Monday, January 24, 2011

மணநாள் பரிசு..












ஏதோ
ஒரு பிறவியில்
எப்படியோ ஒரு தருணத்தில்..,
கண்டிப்பாய் தவம்
செய்து இருக்க வேண்டும் ..,
இப்பிறவியில் உன்னை
இனிய தோழியாய்
நான் பெறுவதற்கு ...,

பாசம் என்பதைத் தேடி
பலமுறை நான் ஏமாந்திருக்கிறேன்..,
வேஷமான பொய் அன்பினால்
மூழ்கி நான் களைத்திருக்கையில்...,

நிறைவான அன்பினால்
நீயும் அடிமை செய்திட்டாய்..,
உன் மணநாள் பரிசாக
என்ன தரலாம் என்று
மனதினுள் யூகித்து நின்றேன்...,??!!!!

இறுதியில் இப்படி வேண்டி நின்றேன்
இறைவனிடம்..,
என் ஆயுளில் பாதியை
பரிசாகத் தர சொல்லி...,

ஒருவேளை
இல்லைஎன்று சொல்லி அவன்
மறுத்தாலும் மறுப்பான்..,

என்னிடமிருந்து உனக்குத் தர‌
எவனிடம் கேட்க வேண்டும் ???
இதையே உன்
மண நாள் பரிசாக
பெற்றுக் கொள்ளேன் ??!! ?!!,

நீயும் விதிவிலக்கல்ல...,


நானென்றால்
கல்லறைக்கூட
கதவடைத்துக்கொள்ளும் போது ...??!!!
நீ மட்டுமென்ன
காதலுடனாக்
காத்திருக்கப் போகிறாய்??!!!

Thursday, January 20, 2011

காத்திருக்கிறேன்

சிதைந்த என் மனதுக்கு
விதைப்பாய் மகிழ்ச்சியை -என
உன்னில் நான் இணைந்த போதே
உணர்ந்துக் கொண்டேன் ...,

பாழிருட்டில் நான்
தவித்திருந்தும்..., என்
வெளிச்சத்தை உன்னிடமே
கொடுத்து வைத்திருந்தேன் ...,


பார்த்திருந்து மகிழ
பொழுது போக
பைத்தியமாய் மாற்றி
பதற வைத்தாய் என்னை..,


என் நினைவினில்,
நிஜத்திலும் நீ ??!!
உனக்கு என்னை தந்தேன்
என் மரணம் உனக்கு இனித்தால்
எனக்கும் அது இன்பமே..,

இழந்தவை
ஏதுமில்லை - இனி
இழப்பதற்கும்
ஏதுமில்லை
என்னிடம்...,

உயிரே,

உன்னை இழந்தப்பின்..,
என் உயிர் எனக்கெதற்கு??!!

உரிமையாய் உறவாய்
என்னோடு ஒன்றிய
உன் மனதை
கன்றிய
மனதாக்கினாய் ....??!!!

அதற்காக
நான்
சாகவும்
தயார்??!!
உனக்கு இனிக்குமா
என் மரணம்??!!!

காத்திருக்கிறேன்
உன் பதிலுக்காக.....

Friday, January 14, 2011

பொங்கல்

கார்த்திகை கழிய...,
மார்கழி மறைய....,
நம் வாழ்வில் ஒளி ஏற்றிட
தை என்னும் திருமகள்
பிறந்தாள்.





பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் வருட பிறப்பு , பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Tuesday, January 04, 2011

மாறாக் காதல்

இனியவனே,

உன்னோடு பழகியது சரித்திரம்
பிரிவது சத்தியம்,
மறக்காததுதான் நிச்சயம்,

என்னை நீ விரும்புவதற்கும் ,
என்னை நீ பிரிவதற்கும் ,
ஆயிரம் காரணம் இருக்கலாம்.

ஆனால்,

நான் உன்னை பிரிவதற்கு
"மாறாத காதல்"
மட்டுமே காரணம் .

நீ என்னோடு இல்லாததால் ,
உயர்வானாலும், தாழ்வானாலும்
இது பிடித்தமான வாழ்வாகாது.

தப்பு தப்பாய் போட்ட வாழ்க்கை கணக்கில்
விடை மட்டும்
வித்தியாசமாவா வரப்போகுது...,??!


நினைவுகள் எப்போதும் சங்கீதம்தான்.
ஏன்
சங்கடமானவையும்கூடத்தான்..


