Saturday, June 29, 2013

நன்றி மறப்பது நன்றன்று - பாட்டி சொன்ன கதை

  


 

 சீனு ஸ்கூல் விட்டு வந்துட்டியா? எங்கே உன் தங்கச்சி பாப்பா?! அவளை கூட்டி வர அப்பா போய் இருக்காங்க.., 


ம்ம்ம் நீ எப்படி வந்தே?! எனக்கு 30 மினிட்ஸ்  முன்னாடியே விட்டுட்டாங்க.., அதனால,  என்னை கொண்டு வந்து வீட்டுல விட்டுட்டு அப்புறம் பாப்பாவை கூட்டி வரப்போனாங்க..,

அரை மணிநேரம்தானே கண்ணா! அங்கயே வெயிட் பண்ணிட்டு பாப்பவை கூட்டி வந்திருக்கலாமே! இப்போ பெட்ரோல் விக்குற விலையில் ரெண்டு முறை போகனுமா?!

 அப்பா இப்போதான் என்னை கூட்டி வரும்போதுதான் டேங்க் ஃபில் பண்ணிட்டு வந்தார்.., அது இந்த வாரம் முழுக்க வரும்..,

 உங்கப்பனுக்கு அறிவே இல்ல.. படிக்குற காலத்துல ஒழுங்கா படிச்சிருந்தா எல்லாம் தெரிஞ்சிருக்கும்..

 ஏன் பாட்டி அப்பாவை திட்டுறே?!

இல்ல கண்ணா! பெட்ரோலை எப்பவும் மார்னிங்க் இல்ல ஈவினிங் டைம்ல தான் போடுறது நமக்கு பெனிஃபிட்..,  னீ பெட்ரோல் பங்க போயிருக்கியா? அங்க பெட்ரோலை எங்க வெசிருக்காங்கன்னு உனக்கு தெரியுமா?

 தெரியும் பாட்டி.., கீழ கிணறு தோணி அதுல ஃபில் பண்ணி வச்சு டேப்ல நம்ம வண்டிக்கு ஊத்துவாங்க..

 ம்ம்ம் கரெக்ட். ஏன், நம்ம வீட்டுல இருக்குற தண்ணி டேங்க் மாதிரி மேல கட்டாம பூமிக்கு கீழ வச்சிருக்காங்க..,

 அது தெரில பாட்டி., ஒரு வேளை பெட்ரோல் விலை அதிகமா இருக்குறதால திருடிப்பாங்களோன்னு நினச்சு அப்படி பண்ணிட்டாங்களோ!?

ஹா ஹா! அப்படி இல்ல செல்லம் அப்படி திருட்டு பயம் இருந்தா ஒரு நல்ல செக்யூரிட்டி போட்டு வைக்கலாமே?! ஏடிஎம் வாசல் போல?! 

அட ஆமா பாட்டி! அப்போ ஏன் அப்படி வெச்சிருக்காங்க?!

ம்ம் அப்படி கேளு .., பூமியோட  வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே பெட்ரோல்  அடர்த்தியா  இருக்கும். வெப்பநிலை படிப்படியா அதிகரிக்கும்போது, பெட்ரோலும் விரிவடையும். அதனால  ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினா, அது சரியா ஒரு லிட்டர் இருக்காது. கம்மியாதான் இருக்கும். உன் பாஷைல சொல்லனும்ன்னா பெட்ரோல் எவாப்ரேஷன் ஆட்கிடும். அதே மாதிரி எப்பவும் டேங்க் ஃபுல் ஃபில் பண்ணக்கூடாது,,  ஏன்னா, நாம் பெட்ரோல் நிரப்பிட்டா அந்த டேங்ல காத்து கம்மியா இருக்கும். பெட்ரோல் ரொம்ப சீக்கிரம் எவாஃப்ரேஷன் ஆகிடும்..,

  பெட்ரோல் பங்க்ல   பெட்ரோல் சேர்த்து வைக்குற தொட்டில ”மிதக்கும் கூரைகள்” இருக்கும்.அதனால, உள்ளே இருக்குற பெட்ரோலுக்குதகுந்த மாதிரி அது மாறிக்கும். அதனால  காற்றுமண்டலத்துக்கும், பெட்ரோலுக்கும் இடையே இடைவெளி இருக்காது. அதனால ஆவியாதல் குறையும். ஆனா, நம்ம வண்டிகள்ல அந்த வசதி கிடையாது .அதனால  பாதி ஃபுல் ஃபில் பண்ணால் பெட்ரோல் ஆவியாவதை கொஞ்சம்  குறைக்க முடியும்.

அதே மாதிரி நீங்க பெட்ரோல் போடப்போகும் அந்த நேரத்துல லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கிட்டு இருந்தா பெட்ரோல் போடக்கூடாது. ஏன்னா,  குழாய் வழியா பெட்ரோலை தொட்டிக்குள்ள ஊத்தும்போது தொட்டிக்கடியில் இருந்த கசடுலாம் அதன்மூலமா மேல வரும்.அப்போ நாம் பெட்ரோல் போட்டா அந்த கலங்குன பெட்ரோலைதான் வாங்கனும்.., இது எஞ்சினை பாதிக்கும்... அதனால அடுத்த முறை பெட்ரோல் போடப்போகும் போது நீயாவது இதெல்லாம் கவனிச்சுக்கோ!

சரி பாட்டி! அதோ பாப்பாவும் வந்துட்டா. நீங்க கதை சொல்லுங்க..,

ம்ம்ம் முல்லை மலர்ன்ற காட்டுல  விறகு வெட்டுறதுக்காக போய்க்கிட்டு இருந்தான் மணி. அப்போ காட்டுல  எங்கயோ ஒரு  சிங்கம் கத்திக்கிட்டு இருந்துச்சு..

பாத்தி.., சிங்கம் கத்தாது., கர்ஜிக்கும்ன்னு எங்க மிஸ் சொல்லொ குதுத்து இருக்காங்க..

என் செல்லம்.., மிஸ் சொல்லுறதை நல்லாதான் கவனிச்சு கேட்டிருக்கே. சிங்கம் கர்ஜிட்டு இருந்துச்சு.. மணி குரல் வந்த திசை பார்த்து போனான். அங்க ஒரு சிங்கம், கூண்டுல சிக்கிக்கிட்டு இருந்ததை பார்த்தான்.  உடனே, அந்த சிங்கம்.., ஹலோ!  பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒண்ணும் பண்ணமாட்டேன்'' ன்னு சொல்லுச்சு..,

பொய் சொல்லாத பாட்டி. சிங்கம் எங்காவது பேசுமா?!

டேய் சீனு இப்படிலாம் குதர்க்கமா கேள்விக்கேட்டா நான் கதை சொல்ல மாட்டேன்.. உன் அமெரிக்கா மாமாக்கூட சேர்ந்து ரொம்ப கெட்டு போய்ட்டே. அவனைபோலவே தொணதொணன்னு கேள்வி கேட்டு என்னை படுத்துறே!கதைன்னா லாஜிக் இருக்காது சிங்கம் பேசும், மனுசன் பறப்பான்,  இப்படிலாம் கேள்வி கேட்டா நான் கதை சொல்ல மாட்டேன். போ...,

பாத்தி! அவன் அப்பதிதான்.  நீ சொல்லு பாத்தி..,

ம்ம்ம்  வேட்டைக்காக வந்தவங்க சிங்கத்தை உயிரோட பிடிக்க   கூண்டு செய்ஞ்சு.அதுக்குள்ளஒரு ஆட்டை விட்டு வச்சிருந்தாங்க. . ஆட்டை சாப்பிட நினைச்ச  சிங்கம் கூண்டுக்குள்ள  மாட்டிக்கிச்சு..,  அப்போதான் அந்த பக்கமா வந்த மணியை சிங்கம் பார்த்துட்டுது..,  ஏய் மனிதா! என்னை இந்த கூண்டுல இருந்து வெளிய வர ஹெல்ப் பண்ணா, நானும்  உனக்கு நிறைய ஹெல்ப் செய்வேன் ந்னு கத்துச்சு..

