Friday, October 11, 2013

அஷ்டலஷ்மி திருக்கோவில் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

இந்தியாவில் மும்பை நகரம் செல்வச் செழிப்புடன் இருப்பதற்கு காரணம் அங்கு கோயில் கொண்டு வீற்றிருக்கிற மகாலக்ஷ்மி தாயார்தான். அந்த மகாலக்ஷ்மியின் திருக்கோவிலை போல ஒரு கோவிலை சென்னையில் அமைக்கனும்ன்னு காஞ்சி பெரியவர் விரும்பினாராம்.  அந்த திருப்பணியை முக்கூர் சீனிவாச வரதாச்சாரியார் என்பவரிடம் ஒப்படைத்தாராம்.  அதன்படி சென்னை, பெசன்ட் நகரில் உள்ள ஓடைமாநகர் ன்ற இடத்துல வங்க கடற்கரையோரம் 1974 ம் ஆண்டு இக்கோவிலின் திருப்பணிகள் தொடங்கப்பட்டதாம்.  பெரும்பாலும் திருத்தலங்கள்லாம் ஆறுகள்,  குளங்கள் , கிணறுகள் இவைகளே தீர்த்தங்களா காணப்படும்.  ஆனா,  இக்கோவில் வங்க கடலையே தீர்த்தமாக (புஷ்கரணியாக) கொண்டிருக்கு. இது இக்கோவிலின் சிறப்பாகும் சரி இனி கோவிலினுள் போகலாம் வாங்க ...,,

இந்த கோவில் கிழக்கு நோக்கி, வங்கக் கடலை பார்த்த வண்ணனம் அமைந்துள்ளது.  45 அடி நீளமும், 45 அடி அகலுமும் உள்ள சதுர அமைப்பில் 63 அடி உயரத்தில் இந்த கோவில் அமைக்கப்பட்டிருக்கு.  தரைதளத்தில் கிழக்கு நோக்கி மகாலக்ஷ்மி உடனுறை மகாவிஷ்ணு திருமணக்கோலத்தில் காட்சி தருகின்றார். கருவறையின் முன்புறம் 24 தூண்களுடன் கூடிய காயத்ரி மண்டபம் அமைந்திருக்கு.  அஷ்டலக்ஷ்மியின் சன்னதி விமானத்தில் ஒன்பது சக்திகள் அமைந்துள்ளன. அதேப்போன்று தரைபகுதி சக்கரமாகவும், மொத்த அமைப்பு மேருவாகவும், தரிசனத்திற்கு மேலே சென்று இறங்கிவரும் பாதை ஓம் வடிவமாகவும் கட்டப்பட்டுள்ளது இதன் சிறப்பு .
   

மாகாலக்ஷ்மி சன்னதியை தரிசனம் செய்துட்டு வரும்போது 18 படிக்கட்டுகள் இருக்கு.  அவை 18 தத்துவங்களை நமக்கு உணர்த்துவதாக அமைக்கப்பட்டுள்ளது.  சிற்ப ஆகமசாஸ்திரப்படி அவை குறுகலாக 28 அங்குல அளவு கொடுத்து அமைக்கப்பட்டிருக்கு.  மேலே ஏறி சென்றால் முதல் தளத்தின் கிழக்கே கஜலக்ஷ்மியையும் ,தெற்கே சந்தானலக்ஷ்மியையும் மேற்கே விஜயலக்ஷ்மியையும், வடக்கே வித்யாலக்ஷ்மியையும் ஆகிய நான்கு லக்ஷ்மிகளின் தரிசனம் மட்டுமே கிடைக்கும் அடுத்தடுத்த படிகளில் மேலே ஏறிசென்றால் இரண்டாம் தளத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ள தனலட்சுமியை தரிசிக்கலாம்.

