Thursday, October 12, 2017

மயிலாடுதுறை காவிரி புஷ்கரணி பயணக்கட்டுரை

செப்.19 மாலை 5மணிக்கு என்னை கட்டுன மனுசன்கிட்ட இருந்து போன்.. மயிலாடுதுறை காவேரி துலாக்கட்டத்துக்கு போக ஆஃபீஸ்ல முடிவாயிருக்கு. நீயும் பிள்ளைங்களும் வர்றீங்களான்னு.. ஊர்ப்பயணம்ன்னா நமக்கு கசக்குமா?! கூடவே நாமதான் மூட்டை, மூட்டையா பாவத்தை சேர்த்திருக்கோமே! காவிரி புஷ்கரணில முங்கி எந்திரிச்சாவது போகட்டும்ன்னு உடனே ஓகே சொல்லிட்டேன்.. சோத்து மூட்டையை கட்டிக்காத.. கடையில் சூடா வாங்கிக்கலாம்.. நைட் பதினோரு மணிக்கு கார் வரும். அதுக்கு தகுந்த மாதிரி ரெடியாகுங்கன்னு சொல்லிட்டாங்க.
அவுக, நானு, பசங்கன்னு சரியா பத்து மணிக்குலாம் ரெடியாகி உக்காந்திருந்தோம். சரியா 11 மணிக்கு கார் வந்திச்சு. அவருக்கு தெரியாம வீட்டுல இருந்த பண்டம், தண்ணி ஒரு பத்து லிட்டர்க்கு மேலன்னு எடுத்து வச்சிக்கிட்டேன். அவுக ஆஃபீசில் இருந்து தனசேகர் சார் வந்தார். அங்கிருந்து நேரா அவுக கூட வேலை செய்யும் சரஸ்வதின்றவங்க வீட்டுக்கு போய் சரஸ், அவங்க ரெண்டு பசங்கன்னு ஏத்திக்கிட்டோம். அடுத்து மாலா வீட்டுக்கு.. மாலாவும் அவங்க மகளும் வந்தாங்க. நானு, சரஸ், மாலா, மாலாவோட பொண்ணுங்கலாம் எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ். இதுக்கே வண்டி பிதுங்கிச்சு. அடுத்து இன்னொரு ஜெகதீசன் சார் வீட்டுக்கு போச்சு. அங்க அவர் மட்டுமே! கார்ல இடம் பத்தலை. அதுக்குள்ள கார் டிரைவர். இதுவே அதிகம் யாராவது போலீஸ் பார்த்தா எனக்குதான் டேஞ்சர்ன்னு சொன்னார்., சரி வேற வண்டி அரேஞ்ச் பண்ணிக்கலாம்ன்னு பல இடத்துலயும் ட்ரை பண்ணியும் வேற வண்டி கிடைக்கல. சரிங்க சார். நீங்கலாம் போங்கன்னு தீர்த்தம் மட்டும் கொண்டு வாங்கன்னு சொல்லி தனசேகர் சாரும் ஜெகதீசன் சாரும் இறங்கிட்டாங்க. விழுப்புரம், நெய்வேலி வழியா மயிலாடுதுறைக்கு கிளம்பினோம். நெய்வேலி சுரங்கத்துக்கெதிரே டீக்கடையில் டீ சாப்பிட்டோம். நமக்கு எப்பயும்போல டபுள் ஸ்ட்ராங்கோடு சர்க்கரை தூக்கலா காஃபி. எல்லோரும் தூங்க.. எப்பயும்போல தூக்கம் வராம நான் மட்டும் டிரவரோடு மொக்கை.. தூக்கம் வராம இருக்க மனுசன் இளையராஜா பாட்டு போடுவார்ன்னு பார்த்தா தேச.மங்கையர்கரசி பேச்சை போட்டு விட்டாரு :-(
அதிகாலை நாலு மணிக்கு மயிலாடுதுறைல கொண்டு போய் விட்டாரு. காலைக்கடன் முடிக்க, உடை மாற்ற மறைவிடம்ன்னு ரொம்ப சிரமம். அதுக்கு தகுந்த ஏற்பாட்டை அரசு செய்யல. பிரம்ம முகூர்த்தத்துல நீராடனுமாம். எங்களோட வந்தவங்க இந்த தண்ணிலயான்னு ஜகா வாங்க. அல்லாத்தையும் இழுத்துக்கிட்டு போய் எல்லா இடத்துலயும் தண்ணி மோண்டு அதுங்க தலையில் ஊத்தி இழுத்துட்டு வந்தேன். நாங்க பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி கரையேறும்போது ஸ்ரீமுத்தாட்சி அம்மன் தீர்த்தவாரில கலந்துக்க துலாக்கட்டத்தில் எழுந்தருளினார்.
