Wednesday, November 02, 2011

நான் பெத்த மகனே!

நேத்து சாயந்தரம் என் குட்டி பையன் ஸ்கூலிலிருந்து வந்து ஃப்ரெஷ் அப் பண்ணிக்கிட்டு ஹோம் வொர்க் செய்ய ஆரம்பித்தான். ,
அவன் ஹேண்ட் புக்கை எடுத்துக்கிட்டு  அப்பு! அம்மா  கேள்வி கேட்பேனாம். நீ பதில் சொல்வியாம்ன்னு கேட்டேன். வீட்டு வாசல்ல ஏழரை நாட்டு சனி எட்டி, என்னை உற்று  பார்ப்பதை அறியாமல்...,

நான் கேள்விகளை கேட்க, பதில் சொல்லி, சொல்லி கடுப்பான அவன், எப்ப பாரு என்னையவே கேள்வி கேக்குறியேம்மா! இன்னிக்கு ஒரு நாளைக்கு நான் கேள்வி கேட்குறேன் நீ பதில் சொல்லும்மான்னு சொன்னதற்கு..., சரி சரின்னு மண்டையை ஆட்டினேன். ஏழரை சனி மெல்ல உள்ளே வந்து என் பக்கத்தில் அமர்ந்ததை அறியாமல்...,

1.தண்ணீரை "தண்ணீ"ன்னு சொல்லலாம் ஆனா பன்னீரை "பன்னி"ன்னு சொல்லமுடியுமா?
.............................................................................

2.மீன் புடிக்கரவனை மீனவன்னு சொல்ல முடியும், ஆனா மான் புடிக்கறவனை மாணவன்னு சொல்ல முடியுமா?
....................................................................

3.புள்ளிமானுக்கு உடம்பெல்லாம் புள்ளியிருக்கும்,
ஆனா, கன்னுக்குட்டிக்கு உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா? .
...................................................................
 4. ஃபேண்ட் போட்டுக்கிட்டு முட்டி போடலாம்..,
முட்டி போட்டுக்கிட்டு ஃபேண்ட் போட முடியுமா?
...................................................................
5. கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்,
வைகை ஆத்துல மீன் பிடிக்கலாம்,
காவிரி ஆத்துல மீன் பிடிக்கலாம்..,
ஆனால் ஐய்யராத்துல மீன் புடிக்க முடியுமா? 
..............................................................
5.  இட்லி பொடியை தொட்டு  இட்லி சாப்பிட முடியும். 
ஆனால், மூக்கு பொடியை வச்சு மூக்கை சாப்பிட முடியுமா?
..............................................................
                                      
6. கோலமாவில் கோலம் போடலாம் ,
கடலை மாவில் கடலை போட முடியுமா?
..................................................................
7. சோடாவ Fridgeல வச்சா Cooling சோடாஆகும், அதுக்காக அத Washing Macineலவெச்சா
washing சோடாவாகுமா?
...........................................................................
8. பாம்பு எத்தனை தடவை படமெடுத்தாலும்
அதால், ஒரு முறையாவது  ஒரு படத்தையாவது
தியேட்டர்ல ரிலீஸ் பண்ண முடியுமா?
.............................................................................
9.என்னதான் கோழிக்கு வயிறு ஃபுல்லா தீனி போட்டு வளர்த்தாலும்,
கோழி முட்டைதான் போடும்.
100/100 லாம் போடுமா?.
............................................................................
10. நீ எவ்வளவு பெரியா படிப்பாளியா இருந்தாலும்,
பரிட்சை ஹால்ல போய் எழுதத்தான் முடியும்.
படிக்க முடியுமா?

ஐயா சாமி, என்னை ஆளை விடு.., ன்னு
எழுந்து ஓட ஆரம்பித்தேன்.


அம்மா! அம்மா! எங்கேம்மா ஓடுறே. இனிமே இதுப்போல கேட்கமாட்டேன். வாம்மா வந்து உக்காரும்மா. இனி, சமர்த்தா படிக்கலாம். என் செல்ல அம்மா தானே நீன்னு கொஞ்ச ஆரம்பித்தபின் தான் மீண்டும அவன் அருகில் வந்தமர்ந்து பாடம் படிக்க ஆரம்பித்தோம்.


25 comments:

  1. //
    1.தண்ணீரை "தண்ணீ"ன்னு சொல்லலாம் ஆனா பன்னீரை "பன்னி"ன்னு சொல்லமுடியுமா?
    //
    உங்களைவிட புத்திசாலி போல

    ReplyDelete
  2. என்னமா கேள்வி கேட்கறாங்க?

    ReplyDelete
  3. இரசித்தேன்

    சிரித்தேன்..

