Wednesday, February 29, 2012

ஆண்களே! அலட்சியம் வேண்டாமே பிளீஸ்....,


     புடவை, பட்டு புடவை, தாவணி, காக்ரா சோளி, பாவடை சட்டை,  மிடி, சுடிதார், ஜின்ஸ்......, ஸ் அப்பா மூச்சு வாங்குது.  ட்ரெஸ்ன்னாலே  அதிகமா பெண்களுக்குதான் முக்கியத்துவம். அதில் எந்தவித ஆச்சர்யமும் இருக்கப்போவதில்லை. அதேநேரத்துல, ஆண்களுக்கு இந்த வீணாப்போன பேன்ட்டும் சட்டையும் விட்டா எதைத்தான் போடுவது! என்று நினைத்த காலம்லாம் மலையேறி விட்டது.

    ட்ரெஸ் விசயத்தில் பெண்கள் அளவிற்கு ஆண்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை என்றாலும் தற்போது பல்வேறு வகையான மாடல்களை வெளியிட்டு கலக்கி வருகிறார்கள். நான் இதில் ரொம்ப மாடர்ன் அளவிற்கு எல்லாம் சொல்லாமல் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பயன்படுத்துற ட்ரெஸ் இன்னும் எப்படி சிறப்பாக பயன்படுத்தலாம் என்று கூறுகிறேன் 

  

Casual Dress

         சில நேரங்களில் நம்ம பசங்க போட்டுட்டு வர ட்ரெஸ்ஸை  பார்த்தால் செம்ம டென்ஷன் ஆகிடுவேன்.. என்னடா உங்க ரசனை? இப்படி மஞ்ச மாக்கான் மாதிரி ஒரு ட்ரெஸ்ஸை போட்டுட்டு திரியறீங்க என்று கோவம் கோவமாக வரும். ஆண்கள்  இனத்தையே டேமேஜ் பண்ணுறீங்களே என்று ஆத்திரமாக வரும்.   பின்ன என்னங்க பசங்கனா ஒரு ஸ்மார்ட்டா இருக்க வேண்டாமா!?

   ஒரு ரிசப்சன் போறோம் இல்லைனாஃபங்க்சனுக்கு போறோன்னா உடனே கஞ்சி போட்டு அயர்ன் பண்ணுன ஒரு மொட மொட னு ஒரு சட்டையை எடுத்து மாட்டிட்டு முழுக்கைச் சட்டையாக இருந்தால் கையைக்கூட மடித்து விடாமல் ஆபீசுக்கு போற மாதிரி ஒரு கெட்டப்புல வந்து ஹி ஹி னு நின்னுட்டு இருப்பானுக. ஏன்டா! ரிசப்னுக்கு தானே வந்து இருக்கீங்க என்னமோ ஐ நா சபைல இந்தியா சார்பா பேசப்போகிறவன் மாதிரி  முறுக்கிக்கிட்டு வந்து நிற்கறீங்க!ன்னு கடுப்பாக இருக்கும்.

   இதே குடும்பஸ்தன் என்றாலும் கல்யாணத்தில் இதே மாதிரி வந்து நிற்பார்கள்.. (கிராமம் என்றால் வேறு வழி இல்லை) விட்டா டையும் சேர்த்துக் கட்டிக்கிட்டு வருவாங்க போல இருக்கு. என்னய்யா மேட்டருன்னு கேட்டா டீசன்ட்டாம்! அது சரி. அப்புறம் எப்படித்தான் இது மாதிரி நேரத்துல ட்ரெஸ் பண்றதுன்னு ஆண்கள்லாம் கேக்குறீங்க. இருங்க.... இருங்க.. அதைதான் இனி சொல்ல போறேன்....,

 முதல்ல எல்லோரும் ஒண்ணு. சரி இரண்டு, மூன்று ...தெரிஞ்சுக்குங்க  ஆபீஸ்  நேரம் தவிர மற்ற எந்த நேரத்திலையும் (அதாவது ப்ரொஃபசனலா நடந்துக்க வேண்டிய இடம் தவிர்த்து) இந்த மாதிரி ட்ரெஸ்ஸை போடவே கூடாது.

ஜீன்ஸ்

     இந்த ஜீன்ஸ் இருக்கு பாருங்க.. இதை அடிச்சுக்க உலகத்துலையே எதுவும் கிடையாது. அது பெண்களுக்காக இருந்தாலும் சரி,  ஆண்களுக்காக இருந்தாலும் சரி இதற்கு என்று உள்ள மதிப்பே தனி. அடிக்கடி துவைக்க வேண்டிய அவசியமில்லை  அணிந்து கொள்ள எளிது. பெரும்பாலான சட்டைகளுக்கு பொருத்தமாக இருக்கும். அதை விட உங்கள் வயதைக் குறைத்துக்காட்டும் அதைவிட முக்கியமாக உங்கள் அருகில் உள்ளவர்கள் கொஞ்சம் ரிலேக்சாக இருக்க முடியும். ப்ரொஃபசனலா உடை அணிந்து இருந்தீர்கள் என்றால் டேய்! மச்சி இவரு கணக்கு மாஸ்டர் மாதிரி இருக்காருடா! நம்மை வாய்ப்பாடு சொல்லச் சொல்லி கேட்பாரு போல இருக்கு கொஞ்சம் தள்ளியே உட்கார்ந்துக்க என்று பயப்படும் படி ஆகி விடும். நீங்க  என்னதான் ஜாலி டைப்பாக இருந்தாலும்.  

டி ஷர்ட் & காட்டன் ஷர்ட்

      ஜீன்ஸ் க்கு 100% பொருத்தமானது என்றால் யோசிக்காமல் டி ஷர்ட் ன்னு சொல்லலாம் அல்லது காட்டன் ஷர்ட்டை சொல்லலாம்.  ஆபீஸ் தவிர மற்ற இடங்களுக்கு செல்லும் போது எடுத்துக்காட்டாக ரிசப்சன், திருமணம், ஃப்ரெண்ட்ஸ் பார்ட்டி, டூர்,பர்த்டே பார்ட்டி,  தியேட்டர், பீச்ன்னு எங்க போனாலும்   ஜீன்ஸ் + டி ஷர்ட் அல்லது காட்டன் ஷர்ட் மட்டுமே சரியான தேர்வு. டி ஷர்ட்டில் காலர் வைத்தது காலர் வைக்காதது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது.  கல்யாணம் காட்சிகளுக்கு போகும்போது  காலர் வைத்த டி ஷர்ட் அணிந்து செல்வது நாகரீகமா இருக்கும். காலர் வைக்காத டி ஷர்ட்டையும் அணிந்து செல்லலாம்இருந்தாலும் காலர் வைத்த டிஷர்ட்னா ராயல் லுக் குடுக்கும்.

    டி ஷர்ட் அணிவது என்றால் நம்மில் பெரும்பாலனவர்களுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சனை தொப்பை. அவங்களுக்கு முன்னாடி அவங்க தொப்பை போயிட்டு இருக்கும் இவங்க காட்டன் டி ஷர்ட்டை உபயோகப்படுத்தி இதில் இருந்து தப்பிச்சுக்கலாம். தயவு செய்து தொப்பை இருந்தால் உடற்பயிற்சி செய்தாவது குறையுங்க   நானும் பல நாட்டு மக்களை பார்த்துட்டேன் நம்ம பசங்க தான் தொப்பையோட குறிப்பா தென் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் இப்படி சுத்திக்கிட்டு டென்ஷன் பண்ணுறாங்க. என்ன இதுன்னு கேட்டால், “செல்ல தொப்பை” ஹி ஹின்னு சிரிப்பானுங்க.  சரி! சட்டையை இன் (In) செய்றதாவது ஒழுங்கா செய்றாங்கன்னா  அதுவும் ம்ஹூம், ஒரு ஒழுங்கே இருக்காது சட்டையை பேன்டுக்குள்ள போட்டு திணித்து வைத்ததைப்போல பெப்பரப்பேன்னு நின்னுட்டு இருப்பாங்க சீராக இல்லாமல் அங்கங்கே ஏற்ற இறக்கமாக இருக்கும்.

அலுவலக உடை
     உங்க கிட்ட எத்தனை பேண்ட் இருந்தாலும் முக்கியமா இருக்க வேண்டிய கலர் கருப்பு கலர்தான்.   எந்த சட்டைக்கும் பொருந்தக்கூடிய ஒரே வண்ணம் இது தான் (வெள்ளை சட்டை தவிர்த்து). அலுவலகத்திற்கு செல்பவர்கள் ப்ரைட்டான சட்டைகளை அதிகம் பயன்படுத்துங்கள் டார்க்கான சட்டை நம்மை டல்லாக காட்டும்.


Flat Front

    நீங்கள் Flat Front பேன்ட் அணிபவராக இருந்தால் கண்டிப்பாக துணியை அயர்ன் செய்யும் போது ஜீன்ஸ் பேன்ட்டை அயர்ன் செய்ற மாதிரி செய்ய கூடாது.  (பலருக்கு ஜீன்ஸ் பேன்ட்டையே எப்படி அயர்ன் செய்றதுன்னு கூட தெரியாது) பக்கவாட்டில் அயர்ன் செய்ய வேண்டும். வழக்கமாக மற்ற பேன்ட்களை அயர்ன் செய்ற மாதிரி  செய்யக்கூடாது. பல பேர் இந்தத் தப்பைதான் செய்றாங்க.  Flat Front என்பதன் அர்த்தமே முன் பகுதி எந்த பிளீட்டும் இல்லாமல் இருப்பது தான் அதில் நீங்கள் அயர்ன் செய்த கோட்டை வச்சீங்கன்னா  அந்த பேன்ட் டிசைன் அர்த்தமே மாறிப்போகும். 

    தற்போது ப்ளீட் வச்சு தைக்குறதெல்லாம் தைப்பது எல்லாம் Out of fashion ஆகி போச்சு.  அதனால,   Flat Front மாடல் பேண்ட்தான் இப்போ ஃபேஷன். இது வந்து ரொம்ப வருடங்களாகி விட்டாலும் இன்றும் அதே கவர்ச்சியுடன் உள்ளது. தொப்பை உள்ளவர்கள் Flat Front மாடல் பேன்ட்டை போட  முடியாது போட்டாலும் நல்லா இருக்காது.  அவங்களுக்கு ஒரே வழி ப்ளீட் தான் அதுனால தொப்பை இருக்குறவங்கள்லாம் மனசை  தேத்திக்குங்க.

   ட்ரெஸ் எடுக்குறதுல  கொஞ்சம் கவனம் செலுத்துங்க.. இப்போலாம் ஆண்களுக்குன்னு நிறைய வகை மாடல்கள் வந்திருக்கு.   ஏனோ தானோவென்று ட்ரெஸ் பண்ணாமல்  சரியான ட்ரெஸ்ஸை தேர்வு செய்யுங்க. உங்களுடைய ட்ரெஸ் கூட உங்களுக்கு அதிக தன்னம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய விஷயங்களுல் ஒண்ணு. அதனால, ட்ரெஸ் விசயத்துல வேண்டாம் அலட்சியம்.

கொசுறு 1

      என்னால சகிச்சுக்கவே  முடியாத ஒரு விஷயம் குழந்தைகளுக்கும் பெரியவங்க போடுற மாதிரி ஷர்ட் மற்றும் பெரிய பசங்க போடுற மாதிரி ட்ராயர்  போடுறது தான். செம்ம கடுப்பாகிடுவேன். குழந்தைகளுக்கு அழகு அழகா எத்தனை உடைகள் உள்ளது அதெல்லாம் எப்படித்தான் அவங்க கண்ணுல பட மாட்டீங்குதுன்னே தெரியல.. தேடிப்போய் ஒரு மொக்கையா ஒரு ட்ரெஸ் வாங்கிட்டு வந்து குழந்தைக்கு மாட்டி விட்டு அது சோளக்கொல்லை பொம்மை மாதிரி சுத்திட்டு திரிவதை பார்த்துட்டு இருப்பாங்க. பெண் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனை இல்லை ஆண் குழந்தைகளுக்குத்தான் இந்தப் பிரச்சனைகள்.

      நான்கு அல்லது ஐந்து வயது வரை குழந்தையை வைத்து இருப்பவர்கள் தயவு செய்து பெரியவர்கள் போடும் பட்டன் வைத்த சட்டையையும் பெரிய பசங்க போடுற டிராயரையும் பேன்ட்டையும் போடுறதை நிறுத்துங்க. இதைப்போல குழந்தைகளுக்கு காலர் வைத்த, வைக்காத டி ஷர்ட் தான் அழகாக இருக்கும் குறிப்பாக மிக்கி மவுஸ், கார்ட்டூன் படங்கள் மற்றும் சுவாரசியமான வாசகங்கள் அடங்கிய டி ஷர்ட்டை போடுங்க. டிராயர் மொட மொட என்று இல்லாமல் ஜட்டி டைப்பில் மென்மையாக இருக்குறதா பார்த்து வாங்குங்க.  ஏன்னா, குழந்தைகளுக்கு  உடலை உறுத்தாமல் சவுகரியமாக இருக்கும். சிறு வயதில் (இரண்டரை வயதிற்கு மேல்) இருந்தே குழந்தைகளுக்கு உள் ஜட்டி போட்டு பழக்கப்படுத்துவது நல்லது.

கொசுறு 2: கல்யாணங்களுக்கு போற ஆளுங்க மாப்பிள்ளைக்கு போட்டியா கோட் சூட், குர்தாலாம் போடுக்கிட்டு போகாதீங்க. அது உங்களை அந்நியப்படுத்தி காட்டும்.   அதனால Casual Dress போட்டுக்கோங்க. மணமகனுக்கு சகோதரனாக, மச்சானாக இருந்தால் நைட் ரிசப்ஷனுக்கு  கோட் சூட், காலை முகூர்த்தத்துக்கு வேட்டி சட்டையில இருந்தா, டிஃபரண்டாவும் ராயல் லுக்காகவும் இருக்கும்.

கொசுறு 3:    கோவிலுக்கு போகும்போதும், பண்டிகைகள் போதும் லுங்கி, ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு சிலர் இருப்பாங்க. அதை பார்க்கும்போது சென்ஸே கிடையாதான்னு கேட்க தோணும். அதனால, கோவில், மற்றும் பண்டிககள் போது வேட்டி, பட்டு சட்டை இல்லைன்னா வெள்ளை காட்டன் சட்டை போடுறது உங்க மேல் மரியாதை கூட்டும்.

Monday, February 27, 2012

ஐஞ்சுவை அவியல்

ஒரு நாள் கொண்டாட்டம்:

                         

      மாநாய்க்கன் மகளாய் பிறந்து, மாசாத்துவன் மகனான கோவலனை திருமணம் செய்து கொண்ட கண்ணகி, கணவருக்காக சகலத்தையும் இழந்த போதெல்லாம் பொறுமை காத்தவர். ஆனால், கணவரை இழந்ததும், பொங்கி எழுந்து, அதற்கு காரணமான பாண்டிய நாட்டு மன்னர் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்டவர். தன் கற்பின் சக்தியால், மதுரை நகரையே எரித்தவர். இன்றளவும் களங்கமற்ற பெண்ணொழுக்கத்தின் எடுத்துக்காட்டாகவும், கற்பின் தெய்வமாகவும், கற்புக்கரசியாகவும் போற்றப்படுபவர்.

      அவர் நினைவாக
, சேர மன்னன் கட்டியதுதான் இந்த மங்கலதேவி கண்ணகி கோவில். தமிழக கேரள எல்லையில், குமுளி மலையின் உச்சியில்தான் இந்த கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து பார்த்தால், சுற்றிலும் பசுமை சூழ்ந்திருக்க, ரம்மியமான சூழ்நிலையில், தேக்கடி அணையும், தமிழக கிராமங்களும் அழகாக தென்படும்.
 
   சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்கு
, இவ்வளவு உச்சியில் கட்டப்பட்ட இந்த கோவில், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. முற்காலத்தில், காட்டு வழியாக நடந்துதான், கோவிலை அடைய முடியும்.

   கடந்த
, 1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வேயை அடிப்படையாக வைத்து, பின்னாளில், மொழிவாரியாக எல்லை பிரித்த போது கூட, இந்த கண்ணகி கோவில் தமிழகத்தில்தான் இருக்கிறது என்று கேரளா ஒத்துக் கொண்டது. இந்த கோவிலுக்குச் செல்ல, கேரளாவின் குமுளியில் இருந்து, ஜீப்பில், 16 கி.மீ., தூரம் சென்றால்தான், கண்ணகி கோவிலை அடைய முடியும். ஜீப் செல்வதற்காக, எப்போது கேரள அரசு ரோடு போட்டதோ, அப்போது முதல் கண்ணகி கோவில் கேரளாவிற்கு சொந்தம் என்று கூற ஆரம்பித்து விட்டது.

     இதன் காரணமாக
, வருடத்திற்கு ஒருமுறை வரும் சித்ரா பவுர்ணமியையொட்டி, ஒரு வார காலம் எடுக்கப்பட்ட விழா, கெடுபிடி காரணமாக, மூன்று நாட்களாகி, பின், ஒரே நாளாகி, அதுவும் இந்த வருடம் காலை, 9 மணி முதல் மாலை, 5 மணி வரை மட்டுமே என்று நிர்ணயித்து விட்டனர்.

    இந்த ஒருநாள்
, கண்ணகியின் உருவம் சந்தனத்தால் உருவாக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பிரசாதம் வழங்கப்படும். இதற்காக, தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். ஜீப் கட்டணம், குமுளி வருவதற்கும், தங்குவதற்கும் என்று, பக்தர்கள் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது; காரணம், கண்ணகியின் மீது கொண்ட ஈடுபாடு.

பழமையான
, பாரம்பரியமான, பல்வேறு தமிழ் கல்வெட்டுக்களை கொண்டு, தமிழர்களின் அடையாளமாக திகழும் இந்த கண்ணகி கோவிலை பாதுகாக்கவும், பராமரிக்கவும் வேண்டும். கோவில் மீண்டும் தமிழர்களுக்கே என்று மீட்டு எடுக்க வேண்டும். இதற்கு, முதலில் தமிழ் ஆர்வலர்களும், கண்ணகியை வழிபடுவோரும் மறவாமல் வருடத்திற்கு ஒரு நாள் அனுமதிக்கப்படும் நாளன்று, ஒரு நடை போய் பார்த்துவிட்டு வருவது நல்லது.
                                                 
பையன்கிட்ட பல்ப்:  

    என் பையனுக்கு அப்போ 7 வயசு. அவனை, கூப்பிட்டு.., அப்பு, ரேஷன்  கடைக்கு போய் என்ன போடுறாங்கன்னு பார்த்துட்டு வான்னு சொல்லி அனுப்பினேன். சைக்கிள் எடுத்துட்டு போனவன் வர ரொம்ப நேரம் ஆச்சு. அப்பதான் சைக்கிள் ஓட்ட பழகுறான் அவன், அதனால்,  பயமும் கூடவே  கோவமும் வந்துட்டுது. அவன் உள்ளே வந்ததும் கோவமா......., என்னடா பார்த்துட்டியா? என்ன போடுறாங்க? இப்போ  சண்டை போடுறாங்க. இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு சர்க்கரை, பச்சரிசி போடுவாங்களாம்மான்னு அவன் சிலேடையா சொன்னதை கேட்டதும் எனக்கு கோவம் போன இடம் தெரியலை.
                             

கண்டுப்பிடிங்க பார்க்கலாம்...,
பதினொன்றோடு  இரண்டை கூட்டினால் 1 வரும்.  எப்படி?
                              
                           
அட சிரிங்கப்பா...,
ஒருவர்: எதுக்காக சார் இப்படி வேகமாகப் படிக்கட்டு வழியாக இறங்குறீங்க?

 இன்னொருவர்: என் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார்.

ஒருவர்: இந்நேரம் விழுந்திருக்குமே சார்?

இன்னொருவர்: இன்னும் விழுந்திருக்காது, சார். அது அஞ்சு நிமிஷம் ஸ்லோ!
                                
                          
ஆண்களுக்கு மட்டும்: 
ஆண்களுக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். இப்படி நினைப்பது மிக பெரிய தவறு. ஆண்களின் வெளிபுற தோற்றம் மிகவும் முக்கியம் அணியும் ஆடை, இனிமையான பேச்சு, சிரித்த முகம் இவை உங்களை மற்றவர்களுடன் வேறுபடுத்தி உங்களை கம்பீரமாக காட்டும்.

கொத்துமல்லி மற்றும் புதினா இவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்து, முகத்தில் வாரம் ஒருமுறை பூசி வரலாம்.
ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச்சாறு கலந்து, முகத்தில் தடவி வந்தாலும் முக வறட்சி மாறும்.
வெயிலில் செல்லும்போது, சன் ஸ்கிரீன் அடங்கிய ஃபேர்னெஸ் க்ரீம் பயன்படுத்தலாம். இதைக் கை கால்களுக்கும் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.
உதட்டுக்கு வேசலீன் அடங்கிய லிப் ஜெல்களைப் பயன்படுத்தவும்.
கை மற்றும் கால்களில் நகங்களை ஒட்ட வெட்டி நீட்டாக வைத்திருப்பதே ஆண்களுக்கு அழகு.
                           
டிஸ்கி: போன பதிவுல கேட்ட புதிரான இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல  என்ற புதிருக்கான விடை: சைக்கிள்
ஐஞ்சுவை அவியல் பாகம் 1



Friday, February 24, 2012

மீண்டும் பள்ளிக்கு போகலாம்....., தொடர்பதிவு

 ஒண்ணாம் வகுப்பு..,
தொல்லை தாங்க முடியலைன்னு அம்மாவின்
 தூண்டுதலால், இடது காதை வலது கையால்
தலை மேல் தொட முடிந்த தகுதியோடு
அடிவாங்கி, வீதியெல்லாம் புரண்டு கதற கதற
நல்ல நாள் பார்த்து விஜய தசமியில்
கண்டிப்புடன் உட்காரவைக்கப்பட்ட வகுப்பு....
ஒண்ணாம் வகுப்பு

இரண்டாம் வகுப்பு:
தூக்கம், கதை, விளையாட்டு என
மகிழ்ச்சியாய் கழிந்த பள்ளி வாழ்க்கையில்
சிலேட்டு குச்சி, பலகை,
அ, ஆ..., 1,2,...வாய்ப்பாடு
அரிச்சுவடி, வீட்டுப்பாடம் என
வில்லன்கள் புகுந்த வகுப்பு
இரண்டாம் வகுப்பு...,

மூன்றாம் வகுப்பு:
இரட்டைக்கோடு நோட்டு, கோணார் கடை தேன்மிட்டாய்
ஜவ்வு மிட்டாயில் செய்த தேள், வாட்ச், பாம்பு..,’
 பாண்டி விளையாட்டு, கிச்சு கிச்சு தாம்பூளம் 
விளையாட்டுடன், அட்டெண்டன்ஸ், சாக்பீஸ் 
கொண்டுவரும் அட்டெண்டர் வேலைகளோடு
 பாடங்களை கற்ற வகுப்பு...,
மூன்றாம் வகுப்பு.

நான்காம் வகுப்பு:
ஆங்கிலத்தின் அறிமுகம்...,
நண்பனின் சில்லு மூக்கை பதம் பார்த்து
தோழியின் பென்சிலை உடைத்து..,
வீட்டு பாடம் செய்யாமல் அரட்டை அடித்து
இருக்கும் மூணு பாடத்திலும் ஃபெயிலாகி
இது தேறுமான்னு ஆசிரியரையே
யோசிக்க வைத்த வகுப்பு....
 நான்காம் வகுப்பு.

ஐந்தாம் வகுப்பு:
பேனாவின் அறிமுகம்
கிளாஸ் டீச்சரின் செல்லம்
கபடி விளையாட்டில் சுட்டி
பரத நாட்டியம் , நாடகம்..., ஆனால்
படிப்பில் மட்டும் பூஜ்ஜியம், என
ஆரம்ப பள்ளி படிப்பை முடித்த வகுப்பு...,
ஐந்தாம் வகுப்பு.

ஆறாம் வகுப்பு:
புது பள்ளி, புது நட்பு,
புதுசா சீவிய முள் கொம்பு..,
கண்டிப்பான வரலாற்று ஆசிரியர் மற்றும்
கனிவான கணக்கு ஆசிரியரின் தீவிர முயற்சியில்..,
மூளைக்குள் படிப்பு ஏற ஆரம்பித்த வகுப்பு....
ஆறாம் வகுப்பு.

ஏழாம் வகுப்பு:
கபடி, கோ கோ, ஓட்டப்பந்தயம், என
கலக்கி பி.டி சாரின் செல்லம்...,
தமிழாசிரியரின் வற்புறுத்தலால்
பஞ்சதந்திரகதைகளும், அம்புலி மாமா புத்தகமும்
அறிமுகமான வகுப்பு...,
ஏழாம் வகுப்பு.