அதுக்கு மணி, “நீயோ மனுசங்களை அட்ச்சு கொண்ணு சாப்புடுற ஆள்.  உன்னை நான் எப்படி ரிலீஸ் பண்ண முடியும்ன்னு கேட்டான். மனுசங்களை கொண்ணு சாப்புடுறது நிஜம்தான். ஆனா, அதுக்காக உயிரை காப்பத்தி குடுக்குற உன்னை கூடவா சாப்பிடுவேன்னு சொல்லிச்சு.. அது சொன்னது, மணி மனசுக்கு சரின்னு படவே கூண்டை திறந்து விட்டான்.அப்படி கூண்டை திறந்து விட்டதும்.., மணி மேலயே  பாய்ஞ்சு அடிச்சு திண்ண பார்த்துச்சு..,

அச்சச்சோ! பாவம் மணி செத்து போய்ட்டானா?!

ம்ஹூம்,  “சிங்கமே, நீ செய்றது உனக்கே நல்லா இருக்கா? உன் பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து ரிலீஸ் பண்ணேனே.... அதுக்கு நீ காட்டும் நன்றி'' இதானா?!ன்னு கேட்டான்.

“என் உயிரைக் காப்பாத்திக்குறதுக்காக  நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எப்படி நம்பலாம்? மனிதர்கள் ன்னாபகுத்தறிவுள்ளவர்கள் னுதானே மினிங்க்,  அந்த அறிவைக் கொண்டு இது நல்லது, இது கெட்டது ன்னு பகுதித்தறிய வேண்டாமா? முட்டாள்தனமான உன் செய்கைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?'' ன்னு எகத்தாளமா கேட்டுச்சு சிங்கம்.

“கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாத்திய என்னையே சாப்பிடுறது நியாயமில்லை. ன்னு அதுங்கிட்ட வாதாடி பார்த்தான் மணி.. அ ப்போ அந்த பக்கமா ஒரு நரி வந்துச்சு. வா! அதுங்கிட்டயே ஒரு நியாயம் கேப்போம்ன்னு சிங்கத்தை கூட்டிக்கிட்டு அந்த நரிக்கிட்ட போய்.., நடந்ததைலாம் சொன்னான்..      

.“எங்கள் தொழில் அனைவரையும் அடிச்சுக் கொண்ணு  சாப்பிடுறதுதான். இது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்து ரிலீஸ் பண்ணான். முட்டாள்தனமான இந்தச் செய்கைக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீரனும். நீ என்ன சொல்ற நரியாரே....'' ன்னு சிங்கம் கேட்டுச்சு

ஒரு உயிர் அனாவசியமா போகப்போகுதேன்னு.., பாவப்பட்டு சிங்கத்தை காப்பாற்றியதற்கு இதான் தண்டனையான்னு மணி கேட்டான்...,

இதெல்லாம்  கேட்ட நரி, எனக்கு ஒண்ணுமே புரியலை.., அதனால, மறுபடியும் நீங்க சொல்லுங்க ராஜான்னு சிங்கத்துக்கிட்ட சொல்லிச்சு.. உடனே, சிங்கம் நடந்த கதையை சொல்ல ஆரம்பிச்சுது..,


நான் அந்த கூண்டுக்குள்ள அடைஞ்சுக் கிடந்தேன்..,

“எந்தக் கூண்டுக்குள்ள?'ன்னு கேட்டுச்சு நரி.

“அதோ இருக்குதே அந்தக் கூண்டுக்குள்ளதான்ன்னு சொல்லிச்சு சிங்கம்.

“எப்படி அடைஞ்சு இருந்தீங்கன்னு கேட்டுச்சு நரி.

சிங்கம் விடுவிடுவென்னு கூண்டுக்குள்ள  போச்சு . இதுதான் சரியான சமயம் ன்னு நினைச்ச நரி சட்டுன்னு கூண்டோட கதவை பூட்டிடுச்சு

“நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் சொல்றதா சொல்லி என்னை மறுபடியும் கூண்டுல  அடைச்சுட்டீங்களேன்னு   கத்திச்சு சிங்கம்.

“நீங்க பேசாமல் கூண்டிக்குள்ளயே  இருங்கராஜா. நான் ஒண்ணும் இந்த மனிதனைப் போல்முட்டாள் இல்ல. உங்களுக்குச் சாதகமா நியாயம் சொன்னா முதல்ல இந்த மனுசனை  அடிச்சு சாப்பிடுவீங்க. அப்புறம் என்னயே அடிச்சு கொன்னுடுவீங்க. அதனாலதான் உங்களை மீண்டும் கூண்டுக்குள்ளயே வச்சு பூட்டிட்டேன்ன்னு சொல்லிச்சு நரி.  

நன்றி மறந்த சிங்கம் தன் நிலையை நினைச்சு  நொந்து நூடுல்சா போனது.

அந்த நரியும், மணியும் பத்திரம் அவங்கவங்க இடத்துக்கு போய் சேர்ந்தாங்க.. இந்த கதை மூலம் என்ன குட்டி தெரிஞ்சுக்கிட்டீங்க..,

நல்லது செய்றதுக்கும் இடம், பொருள், ஏவல், மனுசன் தராதரம் தெரிஞ்சிருக்கனும்.., அதுமில்லாம ஒருத்தர் ஒரு ஹெல்ப் பண்ணா, நாம அதை எந்நாளும் மறக்க கூடாதுன்னு தெரிஞ்சுக்கிட்டோம் பாட்டி.

குட். நல்லா புரிஞ்சுக்கிட்டீங்க.. போய் கொஞ்ச நேரம் விளையாடிட்டு, குளிச்சு, சாமி கும்பிட்டு படிங்க.., அம்மா சமைச்சு வைப்பா.., சாப்பிட்டு தூங்குங்க..

ம்ம்ம் பை பாத்தி!




Friday, June 28, 2013

திரு அதிகை - புண்ணியம் தேடி ஒரு பயணம்

புண்ணியம் தேடி நாம இன்னைக்குபோக போறது பண்டுருட்டி பஸ் நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்திலிருக்குற திருவதிகை”.  சரியா சொல்லனும்ன்னா  திருஅதிகைஎன்னும் ஊருல இருக்குற திரு வீடானேஸ்வரர் திருகோயில்அட்ட வீரட்டத் தலங்கள்ல இதுவும் ஒண்ணு.

திரிபுரத்தை எரித்த வீரச் செயல் இங்கதான் நடந்ததாம்.திருஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டிய தலம் இது.


கோவிலின் முகப்பு வாயில்

அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த திருத்தலம் இது.தென்கங்கை எனப்படும் கெடிலநதி (தல தீர்த்தம்) கோவில் பக்கத்துல ஓடுது.., கோபுரங்கள் தூண்களில் எல்லாம் நல்ல அழகான கலைநயம் மிக்க சிலைகள் இருகின்றன.உள்பக்கம் வாயில் அதன அருகில் தெப்பக்குளம் அமைந்துள்ளது


இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 16 பட்டைகளுடன் கூடிய மிகப்பெரிய லிங்கம. இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 16 பட்டைகளுடன் கூடிய மிகப்பெரிய லிங்கம. இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது.