    ReplyDelete
  4. மாத்தி யோசித்துப் பார்த்தால்
    பையன் சொல்வது எல்லாம் சரியாகத்தானே இருக்கு
    ரசிக்கத் தக்க பதிவு
    த.ம 3

    ReplyDelete
  5. இதுக்கு பதில் சொல்லுங்க...
    நாய் குட்டி போட்டா நாய் குட்டி
    குரங்கு குட்டி போட்டா குரங்கு குட்டி
    மாடு குட்டி போட்டா
    மாடு குட்டி நு சொல்லாம ஏன் கண்ணு குட்டின்னு சொல்றோம்

    ReplyDelete
  6. >>>>வீட்டு வாசல்ல ஏழரை நாட்டு சனி எட்டி, என்னை உற்று பார்ப்பதை அறியாமல்...,

    வீட்டுக்குள்ளயே இருக்குமே, கண்ணாடி பார்க்கறதில்ல போல?

    ReplyDelete
  7. >>இட்லி பொடியை தொட்டு இட்லி சாப்பிட முடியும்.
    ஆனால், மூக்கு க்கு போதை வச்சு மூக்கை சாப்பிட முடியுமா?

    மூக்கு க்கு பொடி வச்சு மூக்கை சாப்பிட முடியுமா?

    கரெக்‌ஷன் ஃபீஸ் ரூ 50 அனுப்பவும்

    ReplyDelete
  8. >>அம்மா! அம்மா! எங்கேம்மா ஓடுறே. இனிமே இதுப்போல கேட்கமாட்டேன். வாம்மா வந்து உக்காரும்மா. இனி, சமர்த்தா படிக்கலாம். என் செல்ல அம்மா தானே நீன்னு கொஞ்ச ஆரம்பித்தபின் தான் மீண்டும அவன் அருகில் வந்தமர்ந்து பாடம் படிக்க ஆரம்பித்தோம்.

    ஹி ஹி சொந்தமா எழுதுன பேரா போல!!!!

    ReplyDelete
  9. அர்ஜீன் -ன் கோகுலம் , சரத் குமார் -ன் சூரியன் இந்த 2 பட டிவிடியும் அடிக்கடி பார்த்தீங்களா? ஹி ஹி

    ReplyDelete
  10. ரசித்தேன்.
    கண்ணுக்கு கண்ணாடி போடலாம். கண்ணாடிக்கு கண்ணு போட முடியுமா?
    தீபாவளிக்கு பொங்கல் வைக்கலாம். பொங்கலுக்கு தீபாவளி வைக்க முடியுமா?
    நல்லாயிருக்கு.பையன் உங்களவிட புத்திசாலினு தோனுது. கரெக்டா?

    ReplyDelete
  11. ஆஹா சூப்பரா கேள்விகேட்டு உங்களை தலை தெறிக்க ஒடவச்ச என் மருமகன் வாழ்க வாழ்க....!!!!

    ReplyDelete
  12. குழந்தைங்ககிட்டே நம்ம மேதாவி'தனத்தை காட்டுனா சனி என்ன சனி, ஏழரை சனியே தலையில வந்து உக்காந்துரும் சாக்குரதை ஹி ஹி...

    ReplyDelete
  13. தாங்கல ..தலை தெறிக்க ஓடறேன்...-:)

    ReplyDelete
  14. ஏழரை சனி //

    2மச்..மாத்துங்க...

    ReplyDelete
  15. இந்தக்காலத்துப் பசங்க!கொஞ்சம் எச்சரிக்கையாவே இருங்க!:)

    ReplyDelete
  16. இந்த காலத்து பிள்ளைங்க கிட்டருந்து நாம கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு .நான் ரொம்பவே கவனமா டீளிங்க்ஸ் வச்சுப்பேன் என் மகளுடன் .

    ReplyDelete
  17. ரசிக்கவைத்த பகிர்வு.

    ReplyDelete
  18. ஆஹா
    பிள்ளைகள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. ரூம் போட்டு யோசிப்பீங்களோ !! அருமை ...

    ReplyDelete
  20. எப்படிங்க இப்படியெல்லாம்...

    நல்ல யோசித்து அனைவரையும் சிரிக்க வச்சிருக்கிங்க....


    சூப்பர்...

    ReplyDelete
  21. பாண்ட் போட்டு முட்டி போடலாம். முட்டி போட்டு பாண்ட் போட முடியுமா:)))
    பள்ளியில் பனிஷ்மெண்ட் உண்டோ!!!
    இதைக் கேக்காம விட்டானே ஒரு எறும்பு நூறு யானைக் கடிக்க முடியும் நூறூ யானையும் ஒரு எறும்பைக் கடிக்க முடியுமா???????

    ReplyDelete