ம பட்டத்து யானை வெளையாடும், சாப்பிடும் . தூங்கௌம். அந்த நாயை பணத்துக்கு ஆசைப்பட்டு வித்துட்டேன். என்னை மன்னிச்சிடுங்கன்னு சொல்லி அழுதான்/

அந்த நாயை வாங்கி வரச் சொல்லி ஆட்களை அனுப்பினான் ராஜா.  நாயை கொண்டு வந்ததும் யானைக்கிட்ட கொண்டு போனான் ராஜா. யானைக்கிட்ட மெல்ல அசைவு வந்திச்சு.

ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய், யானை நல்லாகிடுமா பாட்டி?!

தன் தும்பிக்கையால நாயை தடவுச்சு யானை. ரெண்டுத்து கண்ணுலயும் தண்ணி கொட்டுச்சு. வாயில்லா ஜீவன்களாச்சே! தன்னோட ஃபீலிங்க்ஸை எப்படி சொல்லும்?! 

இதை பார்த்த எல்லாரும் வாயடைச்சு போய் நின்னுட்டாங்க. விலங்குகளுக்குள் இப்படி ஒரு நட்பா?! இனி நாயை, எக்காரணம் கொண்டும் யானைக்கிட்ட பிரிக்க கூடாதுன்னு சொல்லிட்டு , இனி பட்டத்து யானை பழைய மாதிரி அழகா, கம்பீரமா மாறிடும்ன்னு நம்பிக்கையோட அரண்மனைக்குள் போனார்.

இதிலிருந்து நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது. தூய நட்புக்கு இனம், மொழி, உருவம், அந்தஸ்துன்னு எதும் தேவை இல்லை. நட்புக்கு எந்த எல்லைக்கோடும் இல்லை. மனசுல அன்பிருந்தா ஒரு கிளிக்கிட்டயோ இல்ல ஒரு ஆட்டுக்குட்டி கூட நீங்க ஃப்ரெண்டா இருக்கலாம். 

புரிஞ்சுது பாட்டி, நாங்க போ டிவி பார்க்க போறோம். பை பாட்டி!

ரொம்ப நேரம் டிவி பார்க்காம சமர்த்தா சாப்பிட்டு, கொஞ்சம் வாக் போய்ட்டு படுங்க. 

ஓக்கே பாத்தி. பை! பை!