Sunday, January 02, 2011

வீடு நிறைய "பல்ப்"ஸ்




பதிவுலக நண்பர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
*******************************************************************
எல்லார் வீட்டுலயும் "பல்ப்"ங்க இருக்கும். ஆனால், அதெல்லாம் கடையில போய் வாங்குனதா இருக்கும் நான் மட்டும் எங்க வீட்டுலையே, வயசு வித்தியாசம் பார்க்காம.., கலர் கலரா, விதம் விதமா எங்க வீட்டுலையே ""பல்ப்" வாங்குவேன்...,


அம்மாவிடம் வாங்கிய "பல்ப்"...,
ஒரு நாள்..,
அப்பா: ஏய் ராஜி இங்க வா உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா உனக்கு? இடையில் புகுந்த அம்மா: அதுவா , மொத்த மூளையும் உங்களுக்கு வச்சுட்டதால அவங்களுக்கு ஸ்டாக் இல்லாம போச்சு.
நான்:??!!

************************************

மூத்த மகளிடம் வாங்கிய "பல்ப்"...,
சரியாக கணக்கைப் போட்ட மகளிடம் அவளைப் பாராட்டும்விதமாக...,
நான்: அதெப்பெடிமா உன்னால மட்டும் அல்ஜீப்ரா போடமுடியுது. நான் படிக்கும்போது எனக்கு சுட்டு போட்டாலும் அல்ஜீப்ரா போட வராது. உனக்கு மட்டும் மூளை எப்படி வந்துச்சு?
என் மூத்த மகள்; அதுவா எனக்கு வேணுமிங்கறதால உங்களுக்கு கடவுள் மூளை வக்கலை.
நான்: ??!!
********************************
இளைய மகளிடம் வாங்கிய "பல்ப்"...,
நான் அவளுக்கு படம் வரைந்து தர அவள் நன்றியுணர்ச்சியுடன்..,
அவள்: நீங்க எனக்கு படம் வரைஞ்சு தந்ததுக்கு பதிலா உங்களுக்கு நான் எதாவது செய்யனுமே
நான்: எனக்கு வயசானப் பின் சோறு போடு போதும்.
அவள்: சோறு மட்டும் போதுமா? சாம்பார் அக்காகிட்டயும், பொறியல் தம்பிக்கிட்டயும் வாங்கிக்கிறியா? நான்:??!!!
*******************************************
மகனிடம் வாங்கிய "பல்ப்"...,
இந்த வருடம் சபரிமலைக்கு போவதற்கு என்னிடம் அடம்பிடித்து மாலைப்
போட்டு சென்று வந்தான். அவனிடம்...,


நான்: இவ்வளவு அடம் பிடிச்சு மாலை போட்டு மலைக்கு அவசியம் போய் வரனுமா செல்லம். அவ்வளவு பக்தியா கடவுள்மேல?
அவன்: இல்லியே
நான்: எல்லாரும் உடல் ஆரோக்கியட்துடன் இருக்கனுமினு வேண்டிக்கிட்டு போனியா?
அவன்:ம்ஹும்
நான்: நல்ல படிக்கனும்னு போனியா?
அவன்:
நான்: சனியனே சொல்லித்தொலையேன் . ஏண்டா மலைக்குப் போனே? அவன்: ம்ம்ம்ம் அதுவா நான் மாலைப் போட்டுக்கிட்டு.., மலைக்குப் போய் வந்து.., மாலைக் கழட்டும் வரை என்னை அடிக்க மாட்டே, என் காலில் விழுவீங்க இல்ல அதுக்குதான்
நான்: ??!!

*************************************
பெட்டர் ஹாப்பிடம் வாங்கிய "பல்ப்"....,

நான் வங்கிக்கு சென்ற போது, அக்கவுண்ட் நம்பர் மறந்து போச்சு. உடனே பெ,ஹா க்கு போன் செஞ்சு
நான் :உன் அக்கவுன்ட் நம்பர் கொஞ்சம் சொல்லு. நம்பரை
அப்படியே சொல்லாத. யாராவது கேட்ட்டுட்டு misue பண்ணாப் போறாங்க...,சின்ன சின்ன குறிப்பா சொல்லு.
பெ.ஹா: சரி.
நம்ம
வீட்டு போன் நம்பர்
நான்: 698701
பெ.ஹா: நம்ம வீட்டு நம்பர்:
நான்: 468 "

'"


"


"


"


" நம்பர்லாம் சொல்லிட்டு கடைசியில மீண்டும் சொல்றேன் சரியா இருக்கா பாரு.
நான்: சரி, 698701 .., னு சொல்ல
பெ.ஹா: நான் ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டியே
நான்: ம்ஹூம்
பெ.ஹா: இதுக்கு நான் அப்படியே நம்பரை சொல்லி இருக்கலாம். வீணா குறிப்புலாம் குடுத்துட்டு இருந்தேன். லூஸ் லூஸ்
நான்: ??!!
**********************************************************************