Saturday, November 23, 2013

திருவண்ணாமலை கார்த்திகை தீப அனுபவம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

புண்ணியம் தேடி போற பயணத்துல ஒரு நாள் லேட்டா நாம இன்னைக்கு பார்க்க போறது திருவண்ணாமலை மலை மேல் ஏற்றும் கார்த்திகை தீபம். தொடர் மின்வெட்டு காரணமாவும் பதிவு போட முடியல. இருந்தாலும் பதிவருக்குண்டான கடமையாயை ஆத்தாம இருக்கலாமா!? அதான் நேத்தைய போஸ்ட் இன்னிக்கு.....,

தீபத்தை பார்க்கு முன் திருவண்ணாமலையின் சிறப்புகளை முதலில் நாம தெரிஞ்சுக்கலாம்.   பல நூற்றாண்டுகளுக்கு முன்ன எரிமலையா இருந்து, தீ குழம்புகள் தண்ணீரில் குளிர்ந்து உருவானதுதான் இந்த மலை எனபது ஆராய்ச்சியாளர்கள் கருத்து.  இங்க மிக பழைமையான நாகரீகமும் கி மு நூற்றாண்டுக்கு முன்னரே இங்கே மக்கள் வாழ்ந்து வந்ததுக்கு வரலாற்று ஆதாரங்கள் இருக்கு. 

பதஞ்சலி முனிவரால் கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே இந்த இடம் குறிப்பிடபட்டிருக்கு. மேலும், தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னன் சுமார் 2500 வருடங்களுக்கு முன்ன இந்த இடத்தில அரசாட்சி செய்ததற்கான சான்றுகளும் இருக்கு.  கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுது. தொண்டை மண்டலம் என்று சொல்லும்  சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களை உள்ளடக்கியது. தொண்டை மண்டலத்தின் முக்கிய நகர் இந்த திருவண்ணாமலை நகரமாகும். அதன் பின்னர் கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் முக்கிய நகராக விளங்கியது இந்த நகரம்.
இவ்வுளவு சிறப்புமிக்க இந்த இடத்தில அமைந்து இருபதுதான் திரு அண்ணாமலையார் திருக்கோயில். இங்க வருடம் முழுதும் எதாவது திருவிழாக்கள் நடந்துகொண்டே இருக்கும்.இதுல கார்த்திகையில் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழா மிகவும் சிறப்பானது. இத்திருவிழா, பத்து நாட்கள் கொண்டாடடுவாங்க. இதுல பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத்திருவிழா. இந்த பத்தாம்நாள காலை கோவிலில் பரணி தீபம் ஏத்துவாங்க அப்புறம் சாயங்காலம்  அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் நெய்யினால் தீபம் ஏத்துவாங்க. இந்த தீபம் தொடர்ந்து பதினோறு நாட்கள் எரிஞ்சுகிட்டே இருக்கும். எத்தனை பலமான மழை, காத்துனாலயும் இதுவரை இத்தீபம் அணைஞ்சதில்லை.
இவ்வளவு சிறப்பு மிக்க இந்த கார்த்திகை தீபத்திருநாள் அன்னைக்கு  தீபத்தை பார்க்கனும்ன்னு ஆசையோடு, வீட்டு வேலைகளை சட் சட்ன்னு முடிச்சு, சாமிக்கு படைச்சுட்டு கிளம்பியாச்சு. திருவண்ணமலைக்கு 20கிமீ நெருங்கும்போதே வாகன போக்குவரத்து அதிகமா தென்பட்டது. திருவண்ணாமலை மெயின் பஸ் ஸ்டேண்ட் க்கு   4 கி மீ முன்னாடியே வண்டிகள் நிறுத்தப்பட்டு நடைபயணமாக போனோம். அப்ப மணி மாலை 5:30.