தனலக்ஷ்மியை தரிசனம் செய்துவட்டு மண்டபம் வழியே கீழே இறங்கி வந்தால் தெற்கே ஆதிலக்ஷ்மி, மேற்கே தான்யலஷ்மி வடக்கே தைரியலஷ்மியையும் தரிசிக்கலாம்.  இந்த கோவில் ஓம் எனும் எழுத்தின் வடிவில் அமைந்துள்ளதால் இந்த கோவிலுக்கு ஓம்காரதலம்ன்னு  அழைக்கபடுது.   வற்றாத வங்கக்கடல் எப்போதும் ஓம் என்றே முழங்கி கொண்டு இருக்கிறது. இதனாலும் இப்பெயர் கொண்டு அழைக்கபடலாம். 





நாம் மேலே ஏறி செல்லும் போது திருக்கோவிலின் தென்கிழக்கு பகுதியில் மஹாலக்ஷ்மி திருமாலுக்கு மாலையிடும் காட்சியும், அருகில் பரமேஷ்வரன், பிரம்மா,இந்திரன், சூர்யன், சந்திரன், நாரதர், அக்னி, சுகர், வருணன், வாயு துர்வாசர், வசிஷ்டர் அனைவரும் இந்த மங்களகரமான காட்சியை பார்ப்பது கலையுணர்வுடன் வடிவமைத்திருப்பது காணத்தக்கது. தென்கிழக்கு பகுதியிலுள்ள வைகுண்ட தரிசனகாட்சி அழகான கூர்ம பீடத்தின் மேல் எட்டு இதழ்கள் 4 வீதம் கொண்ட பத்ம பீடத்தில் சாமரம் வீசுகின்றனர்.


ஆதிசேஷன் படுக்கையின் மேல் சங்கு, சக்கரம், கதை இவைகளுடன் அலங்காரத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியாருடன் திருமால் காட்சியளிக்கிறார் . ஒருபுறம் வைந்தேயரும், ஒரு புறம் விஸ்வக்சேனர் ,இந்திரர், சனகர் , சனந்தனர், சனாதனர் போன்றோரும் வைகுண்ட நாதனை தரிசனம் செய்யும் காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கு.  வடமேற்கு பகுதியில் அத்வைதம் அளித்த சங்கரரும், விஷிச்டத்வைதம் நிறுவிய ராமனுசஜரும், துவைததை நிறுவிய மத்வாச்சரியரும்கூட வீற்றிருக்கின்றனர். திருகோவிலின் வடமேற்கு பகுதியில் விஜயலக்ஷ்மியை தரிசனம் செய்து விட்டு வித்யாலக்ஷ்மியை தரிசிக்க வரும் வழியில் சித்ரவேலைபாட்டில் கல்விக்கடவுளான, லட்சுமிஹயகிரீவரும், அவரை துதிக்கும் நிகமார்ந்த மாகா தேசிகனையும் காணலாம்.
அடுத்தாற்போல் லக்ஷ்மி உடனுறை வராக மூர்த்தியையும் தரிசிக்கலாம். கஜலக்ஷ்மி சன்னதியில் தரிசனம் முடிந்த பின், பதினெட்டுப் படிகள் மேலே ஏறி இரண்டாம் தளத்திலுள்ள தனலஷ்மி சன்னதிக்கு செல்லும் வழியில் நிகமார்ந்த தேசிகன் திதி கொல்வதையும், திருமகள் காட்சி தந்து பிரம்மச்சாரிக்கு பொன்மாரி பொழிவதையும் விவரிக்கும் கதை சிற்பங்கள்  காணப்படுது.  தனலக்ஷ்மி சன்னதியின் முன்பு பெரும் வட்டமான மாடத்தில் பத்மாசனத்தில் வீற்றிருக்கும் கோலத்தில் மகாலட்சுமி திருவுருவமும் , தனலக்ஷ்மியை சுற்றி வரும்போது தென்புறம் தட்சிணாமூர்த்தியும் மேற்குபுறம் அனந்தசயன பெருமாள் திருவுருவமும், பாதசேவை செய்யும் அலைமகளும், நாபிகமலத்தில் பிரம்மாவும் காட்சி தருகின்றனர். 

