பெண்களுக்கு மாமியார், நாத்தனார், சீரியல் பிரச்சனை ஓய்ஞ்சாலும் ஓயும்!! ஆனா, காலைல டிஃபனுக்கு தொட்டுக்க என்ன செய்யுறதுங்குற பிரச்சனை மட்டும் ஓயவே ஓயாது.
இட்லிக்கு சாம்பார்தான் நல்ல காம்பினேஷன்னு உலகமே சொல்லும். ஆனா, தூயாக்கு இட்லிக்கு சாம்பார் வச்சா பிடிக்காது. வேர்க்கடலை சட்னி, வெங்காய சட்னி வெச்சா இன்னும் ரெண்டு இட்லி கூட சேர்த்து சாப்பிடுவாங்க பசங்க. ஆனா, வீட்டுக்காரர் வேண்டா வெறுப்பா சாப்பிடுவாங்க. அவங்களுக்கு கடலை பருப்பை அரைச்சு வெச்ச குருமா பிடிக்கும்.
ஆனா, எல்லாருக்கும் பிடிச்ச சட்னின்னா அது இந்த கார சட்னிதான். இதை வெளில டூர், பிக்னிக் போகும்போது செஞ்சு கொண்டு போனா, ஆறின இட்லி கூட நிமிசத்துல காலியாகிடும். செய்யுறதும் ரொம்ப ஈசி.
நாலு பேர் கொண்ட குடும்பத்துதேவையான பொருட்கள்:
வெங்காயம் - கால் கிலோ
தக்காளி - 100 கிராம்,
பூண்டு - 10 பல்
காய்ந்த மிளகாய்- 10 (காரத்துக்கு தகுந்த மாதிரி மிளகாயை சேர்த்துக்க்கோங்க)
உப்பு - தேவையான அளவு
மஞ்சப்பொடி - சிறிது
எண்ணெய்- தேவையான அளவு
கடுகு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயத்தை தோல் எடுத்து கழுவி பெரிய பெரிய துண்டுகளா வெட்டிக்கோங்க.
பூண்டையும் சுத்தம் பண்ணி, எல்லாத்தையும் மிக்சில போட்டு நைசா அரைச்சுக்கோங்க.
ஒரு வாணலில எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடுகு போட்டு பொறிய விடுங்க .
கறிவேப்பிலை போட்டு லேசா பொறிஞ்சதும்...,
அரைச்சு வெச்சிருக்கும் தக்காளி, வெங்காய விழுதை கொட்டி கொஞ்சம் வதக்குங்க.
தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சமா தண்ணி விட்டு நல்லா கொதிக்க விடுங்க. எண்ணெய் தனியா பிரிஞ்சு வரும் நேரத்துல அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறுங்க.
காரம், புளிப்புமா இட்லிக்கு செம மேட்சிங்கா இருக்கும் இந்த சட்னி. பெரிய பொண்ணு தூயாக்கு ரொம்ப பிடிக்கும். நிறைய வைம்மான்னு போகும் போதும் வரும்போது சும்மாவே டேஸ்ட் பண்ணுவா! அவ இல்லாததால, இப்போலாம் அதிகமா செய்யுறது இல்ல. பத்து நிமிசத்துல இட்லி வேகுற நேரத்துல செஞ்சுடலாம்.
அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட வரேன்.