 வானம் மேகத்தால் சூழப்பட்டு மலை சரியாக தெரியலை. அடடா! நாம சாமி கும்பிட வந்ததைவிட பதிவு தேத்த வந்த நோக்கம்தான் முக்கியமானது. பதிவுக்கு ஃபோட்டோதானே முக்கியம்! மலையே தெரியலையே. இதுல எப்படி ஃபோட்டோ எடுத்து எப்படி பதிவை தேத்துறதுன்னு யோசிச்சுக்கிட்டே இருக்கும்போது சரியா 6 மணிக்கு கார்த்திகை தீபம் மலைமேல் ஏத்துனாங்க. அண்ணாமலையானுக்கு அரோகரா ன்ற பக்தர்கள் கோஷம் விண்ணை பிளந்தது, தீபம் மலைமேல் காட்சியளித்தது.  சில நிமிடங்கள்தான் அதன் பிறகு தெரியவில்லை.  மேகமூட்டம் ஒளியை மறைத்து வாகனங்களின் வெளிச்சத்துலயும், மேகங்கள் சூழ்ந்ததாலயும் சரியாக படம் தெரியலை.
சரி, பதிவுக்கு போட்டோ வேணுமேன்னு கேமராவை ஜூம் செய்த போது மேக மூட்டத்தின் இடையில் கார்த்திகை தீபம் பிரகாசமா தெரிஞ்சது.  அண்ணமாலையானுக்கு அரோகரா ன்னு சொல்லி கோவிலுக்கு போனோம்.
கோவில் உள்ள போகமுடியாத அளவு கூட்டம். சரி சாமி தரிசனம் செய்துட்டு போலாம்ன்னு வரிசையில காத்திருந்தோம். கோவிலினுள் அலங்காரங்களும், விளக்கு ஒளிகளுமாய் அழகா காட்சியளித்தது.
நந்திதேவர் அழகா அலங்கரிக்கப்பட்டு விளக்கு ஒளியில்  ஜொலித்தார். நந்திக்கு  முன் நெய்விளக்கு ஏற்றபட்டு நிறையப்பேர் வழிபாடு செஞ்சாங்க. நாங்களும் தீபங்களை ஏற்றிவிட்டு தரிசனம் செய்தோம்.
தீபம் அக, புறம் இருளை நீக்கி பேரொளியை எங்கும் பிரகாசிக்கச் செய்யும் என்பதை போல நந்தியின் படிக்கட்டுகளில்லாம் விளக்கு ஏற்றி மக்கள் வழிபாடு செய்தனர்.  இந்த கார்த்திகை நக்ஷத்திரத்தில் தான் மகாபலி சக்ரவர்த்தி முக்தி அடைந்த தினம் ஆகையால் நாமும் துன்பம் நீங்க கிழக்கு முக தீபமும்,  பகை விலக மேற்கு முக தீபமும், மங்களம் பெருக வடக்குமுக தீபமும் ஏற்றி ஒளி வடிவான அண்ணாமலையானை தீபம் ஏற்றி வழிபட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
மேகக் கூட்டங்கள் இடையில் பௌர்ணமி நிலவு மறைந்து எப்ப வேணும்ன்னாலும் மழை வரலாம் ன்னு பயம் காட்டிக்கொண்டே சென்றது.
கோபுரதரிசனம் கோடிபுண்ணியம் ன்னு சொல்வாங்க.  கோபுர தரிசனம் முடிச்சுட்டு, கிரிவலம் செல்வோம்ன்னு நினைச்சு  ஆலயத்தின் வெளியே வந்தோம்.
வெளியே வந்ததும், தீபம் நம் கண்களுக்குள் நின்றது. கிரிவலம் எப்ப வேணும்னாலும் போய்க்கலாம். ஆனா, மலை மேல ஏற இதைவிட்டா நல்ல் சான்ஸ் கிடைக்காதுன்னு நினைச்சு மலைக்கு போலாம்ன்னு நினைச்சா இரவு 8 மணியாகிட்டதேன்னு கூட வண்ட்தவங்க முணுமுணுக்க...,

 அண்ணமாலையாரின் மேல் பாரத்தை போட்டுட்டு, மலை ஏறலாம்ன்னு முடிவெடுத்து நடக்க தொடங்கினோம் வழியெங்கும் போலிஸ் பாதுகாப்புகளும், வனத்துறையினரும், கமாண்டோ படையினரும் மலையில் செல்வோருக்கு அந்த நேரத்துலயும் பாதுகாப்பா இருந்தனர்.  

