Thursday, September 30, 2010

"நாளைய பாரதம்'

என் மகன் நல்லா படிப்பான், ஆனால், கமல் ஸ்டைல் ல சொல்லனும்னா எழுதனும்னு வந்தாதான் வார்த்தைதான், பேனாதான்..,
என் மகள் நீதான் பெரிய கவிஞர் ஆச்சே (இது உணர்ந்து இல்ல. ரத்த பாசத்துல) உன் புள்ளைக்கு ஒரு கவிதை எழுது. உன் புள்ளை அப்பவாவது படிக்குறானா பார்க்கலாம் என்றாலே பார்க்கலாம்.
இது நம்ம பிரஸ்டிஜ் பிராப்ளம் ஆச்சே.
ஒரு நொடியில(நிஜமாவே ஒரு நொடியில் வந்து விழுந்த கவிதை)
இனி உங்க தலையெழுத்து...,


விழித்திடு...., மகனே
விழித்திடு ..., உன்
அறியாமை இருள் அகற்றிட,
கல்வி கற்று,
நம்(உன்) வாழ்வில் ஒளி ஏற்றிட
விழித்திடு..., மகனே,
விழித்திடு...,
"நாளைய பாரதம்"
உனக்காக காத்திருக்கிறது...,


பின் குறிப்பு: தலைப்பு என் மகள் தந்தது.(இதை சொல்லாட்டி பெரிய யுத்தமே வெடிக்கும் என எச்சரிக்கை)


No comments:

Post a Comment