Friday, December 18, 2020

உலகத்திலேயே ஒரே அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் - திருச்செங்கோடு- புண்ணியம் தேடி

போன வருசம் மகளை கல்லூரியில் சேர்த்து, அவளை ஹாஸ்டலிலும் விட்டுட்டு மகளை பிரிஞ்ச துக்கத்தில்!!  அருகிலிருந்த  திருச்செங்கோடு கோவிலுக்கு போனோம்.  திருச்செங்கோடுன்ற வார்த்தைக்கு ”அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிறமலை”ன்னும், ”செங்குத்தான மலை”ன்னும் இரண்டு அர்த்தம் சொல்றாங்க. இந்த மலை ஏன் சிவப்பாச்சுன்னா விஷ்ணு பகவான் பள்ளிக்கொண்டிருக்கும் ஆதிசேஷன் பாம்பு மேருமலையை பிடித்தபோது ஏற்பட்ட கலகலப்பில் காயம் ஏற்பட்டு சிந்திய ரத்தத்தால் இந்த மலை சிவப்பு நிறமாச்சுன்னு தலவரலாறு சொல்லுதுங்க. 

Monday, December 07, 2020

ஆண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தவறா?! - ஐஞ்சுவை அவியல்

மாமா! வெட்டவெளியில் சிறுநீர், மலம் கழித்தால் அசுத்தம்ன்னு சொல்லி வீட்டிற்குள் கழிப்பறை கட்டி வச்சிருக்கோம்.  இது சரியா?! வீடுகளுக்குள் கழிப்பறை  வந்த ஆரம்ப காலக்கட்டத்தில் எம்மாம்பெரிய வீடுன்னாலும் கழிப்பறை வீட்டிற்கு வெளியே ஒதுக்குப்புறமாதான் இருந்தது. திருட்டுபயம், சோம்பேறித்தனத்தினாலும், 800 அல்லது 1000 சதுர அடிகளில்  மனைகள் வந்தபின்  கழிவறை வீட்டிற்குள்ளயே கட்ட ஆரம்பிச்சி இப்ப கழிப்பறை நடு ஹால்லயே இருக்கும் நிலை வந்தாச்சு. 

Sunday, December 06, 2020

என் உதிரத்தில் உதிர்த்த மூன்றாவது உயிருக்கு இன்று பிறந்த நாள்...

பிள்ளைகள் எத்தனை வளர்ந்தாலும் பெற்றோருக்கு குழந்தைதான்.. கருத்தரித்ததை உணர்ந்தது, கருவின் முதல் அசைவு, மசக்கை தொந்தரவு, உடல் உபாதைகள், பிரசவ வலியை தாங்கவேண்டுமென்ற பயம் என தாய் ஒரு பக்கமும், மருத்துவ செலவு, புதுசாய் ஜனிக்கும் குழந்தைக்கும் சேர்த்து பொருள் ஈட்ட என தந்தை ஒருபக்கமும் வெவ்வேறு பக்கம் பயணித்தாலும் தன் குழந்தை இந்த மண்ணில் ஜனிக்க போகும் அந்த நொடிக்காக காத்திருப்போம்.  அக்குழந்தை ஜனித்த முதல் நொடியில் இருவர் பட்ட கஷ்டமெல்லாம் மறந்து என்னமோ இமாலய சாதனை புரிந்தமாதிரி அத்தனை பரவசப்பட்டிருப்போம். அந்த பரவசத்தினை ஒருமுறை அனுபவித்தால் போதுமா?! ஒவ்வொரு நொடியும் அனுபவிக்க ஆசைதான். ஆனால், யதார்த்தம் அதற்கு ஒத்துவராது. அதனால்தான் பிறந்த நாள் என ஒன்றினை இறைவன் படைத்தானோ என்னமோ?!