Showing posts with label வைட்டமின். Show all posts
Showing posts with label வைட்டமின். Show all posts

Saturday, August 24, 2013

கடன் வாங்கிய நெய் - பாட்டி சொன்ன கதை

சின்ன குட்டி பாப்பா! வா! வா! 

இந்தா பாத்தி ஆரஞ்சு பழம். அம்மா கொதுக்க சொன்னாங்க.

எனக்கு வேணாம் ப்ரீத்திக்குட்டி. 

ஏன் பாத்தி?!

அது புளிக்கும்டா செல்லம்!! 

பாட்டி ஆரஞ்சு பழத்துல எவ்வளவு நல்ல விசயம்லாம் இருக்கு தெரியுமா?! வயசுல பெரியவங்கள இருந்துக்கிட்டு சின்ன புள்ளைக போல புளிக்கும் வேணாம்ன்னு பாப்பாக்கிட்ட சொல்றீங்களே! இட்ஸ் டூ பேட்!!

வாப்பா சீனு, வா. அப்படி என்னதான் இருக்கு அந்த பழத்துல?! வைட்டமி சி மட்டும்தான் இருக்கு அதுல.

ம்க்கும் உனக்கு தெரிஞ்சது அவ்வளவுதானா?! என் புத்தகத்துல ஆரஞ்சு பழத்தை பத்தி வந்திருக்கு. நான் படிச்சதை உனக்கு சொல்றேன் கேளுங்க!

சரிங்க சார்! சொல்லுங்க சார் கேட்டுக்குறேன்!!

கிண்டல் பண்ணாதே பாட்டி!!ஆரஞ்டு பழத்துல அதிகமான மருத்துவ குணம்லாம் இருக்காம்!! அதனால, இது உடம்புக்கு நல்லதுன்னு சயின்டிஸ்ட்லாம் சொல்றாங்க!! உடம்புல என்ன பிரப்ளம்ன்னாலும் ஆரஞ்சு பழத்தை சாறு பிழிஞ்சு குடிக்கலாம். அதனாலதான், ஹாஸ்பிட்டல்ல இருக்குறவங்களை பார்க்க போகும்போது ஆரஞ்சு பழத்தை வாங்கிட்டு போறாங்க. இதனால, ஆரஞ்சு ஜூஸ் குடிச்சா உடம்புல இருக்கும் ஹீட், வயத்து வலி இல்லாட்டி வயறு சமந்தமான பிராப்ளம்னாலும் சரியாகுதாம். 

இதுல இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். இதனால, எப்பவும் யூத்தா இருக்கலாம். இதுல  ஏ, பி, சி ஆகிய வைட்டமின்களும், ஏழு வகையான தாதுக்களும்இருக்குறதால ப்ரெக்னெண்ட் லேடீசும், சில்ட்ரன்சும் சாப்பிடனும்.

இதில்லாம, ஆரஞ்சு பழத்தை வெட்டி ஃபேஸ்ல தேச்சு டென் மினிட்ஸ் கழிச்சு கழுவினா ஃபேஸ் சாஃப்டாவும், பிரைட்டாவும் இருக்கும். டெய்லியும் ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டு வந்தா டைஜிஸ்ட் பார்ட்லாம் நல்லா வேலை செய்யுமாம்! கூடவே கோல்ட், ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண், நெஞ்சுவலி, இதய நோய், எலும்பு மெலிவு லாம் கூட குணமாகுதாம்! இதை போயி வேணாங்குறியே பாட்டி!!

சரிடா பேராண்டி!! இனி சாப்பிடுறேன் போதுமா?! சரி வாங்க கதை சொல்றேன்!! எனக்கு நிறைய வேலை இருக்கு.

என்ன வேலை பாட்டி?!

அடுத்த வாரம் சென்னை போறேண்டப்பா!! அங்க நெட்டுல பிளாக்குன்னு ஒண்ணு இருக்கு. அதுல எழுதுறவங்கலாம் மீட் பண்ண போறோம்!!


அட, அதான் அம்மாவும், அத்தையும் கூட ரெடியாகிட்டு இருக்காங்களா?!