அவர்களில் சிலரும் டியூட்டி விட்டு மலையை விட்டு இறங்க ஆரம்பித்தனர். மலைக்கு போகும் பாதையில் இரண்டு ஆஸ்ரமங்கள் இருந்தன. மலையேற செல்பவர்களுக்கு சாம்பார் சாதமும், வெஜிட்டபிள் பிரியாணியும் கொடுத்தாங்க. அதெல்லாம் வாங்கி சாப்பிட்டுக்கிட்டு  மலை ஏறினோம். சிவனே மலையாய் இருப்பதால்  அந்த மலையில் செருப்பு போடகூடாதுன்னு கூட வருபவர்கள் சொல்ல செருப்புகளை அங்கே விட்டுட்டு மலையேற தொடங்கினோம்.
சுமார் 2668 அடி உயரமுள்ள மலை மீது போகும் பாதை கீழ் பகுதியில் கற்கள் தடம்பதித்து படிக்கட்டுகள் போல் கொஞ்சதூரம் அமைச்சு இருக்காங்க. அதுக்கப்புறம் சிறியசிறிய நீரோடைகள் இருக்கு. கவனமா அதை தாண்டி போகனும். எல்லா இடமும் பாறைகள்தான். முறையான பாதை கிடையாது. நாம்தான் சரியான வழியா பார்த்து நடந்து போகனும். நாம் போவதற்கு வசதியாக அம்புகுறி வைத்து  அடையாளம் வச்சிருக்காங்க.

 ஆனாலும் எங்கும் இருட்டு சூழ்ந்திருப்பதால் சிலர் பாதைமாறி சென்று பின் சப்தம் எழுப்பி திரும்பி வந்தனர்.  காட்டுக்குள் மாட்டிக்கிட்டா பல ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டியது வரும். ஆகையால கூட்டம் கூட்டமாக போறது நல்லதுன்னு எங்களுக்கு முன்னாடி மலை ஏறி இறங்கி வரும் பக்தர்கள் சொன்னாங்க.

 சில அடிகள் கடந்த போது செங்குத்தான மலைப்பாதை வந்தது பாதுகாப்புகாக சிலர் நாலு கால்களில் ஊர்ந்து போனாங்க. ஏனெனில் கொஞ்ம் கால் இடறினாலும் நாம்கீழ விழுந்துடுவோம்.  உயரமான பகுதியில் ஏறுவதால ஆக்சிஜன் அதிகமா தேவை படுறதால, கொஞ்சம் மூச்சு வாங்கிட்டு மலை ஏறலாம்ன்னு கொஞ்சம் ஓய்வெடுத்தோம்.

 அடுத்து செல்பவர்கள் முன் எச்சரிக்கையாக கொஞ்சம் குளுகோஸ் கூட கலக்கி எடுத்து செல்லலாம் நாங்கள் மெதுவாக வந்து ஒரு செங்குத்தான பாதையில் அமர்ந்து நல்ல காற்று சுவாசித்து கொண்டு கீழே பார்க்கும் போது மொத்த திருவண்ணாமலை நகரமும் விளக்கு ஒழியில் ஜொலித்தது கோவிலின் முழு வடிவமும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாக காட்சியளித்தது  
போகும் வழியெங்கும் மரங்களும், விவரம் அறியாத மூலிகை செடிகளும் இருந்தன. பாதி தொலைவு மலைமேல் ஏறியபொழுது மொத்த திருவண்ணாமலை ஊரும் மேகக் கூட்டத்தின் கீழ் காணம போய்ட்டது. மேகம்  மூடி பார்க்கும் இடம்லாம் வெண்மையா இருந்துச்சு.  ஆனா, மலையின்மேல் பௌர்ணமி நிலவு வெளிச்சம் அழகா தெரிந்தது.