ஸ்ரீமுத்தாட்சி அம்மன் தீர்த்தவாரில கலந்துக்கிட்டு மீண்டும் தன் ஆலயத்துக்கு திரும்பும்போது அம்மனுக்கு அணிவிச்ச வளையலை அங்கிருக்கும் பெண்களுக்கு பிரசாதமா கொடுத்தாங்க. வீட்டிலிருந்து கிளம்பும்போதே, கடவுளே! நான் ஒரு வேண்டுதலோடுதான் வரேன். நான் வீட்டுக்கு வர்றதுக்குள் நிறைவேறுமான்னு எனக்கு குறிப்பால் உணர்த்தனும்ன்னு சொல்லி வேண்டிக்கிட்டுதான் வந்தேன். அதேப்போல, அம்மன் பிரசாதம் வாங்கும்போது, நான் நினைச்சது நடக்கும்ன்னு எனக்கு நீ உறுதியளிக்குறதா இருந்தா சிவப்பு கலர் வளையலை கொடுத்து ஆசிர்வதிக்கனும்ன்னு வேண்டிக்கிட்டேன். முதல் கூடைல இருந்த வளையல்லாம் தீர்ந்துடுச்சு. மனசு சோர்ந்து போய்ட்டேன். எங்கிருந்தோ இன்னொரு கூடைல கொண்டு வந்த வளையலை அங்கிருக்கும் பெண்கள்கிட்ட கொடுத்துக்கிட்டே வந்தவங்க.. இதை கவனிக்காம நின்னிட்டு இருந்த என்னை வளையலை கொடுக்க கூப்பிட்டாங்க. சுத்தமா நம்பிக்கை அத்துடுமோன்னு மருகிட்டே போனா... என் கையில் சிவப்பு நிறை வளையல் வந்து விழுந்துச்சு! ஐ ம் ஹாப்பி முத்தாட்சி மேடம்! முத்தாட்சி ஈஸ் கிரேட்.
(அம்மன் கொடுத்த வளையலும்.. கஞ்சியும்...)
அனைத்து உயிர்களுக்கும் அம்மாவாச்சே! என் மனசுக்கு இதமா வளையலை கொடுத்தவ, வயித்துக்கும், குளிருக்கும் இதமா மூலிகை கஞ்சியை சுடச்சுட அங்கிருக்கும் பக்தர்கள் மூலமா எனக்கு கொடுத்தா. முத்தாட்சி ஈஸ் டபுள் கிரேட்... அப்புறம் அங்கிருந்து.. கூத்தனூர் சரஸ்வதி கோவில், திருமியச்சூர் லலிதாம்பிகை கோவில், தஞ்சை பெரிய கோவில், ஸ்ரீரங்கம், திருப்பட்டூர் பிரம்மன் கோவில்ன்னு பார்த்துட்டு ஹாப்பியா வீடு வந்து சேர்ந்தேன்.. அதுலாம் தனிப்பதிவா வரும்...
மயிலாடுதுறைல இருந்து நேரா கூத்தனூர் சரஸ்வதி கோவில்... கல்வி எத்தனை முக்கியமானது?! கல்விச்செல்வத்துக்கு உரிய கலைவாணி கோவில் பராமரிப்பின்றி இருக்கு. இத்தனைக்கும் சரஸ்வதிக்கென கோவில் தமிழகத்துல ஒன்றிரண்டுதான். அதுக்கே இந்த லட்சணம்... அங்கயே காலை டிஃபன். மிக சின்ன ஹோட்டல். சுத்தமா இருந்துச்சு.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படுது. சுவை சுமார்தான். வெங்கல டபராவில் காஃபி கொடுக்குறாங்க. என் சின்ன மகளுக்கு இது புதுசு. என்னைய மாதிரி வெளில காஃபி குடிக்காதவ அன்னிக்கு கேட்டு வாங்கி சாப்பிட்டா...
அங்கிருந்து பத்து நிமிட பயணம்... திருமியச்சூர் லலிதாம்பிகை கோவில்...மனசுக்கு அமைதியை கொடுக்குது இத்தலம். லலிதா சகஸ்ரநாமம் உருவான தலமாம்... பழக்கப்பட்ட துர்க்கை, தட்சிணாமூர்த்தி, சிவலிங்கம், வினாயகர்லாம்கூட புது வடிவில்.... அங்கிருக்கும் எல்லாரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சிற்பம் மேலிருக்கும் சிற்பம்... நேரடியா பார்த்தால் சிவன் பார்வதியை சமாதானப்படுத்தும் பாவம், இடப்பக்கம் சிவனுடன் ஊடல் கொண்டாடி பார்வதி கோபமாய் இருக்கும் பாவம்.. வலப்பக்கத்திலிருந்து பார்த்தால் சிவனின் பேச்சைக்கேட்டு சமாதானமாகி புன்முறுவல் செய்யும் பாவம்... பார்வதி ஏன் கோவமாய் இருக்கான்னு திருமியச்சூர் பதிவில் பார்க்கலாம்... கோவிலில் ஒரு பெரியவர் கேக்காமயே கோவிலோட சிறப்புகள், சிற்பத்தை பத்தி பொறுமையா சொல்லிக்கிட்டு வந்தார்,.டீ செலவுக்கு வச்சிக்கோங்கன்னு சொல்லியும் பைசா வாங்க மறுத்திட்டார்.