ம்ம்ம்ம்ம்ம் சரி கதைக்கு போலாமா?!


ஓர் ஊருல ரெண்டு விவசாய பொண்ணுங்க இருந்தாங்க.   அவங்க ரெண்டு பேர் வீடும் எதிர் எதிர்க்க. அதுல ஒருத்தி பேரு யசோதை, இன்னொருத்தி பேரு துர்கா.

யசோதைகிட்ட நிறையப் பசுக்கள் இருந்துச்சு. துர்காவிகிட்டகொஞ்சம் மாடுங்கதான் இருந்துச்சு. ரெண்டு பேரும் பால், மோர், தயிர், நெய் வித்து காசாக்கி வாழ்ந்து வந்தாங்க.  யசோதை ஊதாரித்தனமாச் செலவுகள் செய்றவ. ஆனா, துர்காவோ சிக்கனமானவ.

ஒரு நாள் யசோதை வீட்டுக்கு நிறைய கெஸ்ட் வந்துட்டாங்க. அவங்களுக்கு விருந்து வைக்கப் பலகாரங்கள் செய்ய போதுமான அளவு நெய் அவக்கிட்ட இல்ல. அதனால, எதிர் வீட்டு துர்காவிடம் போய் ஒருபடி நெய் கடன் வாங்கி வந்தா. ரொம்ப நாளகியும் நெய்யை யசோதை திருப்பி தந்த பாடில்லை. அதனால, ஒரு நாள் துர்கா, யசோதை வீட்டுக்கு போய் நெய்யைக் கொடுன்னு கேட்டா.

அதுக்கு யசோதை,  உன்கிட்ட நான் எப்போ நெய் வாங்கினேன்? ஏன் இப்படி பொய் சொல்லுறேன்னு கேட்டா.

இப்படி ஒரு பதில எதிர்பாராத துர்கா ஷாக்காகிட்டா.  தனக்கு வர வேண்டிய  நெய் போனாலும் பரவாயில்லை,  இந்த துரோகத்தை நான் வெளிப்படுத்தாம  விடக் கூடாதுன்னு அந்த ஊரு பெரிய மனுஷனான மரியாதை ராமனிடம் போய் கம்ப்ளெயிண்ட் பண்ணாள்.

இந்த வழக்கைக் கேட்ட மரியாதை ராமன் இருவரின் நடவடிக்கைகளையும் கொஞ்சம் நோட்டம் போடன்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு ஒரு காரியம் செய்தான். ஓர் ஆழம் இல்லாத பள்ளம் வெட்டி அதில் சேரும் சகதியும் உண்டாக்கச் செஞ்சான். கூடவே, ரெண்டு கிளிஞ்சல்களும், ரெண்டு சொம்புகள் நிறைய தண்ணீரும் பள்ளத்துக்கு கிட்ட வைக்கச் சொன்னார்.

முதலில் யசோதையையும், ரெண்டாவது துர்காவையும் சேற்றில் இறங்கி நடந்து வந்து, சொம்பிலிருக்குற தண்ணியால காலைக் கழுவி வரச் சொன்னார். முதலில் யசோதை சேற்றில் வேகமா நடந்து வந்து பின் செம்பிலுள்ள தண்ணியால காலைக் கழுவினாள்.கால்ல இருந்த சேறும் சரியா போகலை. சொம்பு தண்ணி மொத்தத்தையும் காலியும் பண்ணிட்டா.

அடுத்து துர்கா சேற்றில் இறங்கி மெதுவா நடந்தா. கரைக்கு வந்ததும் கிளிஞ்சலால் காலிலுள்ள சேறைச் சுத்தமாக்கிட்டு, சொம்பிலுந்த தண்ணியால காலை கழுவினா. காலும் சுத்தமாச்சு. சொம்புலயும் கொஞ்சம் தண்ணி மிச்சம் இருந்துச்சு!! 

சேத்துல இறங்கி காலை கழுவுறதுக்கும், கடன் வாங்குன நெய்யுக்கும் என்ன சம்பந்தம் பாட்டி?! இப்படில்லாம் பேசிட்டு இருந்தா டைம்தான் வேஸ்ட் ஆகும்.