 தெரியாம ஏறி வந்துட்டமோ! இனி நம்மால் மலை மேல ஏற முடியுமா?ன்னு யோசிக்கும் போது, மலை மேல இருந்து இறங்கிவரும் சிலரிடம் இன்னும் எவ்வுளவு தூரம் போகனும்ன்னு சிவனின் முடிமேல் இருந்து வரும்  தாழம்பூவிடம் கேட்ட பிரம்மா கேட்ட மாதிரி கேட்டோம். இன்னும் நீங்கள் கால் பங்கு இடம் கூட ஏறலைன்னு சொல்லி, இன்னும் ஒரு மணி நேரம் மலை ஏறனும்ன்னு சொல்லி எங்களை பயங்காட்டினார். னாங்க மலைச்சு நிக்கும்போது ஒரு வயசான பாட்டி மலை மேல் இருந்து பாறைகளில் மெதுவா இறங்கி வந்தார் அவரை பார்த்ததும் ஒரு தைரியம் வந்து மீண்டும் மேலே ஏற தொடங்கினோம்.

போகப்போக கோவில் சிறியதா தெரிந்தது. சில வெளிநாட்டு பெண் பிள்ளைகள் தனியாக வந்திருந்தாங்க. அவர்களுடன் இனியும் எவ்வுளவு தூரம் இருக்கும்ன்னு கேட்டபோது,  தூரத்தைலாம் கல்குலேட்  பண்ணவேண்டாம். ஜோதி தரிசனம் தான் முக்கியம் ன்னு கூறி கைகொடுத்து போனாங்க.

 அதன்பிறகு மேகக்கூட்டம் முழுவதுமா மூடி எங்கும் இருள் சூழ்ந்தது. பக்கத்தில் இருபவர்கள் கூட தெரியலை. இதுமாதிரி சமயங்களில் சப்தம் எழுப்பிக்கொண்டே போகனும். இல்லலாட்டிநம் கூட வந்தவங்களை பிரிஞ்சுடுவோம்ன்னு கூட வந்தவங்க சொன்னாங்க. 