என் உலகம்லாம் ரொம்ப சின்னது.... தஞ்சை, மகாபலிபுரம், சென்னை,  கன்னியாகுமரி, எங்க குலதெய்வம் இருக்கும் ஊர், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில்... இது மட்டுமே எனக்கு நினைச்சாலே புத்துணர்ச்சி தரக்கூடியது. ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம்  தஞ்சை பெரிய கோவிலைவிட கலை நயமிக்கதுன்னு படிச்சாலும் மகனைவிட அப்பாவே என்னை கவர்ந்தவர். இத்தனைக்கும், அருள்மொழிவர்மருக்கு முன்னாடியே ராஜேந்திர சோழந்தான் எனக்கு அறிமுகம்.  என் ரொம்ப நாள் ஆசை முழுநிலவு நாளில் தஞ்சை பெரிய கோவிலில் தனிமையில் வானதிம் பூங்குழலி, சேந்தன் அமுதன், வந்தியதேவன், நந்தினி, ஊமைராணி, சுந்தர சோழன், பழுவேட்டாரையாரோடு ஒரு கான்ஃபிரன்ஸ் மீட்டிங்க் போடனும்ன்னு.... 
அங்கிருந்து ஸ்ரீரங்கம்..  கலை அழகு கண்ணுக்கும், இறை நாமம் காதுக்கு மட்டுமே விருந்தளிக்கும். ஆனா வயித்துக்கு?! ஹைவேஸ்ல இருக்கும் அடையார் ஆனந்த பவன்தான்  விருந்தளித்தார்.   இப்பத்திய பசங்களுக்கு ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் மட்டும்தான் பிடிக்குது.. சாம்பார் சாதம், ரசம் சாதம்லாம் பிடிக்காதுப்போல! 
மாலை 4 மணிக்கு ஸ்ரீரங்கம் காவேரிக்கரை... காலைல மயிலாடுதுறையில் குளிச்ச தண்ணி  உடலெல்லாம் பிசுபிசுப்பு... ஒரு மாதிரி அன் ஈசியாதான் இருந்துச்சு. காவிரியில் தண்ணி ஓடுனதை பார்த்ததும் குளிக்கலாம்ன்னா சளி பிடிச்சுக்கும்ன்னு சொல்லி யாரும் வரல. எங்க குடும்பமும், ட்ரைவர் மட்டுமே குளிச்சோம்.  யானைக்குட்டிங்க போல தண்ணிய விட்டு எழுந்துவர மனசே வரல.   ( நான் எங்க இருக்கேன்னு சொல்லுங்க பார்ப்போம்..)
எனக்கும் ஸ்ரீரங்கனுக்கும் எப்பயுமே ஏழாம் பொருத்தம் !! எப்ப போனாலும் என்னை பார்க்க ரங்கு அப்பாயின்மெண்ட் கொடுக்க மாட்டாப்ல. நாங்க போனது புரட்டாசி மாதம் பிறப்பன்று... ஆகா! புரட்டாசி தொடக்கத்தில நாம பகவானை கும்பிடப்போறோம்ன்னு ஆசையாய் போய் லைன்ல நின்னா அங்கிருந்த போலீஸ்கார், கோவில் தரிசனத்துக்கு 7 மணிக்குதான் திறப்பாங்க. நீங்க சாமி கும்பிட எப்படியும் 9 மணிக்கு மேல ஆகிடும்ன்னு சொல்லி எச்சரிச்சார். மறுநாள் பிள்ளைகள் கல்லூரி, பள்ளிக்கு போகனும்ன்னு நாங்க ரங்கனை பார்க்காமயே வந்திட்டோம். வைகுண்டத்துலதான் அவனை சந்திக்கனும்ன்னு இருந்தா விதி விடவா போகுது?!
