Friday, December 09, 2016

நாயன்மார்கள் அறுபது பேரா?! அறுபத்தி மூவரா?! - புண்ணியம் தேடி...




நாயன்மார்கள் என்பவர்கள் கி.பி 400-1000 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்களில் சிலர். சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத்தொகையில் அறுபத்தி இரண்டு நாயன்மார்களைப்பற்றி கூறியுள்ளார். அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்தி இரந்து பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் சேர்த்து அறுபத்தி மூவரின் வரலாற்றை ”திருத்தொண்டர் புரணம்” என்னும் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாயன்மார்களுக்கு சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தினுள் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும்.  மூவர் சிலைகள்  முடியா சிறிய சிவாலயங்களில் ”நால்வர்” என்றழைக்கப்படும்  “அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தரின்” உருவச்சிலைகளாவது கண்டிப்பாய் இருக்கும். இந்த நால்வரும் “சைவ சமய் குரவர்” என்று அழைக்கப்படுகின்றனர். 



12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மார்களின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.  முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தராலும், அடுத்த மூன்று திருமுறைகள் திருநாவுக்கரசராலும், ஏழாம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடலாகும். 

நாயன்மார்களில் சிலரே சமயநூல்களில் புலமை பெற்றவர்கள். மற்றவர்களெல்லாம் மிகச்சிறந்த பக்தர்கள் மட்டுமே! பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற  பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் மூலம் நமக்கு இறவன் உணர்த்துகின்ற பாடம்.




நாயன்மார்கள் வரிசையில் பெண்கள்:

அறுபத்தி மூன்று நாயன்மார்களில் மூன்று பெண்களும் இடம்பெற்றுள்ளனர். கி.பி 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மாயாரே பெண் நாயன்மார்களில் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் அம்மையாரின் இயற்பெயர் “புனிதவதி” ஆகும். இரண்டாவதாக இடம்பெற்றுள்ள பெண்நாயன்மார் மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் “நின்றசீர் நெடுமாற நாயனார்” என்ற நாயன்மாரின் மனைவியான “மங்கையர்கரசி”யாவார். மூன்றாவது பெண் நாயன்மாராக இடம்பெற்றவர், திருநாவலூரை சேர்ந்த சடையனார்  என்ற நாயனாரின் மனைவி “இசைஞானி”. இவர்களின் மகன்தான் சுந்தரர். சைவ சமய குரவர்களில் ஒருவர்.



நாயன்மார்களை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார்கள் மொத்தம் அறுபது. அறுபத்தி மூவர் அல்ல. சுவாமிமலைக்கு படி 60. தமிழ் ஆண்டுகள் 60, மனிதனுக்கு மணிவிழா செய்வது 60 வது ஆண்டு. ஒரு நாழிகைக்கு அறுவது வினாடி.ஒரு வினாடிக்கு அறுவது நொடி. இப்படி எல்லாமே ஆருபது என்ற கணக்கிலேதான் வரும். அறுபத்தி மூன்று என வராது.
சிவப்பெருமான் அடி எடுத்து கொடுத்து சுந்தரமூர்த்தி நாயன்மார்  பாடிய நாயன்மார்கள் மொத்தம் அற்பது  பேர்கள்தான்.

சுந்தரமூர்த்தி நாயன்மாரின் மறைவுக்கு பின் 100 ஆண்டுகள் கழித்து ”நம்பியாண்டார் நம்பி அடிகள்” சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய அறுபது நாயன்மார்களை சற்று விரிவாய் பாடுகின்றார். அப்போது, நாயன்மாரை பற்றி பாடிய சுந்தரரையும், அவரப்பெற்ற சடையனாரையும், அவரின் அம்மா இசைஞானியாரையும் சேர்த்து அறுபத்தி மூவராக்கினார்.

நாயன்மார்கள் பிறந்த தலங்களை ”நாயன்மார் அவதார தலங்கள்” என்றழைக்கப்படுகின்றன. இவற்றில் ஐம்பத்தி எட்டு தலங்கள் தமிழகத்தில் உள்ளது. மற்றவை பாண்டிச்சேரி(காரைக்கால்),ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒன்று என்ற விகிதத்திலும், கேரள மாநிலத்தில் தலங்களும் உள்ளது.


நாயன்மார்கள் செய்த தொண்டின் காரணமாக மூன்று விதமான  முக்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது. குருவருளால் முக்தி பெற்றவர்கள் பதினொருவரும்..., சிவலிங்கத்தால் முக்தி பெற்றவர்கள் முப்பத்தியொருவரும், அடியாரை வழிப்பட்டமையால் முக்தி பெற்றவர்கள் இருபத்தியொருவரும் ஆவர்.



நாயன்மார்களின் குலங்களும், அவர்களின் குரு பூஜை தினங்களும்...



