Thursday, September 30, 2010

மரண அழைப்பு

தாயாக மாறி
அன்பை தந்துவிட்டு...,
தந்தையாய் மாறி
அறிவைத் தந்துவிட்டு ...,
உடன்பிறப்பாய் மாறி
பாசத்தை தந்துவிட்டு...,
நண்பனாய் மாறி
தோள் தந்துவிட்டு...,
இணையாய் மாறி
காதலை தந்துவிட்டு..,

பால்ய பருவத்து "நிலா"
பருவமெய்தியதும்,
தூர, தூர, தூர...,
செல்வதுப் போல்
விலகி தூர சென்றவளே...,

"மறக்காமல்
வந்துவிடு என் மரணத்திற்கு".

No comments:

Post a Comment