மிகப்பெரிய கோயில் இது, சுவாமி கர்ப்பக்கிருகம் தேர்போலப் நிறைய சிலைகளால் செதுக்கபட்டு அலங்கரிக்கப்பட்டு, நிழல் பூமியில் சாயாதபடிக் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் உட்புறத்திலுள்ள மற்றொரு பதினாறுகால் மண்டபத்தின் இரு தூண்கள்ல ஒண்ணுல  சுப்பிரமணியத் தம்பிரான் (அமர்ந்த நிலை) சிற்பமும், இதற்கு நேர் எதிர்த்தூணில் சிவஞானத் தம்பிரான் (நின்று கைகூப்பிய நிலை) சிற்பமும் உள்ளது. சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர்தான் இக்கோயிலைத் திருத்திச் செப்பம் செய்தவர்ன்னும்,  இவர் சீடரான சிவஞானத் தம்பிரான்தான் முதன்முதலில் இத்திருக்கோயிலில் அப்பர் பெருமானுக்குப் பத்து நாள்கள் விழா எடுத்துச் சிறப்பித்தார்ன்னும் சொல்றாங்க...,

சுமார் 2000 வருடங்கள் பழமை வாயந்தத திருத்தலமாம்

கோவிலின் உள்புறம் நுழையும் போதே பெரிய புத்தர் சிலை காணபடுகிறது .

இந்த புத்தர் சிலை கெடில நதி வெள்ளத்துல அடிச்சுட்டு வந்து இந்த கிராமத்து பக்கம் கரை ஒதுங்குனதா சொல்றாங்க..,










இறைவியார் திருப்பெயர் : திரிபுரசுந்தரி மூலவருக்கு பின்புறம் சுதையால் ஆன சுவாமி அம்பாள் திருமணக்கோலம் உள்ளது. திருநாவுக்கரசருக்கு திருமணக்கோலத்தில் காட்சி தந்த தலம் என்பதால் திருமணங்கள் நிறைய நடைபெறுகின்றன. கருவறை கோபுரம் நிரம்ப சுதைகளால் ஆனது.கருவறை விமான அமைப்பு, மண்டப அமைப்பு ரதம் போன்ற அமைப்பை கொண்டது
திருஞானசம்பந்தரை யானை காலால் இடற சொல்லி மன்னன் உத்தரவிட, அவ்வாறே நிறைவேற்றும்போது, யானை திரும்பி போனதா சொல்ற வரலாறு நடந்தது இந்த இடத்துலதானாம். அந்த காட்சிகளை இந்த விநாயகர் கோவிலுக்கு பின்புறம் சித்திரங்களாக வரையப்பட்டிருக்கு..
தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ன்ற  மூணு அசுரர்கள் கடுமையான தவங்கள் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்று தங்களை யாராலும் வெல்லவோ  கொல்லவோகூடாதுன்னு வரம் வாங்குனாங்க. அவங்களால தொல்லையடைந்தவர்கள் ஈசன்கிட்ட போய் முறையிட்டாங்களாம்......
இத்திருக்கோயிலின் கர்ப்ப கிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலை கட்டினான். திவதிகை கோயிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் கட்டப்பட்டுள்ளது.
துர்க்கை அம்மன சன்னதி 
அதனால  பூமியை தேராகவும், சூரிய சந்திரர்களை தேர் சக்கரங்களாவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும் மற்ற தேவர்களை எல்லாம் தேருடன் (அதற்கு வைதிகத் தேர்) வரச் செய்தாராம். சுவாமி மேருமலையை வில்லாகவும்,  வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் , திருமாலை அம்பாகவும்,  அம்பின் நுனியில் அக்னியையும் வைத்து அந்த வில்லுடன் தேரில் ஏறினார்.

 அச்சு முறிந்தது. பிள்ளையாரை வணங்காததால் தான் இப்படின்னு நினைச்சு.., கணபதி பூஜை செய்து அவரது அருளை பெற்று தொடர்ந்தனர்.தேரில் வந்த அனைத்து தேவர்களும் தங்களால் தான் அந்த அசுரர்கள் மடியப்போகிறார்கள் என்று நினைத்து கொண்டிருக்க சிவபெருமான் அசுரர்கள் மீது வில் அம்பு எதையும் பயன்படுத்தவில்லை. அசுரர்களை பார்த்து சற்றே சிரித்தாராம்.



அவ்வளவுதான். உலகமே நடுங்கும்படியா தீப்பிழம்பு ஏற்பட்டு அவர்கள் மூவரும் சாம்பலாயினராம். தங்கள் உதவி இல்லாமலே சிவன் சம்காரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலைகுனிந்தனர். ஒரே சமயத்தில் தேவர்கள் அசுரர்கள இருவரது ஆணவத்தையும் அடக்கினார் ஈசன். பின்பு மூன்று அசுரர்களையும் மன்னித்து இருவரை தனது வாயில் காப்பாளர்களாகவும், ஒருவரை குடமுழா முழக்குபவனாகவும் ஆக்கி கொண்டாராம். இந்த  வரலாறுதான்  ”திரிபுர சம்காரம்”ன்னு சொல்லப்படுது..

எல்லா கோவில்களிலும் காண்பதை போல் கோவில் வாசலில் ஆதரவற்றோர்கள் காணப்படுகிறார்கள் தெய்வம் இவர்களுக்கும் நல்ல காலம் அருளட்டும்   
அடுத்த வெள்ளி வேற கோவில் பத்தி பார்க்கலாம். வர்ட்ட்ட்ட்டா?!

Thursday, June 27, 2013

கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிரா?!



சமீபத்துல என் அப்பாவோட ஃப்ரெண்ட் பொண்ணு கல்யாணத்துக்கு போய் இருந்தேன்.., மரத்திலிருந்து விழுந்த ஆப்பிள்,  எப்படி நியூட்டனை  யோசிக்க வெச்சதோ?! அதேப்போல என்னையும் அங்கு நடக்குற  சடங்குகள் ஏன், எதுக்கு செய்யுறாங்கன்னு யோசிக்க வச்சது!! உங்களுக்கு கல்யாணம் நடக்கும்போது  இந்த சடங்குலாம் செஞ்சாங்களே!? அப்போ ஏன்னு கேக்கலியா? இல்ல எதுக்குன்னு  யோசிக்கலியான்னு யாராவது அமெரிக்காவுல இருந்து வந்து கமெண்ட் போட்டா நான் கடுப்பாகிடுவேன்..., அதெல்லாம் யோசிக்குற நிலமைலயா அப்போ இருந்தேன்!! அட, வெட்கப்பட்டுக்கிட்டு இருந்தேன்ன்னு சொல்ல வந்தேன்பா!!