1அதிபத்தர்பரதவர்
2அப்பூதியடிகள்அந்தணர்
3அமர்நீதி நாயனார்வணிகர்ஆனி பூரம்
4அரிவட்டாயர்வேளாளர்
5ஆனாய நாயனார்இடையர்
6இசைஞானியார்ஆதி சைவர்சித்திரை
7இடங்கழி நாயனார்செங்குந்தர் குல குறுநில மன்னர்[3][4]
8இயற்பகை நாயனார்வணிகர்
9இளையான்குடிமாறார்வேளாளர்
10உருத்திர பசுபதி நாயனார்அந்தணர்
11எறிபத்த நாயனார்
செங்குந்தர் [5][6]
12ஏயர்கோன் கலிகாமர்வேளாளர்ஆனி ரேவதி
13ஏனாதி நாதர்சான்றார்
14ஐயடிகள் காடவர்கோன்குறுநில மன்னர்
15கணநாதர்அந்தணர்
16கணம்புல்லர்
செங்குந்தர் [7][8]
17கண்ணப்பர்வேடர்
18கலிய நாயனார்செக்கார்
19கழறிற்ற்றிவார்அரசர்
20கழற்சிங்கர்குறுநில மன்னர்வைகாசி பரணி
21காரி நாயனார்
செங்குந்தர் [9][10]
22காரைக்கால் அம்மையார்வணிகர்
23குங்கிலியகலையனார்அந்தணர்
24குலச்சிறையார்மரபறியார்
25கூற்றுவர்
செங்குந்தர் குல குறுநில மன்னர் [11][12]
26கலிக்கம்ப நாயனார்வணிகர்
27கோச் செங்கட் சோழன்அரசன்
28கோட்புலி நாயனார்வேளாளர்
29சடைய நாயனார்ஆதி சைவர்
30சண்டேஸ்வர நாயனார்அந்தணர்
31சத்தி நாயனார்வேளாளர்
32சாக்கியர்வேளாளர்
33சிறப்புலி நாயனார்அந்தணர்
34சிறுதொண்டர்சாலியர்சித்திரை பரணி
35சுந்தரமூர்த்தி நாயனார்ஆதி சைவர்ஆடிச் சுவாதி
36செருத்துணை நாயனார்வேளாளர்88
37சோமசிமாறர்அந்தணர்வைகாசி ஆயிலியம்
38தண்டியடிகள்
செங்குந்தர் [13][14]
39திருக்குறிப்புத் தொண்டர்ஏகாலியர்சித்திரை சுவாதி
40திருஞானசம்பந்தமூர்த்திஅந்தணர்வைகாசி மூலம்
41திருநாவுக்கரசர்வேளாளர்சித்திரை சதயம்
42திருநாளை போவார்புலையர்
43திருநீலகண்டர்குயவர்
44திருநீலகண்ட யாழ்ப்பாணர்பாணர்வைகாசி மூலம்
45திருநீலநக்க நாயனார்அந்தணர்வைகாசி மூலம்
46திருமூலர்இடையர்
47நமிநந்தியடிகள்அந்தணர்வைகாசி பூசம்
48நரசிங்க முனையர்
செங்குந்தர் குல குறுநில மன்னர் [15][16]
49நின்றசீர் நெடுமாறன்அரசர்
50நேச நாயனார்சாலியர்
51புகழ்சோழன்அரசர்
52புகழ்த்துணை நாயனார்ஆதி சைவர்ஆனி ஆயிலியம்
53பூசலார்அந்தணர்
54பெருமிழலைக் குறும்பர்
செங்குந்தர்[17][18]
55மங்கையர்க்கரசியார்அரசர்சித்திரை ரோகிணி
56மானக்கஞ்சாற நாயனார்வேளாளர்
57முருக நாயனார்அந்தணர்வைகாசி மூலம்
58முனையடுவார் நாயனார்வேளாளர்
59மூர்க்க நாயனார்வேளாளர்
60மூர்த்தி நாயனார்வணிகர்
61மெய்ப்பொருள் நாயனார்
செங்குந்தர் குல குறுநில மன்னர்[19][20]
62வாயிலார் நாயனார்வேளாளர்
63விறன்மிண்ட நாயனார்வேளாளர்

இவை நாயன்மார்களின் பற்றிய பொதுவான தகவலாகும். இனிவரும் பதிவுகளில் ஒவ்வொரு நாயன்மார்களைப் பற்றி அகர வரிசையில் இனிவரும் பதிவுகளில் பார்க்கலாம்.



