சாம்பார், கூட்டு, பொறியல்ன்னு கத்திரிக்காய் எந்த ரூபத்துல என் பசங்களுக்கு பிடிக்கும். அதுலயும் வேர்க்கடலை அரைச்சு ஊத்தி செய்யும் காரக்குழம்புன்னா நிமிசத்துல காலி ஆகிடும்.
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - கைப்பிடி
பிஞ்சு கத்திரிக்காய் - 5(குட்டி, குட்டி காயா இருந்தா நல்லது)
வெங்காயம் - 1
தக்காளி- 1
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
சீர்கம் - சிற்து
கடுகு- சிறிது
மிளகாய்தூள் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் 2 டீஸ்பூன்
மஞ்சப்பொடி - சிறிது
வறுக்காத வேர்க்கடலையை தோலோடு மிக்சில போட்டு அரைச்சுக்கோங்க.
கத்திரிக்காய் சின்ன, சின்னதா இருந்தா காம்பை மட்டும் கட் பண்ணிட்டு நாலா கீறி முழுசாவும், கத்திரிக்காய் பெருசா இருந்தா நீள வாக்குல கீறி எண்ணெயில வதக்கி எடுத்து வச்சுக்கோங்க.
கடாயில எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் சீரகம், கடுகு போட்டு பொறிய விடுங்க.
கடுகு, சீரகம் பொறிந்ததும் வெங்காயம் போட்டு பொன்னிறமா வதக்கிங்கோங்க.
அடுத்து தக்காளி போட்டு வதக்கிக்கோங்க.
கறிவேப்பிலை, கொத்தமல்லி சேருங்க.
உப்பு சேர்த்துக்கோங்க.
அரைச்சு வச்சிருக்கும் வேர்க்கடலை விழுதை போட்டு வதக்குங்க.
வேர்க்கடலை பச்சை வாசனை போனதும் தேவையான அளவு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, மிளகாய் தூள் வாசனை போகும் வரை வதக்கி தண்ணி சேர்த்து கொதிக்க விடுங்க.
கத்திரிக்காய் சேர்த்து கொதிக்க விடுங்க.
கத்திரிக்காய் நல்லா வெந்ததும் புளிக் கரைச்சு ஊத்திக் கொதிக்க விடுங்க.
காரசாரமான கத்திரிக்காய் காரக்குழம்பு ரெடி.சூடான சாதத்துல நெய் சேர்த்து சாப்பிட செமயா இருக்கும். வேர்க்கடலை போட்டிருக்குறதால ருசி கூடுதலா இருக்கும். சட்டுன்னு அடிப்பிடிச்சுக்கும். அதனால, அப்பப்ப குழம்பை கிளறி விடுங்க. உங்களுக்கு முடியாட்டி சமைக்குறது பெண்களா இருந்தா வூட்டுக்காரரை கிளறி விடச்சொல்லுங்க. சமைக்குறது ஆண்களா இருந்தா வேற வழியே இல்ல குழம்பு கொதிச்சு இறக்கும் வரை நீங்களே கிளறிவிடுங்க.
வேற ஒரு ரெசிபியோட அடுத்த வாரம் பார்க்கலாம்!! இப்ப டாட்டா! பை பை! சீ யூ.











