Wednesday, August 30, 2017

காக்கை சிறகினிலே நந்தலாலா... நிந்தன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா - மௌன சாட்சிகள்

மாகாகவி பாரதியார் தன் இறுதிகாலத்தில் வாழ்ந்த திருவல்லிகேணி பாரதியார் இல்லத்தைதான் இந்தவாரம் மௌன சாட்சிகளில் நாம பார்க்கப் போறோம்.  கண்ணன் மேல் தீராத காதல் கொண்ட வீர கவிஞனின் வாழ்ந்த இடத்தில் நிற்கிறோம்ன்ற நினைவே நம்மை இனம்புரியா உணர்ச்சிகள் மனசுல கரைப் புரண்டோடுது.

வீட்டுக்குள் நுழைந்ததும் 
தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?ன்னு 
பாரதி பாடியது காதோரம் கேட்டது பிரமையா!? இல்ல நிஜமா!? பெண்களின் விடுதலைக்கு அன்றே அஸ்திவாரம் போட்ட முதல் கவிஞன் இந்த பாரதி தான். இந்த பாடல் எழுதப்பட்ட சூழ்நிலையை பத்தி எங்க தமிழ் சார் அழகாக சொல்லுவார். அந்த நாட்களில் பாரதி தன் மனைவி  செல்லம்மாவின் தோளில் கையை போட்டுக்கொண்டுதான் தெருவில் அழைத்துச் செல்வாராம். அப்படி செல்லும்  போதுபெண்களை அடுக்களையில் வைத்து இருந்த அந்த காலத்தில்இப்படி செய்கிறாரே! என ஊரில் உள்ளவர்கள் "பைத்தியங்கள் ஊர் சுற்ற கிளம்பி விட்டன"ன்னு பரிகாசம் செய்வார்களாம். 

அப்படி செய்பவர்களை பார்த்து செல்லம்மாள் வருத்தப்படுவாராம். தன்னால் தானே தன் கணவருக்கு இந்த அவமரியாதை  என. அவளை சமாதானப்படுத்த பாடப்பட்ட பாடல்தானாம்  இது. என்ன அற்புதமான புதுமை சிந்தனையை கொண்டவன் இந்த பாரதி. வாங்க அவருடைய  நினைவு இல்லத்தின் உள்ளே போலாம்.  இங்க ஒரு நூலகமும் இயங்குது .
இந்த வீட்டுல அவரது மார்பளவு உருவச் சிலை ஒண்ணி வைக்கப்பட்டிருக்கு.  மேலும் வீடு புதுப்பிக்கும் வேலைலாம் நடக்குறதால சில இடங்களை மட்டுமே பார்க்கமுடியும்.  அங்க இருபவர்கள் புகைப்படம் ஃபோட்டோ எடுக்க பெர்மிஷன் கொடுக்க தயங்குறாங்க.  அங்க ஒரு தற்காலிக அலுவலகமும் இயங்குது.

நமக்குத் தொழில் கவிதைநாட்டிற்கு உழைத்தல்இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி 
இதுதான் அவர் ஃபோட்டோ,  அவர் எழுதிய நூல்கள் அவருடைய வாழ்க்கை வரலாறு அடங்கிய தொகுப்புகள் வைத்திருக்கும் அறைக்கு செல்லும் முகப்பு.  அங்க அவரது கையெழுத்துடன் கூடிய ஒரு போட்டோ இருக்கு. அதுல காம்பீரமா இருக்கிறார் நம் மீசைகவிஞன்

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன்அவனே கவி - பாரதி.

இங்கே நிறைய ஃபோட்டோக்கள் இருக்கு. அவர் கையெழுத்துடன் கூடிய போடோஸ் இருக்கு அதில் சில போடோஸ் பத்தி பார்க்கலாம்   
அவரது கையெழுத்துடன் கூடிய ஒரு அகராதி பிரதியுடன் போட்டோ கோப்பி வச்சு இருக்காங்க.


எட்டயப்புரத்தில் சின்னச்சாமி, லட்சுமி அம்மாளுக்கு 11.12.1882 அன்று பிறந்தார். தனோட 14 வது வயதில் 7வயது செல்லம்மாவை மணந்தார். சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்து அத்தையின் ஆதரவோடு காசியில் கல்விச் செல்வத்தை பெற்றார்.

தன்னோட 11 வயதில் எட்டயப்புரத்து சமஸ்தானத்துல பெரிய பெரிய புலவர்களால் சோதனைக்குட்பட்ட பாரதி புடம் போட்ட தங்கமாய் வெளி உலகத்திற்கு ஒளி வீசினார்.