நாயன்மார்கள் வரிசையில் சேராத பெண்ணொருத்தி:

சோழ நாட்டுப் பூம்புகார் நகரில் வணிகர் குடியில் தோன்றியவர் இயற்பகை நாயனார். வளமெல்லாம் நிறையப் பெற்ற இவர் சிவ பெருமான் மீது மாளாத பற்று கொண்டவர். சிவனடியார்கள் வேண்டியதை மட்டுமன்றி மனத்தில் நினைத்ததையும் அவர்கள் மனம் மகிழும் வண்ணம் கொடுக்கக் கூடிய அளவில் அளவில்லாத பக்தி உடையவர்.
       இப்படி இயற்பகையார் அடியார் பணி செய்து கொண்டு இருக்கும் காலத்தில் தூய வெண்ணீறு அணிந்த மேனியுடன் புறத்தில் காவி அணிந்து அகத்தில் காமம் அணிந்தவராகத் தம் இல்லம் வந்த அடியாரை வரவேற்று வணங்கி ஆசி பெறுகிறார்.
      அப்போது வந்த அடியவர் இயற்பகையாரிடம் “அடியார் வேண்டுபவர் வேண்டுவதை நீ தருவாய் என்று கேள்விப்பட்டு இங்கு வந்துள்ளேன். நீ இசைவாயானால் எனக்கு வேண்டியதைக் கூறுவேன்” என்கிறார்.
    இயற்பகையார் “தாங்கள் கேட்பது எதுவாயினும் என்னிடம் உளது எனின் அது எம்பெருமானின் உடைமையாகும். எனவே நீவிர் விரும்பிய பொருளைக் கேட்டு அருள்க” என்கிறார்.
       “உன் மனைவியின் மீது பெருகிய காதலினால் அவளைக் கேட்டுப் பெற வந்துள்ளேன்” என்கிறார் அந்தக் காமத் துறவி. “காட்டுக்குப் போ” என்று கைகேயி கூறியவுடன் கம்ப நாடனின் காப்பியத் தலைவன் முகம் மலர்ந்ததைப் போல இயற்பகையார் முகம் மலர்ந்தது. “என்னிடம் உள்ளதொரு பொருளைக் கேட்டுள்ளீர்கள்” என்று உவகையுடன் கூறிக்கொண்டே வீட்டிற்குள் சென்றார். தம் மனையாளைக் கரம் பிடித்து அடியார் முன்பு அழைத்து வந்து “முறைப்படி மணம் செய்து கொண்ட என் மனையின் விளக்கே! இந்தத் துறவியாருக்கு உன்னை நான் கொடுத்து விட்டேன்” என்று கூறிவிடுகிறார். மனையாளும் ஒப்பி விடுகிறார்.
         மனைவியைக் கொடுத்த மகிழ்வுடன் இயற்பகையார் அடியாரைப் பார்த்து “வேறு நான் செய்ய வேண்டுவது யாது?” என்று வினவுகிறார். “நான் உன் மனையாளுடன் இவ்வூரைக் கடந்து செல்லும் வரை நீ வழித்துணையாக உடன் வர வேண்டும்” என்கிறார் அடியார். இயற்பகையாரும் பொன்போல ஒளிரும் ஆடையையும் கச்சையையும் அணிந்து கையில் வாளையும் ஏந்திக் கொண்டு அம்மையாரையும் அடியவரையும் முன்னே போக விட்டு இவர் பின்னே காவலாகச் செல்கிறார்.
       உற்றார் உறவினர்கள் எல்லோரும் எதிர்வந்து தடுக்கின்றனர். தடுத்த அவர்களையெல்லாம் வெட்டி வீழ்த்துகிறார் இயற்பகையார். அடியவர் கூறிய இடம் வந்ததும் “சென்று வருகிறேன்” என்று கூறித் திரும்பியும் பார்க்காமல் வந்து விடுகிறார். அடியாராய் வந்த ஈசன் மனம் மகிழ்ந்து “இயற்பகையானே ஓலம்” என்று ஓலமிட்டு அழைக்கிறார். அப்போதும் இயற்பகையார் “இன்னும் உம்மைத் தடுப்பவர் உளர் எனின் அவரையும் என் வாளால் வெட்டுவேன்” என்று கூறிக்கொண்டே வருகிறார். அங்கு அடியவரைக் காண வில்லை. மறைந்து விடுகிறார். வானத்தில் இறைவன் உமையாளுடன் காட்சி அளிக்கிறார்.


