Saturday, May 14, 2022

1400 வருட பழமையான லஷ்மி நரசிம்மர் ஆலயம்- சிங்கிரி- புண்ணியம் தேடி


திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் தவிர  அருவி, கோட்டை, கொத்தளம், கோவில்ன்னு சொல்லிக்குற மாதிரியும், சுத்தி பார்க்குற மாதிரியும் புகழ்பெற்ற எந்த இடங்களும் கிடையாதுன்ற மனக்குறை எனக்குண்டு.   ஆனாலும், பெத்த தாயையும், குடிக்குற தண்ணியையும், வாழும் பூமியையும் பழிக்கக்கூடாதாம்.  அதனால், வேற ஊருக்கு போயிடலாம்ன்னு மாமாவை இதுவரை கூப்பிட்டதில்லை...

Wednesday, May 11, 2022

மீண்டும் உங்களோடு சேர்த்துக்கிடுங்க சாமியோவ்!!

 


ஐயா கருப்ப (blog) சாமி!!

பெரிய மகள் திருமணம், கால் எலும்பு முறிவு, பேரன் பிறப்பு, மகள் மருமகன் பேரனுக்கு கொரோனா, மீண்டும் பெரிய மகள் கருத்தரிப்பு, இளைய மகளுக்கு திருமணம், பெரிய மகளின் இரண்டாவது குழந்தை குறை பிரசவம், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றும் கொண்டு வரும் பெரிய பொறுப்பு, மாமனார் இறப்பு, தாய்மாமன் இறப்புன்னு வரிசையா நிக்காம ஓடுனதுல உன்னைய கண்டுக்காம விட்டது தப்புதான்...

பிள்ளைகள் அதது எதிர்காலத்துக்காக ஓடும் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாம பின் தங்கி தனியா இருக்கும்போதுதான் உங்க அருமை தெரியுதுங்க...

நூத்துக்கணக்குல கமெண்ட் வேணாம், அஞ்சோ பத்தோ போதும்... அதிகமா ஷேரும், வீவர்சும்கூட வேணாம்.. நீங்களே எதாச்சும் பார்த்து என்னைய போரடிக்காம பார்த்துக்கிட்டா போதுமுங்க சாமி!!

என்னைய மீண்டும் உங்களோடு சேர்த்துக்கிட்டா மட்டும் போதும்!! காலத்துக்கும் உங்களுக்கு விசுவாசமா இருப்பேனுங்க.. மன்னிச்சு ஏத்துக்கிடுங்க....

நன்றியுடன்,
ராஜி.

Friday, January 22, 2021

நாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி


சில வாரங்களுக்குமுன் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள உலகத்தில் முதன்முதலாய் தோன்றிய அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தினை பத்தி பார்த்தோம்.. அர்த்தநாரீஸ்வரரை தரிசித்து வந்தபின், அறுபது அடி நீளமுள்ள நாகர் சிலை ஒன்றை பார்த்தோம்..

Friday, December 18, 2020

உலகத்திலேயே ஒரே அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் - திருச்செங்கோடு- புண்ணியம் தேடி

போன வருசம் மகளை கல்லூரியில் சேர்த்து, அவளை ஹாஸ்டலிலும் விட்டுட்டு மகளை பிரிஞ்ச துக்கத்தில்!!  அருகிலிருந்த  திருச்செங்கோடு கோவிலுக்கு போனோம்.  திருச்செங்கோடுன்ற வார்த்தைக்கு ”அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிறமலை”ன்னும், ”செங்குத்தான மலை”ன்னும் இரண்டு அர்த்தம் சொல்றாங்க. இந்த மலை ஏன் சிவப்பாச்சுன்னா விஷ்ணு பகவான் பள்ளிக்கொண்டிருக்கும் ஆதிசேஷன் பாம்பு மேருமலையை பிடித்தபோது ஏற்பட்ட கலகலப்பில் காயம் ஏற்பட்டு சிந்திய ரத்தத்தால் இந்த மலை சிவப்பு நிறமாச்சுன்னு தலவரலாறு சொல்லுதுங்க. 

Monday, December 07, 2020

ஆண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தவறா?! - ஐஞ்சுவை அவியல்

மாமா! வெட்டவெளியில் சிறுநீர், மலம் கழித்தால் அசுத்தம்ன்னு சொல்லி வீட்டிற்குள் கழிப்பறை கட்டி வச்சிருக்கோம்.  இது சரியா?! வீடுகளுக்குள் கழிப்பறை  வந்த ஆரம்ப காலக்கட்டத்தில் எம்மாம்பெரிய வீடுன்னாலும் கழிப்பறை வீட்டிற்கு வெளியே ஒதுக்குப்புறமாதான் இருந்தது. திருட்டுபயம், சோம்பேறித்தனத்தினாலும், 800 அல்லது 1000 சதுர அடிகளில்  மனைகள் வந்தபின்  கழிவறை வீட்டிற்குள்ளயே கட்ட ஆரம்பிச்சி இப்ப கழிப்பறை நடு ஹால்லயே இருக்கும் நிலை வந்தாச்சு.