அப்படி இல்லை சீனு, தவறிக்கூட தப்பான தீர்ப்பை சொல்லக்கூடாதுன்னு தான் இப்படிலாம் டெஸ்ட் வச்சு தெரிஞ்சுக்கிட்டாங்க அந்த காலத்து மனுசங்க.  இனி கதைக்கு போலாம்.

 மரியாதை ராமன், யசோதையை கூப்பிட்டு அவள் கருத்தைக் கேட்டார்.  என்கிட்ட நிறையப் பசு இருக்கு. எனக்கு பாலும், வெண்ணையும்,நெய்யும் நிறைய கிடைக்குது. அப்படி இருக்கும்போது என்னைவிட கம்மியான பசு வச்சிருக்குற துர்காகிட்ட நெய் வாங்க வேண்டிய அவசியமென்ன?!

 நெய்யுக்கும், என்னை அவமானப்படுத்தனும்னுதான் துர்கா இப்படிலாம் சொல்றான்னு சொன்னா யசோதை. இதயெல்லாம் பொறுமையாக் கேட்ட மரியாதை ராமன் தன் தீர்ப்பைச் சொல்ல ஆரம்பித்தான். 
துர்கா, சேற்றில் வேகமா நடந்தா இன்னும் அதிகமான சேறு காலில் ஒட்டும்ன்னு மெதுவா நடந்தா. அதுமட்டுமில்லாம,  கால்ல இருக்கும் சேறைக் கிளிஞ்சல்களால் வழித்து எடுத்துட்டு தண்ணியால சுத்தமா கால்களை கழுவியும் சொம்புல கொஞ்சம் தண்ணியையும் மிச்சம் பிடிச்சு வச்சா. ஆனா, நீ சேத்துல வேகமா நடந்து கால் ஃபுல்லா சேறை அப்பிக்கிட்டு, சொம்பு தண்ணி ஃபுல்லா ஊத்தி கழுவியும் சேறு போகாத காலோடு நிக்குற. இத்ல இருந்து துர்கா சிக்கனக்காரி.  நீ ஊதாரி ன்னு தெரியுது. அதனால, கண்டிப்பா நீ யசோதைக்கிட்ட நெய்யை கடன் வாங்கியிருப்பே”ன்னு புரியுது. அதனால, உண்மையை ஒப்புக்குறியா?! இல்ல ஜெயிலுக்கு போறியான்னு மரியாதை ராமன் கேட்டான். 

ம்ம்ம் என் குற்றத்தை ஒப்புக்குறேன் ஐயா!  இனி இதுமாதிரி பொய் சொல்ல மாட்டேன். துர்கா கிட்ட வாங்குன நெய்யையும் கொடுத்துடுறேன். என்னை மன்னிச்சுடுங்கன்னு யசோதை கெஞ்சினா.

மரியாதை ராமனும் அவளை மன்னிச்சும், கண்டிச்சும் அனுப்பினான். மரியாதை ராமனின் சமயோசித அறிவை எல்லோரும் பாராட்டினாங்க.

கதை பிடிச்சுருக்கா குட்டீஸ்?!

பிடிச்சிருக்கு பாட்டி. அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட அன்போடு பழகனும் அவங்களுக்கு தீங்கு செய்யக்கூடாதுன்னும், தீர்ப்பு சொல்லும் இடத்துல நாம இருந்தா எல்லாத்தையும் ஷார்ப்பா நோட் பண்ணி யாரு தப்பு பண்ணி இருப்பாங்கன்னு கண்டுபிடிச்சு தண்டனை தரனும்ன்னு தெரியுது பாட்டி.

கரெக்ட்தான் சீனு! சரி, நீ கிளம்பு, நான் போய் புடவைக்கு எம்ப்ராய்டரி போடுறேன். பதிவர் சந்திப்புக்கு போறதுக்கு கட்டி போகனும்!!

சரி பாத்தி. பை! பை!