பிரதான கர்ப்ப கிரகம் 10 அடி அகலத்தில் 14 அடி உயரம் உடையது. கருங்கல் சுவரால் மேல்பகுதி அமைக்கப்பட்டிருக்கு. மூலவர் மகாலட்சுமி தாயார் பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலத்தில் இரண்டு திருக்கரங்களிலும் அபய வரத  முத்திரைகளுடன் காட்சியளிக்கிறாள். உற்சவ மூர்த்தியாக ஸ்ரீனிவாசர் என்னும் பெயரோடு மகா விஷ்ணு அருள்புரிகிறார். மகாலக்ஷ்மியும் மஹா விஷ்ணுவும் திருமணகோலத்தில் நின்ற வண்ணம் உள்ளதால் எப்பொழுதும் மகாலக்ஷ்மிக்கு 9 கஜம் பட்டுப்புடவையும் மகா விஷ்ணுவிற்கு 10 முழ வேட்டியும் கட்டப்படுது.
இத்தலத்தின் தல விருட்சம் வில்வமரம். வில்வ மரம் லட்சுமிக்குக்கு உகந்தது, அதில் லட்சுமி வாசம் செய்கிறாள் என சொல்வதுண்டு. வில்வத்தின் வேர் முடல் நுனி வரை லட்சுமி குடி இருப்பதாக ஐதீகம்.


இக்கோவிலில் தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. வழிபாட்டு முறை பஞ்சராத்திர ஆகமம்.



இக்கோவிலில் மேலும் விஷ்ணுவின் தசாவதாரச் சன்னிதி, கமல விநாயகர் சன்னிதி, குருவாயூரப்பன் சன்னிதி, சக்கரத்தாழ்வார்- யோக நரசிம்மர் சன்னிதி, ஆஞ்சநேயர் சன்னிதி, தன்வந்திரி சன்னிதி, கருடாழ்வார் சன்னிதியும் அமைந்திருக்கு.

 குழந்தை தாய்ப்பாலுக்கு பின் திட தான்ய உணவை முதன் முதலாக உட்கொள்ள தொடங்க, ஒரு நல்ல நாளில் இக்கோவிலில் இருக்கும் குருவாயூரப்பன் சன்னிதியில் பூஜை புணஸ்காரம் செய்து , திருமஞ்சனத் தீர்த்தத்தை தருகின்றனர்.  மேலும் திருப்பவித்ர உற்சவம், மார்கழிதிங்கள், கோகுலாஷ்டமி, தீபாவளி, நவராத்திரி, திருக்கார்த்திகை விழாக்கள்ல்லாம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுதாம்.


அஷ்ட லட்சுமிகளும், ஒரே இடத்தில் அஷ்டாங்க விமானத்தில் கோவில் கொண்டிருப்பது உலகத்திலேயே வேறெங்கும் கிடையாதாம்.  ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரிய லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, கஜலட்சுமி, தனலட்சுமி என எட்டு லட்சுமிகளை கொண்ட கோவில் இது.

திருமண தோஷம் போக லட்சுமி நாராயணனுக்கு திருக்கல்யாண உற்சவம் செய்து திருமண யோகம் பெறுகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சந்தான லட்சுமிக்கும், நோய் குணமாக ஆதிலட்சுமிக்கும், செல்வம் வேண்டி தனலட்சுமிக்கும், கல்வி செல்வம் பெற வித்யாலட்சுமிக்கும், மனதைரியம் பெற தைரியலட்சுமிக்கும் பூஜை செய்து அம்மனின் அருள் பெறுகின்றனர். 
வேறொரு கோவில் பற்றிய அறிய புண்ணியம் தேடி ஒரு பயணத்தில் மீண்டும் சந்திப்போம். நன்றி! வணக்கம்.



28 comments:

  1. அற்புதமாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    நான பல தடவை போயிருந்தாலும் கூட
    இத்தனை அருமையான தகவல்களை
    தங்கள் பதிவின் மூலமே தெரிந்து கொண்டேன்
    படங்களுடன் அருமையான பதிவைத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அடுத்த முறை செல்லும் போது ராஜி சொன்னதெல்லாம் சரியான்னு பாருங்கப்பா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  2. வண்ணப் படங்களோடு விரிவான தகவல்கள். சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பதிவை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி

      Delete
  3. நேற்றே போட்டிருக்கக் கூடாதா. பெசன்ட் நகர்ல தான் இருந்தேன். :-)

    ReplyDelete
    Replies
    1. அதனாலென்ன!? அடுத்த முறை சென்னை போகும்போது போய் வாங்க ஆவி!!