அம்மி மிதிப்பது:  அம்மி மிதிக்குறது எதுக்குன்னா கல்யாணத்துக்கப்புறம் புருசனை தூக்கி போட்டு மிதிக்குறது, எப்படின்னு தெரிஞ்சுக்குறதுன்னுதான் இத்தனை நாள் நினைச்சுண்டு இருந்தேன்.., ஆனா,  நான் ”கற்பு தன்மை”யில அம்மியை போல..,  அதாவது,  கல்லு மாதிரி  உறுதியா இருப்பேன்ன்னு அர்த்தமாம்..,

 அருந்ததி பார்ப்பது:  இந்த சடங்கு செய்யும்போது மேல அருந்ததி தெரியுதான்னு பாருங்கன்னு ஐய்யர் சொன்னா...,  பொழுது விடிஞ்சு சூரியன் பல்லை காட்டுற நேரத்துல அதுவும் மண்டபத்துக்குள்ள  நட்சத்திரம் தெரியுமா? வாட் நான்சென்ஸ்ன்னு கிண்டல் அடிச்சிருக்கேன். ஆனா,கல்ல ஒரு நட்சத்திரத்தை பார்க்க எவ்வளவு கூர்மையான பார்வையும்,  விழிப்புணர்வும் வேணுமோ அதே மாதிரி  விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாத்துவேன்னு அர்த்தமாம்...,  
                                            
அக்னி வளர்ப்பது:  எவ்வளவு காசு போட்டு பார்லர் போயி அழகா!! மாறி இருக்கோம். இப்போ போய் புகையை போட்டு கண்ணுல தண்ணி வரவச்சு மேக்கப்லாம் ஸ்பாயில்ன்னு நொந்துக்கிடுவேன்..,   கல்யாணம் கட்டிக்கும் நாம,  இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும், அன்யோன்யமாகவும் இருப்போம். உன்னை அறியாமல் நானும்,  என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால்!! இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும்ன்னு அர்த்தமாம்...,

வாழை மரம் கட்டுதல்:  கல்யாண வீட்டுல ஏன்  வாழை மரம் கட்டுறாங்க? கட்டலைன்னா கீழ விழுந்துடுமேன்னு  ஜோக் அடிக்கத்தான் எனக்கு தெரியுமே தவிர, அதுக்கு அர்த்தம் தெரியாது.., வாழை மரம் வளர்ந்து,  குலைதள்ளி தன்னோட ஆயுள் முடியுற  நிலைக்கு வந்தாலும் கூட...,  தனக்கு பிறகும் , மனிதருக்கு  பலன் தர,  தனது வாரிசை விட்டு செல்லுமே தவிர தன்னோடயே  பலனை முடிச்சுக்காது. அதனால,  கல்யாணம் கட்டிக்குறவங்க  நீங்கரெண்டு பேரும்  இந்த சமுதாயம் வளர வாழையடி வாழையா வாரிசுகளை தந்து  உதவனும்ன்னு அர்த்தமாம்...,
                
 மூணு முடிச்சு:  ஒரே ஒர் முடிச்சு போட்டா கழட்டிக்கும்ன்னு கடி ஜோக் சொன்னதுண்டு.  மாங்கல்யத்தில்  போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும்,  மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள்..,  ரெ ண்டாவது முடிச்சி ”குலபெருமையை நீ பாதுகாப்பாய்”ன்னும்  மூணாவது முடிச்சி ”குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீ”ன்னு அர்த்தமாம் 




 லக முழுக்க நடக்குற எல்லா கல்யாணத்துலயும் எதாவது ஒரு சாட்சி பொருள் பொண்ணுக்கு போடுறாங்க..,  ஒரு சிலர் மோதிரம், ஒரு சிலர் கருகமணி, தமிழர்கள் தாலி, சில பழங்குடிகள்ல மிருகத்தோட பல்லு, எலும்புலாம் கூட அடையாளப்பொருளாம்.., எல்லா பொருளுமே  எதோ ஒருவகையில நான் குடும்பஸ்தன்னு தனிச்சு காட்டவே இப்படிலாம் செய்யுறாங்க.. அப்படிப்பட்ட வழக்கங்களில் ஒண்ணு தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் ”தாலி”ன்ற வார்த்தை இலக்கியங்கள்ல  அதிகமா பயன்பாட்டுல  இல்லை. அதுக்காக  பழங்கால தமிழர்கள்  தாலி கட்டாம வாழ்ந்தாங்கன்னு அர்த்தம் இல்லை..,

”தாலி”ன்ற வார்த்தை  இல்லையே தவிர,  அதே அர்த்தம் கொண்ட “மங்கலநாண்”ன்ற வார்த்தை இலக்கியங்கள்ல இருக்குது.., சிலப்பதிகாரத்துல  கோவலன், கண்ணகி திருமணத்தை பத்தி  குறிக்கும்போது,  இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால தமிழர் திருமணங்களில் தாலியே இல்லைன்னு கூப்பாடு போடும் கூட்டமும் இருந்துச்சு..  ஆனா,  அவங்களே ”மங்கள் வாழ்த்து படல”த்துல  ”மங்கல அணி” ன்ற வார்த்தைக்கு அர்த்தம் என்னன்றதை தெரியாமலே போய்ட்டாங்க..,

முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''

ன்னு  இளங்கோ அடிகள் மிக அழகா சொல்லியிருக்கார். அதாவது,  திருமண நேரத்துல முரசுகள் ஒலிக்கின்றன,  வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன,  மங்கல அணி எழுத்து போல் பதிகிறது. இதுதான் மேல சொன்ன பாட்டுக்கு இதான் அர்த்தம். 

ஆண், பெண்ணை அடிமையாக்குவதோ!!   இல்லை பெண்,  ஆணை அடிமையாக்குவதோ குடும்பம் மற்றும் சமுதாய   பிரச்சனையே தவிர.., அது, சடங்கு பிரச்சனை இல்லை.எல்லா திருமண சடங்கிலும்  நீ தாலி அல்லது அதற்கு இணையான ஒரு அடையாளாத்தை அணிந்திருக்கிறாய் அதனால எனக்கு நீ அடிமை ன்ற வாசகம் கிடையவே கிடையாது.


                                              

கல்யாணத்தப்போ ஒரு அடையாள பொருள் அணிவிக்குறதுக்கு காரணம், “ஆண்மகனான நான், உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாகவும், உன் வாழ்வில் இனி வரும் இன்ப, துன்பங்களில் பிரியாமல் துணை  இருப்பேன்ன்னுதான்..

எல்லா திருமண சடங்குகளும்  ஆணையும், பெண்ணையும் சமமாதான் பார்க்குதே தவிர ஆண், பெண் ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . அதுல இருக்குற உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் பக்குவப்பட்ட மனிதர்களின் வேலை..  அந்த பக்குவப்பட்ட மனிதர்களாக நாமிருப்போமே!?


Wednesday, June 26, 2013

அவன்..., அவள்..., அது...,



அவன்:
சிணுங்கும் தொலைப்பேசியை
செல்லமாய் காதோடு எடுத்தணைக்க.,
யாரோ எதற்கோ பேச!!
தாமரை இலை தழுவும் நீராய்
ஒட்டாமல் பேசி ஓய்ந்து போக .....,
அதிசயமாய் மிளிர்கிறது உன் பெயர்...,
அமிர்த சுவை தேடி, அள்ளி
காதுமடல் கவ்வ

கசப்பாய் விழுகிறது வார்த்தைகள்..,
"அடடே உனக்கு வந்திடுச்சா?
 மாத்தி பண்ணிட்டேனா"?ன் னு
துடிதுடிக்க, துண்டிக்கிறாய் இணைப்பை...,
கூடவே நம்பிக்கை நரம்பையும்....

அவள்:
சிணுங்கும் இதயத்தை
செல்லமாய் தட்டி, அமைதிப் படுத்தி,
நின்று, நிதானமிழந்து,
உன் எண் ஒத்தி
வேறு ஏதோ இணைப்பில் இருக்கும்
உன்னை தொட முடியாமல்துவண்டு..,
இன்னொரு முயற்சியில், இணைப்பில்.....,
ஏங்கித்தவிக்கும் , காதுமடலோடு
இனிக்கும் உன் குரல் தேட

பதட்டத்தில்
உதடு உதறி பொய்
உதிர்கிறது...,
"அடடே உனக்கு வந்திடுச்சா?
 மாத்தி பண்ணிட்டேனா"? னு
துவண்டு துண்டிக்கிறேன்
  இணைப்பை...,
தோல்வி வலையில்
இறுக பிணைந்தபடி!!??