Saturday, August 03, 2013

பழையச்சோறும், சின்ன வெங்காயமும் - பாட்டி சொன்ன கதை



சீனு சாப்பிட்டியா?! ப்ரீத்தி நீ சாப்பிட்டியா?!!

ம்ம் நான் சாப்பித்தேன் பாத்தி. நம்ம சீனுதான் சாப்பிதலை!!

அப்படியா!! ஏன் சீனு சாப்பிடலை?!

நேத்து நைட் அப்பா வெளில சாப்பிட்டு வந்ததால சாதம் மீந்துட்டுது. நைட் அதுல தண்ணி ஊத்தி வச்சுட்டா அம்மா.  இட்லி சாப்பிடுறதுக்கு முன்னாடி என்னை ஒரு டம்ப்ளர்  சாப்பிட சொன்னா. நான் மாட்டேன்னு சொன்னதால, பழைய சாதம் கொஞ்சமாவது சாப்பிட்டாதான் இட்லி போடுவேன்னு சொல்லிட்டா. அதான் வேணாம்ன்னு சொல்லி சாப்பிடாம இருக்கேன்.

சீனு இது தப்பில்லையா?! சாதம் வேஸ்டாகிடக்கூடாதுன்னு உன் அம்மா நினைக்குறதுல என்ன தப்பு?!

போ பாட்டி, நீயும் அம்மா கூட சேர்ந்துக்கிட்டே. அதெல்லாம் புவர் பீப்பிள்ஸ்தான் சாப்பிடுவாங்க. அதில்லாம அது ஒரு மாதிரி புளிச்ச வாடை வீசுது!!

அபடிலாம் சொல்ல கூடாது சீனு. முதல் நாள் செஞ்ச சாதத்துல தண்ணி ஊத்தி வெச்சுட்டு மறுநாள் நாம சாப்பிடும் இந்த பழைய சாதத்தில்  வைட்டமின்பி6 பி12 இருக்குன்னு அமெரிக்க டாக்டர்கள் ஆராய்ச்சிலாம் பண்ணி சொல்லி இருக்காங்க. குறிப்பா நம்ம உடம்புல இருக்குற  சிறுகுடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ் அதிகமாகி நம்மளோட  உணவுப் பாதையை ஆரோக்கியமா வெச்சிருக்க உதவுதாம்

ம் ம் ம்  அப்புறம் பாட்டி!!

பொதுவா கிராமத்துல பழைய  கஞ்சி சாப்பிடும்போது கஞ்சியுடன் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவது தான் பழக்கம். சிறிய வெங்காயத்தை சேர்த்து சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதால் வைரஸ் காய்ச்சல் ன்னு எந்த காய்ச்சலும் நம்மை அண்டாதாம். அதுமட்டுமில்லாம ராத்திரி நேரத்துல சாதத்துல தண்ணி ஊத்தி வைக்குறதால அதிகமா நல்லது செய்ய்ற பேக்டீரியா உருவாகுதாம். இதை காலைல சாப்பிட்டா உடம்பு சூட்டை தணிச்சு, குடல் புண், வயிற்று வலிலாம் இல்லாம உடம்பை சுறுசுறுப்பா வச்சிருக்குதாம். இதுல இருக்குற  நார்ச்சத்து, மலச்சிக்கல், பிரச்சனைகளை தீர்த்து உடலை வேலை செய்ய வைக்குதாம்.

சாதம் சூடா இருக்கும்போது தண்ணி ஊத்திட்டா காலைல பழைய சாதம் சொதசொதன்னு இருக்கும். அதனால, சாதம் ஆறி இருக்கனும். சாதம் வடிச்ச தண்ணி ஒரு பாகம், பச்சை தண்ணி 3 பாகம்ன்னு உப்பு போட்டு கலந்து ஆறின சாதத்துல ஊத்தி வெச்சுட்டு காலைல கொஞ்சம் தயிர்  கலந்து சின்ன வெங்காயம் இல்லாட்டி ஊறுகாய் தொட்டுக்கிட்டு சாப்பிட்டா உடலுக்கும் நல்லது சுவையும் அலாதிதான். இனி நீயும் சாப்பிட பழகிக்க சீனு.