 மழை போல் விழும் பனிநீர் பட்டு பாறைகள்லாம் வழுக்க ஆரம்பிச்சது. அதுவும் மரங்கள்ல ஆளுயர செடிகளில் இருந்து பனிநீர் விழுந்து அவை காற்றில் அசையும் போது நம்மீது மழை விழுவது போல் விழுது. விடும் தலையில் எதாவது கட்டிக்கனும்.  இல்லாட்டி தொப்பி போன்ற ஏதாவது போட்டுக்கனும். நல்ல குளிர் அடித்தது. மெதுவாக குழுவினருடன் ஓசை எழுப்பி கொண்டே மலை ஏறினோம். 12 மணியான பிறகும் ஒன்றும் தெரியவில்லை முழுவதுமாக மேக கூட்டத்தினுள் இருந்தோம்.
கால்லாம் ஓய்வெடுக்கனும்ன்னு கெஞ்ச ஆரம்பிச்சது.  எவ்வளவு தூரம் போகனும்ன்னு மேல இருந்து வருபவர்களிடம் கேட்டபோது தூரத்தில் ஒரு இடத்தை சுட்டிகாட்டினர். அங்க சுமார் 200  அடிதொலைவில் மேக கூடத்தின் இடையே அந்திவானம் சிவந்து காணப்படுவதை போல மேகம் சிவந்து காணப்பட்டது. அதைபர்த்தவுடன் தேகம் புல்லரித்தது.  மனதிற்குள் ஒரு இனம்புரியாத  சந்தோசம்.  அண்ணாமலையாருக்கு அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரான்னு சப்தம் இட்டவாறே ஒருபாறையின் உச்சியினை அடைந்தோம்.
பக்கத்தில் நின்றும்  கூட தெளிவா தெரியாத அளவு மேக கூட்டம். தீபம் காண வருபவர்கள் நெய் வாங்கி ஊற்றுவதற்கு வசதியா மேல நெய் வித்துக்கிட்டு இருந்தாங்க. நாங்களும் நெய்வாங்கி கொடுக்க அதை அங்க நிற்கும் சேவார்த்திகள் ஊற்றி மீதி நமக்கு கொடுப்பாங்க.. தீபம் இருக்கும் மலை முழுவதும் நெய்யா இருந்துக்கிட்டு பாறைலாம் வழுக்கிச்சு. அண்ணாமலை கார்த்திகை தீபத்தை வாழ்க்கையில் நேரில் கண்டு வணங்கிய அனுபவம் மறக்க முடியாதது.
மேகமூட்டத்தில் தீப கொப்பரை சரியா தெரியலை.  மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும்,இந்த  6.5 அடி உயரமுள்ள ராட்சத இரும்பு கொப்பரையின் வெளிபாகத்தில் அர்த்தநாரீஸ்வரர் உருவம்   பொறிக்கப்பட்டிருக்கு.  இந்தக் கொப்பரையில், 2000 கிலோ நெய்யை விட்டு, முப்பது மீட்டர் காடாத் துணியைச் சுருட்டி அதைத் திரியாகப் போட்டு அதன் மேல் இரண்டு கிலோ கற்பூரத்தை வைத்து மகா தீபம் ஏற்றப்படுது.  இது மலையைச் சுற்றி 35 கிலோமீட்டர் தூரம்வரை தெரியும்.  தொடர்ந்து 11 நாட்களுக்கு மகா தீபம் பிரகாசமா எரிய தினமும் 300 முதல் 375 கிலோ நெய், சுமார் 1000 மீட்டர் திரி, 2 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுது. 
அவ்வுளவு காற்றிலும் தீ ஜுவாலை மிகுந்த சத்தத்துடன் எரிந்துக்கிட்டு இருந்துச்சு. அதிலிருந்து தீ கங்குகள் காற்று வேகமா வீசும்போது லாம் நாலாபுறமும் சிதறிய காட்சி நல்லா இருந்துச்சு.   பக்தர்கள் அவ்வுளவு தூரம் கஷ்ட பட்டு வருவதன் புண்ணியம் போல இந்த தீப தரிசனத்தை காண கோடிக்கண்வேண்டும். இறைவனை மனதார ஒருநிமிடம் பிரார்த்தித்து விட்டு மலையின் உச்சி விட்டு இறங்க ஆரம்பித்தோம்.

பாதை குறுகியதா இருப்பதாலும் இருட்டு, பாறைலாம் நெய், எண்ணெய் பட்டும் வழிலாம் வழுக்கிடும்ன்னு பயந்து பயந்து மலை விட்டு இறங்க ஆரம்பித்தோம். பக்தர்கள்  நலன் கருதி அங்கே இருக்கும் சேவை  செய்பவர்கள் வருபவர்களை ஒழுங்கு படுத்தி எல்லோரும் தரிசனம் பண்ணும் அளவிற்கு அனுப்புறாங்க.

கீழ இறங்கும்  போது வேகமா இறங்கினாலும் சில பாறைகள் கூர்மையா இருக்கு. கொஞ்சம் அசந்தாலும் கைலாம் கிழிச்சுடும்ன்னு அபாயம் இருக்கு. கல்களிலும், பாறைகளிலும்,  மண்ணிலும் நடபதால் கால்களின் அடிபாதங்கள் வலிச்சது.. கீழே இறங்கி வரும் போது நடு இரவு 2 மணி. அந்த இரவிலும் மலையில் இருந்து இறங்கி வரும் பக்தர்களுக்காக  சூடாக வேஜிடபிள் சாதம் கொடுத்தாங்க அங்கே இருக்கும் ஆஸ்ரமவாசிகள். மலை ஏறி இறங்கியதால நிறைய எனர்ஜி தேவைப்பட்டதால் மீண்டும் சாப்பிட்டுட்டு அங்கே இருந்து கிளம்பினோம்.