Tuesday, June 25, 2013

ஆண்களே கொஞ்சம் அழகா மாறுங்கப்பா!! ப்ளீஸ்...,

 
 
 பத்து வயதில்: எண்ணெய் வழிய, வழிய..,  படிய வாரிய தலை..., இல்லாட்டி குலதெய்வத்துக்கு நேர்ந்துக்கிட்டு வருடத்துக்கு நாலு மொட்டை...., 

இருபது வயதில்:  சிலிப்பிக்கிட்டு நிக்கும்  தலைமுடி... அதை அடிக்கடி கையால அஓஅடி  ஸ்டைலா கோதிக்கிட்டு  ரோட்டில் போகும் பெண்களை ஒரு பார்த்து ஒரு "லுக்'...  தங்கச்சிகிட்ட சண்டை போட்டு,  பேர் அண்ட் லவ்லியை வாங்கி பட்டி பார்த்து...,  டப்பா, டப்பாவா  பவுடரை கையில் கொட்டி, முகத்தில் அப்பி,  ரெண்டு தெருவுக்கு முன்னயே தன் வருகையை சொல்லும் விதமா செண்ட் அடித்து கண்ணாடி முன் நின்று அழகு பார்க்கும் பொறுமை...

முப்பது வயதில் :  மேட்ச், மேட்ச் பேண்ட் சட்டை மாட்டிக்கிட்டு.., மழுங்க சேவ் பண்ணி, ஒரு சீரா பவுடட் போட்டு, வகிடெடுத்து தலைசீவி, கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு  வெளியில் செல்லும்போது மட்டும் கண்ணாடி பார்க்கும் ஆர்வம்..,

நாற்பது வயதில்: எந்த பேண்டுக்கும் எந்த சட்டையையும் போட்டுக்கிட்டு.., பெயருக்கு தலையை சீவிக்கொண்டு, போனால் போகிறது என்று "தம்மாத்தூண்டு' பவுடரை முகத்தில் தடவிக்கொண்டு, அரைகுறையாய் கண்ணாடி பார்க்கும் அலுப்பு...

ஐம்பது வயதில்: "கீழே விழுந்து விடுவேன்' என மிரட்டும் முடியை, கஷ்டப்பட்டு இழுத்துப் பிடித்து, குவித்து வைத்து சீவி... பவுடர் டப்பாவை பார்த்தாலே கடுப்புடன் தூக்கி வீசி... கண்ணாடி என ஒன்று இருப்பதையே கண்டுகொள்ளாமல், வேலைக்கு செல்லும் அவசரம்...


இம்புட்டுதாங்க ஆம்பிளைங்க  தங்களை அழகுபடுத்திக்குற லட்சணம்.., கல்யாணத்தன்னிக்கு  மட்டும் மாமனார் சீதனமா தர்ற  காசுல கோட், பியூட்டி பார்லர்ன்னு  தன்னை கட்டிக்க போற பொண்ணும், மத்தவங்களும் பாராட்டனும்னு அழகுப்படுத்திக்கிட்டு ஜொலிப்பாங்க...,

 கல்யாணத்துக்குப் பின்னாடி  தங்களுக்குள் சுய கட்டுப்பாடு போட்டுக்கிட்டு..,   குடும்ப பாரத்தை சுமக்க,  வருமானத்தை  பார்க்குறதுல பிசியாகிடுறாங்க. இன்னும் சில பேரு டென்ஷன்ல  சிக்கி தண்ணி, தம்ம், போதைன்னு திசை மாறி போகிடுறாங்க..,  இதனால ஹெல்த் பாதிக்கப்பட்டு  ரொம்ப சீக்கிரம் தன் அழகை போக்கிக்குறாங்க...,

வியர்வை சிந்தி உழைச்சு சம்பாதிச்ச  பணத்தை, தண்ணி, தம்முன்னு வீணாக்குவாங்களே தவிர, அழகா ட்ரெஸ் பண்ணி,பார்லர், ஜிம்முக்கு போய்   அழகாய், கம்பீரமாய் மாறலாமே! அப்படி ஒரு முறை மாறிதான் பாருங்களேன்.., அந்த அழகும், கம்பீரமும் உங்களுக்கே தெரியாம உங்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும். உங்க செயல்ல, நடத்தையில, எண்ணத்துல பெரிய மாற்றம் ஏற்பட்டு நீங்களும், உங்களை சுத்தியும் அழகாவும், நல்லதாவும் தெரிய ஆரம்பிக்கும்.. ஆம்பிளைகளில்  ரொமப் சிலர்தான் பார்லர் போய் தன் முகத்துக்கு ஏற்ற மாதிரி பேஷியல், ஹேர் கட் பண்ணிட்டு வர்றது.., மத்தவங்களாம்  தாத்தா காலத்து சேர் போட்டு நடத்துற சலூனுக்கு போய் தனக்கு தோணுனதை ஹேர் கட் பண்ணிட்டு .., தனக்கு தானே அழகா இருக்குறதா நினைச்சுக்குறது..,
 
ஆம்பிளைங்க  கம்பீரத்த்துக்கு முகப்பொலிவும் ஒரு காரணம். முன்னைவிட இப்போ பரவாயில்லை..,காலேஜ் பசங்க இல்லாம 40 வயசுக்காரங்களும் தங்களை அழகுப்படுத்திக்க கொஞ்சம் மெனக்கெடுறங்க.. பெண்களை போல,  மாசம் ஒருமுறை பியூட்டி பார்லருக்கு போய்  அழகுபடுத்திக்கிட்டா  புத்துணர்ச்சி கண்டிப்பா கிடைக்கும்.., மைண்ட் ரிலாக்ஸா ஃபீல் பண்ணுவாங்க வீட்டுல வள், வள்ன்னு எரிஞ்சு விழமாட்டாங்க..  முப்பது வயசுக்கு மேல முடிக்கொட்டுறது இயற்கைன்னு அப்படியே விட்டுடாம.., அம்மாக்கிட்டயோ இல்ல பொண்டாட்டிக்கிட்டயோ கெஞ்சி வீட்டுலயே மூலிகை எண்ணெய் காய்ச்சி தரச் சொல்லுங்க இல்லாட்டி முடிகொட்டுவதை தடுக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்தா, ஆயுர்வேத டானிக், "பேசியல்' செய்ய பழம், வேர்கள் கலந்த மூலிகைகளை பயன்படுத்துவது நல்லது..

ஆண்சிங்கம், ஆண் மயில்,  ஆண் மான், ஆண்குரங்கு!!??, ஆண் யானைன்னு மனுசனைத்தவிர மற்ற எல்லா உயிர் இனத்துலயும் ஆண் வர்க்கம்தான் அழகு.., அதை மெய்பிக்குற மாதிரி கொஞ்சம் மெனக்கெட்டு அழகா மாறிக்காட்டுங்கப்பா ப்ளீஸ்!!...
 

Monday, June 24, 2013

பூ பூக்கும் ஓசை - ஐஞ்சுவை அவியல்

  




என்ன மாமா செய்யுறீங்க?!