சரி பாட்டி!! இவ்வளவு விசயம் இருக்கா!! இத்தனை நாள் தெரியாம போச்சே!! இனி நான் சமர்த்தா சாப்பிட்டுடுவேன். சரி சரி,  நீ கதையை சொல்லு. கேட்டுட்டு போய் பழைய சாதம் சாப்பிடுறேன்.


ஒரு ஊருல ஒரு பெரிய ஆலமரம் இருந்துச்சு. அதுல ஒரு ஆண் காகமும், அதோட பெண் காமும், அதன் குட்டிகளும் ரொம்ப மகிழ்ச்சியா வாழ்ந்து வந்துச்சு.

அந்த ஆலமரத்தடியில ஒரு மரப்பொந்து இருந்துச்சு. அதுல ஒரு கருநாக பாம்பும் வந்து சேர்ந்துச்சு. பெண்காகம் தன் கூட்டில் முட்டையிட்டு அடைக்காக்கும். ஆண் காகம்  இரை தேடி வர எங்காவது பறந்து போய் வரும். கூட்டுக்கு தேவையான குச்சிகளை பொறுக்க பெண்காகம் எங்காவது போய் வரும்போது அந்த கருநாகம் மரத்து மேலேறி காக்கா குஞ்சுகளை தின்னுடும்.

ஐயையோ!! பாவம் பாட்டி, அந்த அப்பா, அம்மா குரோஸ் வந்து பாப்பா குரோஸ் இல்லாம வருத்தப்படுமே!!

ஆமா சீனு, கூட்டுக்கு திரும்பி வந்து பார்க்கும்போது தன் குழந்தைகளை காணாம ரொம்ப வருத்தப்படும். இதுமாதிரி ஒருமுறை, இருமுறை இல்லாம பலமுறை நடந்துச்சு.  ஆனாலும் யார் காரணம்ன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்துச்சு. அந்த பக்கமா வந்த நரியண்ணாதான் அந்த காகங்கள்கிட்ட இதுக்கு காரணம் அந்த பாம்புதான்ன்னு சொல்லி புரிய வச்சுது.

தன் குழந்தைகளை தொடர்ந்து அந்த பாம்புக்கு இரை கொடுக்க மனசில்லாத அந்த பெண் காகம், நரியண்ணா! நாம போய் அந்த பாம்புக்கிட்ட போய்  பேசி பார்க்கலாமா?!ன்னு கேட்டது.

ஏம்மா! உனக்கு அறிவிருக்கா?! அது கொடிய ஜந்து அதுக்கிட்ட போய் பேசி பார்க்கலாம்ன்னு சொல்றியே!!  அது நம்மையும் சாவடிச்சு சாப்பிட்டா என்ன பண்ணுவே!! கொஞ்சம் பொறு. எதாவது ஐடியா தோணும். அதுப்படி செய்யலாம்ன்னு  சொல்லுச்சு நரியண்ணா!

அப்போ,  எதோ மனுசங்க கூட்டமா வரும் சத்தம் கேட்டுச்சு. என்னன்னு பார்த்து வர சொல்லி ஆண் காகத்தை அனுப்பிச்சுது நரி,  பார்த்துட்டு வந்த காகம், நரியண்ணே! பக்கத்து நாட்டை ஆளும் ராஜா தன் ராணியோடு ரெஸ்ட் எடுக்க நம்ம காட்டுக்கு வந்திட்டிருக்கார் அதான் சத்தம்ன்னு சொல்லிச்சு.

என்னது?! ராஜா ரெஸ்ட் எடுக்க காட்டுக்கு போறாரா?! ஏன் பாட்டி?!

இப்போ நம்ம  நாட்டு பிரதமர், கவர்னர், மந்திரிங்கலாம் பொருளாதாரம், போர், உள்நாட்டு விவகாரம், வெள்நாட்டு விவகாரம்லாம் கவனிச்சு மண்டை காய்ஞ்சு போய் வெளிநாட்டுக்கு சுத்து பயணம் போறாங்கல. அதுப்போல ராஜா காட்டுக்கு போறார்.