இந்த வீட்டின் பழைய புகைபடம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் திருவல்லிக்கேணியில் வசித்த வீட்டை, தற்பொழுது தமிழக அரசு பராமரித்து வருது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் 1908ம் ஆண்டு தேடப்பட்டு வந்தார். அப்ப பாரதியார் புதுச்சேரியில் இருந்தார்.

பின்னர் 1920ம் ஆண்டு,பாரதி சென்னைக்கு வந்து சுதேசமித்திரன் பத்திரிகையில் பணியாற்றினார். அப்போது, திருவல்லிக்கேணியில் ஒரு அறை, மற்றும் சமையலறை கொண்ட சிறிய வீட்டில் தமது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.
 
தன் வீட்டிலிருந்து தினமும் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிப்பது பாரதியின் வழக்கம். அப்படி ஒருநாள் இறைவனை தரிசிக்க செல்லும்போது தினமும் வாழைப்பழம் கொடுத்து தன் அன்புக்கு பாத்திரமான கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டு சில் நாள் உடல் நலிவாயிருந்து 12.9.1921 அன்று நள்ளிரவு தனது 39 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

பாரதியாரின் ஆயுட்காலம் போலவே என்னோட கேமரா ஆயுட்காலமும் (அதாங்க பேட்டரி) சீக்கிரமே முடிஞ்சுட்டுதால, நிறைய புகைப்படங்கள் எடுக்க முடியலை.

காக்கை சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரிய நிறம் தோனுதையே நந்தலாலா

காக்கை சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரிய நிறம் தோனுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா
நின்றன் பச்சைநிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா
நின்றன் பச்சைநிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்க்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா
நின்றன் கீதமிசைக்குதடா நந்தலாலா
காக்கை சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரிய நிறம் தோனுதையே நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தாய் நந்தலாலா
நின்னை தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா
நந்தலாலா நந்தலாலா

நிறைய படங்களோட வேற ஒரு இடத்திலிருந்து மௌனச்சாட்சிகள் பகுதிக்காக சந்திக்கலாம்.கடைசி படம் நெட்டுல சுட்டது.

இது ஒரு மீள் பதிவு....

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1470625


நன்றியுடன்,
ராஜி.

18 comments:

  1. அருமையான தகவல்கள் பகிர்வுக்கு நன்றி
    த.ம. விழுந்ததா தெரியவில்லை,,,,

    ReplyDelete
    Replies
    1. விழலைண்ணே

      Delete
    2. பலமுறை முயன்றும் சேர்ந்து விட்டதாக சொல்கிறதே...

      Delete
    3. விடுங்கண்ணே

      Delete
  2. அருமை.............பதிவுக்கு நன்றி......

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  3. நல்ல தகவல்கள். பாரதி படம் பார்த்திருக்கிறீர்கள்தானே?
    தம மூன்றாம் வாக்கு.

    ReplyDelete
    Replies
    1. பாரதி படம் பார்த்திருக்கேன். ஆனா, எதுக்கு இந்த கேள்வின்னுதான் புரில

      Delete
  4. அருமையான தகவல்கள் சகோ/ராஜி.

    ReplyDelete
  5. ஒருமுறை அவசியம் பார்த்திட மனம்துடிக்கிறது சகோதரியாரே
    தம+1

    ReplyDelete
    Replies
    1. தமிழ் பற்றாளர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடம்ண்ணே

      Delete
  6. #தன் வீட்டிலிருந்து தினமும் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிப்பது பாரதியின் வழக்கம்#
    இப்படி கும்பிட்டவரை யானை எதற்கு மிதித்ததோ ?கடவுளுக்கே அடுக்குமா இது :)
    த.ம. விழுந்ததா தகவல் வருதே !

    ReplyDelete
    Replies
    1. மதுரை குசும்பு...?

      Delete
    2. இதை கேட்டா கர்மான்னு சொல்வாக

      Delete
  7. அந்த காலத்திலேயே மனைவியின் தோள் மேல் காய் போட்டு புகைப்படத்துக்கு ஒரு போஸ்...

    செம கெத்து நம்ம புரட்சி...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் அதான் புரட்சி கவிஞன்

      Delete
  8. ஏற்கனவே இந்த படங்களை ரசித்தது உண்டு ராஜிக்கா..
    ....

    அன்றில் இருந்து சென்னை செல்லும் போது கண்டிப்பாக ஒருமுறை இங்கு செல்ல வேண்டும் என்பது அவா...

    ஆனால் அதன் பின் சென்னை செல்லும் வாய்ப்பு தான் கிட்ட வில்லை ..

    விரைவில் அங்கு சென்று அந்த வீட்டையும் ..படங்களையும் காண வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. இது மீள் பதிவுப்பா

      Delete