Tuesday, September 28, 2010

சிரிக்க மட்டும்

கணினி பொறியாளர் தன காதலை இப்படிதான் சொல்வார்

ஆண்: உன் பெயர் என்ன? கூகுளா?
பெண்: என்ன உளர்றே?
ஆண்; நான் தேடும் அனைத்தும் உன்னுள் உள்ளதே அதான் கேட்டேன்.

முன்னவர்: மாப்பிள்ளை போலி கணினி பொறியாளர் எப்படி சொல்றே?
பின்னவர்: எங்க வீட்டு கம்ப்யுட்டர்ல வைரஸ் வந்துருக்குனு சொன்னா,
ஏன் நீங்க தடுப்பூசி போடலயானு கேட்குறார்.

முன்னவர்: அலாரத்தை கண்டுபிடிச்சவந்தான்முழுமுதல் சோம்பேறி .
பின்னவர்: இல்ல, இல்ல, ஸ்நூஸ் அ கண்டுபிடிச்ச எங்க ஆளுதான் முழு முதல் சோம்பேறி.

மனைவி: நம்ம பையன் என்னவா வர ஆசைப் படுறீங்க?
கணவன்: அவன் என்னவாவது ஆகித் தொலைக்கட்டும், ஆனா, யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது. நான் பட்ட கஷ்டம் என்னோடு போகட்டும்.

மனைவி: ஏங்க? சமையல்காரியை நிறுத்திட்டு, நானே சமைக்குறேனே, எனக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க.
கணவன்: சம்பளமெல்லாம் எதுக்கும்மா. நீ சமைக்க ஆரம்பிச்சுட்டா, என் இன்சூரன்ஸ் பணம் மொத்தம் உனக்குதானே.

மனைவி: ஏங்க , அதோ உக்காந்து தன்னியடிச்சுக்கிட்டு இருக்காரே அவரு ஒரு முறை என்னை பொண்ணு பார்க்க வந்துட்டு, நான் கிடைக்காமல் போகவே இத்தனை வருஷமா தண்ணி அடிச்சுக்கிட்டு இருக்காருங்க.
கணவன்: இத்தனை வருஷமாவா அந்த சந்தோசத்தை கொண்டாடிக்கிட்டு இருக்கான்.






No comments:

Post a Comment