எந்த ஆன்மீக சுற்றுலாவா இருந்தாலும் பெரும்பாலும் மும்மூர்த்தில சிவன், விஷ்ணுவை தரிசிப்பாங்க. இது பிளான் பண்ணாலும் பண்ணலைன்னாலும் அப்படிதான் அமையும். சரி, மும்மூர்த்திகளில் ரங்கனைதான் பார்க்க முடில பிரம்மனையாவது தரிசிப்போம்ன்னு சொல்லி அடுத்து வண்டிய திருப்பட்டூர் பிரம்மன் கோவிலுக்கு விடச்சொன்னோம். ரொம்ம்ம்ம்ப நாள் ஆசை இந்த கோவிலுக்கு போகனும்ன்னு...  ஏழு மணிக்கு கோவில் சாத்திடுவாங்கன்னு அடிச்சு பிடிச்சு போனோம்... 
நாங்க போன நாள் பிரதோச தினம்.. அப்பதான் பிரதோச அபிசேக ஆராதனை முடிஞ்சு சிவன் ஆய்ஞ்சு ஓய்ஞ்சு நந்தியம்பெருமானோடு உக்காந்தார். அவர்கிட்ட போய் ஒரு ஹலோ போட்டுட்டு.. பிரம்மனை தரிசிச்சிட்டு 9 மணிக்கு ஊருக்கு திரும்ப ஆரம்பிச்சோம். ஹைவேஸ் ஆரிய பவன்ல சில்லி பரோட்டா, நான், நூடுல்ஸ், சோலோ பூரின்னு பசியாத்தியாச்சு. இதுமாதிரி டூர் போகும்போது, கடைசி நாள் அன்னிக்கு வீட்டுக்கு திரும்பும்போது  பத்திரமா வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்ததுக்கு நன்றி சொல்லி  சின்னதா ஒரு கிஃப்ட் வாங்கி, கொடுப்பது வழக்கம். அந்த ஹோட்டல்ல மண்ணாலான குயில் பொம்மை இருந்துச்சு. அப்படியே ஊதுனா சாதாரண விசில் சவுண்டும், குயிலோட வால் பகுதியில் இருக்கும் துளையில் தண்ணி ஊத்தி ஊதுனா குயில் மாதிரியும் சத்தம் வரும். அந்த குயில் பொம்மையை ட்ரைவரோட குழந்தைகளுக்கு கிஃப்டா கொடுத்தனுப்பிச்சேன். கூடவே என் மகனுக்கும் ஒன்னு வாங்கியாச்சு. ஏன்னா அவன் எங்களோடு வரல. திடீர்ன்னு கிளம்புனதால குழந்தைய கூப்புட்டுக்க முடில.. 
கூத்தனூர் சரஸ்வதி கோவில், திருமியச்சூர் லலிதாம்பிகை கோவி, தஞ்சை, ஸ்ரீரங்கம், திருப்பட்டூர் பத்தி தனித்தனி பதிவா வரும்.  காவேரி புஷ்கரணி போய் ஒரு மாசமாச்சு . இதானா ராஜி உன் டக்குன்னு கேக்காதீங்கப்பா. நவராத்திரி ஸ்பெஷல் பதிவுகள், ஆயுத பூஜை கொண்டாட்டம், காய்ச்சல்ன்னு.. அத்தனை பிசி... படங்கள் மொபைல்ல எடுத்தது, என் கேமரா கிழ விழுந்து உடைஞ்சிட்டுது.. அது ரிப்பேர் பண்ணுற வரை இப்படிதான்....