ஓ புரிஞ்சுது பாட்டி!!

நரியண்ணாவுக்கு ஒரு ஐடியா தோணுச்சு. அதை ஆண்காகத்துக்கிட்ட சொல்லிச்சு.

ஒரு நாள்,

ராணி வழக்கமா குளிக்குற ஆத்தங்கரையோரம்  இருக்குற மரத்துல போய் உக்காந்துக்கிட்டு அரசி வர்றதுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்துச்சு காகம்...,

கொஞ்ச நேரத்துல குளிக்க தன் தோழிகளோடு வந்தாங்க ராணி, தான் போட்டுக்கிட்டு இருந்த காஸ்ட்லி ஜுவல்ஸ்லாம் கழட்டி கரையில வச்சுட்டு குளிக்குறதுக்காக ஆத்துல இறங்குனாங்க.

இதுதான் சமயம்ன்னு காகம் ஒரு முத்து மாலையை தூக்கிட்டு மெதுவா பறக்க ஆரம்பிச்சது.

ம்க்கும் போ பாட்டி!! காகத்துக்கு எதுக்கு முத்து மாலை. அப்படியே எடுத்தாலும் வேகமா பறந்தாதானே  சோல்ஜர்கிட்ட பிடிபடாம தப்பிக்க முடியும்!!??

தேய் சீனு,   அந்த நரி பண்ணுன பிளான் இதெல்லாம்!! என்ன நடக்க போகுதுன்னு பாத்தி சொல்லத்தும். நீ குறுக்க புகுராதே!! பாத்தி நீ சொல்லு...,

ப்ரீத்தி தான் குட், சமர்த்தா கதை கேக்குறா. நீ அவசரக்குடுக்கடா சீனு!! இதை பார்த்த ராணி தன் முத்து மாலையை காகம் தூக்கிட்டு போய்டுச்சுன்னு கத்துறா. அதை கேட்டு  காவல் காக்குறவங்கலாம் அந்த காகத்தை துரத்திக்கிட்டு ஓடுறாங்க.

காகம் பறந்து போய் தன் கூடு இருக்கும் ஆலமரத்து பொந்துல அதான் அந்த பாம்பு இருக்குற பொந்துல அந்த முத்து மாலையை போட்டுட்டுது.

ம்ம் இப்போ புரிஞ்சு போச்சு பாட்டி ஐடியா!! அந்த முத்துமாலையை எடுக்குறதுக்காக அந்த பொந்துல செர்ச் பண்ணுவாங்க, அப்போ அந்த பாம்பு மாட்டிக்கிட்டு சாகும் அதானே நரியோட பிளான்.

ஆமா சீனு, முத்துமாலையை எடுக்க மரப்பொந்துக்குள்ள கையை விடும்போது கருநாகம் சீறிக்கிட்டு வந்துச்சு. அதை பார்த்த வீரர்கள் அந்த பாம்பை அடிச்சு கொண்ணுட்டு  அந்த முத்து மாலையை கொண்டு போய் ராணிக்கிட்ட கொடுத்தாங்க,

அதுக்கப்புறம், பெண் காகம் முட்டையிட்டு அடைக்காத்து 4 அழகான  காகக்குஞ்சுகள் வெளிவந்துச்சு. அதை பார்க்க வந்த நரியண்ணாவுக்கு நன்றி சொல்லி  ஆண் காகமும், பெண் காகமும் ரொம்ப சந்தோசமா தன் குழந்தைகளோடு வாழ்ந்துச்சு. இதுல இருந்து என்ன தெரிஞ்சது சீனு?!

அடுத்தவங்களுக்கு தீமை செஞ்சா நமக்கு தீமைதான் விளையும்ன்னு புரிஞ்சுது பாட்டி.

ம்ம்ம் குட் சீனு. கதையோட அர்த்தத்தை நல்லா புரிஞ்சுக்கிட்டே சீனு.

சரி பாட்டி நான் போய் பழைய கஞ்சி குடிச்சுட்டு ஹோம் வொர்க் செய்யுறேன். பை பாட்டி.

பை சீனு!! பை பிரீத்தி!!