ஒண்ணுமில்ல புள்ள! நம்ம சின்ன மண்டையன் படிக்குற இஸ்கோலுல பெற்றோர் ஆசிரியர் கூட்டம் கூடப்போகுது அதுக்கு தலைமை தாங்க என்னை கூப்பிட்டு இருக்காங்க. அதான், என்ன பேசலாம்ன்னு யோசனை பண்ணிட்டு இருக்கேன்..,

ம் ம்ம்  நீங்கதான் அடுத்தவங்க பேசுறது, நடக்குறதை  வச்சே உங்களுக்கு தேவையான பாய்ண்ட்ஸ் பிடிச்சுப்பீங்களே! ஆமா, அந்த மாதிரி திறமை எப்படி வந்துச்சு மாமா!

எல்லாத்தையும் உன்னிப்பா கவனிக்கனும் கண்ணு.., அப்போ நமக்கு தேவையானதுலாம் தானா நமக்கு புரியும்.., 

அதான் எப்படி மாமா?! உங்களால முடியுது.., என்னால முடியலை..,

அது பழக்கத்துனால வற்றது புள்ள! ஒருத்தன் தான் நல்லா படிச்சி பெரிய மேதையா வரனும்ன்னு, காட்டுல இருக்குற துறவிக்கிட்ட  குருகுலம் போய் சேர்ந்தான். அந்த  துறவி, சீடனைத் தினமும் காட்டிக்கு போய், அங்க நடக்குறதைலாம் பார்த்து வான்னு அனுப்பினார்.  அவனும் நாம பாடம் படிக்க வந்தா இவரு நம்மளை வேடிக்கை பார்க்க அனுப்புராரேன்னு நினைச்சுக்கிட்டே  தினமும் காட்டுக்கு போய்  வந்தான். 

ஃபர்ஸ்ட் நாள் போகும்போது  பயமா  இருந்துச்சு. ஒரு வாரத்துல காட்டு;ல இருக்குறது எல்லாம் என்ன? ஏது?ன்னு தெரிஞ்சு போனதால காட்டை பற்றிய பயம் போய்டுச்சு.., அப்புறம், வேண்டா வெறுப்பா காட்டுக்கு போனவன் ஆசையா போக ஆரம்பிச்சான்.., அங்க இருக்குற, செடி கொடி,  விலங்குகளை பார்த்துட்டு வந்து எல்லாத்தை பத்தியும் தன் குருக்கிட்ட சொல்வான்.

 இன்னும் காட்டை பற்றி நீ தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு.., போய் வான்னு குரு சீடனை காட்டுக்கு அனுப்பினார்.  ஒருநாள் சீடன் ஒரு மரத்தோட நிழலில் உக்காந்திருந்தான். காட்டு நீரோடை சலசலத்து ஓடிக்க்கிட்டு இருந்துச்சு.., பறவைகள் பாடிக்கிட்டு இருந்துச்சு.தன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு ஷார்ப்பா பார்க்க ஆரம்பிச்சான்..


விலங்குகளின் சப்தம், பறவைகளின் ஒலி காதுல  விழுந்ச்சு. இன்னும் கொஞ்சம் கவனிச்சான். வண்டுகளின் ரீங்காரம் கேட்டது. தான் பார்த்ததை குருவிடம் போய் சொன்னான்.  குரு.., ரொம்ப மகிழ்ச்சிப்பா! இன்னும் நல்லா பார்த்து வான்னி தட்டி கொடுத்து அனுப்பினார்..,

அப்படி பார்க்கும்போது..,   காட்டுல,   நடக்குற ஒரு விசயம் அதிசயமா அவன் காதுக்கு கேட்டுச்சு..,    தன்னுடைய காது தானா?ன்னு அவனுக்கு  சந்தேகம் வந்துச்சு..,  பூக்கள் பூக்கும் மெல்லிய ஓசையைக் கேட்டு தன்னை மறந்தான்.  குருவைத் தேடி ஓடி போய்..,  குருவே! என்ன சீடனே! இதுவரை நடக்காத அதிசயத்தை கண்டவாறு  இப்படி ஓடி வந்துள்ளாயே! அப்படியென்ன அதிசயம் காட்டிலே கண்டாய்?!ன்னு கேட்க ஆரம்பிச்சார்..,அவனும் ந டந்ததைச் சொன்னான்.  அதுக்கு, குரு சீடனே உனக்கு ஆழ்ந்த கவனம் கைவந்தது. நாளைல இருந்து நாம பாடம் ஆரம்பிக்கலாம்ன்னு சொன்னார். அதுப்போலதான்   ஆழ்ந்த கவனம் என்பது ”மனிதனுக்கு ஒருநாளில் வருவதல்ல. ஆர்வமும், முயற்சியும் இருந்தால் மட்டுமே சாத்தியம்”ன்னு புரிஞ்சுக்கிட்டியா?!

ம்ம்ம்ம் நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன்..., நீங்க மேதாவிதான் ஒத்துக்குறே. எங்கே? என்னோட இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்??!!
                                            
கேளு புள்ள!

உங்க கிட்ட பத்து தென்னங்கன்னுங்க கொடுக்குறேன்.  அஞ்சு  வரிசையில் வைக்கனும். ஆனா,  ஒவ்வொரு வரிசையிலும் நாலு தென்னங்கன்னுங்கதான்  இருக்கனும். அப்படின்னா, எப்படி வைப்பிங்க!?

ப்ச்ச்ச்ச்ச் சூ இதானா?! விடை சொல்லவா?!

இருங்க.., இருங்க.., ”அவங்க ”லாம் பதில் சொல்றாங்களான்னு பார்க்கலாம்.., அதுக்குள்ள ஒரு ஜோக் சொல்லுங்க மாமா!

                                       

ம்ம்ம்ம்ம்  ஒரு குடிகாரன் கிளினிக் போறான்.., அங்க..,

டாக்டர்: நீங்க ரொம்ப குடிப்பீங்களோ! அதான் உங்க  கைலாம் நடுங்குதோ?!
குடிகாரன்: டாக்டர்!  நீங்க வேற! இந்த கை நடுக்குத்துல டம்பள்ர்ல இருக்குற பாதி சரக்கு கொட்டிடுது.., மீதி இருக்குற கொஞ்சத்தைதான் குடிக்க வேண்டியிருக்கு!!
டாக்டர்: ????!!!!!

ஹா! ஹா! ஹா! ஜோக் நல்லா இருக்கு.., இந்த ஜோக் கேளுங்க மாமா! என் ஃப்ரெண்ட் ராஜி இருக்காளே, அவளோட ரெண்டாவது பொண்ணு இனியா இருக்கே! அதுக்கு அப்போ 5 வயசிருக்கும்.., ஃபர்ஸ்டோ! இல்ல செக்கண்டோ படிக்குது.., ராஜி அவளை  டியூசன் சேர்த்து விட்டா..,

அதுவரை அவளை ராஜி தனியா வெளில் எங்கும் போக விட்டதில்லை. அன்னிக்கு தனியா அனுப்ப வேண்டிய சூழ்நிலை.., அதனால, இனியா! டியூசன் போகும்போது பார்த்து கவனமா போம்மான்னு சொல்லியிருக்கா..

ம்ம் உன் ஃப்ரெண்ட் எப்பவாவதுதான்  இதுப்போல சரியா பேசுவான்னு எனக்கு தெரியுமே!!

போதுமே அவளை வாருனது.., அதுக்கு அந்த சின்ன பொண்ணு.., சரிம்மா! ஆனா, வரும்போது பார்த்து, கவனமா வர வேணாமான்னு கேட்டு ராஜியை வாயடைக்க வச்சிருக்கா!