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்,
ராஜி.

10 comments:

  1. பயணக்குறிப்புகள் நல்லாத்தான் இருக்கு கோயிலில் போயும் கடவுளை லந்து பண்ணுறீங்களே.... தெகிரியந்தேன்...

    ReplyDelete
    Replies
    1. லந்து பண்ணுறதுன்னு முடிவாகிட்டுது. அப்புறம் கடவுள் என்ன?! கணவனென்ன?!

      சாமிக்குலாம் பயப்படக்கூடாதுண்ணே. சாமி நமக்கு நல்லது செய்ய மட்டும்தான்..

      Delete
  2. படித்தேன்,ரசித்தேன்.

    ReplyDelete
  3. படங்களும் பயண விவரங்களும்அருமை
    தம +1

    ReplyDelete
    Replies
    1. கரந்தை உங்களை வரவேற்கிறதுன்னு போர்ட் பார்த்ததுமே உங்க ஞாபகம்தான்ண்ணே. பார்க்கும் பள்ளிகள், தமிழ் சங்கம் சம்பந்தமான நோட்டீஸ்ன்னு ராஜராஜ சோழனுக்கு அடுத்து உங்க நினைவுதான்

      Delete
  4. கடவுளுக்கு பரிட்சையுமா? சரி ராஜி கிட்ட வச்சிக்குடாது வஞ்சிப்புடுவானு கடவுளும் பயப்படுறாரு போங்க
    போனில் என்றாலும் படங்கள் அருமை. நீங்களா போட்டோவில் குழந்தைகளுடன் ?நல்ல இருந்து பயணம்

    ReplyDelete
    Replies
    1. இப்பதான் சில நாட்களாக இந்த பழக்கம்,... ஜீ டிவில இரவு 9 மணிக்கு தலையணைப்பூக்கள்ன்னு ஒரு சிரியல் போடுவாங்க. அதுல நாகராஜன் - வேதவள்ளி ஜோடி இப்படிதான் செய்வாங்க. அதுமாதிரி....

      எனக்கு சாமிக்கிட்ட வேண்டிக்க எதுமே இல்ல.

      Delete