       இப்படித் தம் உரிமை மனையாளையும் சிறிதும் வருத்தமின்றி ஆண்டவனின் அடியாருக்குக் கொடுத்த இயற்பகை நாயனாரை,
இன்புறு தாரந் தன்னை ஈசனுக் கன்பர் என்றே
துன்புறா துதவும் தொண்டர் பெருமையைத் தொழுது  வாழ்த்தி
(பெரியபுராணம்: 439)
என்று போற்றுகிறார் சேக்கிழார். சேக்கிழாருக்குத் தொண்டர்தம் பெருமையை எழுத துணையாய் நின்ற திருத்தொண்டத் தொகையை இயற்றிய சுந்தரமூர்த்தி நயனார்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்(திருத்தொண்டத் தொகை)
என்று போற்றுகிறார்.
கைதவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே
மைதிகழ் கண்ணியை ஈந்தவன் வாய்ந்த பெரும்புகழ்வந்(து)
எய்திய காவிரிப் பூம்பட்டி னத்துள் இயற்பகையே. (திருத்தொண்டர் திருவந்தாதி: 4)
என்று நம்பியாண்டார் நம்பி போற்றுகிறார். ஆனால் இந்த மூவரின் நூல்களில் எங்கும் இயற்பகையாரின் துணைவியார் எள் நுணியளவேனும் போற்றப் படவில்லை
கணவனின் சொல்லைத் தட்ட முடியாத்தால அல்லது உண்மையிலேயே இறைவனுக்குத் தொண்டாற்றும் நோக்கிலோ அம்மையார் மறுப்பேதும் சொல்லாமல் அடியாருக்குத் தம்மை ஈய நினைத்தமை கற்புடைய பெண்களால் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாதது. கற்புக் கொள்கை மேலோங்கி இருந்த அக்காலத்தில் தம்மைப் பற்றியோ, தம்மை உலகம் போற்றுமா தூற்றுமா என்பதைப் பற்றியெல்லாம் சற்றும் சிந்திக்கவில்லை. அப்படிப்பட்ட அம்மையாரைத் தம்பிரான் தோழரும் நம்பியாண்டார் நம்பியும், தெய்வச் சேக்கிழார் பெருமானும் ஏன் போற்றவில்லைன்னு தெரியவில்லை. அவரது பெயரைக்கூட நம்மால் அறிந்துக்கொள்ள இயலாமல் போயிற்று. நின்ற சீர் நெடுமாறனின் துணைவியாக வாழ்ந்த மங்கையர்க்கரசியாருக்குப் பாடியருளியதைப் போலவோ சுந்தரரைப் பெற்ற இசைஞானியாரைப் பாடியதைப் போலவோ ஓரிரு பாடல்களையாவது பாடி அடியார்களுள் ஒருவராக இந்த அம்மையாரையும் சேர்த்திருக்கலாம். இறைவனின் மனதை யாரறிவார்?!
பின் குறிப்பு: நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த முருகனடிமையான திருமுருக கிருபானந்த வாரியாரையும் நாயன்மார்களில் ஒருவரா சேர்க்கனும்ன்னு கோரிக்கை எழுந்துள்ளது. சில கோவில்களில் கிருபானந்த வாரியரின் சிலையையும் நாயன்மார்கள் வரிசையில் வைத்திருக்கின்றார்கள். அவரைப்பற்றியும் நாயன்மார்கள் வரிசையில் பார்ப்போம்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!


8 comments:

  1. அருமையான விவாதப்பொருள்.தங்களின் கருத்தை ஏற்கிறேன். ஆனால்
    //சுவாமிமலைக்கு படி 60. தமிழ் ஆண்டுகள் 60, மனிதனுக்கு மணிவிழா செய்வது 60 வது ஆண்டு. ஒரு நாழிகைக்கு அறுவது வினாடி.ஒரு வினாடிக்கு அறுவது நொடி// என்ற நிலையில் வைத்து 60 என்று நோக்குவது சரியா என்று சிந்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சுந்தரர் பாடிய அறுபது என்ற எண்ணிக்கையோடு அப்படி ஒரு ஒப்பீடு ஐயா! மத்த்ப்படி வேறொன்றுமில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

      Delete
  2. அருமையான பகிர்வு...
    தொடர்ந்து அறுபத்து மூவர் பற்றி எழுதுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. இறைவன் பணித்தால் அறுபத்தி மூவரோடு கிருபானந்த வாரியார் பற்றியும் நம் வலைப்பூவில் வரும்

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  4. Sorry, I do not have Tamil fonts in this computer, hence in English

    There is a concept in Jainism, of 63 great men in every half of a Jain era; they are called Trisashti Salakapurusha.
    That list includes, 24 Tirtankaras, 12 Chakravarti(n)s, nine Narayanas ("hero"), nine Balabhadras (hero's brother / friend) and nine Prati- Narayanas("anti hero", villain). For example, Rama is the Narayana, Lakshmana is the Balabhadra and Ravana is the Prati Narayana. Jains celebrate these 63 people.

    More about this: https://en.wikipedia.org/wiki/Salakapurusa#Triad_of_Baladeva,_Vasudeva_and_Prativasudeva

    When Saivism competed with Jainism in TN, it created its own set of 63 great Saivite saints.
    Therefore the right number is 63.

    ReplyDelete