      Delete
  4. அழகான பாடங்கள் மூலம் கோயிலின் விளக்கங்கள் மிகவும் அருமை சகோதரி... நன்றி... பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா!

      Delete
  5. விளக்கம் அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  6. அழகான கோவில். இது வரை பார்த்ததில்லை. பார்க்கணும்.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த முறை சென்னை போகும்போது அவசியம் போய் வாங்க!

      Delete
  7. அழகான கோவில் ஒருமுறை மட்டும் சென்றிக்கேன் அதுவும் சின்ன வயசுல...அழகான படங்கள்..

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் ஒர் முறை போய் வாங்க மேனகா

      Delete
  8. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.நானும் கோவில்பக்கத்தில் மகாலக்ஷ்மி தெருவில் சிலகாலம் வசித்துள்ளேன்..

    கோவிலைச் சுற்றி ஒரே அழுக்கும் புழுக்கும். அதிலும் கிழக்கு பார்த்த வாயிலை அடைச்சே வச்சுருப்பாங்க. காரணம்.... ஒரே அழுக்கு. வராகர்கள் அலையுமிடம்:(

    ஒருசில முறைகள் மட்டுமே மேலே ஏறிப்போய் த்ரிசனம் செஞ்சுருக்கேன். படிகள் ரொம்ப நெருக்கம் & இருட்டு.

    கீழேஉள்ள பெருமாள் முகம் நல்ல அழகு.


    சிறப்பு வாய்ந்த இக்கோவிலை இன்னும் தூய்மையாக வைத்திருக்கலாம்:(

    ReplyDelete
    Replies
    1. அங்க மீனவர்கள் வசிப்பதால, அவங்க கொண்டு வரும் மீன்களை காயப்போடுவதால் அதனால் துர்நாற்றமும், அதை சாப்பிட வராகரும் வந்து போவதால் அந்த இடமே அசுத்தமாக இருக்கு.

      Delete
  9. வாழ்த்துக்கள

    ReplyDelete
  10. ராஜி மேடம் அவர்களுக்கு ...
    ஒரு Plus 1 vote- போட்டுட்டேன்!

    ReplyDelete
  11. கோவில் கோவிலா சுத்தறீங்க என்ன விசேசம்...?

    ReplyDelete
    Replies
    1. என் தம்பிங்கள்லாம் நல்லா இருக்கனும், ஜீவாக்கு மட்டும் கொஞ்சம் அறிவை குடுன்னு வேண்டிக்க போறேன்.

      Delete
  12. இந்த கோவிலின் சிறப்பே கோபுரத்தில் வீற்றிருக்கும் அஷ்ட லெக்ஷ்மியர் ஓம்கார வடிவில் குறுகலாக bird eye view ல் பார்க்கும் போது இருக்கும் அதுதான் அந்த கோவிலின் சிறப்பு அம்சம் ..

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி

      Delete
  13. சிறப்பான பகிர்வு. இதுவரை செல்ல வாய்ப்பு கிட்டவில்லை. வாய்ப்பு கிடைத்து செல்லும் போது நிச்சயம் உங்களை நினைச்சுக்குவேன்.....:)

    ReplyDelete
    Replies
    1. அடுத்த முறை சென்னை வரும்போது ஞாபகமாய் இந்த கோவிலுக்கு கூட்டி போய் வர சொல்லுங்க

      Delete
  14. பல வண்ணப்படங்களுடன் புதிய அரிய தகவல்களுடன் பதிவிட்டமைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.(அடுத்து என்ன பெசன்ட் நகர் அறுபடைவீடு தர்சனமா?)

    ReplyDelete
  15. விளக்கம் அருமை.

    ReplyDelete