 கோவிலுக்கு போகனும்ன்னு முன்னாடியே முடிவெடுத்து, சரியான முன்னேற்பாடு இல்லாம போய்ட்டதால, இருட்டுல மலை ஏறி கொஞ்சம் சிரம்மப்பட வேண்டி இருந்துச்சு. சிரமம் ஏற்பட்டாலும் அண்ணமலையானின் அருளால் எந்த ஆபத்தும் ஏற்படலை. அடுத்த வருசம் சரியா பிளான் பண்ணி பகலிலேயே மலை ஏறி போய் தீப பார்த்துட்டு வரனும்ன்னு நினைச்சுக்கிட்டே அண்ணாமலையானிடமிருந்து விடைப் பெற்று புண்ணியத்தையும் வாங்க்கிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

நீங்களும் அடுத்த வருசம் சரியான முன்னாடியே பிளான் பண்ணி, சரியான ஏற்பாட்டோடு தீபம் பார்த்து அண்ணாமலையானின் அருள் பெருக!! 

15 comments:

  1. மஹா தீபத் தகவல்கள் வியக்க வைக்கிறது...!

    அருமையான படங்களுடன் விளக்கம் அருமை சகோதரி... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. எங்களால நினைத்துதான் பார்க்கமுடியும் அந்த இடத்திற்கு நீங்க போனது மட்டும் இல்லாம எங்களுக்கும் படங்களுடன் காண்பிச்சு இருகிறீங்க நன்றி .ஓம் நமசிவாய ..அண்ணாமலையானுக்கு அரோகரா .

    ReplyDelete
  3. இருட்டில் கோபுரங்கள் ஜொலிப்பது ரொம்ப அழகா இருக்கு...

    ReplyDelete
  4. அண்ணாமலையாரின் தரிசனம் கிடைக்கபெற்றேன்...

    நன்றி

    ReplyDelete
  5. விடாப் பிடியாக அண்ணாமலை தீபத்தை தரிசித்து வந்தது உங்களுக்கு மனநிறைவுதான். அண்ணாமலையானுக்கு அரோகரா.

    ReplyDelete
  6. so cute trip... with grass of 'Annamalaaiyar'


    Sivaparkavi

    ReplyDelete
  7. Romba thanks akka. ungalukum unga familykum neraya puniyam kidaikum.

    ReplyDelete
  8. அட்வெஞ்சர் எல்லாம் பண்றீங்க! நிறைய தகவல்களுடன் சிறப்பான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  9. ஒவ்வொரு தரிசனத்தின் போதும் எல்லா இறவன் இறைவிகிட்டயும்
    சொல்லுங்க ராஜிம்மா நான் மிகவும் கேட்டதாக :)))

    ReplyDelete
  10. படங்களும் தரிசனம் பற்றிய தகவலும் அருமை .

    ReplyDelete
  11. உங்களுக்கு ஜோக்காளியின் நன்றி ,காண்க >>>http://jokkaali.blogspot.com/2013/11/blog-post_3165.html
    த.ம +1

    ReplyDelete
  12. அருமையான பகிர்வு...
    அழகான படங்கள்...
    வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  13. உங்கள் மூலம் நாமும் தீப தருசனம் பெற்றோம்! பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  14. தங்கள் துணிவையும் முயற்சி தனையும் வெகுவாகப் பாராட்டுகிறேன்!
    அண்ணா மலையார் அருள் உங்களுக்கு உறுதியாக உண்டு!

    ReplyDelete
  15. அண்ணாமலையானுகு அரோகரா....

    பல முறை அங்கே சென்றதுண்டு - கூட்டம் இல்லாத நாட்களில். கோவில் உள் நுழைந்து காலை வைத்ததும் உடம்பில் ஒரு அதிர்வு..... வெகு சில கோவில்களிலே உணர்ந்திருக்கிறேன்.....

    படங்களும் பகிர்வும் அருமை....

    ReplyDelete