Thursday, October 03, 2013

என் நிலை!?



என் நிம்மதியின் விலாசம்
அவள்!
நிம்மதி தர சொத்து சுகம் 
ஏதும் தர தேவையில்லை
அவளுக்கு!!


கொஞ்சம் அன்பு, கொஞ்சம் சண்டை..,
கொஞ்சம் கெஞ்சல், கொஞ்சம் மிரட்டல்
என தந்தாலே போதும்!!
என் கைகளுக்குள் அடைக்கலமாகிவிடும்
இந்த தாவணி குழந்தை!!

பல்முகம் காட்டி 
வீடு முழுக்க ஓடி
கண்ணாமூச்சி ஆடுகின்றாள்
கைக்கெட்டாமல் நிழலாய்!!

நிஜம் எங்கோ என்னை பிரிந்திருக்க,
இந்த நிழலும்..,
இல்லை என்றால்,
என் கதி?? அதோ கதிதான்!!

14 comments:

  1. என் நிலை அப்படின்னு தலைப்ப பார்த்ததும் ராகுல்ல மோடியா ன்னு சொல்ல போறீங்கன்னு நினைத்து வந்தேன் அக்கா

    ReplyDelete
  2. நல்லது நன்றி சகோ...














    இது தேவையா...?

    ReplyDelete
  3. eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  4. மழலை! மங்காத செல்வம்!

    ReplyDelete
  5. "கொஞ்சம் அன்பு, கொஞ்சம் சண்டை..,கொஞ்சம் கெஞ்சல், கொஞ்சம் மிரட்டல் என தந்தாலே போதும்!! என் கைகளுக்குள் அடைக்கலமாகிவிடும் இந்த தாவணி குழந்தை!!"
    மிகவும் இயல்பான வரிகள்

    ReplyDelete
  6. சில நேரங்களில்
    நினைவுகளே
    நிம்மதி தருகிறது.

    வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  7. மழலைச் செல்வங்களோடு கொஞ்சி விளையாடுவதற்கு ஈடு இணை ஏது?
    தமிழ்மண வாக்கு 6

    ReplyDelete
  8. சிறப்பான படைப்பு! நன்றி!

    ReplyDelete
  9. மகளைப் பிரிந்து இருக்கிறீர்களா?

    ReplyDelete
  10. இனிய நினைவுகளே சுகமாக....

    ReplyDelete
  11. நல்ல கவிதை..... பாராட்டுகள் ராஜி.

    ReplyDelete