இப்படியாவது உன் ஃப்ரெண்ட் கொஞ்ச நேரத்துக்கு வாய் மூடி இருந்தா நல்லதுதான்.., 
 


 ம்க்கும் எப்ப பாரு அவளை கிண்டல் பண்ணுறதே பொழப்பா போச்சு..., 

சரி சரி, உன் ஃப்ரெண்ட் பத்தி சொன்னா உனக்கு கோவம் பொத்திக்குக்கிட்டு வருமே! ஆமா, பொங்கல் ல ஏண்டி இப்படி சீரகத்தை கொட்டி வச்சிருக்கே! சீரகம் உங்கப்பனா வாங்கி தரான்?

ம்க்கும் இத்தனை வருசம் கழிச்சும் எங்கப்பா வாங்கித்தரனுமா உங்களுக்கு?! நம்ம உடம்புல இருக்குற எல்லா பார்ட்டையும் சீராக்கி ஹெல்த்தியா வச்சுக்குறதுனாலதான் அதுக்கு சீரகம்ன்னு பேரு..., சமையலுக்கு மணத்தையும்.., உடலுக்கு ஆரோக்கியத்தையும் சீரகம் தருது...,  

* நெஞ்சு எரிச்சலுக்கு வெல்லத்துடன் கலந்து சாப்பிட்டா சரியாகும்..,

* அகத்தி கீரயுடன் சீரகம், சின்ன வெங்காயமும் சேர்த்து கஷாயமாக்கி  சாப்பிட்டா மன நோய் குணமாகும்..,  

* சீரகத்தை எலுமிச்சை சாறுல ஊற வச்சு,  காய வச்சு பொடியாக்கி மோரில் கலந்து சாப்பிட்டு வந்தா மார்பு வலி போகும்..,

* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி சம அளவு எடுத்து தூளக்கி தேனில் கலந்து சாப்பிட்டா உடல் உறுப்புகள் சீராகி உடல் ஆரோக்கியமா இருக்கும்..,

* சீரகத்துடன், கீழானெல்லி அரைத்து எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தா கல்லீரல் நோய் குணமாகும்..,

* நல்லா காய்ச்சிய நல்ல எண்ணெய், அரிசி, தும்பைப்பூ, சீரக, மிளகு, பூண்டு. இஞ்சி, சாம்பிராணி க்லந்து தலைக்கும், உடலுக்கும் தேய்த்து வந்தால் உடம்பு மிணுமிணுப்பதோடு சுறுசுறுப்பா இருக்கும்..,இதை வாரம் ஒரு முறை இல்லாட்டி மாசம் ஒரு தரம் செஞ்சு வந்தால் நோய் அண்டாது..,

ம்க்கும் இதெல்லாம் எங்கம்மா பாட்டி செஞ்சாங்க.., நீதான் டிவி பொட்டி முன்னாடியும், ஊர்க்கதையும் பேசி பொழுதை வீணடிக்குறே. இதெல்லாம் செஞ்சு புருசனை நல்லா வச்சுக்கனும்ன்னு உனக்கெங்க தெரியப்போகுது?!

ஓ அப்படியா! சரி வர்ற சனிக்கிழமை கொதிக்குற எண்ணேயை அப்படியே தலையில் கொட்டி எண்ணெய் தேச்சு விடுறேன்.., சரியா மாமா!

என்னை கொல்ல பாக்குறாளேளேளேளேளேளே!!!

Saturday, June 22, 2013

பேராசைக்காரன் - பாட்டி சொன்ன கதை

                   
பாட்ட்ட்ட்ட்டீ!  கதை கேக்க வந்துட்டோம்...,

வாங்க கண்ணுங்களா! வாங்க! இந்தாங்க, இதை சாப்பிடுங்க முதல்ல அப்புறம் கதை சொல்லுறேன்.

என்னது பாத்தி?! இது கருப்பா அக்லியா இருக்கு? எனக்கு வேணாம்..,

அப்படிலாம் சொல்லக்கூடாது பாப்பா. அது கேழ்வரகுல் செஞ்ச ஒரு பலகாரம்.., ”கேழ்வரகு புட்டு”.  உடம்புக்கு ரொம்ப நல்லது.., நீ வாங்கி சாப்புடுற பப்ஸ், சிப்ஸ், குர்குரே லாம் உடம்புக்கு கெடுதி. அதுலாம் என்ன எண்ணேய்ல செஞ்சிருக்காங்களோ?! ஆனா, இது எண்ணெய்  சேர்க்காம செஞ்சது..,  

எப்பவும் அரிசி ல செஞ்ச பலகாரத்தையே சாப்பிட்டுக்கிட்டு இருந்தா வெறும் கார்ப்போ ஹைட்ரேட் மட்டும்தான் உடம்புக்கு கிடைக்கும்.., அதனால, மத்த தான்யமான கேழ்வரகு, கோதுமை, சாமைலாம் சேர்த்துக்கனும்..,

கேழ்வரகு புட்டு எப்படி செய்யுறது பாட்டி?! எங்கம்மா ஏன் செய்ய மாட்டேங்குறா!?


சீனு!  பாட்டி வீட்டுலயே இருந்தேன்.., இதெல்லாம் செய்ய கத்துக்கிட்டேன். ஆனா, உங்கம்மா படிச்சு, வெளில போய் வேலை செய்யுறா! அதனால, வீட்டு வேலையும் செஞ்சு, ஆஃபீஸ் வேலையும் செஞ்சுக்கிட்டு இதெல்லாம் செஞ்சுத்தர நேரமில்லை. அதான் உண்மை. மத்தப்படி இதை செஞ்சுத் தரக்கூடாதுன்னு எண்ணம் ஏதுமில்லை அவளுக்கு..,  இதோட அருமை அவளுக்கு தெரிஞ்சா கொஞ்சம் மெனக்கெட்டு உங்களுக்காக கண்டிப்பா செஞ்சுத்தருவா. 

அதுவரைக்கும் நான் செஞ்சுத்தருவா.., இப்போ கதை சொல்றேன்.., வாங்க கண்ணுங்களா! ஒரு ஊருல  பேராசைக்காரன் ஒருத்தன்  இருந்தான்.. அவன் எந்த பொருளை பார்த்தாலும் தனக்கு வேணும்ன்னு நினைப்பான். அதனால, அவனை  பார்த்தசாரதின்ற அவன்  பேரு மறைஞ்சு  போய் பேராசைக்காரன்னு எல்லாரும் கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க..,

ஒரு நாள்

அவன் தன் பிஸினெஸ் மேட்டரா வெளியூருக்கு மாட்டு வண்டியில் பொருளையெல்லாம் கொண்டிட்டு போனான்....


பாத்தி மாட்டு வண்டின்னா?! 

 இப்போ மாதிரி முன்ன கார், லரிர, பெட்ரோல்லாம் கண்டுப்பிடிக்கலை.., அதனால, மரப்பலகைலாம் கொஞ்சம் அடிச்சு.., அதுல சக்கரம் ஃபிக்ஸ் பண்ணி, அதை இழுத்துட்டு போக மாடு, குதிரை, கழுதை, ஒட்டகம்ன்னு அந்தந்த இடத்துக்கு ஏத்த மாதிரி யூஸ் பண்ணிக்குவாங்க. 

ரொம்ப வேகமா போகுமா பாட்டி?


