Thursday, August 26, 2010

நிழலாய் போன நிஜக்கவிதைகள்

எங்கோ நெடுந்தூரம் அழைத்து செல்கிறாய்....,
கால் வலிக்குது என்கிறேன் நான்,
ஆழ்ந்தப் பார்வை பார்த்துவிட்டு
என் கைப் பிடித்துக் கொள் என்கிறாய்.
உற்சாகத்தோடு நடந்தேன் "உயிருள்ளக் கவிதையாய்"

யாரும் அறியாதபோது சட்டென்று இழுத்து
உதட்டோடு உதடு பொருத்தி என் உயிர்த் தேடலை
முடித்து வைத்தது உ(எ)ன் முத்தம்.
திருப்தியாக நடந்தேன் "இனிய கவிதையாய் ".....,

நீதான் முக்கியம் என்று நீ உரைத்தப் போது
கர்வத்தோடு நடந்தேன்
"உற்சாகமான கவிதையாய்"? ....,

அனால்,
என் இத்தனை நிஜக்கவிதைகளும்
"அவளைப் போல் நீ வரமுடியுமா?
என்று கேட்ட ஒரு கேள்வியில்
"நிழலாய்" போய்விட்டது.....,

2 comments: