இரு நண்பர்கள் புல்லா தண்ணியடிச்சுட்டு, செம போதையில ரயில்வே லைன்ல நடந்துக்கிட்டு இருக்கும்போது...,
நண்பர்1: இங்க பாருடா மாப்ள இந்த அநியாயத்தை நண்பர்2: என்னடா மாமா? நண்பர்1: படிக்கட்டை கொண்டாந்து எந்த முட்டாப் பயலோ தரையில வச்சுக் கட்டி இருக்கான் பாரு ...,!!?? நண்பர்2: அதுக்கூட பரவாயில்லடா மாமா கைப்பிடியும் கூடவே சேர்த்து வச்சு கட்டிஇருக்கான் பாரு..., அவனைலாம் என்னனு சொல்றது??!!
பாரில் புல் மப்பில் அருகிலிருந்தவரிடம்...., முதலாமவர்: ஏன்டா மச்சி இந்த சரக்கடிச்சா நல்லா போதையேறுமா?! அருகிலிருந்தவர்: அதெல்லாம் எனக்கு தெரியாது.., ஆனால், இப்பவே நீ புல் மப்புலதான் இருக்கேங்குறது மட்டும் எனக்கு நல்லா தெரியும்.., முதலாமவர்: எப்படிடா அவ்வளவு கன்பார்மா சொல்ரே அருகிலிருந்தவர்: ஏன்னா நான் உன் பிரண்ட் இல்ல. உன் அப்பன்டா.
இந்திய குடிமகனின் ஆதங்கம்:
10 ரூபாய் கொடுத்து வாங்கும் இட்லிக்கே புதினா சட்னி, கார சட்னி, தேங்கா சட்னி, சாம்பார்னு 4 சைட் டிஷ் தற்ராங்க. ஆனால், 75 ரூபாய் கொடுத்து வாங்கும் குவார்ட்டருக்கு சைட் டிஷ்ஷா ஒரு துண்டு ஊறுகா கூட தரமாட்டேங்குறாங்க. என்ன உலகம்டா சாமி இது
காலையில்அலுவலகம்செல்லும்போது, மிதிவண்டியில்வந்தஒருவனைதெரியாமல்தன்புதுவண்டியில்இடிக்க,மிதிவண்டியில்வந்தவனுக்குஅவ்வளவாகஅடிபடவில்லை. ஆனால், மிதிவண்டிக்குமட்டும்பலத்தசேதம்.
அவன்நல்லவன்போல, மற்றவர்களைப்போல்சண்டையிடாமல், தவறு தான் மீதும்உள்ளதெனக்கூறி, அவனேகூட்டத்தினரைவிலக்கியும்விட்டான்.
பின்குறிப்பு:இதுஎன்னோடநூறாவதுபதிவு. எத்தனைநாளைக்குதான் கவிதையே எழுதுறது.அதுதான்சிறுமுயற்சி. நூறாவது பதிவுக்காக வித்தியாசமாய்எதாவதுஎழுதனுமினுயோசிக்கையில், நிறைய"கதைக்கருக்கள்" மனதில் தோன்றியது. பிடித்திருந்தால்பின்னூட்டத்தில்சொல்லுங்கள். அவற்றையெல்லாம்ஒவ்வொன்றாய்பதிவிடுகிறேன்.
(மைண்ட்வாய்ஸ்: : பிடிக்கலைனுசொல்லிட்டால்??
நான்: அப்பவும்பதிவிடுவேன்.
மைண்ட்வாய்ஸ்:??!!!)
இந்தவலைப்பூவைவிளையாட்டாய்தான்ஆரம்பித்தேன். ஆனாலும், தொடர்ந்துதொடர்வேனாஎன்று முதல் சில பதிவுகளில் நான் நினைத்ததுண்டு. நூறைதொட்டதில்எனக்கும் ஆச்சர்யம்தான். என்பதிவையும்படித்துபார்த்து??!!! முதன்முதலில்பாராட்டி, முதல் follower ஆனஆதிரைஅவர்களுக்குநன்றி!! மற்றும் 24 followers க்கும்ஆயிரங்களைதாண்டியபார்வையாளர்களுக்கும்நன்றி! நன்றி!!
என்னுள் மட்டும் அல்ல என் கவிதையிலும் வெறுமை தெரிகிறது நீ இல்லாத தருணங்களில்..., உன்னிடம் சொல்ல நினைத்து ஞாபகத்தில் சேமித்து வைத்தவை நிறைந்து வழிந்து ஓடுகின்றன நீ வருவாய் என்ற மலட்டு நம்பிக்கையில்..??!!
சர்க்கரை இல்லாமலே இனிக்கிறது உன் நினைவுகள். நீ கன்னத்திலிட்ட முத்தமும், கைவிரல் கோர்த்து நடந்த பயணமும் நினைவில் மெல்ல நகர்கிறது அந்தக்கணத்தின் தீராதத் தாகத்தோடு..,
அணுஅணுவாய் சுகம் கண்டு ஆசைத் தீரப் பேறுப் பெற்று ஆயுள்வரைக் கூட வருவேன் என்று தோளில் சாய்ந்து நீ உரைத்ததைக் கேட்டு, நமக்கு நிழல் கொடுத்த மரம் உறைந்துக் கிடக்கின்றது இன்று மௌனசாட்சியாய் ..,
உன் ஆசை மொழிகளை பகிர வந்த அலைப்பேசி அழைப்புகளையும், உன் காதலை சொல்ல வந்த குறுஞ்செய்திகளையும், உன் அன்பை சுமந்து வந்த பரிசுகளையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்..,!! அவை அறியாப் பல நெருடல்களோடு..,
என்னை விட்டுவிட்டு உன்னால் எப்படி முடிந்தது வேறொருவன் கரம்பிடித்துப் போக ஒரு பூவைப்போல்...,
தான் மலர்ந்த செடியை மறந்து??!!...,
குறிப்பு:அடுத்தபதிவுஎனதுநூறாவதுபதிவு , மற்றும்எனதுமகளின்உற்றதோழிஓவியாவின்பிறந்தநாள்டிசம்பர்3ம்நாள்வருகிறது. அதற்கும் சேர்த்து மிகப்பெரிய ட்ரீட் வைக்கலாமினு இருக்கேன். எனவே, டிசம்பர் 3 ம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு சுமார் எட்டு மணியளவில் பார்ட்டி இருக்கு. பதிவுலக நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டுகிறேன். . இடம்: அவரவர் வீடு. தவறாது கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறேன். .
நன்றி! நன்றி! நன்றி!
இவள்தான்ஓவியா
இவள்தான் என் மகள் தூயாவின் உற்ற தோழி. இவள் எனது மகளுக்கு இதே நாளில் வடபழனி முருகன் கோவிலில் பரிசாக கிடைத்தாள். என் மகளுக்கு எங்கள் வீட்டருகே யாரும் தோழிகள் இல்லாததால் இவள்தான் எல்லாமே.(பொம்மை என்று சொன்னால், கோவப்படுவாள்.) அது அவளுக்கு எந்த அளவு பிடிக்குமென்றால், எங்களுக்கு எதாவது அவளிடம் காரியம் சாதிக்க வேண்டுமென்றால், தூயாவை கொன்னுடுவோமினு என் மகனும், குப்பையில் தூக்கிப்போட்டுடுவேன்னு நானும் மிரட்டுமளவுக்கு அதன் மீது பைத்தியம் அவளுக்கு. தூங்கும்போது, அருகிலும், படிக்கும்போது அருகிலும், வெளியில் எங்காவது செல்லும்போது பத்திரமா இரு நு சொல்லி தன் அலமாரியில் வைத்து பூட்டிவிட்டுதான் செல்வாள். இன்று அது தனக்கு கிடைத்த நாளை அதன் பிறந்த நாள் என்று கூறி அதன் மீதுள்ள அலங்காரப் பொருட்களை அவளே செய்தாள்.