Saturday, August 26, 2017

அத்தை மகனே போய் வரவா?!

என் பெரியம்மாக்கு கல்யாணம் ஆகும்போது என் அப்பாரு சின்ன புள்ளை. என் அப்பாவோட அம்மாவும், என் அம்மாவோட அப்பாவும் உடன்பிறந்தவர்கள். அதாவது விளக்கமா சொல்லனும்ன்னா என் அம்மாக்கு என் அப்பா முறைப்பையன்.

என் பெரியம்மா கல்யாணம் கட்டிக்கிட்டு மாமியார் வீட்டுக்கு கிளம்பும்போது எல்லார்க்கிட்டயும் சொல்லிக்கிட்டு, அப்படியே என் அப்பாக்கிட்ட வந்து  போய்வரேன்னு சொல்லும்போது சரியா இந்த பாட்டு ஒலிச்சதாம். இந்தன் பாட்டை எப்ப கேட்டாலும் அப்பா இதை சொல்வாரு.  இப்பலாம் அப்பா கண்ணுல தண்ணி வழியும்., காரணம் பெரியம்மா இப்ப இல்ல. ஆனா அப்பா நினைவில் இருக்காங்க..
படம்

அத்தை மகனே போய் வரவா1?
அம்மான் மகனே போய் வரவா?!
உந்தன் மனதை கொண்டு செல்லவா!?
எந்தன் நினைவை கொண்டு செல்லவா?!


மல்லிகை மலர் சூடி காத்து நிக்கவா?!
மாலை இளம் தென்றல் தூதுவிடவா?!
நல்லதோர் நாள் பார்த்து சேதி சொல்லவா?!
நாட்டோரை சாட்சி வைத்து வந்துவிடவா?!

அத்தை மகனே போய் வரவா1?
அம்மான் மகனே போய் வரவா?!
உந்தன் மனதை கொண்டு செல்லவா!?
எந்தன் நினைவை கொண்டு செல்லவா?!

பெண் பார்க்கும் மாப்பிள்ளை முகம் பார்க்கவா?!
முகம் பார்க்க முடியாம நிலம் பார்க்கவா?!
நிலம் பார்த்து உன்னை நாடவா?!
உன்னை நாடி.... உன்னை நாடி....
உன்னை நாடி .... உன்னை நாடி உறவாடவா?!

அத்தை மகனே போய் வரவா1?
அம்மான் மகனே போய் வரவா?!
உந்தன் மனதை கொண்டு செல்லவா!?
எந்தன் நினைவை கொண்டு செல்லவா?!













தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1468381
நன்றியுடன்,
ராஜி

7 comments:

  1. அருமையான பதிவு

    ReplyDelete
  2. நல்லதொரு பாட்டுப் பகிர்வு!!

    ReplyDelete
  3. என்னாச்சு ராஜி த ம லிங்கும் இல்லை...பெட்டியும் இல்லை...

    கீதா

    ReplyDelete
  4. நல்ல பாடல். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    த.ம. மூன்றாம் வாக்கு.

    ReplyDelete