ம் ம் ம் சில சமயம்தான் வேகமா போகும்.., மத்தப்படி மெதுவாதான் போகும்.., சரி, கதைக்கு போவோம்.., அந்த பேராசைக்காரன் பிஸினெஸ் முடிஞ்சு  காட்டு வழியாக வந்துக்கிட்டு இருந்தான். அவனுக்கு ரொம்ப தாகமா இருந்துச்சு .., சுத்து முத்தியும் பார்த்தான்.  தூரத்துல ஒரு கிணறு ஒண்ணு தெரிஞ்சது.. வண்டியை விட்டு இறங்கி  அந்தக் கிணத்துக்கிட்டே போனான். புளிச்சோறு கட்டிகொண்டு போன பக்கெட்டுல  கயித்தைக் கட்டி அதைக் கிணத்துக்குள்ளே விட்டுத் தண்ணீர் எடுத்தான்.

கிணத்துக்குள் இருந்து "யார் இங்கே தண்ணீர் எடுப்பது?'ன்னு  பயங்கரமா ஒரு குரல் கேட்டது.பயந்து போன  அவன் கிணத்துக்குள் எட்டிப் பார்த்தான். உள்ளே யாரும் இல்லை. பயந்துக்கிட்டே.., ""ஐயா! நான் ஒரு பிஸினெஸ்மேன். இந்தபக்கமா வரும்போது தாகமெடுத்துச்சு. அதான் தண்ணீ குடிக்க  இங்க வந்தேன். நீங்க யாரு?'' ன்னு கேட்டான்.

""விரும்பியதை எல்லாம் கொடுக்கும் மந்திரக் கிணறு இது. இதைப் பாதுகாக்கும் பூதம் நான். யார் கண்ணுக்கும் நான் தெரியமாட்டேன்,'' ன்னு சொல்லிச்சு அந்தக் குரல்.

""மந்திரக்கிணறா! விரும்பியதை எல்லாம் தருமா?'' ன்னு ஆச்சர்யப்பட்டுக்கிட்டே  கேட்டான் அவன்.

""உன்கிட்ட கோல்ட் காய்ன் இருக்கா?  இருந்தா  ஒரு கோல்ட் காய்னை  இந்தக் கிணத்துக்குள்ள போடு.  உனக்கு என்ன வேணுமோ அதை கேளு. உடனே அது நடக்கும். ஆனா, உனக்கு 2 டைம்ஸ்தான் இந்தக் கிணறு உன் ஆசையை நடத்திக்காட்டும்ன்னு சொல்லுச்சு அந்தக் குரல்.

"என்னதான் நடக்க்குதுன்னு  பார்ப்போமே' ன்னு நினைச்சுக்கிட்டே  ஒரு கோல்ட்காய்னை  கிணத்துக்குள்ள  போட்டான். ""காஸ்ட்லியான ஜுவல்சும், டயமண்ட், கோட்ல், சில்வர்,ன்னு என் மாட்டு வண்டி ஃபுல்லா வேணும்ன்னு கேட்டான்..

ஒரு செக்கண்ட்ல  அவன் வண்டி அவன் கேட்ட மாதிரியெ கோட்ல் காய்ன், டயம்னட்ன்னு ரொம்பி வழிஞ்சுது .அதை பார்த்து அவன் ஆச்சர்யப்பட்டு போய்ட்டான். ஆ! எவ்வாளவு காச்ட்லியான பொருட்கள் என்கிட்ட இருக்கு.. இப்போ இந்த வோர்ல்ட்லயே நாந்தான் நம்பர் ஒன் பணக்காரன்ன்னு நினைச்சுக்கிட்டே ஹேப்பியா வண்டியை எடுத்தான்..,

தன்கிட்ட இருந்த ஒரு கோல்ட் காயினை அந்த கிணத்துக்குள்ள போட்டான், இந்த வண்டில இருக்குற திங்க்ஸ்லாம் என் கண்ணுக்கு மட்டுமே தெரியனும். வேற யார் கண்ணுக்கும் தெரியக்கூடாதுன்னு கேட்டான். 


""அப்படியே ஆகட்டும்,''ன்னு பூதத்தோட  குரல் வந்துச்சு..,

வண்டியை ஓட்டிக் க்கிட்டு ஹேப்பியா வீட்டுக்கு கிளம்பினான். வழியில  திருடங்க வந்தாங்க. அவங்க கண்ணுக்கு வண்டியில இருந்த பொருளெல்லாம்  அவங்க  கண்ணுக்கு  தெரியலை. தன்னோடஐடியாவை நினைச்சு ரொம்பப் பெருமைப் பட்டுக்கிட்டான்.

வீட்டுக்குள்ள ஓடிப்போய் தன் வொயிஃப் கிட்ட ""இனி நாமளோ இல்ல பசங்களோ  ஏழையா இருக்க வேணாம். இனி நாம ஹேப்பியா நினைச்சதை சாப்பிட்டு, வாங்கி ஹேப்பியா இருக்கலாம். அவ்வளவு பொருள் கொண்டு வந்திருக்கேன் வந்து பாருன்னு சொல்லி மனைவியை கூட்டிக்கிட்டு போய் வண்டில இருக்குற பொருளையெல்லாம் காட்டினான்....,  


 வண்டி காலியா இருக்குறதைப் பார்த்து அவன் வொய்ஃப் ஷாக்காகி நின்னு ""என்னங்க! வண்டியில காஸ்ட்லி திங்க்ஸ் இருக்குன்னு சொன்னீங்க.., எதுவுமே இல்லியேன்னு சத்தம் போட்டா. அவனோட கண்ணுக்கு வண்டி நிறைய திங்க்ஸ் இருக்குறது தெரிஞ்சுது..,ஒழுங்கா பாருடின்னு சத்தம் போட்டான்.., 

நல்லாதான் பார்த்துட்டு சொல்றேன். சும்மாவே  ஜுவல், கோல்ட்ன்னு சொல்லி என்னை ஏமாத்த பார்க்குறீங்களா?! உங்களுக்கு சாப்பாடு கிடையாதுன்னு சொல்லிட்டு உள்ளே போய்ட்டா.

அப்பதான் அவனுக்குத் தான் கேட்ட ரெண்டாவது வரம் எவ்வளவு தப்பானதுன்னு தெரிஞ்சுது  . தன் வொயிஃப்கிட்ட  நடந்ததை சொன்னான். அதிர்ஷ்டவசமா கிடைச்ச காஸ்ட்லி பொருளைலாம் யோசிக்காம யூஸ் பண்ண முடியாம போச்சேன்னு வருத்தப்பட்டுகிட்டே மறுபடியும் வண்டி கட்டிக்கிட்டு காட்டுக்கு போனான்.

அங்க போனா மந்திரக் கிணறும் இல்லை; ஒன்னும் இல்லை. பைத்தியம் பிடிச்சவனைப் போல வண்டியை எட்டி உதைச்சான். அதிலிருந்து நகைகளும், பொருட்களும் கீழே கொட்டிச் சிந்திச்சு.ஆனாலும்  என்ன யூஸ்?! . அதுலாம் இவன் கண்ணுக்கு மட்டும்தான் தெரியும். வேற யார் கண்ணுக்கும் தெரியாது.., அப்படி தெரியாட்டி எப்படி கடைல கொடுத்து திங்க்ஸ் வாங்குறது..,


இதுக்குதான் எந்த நிலையிலும் உணர்ச்சி வசப்படாம இருக்கனும், கடவுளே வந்தாலும் யோசிச்சு கேக்கனும்ன்னு புரிஞ்சுதா?! சரி, போய் ஹோம் வொர்க்லாம் எழுதி முடிச்சுட்டு.., விளையாடுங்க.., அடுத்த வாரம் வேற கதை சொல்றேன் பாட்டி..., 

சரி பாத்தி! நான் போய்  வரோம்.., பை, பை