எட்டாம் வகுப்பு:
கிராஃப் நோட், ஜியாமிண்ட்ரி பாக்ஸ்..,
கட்டுரை போட்டியில் முதல் பரிசு..,
சைக்கிள் பழக, எதிர் பாலினர் மீது
 புரியாத ஈர்ப்பு.., அம்மாவுக்கு துணையாய்
வீட்டு காரியங்களிலும், அப்பாவுக்கு
கணக்கு பிள்ளையாய் மாறி உலகத்தை
படிக்க துவங்கிய வகுப்பு...,
எட்டாம் வகுப்பு.

ஒன்பதாம் வகுப்பு:
மகளிர் பள்ளி, தாவணியே சீருடை....,
அக்காவின் சாயம்போன சைக்கிள்
கிடைத்தற்கே ஃபோர்ட் கார் கிடைத்த சந்தோசம்,
”பெண்ணாய்” என்னை உணர்த்தியது...,
ஒன்பதாம் வகுப்பு.

பத்தாம் வகுப்பு....,
டியூஷன், தினமும் டெஸ்ட்,
டி.வி, சினிமா, அரட்டை கச்சேரி,
தூக்கத்துக்குலாம் தடா விதிக்கப் பட்டாலும்
டிமிக்கி குடுத்து அனுபவித்து..., விளையாட்டாய்
மார்க் அள்ளி பெற்றோருக்கும், பள்ளிக்கும்
பெருமை சேர்த்த வகுப்பு...,
பத்தாம் வகுப்பு.

பதினொன்றம் வகுப்பு...,
கணக்கு பாடம் எடுத்தால் எந்த
 பட்டப்ப்டிப்புக்கும் போகலாமென நம்பி
சேர்ந்து..., காமர்ஸ் குரூப் மாணவர்களை
 ஏளனமாய் பார்த்து, லேப்ல எலி அறுக்கும்போது
மயங்கி விழுந்து..., பொது தேர்வு அடுத்த வருடம்தானே
என அசால்ட்டாய் இருந்த வகுப்பு...,
பதினொன்றம் வகுப்பு.

பனிரெண்டாம் வகுப்பு:
இன்னும் நாள் இருக்கு என 
அரை பரிட்சை வரை அலட்சியமாய் கழித்து..,
புத்தனுக்கு போதி மரம் போல், பள்ளி அரசமரம் 
எதிர்காலம் பற்றி போதிக்க...,
அக்கறையாய் படித்து 
ஆட்டோகிராஃப், கவிதை, திருமணமா? கல்லூரியா? என
பள்ளி வாழ்க்கை முடிந்த வகுப்பு...,
பனிரெண்டாம் வகுப்பு.

டிஸ்கி: போன வாரம் என் பொண்ணுக்கு ஸ்கூல்ல ஃபேர்வெல் பார்ட்டி.   தனக்கொரு கவிதை வேணும்ன்னு கேட்டாள்.  சில கவிதைகள் எழுதி காட்டுனேன். எதுவும் அவளுக்கு பிடிக்கலை. எப்படி வேணும்ன்னு கேட்டேன்.., அவ என் பள்ளி வாழ்க்கை மொத்தமும் ஒரே கவிதையில் வந்துடனும்ன்னு கண்டிசன் போட..., எப்பவோ எங்கேயோ படிச்ச ஒரு கவிதை நினைவுக்கு வந்தது. அந்த கவிதையில் இப்படித்தான் வகுப்பு வாரியா பிரிச்சு எழுதியிருப்பார். அந்த சாயல்ல எழுதினதுதான் இந்த கவிதை. அவளுக்கு தகுந்தாற்போல் எழுதி அவக்கிட்ட குடுத்து, எனக்கு தகுந்தாற்போல் எழுதி பதிவாக்கிட்டேன். இந்த கருப்பொருள் எல்லாருக்கும் ஒத்துவருமே அதனால் இதையே ஏன் ஒரு தொடர் பதிவாக்கக்கூடாதுன்னு தோணுச்சு.

அதனால்,   
ஆகியோரை இந்த தொடர் பதிவை தொடர  அழைக்கின்றேன். இந்த ஐந்து பேரும் தங்களுக்கு பிடித்த ஐந்து பேரை அழைக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொல்கிறேன் சாரி.., கேட்டுக்கொள்கிறேன்.